இடுகைகள்

மருத்துவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சைக்கோபாத்களுக்கான மருத்துவ திட்டம்

படம்
  வருமுன் காப்போம் என்ற கதையை படித்திருக்கிறீர்களா? இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அந்த வாசகத்தை மனதால் உணர்ந்தால் போதும். சிறுவயதில் ஒருவரின் குற்ற அறிகுறிகளை ஆராய்ந்தால் அவரை எளிதாக சிகிச்சை பெறச் செய்து எதிர்காலத்தில் வளர்ந்து இளைஞராகி செய்யும் குற்றங்களையேனும் தடுக்கலாம். குறைந்தபட்சம் குற்ற சதவீதத்தையேனும்   குறைக்கலாம் அல்லவா? உளவியல் சிகிச்சை என்பது குழந்தையின், சிறுவர்களின் மனநிலைக்கானது மட்டுமல்ல. அவர்களது குடும்ப சமூக உறவுகளை மேம்படுத்தவும்தான். மனநல சிகிச்சை அளிக்கும்போது அதன் பாதியில் கூட சிலர் சைக்கோபதி அறிகுறிகளைக் கொண்டவர் சிறப்பாக குணமடைகிறார் என மகிழ்ச்சியாக கூறுவதுண்டு. உண்மையில் அப்படி கூறுபவர், பிரச்னையை சரியாக கையாளும் திறமை கொண்டவராக இருக்கவேண்டும். அல்லது நண்பர், கணவர் திருந்திவிட்டார் முன்னேற்றம் தெரிகிறது என்பவர் தனது தேவையைக் குறைத்துக்கொண்டவராக இருக்கவேண்டும். ஏறத்தாழ தன்னையே தியாகம் செய்துவிட்டார் எனலாம். சைக்கோபதி நபர்களை சரியான பாதையில் திருப்ப நிறைய திட்டங்கள், சிகிச்சைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இதில் எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்கவில்லை. சிகிச்சைகள் பற்

நோயாளிக்கு மிக நெருக்கத்தில் உள்ள கொலையாளிகள்

படம்
  இப்போது இறப்பின் தேவதை என மருத்துவமனையே அழைத்த புகழ்பெற்ற செவிலியரான கிரிஸ்டனைப் பார்ப்போம். கிரிஸ்டனைப் பொறுத்தவரை அனைத்துமே சோதனைகள்தான். எதற்காக உயிர்வாழ்வதற்காக இந்த பரபரப்பு என இதய பிரச்னை இல்லாதவர்களை கூட மருந்து கொடுத்து மாரடைப்பு ஏற்படுத்தி கொன்றார். எபின்பிரைன் மருந்தைக் கொடுத்து நோயாளிக்கு மாரடைப்பு ஏற்படுத்தி விட்டு கோட் ப்ளூ பட்டனை அழுத்திவிட்டு பக்கத்தில் பாவமாக நின்றுகொள்வார். மருத்துவர்களும் வேகமாக வந்து நோயாளியை காப்பாற்ற அவரின் விலா எலும்புகள் உடையும் வரை சிபிஆர் செய்துவிட்டு இறந்த நேரத்தை குறித்துக்கொண்டு அங்கிருந்து செல்வார்கள். குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் முப்பது நோயாளிகளில் 23 நோயாளிகளுக்கு கோட் ப்ளூ என்று தகவல் சொல்லியவர் கிரிஸ்டின் அம்மணிதான். ஒருகட்டத்தில் மருந்தகத்தில் எபின்பிரைன் மருந்துகளை பெயர் சொல்லாமல் வாங்கியது யார் என விசாரணை தொடங்கியது, மேலும் நோயாளிகள் இறந்துகொண்டே இருந்தால் பலருக்கும் பயம் ஏற்படும்தானே அப்படி ஏற்பட்டபோது பார்த்தால் செவிலியர் கிரிஸ்டின் லீவ் போட்டுவிட்டார். மருத்துவமனையின் விசாரணையைத் தடுக்க மருத்துவமனைக்கு குண்டு வைத்திருக்க

தனது உதவியாளரின் உடலுக்குள் புகுந்து நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்யும் டாக்டர்! - கோஸ்ட் டாக்டர் -

படம்
  கோஸ்ட் டாக்டர் தென்கொரிய டிவி தொடர் 16 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் இயக்குநர் பூ சியாங் சியோல் ( Boo Seong-cheol  ) டாக்டர் சா இயான் மிங் (Rain), ஆணவம் கொண்ட இதய அறுவை சிகிச்சை நிபுணர். தான் கைவைத்து அறுவை சிகிச்சை செய்தால் அந்த நோயாளி பிழைக்கவேண்டும் என போராடும் மருத்துவர். அவரது துறையின் தலைமை மருத்துவர் பான் கூட சாவின் அர்ப்பணிப்பு உணர்வையும் அறுவை சிகிச்சை திறனையும் பார்த்து பொறாமைப்படுபவர். சா திறமையானவர் என்றாலும், தான் மட்டுமே அறுவை சிகிச்சைக்கான நோயாளியைத் தேர்ந்தெடுப்பேன் என பிடிவாதமாக இருப்பவர். இதனால் எமர்ஜென்சி பிரிவில் அவரது தேவை இருந்தாலும் அதை நான் செய்யமாட்டேன் என   பிடிவாதமாக இருக்கிறார். இந்த நேரத்தில் அந்த மருத்துவமனையின் தலைவராக உள்ளவரின் பேரன் கோ தக் (kim bum), அங்கு வேலைக்கு வருகிறான். இதயநோய் துறைக்குத் தான் பயிற்சி பெற வருகிறான். சிபாரிசில் வந்தவன், மருத்துவமனை அவனுடையது என்பதால் எளிதாக வந்துவிட்டான் என மருத்துவர் சா அவனை அவமானப்படுத்தி பேசுகிறார். இழிவாக நடத்துகிறார். நிறைய நோயாளிகளை பார்த்துக்கொள்ள சொல்லி தள்ளிவிடுகிறார். இத்தனைக்கும் மருத்துவ கல்

அறிகுறிகளை வைத்து நோய்களை கணிக்கும் முறை - அவசர சிகிச்சை மருத்துவம்

படம்
  நோயாளியின் குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை பற்றிய குறிப்புகள் முக்கியமானவை. இவற்றை நாம் அறிந்தால் அவருக்கு எளிதாக சிகிச்சை செய்ய முடியும்.   குடும்ப விவரங்களை அறிவது எதற்கென்றால், நோயாளியின் குடும்பத்தில் பாரம்பரியமாக சில நோய்கள் உருவாகி வந்திருக்கலாம். அதை தெரிந்தால் அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது எளிது. இதய நோய்கள், த்ரோம்போயம்போலிக் நோய், குடல்வால், பித்தப்பை நோய், புற்றுநோய் ஆகியவை குடும்ப ரீதியாக ஏற்படும் நோய்கள். எனவே, இவற்றை ஆராய நோயாளி கூறும் விவரங்கள் அவசியம்.   மதுப்பழக்கம், புகையிலை பயன்படுத்துகிறாரா, போதைப்பொருட்கள் பழக்கம், திருமணம் ஆனவரா, நரம்பியல் ரீதியாக பாதிப்பு ஏதேனும் உள்ளதா என ஆராய்வதும் முக்கியமானது. இதையொட்டி கேட்கப்படும் கேள்விகளைப் பார்ப்போம். வலி எப்போது தொடங்கியது? வலி தொடங்கும்போது என்ன வேலை செய்துகொண்டிருந்தீர்கள்.? வலியின் உணர்வு எப்படி இருக்கிறது? இதற்கு முன்னர் இப்படி வலி ஏற்பட்டிருக்கிறதா? வலிக்கான அளவுகோலாக 0 லிருந்து பத்துக்குள் ஒரு எண்ணைச் சொல்ல முடியுமா? வலிக்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு

அவசர சிகிச்சையில் நோயாளிகளிடம் கேள்வி கேட்கும் முறைகள்!

படம்
    மூச்சு விடுவதில் பிரச்னை, கண்பார்வை மங்கலாவது, சிறுநீர் வெளியேற்ற சிரமப்படுவது, சமநிலை குலைந்து மயக்கமாவது, உணர்வுநிலை தேய்வுநிலை அடைவது, கவனம், சிந்திப்பது தேக்கம் பெறுவது ஆகியவற்றை   அவசர சிகிச்சையில் சேர்க்கலாம்.   காய்ச்சல் குழந்தைகளுக்கு காய்ச்சல் அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளில் ஒன்று. ஆனால் பெற்றோர் குழந்தைக்கு வரும் காய்ச்சலைப் பார்த்து பதற்றமாவார்கள். வைரஸ், பாக்டீரியா நோய்த்தொற்று, சிறுநீரகத் தொற்று, நிம்மோனியா, காயங்களால் ஏற்படும் தொற்று, மலேரியா, அறுவை சிகிச்சை செய்த நிலை, புற்றுநோய், ஒட்டுண்ணி, ஆர்த்தரைட்டிஸ்   என பல்வேறு நோய் பாதிப்புகளின் போது காய்ச்சல் ஏற்படும்.     ரத்தப்போக்கு உடலில் நடைபெறும் ரத்தப்போக்கு சிலசமயங்களில் வலி அல்லது வலியற்ற தன்மையில் இருக்கலாம். காயங்களிலிருந்து ரத்தம் வெளியேறுதல், யோனியிலிருந்து ரத்தம் வெளியாகுதல், சிறுகுடலில் ரத்தகசிவு, ரத்தசோகை,   வான் வில்பிராண்ட் நோய் (ரத்தம் உறையாத நிலை) ஆகியவற்றின் மூலம் ரத்தம் உடலில் இருந்து வெளியேறும். சமூக காரணிகள் குடிநோயாளிகள், வீடற்றவர்கள், ஆதரவற்று தன்னை பராமரிக்க முடியாதவர்கள், ப

எமர்ஜென்சி -இஎம் மருத்துவத்தில் கவனிக்க வேண்டியவை என்னென்ன?

படம்
  அவசரநிலை மருத்துவம் அடிப்படை அறிவோம் அனைத்து நாடுகளிலும் அவசரநிலை மருத்துவம் உண்டு. இதற்கென தனி தொலைபேசி எண்ணைக் கூட கொடுத்திருப்பார்கள். அமெரிக்காவில் 911 என்றால் சீனாவில் 119, தமிழ்நாட்டில் 108, பிற மாநிலங்களிலும் இப்படி ஏதோ ஒரு எண் வரிசை இருக்கும்.   எமர்ஜென்சி என்பது அவசரமாக நோயாளியைப் பார்த்து அவரது உயிரைப் பாதுகாக்கும் நிலை என புரிந்துகொண்டால் போதும். பிற நாடுகள் எப்படியோ இந்தியாவைப் பொறுத்தவரை கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தொடக்க சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் வேலை அதிகம். ஆனால் ஆட்கள் குறைவு. எமர்ஜென்சி என்று வரும் நோயாளிகளை முதலுதவி செய்துவிட்டு உடனே அருகில் உள்ள   அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பிவிடுவதே வழக்கம்.   இதனால் நோயாளி பிழைப்பாரா என்றால் ஆம்புலன்ஸை ஓட்டுபவரின் திறனைப் பொறுத்தது. நோயாளியும் பிரச்னையை சமாளிக்கத்தான் வேண்டும். எமர்ஜென்சி துறை என்றே தனியார் மருத்துவமனைகள் இப்போது திறக்கத் தொடங்கிவிட்டன. அரசு மருத்துவமனைகளிலும் இத்தகைய பிரிவுகள் உண்டு. எப்படி வேலை செய்கிறார்கள் என நீங்களே சென்று பார்ப்பது உடலுக்கும் மனதுக்கும் கேடு.

கிளை ஆக்சிலேட் சுழற்சியைக் கண்டறிந்தவர்! ஹன்ஸ் அடால்ஃப் கிரெப்ஸ்

படம்
 ஹன்ஸ் அடால்ஃப் கிரெப்ஸ் ( Hans adolf krebs  1900 - 1981) 1900ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, ஜெர்மனியின் ஹில்டேஷெய்ம் என்ற நகரில் பிறந்தார்.  இவரது தந்தை, கண், காது, மூக்கு அறுவை சிகிச்சை வல்லுநர். ஹான்ஸ், தனது 25ஆவது வயதில் மருத்துவப்படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்றார்.  1932ஆம் ஆண்டு ஃபிரெய்ட்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது, பாலூட்டிகளின் உடலில் வளர்சிதை மாற்ற செயல்பாட்டின் வழியாக யூரியா எப்படி உருவாகிறது என்பதை ஆய்வு செய்து கண்டுபிடித்தார். இந்த ஆராய்ச்சி ஹான்ஸிற்கு, புகழைப் பெற்றுத்தந்தது.   யூதரான ஹான்ஸ், 1933ஆம் ஆண்டு ஜெர்மனியை விட்டு வெளியேறினார்.  இங்கிலாந்திற்கு சென்றவர், 1935ஆம் ஆண்டில், அங்குள்ள ஷெஃபீல்டு பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றினார். பின்னாளில் அங்கு உருவாக்கப்பட்ட உயிரிவேதியியல் துறைக்கு பொறுப்பாளரானார்.  அங்கு செய்த ஆராய்ச்சியில்,உடலிலுள்ள செல்களில் ஆற்றல் பரிமாற்றம் நடப்பதை விவரிக்கும் சிட்ரிக் அமில சுழற்சியைக் (Citric Acid Cycle) கண்டறிந்தார். ஆய்வுப்பணிகளில் பெற்ற புகழ் காரணமாக, ஹான்ஸ் 1947 ஆம் ஆண்டு பிரிட்டன் ராயல் சொசைட்ட

நவீன மின் உடலியங்கியல் துறையை உருவாக்கியவர்! எமில் டு பாய்ல் ரேமண்ட்

படம்
எமில் டு பாய்ஸ் ரேமண்ட் ( Emil Du Bois-Reymond 1818 -1896) ஜெர்மனியின் பெர்லினில் எமில் பிறந்தார். அங்குள்ள பிரெஞ்சு கல்லூரியில் படித்தவர், மருத்துவக்கல்வியை பெர்லின் பல்கலைக்கழகத்தில் கற்றார். மருத்துவம், உடற்கூறியல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். மருத்துவத்துறை பேராசிரியர் ஜோகன்னஸ் பீட்டர் தனது இளம் உதவியாளராக சேர்த்துக்கொண்டார்.  பேராசிரியர் ஜோகன்னஸ், உயிரினங்களில் உள்ள மின்னாற்றல் பற்றி ஆராய்ந்துகொண்டிருந்தார். எனவே, அவரைப் பின்பற்றி எமில் பட்ட ஆய்வுக்காக மின்சார ஆற்றல் உள்ள மீன்களை எடுத்துக்கொண்டார். 1858ஆம் ஆண்டு பெர்லினில் மருத்துவத்துறை பேராசிரியரானார்.  1867இல் பெர்லின் அறிவியல் அகாடமியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். நவீன மின் உடலியங்கியல் துறைக்கு உருவாக்கியவர். ஜெர்மன் பேரரசர், எமிலுக்காக மருத்துவக் கழகம் ஒன்றைக் கட்டிக்கொடுத்தார். 1877, நவ.6 ஆம் தேதி மருத்துவக்கழகம் தொடங்கி வைக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது.  1859-1877 காலகட்டத்தில் முல்லர்ஸ் ஆர்ச்சீவ் (Müllers Archiv)இதழில்  இணை ஆசிரியராக செயல்பட்டார்.  பிறகு காலமாகும்வரை,  ஆர்ச்சீவ் ஃபர் பிசியாலஜி (Archiv für Physiologie.)

உட்சுரப்பியல் துறையில் செய்த ஆய்வுகளுக்காக போற்றப்படும் ஆளுமை! - எட்வர்ட் ஷார்பே ஸ்காஃபெர்

படம்
எட்வர்ட் ஷார்பே ஸ்காஃபெர் (Edward Albert Sharpey-Schäfer, 1850 -1935) உட்சுரப்பியல் துறையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்களில் முக்கியமானவர். லண்டனில் வணிகராக இருந்த ஜே.டபிள்யூ.ஹெச். ஸ்ஹாஃபர் , ஜெஸ்ஸி ப்ரௌன் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். 1874ஆம் ஆண்டு, யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனில் மருத்துவப்படிப்பு படித்தார். இவருக்கு ஆசிரியராக கற்பித்தவர், மருத்துவர் வில்லியம் ஷார்பே. இதனால் ஆசிரியரின் பெயரை,  தனது பெயரில் சேர்த்துக்கொண்டார்.  1878ஆம்ஆண்டு லண்டலின் உள்ள ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 1878ஆம் ஆண்டில் ராயல் இன்ஸ்டிடியூஷனில் பேராசிரியராக பதவியேற்றார். 1903ஆம் ஆண்டு செயற்கை சுவாசம் பற்றிய ப்ரோன் பிரஷர் (Prone pressure) முறைக்காக புகழ்பெற்றார் . 1911-12 காலகட்டத்தில் பிரிட்டிஷ் அறிவியல் சங்கத்தின் தலைவராக செயல்பட்டார். 1933ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். உட்சுரப்பியல் துறையில் செய்த ஆய்வுகளுக்காக (Suprarenal of pituitary extracts ) எட்வர்ட் போற்றப்படுகிறார்.   https://royalsocietypublishing.org/doi/10.1098/rsbm.1935.0005 https://www.ency

நோபல் பரிசு பெற்ற நியூரோட்ரான்ஸ்மீட்டர் ஆய்வு - ஓட்டோ லோவி

படம்
ஓட்டோ லோவி (1873 -1961) ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகரில் பிறந்தவர், லோவெய். பெற்றோர் ஜேக்கப் லோவி, அன்னாவில்ஸ்டாட்டர். பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க்கில் படித்து மருத்துவப் பட்டம் பெற்றார். காசநோய் பாதிப்பால் மக்கள் கடும்பாதிப்புக்கு உள்ளாவதைப் பார்த்தார். இதனால், குணப்படுத்தமுடியாத நோய்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை செய்ய முயன்றார்.  1902ஆம் ஆண்டு லண்டனுக்கு இடம்பெயர்ந்தவர்,ஹென்றி டேலுடன் இணைந்து ஆராய்ச்சியை செய்யத் தொடங்கினார்.  1936ஆம் ஆண்டு, டேல் மற்றும் லோவி செய்த நியூரோட்ரான்ஸ்மிட்டர்  ஆய்வுக்கு மருத்துவப்பிரிவில் நோபல் பரிசு கிடைத்தது. 1938ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்தவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.எனவே, 1940ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்று, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் துறையில் (Pharmacology) பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.   1954ஆம் ஆண்டு ராயல் சொசைட்டியில் வெளிநாட்டு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.   https://www.nobelprize.org/prizes/medicine/1936/loewi/biographical/

உயிரி தொழில்நுட்பத்துறைக்கு அடித்தளமிட்டவர்களில் முக்கியமானவர்! - ஸ்டான்லி என் கோஹென்

படம்
  ஸ்டான்லி என் கோஹென் (Stanley N cohen 1935) அமெரிக்காவின் நியூஜெர்சியில் யூதப்பெற்றோருக்கு(பெர்னார்ட், இடா) பிறந்தேன்.  எலக்ட்ரீசியனான பெற்றோருக்கு பல்வேறு வேலைகளில் உதவி வந்தேன். பிறகு, பென்சில்வேனியாவில்  மருத்துவம் படித்தேன். பாக்டீரியாவின் டிஎன்ஏ வளையமான பிளாஸ்மிட்ஸ் (Plasmids) பற்றி ஆய்வு செய்தேன்.  பாஞ்சோ, உகுலேலே இசைக்கருவிகளை  இசைப்பது பிடித்தமானது. 1964-65 காலகட்டத்தில், ஜெர்ரி ஹர்விட்ஸ் ஆய்வகத்தில் பணியாற்றியபோது பாக்டீரிய மரபணுக்கள் மீது ஆர்வம் பிறந்தது. 1972ஆம் ஆண்டு ஹெர்பர்ட் போயர் என்ற ஆராய்ச்சியாளரைச் சந்தித்து ஒன்றாக ஆய்வு செய்யத் தொடங்கினர். 1973ஆம் ஆண்டு,  மறுசீரமைப்பு டிஎன்ஏ நுட்பத்தைக் கண்டறிந்து வெளியிட்டனர்.   1988ஆம் ஆண்டு கோஹெனுக்கு அமெரிக்க தேசிய  அறிவியல் பதக்கம் வழங்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு போயருக்கு இப்பரிசு, வழங்கப்பட்டது. உயிரி தொழில்நுட்பத்துறைக்கு அடித்தளமிட்டவர்களில் ஸ்டான்லி என் கோஹேனுக்கு முக்கியப் பங்குண்டு.  https://www.whatisbiotechnology.org/index.php/people/summary/Cohen 

சேவல்களின் விரைப்பகுதி மாற்று அறுவைசிகிச்சை செய்து வென்றவர்! அர்னால்ட் அடால்ப் பெர்த்ஹோல்ட்

படம்
  அர்னால்ட் அடால்ஃப் பெர்ட்ஹோல்ட்(Arnold Adolph Berthold 1803 -1861) அர்னால்ட், ஜெர்மனியின் சோஸ்ட் நகரில் பிறந்தார். ஆறு குழந்தைகளில் இவர் இரண்டாவது பிள்ளை.  காட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் (University of Göttingen) மருத்துவப்படிப்பில் சேர்ந்தார்.  1823ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவ ஆய்வைச் சமர்ப்பித்தார்.  1829ஆம் ஆண்டு மனிதர்கள், விலங்குகள் பற்றிய தனது மருத்துவ நூலைப் பதிப்பித்தார். பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சுற்றுலாவாகச் சென்ற அர்னால்ட், 1835ஆம் ஆண்டு காட்டிங்கன் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார். அங்கு, மருத்துவப் பேராசிரியராக பணியாற்றினார். கூடுதலாக, உயிரியல்துறையின்  ஆவணப் பொருட்களுக்கு காப்பாளராக செயல்பட்டார். ஆர்செனிக் விஷத்திற்கு எதிரான விஷமுறிவு மருந்தைக் (hydrated iron oxide) கண்டுபிடித்தார். கிட்டப்பார்வை, முடி,விரல்நகங்கள் வளருவது, கர்ப்பசெயல்முறை பற்றி ஆராய்ச்சி செய்தார். 1849ஆம் ஆண்டு சேவல்களின் விரைப்பகுதிகளை மாற்றிப் பொருத்தி அறுவை சிகிச்சை செய்வது பற்றி,  ட்ரான்ஸ்பிளான்டேஷன் டெர் ஹோடன் (Transplantation der Hoden)என்ற அறிக்கையை வெளியிட்டார்

வாசனைப் பொருட்களின் வரலாறும் பயன்பாடும் - மஞ்சள், லவங்கப்பட்டை

படம்
  மேற்கத்திய நாடுகள் இந்தியாவுக்கு வந்ததே இங்குள்ள பல்வேறு இயற்கை வளங்களை கொள்ளையடித்து விற்கத்தான். அன்று ஆங்கிலேயர்கள் செய்தனர். இன்று இந்திய தரகர்கள், தொழிலதிபர்கள் வெளிநாட்டு பெரு நிறுவனங்களின் கைக்கூலியாக அதே வேலையை இடைவேளை கூட விடாமல் செய்து வருகின்றனர். அதை விடுங்கள். நாம் இங்கு பேச வந்தது. தெற்காசியாவில் உள்ள வாசனைப் பொருட்கள் பற்றித்தான். கொச்சியை வாசனைப் பொருட்களின் தலைமையகம் என்று கூறுகிறார்கள். அந்தளவு இப்பகுதியில் டச்சுகாரர்கள் ஆட்சி செய்தபோது வாசனைப் பொருட்களின் விற்பனை நடைபெற்றிருக்கிறது. முக்கிய வாசனைப் பொருட்கள் என்னென்ன? இன்றும் செட்டிநாடு ஓட்டல்களில் பயன்படுத்தும் பொருட்கள்தான். நம் குடலில் அழற்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டவைதான். அவை குறிப்பிட்ட அளவைக் கொண்டவை அல்ல. மற்றபடி மருந்தாக பயன்படுத்தினால் மகத்துவம் கொண்டவைதான்.  மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் இவைதான்.  தெற்காசிய வாசனைப் பொருட்கள் ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் ஆகியவற்றுக்கு இந்தோனேஷிய மாலுமிகளால் கொண்டு செல்லப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில்தான் வாஸ்கோட காமா ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான வணிக வாசலைத் திறந்

சவால்களை சந்தித்தால்தான் தொழிலில் ஜெயிக்க முடியும்! - இம்பாக்ட் குரு - குஷ்பு ஜெயின்

படம்
  குஷ்பு ஜெயின், (இம்பேக்ட் குரு) துணை நிறுவனர், செயல்பாட்டு அதிகாரி  இதனை எங்கு பார்த்திருக்கிறீர்கள் என நினைவு இருக்கிறதா? யூட்யூப் வீடியோ பார்க்கும்போது நோய், விபத்து சார்ந்த மருத்துவ சிகிச்சைகளுக்கு பணம் கேட்கும் ஆட்களைப் பார்த்திருப்பீர்கள். இதுபோன்ற நோய், விபத்து சார்ந்த பிரச்னைகளுக்கு க்ரௌட் ஃபண்டிங் முறையில் பணம் வாங்கிக் கொடுப்பதுதான் இம்பேக்ட் குருவின் வேலை. இதனை நடத்தி வருபவர் குஷ்பு ஜெயின்.  உடை, ஆரோக்கியம், உணவு ஆகிய மூன்று விஷயங்களே தனக்கு முக்கியம் என வாழ்ந்து வருகிறார் குஷ்பு. பல ஆண்டுகளாக மார்க்கெட்டிங், வடிவமைப்பு சார்ந்து பல்வேறு பணிகளை குஷ்பு செய்து வருகிறார். மேலும் 2019ஆம் ஆண்டு ஐ.நா பெண் சாதனையாளர்கள் இந்தியா விருதைப் பெற்றிருக்கிறார். நிதி ஆயோக் அமைப்பின் டாப் 15 பெண் தொழில்முனைவோர் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார். பார்ச்சூன் இதழின் 40 அண்டர் 40 பட்டியலிலும் இவர் பெயர் உள்ளது. அவரிடம் பேசினோம்.  தொழிலில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன ? நீங்கள் வெற்றிகரமான தொழிலதிபராக உருவாக பொறுமை, அர்ப்பணிப்பு முக்கியம். பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டும். தொழிலில் வாடிக்கை

தேனீக்களை குணமாக்கும் தேன்!

படம்
  தேனீக்களை  காப்பாற்றும் வேதிப்பொருள்!  தேனீக்களை பூச்சிக்கொல்லி, பருவநிலை மாறுபாடு என பல்வேறு விஷயங்கள் பாதிக்கின்றன. கூடுதலாக வாரோவா எனும் ஒட்டுண்ணி(Varroa destructor) தேனீக்களை கடுமையாக தாக்குகிறது. இது, தேனீக்கூட்டிலுள்ள புழுக்களை உணவாக உண்பதோடு, உடலிலுள்ள  வைரஸ்களை தேனீக்களின் காலனிக்கும் தொற்ற வைக்கிறது. இதில் ஏற்படும் தாக்குதலால் தேனீக்களின் இறகு கடுமையாக பாதிக்கப்படுகிறது. வளரும் நிலையில் உள்ள பூச்சிகளுக்கு இறகு வளர்ச்சியில்லாமல் போய்விடுகிறது.  வைரஸ் தேனீக்களின் நினைவுகளையும் பாதிக்கிறது. இதனால் கூட்டை விட்டு தேனை தேட கிளம்பிய வேலைக்கார தேனீ, வீட்டுக்கு திரும்ப முடியாது. எப்படி வருவது என்பதை மறந்துவிடுவதுதான் காரணம். உணவு கிடைக்காததால், தேனீக்களின் கூட்டமே நிலைகுலைந்து அழியும் நிலை உருவாகும்.  தேனீக்களை தாக்கும் வைரஸ்களை அழிக்கும் வேதிப்பொருளை தேசிய தைவான் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. சோடியம் பூடைரேட் (Sodium butyrate) எனும் வேதிப்பொருளை தினசரி தேனீக்களுக்கு கொடுக்கும்போது அவை வலிமையாகின்றன. மனிதர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் போலவே இந்த வேதிப்பொருள் செயல்படுகிறது. இதன்

முதியவர்களைப் பார்த்துக்கொள்ள மருத்துவமனை தொடங்கிய மருத்துவர்! - மருத்துவர் மகாலஷ்மி

படம்
மருத்துவர் மகாலஷ்மி  மகாலஷ்மிக்கு அப்போது 30 வயது. அந்த நேரத்தில்தான் தனது பெற்றோரை இழந்தார். அவர்களது இறப்பிற்கு பிறகு, சிறிது காலத்தில் அவரது மாமனார், மாமியார் ஆகியோரையும் இழந்தார். இதெல்லாம் அவரை அடுத்து செய்யவிருந்த மருத்துவமனை பணிகளைத் தடுக்கவில்லை.  அதுவரை சம்பாதித்த பணத்தையும், வங்கி கடன்களையும் இணைத்து பாலாஜி மல்டிஸ்பெசாலிட்டி மருத்துவமனையை உருவாக்கினார். இதுகூட வயதானவர்களை வேலை காரணமாக சரியாக கவனித்துக்கொள்ள முடிவதில்லை. வயதான காலத்தில் நோயும் சேர்ந்துகொள்ள அவர்களை பார்த்துக்கொள்ள மருத்துவமனை உதவியாக இருக்கும் என்றே மருத்துவமனையை உருவாக்கியுள்ளார்.  மருத்துவர் மகாலஷ்மி, பாலாஜி ஹெல்த்கேர் நாம் எல்லோரும் பிறக்கிறோம், வளர்கிறோம், வேலைக்கு போகிறோம், திருமணம் செய்து குழந்தைகளைப் பெறுகிறோம். நான் இதைத் தாண்டி ஏதேனும் ஒன்றை செய்ய நினைத்தேன் என தனது செயல்பாட்டை விளக்குகிறார் மகாலஷ்மி. 2011 ஆம் ஆண்டு மும்பைக்கு வெளியே பாட்ஷா ஆற்றுப் புறத்தில் தொடங்கிய மருத்துவமனையில் முதலில் நான்கு பேர் நோயாளிகளாக இருந்தனர். இப்போது 74 பேர் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஷிசோபெரேனியா, டிமென்

கிராமத்தின் மீது விண்கலம் விழுந்தால்....- ஸ்கைலேப் - தெலுங்கு 2022

படம்
  ஸ்கைலேப் தெலுங்கு ஆந்திரத்திலுள்ள பழமையான நம்பிக்கைகள் மாறாத ஊர். அங்கு தீண்டாமை இருக்கிறது. பள்ளிக்கூடத்தை கூட அதற்காக பூட்டி வைத்துள்ளனர். தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. அந்த இனத்திற்குள் யாராவது உடல்நலக்குறைவு வந்தால் கூட அவர்களை வைத்தியர் தொட்டு பார்ப்பதில்லை. இந்த நேரத்தில் அங்கு ஸ்கைலேப் என்ற விண்கலம் விழுவதாக செய்தி வருகிறது. மரண பயத்தில் உள்ள மக்களின் மனதில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் மையக் கதை.  இதில் முக்கியமான கதை கௌரி என்ற ஜமீன்தாரின் மகள், மருத்துவ உரிமம் தடை செய்யப்பட அதனை திரும்ப பெற 5 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற தாத்தாவைத் தேடி வரும் ஆனந்த் ஆகிய இருவரைச் பற்றியது.  இந்த படத்தை நித்யாமேனன் தயாரித்து நடித்திருக்கிறார். தனது பரம்பரை, சொத்து காரணமாக தான் மேதாவி என நினைத்துக்கொண்டு சிபாரிசில் ஹைதராபாத்தில் உள்ள பத்திரிக்கையில் வேலை செய்கிறார். ஆனால் இவரது கட்டுரை பிரசுரமானாலும் கூட இலக்கணமும், அதில் எழுதும் விஷயங்களும் சரியாக இருப்பதில்லை. இதை கௌரி பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதனை மெல்ல அவர் உணர்ந்துகொண்டு சிறந்த பத்திரிக்கையாளராக எப்படி மாறினார் என

ஆட்டிச குறைபாடு கொண்ட மருத்துவர், அறுவைசிகிச்சை நிபுணராகும் கதை! - எ மிராக்கிள் - துருக்கி டிவி தொடர்

படம்
மிராக்கிள் டாக்டர் - துருக்கி தொடர் குட் டாக்டர் - கொரிய மூல தொடர் எ மிராக்கிள்  துருக்கி டிவி தொடர் மூலம் குட் டாக்டர் - தென்கொரிய டிவி தொடர் எம்எக்ஸ் பிளேயர் தென்கொரிய தொடரை ரீமேக் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் பார்க்க நன்றாக இருந்தாலும் எம்எக்ஸ் பிளேயரில் விளம்பரங்கள் இப்போது அதிகம் என்பதால் செலவிடும் நேரம் அதிகமாகலாம்.  அலி வெபா என்ற ஆட்டிச குறைபாடு கொண்டவர் எப்படி துருக்கியின் பெரும் மருத்துவமனையில் தனது கனவான அறுவை சிகிச்சை மருத்துவர் என்ற இடத்தை அடைந்தார் என்பதுதான் மையக்கதை.  இதைச்சுற்றி ஏராளமான கிளைக்கதைகள் உள்ளன. அவையும் தொடரை 197 எபிசோடுகள் வரை பார்க்க நமக்கு உதவுகின்றன. ஆட்டிச பாதிப்பு கொண்ட மருத்துவர் என்பதால் அவரே முழுக்க புனிதமாகவும் பிறரை குற்றவாளிகளாகவும் காட்டும்  முறையை இயக்குநர் பின்பற்றவில்லை. ஆட்டிச மருத்துவர் என்றாலும் அவரும் உணர்ச்சி வசப்பட்டு சிலதவறுகள் செய்பவர்களாகவும், அவரை மெல்ல ஏற்றுக்கொள்ளும் மருத்துவர்கள் குழுவினர் அவரை சிறந்தவர்களாக்க முயல்வதும் தொடரில் பார்க்க முடிகிறது.  யாரும் முழுக்க நல்லவர்களுமில்லை. முழுக்க கெட்டவர்களுமில்லை என்பதை அலி வெ

சுகாதார அட்டை இந்திய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமா?

படம்
  அனைவருக்கும் சுகாதார அட்டை ஒன்றை தயாரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆயுஸ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் ஏபிடிஎம் என அழைக்கப்படும் திட்டம் கடந்த செப்டம்பர் 27 அன்று நடைமுறைக்கு வந்தது.  இதன் தொடக்க கால திட்டம் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று சோதனை முறையில் சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்த வகையில் ஒரு லட்சம் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்த சுகாதார அட்டையை பான் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் கொடுத்து பெறலாம். இதில் சேர விரும்புபவர் தனது பெயர், வயது. பிறந்த தேதி, முகவரி, ஆதார் எண் கொடுத்து விண்ணப்பத்து பூர்த்தி செய்யவேண்டும். உங்களிடம் ஆதார் இல்லையென்றாலும் கூட போன் நம்பர் கொடுத்துக்கூட பதிவு செய்துகொள்ளலாம்.  மக்களுக்கு எளிமையான முறையில் குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் கிடைக்கும் என ஒன்றிய  அரசு கூறியுள்ளது. பிரதமர் மோடி, மக்களின் வாழ்க்கை இனி எளிமையாகும் என திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசியுள்ளார்.  சுகாதார அட்டையை பதிவு செய்தால் பதினான்கு  எண்கள் கொண்ட அடையாள எண் வழங்கப்படும். இந்த எண்ணை ஒருவர் இதற்கான ஆப்பை போனில் நிறுவி பதிவு செய்து பெறலாம். நோய் பற்றிய தகவல்கள் ந