இடுகைகள்

பால் உற்பத்தியில் இந்தியா சாதித்த வெற்றிக்கதை! - இந்தியா 75

படம்
  இந்தியா 75 கூட்டுறவு நிறுவனங்களின் வெற்றிக்கதை.  குஜராத்திலுள்ள கைரா என்ற மாவட்டமே கூட்டுறவு அமைப்பு முறையில் பால் உற்பத்தியாளர் சங்கங்களை அமைக்க முக்கிய காரணம். இதனை நிர்வாகம் செய்த கேரளத்தை பூர்வீகமாக கொண்ட வர்க்கீஸ் குரியன், ஏழை மக்களை சுரண்டிய பால் நிறுவனங்களை விரட்டியடித்தார். தற்சார்பான பொருளாதாரத்தை அமுல் நிறுவனம் மூலம் சாத்தியப்படுத்தினார். இந்தியா 75 என்ற வரிசையில் அமுலின் கதை முக்கியமானது.  இந்தியா இன்று பால் உற்பத்தி துறையில் முக்கியமான நிறுவனமாக உள்ளது. அதுவும் தனியார் நிறுவனங்களை தாண்டி வெற்றித்தடங்களை பதித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது பிஸ்கெட்டுகள், பிரெட், சாக்லெட் என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வருகிறது. ஆனால் இதற்கான தொடக்கம் என்பது மிக எளிமையாகவே இருந்தது.  வர்க்கீஸ் குரியன், திரிபுவன்தாஸ் படேல், ஹெச்எம் தலாயா தற்போதைய ஆனந்த் என்ற இடத்தில் உள்ள கிராமங்களில் இருந்து தினசரி 250 லிட்டர் பாலை கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கம் பெற்று விற்று வந்தது. ஆங்கிலேயர் காலத்தில் ஏகபோக நிறுவனமாக இருந்தது பாய்சன் டைரி என்ற நிறுவனம். இந்த நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு

வீட்டிலிருந்தே அலுவலக வேலை - கடிதங்கள்

படம்
  வீட்டிலிருந்தே வேலை அன்புக்குரிய தோழர் இரா.முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? தங்கள் குடும்பத்தினர் நலமோடு இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். எங்கள் இதழுக்கான வேலைகள் தொடங்கிவிட்டன. வேலைகள் அனைத்தும் இணையம் சார்ந்தது என்பதால் கட்டுரைகளை எழுதிய மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவேண்டும். வலி நிவாரணிகள் பற்றி படிக்க நினைத்தேன். அதற்கான நூல் கிடைத்தது. போனில் அதனைப் படித்து வருகிறேன். நேரு பற்றிய தமிழ் நூல் எழுதி வருவதைச் சொல்லியிருக்கிறேன் அல்லவா? இன்னும் பதினைந்து பக்கங்கள் எழுதினால் போதும். சரிபார்த்து வெளியிட்டு விடலாம்.  நன்றி ச.அன்பரசு 2.4.2021 படம் பிக்சாபே

இலங்கையின் அரசியல் நிலைமையை சொல்லும் கதைகள்! கடிதங்கள்

படம்
  இலங்கை சிறுகதைகள் - உறவுப்பாலம் அன்புள்ள நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு,  வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை இரண்டாவது முறையாக நடைமுறைக்கு வந்திருக்கிறது. இப்போது நான் சென்னையிலுள்ள அறையில் இருக்கிறேன். ஊருக்கு வரவில்லை. காலைக்கதிர் அலுவலகத்தில் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு வந்துவிட்டது. நான் உறவுப்பாலம் என்ற இலங்கை சிறுகதை தொகுப்பை படித்து முடித்தேன்.  சிங்களக்கதைகளும், ஆங்கிலக் கதைகளும் நன்றாக இருந்தன. தமிழ்க்கதைகளும் நன்றாக இருந்தன. தமிழ்கதைகள் தேறவில்லை. கணியம் சீனிவாசனிடம் வாங்கி வந்த இந்திய பயணக் கடிதங்கள் நூலை படித்து வருகிறேன். கடல் மார்க்கமாக  இந்தியாவுக்கு வரும் ஆங்கிலப் பெண்மணி எலிசாபே சந்தித்த அனுபவங்கள் கடிதமாக உள்ளன.  நூறு பக்கங்கள் படித்துள்ளேன். அக்களூர் ரவியின் மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது.  நன்றி! ச.அன்பரசு 16.3.2021

பூச்சிகளின் ரத்த வேறுபாடு? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  pixabay-  பதில் சொல்லுங்க ப்ரோ? பூச்சிகளின் ரத்தம் மனிதர்களின் ரத்தம் மாதிரி இருப்பதில்லையே ஏன்? வேறுபாட்டிற்கு காரணம், நமது உடலில் உள்ள  சிவப்பணுக்கள்தான். பூச்சிகளின் உடலில் ஹீமோலிம்ப் எனும் திரவம் உள்ளது. இந்த திரவம்தான் அந்த உயிரிகளின் உடலிலுள்ள செல்களை பாதுகாக்கிறது. பூச்சிகளின் ரத்தத்தில் பெரும்பாலும் நீர்தான். கூடவே அயனிகள், கார்போஹைட்ரேட், கிளிசரால், அமினோ அமிலங்கள், நிறமிகள், செல்கள் ஆகியவை இருக்கும்.  பூச்சிகளின் உடலிலிருந்து சிவப்பு நிற திரவம் வந்தால் அது அதன் கண்களில் உள்ள சிவப்புநிறத்திலிருந்து வந்ததாக இருக்கும்.  பூச்சிகளின் ரத்தம் பொதுவாகவே வெள்ளை அல்லது பச்சையாக இருக்கும். பாலூட்டிகளின் உடலில் சிவப்பணுக்கள் மூலமாக செல்கள் உயிரோடு இருக்கின்றன. இவைதான் செல்கள் அனைத்திற்கும் ஆக்சிஜன் கிடைக்கிறது. பூச்சிகளுக்கு இப்பணியை ட்ரிச்சல் ட்யூப் என்ற உறுப்பு இப்பணியை செய்கிறது.  பூச்சிகளுக்கு என்னவிதமான நோய்கள் ஏற்படும்? அனைத்து உயிரினங்களுக்குமே பாக்டீரியம் மற்றும் வைரஸ், பூஞ்சைகள் எப்போதும் நோய்களை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளுக்கு கூடுதலாக ஒட்டுண்ணிகள் மூலம் பாதிப்பு ஏற்படுகிறது.

ப்ளூமூன் பற்றி தெரியுமா? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  நீலநிலவு பதில் சொல்லுங்க ப்ரோ? ப்ளூமூன் என்றால் என்ன? இதற்கான விளக்கங்கள் ஆண்டுதோறும் மாறிக்கொண்டே வருகின்றன. ஒருமுறை ப்ளூமூன் என்பதை இல்லாத ஒன்றாக கருதி பன்றிகள் பறப்பது  என கூறிவந்தனர்.  இப்போது கூறிவந்த காலம் ஆறாம் நூற்றாண்டு. பிறகு, 1883ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் இருந்த கிரகட்டாவு என்ற எரிமலை வெடித்து சாம்பல் வானில் பரவியபோது, சூரியனின் அஸ்தமனம் பச்சை நிறமாக மாறியது. அப்போது வானில் இருந்த நிலவு நீலநிறமாக மாறியது.  காட்டுத்தீ, கடுமையான பஞ்சம், எரிமலை வெடிப்பு ஆகியவை நடக்கும் போது நீலநிலவு உருவாகிறது. மாதத்தில் கூடுதலாக நாட்கள் வருவது அல்லது ஆண்டு இறுதியில் கூடுதல் நாட்கள் வருவது ஆகியவற்றின் காரணமாக நிலவின் காட்சி அதிகமாகும் வாய்ப்புள்ளது. சாதாரணமாக ஆண்டில் 12 முழுநிலவு வரும். சில அரிதான நேரங்களில் 13 வரும். மாத த்தில் வரும் இரண்டாவது முழுநிலவை நீலநிலவு என்று சொல்கிறார்கள்.  கோள்கள் வட்டமாக இருப்பது ஏன்? இதற்கு காரணம் அதன் மத்தியில் செயல்படும் ஈர்ப்புவிசைதான். கோள்கள் பொதுவாகவே திரவத்தின் தன்மையில் செயல்படும். இதனால் நெடுங்காலம்  ஈர்ப்புவிசை அதன் மீது செயல்படும்போது வடிவம் வட்டமாகிற

அதிகரித்து வரும் வெப்பம்! கடிதங்கள்

படம்
  நேரு அன்புள்ள நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு,  வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? இங்கு வெப்பம் அதிகரித்து வருகிறது. அறையில் நீர் தட்டுப்பாடு பிரச்னை வரும் என நினைக்கிறேன். புத்தக காட்சியில்  வாங்கிய இலங்கை சிறுகதைகளை படித்து வருகிறேன். 2 சிறுகதைகளை படித்துள்ளேன். தொகுப்பு மொழியாக்கம் கண்ணையன் தட்சிணாமூர்த்தி.  நேருவின் போராட்டகால சிந்தனைகள் நூலை அடுத்து படிக்கவேண்டும். அறிவியல் மொழிபெயர்ப்பு  நேர்காணல் நூலை எழுதி அமேசானில் பதிவிட்டேன். ஓராண்டாக தள்ளிப் போய்க்கொண்டிருந்த பணி. இப்போதுதான் அதற்கு நேரம் கிடைத்தது. நூலை எழுதி தொகுத்து பதிவிட்டுவிட்டேன்.  நேரு பேசிய சொற்பொழிவு நூலை நடப்பு ஆண்டில் எழுதிவிட நினைத்துள்ளேன். என்னளவில் அதனை சரியாக செய்ய முயல்கிறேன். அதிர்ஷ்டம் கால் அப்பியாசம் முக்கால் என்பதுதான் நிலை. நன்றி ச.அன்பரசு 8.3.2021

வடகிழக்கு கலாசார விஷயங்களை பேசும் சிறுகதை நூல்! - கடிதங்கள்

படம்
  அசாம் அன்புள்ள நண்பர் இரா. முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? கடந்த சில மாதங்களாக ஷர்ட், பேண்ட் என எதையும் வாங்கவில்லை. நேற்று பேண்ட் ஒன்று வாங்கினேன். ஷர்ட் பீசாக வாங்கி தைக்கவேண்டும். தற்போது சுப்பாராவ் மொழிபெயர்ப்பில் லைபாக்லை ஆன்ட்டி சிறுகதைத் தொகுப்பு படித்து வருகிறேன்.  ஐந்து சிறுகதைகளை படித்திருக்கிறேன். இக்கதைகள் பழங்குடி மக்களின் பண்பாடு, வேறு இனங்களுக்கு இடையே ஏற்படும் சண்டைகள், இழப்புகள் பற்றி பேசுகின்றன. பாசனின் பாட்டி சிறுகதை உணர்ச்சிகரமான கதை. வங்காளி குடும்பத்திற்கும், பழங்குடி குடும்பத்திற்குமான உறவை பேசுகிறது.  எங்கள் இதழ் வேலைகள் எப்போதும் போல நடந்துகொண்டிருக்கிறது. எழுதுவதில் வாக்கிய அமைப்பு பிரச்னை உள்ளது என அலுவலக சகா பாலபாரதி சொன்னார். எனவே, கவனமும், கருத்துமாக எழுத முயன்று வருகிறேன். வேகமாக எழுதும்போது சிலசமயம் பத்திகளிடையே தொடர்பு அற்று போகும் வாய்ப்புள்ளது.  20 நேர்காணல்களைக் கொண்ட நூல் தயார் செய்துவிட்டேன். இன்னும் சில வேலைகள் பாக்கி. தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டு இருப்பீர்கள். உடலை கவனித்துக்கொள்ளுங்கள்.  நன்றி ச.அன்பரசு 3.3.2021

சூழலைக் காக்கும் பணியில் நவீன கலைஞர்கள்!

படம்
முத்துவின் வானம் -ஷில்பா கிருஷ்ணன்  ஐஐடி பாம்பேயைச் சேர்ந்தவர் பங்கஜ் ஷேக்சரியா. இவர் பேராசிரியராகவும் சூழல் சார்ந்த செயல்பாட்டாளராகவும் இருக்கிறார். இவர்  வெயிட்டிங் பார் டர்டில்ஸ் என்ற குழந்தைகள் நூலைப் படித்தார். அதில் சாம்ராட் என்ற சிறுவன், எழுதிய பல்வேறு ஆமைகளைப் பார்த்த கதையை வாசித்தார். இந்த நூலை கரடி டேல்ஸ் என்ற பெயர் கொண்ட பதிப்பகம் சென்னையில் வெளியிட்டது.  இந்த நூலைப் படிக்கும் சிறுவர்கள் கடலில் உள்ள பல்வேறு வகை ஆமைகள் மற்றும் நண்டுகளை அறிய முடியும். அந்தமானிலுள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்காக போராடி வருகிறார் பங்கஜ். அங்குள்ள ஜாரவா மக்களுக்காக பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறார். அரசுடன் போராடி நீதிமன்றத்தில் போராடி பல்வேறு ஆணைகளைப் பெற்ற கதைகளை லாஸ்ட் வேவ் என்ற பெயரில் கதையாக எழுதினார். “நீதிமன்றத்தில் பல்வேறு உத்தரவுகளை பெற்று அதனை செயல்படுத்தும் நேரம் வந்தது. அப்போதுதான் 2014 ஆம் ஆண்டில் சுனாமி வந்தது அனைத்து விஷயங்களையும் மாற்றியது’’ என்றார் பங்கஜ் ஷேக்சரியா.  முத்துவின் வானம் என்ற கதையை குக்கூ தன்னார்வ அமைப்பின் தும்பி என்ற பதிப்பகம் வழியாக வெளியாகியுள்ளது. ஜவ்வா

மனதிலுள்ள உணர்வுகளை பிரதிபலிக்கும் ஸ்கொயட் கேம்! - ஷோபா டே

படம்
  இப்போது உலகமே நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ஸ்கொயட் கேம்ஸ் என்ற வெப் சீரிசைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சிலர் பார்க்க முடியவில்லை என கூட வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஒன்பது எபிசோடுகள் கொண்ட சீரிசை முழுமையாக பார்த்து விஷயங்களை புரிந்துகொள்வது கடினமாகவே இருக்கும்.  உலகம் முழுக்க 142 மில்லியன் மக்கள் இந்த வெப் தொடரை பார்த்துள்ளனர். தொடரை இயக்கிய இயக்குநர் ஹூவாங் டாங் ஹூயூக், அதனை சரியாக செய்யவேண்டுமென்ற மன அழுத்தத்தில் பற்கள் கூட விழுந்துவிட்டன என்று பேட்டியில் சொன்னார். தொடரில் ஒவ்வொரு கட்டமும் குழந்தைகளின் விளையாட்டுகளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளன.  உலகமெங்கும் செப்டம்பர் 17 அன்று வெளியானது. 45.6 பில்லியன் டாலர்களை வெல்ல குழந்தைகளின் விளையாட்டை விளையாட வேண்டும். பார்த்தால் இந்தியாவின் கௌன் பனேகா குரோர்பதி விளையாட்டு நிகழ்ச்சி போல தோன்றலாம்.  போட்டியில் தோற்றால் வைல்ட்கார்ட் சுற்றெல்லாம் கிடையாது. நேரடியாக சாவுதான். வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள். தோற்பவர்கள் உடனே கொல்லப்படுவார்கள். ரத்தம் சொட்டும் திரில்லர், வன்முறை, உணர்ச்சிகரமான காட்சிகளை

உறுப்புகளை இழந்தாலும் அநீதிக்கு எதிராக குரல் உயர்த்திய பாடகன்! - கடிதங்கள்

படம்
  துணிவின் பாடகன் பாந்த்சிங் அன்பு நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? அறுபத்துமூவர் விழா இறுதிப்பகுதியை எட்டியிருக்கிறது. மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவில் விழா என்பதால் எப்போதும் போல கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. நோய்த்தொற்று காலத்தில் விழாவை நிறுத்தமுடியாமல் நடத்துகிறார்கள். ஏராளமான போலீஸ் நாற்புறங்களிலும் குவிந்து விட்டனர்.  துணிவின் பாடகன் பாந்த்சிங் என்ற நூலைப் படித்து வருகிறேன். 175 பக்கங்கள் படித்துவிட்டேன். இன்னும் நூறு பக்கங்கள் பாக்கியாக உள்ளது. ஜாட் சாதி வெறியர்களால் இருகைகளும், ஒரு காலும் வெட்டப்பட்டு உயிர்பிழைத்தவர் பாந்த்சிங். இவரது மூத்த மகளான பல்ஜித்தை மேல்சாதி இளைஞர்கள் பாலியல் வல்லுறவு செய்கிறார்கள். அதனை காவல்துறையில் பதிவு செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க பாந்த்சிங் முயன்றதற்காக அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நிருபமா தத் என்ற பத்திரிகையாளர் எழுதியதை கமலாலயன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.  நீங்கள் இந்த சம்பவம் பற்றிய செய்தியை முன்னதாக நாளிதழ்களில் படித்திருப்பீர்கள். தெஹல்கா, டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய இதழ்கள் மட்டுமே பாந்த்சிங் பற்ற

இப்படியும் நிதியுதவிகளை பெறலாம்! - கடிதங்கள்

படம்
  நன்கொடை மிரட்டல் அன்பு நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நேற்று பிக்பஜார் கடைக்கு டீஷர்ட் வாங்க சென்றேன். வடபழனியில் தனியாக கடையை அமைத்துள்ளார்கள். துணியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென இரண்டு டிப்டாப் டை கட்டாத ஆட்கள் எங்களை அணுகினர். குழந்தைகள் பசியால் இறக்கின்றனர் என்பதை சொல்லி புள்ளிவிவரங்களைச் சொன்னார்கள். எதற்கு என்னால் நாங்கள் அதற்கு 5 ஆயிரம் தொடங்கி பல்லாயிரம் வரை தானம் கொடுக்கலாமாம். 500 ரூபாய் டிஷர்ட் எடுக்க வந்து ஐயாயிரம் ரூபாய் தானம் கொடுக்கும் தைரியம் எனக்கு இல்லை.  பிக் பஜார் கடையில் இதுபோல வாடிக்கையாளர்களை மிரட்டும் ஆட்கள் புதிதல்ல. இதற்கு முன்னால் வங்கி ஆட்களை உள்ளே விட்டு கிரடிட் கார்டு வாங்கிக்கொள்ளுங்கள் என மிரட்டுவார்கள். இப்போது இப்படி. நேருவின் போராட்டகால சிந்தனைகளை படிக்கத் தொடங்கியுள்ளேன். மதம் பற்றிய அவரது உறுதியான சிந்தனை ஆச்சரியப்படுத்துகிறது.  நன்றி! ச.அன்பரசு  22.3. 2021