இடுகைகள்

ஆராய்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செய்தியை ஆராய பத்து நொடி விதி முக்கியம்!

படம்
  செய்திகளை எழுதுவது, அதிலுள்ள அறம் பற்றி யோசிப்பது எல்லாம் சரிதான். ஆனால் செய்தியை எழுதுவது என ஒப்புக்கொண்டால் அதை குறிப்பிட்ட நேரத்தில் எழுதி க் கொடுத்தே ஆகவேண்டும்தானே? பிராந்திய மொழி நாளிதழில் குறிப்பிட்ட பகுதிகளை பார்த்து செய்தி சேகரிப்பவர் குறைந்தபட்சம் நான்கு செய்திகளையேனும் தரவேண்டிய அழுத்தம் இருக்கிறது. செய்தியை முந்தி எழுதி தருவதில் உங்கள் சக போட்டியாளர்களாக நிருபர்களும் உங்கள் கூடவே அருகில் இருக்கிறார்கள். நேரவரம்பும் இருக்கிறது. எப்படி இந்த அழுத்தங்களை சமாளிப்பது? ஒரு செய்தியை எழுதி அனுப்பலாமா, காட்சி ஊடகத்தில் வீடியோவை ஒளிபரப்பலாமா என்ற சூழ்நிலை வந்தால் பத்து நொடி சிந்தனை என்ற விதியைக் கையாளலாம். இவ்வகையில் உங்களிடம் உள்ள செய்தியை எந்த வித அழுத்தங்கள் இன்றி கவனமாக ஆராய வேண்டும். எனக்கு என்ன தெரிந்திருக்கிறது, இன்னும் என்ன தெரிந்துகொள்ளவேண்டும் என்ற இரு கேள்விகள் செய்தியில் முக்கியமானவை. அப்போதுதான் செய்தியை ஆழமாகவும் விரிவான தன்மையில் செம்மையாக்க முடியும். முழுமையில்லாத செய்தியை எப்போதும் பிரசுரிக்க கூடாது. ஒரு செய்தியை எழுதுகிறீர்கள். அதில் தனிநபரின் மதம் பற்றிய குற

செய்திகளை எழுதும்போது கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள்!

படம்
  ஒரு விவகாரத்தில் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்கிறீர்கள் என்றால், முதலில் அந்த விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள முயலுங்கள். அதில் மக்களுக்கு கூறவேண்டிய விஷயம் என்னவென்று பத்திரிகையாளர்கள் இறுதியான முடிவுக்கு வரவேண்டும். ஒரு விவகாரம் சரியா, தவறா என்று முடிவெடுப்பது உண்மையான கொள்கை ரீதியான தன்மையைக் குறிக்காது. அந்த விவகாரத்தில் ஏதும் செய்யாமலேயே சரியான முடிவு கிடைத்துவிடும் என்றாலும் கூட அதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒரு பிரச்னையை வெவ்வேறு வழிகளில் சரியானது என்று சொல்லும்படி தீர்க்க முடியும் என்றால் கீழ்க்கண்ட கேள்விகளை பத்திரிகையாளர் கேட்டுக்கொண்டு பதில் கண்டறிவது முக்கியம். பிரச்னையை இந்த வகையில் தீர்க்கும்போது உலகத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா? அரசு, சட்ட விதிகள், மத கோட்பாடுகள் ஏதேனும் பாதிக்கப்படுமா? அவை என்ன மாதிரியான எதிர்வினைகளை வெளிப்படுத்தும்? அனைத்து மக்களுக்கும் சமரசமாக செல்லும்படியான தீர்வு, நடுநிலையான முடிவு ஏதேனும் இருக்கிறதா? பெரும்பாலான மக்களுக்கு நன்மை கிடைக்கும்படி என்னால் செயல்பட முடியுமா? எனது செயல்பாட்டால் மக்கள் பயன் பெறுவார்களா? பிரச்னையை நான

பூமியை விதம் விதமான கணித வடிவங்களால் வரைந்த புவியியல் வல்லுநர்கள் - புவியியல் அறிமுகம்

படம்
  டோலமி - தொன்மையான புவியியல் ஆராய்ச்சியாளர்  கிளாடியஸ் டோலமி. தொன்மையான கிரேக்க நாட்டின் எகிப்தில் பிறந்தவர். கிரிகோ ரோமன் புவியியல் தகவல்களை உருவாக்கினார். கூடுதலாக கணிதம், வானியல் ஆகியவற்றிலும் திறமையானவராக இருந்தார். புவியியல் என்ற பெயரில் எட்டு பாகங்களைக் கொண்ட நூலொன்றை உருவாக்கினார். அதிலுள்ள தகவல்களைக் கொண்டுதான் உலக நாடுகளின் வரைபடம் வரையப்பட்டது. இதில் 26 உள்ளூர் பிரதேசங்களும் அடையாளம் காணப்பட்டன. அப்படியானால் அந்த நூலில் எவ்வளவு தகவல்கள் சேகரித்து எழுதப்பட்டிருக்கும் பாருங்கள்....  நூலில் எட்டாயிரம் இடங்களின் பெயர்களையும் குறித்து வைத்திருந்தார்.  13 பாகங்களாக எழுதப்பட்ட அல்மாகெஸ்ட் என்ற நூலில் சூரிய குடும்பம் பற்றிய ஏராளமான தகவல்களை பதிவு செய்திருந்தார். நான்கு பாகங்களாக வெளிவந்த டெட்ராபிபிலோஸ் என்ற நூலில் ஜோதிடத்தை அறிவியல் பூர்வமாக விளக்கியிருந்தார். டோலமியின் அறிவும், அவரது படைப்புகளும்தான் உலக நாடுகளின் வரைபடங்களை ஆய்வாளர்கள், வல்லுநர்கள் உருவாக்கவும் புவியியல் துறையை பின்னாளைய தலைமுறையினர் புரிந்துகொள்ளவும் உதவியது.  2 கிளாடியஸ் டோலமி பூமி என்ன வடிவில் இருக்கிறது என்பது

பெருநகர வெப்பநிலையை கார்களில் சென்சார் வைத்து கணிக்கலாம்!

படம்
  வெப்ப அலையை கார்களில் பயணம் செய்து கணித்தவர்!  நாட்டின் பெருநகரங்களில் ஏற்படும் பல்வேறு அளவுகளிலான வெப்ப அலை வேறுபாட்டை கணக்கிட சூழல் ஆராய்ச்சியாளர்கள் முயன்றுவருகின்றனர். 1927ஆம் ஆண்டு, ஆராய்ச்சியாளர் வில்ஹெம் ஸ்மித் (Wilhelm schmidt), வெப்பம் பற்றிய சோதனையொன்றை செய்தார். இதன்படி தன் காரில் பாதர தெர்மாமீட்டரைப் பொறுத்திக்கொண்டு வியன்னா நாட்டிற்குள் மூன்று மணி நேரம் சுற்றினார். இதில், அவர் நகரங்களின் வெப்பநிலை பற்றிய தகவல்களைப் பெற்றார். இதன்மூலம், அதிக வெப்பம் கொண்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டன.  பல்லாண்டுகளாக சூழல் ஆராய்ச்சியாளர்கள் வெப்ப அலை பற்றி செய்த ஆய்வு, புல்லட்டின் அமெரிக்கன் மெட்டரோலாஜிகல் சொசைட்டி இதழில் வெளியாகியுள்ளது. வில்ஹெமின் ஆய்வுமுறையை மேம்படுத்தி கார்களில் சென்சார் பொறுத்தி இணையத்தில் இணைத்தனர். இதன்மூலம், வெப்பம் பற்றிய தகவல்களை உடனுக்குடன் பதிவு செய்தனர்.  நகர மக்களே , இந்த ஆய்வில் பங்கேற்று தகவல்களை தரமுடியும் என்பது இதன் சிறப்பம்சம். நகரங்களில்  குறிப்பிட்ட இடங்கள் மட்டும் வெப்பத்தீவு போல காணப்படுவதை ஆராய்ந்தாலே, மக்களின் வாழ்வை அதற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.  ப

புவியியல் சார்ந்த அருஞ்சொற்கள்! - வரைபடம், மின்காந்தப்புலம், பூமியின் காந்தப்புல ஆய்வு, வேளாண்மை ஆய்வு

படம்
அருஞ்சொற்கள்!  ஏரோலாஜிகல் டயகிராம் (Aerological Diagram) பாறைகளின் தன்மையை அறிய உதவும் வரைபடம். இதில் வெப்பநிலை, அழுத்தம். ஈரப்பதம் ஆகிய தகவல்களை அறியலாம்.  ஏரோமேக்னடிக் சர்வே (Aeromagnetic Survey) பூமியின் மின்காந்தப்புலம் பற்றிய ஆய்வு. விமானங்களில் இணைக்கப்பட்ட மேக்னட்டோமீட்டர் (Magnetometer) மூலம் ஆய்வு நடைபெறுகிறது.  ஏயோலியானைட் (Aeolianite) காற்றால் அடித்துக்கொண்டு வரப்படும் மணல் துகள்களால் உருவாகும் பாறைகள் .  ஏஎஃப்எம்ஏஜி இஎம் அமைப்பு (AFMAG EM) இயற்கை நிகழ்வான புயல், மழையின் பிறகு பூமியின் இயற்கையான மின்காந்தப் புலத்தில் ஏற்பட்ட மாறுதல்களை அளவிடும் முறை.  அக்ரோமெட்ராலஜி (Agrometeorology) வேளாண்மைக்கு ஏற்ற தன்மையில் வானிலை மற்றும் நிலத்தின் அடுக்குகள் உள்ளதா என ஆராயும் முறை. 

மெக்சிகோவின் கலாபகோஸ் தீவுகள்! - ரெவில்லேஜிஜெடோ தீவுகள்

படம்
  மெக்ஸிகோவின் கடற்புரத்தில் ரெவில்லேஜிஜெடோ தீவுகள் அமைந்துள்ளன. இவற்றை மெக்ஸிகோவின் கலாபகோஸ் என்று புவியியலாளர்கள் அழைக்கிறார்கள். இதற்கு, இங்கு காணப்படும் பல்லுயிர்த்தன்மையே முக்கியக் காரணம். கடல் பகுதியில் அமைந்துள்ள சங்கிலித் தொடரான தீவுக்கூட்டங்களுக்கு ஆர்ச்சிபெலகோ என்று பெயர்.  இவற்றில் நிறைய எரிமலைகள் அமைந்துள்ளன. இவை என்ன காரணத்தில் வெடிப்புக்குள்ளாகின்றன என்பதை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.  1953ஆம் ஆண்டு பார்சினாவில் உள்ள ஆர்ச்சிபெலகோ எரிமலை லாவாவை வெளியேற்றியது. பிறகு, 1993 ஆம் ஆண்டு பசிபிக் பகுதியிலுள்ள எவர்மன் எரிமலை, வெடித்தது.இந்த இரண்டு எரிமலைகள் இரண்டுமே இன்று வரை இயங்கி வருகின்றன. “நாங்கள் இந்த எரிமலையில் வெளியாகும் லாவா அளவையும், ஏற்படும் ஆபத்து பற்றியும் ஆராய்ந்து வருகிறோம்” என்றார் நெதர்லாந்தின் உட்ரெச்ட் பல்கலைக்கழக பேராசிரியரான தூவே வான் ஹின்ஸ்பெர்ஜன் (). எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற ஆபத்தை ஏற்படுத்தும் என்ற பயம் இருப்பதால்தான் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் பயப்படுகின்றனர். எனவே, எரிமலைகளின் வெடிப்பை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.  லாவாவில் க

ஹைடெக் மாத்திரை, மரபணு நோய்களை ஆராயும் முறை!

படம்
  ஹைடெக் மாத்திரை தடுப்பூசி, இன்சுலின் என பலரும் ஊசி வழியாக மருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த  ஊசி வழி மருந்தை, மாத்திரை வடிவில் பயன்படுத்தினால் எப்படி இருக்கும் என்பதுதான் அலெக்ஸ் ஆப்ராம்சனின் ஐடியா. அலெக்ஸ் கண்டறிந்துள்ள ஹைடெக் மாத்திரையில் சோமா (Soma)என்ற சிறு கருவி உள்ளது. இதனை சாதாரண மாத்திரை போல விழுங்கினால் போதும்.  உணவுக்குழாய் வழியே வயிற்றுச்சுவர்களுக்குச் செல்லாமல் மருந்து ரத்தவோட்டத்தில் எளிதாக கலந்து விடுகிறது. எலிகளிடமும், பன்றிகளிடமும் செய்த முதல்கட்ட சோதனை வெற்றியடைந்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் மனிதர்களிடம் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது அலெக்ஸ் குழு.  மரபணு நோய்களை ஆராயும் முறை மனித நோய்களுக்கு காரணமாகும் மரபணுக்களை அடையாளம் கண்டால், நோய்களை முன்னரே கண்டறிந்து தடுக்கலாம். நோய் ஏற்படுத்தும் மரபணுக்களைக் கண்டறிந்து, அவற்றை மாற்றியமைத்து நோய்களை தடுப்பதே ஆராய்ச்சியாளர்களின்  எண்ணம்.  அமெரிக்காவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் ஷின் ஜின், ஜீன் தெரபி பற்றி ஆய்வு செய்து வருகிறார். “தொடக்கத்தில் ஒரு நேரத்தில் ஒரு செல் அல்லது ஒரு மரபணு என்று ஆராய முடியும

பூமியின் அடித்தட்டு மர்மம்! - பூமியின் அடித்தட்டில் இருப்பது உலோகமா, வேறு பொருட்களா?

படம்
  பூமியின் அடித்தட்டு மர்மம்! பூமியின் கீழ்ப்புறபகுதியில் நிறைய மர்மங்கள் உள்ளன. இதுபற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும் நாம் அறிந்தது, குறைவான தகவல்களைத்தான். புவியோடு பகுதி, மூடகப் பகுதியைக் (Mantle) கடந்து கண்டத்தட்டுகள், வெளிப்புற, உட்புற கருவப் பகுதிகளில் (Outer, inner core ) அழுத்தமும் வெப்பமும் அதிகம். பூமியின் கீழே 5 ஆயிரம் கி.மீ. ஆழத்திற்கு செல்லும்போது, அங்குள்ள உட்கருவத்தில்  இரும்பு, நிக்கல் உருண்டையான வடிவத்தில் உள்ளது என்பதே ஆய்வாளர்களின் எண்ணமாக இருந்தது.  நேச்சர் இதழில் வெளியாகியுள்ள அறிவியல் அறிக்கையில், உட்கருவத்தில் திட, திரவம் என இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையில் (Super ionic state) பொருட்கள் உள்ளன என்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆய்வுக்காக, நிலநடுக்க அலைகளைப் (Seismic waves) பயன்படுத்தியுள்ளனர்.  புவி அடுக்குகளுக்கு இடையில் நிலநடுக்க அலைகள் வெவ்வேறு அலைநீளத்தில் செலுத்தப்பட்டு, அதில் உள்ள வேதியியல் பொருட்களை அறிய முயன்றனர். இதற்கு முன்னர் செய்த ஆய்வில், ஷியர் அலைகளை (Shear waves)  பயன்படுத்தினர். இதில் கிடைத்த  தகவல்களை வைத்து, புவியின் உள் கருவத்த

கிரிஸ்பிஆர் முறையை வணிகப்படுத்த முடியும் - ஜெனிஃபர் டவுட்னா

படம்
  அமெரிக்காவைச் சேர்ந்த உயிரி வேதியியலாளர், ஜெனிஃபர் டவுட்னா. 2020ஆம் ஆண்டு மரபணு செம்மைப்படுத்தல் மேம்பாட்டிற்காக (Genome Editing) இம்மானுவேல் சார்பென்டியருடன்  சேர்ந்து நோபல் பரிசு பெற்றார்.    வால்ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த சிக்ஸ்த் ஸ்ட்ரீட் என்ற நிறுவனத்தில் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். இப்பணியை நீங்கள் ஏற்றது ஏன்? சிக்ஸ்த் ஸ்ட்ரீட் நிறுவனத்தில், சரியான குழுவை அடையாளம் கண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். இந்த நிறுவனத்தின் எந்திரக் கற்றல் நுட்பம் மூலம் கிரிஸ்பிஆர் தகவல்களை ஆராய முடியும். எந்திரக்கற்றலும், கிரிஸ்பிஆர் முறையும் ஒன்றாக சேரும்போது ஆற்றல் கொண்டதாக மாறும். இதன் மூலம் மரபணு நோய்களை அறிந்து சிகிச்சை செய்யலாம்.  பெண்களின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 2.3 சதவீத அளவுக்கு முதலீடு (Harvard Business Review)  கிடைப்பது பற்றி தங்களது கருத்து?  இந்த ஆய்வுத்தகவல் எனக்கு ஏமாற்றம் தந்தது. நான் ஆய்வுத்துறையில் பல்லாண்டு காலமாக  இருப்பதால் அதிர்ச்சி ஏற்படவில்லை.   கிரிஸ்பிஆர் முறையை வணிக ரீதியாக பயன்படுத்த முடியுமா? 10 ஆண்டுகளுக்கு மேலாக கிரிஸ்பிஆர் முறையை வணிக ரீதியாக பயன்படுத்

இன்டர்நெட் ஆஃப் அனிமல்ஸ் என்பது ஆச்சரியகரமானது! - மார்ட்டின் விக்கெல்ஸ்கி

படம்
  மொழிபெயர்ப்பு நேர்காணல் மார்ட்டின் விக்கெல்ஸ்கி விலங்கியலாளர் ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் விலங்குகளின் குணங்கள் ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநராக மார்ட்டின் விக்கெல்ஸ்கி உள்ளார். இவர் உருவாக்கிய சிந்தனைதான், ஐகாரஸ். இன்டர்நேஷனல் கோ ஆப்பரேஷன் ஃபார் அனிமல் ரிசர்ச் யூசிங் ஸ்பேஸ். 20 ஆண்டுகளுக்கு முன்னரே இக்கருத்தை உருவாக்கினார் மார்ட்டின். இப்போதுதான், ஜெர்மனி மற்றும் ரஷ்யா விண்வெளி அமைப்புகள் இதற்கு ஆதரவை வழங்கியுள்ளன. 2020ஆம் ஆண்டு பிளாக்பேர்ட் பெலாரஸிலிருந்து அல்பேனியாவிற்கு, 1530 கி.மீ. தொலைவுக்கு பயணித்தது. இதனை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் கண்காணித்தது. இதற்கு காரணம், அதன் உடலில் பொருத்திருந்த ட்ரான்ஸ்மீட்டர்தான்.  ஐகாரஸ் திட்டத்தில் நீங்கள் கண்டுபிடித்த விஷயம் என்ன? ஐரோப்பிய ஈல் எப்படி இனப்பெருக்கம் செய்கிறது, ஐரோப்பிய நாரைகள் 70 சதவீதம் அழிவது ஏன் என்ற கேள்விகளுக்கு விடைகளை அறிந்தோம். இதற்காக,  15 ஆயிரம் நாரைகளுக்கு நாங்கள் டேக்குகளை பொருத்த முடிவு செய்தோம். நாரைகள் திடீரென பெரும் எண்ணிக்கையில் இறந்துபோவதை நினைத்துப் பாருங்கள். இவை, காடுகளில் இப்படி இறந்துகிடப்பதை யாரும் பார்

நீலப்பொருளாதாரம் மக்களுக்கு முக்கியமானது! கெர்ஸ்டன் ஃபோர்ஸ்பெர்க்

படம்
  நேர்காணல் கெர்ஸ்டன் ஃபோர்ஸ்பெர்க் கடல் உயிரியலாளர் பிளானட்டோ ஓசனோ என்ற குழுவில் என்ன விஷயங்களை  முக்கியத்துவப் படுத்துகிறீர்கள்?  எங்கள் குழுவினர் கடல் சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு, பிரசாரம், உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு உதவி வருகிறோம். இதில் குழந்தைகள், ஆசிரியர்கள், மீனவர்கள், அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் என அனைவருமே உள்ளடங்குவர். இவர்களை வைத்து கடல் சார் ஆராய்ச்சி, கல்வி, நிலைத்த மேம்பாடு ஆகியவற்றை அடைய முயல்கிறோம்.  மீனவர்கள், கடல் உயிரினப் பாதுகாப்பிற்கு எதிரியாயிற்றே?  அவர்களோடு எப்படி பணிபுரிகிறீர்கள்? மண்டா ரே, ஆமைகள் ஆகியவற்றை நாங்கள் மீனவர்களுடன் சேர்ந்து பாதுகாக்க முயல்கிறோம். மீனவர்களுக்கு நாங்கள் இதுபற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளோம். அவர்களது வலையில் மண்டா ரே மீன், ஆமைகள் சிக்கினால் எங்களுக்கு தகவல் கொடுப்பார்கள். நாங்கள் அந்த உயிரினங்கள் பற்றிய தகவல்களை மீனவர்களிடம் இருந்து தான் பெறுகிறோம்.  நீல பொருளாதாரம் என்று கூறுகிறீர்களே? அதை விளக்கி கூறுங்களேன். மீன்வளம், சுற்றுலா, கடல்மேம்பாடு, துறைமுகம் என நிறைய துறைகள் கடல் சார்ந்து இயங்குக

வீட்டுக்கு எளிதாக கடன் கிடைக்கிறது. ஆனால் கல்விக்கடனை வாங்குவது சுலபமல்ல! - ஆசிஷ் பரத்வாஜ்

படம்
  நேர்காணல் ஆசிஷ் பரத்வாஜ் சூழல் அறிவியலாளர் சூழல் அறிவியலாளராக ஆக எப்படி முடிவு செய்தீர்கள்? நான் தொடக்கத்தில் வேலை செய்த நிறுவன உரிமையாளர்கள், இத்துறையைத் தேர்ந்தெடுக்க உதவினர். 2015ஆம் ஆண்டு நான் வேலைக்கு போகலாம் அல்லது மேற்படிப்பு படிக்கலாம் என இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தது. குடும்பத்தினரின் ஆதரவு கிடைத்ததால் படிப்பை தேர்ந்தெடுத்தேன். அதுதான் என் வாழ்க்கையில் எடுத்த முக்கியமான முடிவு.  படிக்கும்போது என்னென்ன சவால்களை சந்தித்தீர்கள்? கார் அல்லது வீடு வாங்க கடன் பெறுவதை விட கல்விக்கடன் பெறுவது கடினம். கல்வி உதவித்தொகை கிடைத்ததோடு, குடும்பத்தினரின் ஆதரவும் எனக்கு கிடைத்தது.  ஐரோப்பாவில் வேலை கிடைப்பது கடினம். அங்கு வேலை கிடைக்க திறமையோடு, மொழியைப் பேசவும் தெரிந்திருக்க வேண்டும். இதனால் இன்டர்ன்ஷிப் செய்து திறனோடு மொழியை பேசவும் கற்றேன்.  தற்போது செய்துகொண்டிருக்கும் பணி, அதில் எதிர்கொண்ட  சிக்கல்களையும் கூறுங்கள். புதுப்பிக்கும் ஆற்றல் (நீர், ஹைட்ரஜன் செல், சூரிய ஆற்றல், காற்று ) தொடர்பாக பணியாற்றி வருகிறேன். எனது குழுவிற்கு தகவல், ஆய்வு பற்றிய தகவல்களை சேகரி

பறவைகள் இல்லாத உலகை கற்பனை செய்யவே முடியாது! - ஸ்காட் வி எட்வர்ட்ஸ்

படம்
  நேர்காணல் ஸ்காட் வி எட்வர்ட்ஸ் பேராசிரியர், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா. பேராசிரியர் ஸ்காட், பரிணாம உயிரியல் துறையில் பணியாற்றுகிறார். பரிணாம வளர்ச்சியில் பறவைகளின் இயல்பு பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  பல்லுயிர்த்தன்மையில் பறவைகள் எந்தளவு முக்கியமானவை? அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள பிராங்க்ஸ் நகரில் தான் வளர்ந்தேன். பத்து வயதிலிருந்தே, அங்குள்ள நிறைய மரங்கள், அதில் வாழ்ந்து வந்த பறவைகள் மீது ஈடுபாடு உருவானது. 10 ஆயிரம் இனங்களுக்கு மேல் பறவைகள் கண்டறியப்பட்டுள்ளதால் அவற்றை ஆய்வு செய்வதும் எளிது. பிற விலங்கினங்களை விட பறவைகளின் சூழலியல் மற்றும் அதன் வாழ்க்கை இயல்புகளை அறிவது எளிது.  காலநிலை மாற்றத்தை பறவைகள் எப்படி சமாளிக்கின்றன? தற்போது, பறவைகளுக்கு நிறைய சவால்கள் உள்ளன. அதில் முக்கியமானது, வாழிட இழப்பு. மனிதர்கள் காடுகளை பெருமளவில் அழித்துவிட்டதால், பறவைகள் வாழ்க்கை சிக்கலாகிவிட்டது. இந்தியாவின் அரணாக உள்ள இமாலயத்தில், சில தனித்துவமான பறவைகள் வாழ்கின்றன. காலநிலை மாற்றத்தால் அவற்றின் வாழிடமும் சுருங்கினால், அவையும் அழிந்துவிடும். வேட்டையாடல், பறவைகளை செல்லப்பறவைகளாக வளர்

கலாப்பகோஸ் தீவு ஆச்சரியகரமானது! - வில்லியம் ஹெச் துர்ஹாம்!

படம்
  நேர்காணல் வில்லியம் ஹெச் துர்ஹாம்  அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பரிணாம மானுடவியல் மற்றும் உயிரியல் துறை பேராசிரியராக உள்ளார். கலாப்பகோஸ் தீவில் உள்ள உயிரினங்கள் பற்றிய ஆய்வு செய்து வருகிறார்.  கலாப்பகோஸ் தீவு மனித வாழ்க்கையோடு எந்த விதத்தில் இசைவாக உள்ளது? கலாப்பகோஸ் தீவு, மனித வாழ்க்கை எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை விளக்கும் தனித்துவமான இடம். மனிதர்களின் பலம், திறன்கள், பாதுகாப்பு ஆகியவற்றை பிற உயிரினங்களிடமும் காணலாம். நாம் பெரும் உயிரினங்களின் இனக்குழுவில் ஒரு அங்கம். தாவரங்கள், மரங்கள், பூச்சிகள், விலங்குகள் ஆகியவையும் நமக்கு உறவினர் போலத்தான். இதை உணர்ந்தாலே இயற்கை சூழலை கையாளும் முறைகள் மாற வாய்ப்புள்ளது.  காலநிலை மாற்றத்தால் கலாப்பகோஸ் தீவு பாதிக்கப்பட்டுள்ளதா? தீவில் உள்ள உடும்பு (Marine iguana), நீளமானது. காலநிலை மாற்றத்தால் அதன் நீளம் தற்போது குறைந்து வருகிறது. இம்மாற்றம் 1905 தொடங்கி 2000 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றுள்ளது. எல் நினோ பருவநிலை மாற்றம், வெப்பம் தொடர்ந்து அதிகரிப்பது கடலிலுள்ள பாசிகளை அழிக்கிறது. கடல் பாசிகளை உடும்புகளின் முக

கானரி தீவில் நத்தைகள் பற்றி ஆராய்ந்தவர்! - மேரி ஹார்னர் லைல்

படம்
மேரி ஹார்னர் லைல் ( Mary horner Lyell ) 1808 - 1873 இங்கிலாந்தின் லண்டன் நகரைச் சேர்ந்தவர். சங்குகளைப் பற்றி ஆராய்ந்து வந்தார். இவர் புவியியலாளரும் கூட. மேரியின் தந்தை, லியோனார்ட் ஹார்னர், புவியியல் பேராசிரியர். இவர், தனது ஆறு பிள்ளைகளும் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என நினைத்தார். இதனால், மேரி உள்ளிட்ட அனைவருக்குமே எளிதாக கல்வி கற்கும் சூழ்நிலை கிடைத்தது.1832ஆம் ஆண்டு புகழ்பெற்ற புவியியலாளரான சார்லஸ் லைல் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். கணவரின் அனைத்து ஆய்வுகளுக்கும் உதவியாளர் மேரி தான்.  1854ஆம் ஆண்டு மேரி, ஸ்பெயின் நாட்டின் கானரி தீவில் நத்தைகள் பற்றி செய்த ஆய்வு, முக்கியமானது. இதனை காலபகோஸ் தீவில் பறவைகள், ஆமைகள் பற்றி ஆய்வு செய்த விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் ஆய்வோடு ஒப்பிட்டனர். பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்வீடிஷ், ஸ்பானிஷ் மொழிகளைக் கற்று கணவர் சார்லஸின் பணியில் உதவினார். அறிவியல், இலக்கியம் என பல்வேறு விஷயங்களையும் தம்பதியினர் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர். தென் அமெரிக்காவில் உள்ள பனிப்பாறை புவியியல் (Glacial geology ) பற்றிய ஆய்வறிக்கையை கல்வியாளர் எலிசபெத் அகாஸ்சிஸ்சுடன் சேர்ந்த

இந்திய குகைகளிலுள்ள ரகசியங்களை சொல்லும் ஆராய்ச்சியாளர்கள்!

படம்
  இந்திய குகைகளிலுள்ள ரகசியங்கள்! இந்தியாவில் உள்ள குகைகள் பல்வேறு ரகசியங்களைத் தங்களுக்குள் கொண்டுள்ளன.  ஆயிரக்கணக்கிலான நுண்ணுயிரிகள் வாழும் குகைகளில்,  குறைவான ஆராய்ச்சிகளே நடைபெற்றுள்ளன. தற்போது குகைகளையும், அதில் உள்ள உயிரினங்கள் பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.  குகைளை ஆய்வு செய்யும் துறைக்கு, ஸ்பீலியோலஜி (Speleology) என்றுபெயர். இந்தியாவில் 9  ஆராய்ச்சியாளர்கள்  ஒன்றாக இணைந்து குகைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களை உயிரியல் ஆராய்ச்சியாளர் *************** வழிநடத்துகிறார். ********* தமிழ்நாட்டிலுள்ள ********பறவைகள் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில்  உயிரியல் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார். இவர்கள் அனைவரும் இணைந்துதான் குகைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும், ஸ்பீலியோலஜி சங்கத்தை இந்தியாவில் தொடங்கியுள்ளனர்.  மேகாலயா, அந்தமான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள குகைகள் ஆராய்ந்து வருகின்றனர். இக்குகைகளில் வாழும் தாவரங்கள், உயிரினங்கள் அனைத்துமே காலநிலை மாற்ற பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. ”ஏரி அல்லது ஆற்று மீன்களைப் பற்றி

சிக்கலான புரதங்கள் பற்றிய ஆராய்ச்சி செய்தவர்! - ஃபெலிக்ஸ் ஹாப்பே செய்லர்

படம்
  ஃபெலிக்ஸ் ஹாப்பே செய்லர் (Felix hoppe-seyler  1825-1895) ஃபெலிக்ஸ் உயிரி வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆகிய துறைகளை தோற்றுவித்த ஆய்வாளர்களில் ஒருவர் என கருதுகின்றனர். இவர், ஜெர்மனியின் ஃபிரெபர்க் நகரில் பிறந்தார். ஒன்பது வயதில் பெற்றோரை இழந்தார்.  ஃபெலிக்ஸின் உறவினரான மருத்துவர் செய்லரால்  தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். 1850ஆம் ஆண்டு பெர்லின் நகரில் படித்து தேர்ச்சி பெற்று மருத்துவரானார்.  1860ஆம் ஆண்டு பெர்லின் நகரில்  உதவி பேராசிரியராக பணியாற்றினார். 1862ஆம் ஆண்டு, இவர் மனித உடலில் உள்ள ஹீமோகுளோபின் பற்றி ஆராய்ந்தார். இதன் வழியாக தாவரங்களில் உள்ள குளோரோபில் வேதிப்பொருள் மூலம் நடைபெறும் ஒளிச்சேர்க்கை பற்றிய முக்கியமான ஆய்வை செய்தார்.  புரோட்டெய்ட்ஸ் (Proteids) எனும் சிக்கலான புரதங்கள் பற்றிய ஃபெலிக்ஸின் ஆராய்ச்சி முக்கியமானது. 1877ஆம் ஆண்டு ஜர்னல் ஆஃப் பிசியாலஜிகல் கெமிஸ்ட்ரி என்ற இதழைத் தொடங்கி, 1895ஆம் ஆண்டு காலமாகும்வரை அதன் ஆசிரியராக செயல்பட்டார்.   https://www.encyclopedia.com/science/dictionaries-thesauruses-pictures-and-press-releases/hoppe-seyler-felix   

நவீன சூழலியலின் தந்தை - ஜி எவ்லின் ஹட்சின்சன்

படம்
  ஜி எவ்லின் ஹட்சின்சன் (G.Evelyn hutchinson 1903 -1991) உயிரியலாளர், ஆசிரியர் நவீன சூழலியலின் தந்தை என்று என்னை அழைக்கிறார்கள்.  எனது மாணவர்கள் தான் சூழலில் உள்ள உயிரினங்களை கணிக்கும் கணிதமாதிரியை உருவாக்கினார்கள்.  இங்கிலாந்தில் பிறந்த ஹட்சின்சன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பட்டம் பெற்றார். பிறகு தென்னாப்பிரிக்காவிற்கு ஆசிரியராக பணிக்கு சென்றார். பின்னாளில், அமெரிக்காவிற்கு சென்று யேல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்கினார்.  ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா. வட அமெரிக்கா என பல்வேறு பகுதிகளில் சூழலியல் பற்றி ஆராய்ந்தார் ஹட்சின்சன். குறிப்பிட்ட சூழலில் உயிரினங்கள் வாழ்வதற்கான பல்வேறு காரணங்களை தேடினார். ஏரிகளைப் பற்றி ஆய்வு செய்த முதல் அறிவியலாளர்  (limnologist), எவ்லின் ஹட்சின்சன் தான். கோட்பாட்டு உயிரியலாளராக ஆராய்ச்சிகளை செய்தவர், படிம விலங்கின மாதிரிகளைக் கொண்டு  சூழலுக்கும் அவற்றுக்குமான தொடர்பை அறிய முயன்றார். வெப்பமயமாதலை முன்னரே கணித்தவர் என சூழலியலில் கருதப்படும் ஆராய்ச்சியாளர் எவ்லின் ஹட்சின்சன்.  https://www.oxfordbibliographies.com/view/document/obo-97801998

தாவரங்களை ஆராய்ச்சி செய்வதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர்! கிரிஸ்டியன் கான்ராட் ஸ்பிரேங்கல்

படம்
  கிரிஸ்டியன் கான்ராட் ஸ்பிரேங்கல் ( Christian konrad sprengel 1750 -1841) ஜெர்மனியின் பிராண்டன்பர்க் நகரில் பிறந்தார். பெற்றோர், எர்னஸ்ட் விக்டர் ஸ்ப்ரேங்கல், டோரோதியா ஞாடன்ரெய்ச்.  1770ஆம் ஆண்டு ஹாலே பல்கலைக்கழகத்தில் இறையியல், மொழியியல் பாடங்களைப் படித்தார். 1780ஆம் ஆண்டு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தார். கிடைத்த ஓய்வு நேரத்தில், தாவரவியல் பற்றி படித்துக்கொண்டிருந்தார். தாவரங்களில் நடைபெறும் மகரந்தச்சேர்க்கையை மேம்படுத்த முயன்றுகொண்டிருந்தார். கல்விப்பணி மற்றும் மத ரீதியான செயல்பாடுகளை தாவரங்களை ஆராய்ச்சி செய்வதற்காக குறைத்துக்கொண்டார்.  1793ஆம் ஆண்டு கான்ராட் வெளியிட்ட தாவரவியல் நூலில் 461 தாவர இனங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இதில் 1000க்கும் மேற்பட்ட பூக்களின் ஓவியங்கள் இருந்தன. 1794ஆம் ஆண்டு பள்ளி நிர்வாகம், கான்ராடை  ஆசிரியர் பணியிலிருந்து நீக்கியது. அறிவியலாளர்கள் கான்ராடின் ஆராய்ச்சியை பெரியளவு அங்கீகரிக்கவில்லை. 1841ஆம் ஆண்டு சார்லஸ் டார்வின், கான்ராடின் ஆராய்ச்சியை ஏற்றுக்கொண்டார். பின்னரே அறிவியலாளர்கள் கான்ராடை ஏற்று அங்கீகரித்தனர்.  https://www.encycl

டிஎன்ஏவிலுள்ள மூலக்கூறுகளை அறிந்து உலகிற்கு சொன்னவர்! - ரோஸாலிண்ட் ஃபிராங்கிளின்

படம்
  ரோஸாலிண்ட் ஃபிராங்கிளின் (1920-1958) இங்கிலாந்தின், லண்டன் நகரில் பிறந்தார். பெற்றோர் எல்லிஸ் ஆர்தர் ஃபிராங்கிளின், முரியல் ஃபிரான்சஸ் வாலே.பள்ளியில் படிக்கும்போதே அறிவியல் படிப்பில் ஆர்வம் காட்டினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நியூன்காம் கல்லூரியில், இயற்கை அறிவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்தவர், 1941ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். முனைவர் பட்டம் பெற்றவர்,  பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்று எக்ஸ்ரே கதிர்கள்(xray diffraction) பற்றி படித்து வல்லுநரானார்.  1951ஆம் ஆண்டு லண்டனில் கிங் கல்லூரியில் இருந்த ஆராய்ச்சிக் குழுவோடு இணைந்து எக்ஸ்ரேவைப் பயன்படுத்தி டிஎன்ஏவை 3டி வடிவத்தில் உருவாக்க முயன்றார். இதற்கு ரோஸாவின் மாணவர் எடுத்த போட்டோகிராப் 51 முக்கியமான ஆதாரமாக உள்ளது. 1953ஆம் ஆண்டு புகையிலை மொசைக் வைரஸின் ஆர்என்ஏ அமைப்பை பற்றி ஆராயத் தொடங்கினார். இந்த செயல்பாடுதான், வைரஸ்களைப் பற்றிய அமைப்பு பற்றி அறிவதற்கு உதவியது. டிஎன்ஏவிலுள்ள மூலக்கூறுகளைப் பற்றி அறிவதற்கு ரோஸாலிண்ட் செய்த ஆராய்ச்சிகள் உதவின. https://en.wikipedia.org/wiki/Rosalind_Franklin