இடுகைகள்

சினிமாவின் திரைக்கதைப்படி, நிஜவாழ்க்கை சம்பவங்கள் நடக்கத் தொடங்கினால்.. எக்ஸ்ட்ரா ஆர்டினரி - வக்கந்தம் வம்சி

படம்
  எக்ஸ்ட்ரா ஆர்டினரி தெலுங்கு நிதின், ஶ்ரீலீலா, ராஜசேகர், சம்பத் சினிமா கதை, ஜூனியர் ஆர்டிஸ்டின் வாழ்க்கையில்  நிஜத்தில் நடக்க ஆரம்பித்தால்.. என்னவாகும்? தெலுங்குப்படங்கள் பார்க்க பிரம்மாண்டவையாக தெரிந்தாலும் அதில் கொண்டாட்ட வஸ்துகளே அதிகம். கதை என்று பார்த்தால் தக்னூண்டு தெரியும். விவேக் ஆத்ரேயா, தருண் பாஸ்கர், கிரிஷ் போன்ற மிகச்சில இயக்குநர்கள்தான் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாயகத்துவத்தை குறைத்து படம் எடுக்கிறார்கள்.  இந்த படத்தின் இயக்குநர் இதற்கு முன்னர் நா பேரு சூர்யா என்ற தேசியவாத படத்தை எடுத்திருந்தார். அதில், குறைந்தபட்சம் காட்சிகள் கோர்வையாக இருக்கும். கதை என்று பார்த்தாலும் மோசமில்லை என்ற ரகத்தில் இருக்கும். ஆனாலும் படம் ஓடவில்லை. அதை விடுங்கள். ஆனால் நிதின் நடித்துள்ள இந்தப்படம் தெலுங்கு படங்களை ஸ்பூஃப் செய்வது போல ஒரு படமோ என்று கூட தோன்றுகிறது. பாதிக்கும் மேல்தான், அப்படியான படம் கூட இல்லை என்று தெரிகிறது. சினிமாவில் நடிக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட். அவனது அப்பா சம்பளத்தில்தான் குடும்பமே ஓடுகிறது.வித்தியாசமான பாத்திரங்களை நடிக்கும் ஆசை நாயகனுக்கு. ஆனால் பெரிதாக வாய்ப்பு க

2024 - உலக நாடுகளில் தேர்தல் - ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் எது தொடரப்போகிறது?

படம்
 தேர்தலுக்குப் பிறகு மாறிப்போகும் உலகம் 2024ஆம் ஆண்டில் உலகமெங்கும் நிறைய நாடுகளில் தேர்தல் நடைபெறப்போகிறது. தேர்தல் மூலம்தான் பல நாடுகளில் ஜனநாயக செயல்பாடுகள் தொடருமா, அல்லது நின்றுபோகுமா என்று தெரிய வரும். சர்வாதிகாரத்தை தேர்தல் எப்படி தீர்மானிக்கும் என்பது சரியான கேள்வி. தேர்தல் என்பதைக் குறைந்தபட்ச கண்துடைப்பாகவேனும் நடத்தி முடிக்கவேண்டிய நெருக்கடி நிறைய நாடுகளுக்கு உள்ளது. இன்று நாடுகள் அனைத்தும் அரசியல், பொருளாதாரம், சமூகம் என பல்வேறு வகையில் ஒன்றோடொன்று இணைந்துள்ளது. தனியாக தற்சார்பாக இயங்குவது கடினம். அதேசமயம், கொள்கை, செயல்பாடு ரீதியாக யாரையும் நேரடியாக பகைத்துக்கொள்ளவும் முடியாது.  ஆனந்தவிகடன், பொதுநலன் கருதி என போலியாக விளம்பரம் வெளியிட்டு தேர்தலில் மக்களை வாக்களிக்க தூண்டுவதை அனைவரும் கண்டிருக்கலாம். இதெல்லாம் மக்களின் மனதில் போலியான நம்பிக்கையை விதைக்கும் செயல்பாடு. அனைத்து நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட கருத்தியல் செயல்பாடுகள் உண்டு. வலதுசாரி தாராளவாத, சர்வாதிகார அதிகார சக்திகள் எழுச்சிபெறும்போது, அதுவரையிலான ஜனநாயக அமைப்புகள் மெல்ல நம்பிக்கையிழக்கத் தொடங்குகின்றன. ஜெர்மனி

எல்இடி பல்பு போல மனநலன் ஒளிர என்ன செய்யலாம்?

படம்
  மனநலனைக் காத்துக்கொள்ள என்ன செய்யலாம்? மனிதர்களோடு பழகுவதை கைவிட வேண்டும் என பகடையாட்டம் லும்பா பாத்திரம் போல முடிவெடுக்கலாம்தான். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. குறைந்தபட்சம் சில குறிப்புகளை பின்பற்றலாம், மனதிற்கு ஏற்படும் சேதாரத்தை குறைக்க முயலலாம்.  சமூகவலைத்தள போதை வக்கிரம் பிடித்த, மனநல பிரச்னை உள்ளவர்கள், மூளை அழுகிப்போனவர்கள்  உள்ள இடமாக சமூக வலைத்தளங்கள் மாறிவருகின்றன. வேலைக்கு இடையே ஓய்வுக்காக பதினைந்து நிமிடங்கள் செலவழிப்பது தவறில்லை. மற்றபடி ஒருநாளுக்கு அதற்கு மிஞ்சி அதிகமாக செல்லக்கூடாது. அப்படி சலிப்பு ஏற்பட்டால் கூட சமூக வலைத்தளங்களுக்கு செல்லாமல் இருக்க வைராக்கியமாக முடிவு செய்யுங்கள். நேரத்தை வீணாக்கும் ஆப்கள் இருந்தால் அதை அன்இன்ஸ்டால் செய்து மகிழ்ச்சியாக இருங்கள்.  உண்மையான நண்பன்  சமூக வலைத்தள கணக்குகளுக்கு நேர வரையறை முக்கியம். அடுத்து, உங்களோடு தொடர்பு கொண்டிருந்த பழைய நண்பர்கள் இருக்கிறார்களா என கண்டறியலாம். பேசலாம். பழைய நண்பர்களில் யாரேனும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருந்தால் கவனம். போட்டித்தேர்வு எழுதி வென்று அரசு அதிகாரியானவர்களாக  இருந்தால் அவர்களோடு ந

யோகா பற்றிய சுவாரசியமான தகவல்கள்!

படம்
  ரிக் வேதத்தில் யோகா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சோப்பு விற்பவர்கள் கூறுவது போல இருக்கிறது என யோசிக்காதீர்கள். எளிமையாக செய்யும் உடற்பயிற்சிதான் யோகா. உலகம் முழுவதும் 300 மில்லியன் மக்கள் யோகா செய்கிறார்கள். சரியாக செய்கிறார்களா என்று கேட்கக்கூடாது. செய்கிறார்கள். அந்தே... உடல், மனம், ஆன்மா என்ற மூன்றும் ஒன்று என்று கூறிய பதஞ்சலி முனிவரின் தத்துவத்தில் யோகா பயிற்சி உள்ளது. ஒருவரின் ஆன்ம சக்தி என்பது உள்ளிழுக்கும்,வெளிவிடும் மூச்சில் உள்ளது. மூச்சைக் கட்டுப்படுத்துவதன் வழியாக உடலை புத்துயிர்ப்பு செய்வதோடு, ஆயுளையும் அதிகரிக்கமுடியும். இந்திய அரசியல்வாதிகள், வலதுசாரி கட்சிகள் யோகாவை கருத்தியலுக்காக பிரசாரம் செய்கிறார்கள். உண்மையில் யோகா என்பது ஒரு வாழ்க்கை முறை. வெறும் உடற்பயிற்சி மட்டும் அல்ல. பெரும்பாலான மேற்குலக மக்கள் அதை உடற்பயிற்சியாகவே கருதுகிறார்கள்.  பொதுவாக யோகா  பயிற்சிகள், உடலின் இறுக்கத்தை தளர்த்துபவை. உடலை இறுக்கமாக்கும் எடை பயிற்சிகள் போல அவற்றை செய்துவிட்டு குளிக்கக்கூடாது. குளித்துவிட்டு யோகா செய்தால் உடலின் நெகிழ்வுத்தன்மை கூடும்.

கூலிக்கொலைகாரன் தொன்மைக் காலத்திற்கு நகர்ந்து போர்வெறி கொண்ட வீரனாகும் கதை!

படம்
  டேங் யின்  மாங்கா காமிக்ஸ்  250 அத்தியாயங்கள்----- நகரத்தில் வாழும் கூலிக்கொலைகாரன். பாரில் உள்ள பெண்ணை ஒரு ரவுடிக்கூட்டம் போதைக்குள்ளாக்கி வல்லுறவு செய்ய முயல்கிறது. நாயகன் அதை தடுத்து அத்தனை பேர்களையும் கொல்கிறான். பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கிறான். பிறகு தனது அறைக்கு திரும்புகிறான். தூங்குபவனின் ஆன்மா தொன்மைக்காலத்திற்கு பயணிக்கிறது.  ஒரு காட்டில் இலையை கட்டிக்கொண்டு நிற்பதை உணர்கிறான். உண்மையா என்று பார்த்தால் உண்மைதான். அங்கே உள்ள விலங்கு ஒன்றிடமிருந்து சண்டை போட்டு சற்றுவெளியே சென்று பார்த்தால் அங்கு நிங், விண்ட் என்ற இரு நாட்டு ராணுவத்துக்கு இடையில் போர் நடக்கிறது. டேங் யின் என்பது நாயகன் பெயர். கதையில் திடீரென டோமின் மாறுகிறது. நாம் டோமின் என்றே கொள்வோம். நிங் பலம் பொருந்தியவர்கள். விண்ட் பலவீனமானவர்கள். அவர்கள் புறம் நின்று டோமின் நான்கு எதிரிப்படை வீரர்களைக் கொல்கிறான். எதிரிப்படையினர் இறந்துபோன விண்ட் வீரர்களின் பிணங்களை நெருப்பு வைத்து கொழுத்துகிறார்கள். டோமின் நெருப்புக்கு பயந்து குகையில் பதுங்குகிறான். அங்குள்ள டார்க் ஆர்ட்ஸ் மாவீரனின் ஆவி, டோமினுக்குள் ப

விதிகளில் சிக்கிக்கொண்டு தடுமாறும் மனித மனங்களின் போராட்டம்! - பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்

படம்
  பகடையாட்டம் தத்துவ சாகச நூல் யுவன் சந்திரசேகர் 375 பக்கங்கள் தத்துவநூல் போல தொடங்கி வளர்ந்து திடீரென திகில் திருப்பத்தோடு சாகச நாவலாக மாறி நிறைவடைகிறது. தொடக்கத்தில் படிக்க தடுமாற்றம் இருந்தாலும்  யுவன் சந்திரசேகரின் மாயத்தன்மை கொண்ட எழுத்துகள் நம்மை வாசிப்பிற்குள் இழுக்கின்றன. மூன்று ஆங்கில நூல்களை வாசித்து, அதன் அடிப்படையில் பாத்திரத்தின் தன்மைகளை வடிவமைத்து நாவலாக்கியிருக்கிறார். அதை ஆசிரியர் சொல்லாமல் கூட மறைத்திருக்க முடியும். ஆனால் நேர்மையாக அதை கூறிவிட்டார். நூலின் பின்னுரை முக்கியமானது. தவிர்க்காமல் வாசியுங்கள்.  சீனா, நேபாளத்தின் எல்லையில் உள்ள படைப்பிரிவின் ராணுவ அதிகாரி மேஜர் க்ருஷ்தான் கதையை தொடங்குகிறார். பாதுகாப்பு பணியில் இருப்பவருக்கு சண்டையில் கால்களை இழந்த நண்பன் நானாவதி நினைவுக்கு வருகிறான். இதில் இருந்தே நூலின் தத்துவப்பகுதி தொடங்கிவிடுகிறது. போரின் அபத்தம், அதன் காரணமாக ராணுவம் அறிமுகமில்லாதவர்களை கொலை செய்வது, குழப்பம், உடல் அங்கங்கள் ஹீனமாவது என பல்வேறு விஷயங்களை ஆசிரியர் பேசப்பேச நமது மனமும் அதே திக்கில் மெல்ல நகர்கிறது.  க்ருஷ் எதையும் பிறரிடம் சொல்லாத ஆள். ர

எனது இளமைக் காலத்தில் பெண் இயக்குநர்கள் மிக குறைவு! - ஜோடி ஃபாஸ்டர், திரைப்பட நடிகை

படம்
 ஜோடி ஃபாஸ்டர் திரைப்பட நடிகை சைலன்ஸ் ஆஃப் தி லேம்ஸ் படத்தில் கிளாரைஸ் ஸ்டார்லிங் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தீர்கள். ஒருவகையில் எதிர்காலத்திற்கான பெண் டிடெக்டிவ் பாத்திர வடிவமைப்பிற்கு கூட அது உதவும் என்று கூறலாம். பாப் கலாசாரத்தில் அந்த பாத்திரம் எப்படி வளர்ச்சி பெற்றுள்ளதாக கருதுகிறீர்கள்? நான் அப்போது சிறப்பான ஒன்றைச் செய்ததாகவெல்லாம் நினைக்கவில்லை. நாயகனின் பயணத்தை அப்படியே செய்தேன். அந்த பாத்திரம் அப்போது ஆண்களுக்கானதாகவே இருந்தது. சைலன்ஸ் ஆஃப் தி லேம்ஸ் படம், ஆண்களுக்கான பாத்திரத்தை பெண்ணுக்கானதாக பாதை மாற்றியது. கடந்த முப்பது ஆண்டுகளாக பல்வேறு வேறுபட்ட குரல்களை நாம் கேட்டு வருகிறோம். பெண் நாயகிகள், எதிர்மறை நாயகர்கள் என்பது சற்று சிக்கலானது. குழப்பம் நிறைந்ததும் கூட. ட்ரூ டிடெக்டிவ் நைட் கன்ட்ரி படப்பிடிப்பு ஐஸ்லாந்தில் நடைபெற்றது. தீவிரமான பருவநிலை கொண்ட இடத்தில் நடந்த படப்பிடிப்பு எப்படியான அனுபவமாக இருந்தது? அதுபோன்ற இடத்தில் நடக்கும் படப்பிடிப்பு, உங்களுக்குள் உயிர் பிழைக்கும் வேட்கையைத் தூண்டக்கூடியது. ஒரே நேரத்தில் இதுப்பற்றிய பாராட்டும், வாழ்வதற்கான அவமானமும் மனதி

போலீஸ் அதிகாரியான தம்பியைக் காப்பாற்ற தன்னை பணயம் வைக்கும் மாஃபியா தலைவன்!

படம்
  பாய்  தெலுங்கு நாகார்ஜூனா, ரிச்சா, சோனு சூட் சிறுவயதில் செய்யாத தவறுக்காக சிறை சென்று பிறகு மாஃபியா தலைவான மாறுபவன் மீண்டும் தனது குடும்பத்தைக் காக்க முயலும் கதை.  பெரிய சிக்கலான கதைக்கரு கிடையாது. வெளிநாட்டில் உள்ள பாய் எனும் நாயகன், ஆந்திராவுக்கு வருகிறான். அவனது மாஃபியா ஆட்களை போலீஸ் அதிகாரி ஒருவர் வேட்டையாடுகிறார். ஆனால் அவர் யாரென்று தெரியவில்லை. அவர்களது ஆட்களைப் பற்றி யாரோ ஒருவர் மறைமுகமாக தகவல்களை அனுப்புகிறார்கள். அந்த கறுப்பு ஆட்டைப் பிடிக்கவே பாயை மாஃபியா தலைவர் அனுப்பி வைக்கிறார். மாஃபியா குழுவில் பாய் செல்வாக்கான ஆள். தலைவருக்கு அடுத்தபடியாக பிறர் மதிக்கும்படியான திறமை கொண்டவர். அடி உதையில் மட்டுமல்ல புத்தியிலும் கூர்மை அதிகம். இதனால், மாஃபியா தலைவருக்கு தனது இரு மகன்களை விட பாயை பிடித்திருக்கிறது. அவரையே அதிகம் புகழ்கிறார்.  பாய், இந்தியா வந்து மாஃபியா குழுவில் இருந்து விலகியவர்களை தேடிப்பிடித்து விசாரிக்கிறார். அந்த நேரத்தில் ஒரு பெண் அவரைக் காதலிப்பதாக கூறுகிறாள். அவள் நர்சரி ஒன்றை நடத்தி வருகிறாள். பாய், சிலமுறை சிக்கலான நேரத்தில் அவளுக்கு உதவியிருப்பார். அவ்வளவுதான்

உலகை ஆள நினைப்பவனின் மறுபிறப்பு ரகசியங்கள்!

படம்
  ஸ்காலர் ரீஇன்கார்னேஷன்  மாங்கா காமிக்ஸ்  150 அத்தியாயங்கள்---- தற்காப்புக்கலை கற்ற மாவீரன் ஒருவனை, பத்து தற்காப்பு கலை மாஸ்டர்கள் ஒன்றாக சேர்ந்து சதி செய்து  கொல்ல நினைக்கிறார்கள். எதற்கு, அவனால் உலக அமைதி கெட்டுவிடுமாம். மாவீரனைப் பொறுத்தவரை கற்ற டார்க் ஆர்ட்ஸ் கலையை ஆயுதமாக பயன்படுத்துகிறான். அவனிடம் வாளோ, குறுங்கத்தியோ கூட கிடையாது. தற்காப்புக்கலை கற்றவன் ஆயுதங்களை சார்ந்து இருக்ககூடாது என்பதுதான் அவனது உறுதியான கொள்கை. இமாலயம் போன்ற மலைப்பகுதியில் நடக்கும் சண்டையில், புத்த துறவி தற்கொலைத் தாக்குதல் நடத்தி மாவீரனை கொல்கிறார். அவரும் இறந்துபோனதாக காட்டுகிறார்கள்.  பிறகு, அதிக காலமெல்லாம் ஆகவில்லை. அதே மாவீரன் மீண்டும் பிறக்கிறான். டார்க் ஆர்ட்ஸ்  என்ற தற்காப்புக்கலை கற்றதால் கொல்லப்பட்டவன், மீண்டும் அதே கலையை நினைவில் கொண்டு பிறக்கிறான். முற்பிறவி நினைவுகளுடன் நகரத்தின் தலைவர் வீட்டில் பிறக்கிறான். முற்காலத்தில், அனாதை. ஆனால் புதிய மறுபிறப்பில் குடும்பம், பெற்றோர். தங்கை, குறிப்பாக வீடு, செல்வம் என அனைத்துமே இருக்கிறது.  மாவீரனைப் பொறுத்தவரை தனது உலகத்தை ஆளும் ஆசையை அவன் கைவிடவில்ல

அண்ணன் பெயரில் தம்பி ஆள்மாறாட்டம் செய்து குழந்தை தொழிலாளர்களைக் காப்பாற்றும் அரிய கதை! ஆதிகேசவா

படம்
  ஆதிகேசவா 2023 தெலுங்கு  வைஷ்னவ் தேஜ், ஶ்ரீலீலா ஒரு  பாசமான அம்மா. வேலைக்கு செல்வதை விரும்பாத மகன். அவனை திட்டும் அரசு வேலையில் உள்ள அப்பா. லூசு ஹீரோயின். கண்ணில் பட்டவர்களை வெட்டிக்கொல்லும் வில்லன் என எழுபது எண்பதுகளில் பார்த்த அதே கதைதான்.  இந்த படத்தில் விசேஷம். மேற்சொன்ன அனைத்தையும் அப்படியே வைத்துக்கொண்டு நடிக்கும் ஆட்களை மட்டும் புதிதாக போட்டிருக்கிறார்கள். அநியாயத்திற்கு ஜோஜூ ஜார்ஜை கூட்டி வந்து வீணடித்திருக்கிறார்கள். நல்ல நடிகர். இறுதிக்காட்சியில் அவரது தலையை அப்படியே வெட்டி தனியாக எடுக்கிறார்கள். உண்மையில் அங்கு வெட்டப்பட்டது அவர் அல்ல. வைஷ்ணவின் படத்தை பார்க்க வந்த நாம்தான்.  படத்திற்கு ஜி வி பிரகாஷ் மட்டும்தான் சற்றே ஆறுதல் அளிக்கிறார். அடிதடி வன்முறையில் அதிக ஆர்வம் காட்டுகிற இயக்குநர். அடிபம்பு, ட்ரில்லர் மெஷின், சுத்தி, கற்களை அள்ளிப்போடும் கருவி, கடப்பாரை என என்னென்னமோ பொருட்களை எல்லாம் வைத்து வில்லனின் ஆட்களை நாயகன் கொன்று போடுகிறார். பார்க்கவே பீதியாகிறது. பூவையும் பொண்ணுகளையும் அவனுக்கு கண்ணுல காட்டுங்கடா ரொம்ப வன்முறையா இருக்கான் என குருஜி திரிவிக்ரம் எழுதிய வசனம்