இடுகைகள்

ராணுவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊருக்கு நல்லது செய்யும் மோட்டார் சைக்கிள் கிளப்புகள்!

படம்
  யமஹா, கவாசாகி நின்ஜா, ஹீரோ இம்பல்ஸ், பல்சர் என பைக்குகளை ஓட்டும் இளைஞர்கள் எப்போதும் சமூகத்தில் ஆபத்தான ஆட்களாகவே பொறுப்பற்றவர்களாக பார்க்கப்படுகிறார்கள். இதற்கு அவர்கள் நடந்துகொள்ளும் ‘எரிமலை எப்படி பொறுக்கும்’ என்ற அவசரமான மனநிலையும் முக்கியமான காரணம்.   ராபர்ட் எம் பிர்சிக் என்பவர், ஸென் அண்ட் தி ஆர்ட் ஆஃப் மோட்டார்சைக்கிள் மெயின்டனன்ஸ்   என்ற நூலை எழுதியிருக்கிறார். ‘’மோட்டார்சைக்கிளில் பயணம் செய்வது என்பது தெரபி போலத்தான். பைக் பயணம் மூலம் ஒருவர் உலகத்தின் மீதும் சமூகத்தின் மீதும் கவனம் கொள்கிறார்’’ என்று பேசுகிறார். இங்கு நீங்கள் படிக்கப்போவது மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டு பீச்சில் பந்தயத்திற்கு போய் வாக்கிங் வரும் தொப்பை அங்கிள்கள் மீது மோதுபவர்கள் அல்ல. சமூகத்திற்கு கொஞ்சமே கொஞ்சம் நன்மை செய்யும் ஆட்களைப் பற்றித்தான். ஊர்வதி பத்தோலுக்கு இப்போது வயது 35 ஆகிறது. அவர் முதன்முதலில் தனது அக்காவின் தோழி ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்தார். அதனால், பின்னாளில் ராயல் என்பீல்ட் பைக் ஒன்றை வாங்கி ஓட்டத் தொடங்கினார். முதன்முதலில் பைக் ஓட்டத் தொடங்கியபோது அவருக்கு வயது

நாட்டுக்குப் போராடிய ராணுவ வீரன், 5 ஏக்கர் நிலத்தைக் காக்க எம்எல்ஏவை எதிர்த்து நின்றால்... சண்டி - ரவிதேஜா

படம்
  சண்டி ரவிதேஜா, சார்மி, அதுல் குல்கர்னி, டெய்ஸி போபனா   ராணுவத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வருகிறான் சண்டி. அப்படி வரும் நிர்பந்த சூழ்நிலை, அவனது அப்பா மாரடைப்பால் இறந்த காரணத்தால் ஏற்படுகிறது. அப்பாவும், கண் பார்வையற்ற தங்கையும்தான் அவனுக்கு ஒரே சொந்தம். அப்பா இறந்த காரணத்தால் கிராமத்தில் தங்கி தங்கையைப் பார்த்துக்கொண்டு அவளுக்கு மணம் செய்ய நினைக்கிறான். இந்த நேரத்தில் அந்த ஊரில் உள்ள எம்எல்ஏ ராணுவ வீரன் சண்டிக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க நினைக்கிறான். அதை கைப்பற்றி சாலை போட்டுவிட்டால் அருகில் உள்ள தொழிற்சாலையை எளிதாக இயங்க வைக்கலாம் என நினைக்கிறார். இதற்கு அவர் செய்யும் செயல்களும், அதற்கான ராணுவ வீரன் சண்டியின் எதிர்வினைகளும்தான் படம்… நிலம் அதை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதுதான் மையக் கதை. நிலத்தை அடிப்படையாக வைத்துத்தான் பார்வைத்திறனற்ற தங்கையை கல்யாணம் செய்துகொடுக்க வேண்டும் என நிர்பந்தம் சண்டிக்கு உள்ளது. பிறகுதான் அவன் திருமணம் செய்துகொள்ள முடியும். நிலம் பற்றிய சிக்கல்கள் எழும் நேரத்தில் அவனை இரு பெண்கள் காதலிக்கிறார்கள். ஒருத்தி, உறவுக்காரப் ப

மகனின் ராணுவ வேலையை மௌனமாக நிராகரிக்கும் பாச அம்மா! யுவகுடு - கருணாகரன் - தெலுங்கு

படம்
  யுவகுடு சுமந்த், பூமிகா சாவ்லா இயக்குநர் - ஏ.கருணாகரன் திரைக்கதை - ரங்கராஜ், நந்தகோபால் இசை - மணிசர்மா சிவா, கல்லூரி படிப்பை விட தன் அப்பா ராணுவ வீரராக இருந்து உயிரை விட்ட ராணுவத்தில் சேருவதுதான் லட்சியம். இதை அவன் தன் வீட்டிலுள்ள அம்மாவுக்கு கூட சொல்லாமல் செய்கிறான். அம்மா பள்ளி ஆசிரியராக வேலை செய்யும் ஊட்டிக்கு கல்லூரி விடுமுறையை கழிக்க வருகிறான். அங்கே திடீரென சிந்து என்ற பெண்ணைப் பார்த்து காதலில் விழுகிறான். அவனுக்காக அந்த பெண்ணை தேடிப்பிடிக்க சிவாவின் ஆசிரியை அம்மா முயல்கிறார். அந்த தேடல் சாத்தியமானதா இல்லையா என்பதுதான் கதை.  உண்மையில் இது காதலைச் சொல்லும் படம் கிடையாது. மற்றவர்களுக்காக நாம் படும் அக்கறை தான் முக்கியம். ஆணும் பெண்ணும் கொள்ளும் காதல் அந்தளவு முக்கியமல்ல என்றே செய்தி இறுதியில் சொல்லப்படுகிறது.  பிற தெலுங்கு படங்களை விட இந்த படம் வேறுபடுவது, காதலை சொல்லுகிற அல்லது இதுதான் காதல் என நினைத்துள்ள ஊகத்தனமாக விஷயங்களை உடைப்பதுதான்.  சிந்துவின் பாத்திரமே வித்தியாசமானது. அவள் இறுதிவரை சிவாவை காதலிக்க காரணங்கள் ஏதுமே இருப்பதில்லை. இருந்தாலும் ஒரு காட்சியில் சிவா, காதல் ஆவேச

ஏழை மாணவர்களுக்கு உதவும் முன்னாள் ராணுவ வீரர்

படம்
  மதுரையைச் சேர்ந்தவர் ஜிஎம் ராமச்சந்திரன். இவர் தேனி பெரியகுளத்தில் தங்கி இளைஞர்களுக்கு உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். ராமச்சந்திரன்,  ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பிறகு, வருவாய்த்துறையில் வேலை செய்துள்ளார். பின்னாளில்தான் பழனிக்கு இடம் மாறி வாழ்ந்துகொண்டிருந்தார். அப்போது காலையில் ஜாக்கிங் பயிற்சிக்கு சென்றார். சாலையில் இவரைப் பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆன சிலர், ஃபிட்னெஸ் பற்றிய அறிவுரைகளைக் கேட்டிருக்கின்றனர். ஆகா, என  புளகாங்கிதம் அடைந்த ராமசந்திரன் உலகத்திற்கு ஏதாவது சொல்ல நினைத்தார். அதை ஆரோக்கியம் தொடர்பாக அமைத்துக்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறார்.  ராமச்சந்திரனுக்கு விளையாட்டில்தான் தொடக்கம் முதலே ஆர்வம். இதனால் படிப்பில் சுமாராகவே இருந்தார். ஜிம்னாஸ்டிக்ஸ், தடகளப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். இதை வைத்துத்தான் 1976ஆம் ஆண்டு ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.  ராமச்சந்திரன் தடகளப் பயிற்சி கொடுப்பவர்கள் எல்லோருமே வறுமையான பின்புலத்தைக் கொண்டவர்கள். இவர்களுக்கு ஓடுவதற்கும், கயிற்றைப் பிடித்து ஏறுவதற்கும், நீளம் தாண்டுவதற்கும் பயிற்சி அ

போரில் கிடைத்த வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்!

படம்
  ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி இரண்டு மாதங்களாகிவிட்டது. இதுதொடர்பாக நிறைய வார்த்தைகளை நாம் கேட்டுவருகிறோம். அதைப்பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.  கொய்ட் quit ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பயன்படுத்த வேண்டாம் என்ற நிறைய நாடுகள் முடிவெடுக்க நினைத்தன. அப்படி செய்தால் போர் நின்றுவிடுமே என ஐரோப்பிய யூனியன் கூட ரஷ்யாவின் நிலக்கரியை மட்டும் பயன்படுத்த மாட்டோம் என கறாராக கூறிவிட்டது.  நாடோ nato உக்ரைன் ஐரோப்பாவின் நாடோ படையில் சேரக்கூடாது என்பதுதான் ரஷ்யாவின் பயம். அதற்காகவே உக்ரைனை தாக்கி அதனை சல்லி சல்லியாக நொறுக்கி வருகிறது. ஆனால் ரஷ்யாவின் வேகத்தில் இதுவரை நாடோவில் சேராமலிருந்த ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகளும் கூட சேர்ந்தால்தான் என்ன என்ற முடிவுக்கு வந்துவிட்டன.  ஷி ஜின்பிங் xi jinping சீனா, இல்லாமல் இனி உலகில் எதுதான் நடந்துவிடும். இதன் நிரந்தர அதிபரான ஷி, எப்போதும் போல ரஷ்யாவை ஆதரிக்கிறார். ஒருவகையில் சீனாவின் இந்த ஆதரவுநிலையால் தைவான், ஹாங்காங் ஆகிய நகரங்கள் அடுத்தது நாமதானோ என பீதியில் உள்ளன.  லூகாசென்கோ lukashenko இவர் பெலாரஸ் நாட்டின் சர்வாதிகாரி அலெக்ஸாண்டர் லூகாசென

மேட் இன் இந்தியா ட்ரோன்ஸ்! - தன்மய் பங்கர்

படம்
2019ஆம் ஆண்டு நடைபெற்ற விமானப்படையின் போட்டியில் கூட தோல்விதான். ஆனாலும் ட்ரோன்களை தயாரிப்பதை கைவிடவில்லை. இவரது ஆர்வத்தைப் பார்த்து, ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை 50 லட்ச ரூபாயை ஆராய்ச்சிக்காக வழங்கியுள்ளது. இந்திய அரசு, மேட் இன் இந்தியா பொருட்களை தேவை என்று கூவினாலும் பெரியளவு பொருட்கள் அனைத்து துறைகளிலும் உருவாகவில்லை. அதற்கு தேவையான ஊக்கமும் பணமும் கிடைக்கவில்லை என்பதே காரணம். இதன் காரணமாக டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இந்தியா, அமெரிக்காவிடமிருந்து அதிக செலவில் வாங்கி வந்தது. இதை எப்படி தயாரிக்கிறார்கள் என தன்மய் ஆராய்ந்தார். பொட்டாசியம் நைட்ரேட்டை பயன்படுத்துவது தெரிய வந்தது. இது அதிக செலவு பிடிக்கும் ஏவுகணைத்திட்டம் என்பதை அறிந்து அதனை கைவிட்டார். பிறகுதான் ட்ரோன்களை தயாரிக்கும் திட்டத்தை உருவாக்கினார். பாகிஸ்தான் அண்மையில் ஜம்முவில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது பலருக்கும் நினைவிருக்கலாம். துருக்கியும் கூட இப்போது பெருமளவு தனது ஆயுதங்களை விட ட்ரோன்களை பயன்படுத்தி எதிரிகளை தாக்கத் தொடங்கியுள்ளது. 2014இல் தொடங்கிய ஆராய்ச்சி 2016இல் பாட் டைனமிக்ஸ் என்ற நிறுவன

ஒரு நாட்டில் எதற்கு இருவிதமான விதிகளை மத்திய அரசு கடைபிடிக்கிறது? - ஓமர் அப்துல்லா

படம்
                  ஓமர் அப்துல்லா அரசியல் கட்சி தலைவர் காஷ்மீரில் அண்மையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது . அதில் மத்திய அரசை எதிர்க்கும் ஓமர் அப்துல்லாவும் இடம்பெற்றார் . இதுபற்றி அ வரிடம் பேசினோம் . உங்களையும் , உங்களது அப்பாவையும் சிறையில் அடைத்தது இதே அரசு . இப்போது அவர் நடத்தும் கூட்டத்தில் எப்படி பங்கேற்றீர்கள் ? மத்திய அரசுதான் எங்களை சிறையில் அடைத்தது . இப்போது அவர்களேதான் எங்களை வரவேற்பு பேசுகிறார்கள் . நீங்கள் கேட்கும் கேள்விக்கு அவர்கள்தான் பதில் சொல்லவேண்டும் . அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் சொல்லியிருக்கிறார் . இதயத்திலிருந்து தொலைவாக , டெல்லியிலிருந்து தொலைவாக என்று அவர் கூறினார் . இதற்கு என்ன அர்த்தம் ? இப்படி நம்பிக்கை குறைந்துபோக என்ன காரணம் என்று அவர்தான் கூறவேண்டும் இந்த சந்திப்பில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையா ? இது தொடக்கம்தான் . ஒரு கலந்துரையாடல் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என்று நினைக்க முடியாது . பெரிய செயல்முறையின் சிறிய பகுதிதான் இது . 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம

பெட்ரோல் பாம்களை வீசி ரஷ்யாவை சாய்த்த பின்லாந்து ராணுவம்! - மோலடோவ் காக்டெய்ல் தெரியுமா?

படம்
  மோலடோவ் காக்டெய்ல் மோலடோவ் காக்டெய்ல் ஈராக், தாய்லாந்து, பிரான்ஸ், மெக்சிகோ என அனைத்து நாடுகளிலும் இந்த காக்டெய்லை மக்கள் பயன்படுத்துகிறார்கள். உடனே, அந்தளவு புகழ்பெற்ற மதுபானமா என்று கேட்டால் நீங்கள் பெரும் அப்பாவி. மோலடோவ் காக்டெய்ல் என்பது அடுத்தவர்களை கொல்வதற்கென உருவாக்கும் பாம், பெட்ரோல் பாம் என்று கூட சொல்வார்கள்.  தயாரிப்பது எப்படி? அதிக நீளமாக செய்முறை சொல்லமுடியாது. கண்ணாடி பாட்டிலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு மேலே திரியை நீட்டி வைத்து தூக்கி எதிரியின்(போலீசின் மீது) எரியவேண்டியதுதான். இப்படி எறிந்தால்தானே புரட்சி தீ நாடெங்கும் பரவும்.  பெரும்பாலும் புரட்சிக்காரர்கள் இதனை செய்வார்கள். இல்லையெனில் புரட்சியாளர்களை ஏதேனும் காரணம் சொல்லி கைது செய்யவேண்டுமே? அரசு கூட ஆட்களை இப்படி தயார் செய்து அரசு கட்டிடங்கள்  மீது ஏற வைக்கலாம். பெட்ரோல் பாம்களை வீச வைக்கலாம்.  டேட்டா இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் நாட்டின் அய்கோ கார்ப்பரேஷன் 4 லட்சத்து 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மோலடோவ் காக்டெய்லைத் தயாரித்தது.  காக்டெய்ல் திரியை பற்றவைத்த உடனே 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை காக்டெய்லிலுள்ள

ஆந்திரப் பிரதேசத்தில் பிச்சைக்கார ர்களுக்கும், வீடற்றோருக்கும் உணவு வழங்கும் மூன்று ராணுவ வீரர்கள்! - பெருகும் இளைஞர்களின் ஆதரவு

படம்
                  ஆதரவற்றோருக்கு உணவு ! ஆந்திரப்பிரதேசத்தில் மூன்று ராணுவ வீரர்கள் , ஆதரவற்றோருக்காக உணவு வழங்கி வருகின்றனர் . இப்பணியை கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வருகின்றனர் . பலசா ரயில் நிலையத்தில் உள்ள பிச்சைக்காரர்கள் , வீடற்ற மக்களுக்கு விவேகானந்தா சேவா சமிதி என்ற பெயரில் அமைப்பை நிறுவி உதவிகளை வழங்கி வருகிறார்கள் . ரபகா கிரண் , பன்னி , தர்மா ஆகிய மூவரும்தான் இந்த பணியில் இறங்கி பல்வேறு உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள் . கிரண் இந்தோ திபெத் ராணுவ வீரர் என்றால் மற்ற இருவரும் அசாம் ரைபிள்ஸ் , எல்லைப்பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் . தொடக்கத்தில் பலசா பகுதியிலுள்ள உணவகங்களில் மீதியாகும் உணவைப் பெற்று பிச்சைக்காரர்களுக்கும் , உணவு தேவைப்படுவோருக்கும் வழங்கத் தொடங்கியுள்ளனர் . இந்த மூன்று ராணுவ வீரர்களின் பணியைப் பார்த்துவிட்டு மாவட்டத்திலுள்ள 600 இளைஞர்கள் இவர்களின் விவேகானந்தா சமிதி பணியில் இணைந்துள்ளனர் . மண்டசா , சோம்பேட்டா , ஹரிபுரம் என மூன்று பகுதிகளுக்கு உணவு அளிக்கும் பணி விரிவடைந்துள்ளது . இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தன்னார்வலர்க

மன்னருக்கு எதிராக ஜனநாயகத்தை முன்னெடுக்கும் மக்களின் போராட்டம் !

    தாய்லாந்து போராட்டம் தாய்லாந்தில் பல்வேறு மாதங்களாக ஜனநாயகத்தை வலியுறுத்தி மக்கள் போராடி வருகின்றனர் . அவரை்கள் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர் . அண்மையில் உலக நாடுகளில் நடைபெறும் போராட்டங்களில் தாய்லாந்து போராட்டம் அதிக கவனம் ஈர்த்து வருகிறது . பௌத்தர்கள் அதிகம் வாழும் நாடு தாய்லாந்து . 70 மில்லியன் (1 மில்லியன் -10 லட்சம் ) மக்கள் இம்மதம் தழுவியவர்கள் . 1932 முதல் அரசியலமைப்புச்சட்டம் இங்கு அமலில் இருக்கிறது . ஆனால் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற கலகத்திற்கு பிறகு ராணுவத்தின் ஆட்சிதான் பெருமளவு அங்கு நடந்து வந்தது . 2001 ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் நிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டன . அதுவரை பிரதமராக இருந்த பாபுலிச தலைவரான தக்‌ஷின் ஷின வத்ரா , ராணுவத்தினால் பதவியிலிருந்து விலக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் . இந்த விவகாரம் நடந்த ஆண்டு 2006. இதுபோல ராணுவம் அங்கு நடந்துகொள்வது புதிதல்ல . 1976 ஆம் ஆண்டு அக் .6 அன்று தாய்லாந்திலுள்ள தம்மசத் என்ற பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் ஜனநாயகப் போராட்டத்தை ராணுவம் கடுமையாக ஒடுக்கியது . இத

தனிநபராக பறக்கும் வாகனங்கள் பெருகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது! - ஹோவர்போர்டு முதல் ஜெட்பேக் வரை

படம்
      cc     பறக்கலாமா? ஸபாடா நிறுவனத்தின் ஜெட் ஹோவர் போர்டு மூலம் 3 ஆயிரம் மீட்டர்கள் உயரத்திற்கு பறக்கலாம். மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பறக்கமுடியும் தன்மை கொண்டது இக்கருவி. இந்நிறுவனத்தின் ஃபிளைபோர்டு ஏர் என்பதில் டேங்கை நிரப்பினால் பத்துநிமிடங்கள் காற்றில் பறக்கலாம். அமெரிக்க ராணுவம் இந்நிறுவனத்தின் கருவிகளை பார்வையிட்டுள்ளது. பறக்கும் கார் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பறக்கும் கார் பற்றிய ஆராய்ச்சிகள் நடப்பதாக தகவல் வரும். ஆனால் நடைமுறைக்கு வராது. இனிமேல் அந்தளவு தாமதம் நடக்காது. வகானா என்ற பெயரில் ஏர்பஸ்  நிறுவனம் பறக்கும் கார் ஒன்றை தயாரித்தது. கடந்த நவம்பரில் ஏர்பஸ் நிறுவனம், பரிசோதனை முயற்சியை தொடங்குவதற்கு சரி என்று சொல்லி கட்டைவிரலை உயர்த்திவிட்டது. துபாயில் ஏர் டாக்சியை சோதனை செய்வதற்கு அனுமதி கொடுத்துவிட்டார்கள். காரணம் அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல்தான். வோலோகாப்டர் என் ஏர் டாக்சியில் இருவர் முப்பது நிமிடங்கள் பறக்கலாம். இறக்கை இல்லாமல் பறக்கலாமே என்று கூறினால், அர்பன் ஏரோநாட்டின் ஃபேன்கிராப்ட் என்ற பறக்கும் காரைத்தான் அணுக வேண்டும். முதலில் பறக்கவும் இறங்கவும் ரன்வே

எதிர்காலத்தில் போர்க்களத்தில் அதிகம் பயன்படும் டிரோன் விமானங்கள்!

படம்
      இன்று மனிதர்கள் செல்லமுடியாத இடங்களுக்கு டிரோன்கள் செல்கின்றன. பணிகளை முடிக்கின்றன. தீவிரவாதிகளை கண்டறிந்து களையெடுப்பது, முக்கியமான இடங்களை கண்டறிவது, பாதுகாப்பு பணிகளை செய்வது, இயற்கை பேரிடர் ஏற்பட்ட இடங்களை பார்வையிடுவது ஆகியவற்றுக்கும் டிரோன்களை பயன்படுத்தி வருகிறார்கள். உளவாளி இங்கிலாந்தில் தரானிஸ் என்ற பெயரில் டிரோன் ஒன்றை தயாரித்து இருக்கிறார்கள். இதன் வேகம் 1,127 கி.மீ. இதனை ரேடார் மூலம் கூட பார்க்க முடியாது. விரைவில் போர்க்களத்தில் டிரோன்கள் நிறைய பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகள் 2015ஆம் ஆண்டு தொடங்கிவிட்டன. க்வாட்காப்டர் எனும் ஆயுதம் தாங்கிய டிரோன்கள் மூலம் குறிப்பிட்ட ஆட்களை கூட திட்டமிட்டு கண்காணித்து கொலை செய்யமுடியும். இதுபற்றி எலன் மஸ்க், ஸ்டீவ் வோஸ்னியாக்கி ஆகியோர் இப்போதே எச்சரித்து விட்டார்கள். அமெரிக்கா இத்தகைய தாக்குதல்களை தீவிரவாதிகளிடம் சோதித்து பார்க்க தொடங்கிவிட்டார்கள். டிரோனை ஒருவர் அமெரிக்காவில் இருந்தே இயக்கினால் போதும். சேதம் குறைவு பாருங்கள். உடைந்தாலும் டிரோன் மட்டும்தான் போகும். இலக்கை சரியானபடி தாக்குவதும் எளிது.. விண்வெளி ஆய்வு நாசா ப

ஒரு கி.மீ. தூரத்தில் ஆட்களை அடையாளம் காணும் அமெரிக்கா!

படம்
முகமறிதல் சோதனையில் முன்னேறும் அமெரிக்கா! அமெரிக்க ராணுவம் முகமறிதல் சோதனையில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ராணுவத்துறை உருவாக்கிய சிறிய கருவி, ஒரு கி.மீ. தூரத்திற்கு முன்பாகவே ஒருவரை அடையாளம் கண்டுவிடும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் சிறப்பு பணிகளைச் செய்யும் சோகாம் எனும் அமைப்பு இதற்கான பொறுப்புகளை ஏற்று செயல்பட்டு வந்தது. 2019ஆம் ஆண்டு முகமறிதல் சோதனைக்கான மாதிரி கருவியை உருவாக்கி விட்டனர். மேலதிக தகவல்களை ராணுவ அமைச்சகம் வெளியிடவில்லை. குற்றச்செயல்பாடுகளில் தொடர்புடையவர்களை கண்டறிய இக்கருவி ட்ரோன்களின் பொருத்தப்படவிருக்கிறது. இவற்றை சட்ட ஒழுங்குத் துறைக்கு ராணுவ அமைச்சகம் வழங்கப்போகிறது. இதன்மூலம் குற்றம் செய்பவர்களை எளிதாக ட்ரோனை பறக்கவிட்டே பிடித்துவிடலாம். அமெரிக்காவிலுள்ள செக்யூர் பிளானட் எனும் அமைப்பு, எஸ்எல்ஆர் கேமரா பொருத்தப்பட்டு மக்களை கண்காணிக்க ஏற்பாடானது. ஆனால் இதில் கேமராவின் திறன் மற்றும் ட்ரோன் ஏற்படுத்திய இரைச்சல் தொல்லையாக இருந்தது. இதில் பல்வேறு மேம்பாடுகளை ராணுவ அமைச்சகம் உருவாக்கி வருகிறது. மேற்சொன்ன திறனில் ஒருவரை பாஸ்போர்ட் சைஸ்

காஷ்மீரில் வல்லுறவும் கொலைகளும் அதிகரிக்கும்! - எழுத்தாளர் மிர்சா வகீத்

படம்
நேர்காணல் மிர்சா வகீத் இந்தியாவில் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பாக காஷ்மீரில் கடுமையான போராட்டம் வெடித்துள்ளது. அதனை ஒடுக்கும் முயற்சியில் ராணுவம் காவல்துறை உறுதியாக உள்ளன. அங்குள்ள பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாநில கட்சித்தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.இதற்கு முன்னோட்டமாக காஷ்மீர் வந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.  தற்போது அங்கு நிலைமை எப்படி உள்ளது என நேர்மையாக காட்டும் ஊடகங்கள் இந்தியாவில் கிடையாது. பிபிசி, அல்ஜசீரா, ராய்ட்டர்ஸ் மட்டுமே இதுதொடர்பான செய்திகளை சரியாக வெளியிட்டு வருகின்றனர். இரண்டு நாவல்களை வெளியிட்டுள்ள நாவலாசிரியர் மிர்சா, லண்டனில் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் காஷ்மீரில் வாழ்கின்றனர். அவரிடம் காஷ்மீரிலுள்ள நிலை குறித்துப் பேசினோம். நீங்கள் உங்களது பெற்றோரைச் சந்தித்தீர்களா? இல்லை. போன் வழியே தொடர்பு கொள்ள முடியவில்லை. இணைப்பு முடக்கப்பட்டுள்ளது. நெருங்கிய நண்பர் மூலம் தொடர்புகொண்டு பெற்றோரின் நலனை விசாரித்தேன். அவர் நலமாக இருக்கிறார் என்று கூறினார். அதன்பிறகுதான் நிம்மதியானேன். காஷ்மீரில் என்னதான்

அமெரிக்கா! - செனட் அவை செயல்பாடு!

படம்
அமெரிக்காவைப் பற்றிப் பேசாமல் எந்த வரலாற்றையும் எழுதிவிட முடியாது. காரணம், பிற நாடுகளை அழுத்தி உருக்குலைத்தேனும் தன்னை தக்கவைத்துக்கொள்ளும் பேராசை சுயநலம் அமெரிக்க அரசுகளுக்கு உண்டு. அதற்கு உலக அமைதி உள்ளிட்ட பல்வேறு பெயர்களை அச்சமயத்திற்கு ஏற்ப சொல்லுவார்கள். அமெரிக்காவின் நாடாளுமன்றத்தை காங்கிரஸ் என்று அழைக்கின்றனர். இதில் செனட் சபை, ஹவுஸ் ஆப் ரெஃப்ரசன்ட்ஸ் என இரு பிரிவுகள் உண்டு. இந்தியாவில் உள்ள மக்களவை, மாநிலங்களவை நினைவுக்கு வருகிறதா அதேதான். அமெரிக்காவின் காங்கிரசில்தான் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு விவாதங்கள் நடைபெறும். செனட் அவை இங்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு ஆறு ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. இவர்கள் அதிபரின் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் முதற்கொண்டு தேர்ந்தெடுக்கும் அல்லது நிராகரிக்கும்  உரிமை உண்டு. ஒரு மாநிலத்திற்கு இரு செனட் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அமெரிக்காவில் செனட் அவையில் நூறு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஹவுஸ் ஆப் ரெஃப்ரன்சன்டிவ்ஸ் மொத்தம் 435 உறுப்பினர்கள். பதவிக்காலம் இரண்டே ஆண்டுகள்தான்

பனிமனிதன் நிஜமா?

படம்
பனிமனிதன் செய்தி நிஜமா? செய்தி: யெட்டி எனும் பனிமனிதன் பற்றி இந்திய ராணுவம் கூறிய செய்தி ஆய்வாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான செய்தியை ஆய்வாளர்களே நம்ப முடியாமல் திணறினர். மகாலு ராணுவ கூடாரம் அருகே யெட்டி பனிமனிதனின் பாதச்சுவடுகளைப் பார்த்தோம் என ட்விட் சேதி சொன்னது. மனிதர்களை விட நான்கு மடங்கு பெரிதான பனிமனிதனை இந்திய ராணுவம் கண்டுபிடித்தது என்பதை உலகில் பலரும் நம்பவில்லை. இதற்கான ஆதாரங்களை தொல்லியல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக அரசு செய்தி கூறுகிறது. பனிமனிதன் குறித்த ஆராய்ச்சி செய்துள்ள எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் டேனியல் டெய்லர், "35 அங்குல பாதச்சுவடு என்பது டைனோசர்களுக்கு ஒப்பானது. நான் நேபாளத்திற்கு பனிமனிதர் பற்றி ஆராய்ச்சி செய்யபோனபோது, அங்குள்ளவர் காலடித்தடம் பற்றி மரக்கரடி அல்லது இமாலயத்தின் கருங்கரடி குறித்து தகவல் பகிர்ந்தார். அதற்கான காரணங்களையும் கூறியபோது என்னால் அதனை மறுக்க முடியவில்லை"" என்று கூறுகிறார்.  அரசு அமைப்பு சரியான ஆதாரங்கள், ஆராய்ச்சிகளின்ற

ஹூவெய் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு காரணம் என்ன?

கடந்த ஜனவரியில் ஹூவெய் நிறுவனத்தின் நிதித்துறை தலைவர், மெங் வாங்சூ, கனடாவில் கைது செய்யப்பட்டார். அதுமுதல் இன்றுவரை ஹூவெய் மீதான அமெரிக்காவில் தாக்குதல் தனியாக தெரிகிறது. இது இதோடு நிற்காது. ஆப்போ, விவோ, மீ ஆகிய நிறுவனங்கள் மீதும் உலகளவில் தடைகள் வரலாம். தற்போது இரண்டு நிறுவனங்களை அமெரிக்கா கறுப்பு பட்டியலில் வைத்துள்ளது. வர்த்தகப்போருக்கான முதல் படி என இதனைக் கூறலாம். இப்போது ஹூவெய், ஆண்ட்ராய்ட்டை தனக்காக மேம்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கான மார்க்கெட் தாண்டி உலகளவில் அக்கம்பெனிக்கு பெரிய சிக்கல் உள்ளது. என்விடியா, தோஷிபா, பானசோனிக் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்க தடையை ஏற்று ஹூவெய் நிறுவனத்திற்கான பொருட்களை விநியோகம் செய்வதை நிறுத்தி விட்டன. தடைகள் நீடித்தால் ஹூவெய் வெளிநாடுகளில் உள்ள கடைகளை மூடும் நிலை ஏற்படும். கூகுளின் சேவைகள் இன்றி, போனை பிறருக்கு எப்படி விற்பது. தற்போது ஹூவெய் வைத்திருப்பவர்களின் போன்களிலும் கூகுள் தன் சேவையைக் கைவிட்டால், ஹூவெய், ஹானர் ஆகிய போன்கள் பேப்பர் வெயிட்டாகத்தான் பயன்படும். ஹூவெய் தொலைத்தொடர் பு நிறுவனர் ரென் ஸெங்ஃபை, விடுதலை ராணுவத்