இடுகைகள்

இணையம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களின் தகவல்களை அவர்கள் அறியாமல் திருடுவது ஜனநாயகத்தன்மை அல்ல! - டிம் பெர்னர்ஸ் லீ

படம்
            நேர்காணல் சர் டிம் பெர்னர்ஸ் லீ எம்ஐடி பேராசிரியர் . இணையத்தை கண்டுபிடித்தவர் . ஓப்பன் டேட்டா இன்ஸ்டிடியூட் நிறுவனத்தை தொடங்கியவர் . பிரைவசி என்பதை ஏன் முக்கியமாக கருதுகிறோம் ? இணையத்தில் பிரைவசி என்பது முக்கியமானதுதான் . காரணம் , நிறுவனங்கள் உங்களை அறிந்துகொண்டு பல்வேறு பொய்களை சொல்லி குறிப்பிட்ட வலைத்தளத்தை கிளி்க் செய்யச் சொல்லுகிறார்கள் . இதன் மூலம் அந்த நிறுவனம் உங்களின் தகவல்களை வைத்து வருமானம் பார்க்கிறது . ஆனால் இந்த விஷயம் நாம் நினைப்பதை விட அபாயகரமானது . இப்படி தகவல்களை திருடுவது , விற்பது என்பது அரசியல் , வணிகம் , குற்றம் என பல்துறை சார்ந்ததுதான் . ஒருவரின் தகவல்களை திருடுவதால் அதனைப் பயன்படுத்தி அவர் தவறான விஷயங்களைச் செய்யவும் வாய்ப்புள்ளது . உங்களுடைய கண்டுபிடிப்பு தவறாக பயன்படுத்தப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்ழ மனிதர்கள் இணையத்தை மனிதநேயத்துடன் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் . அதில் நல்ல , கெட்ட விஷயங்களும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம் . 2016 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அனாலிடிகா ஊழல் வெளிவந்தபோது , மக்க

கொரோனாவை சந்தித்து மீண்டு வந்த இந்திய புத்தக கடைகள்! - நிலையை எப்படி சமாளித்தனர்?

படம்
            தாக்குப்பிடித்த புத்தக கடைகள் ! உலகம் முழுவதும் பொதுமுடக்கம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது . புத்தக கடைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன ? அப்படி தப்பி பிழைத்த புத்தக கடைகள் பற்றி இங்கு பார்ப்போம் . என்ன சாகசங்கள் செய்து ்தங்களை காப்பாற்றிக்கொண்டனர் என்பதை பார்ப்போம் . பாக்தண்டி புனே நேகா , விஷால் பிபாரியா ஆகியோர்தான் இந்த புத்தக கடையை நடத்தி வந்தனர் . பொதுமுடக்கத்தை எதிர்கொள்ள இவர்களுக்கு கிடைத்த ஐடியா , கிப்ட் வ வுச்சர்கள்தான் . அதனை தங்களது வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ள கூறினர் . அப்படி வாங்கியவறை பிற்காலத்தில் பயன்படுத்திக்கொள்ளமுடியும் . இப்படிக் கிடைத்த தொகை மூலம் மூடப்பட்ட நாட்களை சமாளித்துள்ளனர் . ஆன்லைனில் வலைத்தளங்கள் கொடுக்கும் தள்ளுபடிகளை புத்தககடைகள் கொடுக்க முடியாது என்பது நிதர்சனம் . எங்களது வாடிக்கையாளர்கள் மூலமே நாங்கள் இன்றுவரை இயங்கி வருகிறோம் என்கிறார்கள் நேகா அ்ண்ட் கோ . விட்டுக்கொடுக்காமல் இருந்தது . புத்தக கடை என்பதை முழுமையான அனுபவமாக மாற்றியது இக்கடையின் வெற்றி என்கிறார்கள் . ரச்சனா ஸ்டோர்ஸ் காங்டொக் ரா

க்யூஆர் கோடு வழியாக கல்வி!- டிஜிட்டல் வழியாக நடைபோடும் மாணவர்கள்

படம்
  இன்று அரசு பாடநூல்களில் க்யூஆர் கோட் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. இணையம் இருந்தால் மேற்படி தகவல்களை எளிதாக அறியமுடியும். இது கல்வித்துறையில் பெரிய புரட்சி என்றே சொல்லலாம்.  குயிக் ரெஸ்பான்ஸ் கோடு என்பது, நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரங்களிலேயே தென்படத்தொடங்கிவிட்டது. அதனை ஸ்மார்ட்போன்களில் உள்ள க்யூஆர் ஸ்கேனர் ஆப் மூலம் ஸ்கேன் செய்தால், தொடர்புடைய பொருள் பற்றிய விளக்கம் கிடைக்கும்.  பாடநூல்களில் இணைக்கப்பட்டுள்ள புதிய வசதி மூலம் மேலும் மேலும் கற்க வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு எந்த பாடங்களில் ஆர்வம் உள்ளது என கண்டுபிடிக்க வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும்? அதுதான் மத்திய அரசின் சிந்தனையும் கூட. அதற்காகத்தான் மத்திய அரசின் கல்வித்துறை, நந்தன் நீல்கேனியின ஏக் ஸ்டெப் பவுண்டேஷனுடன் கைகோத்துள்ளது. இந்த பவுண்டேஷனின் தீக்சா எனும் ஆப்பில் மாணவர்கள் பாடநூல்களிலுள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யவேண்டும். அதனை வைத்து மாணவர்கள் ஆர்வம் கொள்ளும் பாடங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன்மூலம் அவர்களின் ஆர்வங்களை அரசு எளிதாக அறிந்துகொள்ள முடியும்.  2017ஆம் ஆண்டு ஐந்து மாநி

மழை பெய்யும்போது இணையமும், செல்போனும் செயல்படாது! - இதற்கான அறிவியல் காரணம் என்ன?

படம்
    மழைக்காலத்தில் ஏற்படும் இயற்கையான தடங்கல்கள் ! மழைக்காலத்தில் ஸ்மார்ட்போன்கள் , இணையப் பயன்பாடு என இரண்டுமே பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றன 1860 ஆம் ஆண்டு , ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் ஜேம்ஸ் மேக்ஸ்வெல் , புதியவகை மின்காந்த அலையை கண்டுபிடித்தார் . அதற்குப்பிறகு இயற்பியலாளர் ஹென்ட்ரிச் ஹெர்ட்ஸ் , மேக்ஸ்வெல்லின் கோட்பாட்டை சோதித்துப் பார்த்து , அதனை உறுதியும் செய்தார் . 1895 ஆம் ஆண்டு கோல்கட்டாவில் சர் ஜெகதீஷ் சந்திரபோஸ் , மின்காந்த அலை மூலம் 23 மீட்டர் தூரத்தில் வயர்களின்றி செய்தியை அனுப்பமுடியும் என்பதை செய்து காட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தார் . இன்று நாம் செய்தியை இணையத்தின் வழியாக எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும் . இதற்கு காரணமாக இருப்பது எலக்ட்ரான்கள் . அவற்றில் உருவாகும் மின்காந்தவிசை .   இரு எலக்ட்ரான்களுக்கு இடையில் மின்காந்த விசை உருவாகும்போது நாம் செய்தி அனுப்ப முடிகிறது . எளிய உதாரணமாக நாம் ஒளியை குறிப்பிட்ட கோணத்தில் அலைநீளத்தில் கண்களால் பார்ப்பதால் , அதனை எளிதாக உணர்ந்துவிடுகிறோ்ம் . தொலைத்தொடர்பு வசதி முன்னேறாத

ஸ்மார்ட் சாலைகளுக்கு வேறு என்ன ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்?

படம்
          ஸ்மார்ட் சாலைகளுக்கு வேறு என்ன ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர் ? அமெரிக்காவைச் சேர்ந்த இன்டகிரேட்டட் ரோட்வேஸ் நிறுவனம் , சாலைகளை டச் பேடு போல அமைக்க முயன்று வருகிறது . இதன்மூலம் ஸ்மார்ட் கார்களை எளிதாக சார்ஜ் செய்துகொள்ளமுடிவதோடு செல்லும் சாலை பற்றிய தகவல்கள் , அருகிலுள்ள ஹோட்டல்கள் , கடைகள் பற்றிய விவரங்களை அறியமுடியும் . கான்சாஸிலுள்ள லெனெக்ஸா என்ற சாலைகை அரை கி . மீ தூரத்திற்கு இம்முறையில் அமைத்து சோதித்து வருகிறது இந்த நிறுவனம் . அடுத்து , க்வார்ட்ஸ் கிரிஸ்டல்கள் மூலம் சாலைகளை அமைக்கும்போது கார்களின் அழுத்தம் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம் என்பது மற்றொரு ஐடியா . இது புதிய ஐடியா கிடையாது . 1880 இல் இந்த ஐடியாவை உருவாக்கிவிட்டனர் . செயல்படுத்திப் பார்க்க இப்போதுதான் தயாராகி இருக்கின்றனர் . லான்காஸ்டர் பல்கலைக்கழகம் இதற்கான ஆராய்ச்சி நிதி 4.5 மில்லியன் பவுண்டுகளை பெற்றுள்ளது . ஐரோப்பிய நாடுகளில் பனி உறைவது பெரும் பிரச்னை . இதனை சரிசெய்ய சாலைகளுக்கு கீழே மெட்டல் ரிப்பன்களை அமைத்து பனி சாலையில் குறிப்பிட்ட அளவு சேர்ந்ததும் அதனை உருக்குவது பிளான் . இ

ஆட்டிச பாதிப்புடன் வாழ்க்கையை பிறருக்கு பகிரும் நூல்! - புத்தகம் புதுசு

படம்
              கைண்ரட் நியாண்டர்தால் லைஃப், லவ், டெத், ஆர்ட் ரெபெக்கா ரெக் சைகஸ் இன்று அனைத்து இடங்களிலும் ஏன் கூகுள் சர்ச்சிலும் கூட நியாண்டர்தால் பற்றிய சர்ச்சைகள்தான் அதிக இடம்பிடித்துள்ளது. பலரும் தேடிப்படித்து வருவதும் இதுதொடர்பான சர்ச்சைகள்தான். இதுபற்றிய தகவல்களை தொல்பொருள் ஆய்வாளர் ரெக் சைகஸ் நமக்கு விளக்குகிறார்.நமது பரிணாம வளர்ச்சி, அவர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், உடல் உறுப்புகள் என ஏராளமான விஷயங்களை நூலில் விளக்கியுள்ளனர். அவுட்சைடர் கைடு டு ஹியூமன்ஸ் வாட் சயின்ஸ் டாஃப்ட் மி அபவுட் வால் வீ டூ அண்ட் ஹூ வீ ஆர் கமிலா பாங் உயிரிவேதியியலாளர் பாங் ஐந்து வயதாக இருக்கும்போது பிற மனிதர்களை அந்நியர்களாக கருத தொடங்கிவிட்டார். சோதித்தபோது அவருக்கு ஆட்டிச பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தன்னுடைய வாழ்க்கையை, அறிவியல் கலந்து பேசியுள்ள நூல் இது. தி டேங்கில்டு வெப் வி வீவ் இன்சைடு தி ஷாடோ சிஸ்டம் தட் ஷேப்ஸ் தி இன்டர்நெட் ஜேம்ஸ் பால். இணையம், இணைய நிறுவனங்கள் எப்படி இணையத்தை நிலைநிறுத்துகிறார்கள். முன்பு கடவுளாக தெரிந்த இணையம் எப்படி வில்லனாக பார்க்கப்படுகிறது என்பதை எழுதியுள்ளார் ஆசிர

அமேஸானின் இன்டோர் ட்ரோன் பாதிப்பு ஏற்படுத்துகிறதா?

படம்
        அமேசானின் இன்டோர் ட்ரோன் அமேசான் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இன்டோர் ட்ரோன் , பாதுகாப்பு பிரச்னை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக டெக் வல்லுநர்கள் கூறியுள்ளனர் . தி ரிங் ஆல்வேய்ஸ் ஹோம் கேம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது . ஹேக்கர்கள் , இச்சாதனத்தை எளிதாக பயன்படுத்தி வீட்டில் இருக்கும் பொருட்களை பார்த்து கொள்ளையடிக்க முடியும் . அமேசான் நிறுவனம் இச்சாதனத்தை வீட்டை கண்காணிக்கும் அற்புதமான சாதனம் என்று விளம்பரம் செய்கிறது . ஆனால் காஸ்பர்ஸ்கை நிறுவனம் , இது புதிய சைபர் பிரச்னைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது . ரிங் மட்டுமல்ல இணையத்தோடு இணைந்து செயல்படும் அனைத்து சாதனங்களும் பிறரால் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதே உண்மை . இச்சாதனம் வீட்டுக்குள் பறந்து கண்காணிப்பது என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது இனிமேல் பயனர்கள் கூறும் விஷயங்களில்தான் இருக்கிறது .

இணைய உலகை ஆளும் கருப்பு உலக ராஜாக்கள்! எதிர்கொள்வது எப்படி?

படம்
        பிக்சாபே   கருப்பு உலக ராஜாக்கள் ! இன்று நம்முடைய தினசரி நடவடிக்கைகள் பலவும் இணையம் சார்ந்ததாக , ஸ்மார்ட்போனிலேயே செய்துகொள்ள முடிவதாக மாறிவிட்டன . அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே இணையம் மூலம் செய்யமுடிகிறது . பல்வேறு கட்டணங்களை ஸ்மார்ட்போனிலிலுள்ள செயலிகள் மூலம் கட்ட முடிகிறது . அதேசமயம் , இதில்தான் பல்வேறு தில்லுமுல்லும் , மோசடிகளும் நடந்தேறுகின்றன . மார்ச் 11 அன்று , உலக சுகாதார நிறுவனம் கோவிட் -19 நோயை பெருந்தொற்றாக அறிவித்தது . இக்காலத்தில் மக்களுக்கு ஏராளமான ஸ்பாம் எனும் குப்பை மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன . இவற்றை அவசர உதவி தேவை என்று திறந்தவர்களின் தகவல்கள் திருடப்பட்டன . கணினியில் இருந்த தகவல்கள் அழிந்துபோயின . இதுபோன்ற சூழலைத் தடுக்கவே சீனா 1 லட்சம் , பாகிஸ்தான் 10 ஆயிரம் , இந்தியா 1000 பேர் என தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிக்கு எடுத்து தகவல்களை பாதுகாத்து வருகின்றனர் . இவர்களின் செயல்பாட்டை (Hackers as a service) என்று அழைக்கின்றனர் . பொருளாதார மந்தநிலை உள்ளபோதும் , ஹேக்கர்ஸ்களால் பல்வேறு இணையம் சார்ந்த குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன அண்மையில் சீன ஹேக்கர்கள் ,

இளைஞர்களின் மீதான இணையத் தாக்குதல் அதிகரிப்பு!

படம்
the conversation இணையம்தான் இன்று மக்கள் கூடும் டிஜிட்டல் பொது இடங்களாக உள்ளன. மக்கள் கூடும் இடங்களில் நடைபெறும் கேலி, கிண்டல், வன்முறை, ஆபாசப்பதிவுகள்  என அனைத்தும் டிஜிட்டல் உலகிலும் நடைபெறுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட தகவல் அறிக்கையில் பத்தில் ஒரு இந்தியர் இதுபோன்ற இணையத்தாக்குதல்களை சந்தித்து வருவதாக தெரிய வந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ எனும் தன்னார்வ அமைப்பு டில்லி பகுதியில் எடுத்த ஆய்வுப்படி, இளைஞர்கள் மீதான தாக்குதல் (13-18) 22.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இளைஞர்களில் நான்கில் ஒருவர் மார்பிங் செய்த புகைப்படத்தைப் பார்ப்பதாகவும், அதுபற்றி காவல்துறையில் புகார் செய்வதில்லை என்றும் தெரிய வந்துள்ளது. 2017ஆம் ஆண்டை விட பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான இணையத்தாக்குதல் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் இணையம் சார்ந்த குற்றங்கள் 2018ஆம் ஆண்டில் 25 சதவீதம் அதிகரித்துள்ளன. இணையத்தில்  சொற்கள் சார்ந்த வன்முறை இயல்பானதாக மாறிவிட்டது. தொலைவில் இருப்பதாலும், முகம் தெரியாது என்பதாலும் தன்னுடைய மனம் போல ஒ

காதல் வார்த்தைகள் இவ்வளவா? - வரலாற்றில் புழங்கியவை!

படம்
pixabay இணையம் வந்ததிலிருந்து பழமையான தகவல் தொடர்புமுறைகள் பலவும் தேக்கத்தை சந்தித்துள்ளன. இன்று காதல் சொல்ல ரோஜா, ஆர்ச்சி அட்டைகளை தேடுவதை விட ஜிஃப் ஃபைலாக அனுப்புவது இன்னும் எளிமையாக உள்ளது. காதலைச் சொல்ல, குறிப்பிட்ட நபரை அழகாக இருக்கிறான் என்று சொல்ல என்ன வார்த்தையை முன்னர் பயன்படுத்தினார்கள் என்று அறிந்தால் நன்றாக இருக்குமே! அதற்காகத்தான் சில சொற்களை உங்களுக்கு அறியத் தருகிறோம். பக் ஹவுஸ்  காதலில் வீழ்ந்தேன் என்று சொல்கிறார்களே அதை ஒத்தது. புதிதாக காதல் செய்பவர்கள் இரவு முழுக்க போனில் பேசுவார்கள். சீனா - ரஷ்யா கூட அவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு அரசியல் சமாச்சாரங்களை பேசியிருக்க மாட்டார்கள். காதலில் மூழ்கி பைத்தியமாக திரிந்து நண்பர்களை ஒரண்டுக்கு இழுப்பதும் இவ்வகையில் சாரும். இதனை 21ஆம் நூற்றாண்டில் பக் ஹவுஸ் - Bughouse என்கிறார்கள். BUSS பஸ் என்றால் கிஸ் என்று பொருள். அன்று பிரெஞ்சில் பைசர், ஸ்பானிஷில் பெசோ, இத்தாலியின் பசியோ என்று சொல்லி முத்தம் கேட்டனர். பாசன் - bassen  என்ற சொல்லிலிருந்து உருவாகி வந்திருக்கலாம் என்கிறார்கள். இந்த சொல் தோன்றி புழங்கிய காலம் 1

இந்தியாவில் உருவாகிறது பெருஞ்சுவர்!

படம்
ஜனநாயக நாடுகளிலேயே அதிக நாட்கள் இணையம் தடைசெய்யப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. ஏறத்தாழ ஐந்து மாதங்கள் முற்றாக இணையம் துண்டிக்கப்பட்டு காஷ்மீரிலுள்ள தொழில்கள் அனைத்தும் துடைத்து அழிக்கப்பட்டன. இப்போதும் நீதிமன்ற உத்தரவுப்படி சில பகுதிகளில் மட்டும் இணைய வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட இணையதளங்களை மட்டுமே இணையத்தில் காஷ்மீர் பயனர்கள் பார்க்க முடியும். மேலும் இம்முறையில் 301 வலைத்தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 4, 2019 அன்று இணைய இணைப்பு காஷ்மீரில் தடைசெய்யப்பட்டது. பின்னர், கார்கில் பகுதிகளில் டிசம்பர் 27, 2019 அன்று இணைய இணைப்பு வழங்கப்பட்டது. பிரச்னை ஏற்படுத்தாத பயனர்களுக்கு மட்டும் ஜன.25, 2020 அன்று 2ஜி இணைய இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அரசு அனுமதிக்கும் இணையதளங்களை மட்டுமே காண முடியும். மேலும் தகவல் அனுப்புவதற்கு என்கிரிப்ஷன் வசதியுள்ள வாட்ஸ் அப் போன்ற செயலிகளை தடை செய்துள்ளது மத்திய அரசு. அதற்கு பதிலாக அரசுக்கு ஆதரவான ஜியோ சாட் செயலியைப் பயன்படுத்தலாம். இதில் தகவல்களை அரசு இடைமறித்துப் படிக்க முடியும். அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், தனியார் நிறு

வேலை இழப்பால தவிக்கும் காஷ்மீர்!

படம்
விடுதி மேலாளர் குலாம் ஜிலானி ஆகஸ்ட், 5, 2019 அன்று இந்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. சட்டத்திற்கு எதிரான போராட்டம் மாநிலமெங்கும் நடத்தப்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த 135 நாட்கள் இணையம் தடை செய்யப்பட்டது. இதன் விளைவாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் தம் பயணத்தை ரத்து செய்தனர். மாநிலம் முழுவதம் ராணுவம் சூழ்ந்து நிற்க, திறந்தவெளி சிறைச்சாலை போன்ற சூழலை அரசு வலிந்து உருவாக்கியது. இதன் விளைவாக அங்கு 1 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இழக்கப்பட உள்ளன. தற்போது நீதிமன்ற தலையீட்டால 2ஜி இணைப்புகள் மட்டும் வேலை செய்யத் தொடங்கியுள்ளன. இணையதளங்கள் முழுக்க செயல்படத்தொடங்கவில்லை. குறிப்பிட்ட அரசு ஏற்ற பட்டியலில் உள்ள வலைத்தளங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. தால் ஏரி அருகில் உள்ள விடுதியில் குலாம் ஜீலானி என்பவர் மேலாளராக உள்ளார். இங்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட தினத்தில் இருந்து அங்கு புக் செய்யப்பட்ட அனைத்து பயணிகளும் தம் இடங்களை ரத்து செய்துவிட்டனர். தற்போது மூன்று பேர் மட்டுமே அறை எடுத்து உள்ளனர். அதற்கு முன்பு 88 பேர் இங்கு தங்கியிருந்

இருண்டு போன இந்தியா - இணையத்தை முடக்கும் சர்வாதிகாரம்!

படம்
உலகம் முழுக்கவே இணையம் சார்ந்த தாக தொழில்கள் மாறி வருகின்றன. இந்த நேரத்தில் மின்சாரமும், இணையமும் தடைபட்டால் மொத்த நாடுமே ஸ்தம்பித்து விடும். இந்த கவனம் யாருக்கு இருக்க வேண்டும்? அரசுக்குத்தானே, ஆனால் அரசு தன் பொருளாதார, நிர்வாக முடிவுகளில் உள்ள சிக்கல்களை மக்களிடம் காட்டி வருகிறது. இதன் காரணமாக, இந்திய அரசு இந்த ஆண்டில் மட்டும் 95 முறை இணைய சேவையை தடை செய்துள்ளது. காஷ்மீரில் செயல்படுத்தி வெற்றி கண்ட முறையை உள்துறை அமைச்சகம், தற்போது எந்த பிரச்னை ஏற்பட்டாலும் அமல் செய்து வருகிறது. இதன்விளைவாக இணையம் சார்ந்த அனைத்து தொழில்களும் பலத்த அடி வாங்கி வருகின்றன. குறிப்பாக ஊபர், ஓலா ஆகிய ஆப் சார்ந்த தொழில்கள் நிலைமை என்னாகும்? காஷ்மீரில் உலக நாடுகளிலேயே 137 நாட்கள் இணையத்தை இந்திய அரசு முடக்கியுள்ளது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக டில்லி, மேற்கு வங்கம், அசாம் போன்ற இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றைத்தடுக்க இந்த மாநிலங்களில் இணையத்தை முடக்கும் முடிவை உள்துறை அமைச்சகம் செயல்படுத்தியுள்ளது. இதனால் எல்லாம் போராட்டம் நிற்பதா

தகவல் பாதுகாப்பு அம்ச மசோதா அம்சங்கள்!

படம்
தகவல் பாதுகாப்பு மசோதா அண்மையில் அமலானது. அதில் பரிந்துரைக்கப்பட்ட முக்கியமான அம்சங்கள் இதோ.... இந்தியாவில் சேமியுங்கள் இந்தியர்களைப் பற்றி சேகரிக்கப்படும் நிதி, ஆரோக்கியம் தொடர்பான தகவல்கள் இந்தியாவில் உள்ள சர்வர்களில் வைக்கப்பட வேண்டும். பிற விஷயங்களை நிறுவனங்கள் த த்தமது நாடுகளிலுள்ள சர்வர்களில் பராமரிக்க தடையேதும் இல்லை. கட்டற்ற அரசு அதிகாரம் அரசு எந்த விதிவிலக்கின்றி அனைத்து குடிமக்களின் தகவல்களை பெற அதிகாரம் கொண்டது. அதனால், ஏறத்தாழ சீனா போல கண்காணிப்பு கொண்ட நாடாக இந்தியா மாறக்கூடும். மேலும் தனிப்பட்ட தகவல்கள் அல்லாதவற்றை அரசு கேட்டால் நிறுவனங்கள் அதனை தரவேண்டியது கட்டாயமாகிறது. அனுமதி அவசியம். மக்களின் தகவல்களை தங்களிடம் வைத்திருக்க நிறுவனங்களுக்கு காலக்கெடு உண்டு. பிற நிறுவனங்களுக்கு பகிர உரிமையானவர்களிடம் அனுமதி பெறுவது கட்டாயமாகிறது. அழிக்கும் உரிமை மக்களின் தகவல்களை பயன்படுத்திவிட்டு அதனை சேமிக்க அவசியமில்லை. அதனை அழித்துவிட மக்கள் கோரலாம். இந்த உரிமை இச்சட்டத்தின் மூலம் அமலுக்கு வருகிறது. சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு அனுமதி பயனர்களின் தகவல்

காஷ்மீரில் இணையம் நிறுத்தம்!

படம்
சிறப்பு அந்தஸ்து விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு, ஏறத்தாழ 60 நாட்களுக்கு மேலாக அங்கு இணையம் செயல்படவில்லை. அனைத்து சமூக வலைத்தளங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காரணம் கிளர்ச்சியாளர்கள் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு வன்முறை ஏற்படும் பயம்தான். இனி பியூட்டிஃபுல் காஷ்மீர் என நிச்சயம் பாட முடியாது. மாநிலமே கொந்தளிப்பில் கிடக்கிறது. எனவே அங்கு செயல்பட்டு வந்த இணைய இணைப்பு பற்றிய டேட்டா இதோ..... அக்டோபர் 3 ஆம் தேதியோடு அறுபது நாட்கள் காஷ்மீரில் இணையம் தடைசெய்யப்பட்டு இருக்கிறது. 2012 ஆம் ஆண்டு 180 முறை இணையம் தடை செய்யப்பட்டு உள்ளது. 2019 இல் இதுவரை 55 முறையும், கடந்த ஆண்டில் 68 முறையும் இணையம் தடை செய்யப்பட்டுள்ளதாக மென்பொருள் சுதந்திர சட்ட மையம் தகவல் கூறுகிறது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும் இணைய இணைப்பு துண்டிப்பு 196 முறை நடைபெற்றிருக்கிறது.இதில் இந்தியாவில் மட்டும் 134 முறை நடந்திருக்கிறது. பாகிஸ்தான் என்று கேள்வி வருமே? ஆம் அங்கு 12 முறை இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. புர்கான் வானி படுகொலையான பின்னர் மொபைல் இணையம் 133 முறை காஷ்மீரில் தடை செய்யப்பட்டுள்ளது. - இந

ASMR வீடியோக்கள் பெருகி வருகின்றன!

படம்
ஆம் அப்படித்தான் கூகுள் ட்ரெண்ட்ஸ் கூறுகிறது. ஏஸ்எம்ஆர் என்றால் அட்டானமஸ் மெரிடியன் சென்சரி  ரெஸ்பான்ஸ் என்று கூறலாம். சாதாரணமாக ஓரிகாமி, சமையல்  உள்ளிட்ட வீடியோக்களை நீங்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள் அல்லவா அந்த வீடியோக்களைத்தான் இப்படி குறிப்பிடுகிறார்கள். இந்த வீடியோக்களில் இன்று நூறு என கூகுள் டிரெண் ட்ஸ் குறிப்பிடுகிறது. எந்த மாநிலங்களைத் தெரியுமா? மிசோரம், நாகலாந்து உள்ளிட்ட மாநில மக்கள்தான் இந்த வீடியோக்களை ஆர்வமாக அதிகமாக பார்த்திருக்கிறார்கள். இந்த வீடியோக்களின் டிரெண்டு அமெரிக்காவில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. இன்றும் இந்த ஏஎஸ்எம்ஆர் வீடியோக்களுக்கான நிகழ்ச்சிகளை தயாரிப்பவர்களுக்கு பத்தாயிரம் டாலர்கள் வரை வருமானம் கிடைக்கிறது. என்ன வீடியோக்களை பதிவிடுவது? ஐபோன் விமர்சனம் முதல் படுக்கும்போது குழந்தைகளுக்கு சொல்லும் கதை வரை எதை வேண்டுமானானாலும் சொல்லுங்கள். வீடியோ வடிவில் இதனை தயாரித்தால் சோலி முடிந்தது. இதற்கான வீடியோ தயாரிப்பவர்கள் ஒலியைப் பதிவு செய்வதற்காக தனி மைக்ரோபோன்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் பாத்திரம் தேய்க்கும் ஒலி, சாப்பிடும் ப

அமெரிக்கர்களை மகிழ்வித்த ஃபுளோரிடாமேன்! - உண்மையா - பொய்யா?

படம்
es.sott.net தெரிஞ்சுக்கோ! அமெரிக்காவில் இணையம் புகழ்பெறத்தொடங்கிய காலகட்டம். உள்ளூர் பத்திரிகைகள் செய்த காரியம், பத்திரிக்கை துறையையே மாற்றியது. இல்லாத ஒரு கதாபாத்திரத்தை அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலம் உருவாக்கியது. புளோரிடா மேன் நாயை கிளப்பில் அனுமதிக்காததால் போலீசை அழைத்தார், மருத்துவமனையை கொளுத்தினார் என்கிறரீதியில் செல்லும் செய்தி மக்களுக்கு எதிர்பார்த்த சுவாரசியத்தைத் தந்தன. ஆனால் மலினமான பத்திரிக்கை செயல் என பின்னர் விமர்சிக்கப்பட்டது. இந்த கதாபாத்திரம் உணர்ச்சிவசப்பட்ட, மனநிலை சீரற்ற தன்மை கொண்டதும் இதற்கு காரணம். அமெரிக்காவில் ஃபுளோரிடா மாநிலத்தில் மட்டுமே மனநலம் சார்ந்து செலவழிக்கும் தொகை குறைவு - 36 டாலர்கள் மட்டுமே செலவழிக்கின்றனர். இங்கு அனுமதிக்கப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கை இருபது லட்சத்திற்கும் அதிகம். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் ஃபுளோரிடா மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இங்கு பத்து லட்சத்திற்கும் அதிகமான அலிகேட்டர் வகை முதலைகள் உண்டு. நன்றி: க்வார்ட்ஸ்

மக்களை படைப்பாளர்களாக்கியது இணையம்தான்! - புவன்ராம்

படம்
டிஜிட்டல் புரட்சி மக்களை மாற்றியது யூடியூபில் செல்வாக்கான நபராக வலம் வருகிறார் புவன்ராம். 25 வயதில் பத்து லட்சம் நேயர்களைச் சம்பாதித்து விட்டார். இதுபோதாதா அவரிடம் பேச.... நீங்கள் யூடியூபில் எவ்வளவு செல்வாக்கானவராக திகழ்கிறீர்கள்? நான் மக்களை பொருட்களை வாங்க வைப்பவராக என்னை நினைக்கவில்லை. காரணம், எனது வேலை பொழுதுபோக்காளராக,  படைப்புகளை உருவாக்குபவர் என்றுதான் நினைக்கிறேன். வெளிப்படையாகச்சொன்னால், யாரும் இங்கே யாரையும் அடக்கி தன் விருப்பங்களைத் திணிக்க முடியாது. டிஜிட்டல் புரட்சி நிறைய விஷயங்களை மாற்றியுள்ளதாக நினைக்கிறீர்களா? நிச்சயமாக. இன்று தவறான போலிச்செய்தி வலைத்தளத்தில் பரவுகிறது என்றால் உடனே அதனை யாரும் நம்புவதில்லை. உண்மையான செய்தி என்ன என்று இளைஞர்கள் அவர்களாகவே உணர்ந்துகொள்கிறார்கள். மக்களையும் படைப்பாளர்களாக மாற்றியது டிஜிட்டல் புரட்சிதான். பொருளின் தரத்திற்கு அதனைப் பரிந்துரைக்கும் பிரபலங்கள் முக்கியக் காரணம் என்று சொல்லலாமா?  நான் ஒரு ஷாம்பூவை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன் என்றால் அதனை நான் பயன்படுத்தி இருக்கவேண்டும். மேலும் ஷாம்பூ என்பது அனைவரின் தலை

ஐட்யூனை மூடும் ஆப்பிள்!

படம்
ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஐட்யூன், டவுன்லோடு சேவைகளை மூடவிருக்கிறது. என்ன காரணம்? இசை, பாட்காஸ்ட் உள்ளிட்ட சேவைகளுக்கென தனி ஆப்களை உருவாக்கி வருவதால் இந்த அதிரடி முடிவு. 2001 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று ஐட்யூன் சேவை தொடங்கப்பட்டது. ஆப்பிளின் கிரியேட்டிவிட்டி இயக்குநரான ஸ்டீவ் ஜாப்ஸ், சிடி, டிவிடிகளிலிருந்த பாடல்களை இணையத்திற்கு கொண்டு வந்தார். ஐட்யூன் தளத்தில் வடிவமைப்பு அப்போது கோப்புகளை பரிமாற்றம் செய்து வந்த நாப்ஸ்டர் எனும் தளத்தை ஒத்திருந்தது. ஆனால் ஐட்யூனின் வெற்றி மிக குறைவான நாட்களே இருந்தது. காரணம், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பாட்டிஃபை போன்ற இலவச, கட்டண சேவை நிறுவனங்கள் இசையை ஜனரங்க மக்களிடம் கொண்டு போய் சேர்த்தன. 2020 ஆம் ஆண்டு வரை ஐட்யூன் வலைத்தளம் இணைய உலகில் நிற்பது கடினம் என கணித்துள்ளனர் டெக் வல்லுநர்கள். நன்றி: தி கார்டியன்

கலக்கும் யூட்யூப் குழந்தைகள்!

படம்
யூட்யூப் ஸ்டார்ஸ்! உங்கள் கையில் ஹெச்டி தரத்தில் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். உங்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பதிவு செய்து இணையத்தில் பகிரலாம். இணையத்தில் அப்படி பதிந்து யூட்யூபில் சாதனையாளர்களாக வளர்ந்தவர்களைப் பார்ப்போம்.  மேட்டி பிராப்ஸ் (Matty Braps) 2003 ஆம் ஆண்டு பிறந்து, யூட்யூப் தளத்தில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களைச் சம்பாதித்த, அமெரிக்க ராப் பாடகர். 2010 ஆம் ஆண்டு 'ஜஸ்ட் தி வே யூ ஆர் ' என்ற பாடலை வெளியிட்டார். 2014 ஆம் ஆண்டு பில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களின் மனங்களை வென்றார். இவரின் ஸ்பெஷல், புகழ்பெற்ற பாடல்களுக்கான கவர் பாடல்கள். இன்று யூட்யூப், ஃபேஸ்புக், ட்விட்டர் என பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. http://mattybraps.com/ ஈவன் (Evan) ஈவன் தன்னுடைய யூட்யூப் சேனல் (Evantube) மூலம் தன் வயதுக்கார பையன்களுக்கு நாயகனாகி இருக்கிறார்.  எப்படி? சந்தைக்கு வந்த புதிய பொம்மைகளை விமர்சிப்பது,  ஏன்? எதற்கு? எப்படி? வகையறா  வீடியோக்களை  பதிவிட்டு 60 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளார்.  ஈவனின் தந்தை திரை