இடுகைகள்

நேர்காணல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊழல், மோசமான நிர்வாகத்திலிருந்து பஞ்சாப்பை ஆம் ஆத்மி மீட்கும்! - ஹர்பால்சிங் சீமா

படம்
  ஹர்பால்சிங் சீமா ஹர்பால் சிங் சீமா ஆம் ஆத்மி தலைவர், பஞ்சாப் சிரோமணி அகாலிதளம் கட்சி, இத்தேர்தல் சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மிக்கு இடையில்தான் நடக்கிறது என கூறியிருக்கிறது. காங்கிரசிடமிருந்து பதினைந்து சீட்டுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? காங்கிரஸ், சிரோமணி என இரண்டு கட்சிகளும் பதினைந்து இடங்களை பிடிக்கும் என நினைக்கிறேன். முழு கிராமங்களுமே ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கும். இதற்கு காரணம், மோசமான நிர்வாகம், ஊழல்தான். மக்கள், அகாலி, காங்கிரஸ கட்சியினரின் மோசமான ஊழல்களை பார்த்துவிட்டார்கள். மக்கள் ஆம் ஆத்மியைத் தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டார்கள்.  ஆனால் ஆம் ஆத்மி என்பது டெல்லியைச் சேர்ந்த கட்சிதானே? அது பஞ்சாப்பைச் சேர்ந்தது அல்லவே? இது தவறானது. நான் அகாலி கட்சியினரைக் கேட்கிறேன். அவர்களது கூட்டணி கட்சி எங்கிருந்து வந்தார்கள்? பாஜகவின் தலைமையகம் கூட டெல்லிதானே? ஆம் ஆத்மியின் தலைமையகம் டெல்லியில் இருப்பதில் என்ன பிரச்னை? ஆம் ஆத்மி என்பது தேசிய கட்சி. அதன் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் முதல்வராக இருக்கிறார். நாங்கள் வெளிநபர் என எதிர்க்கட்சிகள்

மணிரத்னம் என்ற இயக்குநரின் படங்களை புரிந்துகொள்ள உதவும் நூல்! பரத்வாஜ் ரங்கனின் மணிரத்னம் படைப்புகளுடன் ஓர் உரையாடல்!

படம்
                  மணிரத்னம் படைப்புகளுடன் ஓர் உரையாடல் பரத்வாஜ் ரங்கன் கிழக்கு பதிப்பகம்    மணிரத்னம் எப்படி தன் படங்களை உருவாக்குகிறார் , பிறரது படங்களிலிருந்து தனது படங்களை எப்படி வேறுபடுத்துகிறார் ,. படத்தின் மார்க்கெட்டிங்கை யார் செய்கிறார்கள் , படத்தின் ஒளிப்பதிவுக்கென என்ன உத்திகளை பயன்படுத்துகிறார் , பல்வேறு மொழிகளில் படங்களை உருவாக்குவது அவருக்கு எப்படி எளிதாக இருக்கிறது என ஏராளமான கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார் மணிரத்னம் . அதிகம் பேசாதவர் . இருளும் ஒளியும் மாயம் செய்யும் படங்களிலும் வசனங்கள் நறுக்கென இருக்கும் . எப்படி இந்த மாயத்தை செய்கிறார் என்பதை ஏராளமான கேள்விகளைக் கேட்டு பரத்வாஜ் ரங்கன் கேட்டு எழுதியிருக்கிறார் . வெறும் படங்களை மதிப்பீடு செய்யும் புத்தகமாக தொடங்க திட்டமிட்டு உரையாடல் வடிவில் நூலை வடிவமைத்துள்ளது நல்ல ஐடியா . அனுபல்லவி தொடங்கி ராவணன் வரையிலான பல்வேறு பட அனுபவங்களை மணி எளிமையாக பகிர்ந்துகொள்கிறார் . இதில் பரத்வாஜ் ரங்கனிடம் கோபப்படும் இடங்களும் உண்டு . குறிப்பாக குறியீடுகளைப் பற்றி பாம்பே , ராவணன் படங்களை

இணையத்தில் உள்ள அடிப்படைவாதிகள் அசாதாரணமானவர்கள்!

படம்
2019ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச்சில் அடிப்படைவாதி ஒருவர் மசூதிகளின் மேல் தாக்குதல் நடத்தினார். மேலும் இத்தாக்குதலை திறமாக திட்டமிட்டு பேஸ்புக்கில் லைவ் செய்தார். இத்தாக்குதலை பல்வேறு தரப்பினரும்  பார்த்து அதிர்ந்து போனார்கள். வெளிப்படையாக வெளியுலகில் இருக்கும் அடிப்படைவாதிகளை விட இணையத்தில் உள்ள அடிப்படைவாதிகளின் அளவும் எண்ணிக்கையும் அதிகம். இவர்கள் நடத்தும் தாக்குதல்களை அனைவரும் பார்க்கும்படியாகவும் செய்கிறார்கள். இந்த நூற்றாண்டில் நாம் தொலைத்த முக்கியமான விஷயம். குற்றவுணர்வுதான். தனது சந்தோஷம் முக்கியம் என யாரையும் பலிகொடுக்கத் தயங்காத ஆட்கள் உருவாகி வருகிறார்கள். இவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஜூலியா எப்னரிடம் பேசினோம். இணையத்தில் ஒளிந்துள்ள தீவிரவாதிகளைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்ததா? அவர்களைக் கண்டறிவது மிகவும் கஷ்டம். காரணம், அவர்கள் படுகொலை செய்வது பற்றிய வீடியோ ஒன்றை வெளியிடுகிறார்கள். அதனைக் கண்டறிந்து நீக்குவது மிகவும் கடினம். ஒரு லிங்கை நீங்கள் நீக்கினால் மூன்று லிங்குகளை புதிதாக உருவாக்குகிறார்கள். ட்விட்டர், பேஸ்புக் எ

இந்தியா மேலும் சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்!

படம்
பூனம் கேத்ரபால் சிங், உலக சுகாதார நிறுவனம் (கிழக்கு ஆசியா இயக்குநர்) இந்தியாவில் இரண்டுபேர் கோவிட் 19 பாதிப்பால் இறந்துள்ளனர். இதுபற்றி உங்களது கருத்து என்ன? இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு இருவரை பலி வாங்கியுள்ளது. பொதுவாகவே வயதான ஆட்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும்  கோவிட் -19 பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பு இன்று உலகில் ஏற்படுத்தியுள்ள பொருளாதார இழப்பும், உயிரிழப்பும் அதிகம். மத்திய அரசு கோவிட் 19 யை தேசியப் பேரிடர் என்று அறிவித்து, பல்வேறு பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடை செய்துள்ளது நோயின் பரவலைத் தடுக்கும். இது நல்ல முயற்சி என்பேன். புதிதாக நோய் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் என்ன செய்யவேண்டும்? சமூகத்திலிருந்து இனி மக்கள் கொஞ்ச காலத்திற்கு விலகி இருக்கவேண்டும். நுரையீரலை இந்த வைரஸ் பாதிப்பதால், சளி, தும்மல் மூலம் கொரோனா பிறருக்கு எளிதாக பரவும். எனவே மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில்  கூடுவதைத் தவிர்த்தாலே பிரச்னை கிடையாது. வைரஸ் எளிதாக பரவுவதையும் தடுக்க முடியும். உலக சுகாதார நிறுவனமும் பல்வேறு நாடுகளுக

கோவிட் -19 பாதிப்புக்கு பயப்படத் தேவையில்லை!

படம்
நேர்காணல் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் இந்திய அரசு எப்படி மாநில அரசுகளோடு இணைந்து கோவிட் 19 வைரஸ் பாதிப்பை குறைக்க  எப்படி முயல்கிறது? நாங்கள் ஹோலிப்பண்டிகை சமயத்தில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் அரசுகளோடு தொடர்பு கொண்டோம். மாநில அரசின் சுகாதாரத்துறை செயலாளர்களையும், அதிகாரிகளையும் அழைத்து அவர்களோடு கோவிட் 19 சூழல் பற்றி விவாதித்துள்ளோம். மேலும், நோய் தொற்றாமல் இருப்பதற்கான மருந்துகளையும் மாஸ்க்குகளையும் மாநில அரசுகளுக்கு கிடைக்குமாறு செய்துள்ளோம். இந்த நோயை எதிர்கொள்ளும்படி இந்தியாவிடம் வசதிகள் உள்ளதா? புனேவில் உள்ள என்ஐவி ஆய்வகம் வைரஸ்களின் மூலக்கூறுகளை ஆராய்வதில் புகழ்பெற்றது. அதன்மூலம் இந்தியா முழுக்க 52 ஆய்வகங்களை அமைத்து கோவிட் -19 மாதிரிகளை பெறுமாறு செய்துள்ளோம். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது. வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராட பாராமிலிட்டரி படைகளை அனுமதிக்கும் எண்ணம் உள்ளதா? பிரதமர் மோடி இதற்கான விஷயங்களை கவனமாக கண்காணித்து வருகிறார். அனைத்து அமைச்சகங்களிலும் இதுபற்றிய விவரங்களைக் கேட்டுள்ளார். நாங்கள் அனைத்து முதல்வர்களுக்கும் இதுபற

அகதிகளை க்ரீசில் அடித்து உதைக்கின்றனர்.! - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

படம்
நேர்காணல் பில் ஃபிரெலிக், அகதிகள் மறுவாழ்வு இயக்கத்தின் தலைவர் அண்மையில் க்ரீஸ் தனது நாட்டிற்குள் அகதிகள் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதே நேரத்தில் துருக்கி அகதிகளை அனுமதிக்கும் முயற்சியை எடுத்து வருகிறது. க்ரீசில் உள்ளே வரும் அகதிகளை அடித்து நொறுக்கி வெளியே வீசி எறிய ஆட்கள் தயாராக ஆயுதங்கள் உள்ளனர். அங்குள்ள நிலைமை பற்றி பில் நம்மிடம் பேசினார். நீங்கள் முன்னர் வந்ததற்கும் இப்போதைக்கும் லெஸ்போஸ் தீவில் என்ன மாதிரியான நிலைமை உள்ளது? நான் இத்தீவிற்கு 2016ஆம் ஆண்டு வந்தேன். அப்போது காணப்பட்ட நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் முக்கியமான வேறுபாடு உள்ளது. அது சட்டதிட்டங்களே இல்லாத நிலமாக இன்று மாறியுள்ளதைத்தான் சொல்லவேண்டும். முதலில் அங்குள்ள மொரியா கேம்பின் அளவு 3 ஆயிரம் மக்களைத்தான் தங்க வைக்க முடியும். ஆனால் இன்று அங்கு 20 ஆயிரம் பேரைத் தங்க வைத்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை மெல்ல அதிகரித்து வருகின்றனர். இது அநீதி அல்லவா? ஐரோப்பிய யூனியன் கண்காணிக்கும் பகுதியில் இந்த நிலைமை. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த தீவுக்கு சுற்றுலா வருவது வாடிக்கை. அத்

சமூக வளர்ச்சிக்கு உதவும் திட்டம்தான் காலை உணவு வழங்கும் திட்டம்!

படம்
சென்னையில் காலை உணவுத்திட்டத்தை தமிழக அரசு அக்சயா பாத்ரா அமைப்புடன் இணைந்து தொடங்கியுள்ளது . பெங்களூருவைச் சேர்ந்த இந்த அமைப்பு பல்வேறு மாநிலங்களுடன் இணைந்து பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவுத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது . அமைச்சர் வேலுமணி இத்திட்டம் பற்றி ட்விட்டரில் முன்னமே அறிவித்தாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி எந அறிவிப்பையும் வெளியிடவில்லை . அக்சய பாத்ரா அமைப்பின் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கட்டிடம் பேசினோம் . தமிழ்நாடு அரசு மதிய உணவுத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது . அதுபற்றிய உங்கள் கருத்து ? தமிழ்நாடு அரசின் மதிய உணவுத்திட்டம் பல்வேறு மாநிலங்களுக்கும் முன்னோடியான திட்டமாக உள்ளது . இதைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்களும் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன . உங்களது அமைப்பு இந்தியாவில் உள்ள பன்னிரண்டு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது . ஆனால் தமிழகத்தில் உங்களுக்கென சமையல் செய்ய ஒரே ஒரு சமையற்கூடம்தானே உள்ளது ? நாங்கள் வரும் மார்ச்சிலிருந்து சென்னை கார்ப்பரேஷன் அமைப்புடன் இணைந்து 5, 090 மாணவர்களுக்கு நாங்கள் கா

அகற்ற முடியாத கறையை ஊழல்கள் ஏற்படுத்தின - மான்டேக் சிங் அலுவாலியா

படம்
நேர்காணல்  மான்டேக் சிங் அலுவாலியா நலின் மேத்தா, சஞ்சீவ் சங்கரன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதல் ஏழு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் என்கிறீர்கள். அப்புறம் ஏன் வளர்ச்சி வீழ்ந்தது? முதல் ஏழு ஆண்டுகளில் வளர்ச்சி நாங்களே நினைத்துப் பார்க்க முடியாதபடி இருந்தது உண்மைதான். ஆனால் அதற்குப்பிறகு அதாவது 2011இல் ஐரோப்பாவில் பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்பட்டன. அந்த பாதிப்பினால் அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கவிருந்த திட்டங்கள் தள்ளிப்போயின. அச்சூழலிலும் காங்கிரஸ் உள்நாட்டு உற்பத்தியை வைத்து சமாளித்தது. ஆனால் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்பட்ட ஊழல்கள், ஆட்சிக்கு அகற்றமுடியாத களங்கத்தை ஏற்படுத்தின.  2014 தேர்தல் காலத்தில் இந்த விஷயங்கள் அனைத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக மாறிவிட்டன. பொருளாதார வளர்ச்சி, ஏற்றம், இறக்கம். வீழ்ச்சி என்பது தொடர்ச்சியான விளைவுதான். தொலைத்தொடர்புத்துறையில் கிடைத்திருக்க வேண்டிய அதீத லாபம் பற்றி தணிக்கைத்துறை சொன்னது மிகப்பெரிய சர்ச்சையானது. உலகில் அலைக்கற்றை விவகாரத்தில் தீர்க்கமான விதிகளைக் கொண்டு ஏலம் எங்கு

இசையை திட்டமிட்டு உருவாக்குவதில்லை! - ரோஜர் ராபின்சன்

படம்
ரோஜர் ராபின்சன் கவிஞர் ரோஜர் ராபின்சன், தனது கவிதைகளுக்காக (தி போர்ட்டபிள் பாரடைஸ்) டி.எஸ். எலியட் பரிசை வென்றிருக்கிறார். அவரிடம் அவருடைய படைப்பு பற்றி பேசினோம்.  பரிசு வென்றது எப்படியிருக்கிறது? நான் கவிதை எழுதிவிட்டு அதற்கு பரிசுகளை எல்லாம் எதிர்பார்க்கவில்லை. கிடைத்திருப்பது மகிழ்ச்சி. முடிந்தளவு என்னுடைய கவிதைகளை மக்கள் வாசிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இப்பரிசு மூலம் கவனம் ஈர்க்கப்பட்டு மக்கள் கவிதைகளை வாசித்தால் நல்லது.  எலியட் கூட அமெரிக்காவில் பிறந்தவர்தான். ஆனால் அவர் வாழ்ந்தது முழுக்க இங்கிலாந்தில். அதேபோல நீங்கள் இங்கிலாந்தில் பிறந்து டிரினாட்டில் சிறுவனமாக இருக்கும்போது சென்றிருக்கிறீர்கள்.  பின்னர், இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறீர்கள். படைப்புக்கு எந்த இடம் வசதியாக இருக்கிறது.  படைப்புக்கு டிரினாடுதான் சரியான இடம். ஆனால் இங்கிலாந்தில் வணிகச்சந்தை உள்ளது. பதிப்புக்கான பல்வேறு வாய்ப்புகள் இங்குள்ளன.  உங்களை கார்டியன் பத்திரிகை டப் கவிஞர் என்று அழைத்திருக்கிறதே? முன்னர் சில டப் ஆல்பங்களை நான் செய்திருக்கிறேன். அதனால் மக்கள் என்னை இப்பெயர

இயற்கைக்கும் பெண்ணுக்கும் தொடர்பு உண்டு!

படம்
நேர்காணல் கிறிஸ் குவோமோ, சூழலியலாளர் பெண்கள் இயற்கையோடு இணைந்தவர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள் எப்படி? நீங்கள் பெண்ணை அவளின் பொறுமை, பாதுகாக்கும் குணம் ஆகியவற்றை வைத்து இயற்கையோடு இணைக்கிறீர்கள். நானோ மனிதர்கள் அனைவரும் இயற்கையை சார்ந்து அதிலிருந்து அறிவைப் பெற்று தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைக் காண்கிறேன். இதில் பெண்கள் அர்ப்பணிப்பாக பணிகளைச் செய்கிறார்கள் இங்கு நான் சொல்வது பெண்ணின் பணிகளை மட்டுமே. அவர்களை உடல்களாக கருதி, இயற்கையோடு இணைக்கவில்லை. பெண்கள் உலகை வேறுவிதமாக பார்க்கிறார்கள் என்கிறீர்களாழ ஆமாம். கடந்த இருநூறு ஆண்டுகளாக நாம் காலனியாதிக்கத்தால் அவதியுற்றோம். இன்று முதலாளித்துவத்தால் மறைமுகமாக பிரச்னைகளுக்கு உள்ளாகிறோம். பெண்கள் இக்காலகட்டங்களில் தங்களுக்கான பிரச்னைகளை தீர்க்க முனைந்திருந்தார்கள். அதாவது பாலின பாகுபாடு, சமூகப் பிரச்னைகள், சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த உழைத்து வந்தனர். ஆனால் இருநூறு ஆண்டுகளில் இவர்களை அமைப்புகளை உருவாக்க வைத்திருந்தால் பருவநிலை மாறுபாடுகளை நாம் சந்திக்கும் நிலை வந்திருக்காது. இப்படி உருவாக்கப்படும் தொழிற்சாலைகளை அவர்கள்

இலங்கையின் வளர்ச்சிக்காக மகிந்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!

படம்
இலங்கையில் அதிபர் தேர்தலில் மகிந்தா ராஜபக்சே தேர்வாகியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிராக போராடி வென்று சிங்கள இனவாத த்திற்கு உறுதுணையாக நின்றவர் இவர். இவரின் வெற்றி பற்றி இலங்கையில் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநர்  அசங்கா அபேயாகூனசேகராவிடம் கேட்டோம். இலங்கையில் மகிந்தா அதிபராகியுள்ளார். இந்நிலையில் டெல்லி - கொழும்பு உறவு எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்? மகிந்தா, டெல்லியுடன் சிறப்பான உறவைப் பேணுவதாக முன்னமே கூறிவிட்டார். அதிபரான நிலையில் இதில் சில மாறுபாடுகள் நடக்கலாம். மகிந்தா முன்னமே இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பணிபுரிந்திருக்கிறார். ஆனால் இது தென்னிந்தியாவுக்குப் பொருந்தாது. மொத்தமாக இந்தியா - இலங்கை உறவுகள் சிறப்பாகவும் உறுதியாகவும் இருக்கும் என கூறலாம். மகிந்தா வெற்றி பெற்றதை இலங்கையில் எப்படி பார்க்கிறார்கள்? மக்கள் அவரை வரவேற்கிறார்கள். காரணம் நாட்டின் பொருளாதார நிலைமை படுமோசமாக இருக்கிறது.அதனை சரிசெய்ய மகிந்தாவினால் முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர் தான் செய்யப்போகும் செயல்களைப் பற்றி முன்னமே கூறிவிட்டார். இப்போது அவர் எப

ரஜினியை பின்னாலிருந்து இயக்குகிறார்கள்! - கே.வீரமணி

படம்
சாதி பிரிவினைகளை ஆதரிக்க ராமாயணத்தை அடையாளம் காட்டுகிறார்கள்! பிரிவினையின் லாபம் அடையும் கட்சிகள் அதற்காக நவீன இந்திய சிற்பிகளை அவமானப்படுத்துவதும், அதற்காக பாடநூல்களை கூட மாற்றுவதும் நடந்து வருகிறது. இப்போது கூடுதலாக, பிரபலமாக உள்ள நபர்களை தூண்டிவிட்டு ஒட்டுமொத்த மக்களையும் பிரிவினைப்படுத்த மதவாத கட்சிகள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. இதற்கான செயல்பாடுகளில் பெரியார் சிலைகள் உடைப்பு, அவரது கருத்துகள் திரிக்கப்படுவது என நடந்து வருகிறது. பிரபல நடிகரான ரஜினிகாந்த் துக்ளக் வார இதழில் பெரியார் பற்றி பேசிய கருத்து சர்ச்சையானது. ரஜினி தவறான தகவல்களை ஊடகங்களுக்கு தருகிறார் என்று இதற்கு பதில் சொல்லுகிறார்   திராவிடர் கழக பொதுச்செயலாளரான கி.வீரமணி. மக்களிடையே பிரிவினை விதைக்கும் பிளவு செயல்பாடுகள் தொடரும் என்று நினைக்கிறீர்களா? எனக்கு ஜோதிடம் தெரியாது. இதுபோன்ற யூக கேள்விகளுக்கு என்னிடம் பதில் கிடையாது. ரஜினி மறக்கப்பட வேண்டிய சம்பவம் என்று கூறியதற்காக பெரியாரிஸ்டுகள் மன்னிப்பு கேட்கவேண்டுமென நினைக்கிறீர்களா? இல்லை. அவசியம் கிடையாது. ரஜினி போன்ற நபர்கள் இப்ப

மனநல பிரச்னைகளை சினிமாவில் சரியாக காட்டுவதில்லை! - ஷகீன் பட்

படம்
மன அழுத்தம், விரக்தி, மனச்சோர்வு ஆகியவற்றை இன்று அனைவரும் பேசி வருகிறோம். காரணம், பணி, குடும்பம் என பல்வேறு விஷயங்கள் இடியாப்பம் போல ஒன்றாக கலந்து நம் மனதைப் பாதிக்கின்றன.   திரைப்பட எழுத்தாளர் ஷகீன் பட் இதுபற்றிய ஐ ஹேவ் நெவர் பீன் அன் ஹேப்பியர் என்ற நூலை எழுதியுள்ளார். தன் இருபது ஆண்டு, மனச்சோர்வு விடுதலைப்போராட்டம் பற்றிய நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார். இதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம். நீங்கள் எழுதியுள்ள நூலில் மனச்சோர்வு எப்படி உறவுகளை பாதித்தது என்று கூறியுள்ளீர்கள். உங்கள் குடும்பத்தில் இதனை எப்படி எதிர்கொண்டார்கள்.? என் குடும்பத்தில் எனக்கு ஏற்பட்ட மனச்சோர்வு பிரச்னை பற்றி அனைவருக்கும் தெரியும். இதனால் நூல் வெளியானபோது எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் அறையில் இருக்கும்போது, தனியாக இருக்க விரும்ப அதிகம் விரும்பியிருக்கிறேன். மனதிற்கு நெருக்கமானவரிடம் கூட சில விஷயங்களை நாம் பகிர்ந்துகொள்ள முடியாது. இதனால்தான் நான் பிறருக்கு சொல்லவேண்டிய விஷயங்களை நூலாக்கியுள்ளேன். இதனை படிக்கும்போது குழந்தை வளர்ப்பை ஆண்களும் செய்யவேண்டும், மனச்சோர்வு காலகட்டம், பாதிப்பு ஆக

இரண்டு அடி முன்னே ஒரு அடி பின்னாக - பியி பண்டேலா

படம்
நேர்காணல் பியி பண்டேலா திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் நைஜீரியாவில் எப்படி இத்தனை எழுத்தாளர்கள், இயக்குநர்கள் உருவாகி வருகிறார்கள்? நாற்பது ஆண்டுகளாக நாங்கள் இங்கு கலையை பாதுகாக்க போராடி வருகிறோம். நோலிவுட் 1980ஆம் ஆண்டில்தான் உருவானது. மாநில அரசின் டிவி கூட தடைசெய்யப்பட்டுவிட்ட சூழ்நிலை. இதனால் கலையை நாங்கள் உலகிற்கு சொல்லும் அவசிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இசைக்கலைஞர்கள் ஆப்பிரிக்க இசை மற்றும் ரகே, ஹிப்ஹாப் ஆகியவற்றுடன் வெளியே முகம் காட்டினார்கள். எழுத்தாளர்கள் தங்களின் சிறந்த படைப்புடன் வெளியே வந்தனர். அப்படி இலக்கியம் எழுதினால் கூட வறுமை ஆபாச படம் போல எழுதி பரிசு வாங்குகிறீர்கள் என்று குற்றச்சாட்டு உள்ளதே? மேற்சொன்ன விஷயத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் எழுதுவதை நாங்களே வெளியிடுவதில்லை. எடிட்டர் அதனை திருத்தி செப்பனிட்டு தனக்கு தேவையானவற்றை கண்டுபிடித்து அதை மாற்றி வெளியிடுகிறார். இதற்கு நாங்கள் ஒப்புக்கொள்வதால்தான் இலக்கியப் பரிசுகளை எங்கள் நாட்டினர் பெறுகின்றனர். சிமண்டா அடிச்சி என்ற சிறுகதை எழுத்தாளர் இருந்தார். அவர் ஆப்பிரிக்க வாழ்வை எழுதவில்லை. விபச்சார

மக்களை பிரிக்கும் அரசியலை நாங்கள் செய்ய மாட்டோம்! - ஹேமந்த் சோரன்

படம்
dh நேர்காணல் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வர் நீங்கள் எதிர்கட்சியைச் சேர்ந்த ரகுபர்தாஸின் மீதான வழக்கை கைவிட்டிருக்கிறீர்களே? மாநிலத்தில் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை இதன்மூலம் தொடங்கியுள்ளேன். சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல நடவடிக்கைகளை உருவாக்க முடியும் என நம்புகிறேன். இதேபோல ஊழல் வழக்குகளையும் தள்ளுபடி செய்வீர்களா? அதற்கு வாய்ப்பில்லை. ஊழல் வழக்குகளில் சட்டவிதிகளுக்கு ஏற்பவே நாங்கள் நடந்துகொள்வோம். இந்த வழக்குகளை நடத்துவதில் எனக்கு எந்தவித உள்நோக்கமும், பழிவாங்கும் எண்ணமும் கிடையாது. உங்களது அரசின் முன்னுரிமைகள் என்ன? மக்கள் எங்களை எளிதில் அணுக முடியும் என்பதுதான். விரைவில் நீங்கள் அதற்கான சான்றுகளை காண்பீர்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் இவற்றைப் பற்றி உங்களது கருத்து? மக்கள் இங்கே வேலைவாய்ப்புகளின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில்அவர்களிடம் ஆவணங்கள் கேட்பது முறையாகாது. பணமதிப்பு நீக்கத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று நொந்து போனார்கள். அந்த துயரம் எங்கள் மாநிலத்தில் மீண்டும் நடக்க நான் அனுமதி

அமெரிக்கா உலகப் பிரச்னைகளில் தலையிடவேண்டும்!

படம்
அகதிகளை கௌரவமாக நடத்துவதில் கவனம் தேவை அயர்லாந்து அமெரிக்கரான சமந்தா பவர் எழுத்தாளர், மனித உரிமை ஆர்வலர். இவர், ஐ.நாவில் அமெரிக்காவுக்கான தூதராக பணியாற்றியவர். இவர் அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக வந்தவர். அவரின் பயணம், பணிகள் பற்றிப் பேசினோம் உங்களது சிறுவயது வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்திருக்கிறது. உங்களது இன்றைய வாழ்க்கையில் அந்த அனுபவங்கள் செல்வாக்கு செலுத்துகிறதா? நாங்கள் அமெரிக்காவுக்கு வந்தபோது எனக்கு 9 வயது. எனது தம்பிக்கு வயது 5. என் அப்பா, தீவிரமான குடிநோய்க்கு அடிமையாகி இருந்தார். சூழல் எப்படியிருக்கும்? நான் அச்சூழலை மாற்ற நிறைய போராடினேன். குரல் இல்லாதவர்களுக்கு போராடும் எண்ணம் அன்றிலிருந்தே இருக்கிறது. நீங்கள் அமெரிக்க ராணுவத்தின் ஊடுருவல் முயற்சிகளை தீவிரமாக விமர்சித்திருக்கிறீர்கள். மனிதர்கள் தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று அதனைக் குறித்திருக்கிறீர்கள்.  நான் என் நூலில் எழுதியது நீங்கள் கேட்டதற்கு மாறானது. அமெரிக்கா உலகப்பிரச்னைகளில் தலையிடாமல் தள்ளியிருக்கக் கூடாது என்பதே என் எண்ணம். பாரிஸ் ஒப்பந்தம், அணு ஆயுத ஒப்பந்தம், எபோலா நோய்

அரசியல் தெரியாது. மலையேற்றம்தான் தெரியும்!

படம்
உடலின் சக்தியை உலகிற்கு காட்ட நினைத்தேன் ஆறு மாதங்களில் பதினான்க ஆபத்தான மலைப்பகுதிகளில் ஏறி உலக சாதனை படைத்திருக்கிறார் நேபாளத்தின் கூர்கா இனத்தவரான நிர்மல் புர்ஜா. இந்த சாதனை படைத்தபின் அவர் தரும் நேர்காணல் இது. கடந்த எட்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டின் ஆறு மாதங்களில் நீங்கள் செய்த சாதனை முக்கியமானது. விரைவில் எவரெஸ்ட், லோட்சே ஆகிய மலைகளிலும் ஏறுவீர்கள் என நம்புகிறோம். 48 மணிநேரத்தில் மக்காலு மலைப்பகுதியில் ஏறினேன். பாகிஸ்தானிலுள்ள 8 ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான மலைப்பகுதிகளிபல் 23 நாட்களில் ஏறியுள்ளேன். என்னுடைய நோக்கம் உலக சாதனை படைப்பது அல்ல. மனிதனின் உடல் பல்வேறு சூழல்களுக்கும் தாக்குபிடிப்பது என்பதை உலகிற்கு காட்டவேண்டும் என்பதே. ரெய்ன்ஹோல்டு மெஸ்னர், 8 ஆயிரம் மீட்டர் உயரத்தை பதினாறு வயதில் அடைந்தார். அன்றைய காலத்தை ஒப்பிடும்போது இன்று தொழில்நுட்ப வசதிகள் முன்னேறியிருக்கிறதுதானே? தொழில்நுட்ப வசதிகள் முன்னேறியிருக்கிறது. அதேசமயம் மனிதர்களின் மனதில் எதிர்மறை எண்ணங்கள், விமர்சனங்கள் கூடியிருக்கின்றன. நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. மலையேற்றத்திற்கு நிறைய ப

பாகிஸ்தான் ராணுவம் பெண்களுக்கு இழைத்த அநீதி! - நீதி கேட்கும் ஆவணப்படம்!

படம்
போரின் கொடுமை நினைத்துப் பார்க்க முடியாதது 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக நடந்த போர் அங்கு பெரும் சோகங்களையும், வேதனைகளையும் ஏற்படுத்தியது. காரணம், இந்த பிரிவினைக்காக அங்கு ஏராளமான உயிர்பலிகள், வல்லுறவுகள் நடைபெற்றன. இதுபற்றி எழுத்தாளர் லெஸ்ஸா காசி ஆவணப்படம் எடுத்துள்ளார். இவர் வங்கதேசத்தில் பிறந்து வளர்ந்து இங்கிலாந்து நாட்டிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். அவரிடம் அவரின் ஆவணப்படமான ரைசிங் சைலன்ஸ் பற்றி பேசினோம். இந்த ஆவணப்படும் தனிப்பட்ட விதத்தில் உங்களுக்கு வாழ்க்கை தொடர்பானது. எப்படி இந்த மையத்தை ஆவணப்படமாக எடுக்கவேண்டும்  என்று தோன்றியது? என்னுடைய தந்தை விடுதலைப் போராட்ட வீரர். அவர் விடுதலையில் ஈடுபட்ட பிரங்கானா என்ற பெண்களைப் பற்றிய கதைகளை கூறுவார். அவர்கள் விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்து சுதந்திரத்தைப் பெற்றுத் தந்ததாக கூறுவார். எனக்கு அந்த சிறுவயதில் அவர்களைப் பார்த்தபோதும், அவர்களின் முகங்களை நினைவுகொள்ள முடியவில்லை. பின்னர் அவர்களை தேடியபோது பலரும் காற்றில் கற்பூரம் போல மறைந்துவிட்டனர். காரணம், அப்போது வங்கதேசத்தை உருவாக்கிய தேசத்தந்தையான முஜிப

பிற மாநிலங்களை விட பஞ்சாப் வெளியிடும் மாசு குறைவுதான்!

படம்
நெற்கழிவுகளை எரிக்காமல் இருக்க விவசாயிகளுக்கு மானியங்களை வழங்குவோம்.  பஞ்சாப்பில் அறுவடை முடிந்ததும் நெற்கழிவுகளை எரிப்பது வழக்கம். மாறிவரும் சூழலில், இந்தப் பழக்கம் சூழல்கேடுகளை உருவாக்கி வருகிறது. இதனைக் குறைக்க பஞ்சாப் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயிர்களை எரிக்கும் நிகழ்வு போன ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக நடந்துள்ளது. இதைத்தடுக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது? இந்த பிரச்னைக்கு நீண்டகால நோக்கில் யோசித்துத்தான் தீர்வுகளைக் காண முடியும். நாங்கள் விவசாயிகளுக்கான எந்திரங்களை தற்போது மானிய விலையில் வழங்கி வருகிறோம். கடந்த ஆண்டில் 28 ஆயிரம் இயந்திரங்களை வழங்கி உள்ளோம். இந்த ஆண்டில் 22 ஆயிரம் இயந்திரங்களை வழங்கி உள்ளோம். மேலும் விவசாயிகளுக்கு நெல் குவிண்டாலுக்கு நூறு ரூபாயை மானியமாக வழங்கிவருகிறோம். இது மத்திய அரசு வழங்கும் பொருட்களுக்கான குறைந்த விலையை விட அதிகமாகும். மாநில அரசாக எங்களிடம் உள்ள ஆதாரங்களை வைத்துத்தான் நாங்கள் செயல்பட முடியும். மத்திய அரசு இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவினால் மட்டுமே மாசுபாடுகளை குறைக்க முடியும். விவசாயிகளு

இந்திய அரசிடம் ஊட்டச்சத்து பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை!

படம்
ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதே எங்கள் லட்சியம்! டிஜிட்டல் இந்தியா என்ற நாளிதழ்களில் விளம்பரம் செய்தாலும், இந்தியா குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விஷயங்களில் தடுமாறி வருகிறது. அண்மையில் வெளியான உலகளவிலான பட்டினி நாடுகளின் தொகுப்பு பட்டியலில் இந்தியா 102 வது இடத்தைப் பெற்றுள்ளது. மொத்தம் 112 நாடுகள் கொண்ட இப்பட்டியலில் இந்தியாவின் இடம் பரிதாபகரமானது. தெற்காசிய நாடுகளில் மிகவும் கீழே சரிந்துள்ளது இந்தியா. போஷன் அபியான் திட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர் சந்திரகாந்த் எஸ் பாண்டேவிடம் இதுபற்றி பேசினோம். உத்தரப்பிரதேசத்தில் உள்ள பத்து மாவட்டங்களில் ஆறு மாவட்டங்கள் தீவிரமான ஊட்டச்சத்து பற்றாக்குறையை வெளிப்படுத்தியுள்ளன. அதனைத் தீர்க்க என்ன முயற்சிகளை எடுத்துள்ளீர்கள்.  உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஊட்டச்சத்து பிரச்னை கொண்ட மாவட்டங்கள் நாங்கள், இதற்கான குழுக்களை அமைத்து இப்பிரச்னையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். இதற்கான களப்பணியில் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டீர்கள்? நாங்கள் என்ஆர்சி எனும் மையங்களை அமைத்து ஊட்டச்சத்து பற்றாக்குறையான குழந்தைகளை பராமரித்து அவற்றை நீக