மக்களின் தகவல்களை அவர்கள் அறியாமல் திருடுவது ஜனநாயகத்தன்மை அல்ல! - டிம் பெர்னர்ஸ் லீ
நேர்காணல் சர் டிம் பெர்னர்ஸ் லீ எம்ஐடி பேராசிரியர் . இணையத்தை கண்டுபிடித்தவர் . ஓப்பன் டேட்டா இன்ஸ்டிடியூட் நிறுவனத்தை தொடங்கியவர் . பிரைவசி என்பதை ஏன் முக்கியமாக கருதுகிறோம் ? இணையத்தில் பிரைவசி என்பது முக்கியமானதுதான் . காரணம் , நிறுவனங்கள் உங்களை அறிந்துகொண்டு பல்வேறு பொய்களை சொல்லி குறிப்பிட்ட வலைத்தளத்தை கிளி்க் செய்யச் சொல்லுகிறார்கள் . இதன் மூலம் அந்த நிறுவனம் உங்களின் தகவல்களை வைத்து வருமானம் பார்க்கிறது . ஆனால் இந்த விஷயம் நாம் நினைப்பதை விட அபாயகரமானது . இப்படி தகவல்களை திருடுவது , விற்பது என்பது அரசியல் , வணிகம் , குற்றம் என பல்துறை சார்ந்ததுதான் . ஒருவரின் தகவல்களை திருடுவதால் அதனைப் பயன்படுத்தி அவர் தவறான விஷயங்களைச் செய்யவும் வாய்ப்புள்ளது . உங்களுடைய கண்டுபிடிப்பு தவறாக பயன்படுத்தப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்ழ மனிதர்கள் இணையத்தை மனிதநேயத்துடன் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் . அதில் நல்ல , கெட்ட விஷயங்களும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம் . 2016 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அனாலிடிகா ஊழல் வெளிவந்தபோது , மக்க