இடுகைகள்

நூல் விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீலப்பட நடிகையின் சுயசரிதை- நீலப்படம் - லஷ்மி சரவணக்குமார்

படம்
  நீலப்படம் - லஷ்மி சரவணக்குமார் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் நீலப்படம் நாவல் லஷ்மி சரவணக்குமார் அமேசான்.காம்   இந்த நாவலில் நீலப்பட நடிகையான ஆனந்தி தன்னுடைய வாழ்க்கையை சொல்கிறாள். அவள் தனது வாழ்க்கையில் சந்திக்கிற மனிதர்கள் அவளை எப்படி மாற்றுகிறார்கள், சிந்தனையில், செயலில் மாற்றம் ஏற்படுத்துகிறார்கள் என்பதை, எழுத்தாளர் ல ச கு விவரித்து எழுதியிருக்கிறார். ல ச குவின் பிற நாவல்களைப் போலவே இதிலும் வலி நிறைந்த பால்ய வாழ்க்கை நீக்கமற உள்ளது. ஆனந்தி, விலைமாதுவின் மகள். அவளது தாய் காரணமாக, ஆனந்தி எப்படி சுரண்டப்படுகிறாள் என்பதை படிக்கும்போது நமக்கு ஏற்படும் வேதனை உணர்வு அளவில்லாத ஒன்று.   நீலப்பட நடிகை என்றாலும் கூட பொதுவான சமூகத்தில் நடிகையின் உடல் எப்படி ஆண், பெண் மனங்களை ஈர்க்கிறது. அதேசமயம் சங்கடப்படுத்தும்படியாகவும் மாறுகிறது. மனதில் உருவாகும் காமத்தின் வரம்புதான் என்ன, ஒரு பெண்ணை ஆண் ஏன் உடலாக மட்டும் பார்க்கிறான், அப்படி பார்ப்பவன் மனதில் உருவாகியுள்ள எண்ணம் என்ன என நிறைய கேள்விகளை எழுப்புகிறார் எழுத்தாளர் ல ச கு.   இதன் காரணமாகவே, நீலப்படம் நாவல் முக்கியமான படைப்பாகிறது

உருளக்குடி கிராமத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்! - சூல் - சோ.தர்மன் - அடையாளம் பதிப்பகம்

படம்
    சூல் நாவல் சூல் நாவல் எழுத்தாளர் சோ.தர்மன் சூல் சோ. தர்மன் அடையாளம் பதிப்பகம்   நாவலாசிரியர் சோ.தர்மன், சூல் நாவலை நீர், நீர் பாய்வதால் பயிர் பச்சைகள் எப்படி விளைகின்றன என்பதையே சூல் என அர்த்தப்படுத்தியிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உருளக்குடி என்ற ஊரின் தொன்மையும், சாதி கட்டுப்பாடுகளும் உடைந்து மெல்ல விவசாயம் என்ற தொழில் அழிவதை 500 பக்கங்களுக்கு விவரித்திருக்கிறார். நாவலில் நாம் ரசிக்கும்படியான விஷயம் என்றால், பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் திட்டுவது போல ஹாஸ்யமாக உரையாடிக் கொள்வதுதான். இதில் பாலியல் சார்ந்த விஷயங்கள் இருந்தாலும் படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. கொஞ்சம் விஷமமான விஷயங்களை போகிற போக்கில் பேசிவிட்டு போகிறார்கள். நாவலில் வரும் குப்பாண்டி, கோவிந்தசாமி விவகாரம் முதலில் இயல்பானதாக இருந்து பிறகு மெல்ல ஆன்மிகம் நோக்கி நகர்கிறது. அதற்கு பிறகு குப்பாண்டி குப்பாண்டி சாமியாக மாறுகிறார். அதற்கு பிறகு அவர் பேசுவதெல்லாம் ஆசிரியரின் மனதில் உள்ள உபதேசக் கருத்துகளைத்தான். நீர்ப்பாய்ச்சி, ஊரில் உள்ள மனைவி இல்லாத மூவரின் வாழ்க்கை, எலியன், அவரின் நண்பரான ஆசாரி, கோணக்கண்ணன், சுச

மாயத்தன்மையும் வசீகரமும் கொண்ட சிறுகதைகள் - சரீரம் - நரன்- சால்ட் பதிப்பகம்

படம்
  சரீரம் -நரன்- சால்ட் பதிப்பகம் சரீரம் நரன் சிறுகதைகள் சால்ட் பதிப்பகம் நன்றி – ஆலிவர் ஜென், திருவண்ணாமலை   2019ஆம் ஆண்டு வெளியான சிறுகதைகள். சரீரம் என்ற இத்தொகுப்பில் பதினோரு கதைகள் உள்ளன. நூலின் வடிவமைப்பு, கட்டமைப்பு மிகவும் கச்சிதமாக புதியதாக உள்ளன.   அனைத்து சிறுகதைகளும் மாயத்தன்மை கொண்டுள்ளன. கதைகளை வாசிப்பவர்கள் அதிலுள்ள மாய வசீகரத்தில் இழுக்கப்படுகிறார்கள். நூலை முழுமையாக படித்து முடிக்கும் வரை அதிலிருந்து மீள முடிவதில்லை. நூலின் முதல் கதையிலும், அமரந்தா எனும் கடைசிக்கு முந்தைய கதையிலும் அமரந்தா பாத்திரம் வருகிறது.   உடல் எனும் முதல் கதையில் சங்கரன் பார்த்த அக்காவின் உடல் எப்படி அவனை பித்து பிடிக்க வைக்கிறது என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார். அமரந்தா கதையில் அவளுக்கு எப்படி உடலே பெரும் பாரமாக மாறுகிறது என்று ஆசிரியர் காட்டியிருக்கிறார்.   அமரந்தாவின் தோழன் அபு அவளின் கை பற்றி அவளோடு சென்னை பயணப்படும் நிகழ்ச்சி, கதைக்குப் பொருத்தமானதாக அழகாக இருந்தது. அந்த காட்சியை அப்படியே காண்பது போல இருக்கிறது. இரண்டு கதையில் வரும் அமரந்தாவுமே பிறரது மனதை ஆழமாக   உள்ளே பார்

வலி, வேதனையின் வரலாற்றை விவரிக்கும் நாவல் இஸ்தான்புல் - நிலவறைக் கைதிகளின் குறிப்புகள்

படம்
    இஸ்தான்புல்  புர்கான் சென்மெஸ் துருக்கி நாவல் தமிழில் முகமது குட்டி காலச்சுவடு இந்த நாவல் இஸ்தான்புல் நகரில் வாழும் மனிதர்களை அங்குள்ள அரசு கடத்தி சிறையில் அடைக்கிறது. அடைக்கப்படும் மனிதர்கள் யாவருமே சர்வாதிகார அரசுக்கு எதிரானவர்கள். அவர்களை அடித்து உதைத்து சித்திரவதை செய்து புரட்சி இயக்கத்தை அழிக்க அரசு நினைக்கிறது. அப்படியான முயற்சியில் கைதாகும் பல்வேறு மனிதர்களின் நினைவில்தான் கதையின் பாதை பயணிக்கிறது. கதையில் இஸ்தான்புல் நகரே ஒரு பாத்திரம் போல வருகிறது. அங்கு விற்கும் பல்வேறு உணவுகள், ஏழை மக்களின் வாழ்க்கை, அவர்களுக்கு நம்பிக்கை தரும் பல்வேறு கோஷங்கள் என கதை சுவாரசியமாக உள்ளது. நாவிதன் காமோ, திமிர்த்தோ, டாக்டர், குஹெய்லன் மாமா, மாமாவின் உறவினரான இளம்பெண் என கதை நெடுக வரும் பாத்திரங்கள் குறைவுதான். நிலவறை சிறையில் வாழும் மனிதர்கள் தங்களின் கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்த்து தங்களின் கதையை வாசகர்களுக்கு முன்வைக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது, எதனால் சிறைக்கு பிடித்து வரப்பட்டார்கள், அவர்களை விட்டுச்சென்றவர்களின் வாழ்க்கை என கதை வேதனையான சித்திர

மென்மையான உணர்வுகளை மனதிற்குள் கடத்தும் கதைகள் - அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்

படம்
  அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன் சிறுகதைகள் அப்பாவின் வேஷ்டி பிரபஞ்சன் டிஸ்கவரி பப்ளிகேஷன் தொகுப்பில் மொத்தம் பதினைந்து கதைகள் உள்ளன. இதில் வாசிக்க அனைத்துமே வெவ்வேறு வகையாக மனித வாழ்க்கையை அணுகுபவைதான். நிகழ் உலகம், அமரத்துவம், குழந்தைகள் ஆகிய கதைகள் சற்றே வேறுபட்ட தன்மையைக் கொண்டுள்ளன. குழந்தைகள் கதையில் வாசு என்ற இசைக்கலைஞரிடம் வீணை பாடம் கற்க இரு இளைஞர்கள் செல்கிறார்கள். அங்கு வாசு சாரின் மகள் விதவையாகி வாழ்ந்து வருகிறாள். பிறகென்ன கதை அதேதான். பாடம் கற்க சென்றவரான பிச்சுவுக்கு காதல் பொத்துக்கொண்டு வருகிறது. ஆனால் பிச்சுவின் செயலை வாசு சார் எப்படி பார்க்கிறார், அவரின் மகள் ஜானகி எப்படி புரிந்துகொள்கிறாள் என்பதே கதையின் இயல்பை மாற்றுகிறது. இதில் வைத்தி முதலிலேயே வாசு சாரின் இயல்பைப் புரிந்துகொள்கிறான். அதனால் பிச்சு தனது காதல் பற்றி சொன்னதும், அது சிக்கலாகும் வேண்டாம். நீ காதல் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என எச்சரிக்கிறான். ஆனால் காதல் இதற்கெல்லாம் நின்றுவிடுமா என்ன? இறுதியாக என்னாகிறது, பிச்சுவின் காதல் பற்றி வைத்தி என்ன சொல்லுகிறான் என்பதுதான் முக்கியமானது. நிகழ்

சங்க கால பாடல்களை மாற்றி எழுதிய தமிழ் உரையாசிரியர்கள் - கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள் முருகன்

படம்
  கெட்ட வார்த்தை பேசுவோம் பெருமாள் முருகன் காலச்சுவடு பதிப்பகம் பக்கம் 166 எழுத்தாளர் பெருமாள் முருகன் பா.மணி என்ற பெயரில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதனை முதலில் ஒரு சிற்றிதழில் எழுதி பிறகு காலச்சுவடு மூலம் நூலாகியிருக்கிறது. அதனால்தான் இந்த நூலை நாம் எளிதாக படிக்க முடிந்திருக்கிறது என்றும் கூறலாம். கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற நூல், தமிழில் உள்ள கெட்டவார்த்தைகள் என கூறப்படும் பிறப்பு உறுப்புகள் பற்றிய சொற்களை எப்படி சங்க்காலம் முதல் இன்றுவரை மறைத்திருக்கிறார்கள் என்பதை ஆராய்கிறது. அகநானூறு, கலித்தொகை ஆகிய நூல்கள் அதன் பாடல் வடிவில் சரியாகவே இருக்கின்றன. ஆனால் அதற்கு உரை எழுதியவர்கள் வரலாற்று நினைவோடு பிற்கால மாணவர்கள் சமூகத்தினர் தம்மை எப்படி நினைவில் வைத்திருக்கவேண்டும் என யோசித்து அதை மாற்றினார்கள் என்பதை பெருமாள் முருகன் விவாதிக்கிறார். அத்தியாயத்தின் முடிவில் மேற்கோளாக காட்டப்பட்ட நூல்களையும் கொடுத்திருக்கிறார். இதன்மூலம் இந்தவகையில் ஒருவர் ஆய்வு செய்ய விரும்பினால் பணி எளிதாக இருக்கும். நூலில் அதிகம் பேசப்படுவது பெண்குறியாக அல்குல் சொல்லைப் பற்றித்தான். இதை பொருள

காந்தியை எளிமையாக அறிந்துகொள்ள உதவும் ஆங்கில நூல் - காந்தி எ ஷார்ட் இன்ட்ரொடக்‌ஷன் - ஆக்ஸ்ஃபோர்ட் பிரஸ்

படம்
  காந்தி ஒரு சுருக்கமான அறிமுகம் ஆக்ஸ்ஃபோர்ட் பிரஸ்  நூல் மொத்தம் 152 பக்கங்களைக் கொண்டது. இதில் காந்தியைப் பற்றி நாம் என்னென்ன தேவையோ  அவற்றை சுருக்கமாக அறிந்துகொள்ள முடியும். காந்தி நிறைய எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி வெறும் 150 பக்கங்களிலேயே அறிய முடியுமா என்ற அவநம்பிக்கையோடு படித்தாலும் இறுதியில் நாம் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம் என்பதே உண்மை.  நூலில் காந்தியன் அகிம்சை, சத்தியாகிரகம், அவரின் ஆன்மிக அனுபவம், நிர்வாண சோதனை, அரசுக்கு எதிரான போராட்டம், நேர்மை என நிறைய விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அனைத்தும் சுருக்கமாக என்றாலும் சில இடங்களைப் படித்துப் புரிந்துகொள்வது சற்று கடினம்தான். அந்தளவு அவரின் கொள்கைகளை ஆங்கிலத்தில் சுருக்கியிருக்கிறார்கள்.  காந்தி ஒரு சுருக்கமாக அறிமுகம் என்பது தலைப்பிற்கு ஏற்றபடி காந்தியின் அடிப்படைகளை எளிமையாக தெரிந்துகொள்ள உதவுகிறது. ஆனால் இதில் அவரின் ஆன்மிக அனுபவங்கள் பற்றிய பகுதி சற்று புரிந்துகொள்ள கடினமானவை. அதுதவிர மற்ற விஷயங்கள் சிறப்பாக எழுதப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.  கோமாளிமேடை டீம்  image pinterest good reads

மனிதர்களின் மனதில் உள்ள அக ஒளியை வெளிக்காட்டும் கதையுலகம் - சித்தன்போக்கு - பிரபஞ்சன்- காலச்சுவடு

படம்
  எழுத்தாளர் பிரபஞ்சன் சித்தன் போக்கு - பிரபஞ்சன்  தொகுப்பு - பெருமாள் முருகன்  காலச்சுவடு பதிப்பகம்  மின்னூல்  எழுத்தாளர் பிரபஞ்சன் மொத்தம் இருபது கதைகள். அத்தனையும் மனிதர்களின் மனிதநேய பக்கங்களைக் காட்டுபவைதான். இதில் பாதுகை, பாண்டிச்சேரி போர்ச்சுகீசியர்களின் நிறவெறியைக் காட்டும் கதை. பெரும்பாலும் இந்த கதையை மாணவர்கள் துணைப்பாட நூலில் படித்திருக்கவே வாய்ப்பு அதிகம்.  பெருமாள் முருகன் தொகுத்துள்ள கதைகள் அனைத்துமே திரும்ப திரும்ப படிக்கலாம் என்ற ஆர்வத்தைத் தூண்டுபவைதான். அனைத்து கதைகளுமே அப்படியான பல்வேறு மனிதநேய அம்சங்களைக் கொண்டுள்ளன. மனிதர்களின் கோபம், கீழ்மையான எண்ணங்களைத் தாண்டிய பிறர் மீதான அக்கறை வெளிப்படும் கதைகள்தான் பிரபஞ்சனின் இத்தொகுப்பின் முக்கியமான தன்மை என்று கூறலாம்.  ஒரு மனுஷி,  குமாரசாமியின் பகல்பொழுது, குருதட்சிணை, தியாகி, ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், ருசி, தபால்காரர் பொண்டாட்டி ஆகிய கதைகள் பிடித்தமானவையாக இருந்தன. இவற்றை திரும்ப திரும்ப படிக்கலாம். அந்தளவு நிறைவான வாசக அனுபவத்தைக் கொடுத்தன. இத்தொகுப்பை வாசிப்பவர்களுக்கு வேறு கதைகள் இப்படியொரு உணர்வைக் கொடுக்கலாம். அத

இந்தியாவை பிரிட்டிஷார் சுரண்டிய வரலாறு! - இந்தியாவின் இருண்டகாலம் - சசி தரூர்

படம்
  இந்தியாவின் இருண்டகாலம் சசிதரூர் தமிழில் ஜே கே ராஜசேகரன் கிழக்கு பதிப்பகம் நூலை தொடங்கும்போது, சசிதரூர் தான் இங்கிலாந்து அரசுக்கு வைத்த கோரிக்கை ஒன்றை முன்வைத்து தொடங்குகிறார். 200 ஆண்டுகளாக காலனி நாடாக இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர். இந்த ஆட்சியில் இந்தியாவை சுரண்டியதற்கு அடையாளமாக நஷ்ட ஈடு தரவேண்டும். குறைந்த பட்சம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பேசுகிறார். பின்னாளில் இப்பேச்சுக்கு ஆதரவாக எதிர்ப்பாக நிறைய கருத்துகள் எழுகின்றன.  இவற்றை முன்வைத்து நூல் மெல்ல பல்வேறு தகவல்களை பேசத் தொடங்குகிறது. அட்டையில் பிரிட்டிஷார் இந்தியாவை கொள்ளையடித்த கதை என்று சொல்லிவிட்டார்கள். அதைத்தான் நூலில் சொல்லுகிறார். வித்தியாசம் என்னவென்றால், பிரிட்டிஷார் இந்தியாவுக்கு நிறைய வசதிகளைக் கொடுத்ததாக பலரும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி எதுவும் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்தது என்பதற்கு இந்தியா நிறைய விலை கொடுத்திருக்கிறது என்பதை சசிதரூர் பல்வேறு ஆதாரங்கள் வழியாக விளக்குகிறார்.  ரயில்வே, சட்டம், நிர்வாக முறைகள் ஆகியவற்றை பிரிட்டிஷாரின் கொடை என்பார்க்ள். இன்று நூலை நன்கொடை என பெரிய விலை போட்டு விற்கிறார்க

எழுத்து திறமையை வளர்த்துக்கொண்டு சாதிக்கும் வேதாந்தம்! - மிஸ்டர் வேதாந்தம் 2 - தேவன்

படம்
  மிஸ்டர் வேதாந்தம் 2 தேவன் அல்லயன்ஸ்  மிஸ்டர் வேதாந்தம் நூலின் இரண்டாவது பாகம்.  முதல் பாகத்தில் வேதாந்தம், தலைமுறையாக பணக்காரனாக இருந்தாலும் மெல்ல குடும்ப நிலையை உணர்கிறான். ஆனால் அதற்குள் நிலைமை கைமீறிப்போகிறது.  தஞ்சையில் இருந்த அப்பா தேசிகாச்சாரி, பணத்தை கௌரவமாக செலவிட்டு நிறைய கடன்களுக்குள் சிக்கியிருக்கிறார். அதனை பையனுக்கு நேரடியாக சொல்லாமல் தவிர்க்கிறார். படிப்பில் அவன் பட்டம் பெற்றால், தனது வாழ்க்கையைப் பாரத்துக்கொள்வான் என நினைக்கிறார். ஆனால் வேதாந்தத்தின் மனம் படிப்பில் செல்லவில்லை. அவனுக்கு எழுதுவதில் திறமை உள்ளது. அதனை வளர்த்துக்கொண்டு வேலையைத் தேடலாம் என நினைக்கிறான்.  தேசிக்காச்சாரியின் உடல்நிலை கெடும்போது, அவனது நிதிநிலை அவனது மாமா கோபாலசாமி அய்யங்காருக்கு தெரிய வருகிறது. அவருக்கு தேசிகாசாரியின் பணத்தின் மீது ஆசை. தனது பேத்திகளில் ஒருத்திக்கு வேதாந்தத்தை மணம் செய்து கொடுத்தால்,  சொத்து கிடைக்கும் என நினைக்கிறார். ஆனால் தேசிகாச்சாரிக்கு கடன் மட்டுமே இருக்கிறது என தெரிந்ததும், கடன்காரர்களோடு சேர்ந்து கூடி சொத்தை சூறையாடுகிறார். இதனால் வேதாந்தம் அத்தையோடு தங்கியிருக்கிறான

தனித்தமிழை வளர்க்க தன்னை அர்ப்பணித்த தமிழ் அறிஞர்! - மறைமலையடிகள் கடிதங்கள்

படம்
  மறைமலையடிகள் படம் - புதிய தலைமுறை மறைமலையடிகளின் கடிதங்கள் தமிழ் மின்னணு நூலகம் மறைமலையடிகள், தமிழ்த்தொண்டு ஆற்றியவர். தனித்தமிழில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். சொற்பொழிவுகளையும் ஆற்றியவர்.  அவர் இந்த நூலில் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளார். இதில் அவரே முந்தைய பக்கங்களில் குறிப்பொன்றை குறிப்பிடுகிறார். அஞ்சலட்டையில் ஆங்கிலத்திலும், இன்லேண்ட் தாளில் தமிழிலும் எழுதுவேன் என்று. எதற்காக இந்த விதி என்று புரியவில்லை.  அவரது காலத்தில் அவருக்கான சில நெறிமுறைகளோடு வாழ்ந்திருக்கிறார் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.  1920 தொடங்கி 1950 ஆம் ஆண்டு வரையில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. இவை முறையாக ஆண்டு கணக்கில் தொகுக்கப்படவில்லை. எனவே நடைபெறும் சம்பவங்கள் தாறுமாறாக இருக்கும் என்பதால் வாசகர்களே மனதில் தொகுத்துப் பார்த்து புரிந்துகொண்டு சிவனை  மனதில் நினைத்து வாசிக்க வேண்டியதுதான்.  கடிதங்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு எழுதப்படுபவைதான். அதனை நூலாக தொகுக்கும்போது குறிப்பிட்ட நபரின் பெயரைக்கூட எடுத்துவிட்டால் அதனை வாசிப்பவர்கள் எப்படி பொருந்திப் பார்ப்பார்கள் என்று புரியவில்லை. இந்த

எழுத்தை நம்பி சென்னைக்கு வரும் தஞ்சாவூர் இளைஞனின் போராட்டம்! - மிஸ்டர் வேதாந்தம் - தேவன்

படம்
  மிஸ்டர் வேதாந்தம் - 1 தேவன் மிஸ்டர் வேதாந்தம் முதல் பாகம் தேவன் அல்லயன்ஸ்  வேதாந்தம் என்ற இளைஞனின் வாழ்க்கை, தடாலென ஒரேநாளில் கீழே விழுகிறது. அதற்குப் பிறகு அவன் தனது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறான் என்பதே நாவலின் மையம்.  தினந்தந்தியின் திரைவிமர்சனம் போல கதையின் கரு இதுதான் என்று சொன்னாலும் கூட நாவல் நெடுக வேதாந்தத்தின் மனநிலையை விவரிப்பது கடினமானது. சில பக்கங்களை வாசித்து விட்டு மெல்ல அவரின் மனநிலையோடு இணையும்போது நாவலை ரசிக்கத் தொடங்குகிறோம்.  தஞ்சாவூரில் வாழும் தேசிகாச்சாரி என்பவரின் மகன் வேதாந்தம். இவரின் பணம், செல்வாக்கு காரணமாக ஊரில் பெரிய மதிப்பு உண்டு. ஆனால் அவரை உண்மையாகவே மதிப்பவர்கள் குறைவு என்பதை அவர் மறைவின்போது, வேதாந்தம் கண்டுகொள்கிறான். அவனுக்கு அந்த சூழலில் ஆதரவு தருவது அவனது அத்தையும் அவளது பெண்ணான செல்லமும்தான். அத்தங்காள் செல்லம் என்றே கடிதங்களில் வருகிறது. அப்படியே வைத்துக்கொள்வோம் அழகாக இருக்கிறது அல்லவா? தேசிகாச்சாரிக்கு கிடைத்த பணம் அவரை ஆணவம் கொண்டவராக மாற்றுகிறது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பணத்தை செலவு செய்கிறார். குறிப்பாக அவரது மாமா கோபாலசாமி அய்

ஓராண்டு இடைவெளியில் சமூகத்தை கற்ற சிறுவனின் கல்வி! - தெருக்களே பள்ளிக்கூடம் - ராகுல் அல்வரிஸ்

படம்
  ராகுல் அல்வரிஸ் - தெருக்களே பள்ளிக்கூடம் தெருக்களே பள்ளிக்கூடம் ராகுல் அல்வரிஸ் தமிழில் - சுஷில்குமார்  தன்னறம் நூல்வெளி ரூ.200 பக்கங்கள் 203 பொதுவான கல்விமுறையில் நாம் படித்து நிறுவனத்தில் வேலைக்கு செல்லலாம். ஆனால் இதில் நாம் கற்பவை பெரும்பாலும் உதவாது. அவை கல்வி சான்றிதழில் இருக்கும். நேரடியாக வாழ்க்கையில் அவை பெரிய பங்காற்றாது. இப்போது கல்லூரி படிப்பவர்கள் பெரும்பாலானோர்க்கு அவை கல்யாணப் பத்திரிக்கையில் குறிப்பிட உதவுகிறது. பெருமைக்கு மட்டுமே.  இதைத்தாண்டி நடைமுறை வாழ்க்கையைக் கற்க நாம் வெகுதூரம் செல்லவேண்டியிருக்கிறது. பள்ளி, கல்லூரி என மூடிய வகுப்புகளைத் தாண்டி சாளரம் திறந்தால்தான் சூரிய ஒளி, காற்று என வெளிப்புற சூழல்களை உணரமுடியும்.  கோவாவைச் சேர்ந்த ராகுலும் அப்படித்தான் தனது படிப்பை அமைத்துக்கொண்டார். ஜூன் 1995 முதல் ஜூன் 1996 என பள்ளிப்படிப்பில் சிறு இடைவெளி எடுத்துக்கொண்டார். இந்த இடைவெளியில் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென என்பதை தெருக்களே பள்ளிக்கூடம் நூல் விவரிக்கிறது.  ராகுல் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் தனது உறவினர்கள், நண்பர்கள் போல கல்லூரியில் சேரவில்லை. அதில்

புதிய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் ஜெயமோகன்! - எழுதுக - ஜெயமோகன்

படம்
  எழுதுக - ஜெயமோகன் எழுதுக ஜெயமோகன் தன்னறம் நூல்வெளி கவிதை, கட்டுரை, புனைவு ஆகியவற்றை எழுதுபவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் தோன்றும். இதைப்பற்றி யாரிடம் கேட்பது என்றும் தெரியாது. இப்படி இருப்பவர்கள், பின்னாளில்  தொழில் சார்ந்து சென்றுவிடுவார்கள். ஆனால் அவர்களின் மனதில் உள்ள  இலக்கிய ஆசை மெல்ல மங்கி மறைந்துவிடும்.  ஜெயமோகன், தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டுதான் இலக்கிய வேலைகளையும் செய்தார். அவர் தனது வாழ்க்கையில் இலக்கியத்தை முக்கியமாக எடுத்துக்கொண்டு அதனை மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்தார். இதனால் தொழில்சார்ந்த வாழ்க்கையில் பதவி உயர்வு, அதிகாரம் ஆகியவற்றுக்கு முயற்சிக்கவில்லை. இதனால் அவர் இலக்கியத்தில் சமகாலத்தில் முக்கியமான எழுத்தாளராக உள்ளார்.  யாருக்குமே தொடக்க காலத்தில் எழுதும்போது நிறைய சந்தேகங்கள் வரும். அப்படி ஜெயமோகன் தளத்தில் கேள்வி கேட்டவர்களில் சிலரை தேர்வு செய்து, அதற்கு பதிலளித்து அதனை நூலாக தொகுத்துள்ளனர். இதைப் படிக்கும்போது ஒருவருக்கு எழுத்து தொடர்பான சந்தேகங்கள் ஓரளவுக்கு குறையும். தீரும்.  எழுத்து தொடர்பாக சில பழக்கங்களை ஜெ. பின்பற்றுகிறார். அதனைக் கூ

ஹோமியோபதி என்னென்ன நோய்களைத் தீர்க்கும் என்பதை விவரிக்கும் நூல்!

படம்
        ஹோமியோபதி டாக்டர் விஜய் ஆனந்த் கிழக்கு பதிப்பகம் இந்திய அரசு மெல்ல அலோபதி மருத்துவமுறைக்கான ஊக்கத்தை குறைத்து இந்திய மருத்துவமுறைகளுக்கு திரும்பி வருகிறது . ஆயுர்வேத மருத்துவர்கள் இனி வரும் காலத்தில் அறுவை சிகிச்சைகளும் செய்யக்கூடும் எனும்படியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது . அலோபதிக்கு நிகரான பல்வேறு மருத்துவ முறைகளில் ஹோமியோபதியும் ஒன்று . இந்த நூலில் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை விவரித்து அதன் அறிகுறிகளை தெளிவுபடுத்தி அதற்கான ஹோமியோபதி மருந்துகளின் பெயர்களையும் பரிந்துரைத்துள்ளார் மருத்துவர் . இதனால் நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களையும் அறிகுறிகளையும் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது . பிற மருத்துவமுறைகளை அறிந்துகொள்வது சில நோய்களைத் தீர்க்க உதவும் என நம்பலாம் . இனி வரும் காலத்தில் ஒரே மருத்துவமுறையில் நோய்களுக்கான தீர்வுகளைத் தேடுவது கடினம் . அனைத்து மருத்துவமுறைகளையும் இணைத்து அதற்கான கருவிகளையும் மருந்துகளையும் பயன்படுத்துவது புத்திசாலித்தனம் . ஹோமியோபதி மருத்துவம் பற்றிய நூல் இந்த நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது . இதில் ந

இஸ்லாமிய நாடாக மாற்றப்பட சிரியா நாடு சிதைக்கப்படுகிறது! - சமர் யாஸ்பெக்கின் நூல்

படம்
                பயணம் சிரியாவின்  சிதைந்த இதயத்தை நோக்கி சமர் யாஸ்பெக் தமிழில் ஶ்ரீதர் ரங்கராஜ் சிரியா நாட்டிற்குள் மூன்றுமுறை சென்று வந்த பத்திரிகையாளரும் சிரிய நாட்டவருமான சமர் யாஸ்பெக் என்ற பெண்மணியின் களப்பணி அனுபவங்கள்தான் நூலாகியிருக்கிறது . சிரியாவில் எப்படி ஜனநாயக ஆட்சி மலராமல் இஸ்லாமிய குழுக்கள் பார்த்துக்கொள்கின்றன , உலக நாடுகள் போரை எப்படி ஊக்குவிக்கின்றன , இதனால் அங்கு அழியும் சுன்னி - ஷியா மக்களின் வாழ்க்கை , அரசுப்படைகளின் தீவிரமான வன்முறை என பல்வேறு விஷயங்களை நெஞ்சை உருக்கும் எழுத்துக்களின் வழியாக பேசுகிறார் எழுத்தாளர் . ஐஎஸ்ஐஎஸ் குழுக்கள் , நூஸ்ரா முன்னணி , அல்ஹார் என பல்வேறு மதவாத குழுக்கள் கூட்டணி அமைத்து வெளிநாட்டு வீரர்களை உள்ளே கொண்டு வந்து சுதந்திர குடியரசு படைகளைக் கொன்று அரசு படைகளோடு உள்நோக்கத்தோடு போராடுவதும் , வென்ற பகுதிகளில் சிறுபான்மையினரான கிறிஸ்துவர்கள் , அலாவித்துகளை அடித்து விரட்டுவதுமான காட்சிகள் திகிலை ஏற்படுத்துவன . மதவாத அமைப்புகள் எப்படி அறக்கட்டளை வழியாக மக்களின் வாழ்க்கைக்குள் புகுந்து அவர்களை கட்டாய இஸ்