இடுகைகள்

திட்டமிடாமலேயே குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் சைக்கோபாத்கள் - காரணம் என்ன?

படம்
    சைக்கோபாத்கள் எப்படி உருவாகிறர்கள் என்று பார்த்தால் இன்னும் அதற்கான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வறுமை, வளரும் சூழல் என்று பார்த்தாலும் அதிலுமும்முழுமையான திருப்தியான வரையறை கிடைக்கவில்லை.   மரபணு சார்ந்து யோசித்தாலும் அதிலும் விடை இல்லை. ஆனால் இரண்டுமே ஏதோ ஒருவகையில் சைக்கோபாத் விஷயத்தில் பங்களிக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சைக்கோபாத்கள் குற்றங்களை செய்தாலும் கூட மணவாழ்க்கை அடிப்படையில் கவனமாக இருப்பவர்கள்தான். விலக்கப்பட்ட கனிகள் சுவையுடையவை என எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் சொல்வது போல, சைக்கோபாத்கள் மீது காதல் கொண்டு ஈர்ப்பு கொண்டு மணம் செய்துகொள்ளும் பெண்கள் பலருண்டு. இவர்களைப் பயன்படுத்திக் கொண்டு கழற்றிவிட்டு செல்லும் ஆட்கள் நிறையப் பேர் உண்டு.   இதனால் குழந்தைகளுக்கு குறைவேதும் கிடையாது. இப்படி வளருபவர்கள் பின்னாளில் என்னவாகிறார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. இதுபோல ஒரு குற்றவாளியின் கதையைப் பார்ப்போம்.   இந்த குற்றவாளி, இசைக்கலைஞர்களை அறிமுகம் செய்துகொண்டிருந்தார். எனவே, அவர்களுடன் இருந்த தொடர்பை பயன்படுத்தி அடுத்த தலைமுறை இசைக்கலைஞர்களாக ஆக

மூளையில் ஏற்படும் தவறான சிக்னல்களே ஆளுமை பிறழ்வுக்கு காரணம்!

படம்
  பொய்கள், ஏமாற்றுவது ஆகியவற்றுக்கு காலாவதி காலம் என்று ஒன்றுண்டு. எனவே, தங்களது பொய்கள் பிறருக்கு தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என சைக்கோபாத்கள் , வேறு வேறு நகரங்களுக்கு நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இப்படி செல்லும் பயணத்தில்தான் காதலும், உடலுறவும், அடுத்த தலைமுறையும் உருவாகின்றனர். சீனு வைட்லாவின் படத்தின் பாத்திரங்கள் போல தாங்கள் உருவாக்கிய பொய் உலகத்தில் அவர்களே மாட்டிக்கொள்ள நேரிடும்போது, உடனே அதிலிருந்து விலகி காணாமல் போய்விடுகின்றனர். வேறு நகர், வேறு நண்பர்கள். நட்புக்குழுக்கள், காதலிகள், திருமணங்கள் என வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். இதில் சில கோட்பாடுகளைச் சொல்லுகிறார்கள். அதாவது, சைக்கோபாத்களுக்கு மூளையில் குறிப்பிட்ட பகுதி முழுமையான வளர்ச்சி பெறுவதில்லை.இதனால்தான் அவர்களால் அவர்கள் பெற்ற குழந்தையைக் கூடன வளர்க்க முடிவதில்லை. மேலும் அவர்களின் தூக்கம் குறைவு என்பதால் மூளையின் வளர்ச்சியும் மிக குறைவாகவே உள்ளது என வாதிடுகிறார்கள். இதை தன்முனைப்பு அதிகம் கொண்ட, கோபம் கொண்ட குழந்தைகளுக்கும் கூட பொருத்திப் பார்க்கலாம். இயல்பு, ஊக்கம், நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை பலரும் கு

பயந்தால் வாழ்க்கை நம் கையில் இல்லை - மஞ்சு ரோஜூலொச்சாய் - மாருதி

படம்
  மஞ்சு ரோஜூலொச்சாய் மஞ்சு ரோஜூலொச்சாய் இயக்கம் மாருதி இசை அனுப் ரூபன்ஸ் பயம் என்பது ஒருவரின் வாழ்க்கையை அழிப்பதோடு மற்றவர்களின் வாழ்க்கையையும் எப்படி சீர் குலைக்கிறது என்பது சொல்லும் படம். பயம் என்பது மகிழ்ச்சியாக வாழ்பவர்களின் வாழ்க்கையை குலைக்கும் என்பதை கொரோனா காலத்தோடு இணைத்து கதை சொல்லியிருக்கிறார் மாருதி. ஆனால் படத்தில் எதுவும் உயிரோட்டமாக இல்லை. சந்தோஷ் சோபன் ம ட்டுமே கதை எதுவாக இருந்தாலும் நடிப்பேன் என தைரியமாக நடித்திருக்கிறார். அவரும் அவருடைய நண்பர்களின் நடிப்பும் பரவாயில்லை. படம் முரண்களைக் கொண்டு இயங்கும்போது சுவாரசியமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில்   சுயமாக யோசிக்கத் தெரியாத கோபாலம் என்பவரின் பயம் அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது. அவரின் உயிருக்கே ஆபத்தாவது எப்படி என சொல்லியிருக்கிறார்கள்.   இந்த படத்தின் நாயகன் வேறு யாருமில்லை, அஜய் கோஷ் என்ற நடிகர்தான்.   படத்தில் புதுமை ஏதுமில்லை என்றாலும் கூட அஜய் கோஷின் நடிப்பு பார்க்கும்படி இருக்கிறது. படத்தின் நாயகன் என்பது சந்தோஷ் சோபன் என்றாலும் கூட படத்தின் பாடல் காட்சிகள் தவிர அனைத்து காட்சிகளிலும் அஜய் கோஷ் ந

மஞ்சள் நிற தங்கமா, தங்க குணம் கொண்ட மனம் முக்கியமா? கோல்ட் - அல்போன்ஸ் புத்திரன்

படம்
    கோல்ட் மலையாளம் கதை, திரைக்கதை, அனிமேஷன், படத்தொகுப்பு, கிராபிக்ஸ், சண்டைப் பயிற்சி, இயக்கம் – அல்போன்ஸ் புத்திரன் இசை – ராஜேஷ் முருகேசன் தமிழ் டப் படத்தை மலையாள மொழியில் பார்ப்பதே நல்லது. ஆங்கில சப் டைட்டில் போட்டுக்கொள்ளலாம். மஞ்சள் நிற தங்கத்திற்கு மதிப்பு அதிகமா, தங்கத்தைப்   போன்ற மனசுடைய மனிதனுக்கு மதிப்பு அதிகமா என நிறுத்துப் பார்க்கிற படம். அல்போன்ஸ் புத்திரன் படத்தில் என்ன இருக்கும்? நான் லீனியர் படத்தொகுப்பு, அதிரடிக்கும் இசை, வித்தியாசமான சண்டைகள் என அத்தனையுமே இருக்கிறது. ஆனால் முக்கியமான விஷயம், படத்தில் எதுவுமே மனதைக் கவரும்படி இல்லை. படம் பார்த்தால் அதில் வரும் பாத்திரங்கள், நகைச்சுவை என ஏதேனும் பிடித்திருக்கிறது என்று சொல்லுவார்கள் அல்லவா? ஆனால் கோல்ட் படத்தில் உள்ள எதையும் அப்படி சொல்லமுடியாது. அனைத்துமே அரைகுறையாக இருப்பது போலவே இருக்கிறது. கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட படம் போல இருக்கிறது. எனவே, ஏதோ ஒரு இடத்தில் அடைக்கப்பட்டது போல இருக்கிறது. உருப்படியான விஷயங்களைப் பார்ப்போம். பிரிதிவிராஜ்தான் தயாரிப்பு, நடிப்பு எல்லாமே. நடிப்பை சிறப்பாக செய்

ஆராபிரஸ் - கோமாளிமேடை நூல்களுக்கான விளம்பர காணொலி

  நன்றி - https://www.canva.com/

சிறுவயதில் சிறுவர்களிடம் காணப்படும் குற்றத்தின் அடையாளங்கள்!

படம்
  என் மகனை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இப்போது அவனுக்கு பதினைந்து வயதாகிறது.இதற்குள் ஏழுமுறை சிறைக்கு சென்றுவிட்டு வந்துவிட்டான். ஒரு விஷயத்தை செய்து அவன் பிடிபட்டால் அது தவறு. பிடிபடாவிட்டால் நல்லது என்று புரிந்துகொண்டு இருக்கிறான். நாங்கள் அவனை அடித்தோம். மிரட்டினோம். மனநல சிகிச்சைகளை வழங்கினோம். ஆனால் எதுவும் அவனை மாற்றவில்லை என தாயார் ஒருவர் ராபர்ட் ஹரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். சிலர், தங்களது மகன் பொய்யை சொல்லி நிறைய சங்கடங்களை ஏற்படுத்துவார்கள். பெற்றோர்களுக்கு தங்களது மகனை சைக்கோபாத் என்று சொல்லிவிடுவார்கள் என பயம் இருக்கிறது. அப்படி மருத்துவர், உளவியலாளர் சொல்லிவிடுவாரோ என்று டீனேஜ் பையன் சார் அவன் என மாற்றி பேசுவார்கள். ஆனால் ஆய்வு அடிப்படையில் அறிகுறிகளை உணர்ந்தால் கசப்பான சைக்கோபாத் என்ற உண்மையை அவர்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும். வேறுவழியில்லை.   ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் மோசமான பொய் சொல்லும், கட்டற்ற வன்முறை, பிறரை ஏமாற்றும் குணம் கொண்டவர்கள் மோசமான குற்றவாளிகளாக மாறுவார்கள் என்பது வரலாற்று உண்மை.   சில அறிகுறிகளைப் பார்ப்போம்.   இயல்பாக தொடர்ச்சியாக தேவ

தன்னம்பிக்கை இல்லாதவர்களை தாக்கும் சைக்கோபாத்கள்!

படம்
  அசுரகுலம்   5 மனமென்னும் இருட்குகை 1.0   சைக்கோபாத்களுக்கு சொற்கள், வாக்கியங்கள் தெரியுமே ஒழிய அதன் அர்த்தம் தெரியாது. அவர்கள் முன் மரணம் என்று எழுதி வைத்தாலும் அதன் உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் தெரியாது. நாம் கண் மருத்துவமனையில் பல்வேறு வேறுபட்ட எழுத்துகளை பார்த்து ஒவ்வொன்றாக சொல்லுகிறோம்.   அதன் அடிப்படையில் கண் பார்வை மங்கலை அறிகிறார்கள். ஆனால் சொல்லும் வார்த்தையில் ஒருவருக்கு அதன் பொருளே தெரியாது என்றால் என்ன செய்வது? இப்படி குற்றங்களைச் செய்துவிட்டு அது ஒன்றும் குற்றமல்ல என்று சொல்லும் ஆட்களை எப்படி பெண்கள் காதலிக்கிறார்கள், நிறையப் பேர் காதல் கடிதங்களை எழுதுகிறார்கள். பொதுவாக உலகமெங்கும் தீவிரவாத செயல்கள், கொலைகளைச் செய்பவர்களை   அந்த காரணங்களுக்காக நிறையப் பேர் விரும்புகிறார்கள். அதாவது, அதன் மூலம் தங்களை வேறுபடுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். இல்லாதபோது நிஜத்தை உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். சிலர், தங்கள் மனதில் ஆண் என்றால் இப்படித்தான் எதற்கும் பயப்படாமல் இருக்கவேண்டும். அவன்தான் ஆண்மகன் என் நினைக்கிறார்கள். அதாவது, முத்துவீரன் நண்பர்களைக் காப்பாற்ற துப்பாக