இடுகைகள்

கடல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடலுக்குள் உள்ளே உருவான எரிமலை

படம்
  கடல் ஆய்வில் வெளியான ஒற்றை எரிமலை! பசிபிக் கடலில் வடமேற்காக  952 கி.மீ. தொலைவில் பயணித்தால் ஹோனோலுலு என்ற இடத்தைப் பார்க்கலாம். இங்கு கடல்மட்டத்திலிருந்து 52 மீட்டர் உயரத்தில் அமைந்த மலைச்சிகரங்கள் உண்டு. கடல் பறவைகள் பாறைகளின் மீது அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இதில்தான் புகாஹோனு (Puhahonu) எனும் எரிமலை உள்ளது என  கண்டறியப்பட்டுள்ளது.  புகாஹோனு என்ற பெயருக்கு, மூச்சை உள்ளிழுக்கும் ஆமை என்று பொருள்.   அண்மையில், இங்கு கடல் படுகை ஆய்வைச் செய்தனர். அப்போதுதான், ஆய்வாளர்கள் ஒற்றையாக இருக்கும் பெரிய எரிமலை ஒன்றை கண்டுபிடித்திருக்கின்றனர்.  ”நாம் பார்க்கும் பகுதி வெளித்தெரியும் 30 சதவீத மலை. அதற்கு கீழே இன்னும் உள்ளது ”என ஹவாய் பல்கலைக்கழக எரிமலை ஆய்வாளர் மைக்கேல் கார்சியா கூறினார். இதுபற்றிய ஆய்வு 2020ஆம் ஆண்டு எர்த் அண்ட் பிளானட்டரி சயின்ஸ் லெட்டர்ஸ் என்ற இதழில் வெளியாகியுள்ளது. கடலுக்கு கீழே உள்ள மலைகள், எரிமலைகள் என தொடர்ச்சி ஹவாயிலிருந்து ரஷ்யாவின் கிழக்குப்பகுதி வரையில் நீண்டுள்ளது.  ஹவாயிலுள்ள மௌனா லோவா (Mauna Loa,) என்ற எரிமலை, 9,170 மீட்டர் உயரம் கொண்டது. உலகில் பெரிய எரிமலை என

நீர்நிலைகளை அழிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்!

படம்
  மைக்ரோபிளாஸ்டிக்கிற்கு எதிரான போர்! நிலம், நீர்நிலைகளில் அதிகரிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் பற்றிய செய்தி புதிதல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் பல்வேறு கருவிகள் கண்டறியப்பட்டு வருகின்றன.   உலகளவில் ஆண்டுதோறும்  400 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக்குகள் உற்பத்தியாகிறது. இவை கடலில் மைக்ரோ அளவிலான துகள்களாக உடைந்து நீரை மாசுபடுத்துகிறது.  2004ஆம் ஆண்டு மைக்ரோ பிளாஸ்டிக் என்ற வார்த்தையை சூழலியலாளர் ரிச்சர்ட் தாம்சன் (richard thompson) அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்தின், கடற்புரங்களில் செய்த ஆராய்ச்சியில் பிளாஸ்டிக் துகள்களை கண்டுபிடித்து, உலகிற்கு சொன்னார். 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவைக் கொண்ட பிளாஸ்டிக் துகள்களை மைக்ரோ பிளாஸ்டிக் என அறிவியலாளர்கள் வரையறுக்கின்றனர். இவை ஆழ்கடலில், ஆர்க்டிக்  பனியில் ஏன் நமது உடலிலும் கூட உள்ளன.  2019ஆம் ஆண்டு என்விரோன்மென்டல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இதழில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மனிதர்கள் தினசரி 1 லட்சம் பிளாஸ்டிக் துண்டுகளை உண்பதாக கண்டறியப்பட்டது. மனித உடல் உறுப்புகளை, திசுக்களை பிளாஸ்டிக் சேர்மானங்களிலுள்ள வேதிப்பொ

கற்பதில் வேகம் காட்டும் தங்கமீன்!

படம்
  Gold fish - Pinterest சூழலை அறிவால் அறியும் தங்கமீன்! நீருக்குள் அலைந்து திரிந்து உணவு தேடும் மீன்களுக்கு,  சரியாக வழிதேடி அடையும் திறன் உண்டு. இதனை இஸ்ரேலில் உள்ள பென் குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு அறையில் செய்த சோதனையில் மீன்கள் எப்படி கப்பல் அல்லது வேறு வகை வாகனங்கள் எதிரே வந்தால் விலகி பாதுகாத்துக்கொள்கிறது என அறிந்தனர். இதுபற்றிய ஆராய்ச்சி, பிஹேவியரல் பிரெய்ன் ரிசர்ச் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.  ஆறு தங்க மீன்களை வைத்து அதன் திசையறியும் திறனை சோதித்தனர். சக்கரங்கள் பொருத்திய சிறு வண்டியில் மீன்தொட்டியை வைத்தனர். மீன்தொட்டியின் நடுவில் கம்பியை வைத்து, அதில் கேமராவைப் பொருத்தினர். இதன்மூலம், தங்கமீனின் இயக்கத்தை பதிவு செய்தனர். 30 நிமிடங்களுக்கு சிறுவண்டியை இயக்கி மீன்கள்  குறிப்பிட்ட திசையில் நகர்கிறதா எனப் பார்த்தனர். தொட்டியில் ரோஸ் நிற அட்டையை வைத்து அதனை நோக்கி மீனை செல்ல தூண்டினர். முதலில் கிடைத்த வெற்றி சதவீதம் 2.5 தான். பிறகு, தங்கமீனின் வெற்றி வாய்ப்பு 17.5 சதவீதமாக உயர்ந்தது.  அறையில் இடங்களை மாற்றுவது, வெவ்வேறு நிற அட்டைகளை வைப்பது, ரோஸ்

அழிந்துபோன வணிக கண்டம்! - பால்கனாடோலியா

படம்
  ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான நடுவில் உள்ள கண்டம்! அண்மையில், தோராயமாக 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கண்டம் மறைந்துபோனதாக ஆராய்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. இங்கு, ஆசிய உயிரினங்களும், தனித்துவமான தாவரங்களும் இருந்ததாக ஆராய்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.  மறைந்துபோன கண்டத்தின் பெயர், பால்கனாடோலியா (Balkanatolia). இந்த கண்டம், ஆசியா, ஐரோப்பாவிற்கு பாலமாக இருந்துள்ளது. இதன் வழியாக ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவிற்கு செல்ல முடிந்துள்ளது. ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல்நீர் பரப்பு குறைவாக இருந்த காலம் அது. அப்போதுதான் இரு பகுதிகளுக்கும் இடையில் பாலம் உருவாக்கப்பட்டது.  3.4 கோடி ஆண்டுகளுக்கு, முன்னர் ஐரோப்பாவில் உள்ள தாவர இனங்கள் இயற்கை பேரிடர் காரணமாக அழிந்துபோயின. இந்த நிகழ்ச்சிக்கு கிராண்டே கூப்பூர் (Grande Coupure)என்று பெயர். இச்சமயத்தில் ஆசிய தாவர, விலங்கு இனங்கள் மெல்ல ஐரோப்பா கண்டங்களுக்கு சென்றன.  ”தென்கிழக்கு ஐரோப்பாவிற்கு ஆசிய விலங்குகள் எப்போது, எப்படி இடம்பெயர்ந்தன என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களும் துல்லியமாக இல்லை” என்றார் ஆ

நீர்நிலைகளில் எளிதாக கழிவுகளை அகற்ற உதவும் புதுமையான கருவி!

படம்
  பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் அஸூர்!  கடல், ஆறு, ஏரி, குளம் குட்டை என அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் நிரம்பியுள்ளன. நிலத்தில் பெருகிய பிளாஸ்டிக் குப்பைகள் நீர்நிலைகளிலும் பரவத் தொடங்கி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவற்றை அகற்றுவதற்கு உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அப்படி ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம்தான் இச்தியோன்(Itchion). இந்த நிறுவனம் தயாரித்துள்ள புதிய தொழில்நுட்பம் கொண்ட கருவி மூலம் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை எளிதாக அகற்ற முடியும்.  இச்தியோன் என்ற நிறுவனத்தின் பிளாஸ்டிக் அகற்றும் கருவியின் பெயர் அஸூர் (azure). இக்கருவி நீர்நிலையில் அடிப்பரப்பில் சென்று பிளாஸ்டிக்குகளை மேலே தள்ளுகிறது. கூடவே பொருத்தப்பட்ட கேமரா மூலம் அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்களை புகைப்படம் எடுத்துக்கொள்கிறது. இதன் மூலம் தினசரி 80 டன் கழிவுகளை அகற்ற முடியும். இக்கழிவுகளை சரியான முறையில் பிரித்து மறுபடியும் பயன்படுத்தலாம் அல்லது மறுசுழற்சி ஆலைகளுக்கு அனுப்பலாம்.  இச்தியோன் நிறுவனத்தின் அஸூர் கருவி, விரைவில் ஈகுவடார் நாட்டின் காலபகோஸ் தீவில் நிறுவப்படவ

கடல்நீருக்கு வாசனை எப்படி வருகிறது? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? 1. உலகிலுள்ள கடல்கள் அதிக உப்புத்தன்மை பெறுமா? கடல்நீர் உப்பாக இருப்பதை அறிந்து இப்படி பலரும்கேட்கிறார்கள். மழைபெய்து அதில் பாறைகள் கரைந்து உப்புத்தன்மை கடல்நீரில் கூடுகிறது. உப்பில் சோடியமும், குளோரினும் அதிகமாக இருக்கும். இந்த வேதிப்பொருட்களை  சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பில் காணலாம். பல நூற்றாண்டுகளாக கடலில் உப்பு சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடலின் உப்புத்தன்மை சற்று கூடுவது உண்மை. ஆனால் ஏன் உயிரினங்கள் வாழ முடியாதபடி மாறவில்லை என யோசிக்கலாம். இப்படி அதிகரிக்கும் உப்பின் அளவு  அரை நூற்றாண்டுக்கு சில சதவீதமே கூடுகிறது. கடலில் இப்போது பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சூரியனின் வெப்பம் கூடுவதால் கடலிலுள்ள நீர் வேகமாக ஆவியாகிறது. இதன் விளைவாக கடற்கரையில் உப்பு தேங்க வாய்ப்புள்ளது. நீரின் அளவு குறைவதால் உப்பு கடல்நீரால் கரைக்கப்படுவது குறைகிறது என இங்கிலாந்து சூழலியலாளர் ஜேம்ஸ் லவ் லாக் கூறியுள்ளார்.  2. கடல் நீருக்கு அதன் வாசனை எப்படி வருகிறது? கடல்நீருக்கு தன்னளவில் எந்த வாசனையும் கிடையாது. ஆனால் அதில் உயிர்வாழும் நுண்ணுயிரிகள், உயிரினங்கள

இறந்துபோன பிணங்கள் வெடிக்குமா?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ!? பிணங்கள் வெடிப்பது சாத்தியமா? இறந்துபோனவரின் உடலில் ஏதாவது பேஸ்மேக்கர், அல்லது வேறு பொருட்கள் பொருத்தப்பட்டிருந்தால் அப்படி வெடிக்க வாய்ப்புள்ளது. மற்றபடி உடலை எரிக்கும்போது நீர்ச்சத்து குறைந்து தசைகள் இறுக்கமாகின்றன. அதனால் எழுந்து உட்கார வாய்ப்புகள் அதிகம். பிணத்தை தகனம் செய்பவர்கள் ராஸ்கோல் என தடியாலேயே நெஞ்சில் ஒரு போடு போட்டு அடக்குவார்கள். பிணம் படுத்துவிடும். மற்றபடி உடலிலுள்ள வாயுக்கள் காரணமாக உடல் வெடிக்கும் என்பது அரிதாகவே நடக்கம். அந்தளவு அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் கிடையாது.  உடல் அழுகிப்போகும் நிலையை பதப்படுத்தும் செயல் மட்டுப்படுத்துகிறது. இதனால் உடலிலுள்ள நுண்ணுயிரிகள் இறந்துபோன செல்களை தின்னும் செயல் தடைபடுகிறது. தசைகள் இறுக்கமடைந்தாலும் உடல் முழுக்க அழுகிப்போவதை தள்ளிப்போடலாம். அழுகும் உடலிலிருந்து மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு, அம்மோனியா ஆகிய வாயுக்கள் வெளியே வருகின்றன.  ஐஸால் படகு செய்து பயணிக்க முடியுமா? கேட்க நன்றாக இருந்தாலும் சாத்தியம் குறைவு. கடல் வெப்பநிலை அதிகரித்தால் ஐஸ் படகில் அல்லது கப்பலில் பயணிக்கும் பயணிகளின் கதி என்ன? இங்கிலாந்

லட்சத்தீவை சுற்றுலாதலமாக மாற்றுவது சூழலை அழிக்கும் முயற்சி! - ரோகன் ஆர்தர், கடல் சூழலியலாளர்

படம்
                L-R(5th person rogan)     மாலத்தீவு வளர்ச்சி மாடல் லட்சத்தீவுகளை அழித்துவிடும் ரோகன் ஆர்தர் கடல் உயிரியலாளர் பருவச்சூழல் பாதுகாப்பு என வரும்போது லட்சத்தீவுகள் பற்றி ஏன் அதிகம் பேசுகிறார்கள் ? அப்படியென்றால் நான் உங்களுக்கு பவளப்பாறை எப்படி உருவாகிறது என விளக்கவேண்டும் . கடலுக்கு அடியில் வளர்ந்துள்ள காடுகள்தான் பல்வேறு புயல்களையும் , அலைகளையும் மட்டுப்படுத்துகின்றன . இங்குள்ள கடல்பகுதியில் பவளப்பாறைகள் தானே வளருகின்றன . இவை வட்டவடிவில் இங்கு உருவாகி வளருகின்றன . இங்கு தொடர்ச்சியாக நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளால் பவளப்பாறைகளின் வளர்ச்சி தடைபட்டு , தானே பாதிப்பை சரி செய்யும் பணி பாதிக்கப்பட்டு வருகிறது . இந்த 1998 ஆம் ஆண்டு தொடங்கி ஆழமாகி வருகிறது . ஆய்வுகள் மூலம் அங்கு ஏற்படும் பாதிப்புகளை அடையாளம் கண்டு வருகிறோம் . லட்சத்தீவுகளை சுற்றுலாவிற்கு ஏற்றபடி மாற்றினால் இயற்கைச்சூழல் பாதிப்பு பெரிய அளவில் நடைபெறும் . இங்குள்ள கலாசாரம் , சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கான தொடர்பு எப்படியிருக்கிறது ? இங்குள்ள மக்கள் சிறப்பான கல்வி கற்றவர்

எளிதாக கிடைக்கும் பிளாஸ்டிக்!

படம்
                பிளாஸ்டிக் . இன்று சூழலியலாளர்கள் கனவிலும் கூட எதிர்த்து வரும் பொருள் . ஆனால் பிளாஸ்டிக் , புழக்கத்திற்கு வந்தபிறகுதான் மக்களுக்குத் தேவையான தினசரி பொருட்களின் விலை குறைந்தது . இன்று எந்த பொருளையும் எளிதாக எடை குறைந்த மலிவான விலையில் பிளாஸ்டிக்கால் உருவாக்க முடியும் . கச்சா எண்ணெய் , எரிவாயு ஆகியவற்றிலிருந்து பிளாஸ்டிக் பெறப்படுகிறது . கார்பன் கொண்டுள்ள மூலக்கூறுகளை பாலிமர் என்று கூறலாம் . பெரும்பாலான தொழிற்சாலை தயாரிப்பு பிளாஸ்டிக்குகளில் மோனோமர்கள் பயன்படுகின்றன . பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வது என்பது அதனை அதிக வெப்பநிலையில் உருக்கி வேறு ஒரு பொருளாக மாற்றுவதுதான் . தெர்மோபிளாஸ்டிக்குக்குகளை எளிதில் உருக்கினாலும் தெர்மோசெட் வகை பிளாஸ்டிக்குகளை இப்படி மாற்றி வேறு பொருட்களாக மாற்றுவது கடினம் . கச்சா எண்ணெய வளம் என்பது தீர்ந்துபோக கூடியது என்பதால் , கரும்பு , சோளத்திலிருந்து பயோபிளாஸ்டிக் தயாரிக்கும ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன . இதன் விளைவாக பிளாஸ்டிக்கை 3 டி பிரிண்டில் முறையில் உறுப்புகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்த முடியும் . இதிலுள்ள வக

கடல் சூழலை ஆராயும் தானியங்கி ஆய்வுப்படகு! - செயில்ட்ரோன்

படம்
  கடலை ஆராயும் செயில்ட்ரோன் ஆய்வுப்படகு! கடல் பகுதியை ஆய்வுக்கருவிகள், சாதனங்கள் மூலம் ஆராய்வது மெல்ல வேகம் பிடிக்க த் தொடங்கியுள்ளது. இதனை ஆராய்வதில் கடல் பாதுகாப்பு, இயற்கைவளம் , வணிகம் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. கடல் போக்குவரத்து, அதிலுள்ள வளங்கள், உயிரினங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்வது என்பது,  நவீன காலத்திலும் சவாலாக உள்ளது. தற்போது அமெரிக்காவில் செயில்ட்ரோன் எனும் தானியங்கி ஆய்வுப்படகு  உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் ஆய்வுகளை செய்யமுடியும் என்று கூறுகிறார்கள். இதில் ஆய்வுக்காக யாரும் பயணிக்க வேண்டியதில்லை.  செயில்ட்ரோன் 72 அடி நீளம் கொண்ட செயில்ட்ரோன், பாய்மரப் படகு போன்ற வடிவிலானது. தானியங்கி முறையில் இயங்க கூடிய செயில்ட்ரோன், தோராயமாக 3,688 மீட்டர் தூரம் கடலை ஆய்வு செய்யும் திறன் கொண்டது. காற்று மற்றும் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி ஓராண்டிற்கு இடையறாது கடலில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளலாம். இதில் பொருத்தப்பட்டுள்ள சோனார் கருவியிலிருந்து உருவாகும் ஒலி அலைகளால்  7 ஆயிரம் மீட்டர் தூரம் கடலை அளவிடலாம். செயற்கைக்கோளுடன் இணைப்பிலுள்ள செயில்

உலகில் அதிகளவு மின்சாரத்தை தயாரிக்க முடியும்!

படம்
  மில்லியன் வோல்ட் மின்சாரம்! உலகிலேயே அதிகளவு மின்சாரத்தை எங்கு தயாரிக்கலாம்? நீரில், காற்றில், சூரிய ஒளி  என்கிறீர்களா?. இப்பதில்களை ரப்பர் கொண்டு அழியுங்கள். மின்னல் மூலம்தான் அதிகளவு மின்சாரத்தை நாம் பெற முடியும்.  ஜேம்ஸ் ஃபிராங்கிளினுக்கும் கூட இது தெரியும். ஆராய்ச்சியாளர்கள் இன்றுவரை மின்னலிலிருந்து பெறும் ஆற்றலை அளவிட முயற்சித்து வருகின்றனர். நூற்றாண்டுகளாக சென்சார்களை வைத்து முயன்றும் கூட மின்னல்களை சரியான முறையில் கவனிக்க முடியவில்லை.  ஊட்டியில் ஆராய்ச்சியாளர்கள் செய்த புதிய ஆய்வு குறித்த செய்தி பிஸிகல் ரிவ்யூ லெட்டர்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு டிச.1 அன்று ஊட்டியில் நடந்த இடிமின்னல்கள் அளவிடப்பட்டன. பதினெட்டு நிமிடங்கள் நடந்த இந்நிகழ்ச்சியில் 1.3 ஜிகாவோல்ட்ஸ் மின்சாரம் கடத்தப்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது வட அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை விட பத்து மடங்கு அதிக அளவு ஆகும்.  ”இதையொட்டியே மழைமேகங்கள் ஆபத்தானவை என்கிறோம். இதில் வெளிப்படும் வெப்பத்தை நீங்கள் எதில் வெளியேற்றினாலும் அது பேரழிவாக மாறும் ” என்கிறார் டாடா அடிப்படை ஆராய்ச்சி மைய

கடல் பகுதியில் வாழும் வைரஸ்கள்!

படம்
  கடல் வைரஸ்கள்!  கடற்கரையில் நீச்சலடித்து குளிக்கும்போது, கடல்நீரை நீங்கள் குடிக்காமல் இருக்கமுடியாது. அந்த நீரில் இரண்டு லட்சம் கிருமிகள் வாழ்வதாக  ஆய்வாளர் குழு கூறியுள்ளது.  நீரில் நுண்ணுயிரிகள் வாழ்கிறது என்பது அனைவரும் அறிந்த செய்திதான். ஆனால் அவற்றின் எண்ணிக்கை பற்றி பலரும் ஆர்வம் கொண்டது 2015 ஆம் ஆண்டுதான். அப்போது, கடல் ஆராய்ச்சிக்குழு ஒன்று, 5,476 என்ற எண்ணிக்கையிலான வைரஸ்கள் கடல் நீரில் இருப்பதாக கண்டறிந்து கூறியது.  அடுத்த ஆண்டே அக்குழு, கடல் நீரிலுள்ள வைரஸ்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 222 என்று அறிவித்தது. தற்போது இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. பனிரெண்டு சதவீத அதிக வளர்ச்சி இது.  இது அழகான பிரமிக்க வைக்கும் ஆய்வு என்றார் நார்த் கரோலினா க்ரீன்ஸ்போரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரி வல்லுநர் லூயிஸ் மேரி போபே. உலகம் முழுக்க எழுபது சதவீதமுள்ள கடல்நீரை ஆராய்வது சாதாரண காரியம் அல்ல. 2015 -2016 ஆண்டுகளில் ஆர்க்டிக் பகுதிகளில் 43 இடங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.  தாரா ஓசேன் ப்ராஜெக்ட்ட

கடலில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான தங்கப் புதையல்கள்!

படம்
  கடலில் கொட்டிக்கிடக்கும் தங்கம்! ஆங்கில சாகச பயண திரைப்படங்களில் பெரும் சுவாரசியம் தருவது  புதையல் தேடும் பகுதிகள்தான்.  நிலத்தில் உள்ள தங்கப் பொக்கிஷங்களை பெருமளவு கண்டுபிடித்துவிட்டோம் ;சரி, ஆனால் கடலில் கிடந்தால் கிடக்கட்டும் என  விட்டுவிட முடியுமா? தோராயமாக கடலில் 45 ஆயிரம் டன்கள்(1 டன் - 907 கி.கி) தங்கம் கடலில் ஆதரவின்றி கிடக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  1872 ஆம் ஆண்டு வேதியியலாளர்  எட்வர்ட் சோன்ஸ்டட்(Edward  Sonstadt)  கடலில் கொட்டிக்கிடக்கும் தங்கப் புதையல்களைப் பற்றி நம்பகமான தகவல்களை உலகிற்கு சொன்னார். உடனே  ஆய்வாளர்கள், கடல்பயணிகள் ஆகியோருக்கு பொக்கிஷப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடல்நீரிலுள்ள தங்கத்தை கணக்கிட பல்வேறு செயல்முறைகள் உண்டு.  கடல் நீரில் தங்கம் உள்ளிட்ட பல்வேறு கனிமங்கள் உண்டு. அவற்றிலிருந்து தங்கத்தை  தனியே பிரிக்க அதனை ஆவியாக்க வேண்டும். இரண்டாம் வழிமுறை, அதிலுள்ள சோடியம்,  குளோரின் உப்புகளை தனியாக பிரித்தெடுக்கலாம். மூன்றாவது வழிமுறை, தங்கத்தை கரைத்து நீரிலிருந்து தனியாக எடுப்பது. இதற்கு பல்வேறு இயற்கையான கரைப்பான்களை பயன்படுத்தலாம். நான்காவது வழி

புயல்களின் வரலாறு! - அமெரிக்காவை பாதித்த புயல்களை அறிவோமா?

படம்
            புயல்களின் வரலாறு! ஒக்கிசோபீ 1928ஆம் ஆண்டு 6-21 செப்டம்பர் பலி- 4 ஆயிரம் புளோரிடாவில் இந்த புயல் ஏற்படுத்திய நிலச்சரிவு பாதிப்பு அதிகம். இதனால் பால்ம் பீச் அருகே குடியிருப்புகளில் வாழ்ந்த மனிதர்கள் இறந்துபோனார்கள். கரீபியன் பகுதியில் இதன் காரணமாக 1500 பேர் பலியான செய்தியை முன்னமே கிடைத்தும் மக்களின் இறப்பைத் தடுக்க முடியவில்லை. விவசாயம் செய்யப்பட்டு வந்த ஏரி ஒக்கிசோபீதான் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. 225 கி.மீ வேகத்தில் அடித்த புயல் காற்று அனைத்தையும் சர்வநாசம் செய்துவிட்டது. பல தொழிலாளர்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டனர். லேபர் டே புயல் 1935ஆம் ஆண்டு 29 ஆக. 10 செப்டம்பர் பலி 485 இந்த புயலை சரியாக அதிகாரிகள் கணிக்கவில்லை. எனவே 485பேர் பலியாகும்படி சூழல் உருவாகிவிட்டது. புளோரிடாவை 2ஆம் தேதி புயல் தாக்கியது. சீர்குலைந்த சாலைகளை சரிசெய்ய முதல் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீர ர்கள் அனுப்பினர். இவர்களில் 250பேர் வேலை செய்த இடத்திலேயே பலியானார்கள். காரணம் ஒருங்கிணைப்பாளர் புயலின் பலத்தை முன்னமே அறிந்திருக்கவில்லை.  கடற்பகுதியில் மனிதர்கள் உருவாக்கிய எந்த கட்டுமானமும் உடையாமல்,

கடற்கரையில் நடக்கும் போதைமருந்து வியாபாரத்தை முறியடிக்கும் லைஃப் கார்டு குழுவின் சாகசங்கள்! - பே வாட்ச்

படம்
    பே வாட்ச்  Screenplay by Damian Shannon Mark Swift Story by Jay Scherick David Ronn Thomas Lennon Robert Ben Garant Based on Baywatch by Michael Berk Douglas Schwartz Gregory J. Bonann Directed by Seth Gordon    அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள எமரால்டு பே ஏரியாவில் கதை நடக்கிறது. அங்குள்ள பே வாட்ச் எனும் ஏரியா, வசதியான ஆட்கள் வந்து இளைப்பாறும் இடம். அங்கு கடலுக்குள் சென்று சிக்குபவர்களை காப்பாற்ற அரசு லைப் கார்டுகளை பணிக்கிறது. அக்குழு தலைவர் மிட்ச் - டிவைன் ஜாக்சன், அவருடன் கிளுகிளு உடையில் இரண்டு பெண்கள் வேலை பார்க்கிறார்கள். அனைவரது வேலையும் ஒன்றுதான். யாராவது கடல் நீரில் மூழ்கினால் அவர்களை அதிலிருந்து மீட்டு கரை சேர்த்து மருத்துவ உதவியை நாடுவது.  அங்குள்ள ஹன்லி கிளப் நிறுவனத்தின் உரிமையாளரான விக்டோரியா லீட்ஸ் என்ற பெண்மணி, இந்த மொத்த கடற்கரையையும் தனது சொத்தாக்க முயல்கிறார். இதற்காக அங்குள்ளவர்களை அடித்து மிரட்டி நிறுவனங்களை கையகப்படுத்துகிறார். அதேநேரம் அங்கு போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை மிட்ச் கண்டுபிடித்து  எப்படி தடுக்கிறார் என்பதை அதிக கவர்ச்சி, குற

கடல்நீர்மட்ட உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? - அலசல் பார்வை

படம்
      cc     நகரங்களை மூழ்கடிக்கும் கடல்நீர்மட்ட உயர்வு ! 2100 ஆம் ஆண்டில் கடல் மூலமாக ஏற்படும் வெள்ள அபாயம் 48 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் தகவல் தெரிவித்துளளன . கடந்த சில ஆண்டுகளாகவே கடல்நீர்மட்டம் உயர்நது வருவதைப் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கிவிட்டன . இவை வெறும் பயமுறுத்தல் அல்ல என்பதற்கான சான்றுகளை , நாம் உலக நாடுகளில் கடற்கரையோர நகரங்கள்மூழ்குவதன் மூலம் அறியலாம் . இதுபற்றிய ஆராய்ச்சியில் 2100 ஆம் ஆண்டு கடல் அலைகள் மூலமாக கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிய வந்துளளது . இதன்மூலம் ஏற்படும் சொத்துக்களின் பாதிப்பு காரணமாக 20 சதவீத பொருளாதார இழப்பு ஏற்படும் எனறும் எப்ரு கிரெஸி , லான் யங் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சி அறிக்கையில் சுடடிக்காட்டப்பட்டுளளது . பாதிப்பைக் கட்டுப்படுத்த பசுமை இல்ல வாயுக்களை குறைக்கவேண்டும் . அடுத்து , கடல்நீர் நகரங்களுக்குள் புகாதபடி சுவர்களை கட்டலாம் என பல்வேறு ஆலோசனைகள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன . கடல்நீர் மட்டம் உயருவதற்கான முக்கிய காரணம் , வெப்பநிலை உயர்வு , துருவப்பகுதிகளில் உள்ள

மீன் பிடிப்பதைத் தடை செய்தால் என்னாகும்?

படம்
மிஸ்டர் ரோனி மீன்களைப் பிடிப்பதை தடை செய்துவிட்டால் என்னாகும்? ஓராண்டிற்கு மீன்களை நாம் இருபது கிலோகிராமிற்கு மேல் உணவாக கொள்கிறோம். ஏறத்தாழ பிற கோழி, ஆடுகளை விட அதிகமாக மீன் உணவுகளை மக்கள் சாப்பிடத் தொடங்கியுள்ளனர். இரண்டு மடங்கு வேகமாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இயற்கை நம் உணவுத்தேவைய நிறைவேற்றுகிறது. அதற்காக அதனைப் பயன்படுத்துவதும் தவறில்லை. ஆனால் அதிகளவு மீன்களை பிடித்துக்கொண்டே இருந்தால் கடல் பரப்பு கடுமையான பாதிப்பைச் சந்திக்கும். கடல் மாசுபாடும் ஏற்படும். நாற்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீன்களை பிடித்து அதன் வழியாகவே தங்கள் வாழ்வை நடத்தி வருகிறார்கள். மீன்பிடிக்க தடை விதித்தால் இவர்களின் வாழ்விற்கு அரசு வழிகண்டுபிடிக்கவேண்டும். மேற்குலகில் சிவப்பு இறைச்சியையும் சோயா பொருட்களையும் புரத  சத்திற்காக நம்பியுள்ளனர். தெற்காசியாவில் புரதம் பெறுவதற்கான மீன்களையே பெரும்பாலானோர் நம்பியுள்ளனர். இதற்காக கடலில் மீன்களைப் பிடிக்க சில மாதங்கள் தடை விதிக்கலாம். இதன்மூலம் மீன் வளம் முற்றாக அழியாமல் காப்பாற்ற முடியும். மீன் பிடிக்க செல்பவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்

தாய்லாந்தில் பிளாஸ்டிக் தடை! - 2021இல் நாடு முழுக்க அமலாகிறது

படம்
giphy தாய்லாந்தில் இந்த புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் தடை அமலாகிறது. மேலும் இந்த தடை தற்போது சிறப்பங்காடிகளுக்கும், அடுத்த ஆண்டு பிற சிறு கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. தாய்லாந்திலுள்ள ஆமைகள், மீன்கள் உள்ளிட்ட உயிரிகள் பிளாஸ்டிக்கை தவறுதலாக உண்டு செரிக்க முடியாமல் இறந்து போயின. மேலும் கடலில் கூடும் பிளாஸ்டிக் கழிவுகளையும் அந்நாட்டு அரசு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் எறிவதில் உலகளவில் எங்கள் நாடு முன்னர் மூன்றாவது இடத்தில் இருந்தது. இன்று மக்களின் ஆதரவினால் ஐந்து மாதங்களில் நாங்கள் பத்தாவது இடத்திற்கு வந்துவிட்டோம் என்று பெருமையாக பேசுகிறார் சுற்றுச்சூழல் அமைச்சர் சில்பா ஆர்ச்சா. பிளாஸ்டிக் தடை என்றால் என்ன நடக்கும்? அதேதான். நீங்கள் துணிப்பை கொண்டுபோய் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். அல்லது கடைக்கார ர்கள் கொடுக்கும் பையை காசு கொடுத்து வாங்கிப் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் தற்போது தாய்லாந்து நிலைமை. கடந்த ஆண்டில் 5,765 டன்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பயன்பாடு தற்போது பெருமளவு குறைந்துள்ளது. இன்னும் கிராம பகுதிகளில

கடல் தங்கத்தை மீட்கிறாரா ப்ரூனோ பிரேசில் - லயன்காமிக்ஸ்

படம்
சாக மறந்த சுறா லயன் காமிக்ஸ் ரூ.60 ஓவியர் - வில்லியன் வான்ஸ் - கதை க்ரெக் ப்ரூனோ பிரேசில் அதிரடிக்கும் கதை. அட்டைப்படத்தில் ஹீலியம் பலூன் அதிலிருந்து இறங்குவது போன்ற படம் இருந்தாலும் கதையில் அதுபோன்ற சம்பவங்கள் ஏதும் இல்லை. நாஜி ஜெர்மனி போரில் ஈடுபட்ட காலத்திற்கு கதை செல்கிறது. போரில் ஈடுபட்ட கப்பல் ஒன்று தங்கத்துடன் கடலில் குறிப்பிட்ட இடத்தில் கவிழ்ந்துவிடுகிறது.அதில் நாஜிப்படையினர், பெட்டி பெட்டியாக தங்கத்தை வைத்திருக்கின்றனர். அது பற்றி செய்தியை ஒருவர் கசியவிட உலகநாடுகள் அனைத்தும் உளவுத்துறையை உசுப்புகின்றன. கடலில் கிடக்கும் தங்கத்தை எடுக்கும் முயற்சிகள்தான் கதை. அமெரிக்காவில் நடக்கும் கார் விபத்து இதற்கு தூண்டுதலாகிறது. விபத்தில் காரில் பயணிக்கும் இருவர் பேருந்தோடு மோதி அங்கேயே இறந்து விடுகின்றனர். அதில் தப்பிப்பவர் முன்னாள் நாஜி தளபதி. இதுபோதாதா ப்ரூனோ பிரேசில் இந்த விவகாரத்தில் உள்ளே நுழைய? கதை தொடங்குகிறது. அங்கு உள்ள உளவுத்துறையினர் போட்டியைத் தவிர்க்க பிற நாட்டு ஆட்களை போட்டுத்தள்ளத் தொடங்குகின்றனர். அதில் முதல் முயற்சியில் தப்பிக்கும் ப்ரூனோ பிரேசில்,

கேப்டன் பிரின்ஸ் முறியடிக்கும் அபாயச் சுறா!

படம்
கேப்டன் பிரின்ஸ்! கேப்டன் பிரின்ஸ் கலக்கும்  பயங்கரப்புயல் சன்ஷைன் லைப்ரரி விலை ரூ.65 கேப்டன் பிரின்ஸ் கடல் பயணமாக செல்கிறார். அப்போது லோபோ என்ற ஒற்றைக்கண் சூதாடியைச் சந்திக்கிறார். லோபோ சூதாட்டத்தில் அமெரிக்கரை தோற்கடித்து தீவு ஒன்றை வென்றிருக்கிறார். ஆனால் அதன் பின்னால் பெரும் பழங்குடி மக்கள் பிரச்னை இருக்கிறது. இது பிரின்சுக்கு தெரியாது. பிரின்ஸ் ஓர் கடலில் வாழும் காந்தி. முடிந்தவரை போலீஸ், கைது, சூதாட்டம் என எல்லாவற்றிலும் தள்ளியிருக்க முயற்ச்சிக்கிறார். ஆனால் பார்னே எனும் அவரது தோழர் குடி, சூதாட்டத்தில் ஆர்வம் கொண்டவர். அப்படி ஒரு தீவுக்குப் போகும்போதுதான் லோபோவை அடித்து துவைப்பதைக் காண்கிறார். உடனே லோபோவுக்கு உதவுகிறார். ஆனால் போலீஸ் இவர்களை நடந்த சம்பவத்திற்கு காரணம் என்று குறிப்பிட்டு தேடி வருகிறது. உடனே பிரின்சின் கப்பலில் அடைக்கலமாகி லோபோவும் பார்னேவும் தப்புகின்றனர். அடுத்து அவர்கள் சென்றது, லோபோவுக்கு சொந்தமான தீவு. ஆனால் அங்கு பழங்குடி மக்கள் அமெரிக்கருக்கு எதிராக கடும் கோபத்தில் உள்ளனர். காரணம் அங்குள்ள பேராசைக்கார பழங்குடித்தலைவன்தான். அவன் விரிக்