இடுகைகள்

அசுரகுலம் 6 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெளியில் அழகானவர் உள்ளே உறுமும் விலங்கு!

படம்
  சில பெற்றோர்கள் தங்களுக்கு பெண் பிள்ளை பிறக்கும் என நினைப்பார்கள். ஆனால் ஆண் குழந்தை பிறந்துவிட்டால், என்ன   செய்வது? ஆசையை எதிர்பார்ப்பை விட்டுவிட முடியாது. எனவே, ஆண் பிள்ளைக்கு பெண் பிள்ளை போல உடை உடுத்துவது, தலையில் பூ வைத்து புகைப்படம் எடுப்பது எல்லாம் உண்டு. இதெல்லாம் கொஞ்ச ஆண்டுகள்தான். அப்புறம் ஆண்களுக்கான உடைகளை உடுத்தக் கொடுப்பார்கள். ஆனால் சில பெற்றோர் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளையின் உடைகளைக் கொடுத்து அணிய வைப்பார்கள், விருந்துகளில் பங்கேற்பார்கள். இதனால் பிள்ளைகளின் மனம் என்னவாகும் என்பதை அவர்க ள் யோசிப்பதில்லை. பாலின வேறுபாடு குழப்பம் பிள்ளைகளுக்கு ஏற்படுகிறது. சமூக அழுத்தம் அவர்களை ஆணா, பெண்ணா என இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வற்புறுத்துகிறது. இதில் பெற்றோரின் ஆசை வேறு தனி நெருக்கடியைத் தருகிறது. இதனால் கேலி, அவதூறு ஆகியவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள். தொடர்கொலைகாரர்கள் இப்படித்தான் உருவாகிறார்கள். பெரும்பாலும் தாய்கள்தான் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளை போல உடை உடுத்தி பார்த்து மகிழ்கிறார்கள். இதனால் இப்படி வளரும் பிள்ளைகள், அம்மாவை கொல்வதாக நினைத

போதைமருந்து கும்பலின் வணிகம் சிறக்க நரபலி கொடுத்த மத தலைவர்!

படம்
  கான்ஸ்டான்ஸோ – அடாஃபோ டி ஜீசஸ் 1962ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி பிறந்தவர், அடால்ஃபோ. மியாமியில் வாழ்ந்தவர்கள், க்யூப நாட்டை பூர்விகமாக கொண்டவர்கள். அடால்ஃபோ குழந்தையாக இருக்கும்போது அவரின் அம்மா, புவர்டோ ரிகா சென்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.அடால்ஃபோவுக்கு மொத்தம் மூன்று சகோதரர்கள். இவர்கள் அனைவருமே வெவ்வேறு தந்தைகளுக்குப் பிறந்தவர்கள்.   கத்தோலிக்கராக மாறி வழிபடத் தொடங்கியது அவரின் குடும்பம். இரண்டாவது தந்தை இறந்தபோது, குடும்பம் பொருளாதார ரீதியாக சற்று நல்ல நிலையில் இருந்த து. மியாமிக்கு வந்த அடால்ஃபோவின் அம்மா, ஆடு, கோழி ஆகிவற்றின் தலைகளை அறுத்து வைத்து தாந்த்ரீக சடங்குகளை செய்யத் தொடங்கினார். இதனால் ஊரார் அவரை சூனியக்காரி என கூறத் தொடங்கினார். அடால்ஃபோவின் அம்மா, அவருக்கு புதிய மதமான சான்டெரியாவை அறிமுகம் செய்தார். அந்த மதத்தை தழுவியவர், மெல்ல காட் ஃபாதராக மாறினார். அவர், போதைமருந்து குழுக்களோடு தொடர்பு வைத்து வசதியாக வாழ்ந்தார். ‘’நம் ம தத்தை நம்பாத ஆட்களை போதைப்பொருளை வைத்து கொல்லலாம். அவர்கள் முட்டாள்தனத்தை வைத்து பணம் சம்பாதிக்கலாம்’’ என்றார். அடால்ஃபோவுக்கு

பெண்களை அடைத்து வைத்து மாரத்தான் வல்லுறவு கொண்ட குற்றவாளி

படம்
  டெக்சாஸின் எல்பாசோ எல்லை அருகே உள்ள இடம்தான், சியூடாட் ஜூவாரெஸ். மெக்சிகோவில் உள்ள இந்தப் பகுதியில்தான் அதிகளவு பெண்கள் கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இங்கு,   கொலை, வல்லுறவு காரணமாக நடைபெறும் குற்றங்கள் அதிகம். 1990ஆம்ஆண்டில், தொடர் கொலைகாரர்களின் விளையாட்டு மைதானம் என மெக்சிகோவின்   ஜூவாரெஸ் அழைக்கப்பட்டது. இங்கு, போதைப்பொருட்களின் புழக்கம் அதிகம். மேலும் இது தொடர்பாக இங்கு நடைபெறும் வன்முறைக் குற்றங்களின்   எண்ணிக்கையும்   அதிகம். 2003ஆம் ஆண்டு எல்பாசோ டைம்ஸ் என்ற பத்திரிகை, இங்கு ஆண்டுக்கு 340 கொலைகள் நடைபெறுவதாக கூறியது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, கொலையாகும் நபர்களின்   எண்ணிக்கை   370 என எண்ணிக்கையை உயர்த்திக் கூறியது. தொடர் கொலைகாரர்களின் நிலம், மைதானம் என கூறினாலும் இங்கு நடைபெறும் கொலைகளுக்கு எந்த கொலைகார ர்களும் பொறுப்பே ஏற்கவில்லை. காவல்துறையினர் சந்தேகப்படும் ஆட்களையெல்லாம் பிடித்து சிறையில் வைத்திருந்தனர். ஆனாலும் ஜூவாரெஸில் உள்ள பெண்கள் தெருக்களில் இறங்கே நடுங்கும் நிலைதான் அங்கிருந்தது. குற்றங்கள் குறையவே இல்லை. தொண்ணூறுகளில் கொல்லப்பட்டவர்களில் முக்கியமான

நீதிபதியிடம் பிணத்தின் இடதுகாலை ஸ்னாக்ஸாக சாப்பிடக் கேட்ட குற்றவாளி

படம்
  மனித இறைச்சியை உண்பது என்பது டெலிகிராம், டெய்லி புஷ்பம் நாளிதழ்களில் கலோக்கியலாக எழுதப்படுவதாக் பரபரப்பாகிறது. ஆனால் இதெல்லாம் வரலாற்றுக்கு புதிதல்ல. பல்வேறு மக்களின்   இனக்குழுக்களில் கன்னிபாலிசம் எனும் மனித இறைச்சி உண்ணும் பழக்கம் உண்டு. தொடர் கொலைகாரர்களைப் பொறுத்தவரை பாலியல் ரீதியாக, செக்ஸ் ரீதியாக தீவிரம் கொண்டவர்களுக்கு மனித இறைச்சி உண்ணும் பழக்கம் இருந்திருக்கிறது. இதற்கான எடுத்துக்காட்டுகளை குற்றம் சார்ந்த செய்திகளில் எளிதில் பார்க்கலாம்.   மெக்ஸிகோ நாட்டில், ஆஸ்டெக் இனக்குழுவினர் பதினைந்தாயிரம் மக்களுக்கும் மேல் பலியிட்டு, அதை உணவாக உண்டிருக்கிறார்கள். பேரரசர் மாக்டெஸூம்பா தான் தேர்ந்தெடுத்து உடலுறவு கொண்ட சிறுவர்களைக் கொன்று உணவாக்கி சாப்பிட்டிருக்கிறார்.அதை விருந்தாக படைத்திருக்கிறார். இப்படி இறந்தவர்களை தியாகிகளாக அந்த மக்கள் கருதினர். சங்க காலத்தில் கூட போரில் வெற்றி பெறுவதற்காக கழுத்தை அறுத்து கொன்று கொல்வதை உறுதிமொழியாக ஏற்கும் வீரர்கள்   தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றனர். மேட் மேக்ஸ் ப்யூரி ரோட்டில் கூட தலைவருக்காக வீரமரணம் என ஒரு கூட்டம் நாயகனை கொல்வதற்காக வரும். த

கடவுளின் ஆணைக்கு இணங்கி பெண்களை கொலை செய்தவர் - ஹார்வி லூயிஸ்

படம்
  ஹார்வி லூயிஸ் பெண்களைக் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி. சட்டம் சீர்திருத்தம் செய்யப்பட்ட காலத்தில் அதன் பயனை அனுபவித்தார். இப்படி சட்ட ரீதியாக பயன் பெற்றவர் அதைப் பயன்படுத்தி திருந்தியிருக்கலாம். ஆனால், ஹார்வி அப்படி ஏதும் செய்யவில்லை. 1951ஆம் ஆண்டு மரணதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த பிறகு   1960ஆம் ஆண்டு,   பிணை வழங்கப்பட்டது. ஹார்வியைப் பொறுத்தவரை சிறைக்கு முன்னும் பிறகும் எந்த மாற்றமும் இல்லை. கொள்ளை, கொலை, தாக்குதல் என்றுதான் வாழ்ந்தார். இதற்காக, 1965ஆம் ஆண்டு பதினைந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நல்லவிதமாக நடந்துகொண்டதற்காக தண்டனை குறைக்கப்பட்டு   1969ஆம் ஆண்டு விடுதலையானார். தண்டனைகள், சிறை என்பதெல்லாம் ஹார்வி விஷயத்தில் எதிர்மறையாகவே மாறிப்போனது. சமூகத்தையும், அதில் இடம்பெற்ற பெண்களையும் கடுமையாக வெறுக்கத் தொடங்கினார். இரண்டு முறை விதவைப் பெண்களை திருமணம் செய்தார். ஆனால் யாரிடமும் நெருக்கமாக இல்லை. அவர் பாட்டிற்கு காரை எடுத்துக்கொண்டு தனியாக சுற்றி வந்துகொண்டிருந்தார். இதனால் ஹாரியின் திருமண

பெண்களைக் கொன்று தோட்டத்திலும், வீட்டிலும் புதைத்து வைத்த கொலைகாரர்!

படம்
  கிறிஸ்டி - ஜான் ரெஜினால்டு ஹாலிடே 1898ஆம் ஆண்டு யார்க்‌ஷையரில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே பெற்றோரின் அன்பு கிடைக்காதவர். வீட்டில் பெற்றோரால் தண்டனை மட்டுமே அளிக்கப்பட்டவர். இதனால் அடிக்கடி குற்றங்கள் செய்து சிறை சென்று வர தொடங்கினார். பள்ளியில் படிக்கும்போது, போலீஸ்துறையில் கிளர்க் ஆவதுதான் கனவு. ஆனால், அங்கு செய்த திருட்டு காரணமாக பள்ளியை விட்டு விலக்கப்பட்டார். பிறகு அப்பாவின் கார்பெட் தொழிற்சாலையில் வேலைசெய்தார். ஆனால் அங்கும் திருட்டை தொடர்ந்த காரணத்தால், வீட்டை விட்டே அடித்து விரட்டப்பட்டார். பிறகு ராணுவத்தில் சேர்ந்தவர், முதல் உலகப்போரில் பங்கேற்று காயம்பட்டு   ஐந்து மாதங்கள் கண் பார்வையை இழந்திருந்தார். பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பேச்சு சரியாக வரவில்லை. 1920ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பிறகு ஒரு விபத்தில் சிக்கி தலையில் கடுமையாக அடிபட்டது. தற்காலிக பணியாக அஞ்சலகத்தில் வேலை செய்தார். அங்கும் மனிதர் சும்மாயிருக்கவில்லை. ஏராளமான பணவிடைகளை திருடினார். இதற்காக குற்றம்சாட்டி புகார் கொடுக்கப்பட, ஏழு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.ஜானின்   வாழ்க்கை முழுக்க துக்க

சமூகத்திற்கு தன்னை வெளிக்காட்ட வெடிகுண்டே ஒரே வழி

படம்
  கத்தி, துப்பாக்கி வைத்து கொலை செய்யும் தொடர் கொலைகாரர்கள் உண்டு. ஆனால் வெடிகுண்டு வைத்து பிரமாண்டமான செலவில் கொலை செய்யும் கொலைகாரர்களை குறைவாகவே பார்க்க முடியும்.பொதுவாக,   தொடர் கொலைகார்களுக்கு நிலையான வேலை இருக்காது. எனவே, அவர்களால் அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் பிளான் செய்து கொலைகளை செய்ய முடியாது. ஆனால் பாம் வைத்து கொல்பவர்களே இல்லையா என்றால் இருந்திருக்கிறார்கள். இப்போது அவர்களைப் பற்றி பார்ப்போம். 1940-50 காலகட்டத்தில் அமெரிக்காவில் இதுபோல வெடிகுண்டு வைத்து மக்களைக் கொல்லும் சம்பவங்கள் நடந்தன. இதற்கு காரணமானவர், அரசு நிறுவனத்தில் வேலை செய்த ஜார்ஜ் என்பவர். இவருக்கு காசநோய் பாதிப்பு இருந்தது. வேலைக்குச் சென்ற இடத்தில் இவரைப் பார்த்து நோய் தொற்றிவிடும் என அனைவரும் பயந்தனர். ஏசினர். தூற்றினர். பலரும் டெய்லி புஷ்ப ஊழியர்கள் போல சைக்கோபயல்கள். இதனால் மனதிற்குள் வைராக்கியம் வளர்த்த ஜார்ஜ், தன்னை   துவேஷித்த ஆட்களை கொல்ல முயன்றார். இவருக்கு அடுத்து தியோடர் என்ற நபரைக் குறிப்பிடலாம். எட்டு மாகாணங்களில் பதினாறு வெடிகுண்டுகளை வைத்தவர். 1995 – 1978 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தியோடர

டீனேஜ் பெண்களை வல்லுறவு செய்து கொல்ல திட்டமிட்ட நண்பர்கள்!

படம்
  லாரன்ஸ் பிடேக்கர்   - நோரிஸ் திட்டக்குழு உருவாக்கி நாட்டிற்கான திட்டங்களை தொலைநோக்காக உருவாக்குவது போல சிலர் உண்டு. இவர்கள், தாங்கள் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என திட்டமிட்டு அதற்கான களப்பணிகளை செய்துவிட்டு இறங்குவார்கள். இதனால் அனைத்து விஷயங்களும் நினைத்தபடி கச்சிதமாக நடக்கும் என்று கூறமுடியாது. ஆனால் செய்பவர்களுக்கு செயலில் தீவிரம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள்தான் லாரன்ஸ் – நோரிஸ் ஆகிய இரு கொலைகார நண்பரகளும்.. லாரன்ஸ் ஒருவரை தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் சிறை சென்றார், அங்கு தன் வாழ்நாள் முழுக்க இருக்கப்போகும் நண்பன் ராய் நோரிஸை சந்தித்தார். இருவரும் பேச பேச அவர்களின் சிந்தனைகள் ஒத்துப்போயின. அப்புறம் என்ன? நண்பர்கள் ஆனார்கள். நண்பர்கள் ஆனதே டீனேஜ் பெண்களை கடத்தி வல்லுறவு செய்து கொல்வதற்காகத்தான். திட்டத்தை ப்ளூபிரின்ட் போட்டு வைத்துவிட்டு காத்திருந்தனர். பதிமூன்று தொடங்கி பத்தொன்பது வயது பெண்கள்தான் லட்சியம். லாரன்ஸ் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்து வேன் ஒன்றை வாங்கி அதற்கு மர்டர் மேக் என்று பெயர் கூட வைத்து தயார் செய்துவிட்டார். அடுத்த ஆண்டான 1979ஆம் ஆண்டு ஜூனி

கடத்தி, வல்லுறவு செய்து கொலை - கென்னத் - ப்யூனோ சகோதர்களின் அட்டூழியம்

படம்
  1951ஆம் ஆண்டு, விலைமாது ஒருவருக்குப் பிறந்தார். குழந்தையாக இருக்கும்போதே   தத்து கொடுக்கப்பட்டார். பதினெட்டு வயதில் திருமணம் செய்துகொண்டார். ஒருமுறை தனது பெண் தோழிக்கு கடிதம் எழுதியபோது, தான் ஒருவரைக் கொன்றதாக கூறினார். ஆனால், அதை தோழி கென்னத் தனது ஆண்மையின் பெருமைக்காக கூறுவதாக நினைத்துக்கொண்டார். 1973ஆம் ஆண்டு காவல்துறை கென்னத் பியான்சியை கொலை வழக்கு ஒன்றில் சந்தேகப்பட்டது. ஆனால் உண்மையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே கென்னத்தின் கார் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததை காவல்துறை அதிகாரி ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தார். 1976ஆம் ஆண்டு கென்னத் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றார். அங்கு கென்னத்தின் சகோதரர்   இருந்தார். அவருடன் சேர்ந்துதான் பின்னாளில் பல்வேறு கொலைகளைச் செய்தார். சகோதரர் பியூனோ ஜூனியர், சிறுவயதில் இருந்தே அம்மாவுடன் பல்வேறு ஊர்களில் வசித்த அனுபவம் கொண்டவர். பதினான்கு வயது தொடங்கியதிலிருந்தே கார்களைத் திருடி விற்கத் தொடங்கினார். சோடோமி எனும் மலப்புழை வழியாக   உடலுறவு கொள்வதில் ஆர்வம் கொண்ட ஆள். கார் திருட்டுக்காக சிறை சென்ற அனுபவம் உள்ளவர். செக்ஸ் குற்றவாளியான

சிறுமிகளை, இளம்பெண்களை சித்திரவதை செய்த அரச குடும்பத்துப் பெண்மணி

படம்
  எலிசபெத் பாத்தோரி ஹங்கேரியைச் சேர்ந்த அரச குடும்ப உறுப்பினர்களில் ஒருவர். ராணுவத்தில் எலிசபெத்தின் அப்பா வேலை செய்தார். அந்த நாட்டில் மரியாதையான குடும்பமாக இனக்குழுவாக இருந்தது. மன்னர், நீதிபதி, பாதிரியார்   என்றெல்லாம் பதவி வகித்தவர்கள் பின்னாளில் சாத்தானை வழிபடுபவர்களாக, தாந்த்ரீகத்தில் ஈடுபடுபவர்களாக மாறினர். அந்த சமயத்தில் பிறந்த எலிசபெத், அவரது மாமாவால் பிறரை வருத்தி துன்புறுத்தி மகிழ்வதை ரசிக்கத் தொடங்கினார். பதினொரு வயதில் எலிசபெத்திற்கு திருமணம் நிச்சயமானது. பதினைந்து வயதில் மணம் செய்து கொடுக்கப்பட்டார். கணவரும் ராணுவத்தில் பணியாற்றிய வீரர்தான். கணவர் வீட்டில் இல்லாதபோது தான் வாழ்ந்த பெரிய மாளிகை போன்ற வீட்டில் என்ன செய்வது என தெரியாமல் தவித்தார். பிறகுதான், அங்கேயும் தனது பிறந்த வீட்டில் இருப்பதைப் போலவே சித்திரவதை செய்யும் அறைகளை கட்டி, கருவிகளை அமைத்துக்கொண்டார். நோ ஸ்டேட்மென்ட்ஸ் ஒன்லி ஆக்சன் என களமிறங்கிய எலிசபெத், அருகிலுள்ள கிராமங்களில் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை என சொல்லி படிப்பறிவு இல்லாத சிறுமிகளை, இளம்பெண்களை அழைத்து வந்தார். இப்படி வந்தவர்கள் யாரும் திரும்ப

பணியாளர்களைக் கொன்றால்தான் முதலைக்கு உணவு கிடைக்கும்!

படம்
  ஜோபால் 1892ஆம் ஆண்டு பிறந்த முதலை விரும்பி. முதலை நேயர். சோசியபிள் இன் என்ற ஹோட்டலை நடத்தி வந்தார் ஜோ பால். இவருக்கு நிறைய மனைவிகள் உண்டு. முதலைகளுக்கு இறைச்சியை தனது கையால தூக்கி வீசுவது பிடித்தமானது. ஒருமுறை இவரது குளத்தில் அழுகிய இறைச்சி வாடை வருகிறது என அருகில் வாழ்ந்த வீட்டுக்காரர் கூறினார். அதற்கு ஜோ டக்கென துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அதை தடவியபடியே, ‘’அழுகிய இறைச்சியை முதலைக்கு போட்டேன். அதுதான் காரணம்’’ என்று சொன்னார். துப்பாக்கி கையில் இருக்க சமாதானம் ஏற்படாமல் இருக்குமா என்ன? டெக்ஸாஸின் எல்மண்டோர்பில் வாழ்ந்தவர், ஜோபால். எல்லோருடனும் பேசும் ஜோவியலான ஆள்தான். ஆனால் அவரது இருளான பகுதியை பலரும் அறியவில்லை.ஜோ பாலைப் பற்றி பலரும் அறிய வந்தது, அவரது ஹோட்டலில் வேலை செய்த பெண் பணியாளர்கள் காணாமல் போன சம்பவத்தின் போதுதான்… முதல்முறை ஒரு பெண் பணியாளர் காணாமல் போனார். காவல்துறை சம்பிரதாய சடங்காக ஜோவிடம் கேள்வி கேட்டபோது, அந்த பெண் வேறு வேலை தேடி போனதாக கூறிவிட்டார். சரி சொன்ன பதில்தான் லாஜிக்காக இருக்கிறதே என நினைத்து விட்டுவிட்டார்கள், ஆனால் அடுத்தடுத்து பெண்கள் காணாமல் போனபோது

கோடாரியால் மண்டையை பிளந்து கொலை.. கொலைக்கு முன்னரே குறியீட்டுச் செய்தி - கோடாரி மனிதன்

படம்
  கோடாரி மனிதன்   தெலுங்கு படங்களில் அதிகம் பயன்படுத்தும் பொருள் என்ன? பன்ச் டயலாக்குகள் அல்ல. கோடாரி. சிங்கமுகம், சூரியன் என விதவிதமான உருவங்கள் பொறித்த கோடாரிகளை பயன்படுத்தி நல்நோக்கமில்லார்களை நாயகன் வெட்டுவார். அவரும் வெட்டப்படுவார். அதேபோல ஒரு கோடாரி கிரைம் கதைதான் இது. ஆனால் இறுதியாக யார் அந்த கோடாரி மனிதன் என்பதை கண்டறிய முடியவில்லை. 1918ஆம் ஆண்டு மே மாதம், அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தவரான ஜோசப் மேகியோ கொலை செய்யப்பட்டார். மேகியோ மட்டுமல்ல, கூடவே அவரது மனைவியும் தலையில் கோடாரியால் வெட்டப்பட்டிருந்தனர். இருவரின் குரல்வளைகளும் அறுக்கப்பட்டிருந்தது மேகியோவின் சகோதரர்கள் கொலைக்கு காரணம் என்று காவல்துறை சந்தேகப்பட்டாலும் பின்னாளில் அவர்கள் விசாரணைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். மேகியோ வீட்டைவிட்டு சில மீட்டர் தூரத்தில் நடைபாதையில் ஒரு செய்தி எழுதப்பட்டிருந்தது. அதில் ‘’திருமதி மேகியோ, இன்று திருமதி டோனி போலவே அமர்ந்திருக்கப் போகிறார்’’ என எழுதியிருந்தது.    1911ஆம் ஆண்டு கோடாரியால் வெட்டப்பட்டு மேகியோ கொல்லப்பட்டது போலவே நிறைய கொல

குழந்தைகளை கொன்றொழித்த கர்ப்பிணி மையங்கள் - விக்டோரியா கால கொடுமை

படம்
  பேபி ஃபார்மிங் என்றொரு காலம் மேற்குலகில் இருந்தது. தமிழில் குழந்தை விவசாயம் என்று சொன்னால் கண்றாவியாக இருப்பதால், குழந்தை உற்பத்தி அல்லது உருவாக்கம் என சொல்லலாம். தருமொழி, பெறுமொழி பிரச்னையால் இப்படி மாற்றிக்கொள்வோம்.   மேற்கு நாடுகளில் டீன் ஏஜ் காலங்களில் பெண்கள் தனியாக சுற்றத் தொடங்குவார்கள். தனக்கான இணையைத் தேர்ந்தெடுப்பார்கள், செக்ஸ் வைத்துக்கொள்வதும் கூட சகஜமானது. செக்ஸ் இயற்கையானதும்தானே? செக்ஸ் வைத்துக்கொண்டு குழந்தை உருவாகி அதை வளர்த்தெடுக்கும் திடமான மனம் கொண்ட பெண்கள் மேற்குலகில் உண்டு. பொதுவான இந்தியச் சமூகத்தில் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றெடுத்தால் தே*** என்று கூறுவார்கள். இங்கு நான் தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள். அதே சூழல் மேற்கு நாடுகளிலும் அப்போது இருந்தது. இப்படி ஒரு அவமானம் நமக்கும் குடும்பத்திற்கும் வரக்கூடாது என விக்டோரியா கால ஆட்கள் நினைத்தனர். எனவே, கல்யாணம் ஆகும் முன்னரே வயிற்றை தள்ளிக்கொண்டு வாந்தி எடுத்த வாரிசுகளை தனியாக இருக்கும் கர்ப்பிணி இல்லங்களில் சேர்த்து பராமரித்தனர். இதற்கு அந்த இல்லங்களுக்கு குறிப்பிட்ட அளவில் காசு

சமூகத்தை பழிக்குப்பழி வாங்க துடித்த பாய் - பாய் பாவோஷான்

படம்
  பாய் பாவோஷான் பாய், சீனாவைச் சேர்ந்த தொடர் கொலைகாரர். மொத்தம் பதினைந்து கொலைகளை நம்பிக்கையோடு செய்தவர். 1980ஆம் ஆண்டு முதல் கொலையை செய்தார். பிளானிங் சற்று சொதப்பிவிட்டது. பிடிபட்டவருக்கு கொலை முயற்சி என வழக்கு பதிவு செய்து பதிமூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. அப்போதே சமூகத்தை இரண்டில் ஒன்று பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தார். 1996ஆம் ஆண்டு பாயின் பழிக்குப்பழி தொடங்கியது. பெய்ஜிங்கில் காவலர் ஒருவரைத் தாக்கி துப்பாக்கி ஒன்றைத் திருடிக்கொண்டு சென்றார். டெமோ காட்ட, அதை வைத்து ஒருவரைக் கொன்று, ஆறுபேர்களை தாக்கி காயப்படுத்தினார். ஹெபாய் எனும் பகுதிக்கு சென்றபோது சிகரெட் வியாபாரியைக் கொன்று கொள்ளையடித்தார். பிறகும் கூட கொலை வெறி அடங்கவில்லை. மற்றொரு காவல்துறை காவலரைத் தாக்கி ரைபிளை கொள்ளையடித்தார். உரும்கி எனும் நகருக்குச் சென்றவர், பத்து நபர்களைக் கொன்றார். இதில், காவல்துறையினர், பொதுமக்கள் ஆகியோரும் அடக்கம். இதைச் செய்யும்போது அவருக்கு சில கூட்டாளிகள் இருந்தனர். கொலை செய்யும்போது கூட்டாளிகள் தேவைப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்டவர்களிடமிருந்து 1,80,000 டாலர்களைக் கொள்ளையடித்தபோது

பணம் சம்பாதிக்க முதியவர்களை திட்டம் தீட்டி கொன்ற பெண்மணி - ஏமி

படம்
  1873ஆம ஆண்டு பிறந்தவர், ஏமி. இருபது வயதில் ஜேம்ஸ் ஆர்ச்சர் என்பவருடன் திருமணமானது. இவருக்கு பிறந்த பெண்பிள்ளையின் பெயர் மேரி. இவருக்கு செவிலியர் படிப்பு படிக்க ஆசை, ஆனால் படிக்கவில்லை. ஆனாலும் தன்னம்பிக்கை இருந்தது. படிக்காவிட்டால் என்ன படித்ததாக கூறிக்கொள்வோம் தவறில்லை என நினைத்தார். எனவே, கனெக்டிகட்டில் வயதானவர்களுக்கான நர்சிங் ஹோமை தொடங்கி நடத்தினார். 1907ஆம் ஆண்டு ஏமி, தனது நர்சிங் ஹோமை விண்ட்சோர் எனுமிடத்திற்கு மாற்றிக்கொண்டார்.வயதானவர்களுக்கான இல்லமாக மாற்றி நடத்தினர்.   தொடங்கிய காலத்தில் இருந்து முதல் மூன்று ஆண்டுகளில் சேர்ந்த பத்து வயதானவர்கள் நோயாளிகளாக இருந்து காலமானார்கள். 1910ஆம் ஆண்டு கணவர் ஜேம்ஸ் ஆர்ச்சர் இயற்கையான முறையில் இறந்துபோனார். பிறகு மைக்கேல் கில்லிகன் என்பவரை ஏமி மணந்துகொண்டார். இவரது ஆயுள் அதற்குப் பிறகு பனிரெண்டு மாதங்களாக குறைந்துவிட்டது. 1911- 1916 வரையிலான காலகட்டத்தில் நர்சிங் ஹோமில் இருந்தவர்களில் 48 பேர் காலமானார்கள். மைக்கேல் கில்லிகனின் குடும்ப மருத்துவர் மருத்துவர் கிங். இவருக்கு, ஏமியின் செயல்பாடுகளில் நம்பிக்கை இருந்தது. அதனால் அவர், ஏமி நோயாள

முதியவர்களைக் கொல்வதே கடவுளாகும் வழி!

படம்
  ஆஸ்திரியா நாடு, அங்குள்ள வியன்னாவில் லைன்ஸ் பொது மருத்துவமனையை பலரும் மறக்கமுடியாது. மருத்துவமனையின் பிரமாண்டத்தை 2 ஆயிரம் ஊழியர்களே உங்களுக்கு சொல்லுவார்கள். அங்கு எல்லாம் நன்றாக நடந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் திடீரென   சிகிச்சை பெற்று வந்த எழுபது வயதிற்கும் அதிக வயதுடையவர்கள் இறந்துபோக தொடங்கினார்கள். இப்படி வயதானவர்கள் இறந்துபோனால் பலரும் என்ன   நினைப்பார்கள்? தள்ளாமைதான் காரணம் என நினைப்பார்கள். காரணம் அதுவல்ல.   1983ஆம் ஆண்டு தொடங்கி 1989ஆம் ஆண்டு வரையில் 42 பேர் காலமானார்கள். ஆனால் இதெல்லாம் அதிகாரப்பூர்வ கணக்குதான். ஆனால் இறுதியாக என்ன நடந்தது என்று தெரிய வந்தபோது, பலருக்கும் பேரதிர்ச்சி.   300க்கும் மேற்பட்டோர் நோயாளிகளாக சேர்ந்து உடல் நலிவுற்று இறந்தனர். இப்படி இறந்தவர்களின் இறப்புக்கு காரணம், மரணதேவதைகள்தான். நான் இங்கு சொல்வதற்கு பின்னணியாக, பேய் எல்லாம் கிடையாது. அத்தனையும் சூழ்ச்சி நிறைந்த மனிதர்கள்தான். வேக்னர் என்ற இரவு நேர வேலைக்கு வந்த செவிலியர்தான் கொலைகளுக்கான முக்கியமான காரணம். 1983ஆம் ஆண்டு தனது   23 வயதில், முதல்கொலையைச் செய்தார். முதன்முதலில் 77 வயதுப் பெ

சுதந்திரமான செக்ஸை அனுமதிக்காத ஆண்களுக்கு ஆர்சனிக் விஷமே பரிசு!

படம்
  நாஜிரெவ் என்ற ஊரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? திஸா என்ற ஆற்றின் வழித்தடத்தில் உள்ள புதாபெ|ஸ்டிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் நாஜிரெவ் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றவர் ஒரே ஒரு பெண்தான். அவர் பெயர், ஜூலியா ஃபாஸேகஸ். கணவர் இறந்துவிட்டார் என கிராமத்திற்கு திரும்பி வந்தவரான   ஜூலியாவிடம்,   உறவினர்கள் கணவரின் இறப்பு பற்றி அதிகம் விசாரிக்கவில்லை. அதை சரியாக அறிந்திருந்தால் சற்று கவனமாக இருந்திருக்கலாம். செவிலியராகப் பணியாற்றிய காலத்திலேயே ஜூலியா, சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு கருக்கலைப்புகளை செய்தார். அதன் விளைவாக, நீதிமன்றத்தால் சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். ஆனால் பெண் என்று நீதிபதிகள் தீர்ப்பு எழுதும்போது சற்று தயை காட்டினர். பிறரின் கருணை பற்றியெல்லாம் ஜூலியா எப்போதும் கவலைப்படவில்லை. பிரச்னை என வருபவர்களுக்கு, கணவர் பற்றி புலம்புபவர்களுக்கு கையிலேயே நிரந்தரமான தீர்வை கொடுத்துவிட்டார். இதற்கான விளைவாக ஏராளமான மரணங்கள் நடந்தன. முதல் உலகப்போரில் பிடிபட்ட வீர்ர்களை அடைத்து வைக்க நாஜிரெவ் கிராமம் சரியான இடமாக ராணுவத்தினரால் அடையாளம் க