இடுகைகள்

நிறுவனம் வளரும்போது மக்களின் நம்பிக்கையைப் பெறுவது முக்கியம்! - டிக்டாக் செயலி இயக்குநர் ஷூ ஸி சூ

படம்
  டிக்டாக் இயக்குநர் ஷூ ஸி சூ shou zi chew டிக்டாக் செயலி, இசைத்துறையை சிதைக்கிறது என சில இசைக்கலைஞர்கள் புகார் சொல்கிறார்களே? நான் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர் என்று முன்னர் கூறினீர்கள். ஆனால் அது உண்மையல்ல. எங்கள் தளத்தில் இருந்து அகற்றப்பட்ட சில பாடல்களை உங்களுக்கு காட்டுகிறேன். அதைப்பார்த்தால் உங்களுக்கு சில விஷயங்கள் புரியும்.  உங்களது செயலியின் வழியாக வெற்றி பெற்ற மனிதர்களையும் பார்த்திருக்கிறேன்.  டிக்டாக்கில் வீடியோக்களை உருவாக்குவதற்கான செலவு குறைவு. 15 நொடிகள் என பாடல்களை சுருக்குவதன் வழியாக நீங்கள் ஏராளமான புதிய பாடல்களைத் தேடி கேட்க முடியும். இப்படி செய்வது மக்களின் கவனத்தை நூறு சதவீதம் மடைமாற்றுகிறது என்று கூறமுடியாது. டிக்டாக்கில் வெற்றி பெற்ற பாடல்கள் பில்போர்ட் பட்டியலிலும் கூட வெற்றி பெற்றவையாக உள்ளன. இப்படி சொல்வதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. மக்கள் எதிர்பார்ப்பதற்கு ஏற்ப கிரியேட்டிவிட்டியாக செயல்படவேண்டியுள்ளது.  டிக்டாக்கின் அல்காரிதத்திற்கு ஏற்ப இசைக்கலைஞர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறீர்களா? நிறையப்பேர்

மீண்டும் பிளேக் நோய்!

படம்
  2005ஆம் ஆண்டுக்குப் பிறகு பிளேக் நோய், வளர்ப்பு பிராணியான பூனை மூலம் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒரேகானில் பிளேக் நோயை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உயிர் எதிரி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பிளேக் நோயை ஏற்படுத்திய பூனைக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் அதை காப்பாற்ற முடியவில்லை. ஐரோப்பாவில் 1346 -1353 காலத்தில் ஏற்பட்ட பிளேக் நோயால் 50 மில்லியன் மக்கள் இறந்தனர். இதை கருப்பு மரணம் என்று அழைத்தனர்.  பிளேக் நோய், யெர்சினா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா விலங்குகளிடம் காணப்படுகிறது. அவற்றிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த பாக்டீரியா நுண்ணுயிரிகளை எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பில் பார்க்க முடியும்.  நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் கடிப்பதன் வழியாக, அதன் உடலில் உள்ள எச்சில், மலம், சிறுநீர் வழியாக, பாதிக்கப்பட்ட விலங்கிடமிருந்து கிருமிகள் மனிதர்களின் நுரையீரலுக்கு செல்வதன் மூலம் என பிளேக் நோய் பரவ மூன்று காரணங்கள் உள்ளன. ஒருவரின் உடலில் பாக்டீரியா சென்ற பிறகு, அவருக்கு காய்ச்சல், தலைவலி, பலவீனம், உடலில் வலி, தளர்ச்சி ஆகிய அறி

காலதாமதம் ஆன காதலை மீட்டெடுக்க முயலும் அறுவை சிகிச்சை வல்லுநர்!

படம்
  நாட் டூ லேட் 11 எபிசோடுகள் சீன டிராமா ராக்குட்டன் விக்கி ஆப் பள்ளிக்காலத்தில் டிங் ரான், தன்னுடன் படிக்கும் மாணவியைக் காதலிக்கிறான். அவன் அகவயமானவன். எனவே, தனது உணர்வுகளை வெளிப்படையாக உணர்த்த முடியவில்லை. அவன் காதலிக்கும் மாணவிக்கும் டிங் ரான் மீது விருப்பம்தான். காதல்தான். ஆனால், அதை அவள் வெளிப்படையாக டேட்டிங் பண்ணலாமா என்று கூறும்போது, டிங் ரான் அதை சரியாக புரிந்துகொள்ளாமல் மறுத்துவிடுகிறான். காலம் கடக்கிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். இந்த முறை, டிங் ரானின் அப்பா, அவன் காதலித்த பெண்ணின் அம்மாவை மணம் செய்துகொள்ள போகிறார். இதனால் டிங்ரான், அவனது முன்னாள் காதலி என இருவருமே ஒரே வீட்டில் வாழவேண்டிய நிலை. அக்கா, தம்பி என உறவு மாறும் சூழ்நிலை. ஒன்றாக வாழும் சூழ்நிலையில் அதுவரை மறைந்திருந்த காதல் புதிதாக துளிர்விடத் தொடங்குகிறது. அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை.  தொடரில் மொத்தம் ஆறு பாத்திரங்கள்தான். முக்கியப்பாத்திரங்கள். அதனால் பழி, வஞ்சம், துரோகம், வன்முறை என பிரச்னை இல்லாமல் பார்க்கலாம். ரசிக்கலாம். பதினொரு எபிசோடுகள்தான். நேரமும் மிச்சம் பாருங்கள்.  டிங் ரா

கருப்பினத்தவர்களுக்கு மருத்துவம், வேலைவாய்ப்பு கிடைக்க உதவும் மனிதர்கள்!

படம்
  லியாண்ட்ரிஸ் லிபுர்ட் leandris liburd கருப்பினத்தவர்களுக்கு பாகுபாடு இல்லாமல் மருத்துவ வசதிகள் கிடைக்க சிடிசி அமைப்பில் ஹெல்த் ஈகுவிட்டி என்ற அமைப்பின் இயக்குநராக இருந்து செயல்பட்டு வருகிறார். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக பணியில் நிறம், இனம் கடந்து அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியம் சார்ந்த புரிதலை ஏற்படுத்த முனைந்திருக்கிறார்.  ஆரோக்கியம் என்றவுடன் உணவுமுறை, உடற்பயிற்சியுடன் பலரும் நின்றுவிடுவார்கள், லியாண்ட்ரிஸ், ஒருவர் மருத்துவரைச் சென்று பார்க்க போக்குவரத்து வசதி இருக்கிறதா என்பது வரையில் கவனிக்கிறார். அரசின் சக துறைகள், மக்களின் இனக்குழு அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பாகுபாடு இல்லாமல் மக்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு செய்து வருகிறார். அலுவலக பணியில் உள்ளவருக்கு நோய் என்றால் கூட சம்பள வெட்டுடன் விடுமுறை கிடைக்கும். அதை லியாண்ட்ரிஸ் மாற்றி, சம்பளத்துடன் விடுப்பு என்பதை நடைமுறையாக்கியிருக்கிறார். நாம் நமக்குள் உள்ள வேறுபாடுகளை களைந்தால்தான் நோய்களை எளிதாக முன்னதாக கண்டறிந்து தடுக்கமுடியும் என்றார் லியாண்ட்ரிஸ்.  -அலைஸ் பார்க் டைம் வார இதழ்  இமானி எல்லிஸ்  imani ellis இமானி, கருப்பின,

ஒருவரின் உரையாடலுக்கு பின்னே பணமே முக்கிய அம்சமாக உள்ளது - எழுத்தாளர் கைலி ரெய்ட்

படம்
  kiley reid எழுத்தாளர் கைலி ரெய்ட், தீவிரமான மையப்பொருளை எடுத்துக்கொண்டு அதை அங்கதமான முறையில் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர். அவரின் புதிய வெளியீடான கம் அண்ட் கெட் இட் என்ற நாவலைப் பற்றி உரையாடினோம்.  புதிய நாவலுக்கான தூண்டுதல் எங்கு, எப்படி கிடைத்தது? 2019ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்ட மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்தேன். பத்தொன்பது முதல் 22 வயது வரையிலான அவர்கள் வேடிக்கையான புத்திசாலித்தனமான மாணவர்களாக இருந்தனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் பணத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய நினைத்தேன். இதுபற்றி மாணவர்களிடம் கேள்விகளைக்கேட்டேன். உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது, வாடகைக்கு ஆகும் செலவு பற்றியெல்லாம் விசாரித்தேன். எனது கதையில் வரும் மில்லி, தான் செய்யும் வேலைகளுக்கு பொறுப்பு எடுத்துக்கொள்பவள். எதிர்காலம் பற்றி மனதில் பெரிய ஆசைகளைக் கொண்டவள். கடின உழைப்பு மட்டுமே முன்னேறுவதற்கு போதுமானதில்லை என்பதை அறிந்திருந்தாள்.  'சச் எ ஃபன் ஏஜ்' என்ற நூலைப் போலவே புதிய நாவலிலும் இளம் கருப்பின பெண், வயதான வெள்ளைப் பெண்ணுடன் குறிப்பிட்ட உறவைப் பேணுகிறாள். அதாவது, மிலி கௌரவ பேராசிரியருட

கருப்பின மக்களின் உரிமைக்காக போராடும் போராளிகள் - ராமோகி ஹூமா, எரின் ஹார்ன் மெக்கின்னே

படம்
  ராமோகி ஹூமா ramogi huma 1995ஆம் ஆண்டு, டோனி எட்வர்ஸ் என்ற விளையாட்டு வீரரை, விளையாட்டு சங்கம் 150 டாலர் மதிப்புள்ள காய்கறிகளைப் பெற்றார் என்று புகார் சொல்லி விளையாட தடை விதித்தது. அதை எதிர்த்து போரிட்ட வழக்குரைஞர் ராமோகி ஹுமா. அப்போது அவர், இப்படியெல்லாம் புகார் கூறி தடைவிதிக்க தொடங்கினால், டோனி தன்னுடைய ஜெர்சியை விற்றால் கூட அதையும் விதியைக்காட்டி தவறு என்று சொல்லி தண்டனை விதிப்பார்கள் என்று கூறி விமர்சித்தார்.  இந்த வழக்குக்கு பிறகு ஹூமா, தேசிய கல்லூரி வீரர்கள் சங்கம் என்ற அமைப்பை 2001ஆம் ஆண்டு தொடங்கினார். விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் இனவெறி, மதம், உதவித்தொகை சார்ந்த பிரச்னைகளை தீர்த்து வருகிறார். 2020ஆம் ஆண்டு, ஆப்பிரிக்க அமெரிக்க வீரர்களை எப்படி விளையாட்டு சங்கம் பயன்படுத்தி சம்பாதிக்கிறது என்ற அறிக்கையை கல்லூரி பேராசிரியர் எல்லன் ஜே ஸ்ட்ராவோஸ்கியுடன் சேர்ந்து வெளியிட்டார். ஹூமாவின் செயல்பாடு காரணமாக பேஸ்பால் விளையாட்டு சங்கம், மூன்றாவது தரப்பு நிதியுதவியை வீரர்கள் பெறலாம் என அனுமதித்துள்ளது. அவர்களுக்கு தகுதிக்குரிய கட்டணத்தையும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. பள்ளியில் விள

ஆறாத ரணம் - ராமர் கோவில்

படம்
  டெல்லியிலுள்ள மசூதி இடிக்கப்பட்ட காட்சி ஆறாத புண்ணில் உப்பை பூசும் ராமர் கோவில் திறப்பு விழா கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் திறந்து வைக்கப்பட்டது. அயோத்தியில் இருந்த நூற்றாண்டு கால மசூதியை, 1992ஆம் ஆண்டு இந்துத்துவ கும்பல் தாக்கி இடித்தது. இதில் திட்டமிட்டு உருவாக்கிய கலவரம் காரணமாக 2 ஆயிரம் மக்கள் இறந்தனர். புதிதாக திறந்த கோவிலின் திறப்புவிழாவில், புதிய யுகம் பிறந்துவிட்டது என இந்திய பிரதமர் மோடி கூறினார். பிறர், இதை இந்து தேசியவாதம் என்றே கருதுகிறார்கள்.  அயோத்தியா நகரம் ராமர் பிறந்த இடமாக கருதப்படுகிறது. அங்குள்ள மசூதியை இடித்தபோது வலதுசாரி இந்துத்துவ கட்சியான பாஜக முன்னேறத் தொடங்கியது. இப்போது ஆட்சியில் உள்ளதால், அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மதச்சார்பற்ற இயல்பு மடைமாறி மதம் சார்பான நாடாக மாற்றப்பட்டுள்ளது பாஜகவின் வெற்றி என்று கூறலாம். காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, முஸ்லீம் அகதிகளுக்கு குடியுரிமையை மறுத்தது, ராமர்கோவிலை கட்டியது ஆகிய அம்சங்கள், இந்தியாவில் வாழும் முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதை நோக்கமாக கொண்டது. இதன் கார

அம்மா பாசம் இல்லாத குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள், குறைபாடுகள்!

படம்
  1950ஆம் ஆண்டுகளில் குழந்தைகள் தாய் மீது காட்டும் பாசம் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகம் பேசப்பட்டன. இதை கப்போர்ட் லவ் என்று குறிப்பிட்டனர். குழந்தைகள் அம்மாவைச் சார்ந்தே இருப்பார்கள். காரணம், உணவுத்தேவை. பிறந்தவுடன் குழந்தைகள் உடனே இயங்க முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். இரண்டு அல்லது மூன்று வயது வரை அவர்களை பாதுகாத்தால் மட்டுமே அவர்களால் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். இதை விலங்குகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பிறக்கும் குட்டிகள் கண்விழித்துப் பார்க்கும்போது எது அசையும் பொருளாக இருக்கிறதோ அதை தங்களது அம்மாவாக கருதுகின்றன. இந்த இடத்தில் குட்டியின் தாய் இருக்கும். விலங்குகளின் பாச ஒட்டுதல் பற்றிய ஆய்வை உளவியல் ஆய்வாளர் கான்ராட் லாரன்ஸ் செய்தார்.  ஜான் பௌல்பை என்ற ஆய்வாளரும் இதேபோன்ற ஆய்வை செய்து காரண காரியங்களைக் கண்டுபிடிக்க முயன்றார். அவருக்கு கிடைத்த ஆய்வு முடிவுகள், லாரன்ஸ் கூறிய கருத்துகளுக்கு மாற்றாக இருந்தன. குழந்தை, அம்மா தவிர வேறு பலரிடம் ஒட்டுதல் கொண்டிருக்கலாம். ஆனால் அம்மாவுடன் கொண்டுள்ள உறவு தனிப்பட்ட ஒன்று. குழந்தை தனது தேவைகளை சிரிப்பு, அழுகை, முனகல் என பல்வேறு வித

2024 ஆம் ஆண்டில் புழக்கத்தில் உள்ள காதல் சொற்கள், அதற்கான அர்த்தம்!

படம்
  பொதுவாக ஆண்டுதோறும் தமிழ் வார இதழ்கள் காதலர் தினத்தை விரும்புகிறார்களோ வெறுக்கிறார்களோ அதெல்லாம் அதன் எடிட்டர் சம்பந்தப்பட்ட விஷயம், ஆனால் மறக்காமல் எதையாவது எழுதி அதை விற்று காசு பார்த்துவிடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆனந்த விகடன் வார இதழ் எப்போதும் போல காதல் ஸ்பெஷல் எல்லாம் செய்தார்கள் என்றாலும் அதில் எந்த புது அம்சமுமில்லை. குமுதம் வார இதழோ, காதலர் தினத்தை ஒரு வாரம் தள்ளி வைத்து அதற்கான ஸ்பெஷல் இதழை வெளியிட்டது. இந்த நேரத்தில் சம்பந்தம் இல்லாமல் இளமை புதுமை எதிலும் முதன்மை என்ற அதன் கேப்ஷன் வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறது. எடிட்டர் சஞ்சீவிகுமார் அதை பார்த்துக்கொள்வார். நமக்கு எதற்கு வம்பு? காதல் உறவில் புழங்கும் சொற்கள், வார்த்தைகள், அதன் பொருள் எல்லாம் தெரிந்துகொண்டால் வாழ்க்கை சிறக்கும். இன்றைய காதலை பெரும்பாலும் இடைமுகமாக இருந்து நடத்தி வைப்பது சமூக வலைதளங்கள்தான். டிண்டர், பம்பிள் என்ற ஆப்களும் இன்றைக்கு பலரும் பயன்படுத்துகிறார்கள்.  GHOSTING ஒருவர் காதல், நட்பு என உறவுகளில் இருப்பார். திடீரென பார்த்தால் அவர் எங்கே போனார் என்றே யாருக்கும் தெரியாது. சமூக வலைத்தள கணக்கு,

அம்மாவை எரித்துக்கொன்ற நான்கு நபர்களை பழிவாங்க முயலும் பரதநாட்டிய மாஸ்டர்!

படம்
  செஸ்  திலீப், பாவனா, சலீம்குமார், அசோகன் விஜய் கிருஷ்ணன் பரதநாட்டியம் சொல்லித்தரும் பள்ளி நடத்துகிறார். அவரது அம்மா, அவனுக்கு அதை கற்பித்திருக்கிறார். அம்மா, காவல்துறையில் வேலை செய்யும் ஒருவரை விரும்பி இணைந்து வாழ்கிறார். திருமணம் செய்துகொள்வதில்லை. இது விஜய்க்கு வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் அவன் அம்மா வருத்தப்படுவாள் என எதையும் கூறுவதில்லை. அவனது பள்ளிக்கு பாவனா கல்லூரி மாணவி வருகிறாள். கல்லூரி ஆண்டுவிழாவில் ஆடும் பரதநாட்டிய பயிற்சிக்காக விஜய்யின் உதவியை நாடுகிறாள்.  அங்கு அவனிடம் பயிற்சி செய்து ஆடி கல்லூரியில் முதல் பரிசு வெல்கிறாள். அதோடு அவளுக்கு விஜய்யை பிடித்திருக்கிறது. இருவரும் சாதி, மதம், அந்தஸ்து பார்க்காமல் காதலிக்கிறார்கள். ஆனால் நாயகியின் தாத்தாவுக்கு அதெல்லாம் குறையாக தெரிகிறது. குறிப்பாக, விஜய்யின் அப்பா யாரென்று கேட்க அவனால் உண்மையைக் கூறமுடியவில்லை. இப்படியாக காதலி, கல்யாணம் என இரண்டுமே கனவு போல கலைந்து போகிறது.   படம் காதலைப் பற்றியதல்ல. பழிவாங்குவதைப் பற்றியது. விஜய்யின் அப்பா, மரணப்படுக்கையில் இருக்கும்போது அவனையும், மனைவியையும் அழைத்து எனது சொத்துகள் ஒரே மகனான உ