இடுகைகள்

கல்வி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனியாக அமர்ந்து வேலை செய்வது உன்னத அனுபவம் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  4.1.2022   அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஜனவரி, பிப்ரவரி என இரண்டு மாதங்களுக்கு கட்டுரைகள் எழுதி மென்பொருளில் பதிந்துவிட்டேன். ஆனால், பத்திரிகை அச்சுக்கு செல்லவில்லை. இதுவரை செய்த வேலைகள் எல்லாம் வீணா இல்லையா என்று தெரியவில்லை. இப்போது உள்ள நிலைமையில் லாக்டௌன் அறிவிப்பார்கள் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை வந்தால் எங்களுக்கு சம்பள வெட்டு நிச்சயம். இம்முறை வேலையில் பிழைத்திருப்போமா என்று தெரியவில்லை. இந்த பத்தியை எழுதுகிற சமயம்,   அலுவல வேலைகளை வீட்டில் இருந்து செய்யும்படி அனுமதி கொடுத்துவிட்டார்கள். நான் வீட்டில் இருந்து வேலை செய்வதை விரும்பவில்லை. அலுவலகத்திற்கு எப்போதும் போல வரப்போகிறேன். சக பணியாளர்கள் இல்லையென்றால் வேலை செய்வது உன்னதமான அனுபவம். என்னால் வெப்பமான எனது அறையில் உட்கார்ந்து வேலை செய்ய முடியவில்லை. புத்தக காட்சி வேறு தள்ளிப்போகிறது. தற்போது எழுதி வரும் அறிவியல் பகுதிகள் சார்ந்து சில நூல்களை வாங்கும் தேவை உள்ளது. கல்விக்கொள்கை பற்றி வினி கிர்பால் இந்து ஆங்கிலத்தில் கட்டுரை ஒன்றை எழுதி

காலநிலை மாற்றத்தை எளிமையாக புரிந்துகொள்ளலாம்! - காலநிலை மாற்றமும், தட்பவெப்பநிலையும்

படம்
    காலநிலை மாற்றம் பூமி தன்னுடைய 4.54 பில்லியன் ஆண்டு வரலாற்றில் அதனுடைய காலநிலையை மாற்றிக்கொண்டே உள்ளது. இதற்கு முக்கியக் காரணங்கள் என சூரியனின் கதிர்வீச்சு, பூமியின் வட்டப்பாதை மாற்றங்கள், விண்கல் மோதுவது என கூறலாம். இதனால் ஏற்படும் காலநிலை மாற்ற விளைவுகளுக்கு அதிக காலம் தேவை. அதாவது, அதன் பாதிப்புகளை உணர்வதற்கு நமக்கு அதிக காலம் பிடிக்கும். இப்போது அறிவியல் ஆராய்ச்சியில் நமக்கு கிடைத்திருக்கும் தகவல்கள்படி மனிதர்களின் செயல்பாட்டால், காலநிலை மாற்றம் வேகமாக நடந்து வருகிறது. மேலும இயற்கையாக நேரும் வேகத்தை விட இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இருநூறு ஆண்டுகளில் தொழில்துறை வளர்ச்சி, நகரமயமாதல், மாசுபாடு, மக்கள்தொகை, காடுகள் அழிப்பு காரணமாக நிலம், கடல், காற்று என பலவும் பாதிக்கப்பட்டுவிட்டது. பூமியின் பல்வேறு நாடுகளை காலநிலை மாற்றம் கடுமையாக பாதித்து வருகிறது. பசுமை இல்ல வாயுக்கள் அதிகளவு வெளியிடப்ப்படுவதால், பசுமை இல்ல விளைவின் தாக்கம் நினைத்துப் பார்க்க முடியாதபடி அதிகரித்து வருகிறது. பூமியிலுள்ள அடிப்படை கனிம வளங்களை பயன்படுத்தி வளர்ச்சி பெறுவதோடு அதனால் ஏற்படும் மாசுபாடுகளைக் க

இருளர்கள் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்கள் என்பதால், பொதுசமூகம் அவர்களை ஏற்றுக்கொள்கிறது! - ஸாய் ஒயிட்டேகர்

படம்
  எழுத்தாளர் ஸாய் ஒயிட்டேகர் டெர்மைட் ஃபிரை என்ற நாவலை ஸாய் ஒயிட்டேகர் எழுதியிருக்கிறார். சிறுமி, அவளின் குடும்பம் சார்ந்த கதையில் இருளர் இனத்தின் வாழ்க்கை, அவர்களின் பிரச்னைகள் பற்றி பேசியிருக்கிறார். இருளர்கள் பற்றி நமக்கு என்ன தெரியும்? பாம்புகளைப் பிடிப்பவர்கள், தேள்கள் வாழும் இடத்தில் குடிசைகளைக் கட்டி வாழ்பவர்கள். கரையான்களை வறுத்து சாப்பிடுபவர்கள். மருத்துவத் தாவரங்கள் பற்றி அகமும் புறமும் அறிந்தவர்கள். பறவைகளின் மொழியை அறிந்து பேசுபவர்கள், மாந்திரீகம் கற்றவர்கள். இவைதான். நூலில் நாம் அறியாத ஏராளமான தகவல்கள் உள்ளன. தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் வாழும் இருளர் குடும்பத்தின் கதை, நாவலில் கூறப்படுகிறது. தேனீ என்ற சிறுமியின் குடும்பம் அங்கு, மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகிறது. 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டம் வழியாக இருளர்கள் காட்டுக்குள் பாம்புகளை பிடித்து அதன் தோலை விற்பது தடை செய்யப்பட்டது. அவர்களின் முக்கிய வாழ்வாதாரம் தடைபட்டபிறகு, வாழ்க்கை எப்படி மாறியது என்பதை நாவல் மையமாக கொண்டுள்ளது. இருளர்கள் தங்கள் பொருட்களை பேருந்துகளில் கொண்டு செல்ல

பெண் தலைவர்களை நம்பாத நாட்டு மக்கள், ஒழுக்கத்தை தூக்கிப்பிடிக்கும் ஊடகங்கள்- பெண் தலைவர்கள் காணாமல் போவது ஏன்?

படம்
  சன்னா மரின் ஜெசிந்தா ஆர்டெர்ன் உலக அரங்கில் பெண் தலைவர்கள் காணாமல் போவது ஏன்? அண்மையில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஆஸ்திரேலியா நாட்டில் உரையாற்றினார். அதில், உலக நாடுகளில் ஏற்பட்டு வரும் ஜனநாயக பாதிப்புகளை பற்றி குறிப்பிட்டு பேசினார். ‘’உலக நாடுகளில் பரிசோதனை முறையாக இரண்டு ஆண்டுகள் பெண்களின் கையில் ஆட்சியை ஒப்படைத்தால் உலகம் சரியான திசையில் செல்லத் தொடங்கும்’’ என்று பேசினார். அவரை நேர்காணல் கண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் அதற்கு பதிலாக “ஆறுமாதங்கள் போதும்” என்று கூறினார். பராக் ஒபாமா தனது மனதில் இருப்பதைக் கூறினாலும் அவர் கூறிய விஷயம் நடைபெறுவது மிகவுமதொலைதூரத்தில் இருக்கிறது. ஐ.நா சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதில், கடந்த இருபது ஆண்டுகளில்தான் பெண்கள் நாட்டின் அதிபர்களாக வரத் தொடங்கியுள்ளனர். இப்படி அவர்கள் நாட்டின் தலைவர்களாக உருவாகி வளரும் எண்ணிக்கையும் ஆண்களோடு ஒப்பிட்டால் குறைவாக உள்ளது. 2022ஆம் ஆண்டு பதினேழு பெண் தலைவர்கள் ஆட்சியில் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை பனிரெண்டாக சுருங்கிவிட்டது. பாலின பாகுபாடு காரணமாக பெண்களுக்கு அரசியலி

கணிதம் கற்றுத்தரும் க்யூமேத் நிறுவனம்! - ஃபார்ச்சூன் 40/40 தொழிலதிபர்கள்

படம்
  மனன் குர்மா மனன் குர்மா 37 க்யூமேத் கணக்கு என்றால் மாணவர்கள் பலருக்கும் தடுமாற்றமாகவே இருக்கிறது. கிராமத்தில் உள்ளவர்களுக்கு ஆங்கிலம் எப்படி தடுமாறுமோ அதேபோல்தான் கணக்கும் நகர, கிராம வேறுபாடின்றி பிரச்னையாக உள்ளது. இதை மனன், தான் கணக்கை கற்றுத்தரும்போதே உணர்ந்தார். அதற்காக தொடங்கியுள்ள நிறுவனம்தான் க்யூமேத். இந்த நிறுவனத்தில் ஒரு ஆசிரியர் நான்கு மாணவர்களுக்கு (ஒரு குழு) என பிரித்து வைத்து கணக்கை சொல்லித் தருகிறார். க்யூமேத் வலைத்தளத்தில் 2 லட்சம் பயனர்கள் உள்ளனர். இவர்களுக்கு கற்றத்தர 5 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். உலகம் முழுக்க 80 நாடுகளில் க்யூமேத் செயல்பட்டு வருகிறது. நான்கு மணி நேரத்தில் கணக்கை சிறப்பாக கற்க முடியும் என நிரூபித்ததோடு, வருமானத்தையும் ஈட்டி வருகிறது. 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட க்யூமேத், விளையாட்டு மூலம் கணக்குகளை கற்பதை அடிப்படையாக கொண்டது. ஜினா கிருஷ்ணன் ஃபார்ச்சூன் 

நகைகளை வடிவமைக்க கற்கும் ஆர்வம் இருந்தால் போதுமானது! - நிஃப்ட் வழங்கும் படிப்புகள்

படம்
  படிப்பு வேண்டாம் - ஆர்வம் இருந்தால் போதும் நகைகளை எளிதாக வடிவமைக்கலாம்! சென்னையிலுள்ள கண்ணகி நகர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பலரும் நகை வடிவமைப்பு சார்ந்த பாடங்களை கற்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு சென்னையில் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனமே காரணம். இந்த நிறுவனம், தற்போது நகை வடிவமைப்பு பற்றிய படிப்புகளை இணையம் வழியாக படிப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளது. இதனால், பள்ளிப்படிப்பை படிக்காதவர்கள், எட்டாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்கள், டீக்கடை, பெட்ரோல் பங்க் என பிழைப்புக்கான வேலைகளை செய்து வருபவர்கள் கூட நகை வடிவமைப்பு பற்றிய படிப்பில் இணைகிறார்கள். படித்து முடித்து நகைகளை தாங்களே வடிவமைத்து வேலையையும் பெற்று வருகின்றனர். கற்களை பதிப்பது, வெல்டிங், மெழுகு மாதிரியில் நகைகளை தயாரிப்பது ஆகிய விஷயங்களில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அரசு, திறன் சார்ந்த வேலைவாய்ப்புகளை ஊக்குவித்து பத்து லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.எனவே, குறைந்த கல்வித்தகுதி இருந்தாலும் கூட கற்றலின் தீப்பொறி உள்ளவர்களுக்கு நகை வடிவமைப்பு த

முழுமையானவராக வாழ்ந்தால் புறவயமான பாதுகாப்பைத் தேடவேண்டியதில்லை - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  கே.நீங்கள் ஒருபோதும் ஏழையின் வாழ்க்கையை வாழ்ந்தவரில்லை. மறைமுகமாக பணக்கார நண்பர்களின் ஆதரவு, இருந்து வந்துள்ளது. ஆனால் மக்கள் தம் வாழ்க்கையில் அனைத்து வித பாதுகாப்புகளையும் விட்டு விட வேண்டுமென்று பேசி வருகிறீர்கள். ஏற்கெனவே இங்கு பலகோடி மக்கள் அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாமல்தான் வாழ்ந்து வருகிறார்கள். நீங்கள் வறுமையான சூழலை அனுபவிக்காதவர், அதேநேரம் , புறவயமான பாதுகாப்பின்மையை அனுபவிக்காதவர். எப்படி இதுபோல பாதுகாப்பை கைவிடவேண்டுமென கூறுகிறீர்கள்? பதில். இந்த கேள்வி தொடர்ச்சியாக என்னிடம் கேட்கப்பட்டு வருவதுதான். நான் இதற்கு முன்னமே பதில் அளித்திருந்தாலும், மீண்டும் பதில் கூறுகிறேன். நான் இங்கு பாதுகாப்பு என்று கூறுவது, மனம் உருவாக்கும்   இசைவான சொகுசான சூழல்களைத்தான். புறவயமான பாதுகாப்பு என்பது, மனிதர்கள் உயிரோடு வாழ ஓரளவுக்கு உதவுகிறது. அதை நான் மறுக்கவில்லை. இந்த இடத்தில் இரண்டையும் ஒன்றாக்கி குழப்பிக்கொள்ளவில்லை. நீங்கள், இப்போது உடல் மட்டுமல்லாமல் மனம் பற்றிய பாதுகாப்பையும் பேசுகிறீர்கள். இதன் வழியாக உறுதியான தன்மை உருவாகிறது. பாதுகாப்பு பற்றி தவறாக புரிந்துகொண்டால், அதைப்

ஒருவரின் முழுமையான திறனை உணரவைப்பதே கல்வி - ஜே.கிருஷ்ணமூர்த்தி

படம்
  தி ரைட் கைண்ட் ஆஃப் எஜூகேஷன் ஆங்கில நூலில் இருந்து… ஜே.கிருஷ்ணமூர்த்தி தமிழாக்க வடிவம்   வாழ்க்கை என்பது நீர்நிலை என எடுத்துக்கொண்டால், அதில் ஒருவர் நீரை வாளி மூலம் அள்ளி எடுத்தால் அந்த வாளியின் கொள்ளளவுக்கே நீர் கிடைக்கும். பெரிய பாத்திரம் வைத்து அள்ளினால், அதிக நீர் கிடைக்கும். அதன் மூலம் ஒருவர் நீர்தேவையை தீர்த்துக்கொள்ளலாம். பற்றாக்குறையை சமாளித்து வாழலாம். ஒருவர் இளமையாக இருக்கும்போது, தன்னைப் பற்றிய தேடுதலை செய்ய அதிக நேரம் கிடைக்கும். பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் ஆராய்ந்து பார்க்கலாம். இந்த சமயத்தில் பள்ளி என்பது ஒருவரின் பொறுப்புகள், ஆர்வம் பற்றி பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவலாம். இந்த நேரத்தில் அவர்கள் தங்கள் மனதில் பல்வேறு புள்ளிவிவரங்கள், தொழில்நுட்ப அறிவு என போட்டு அடைத்துக்கொள்ள வேண்டியதில்லை. இளைஞர்களின் மனம் என்பது வளம் நிறைந்த மண் போல. அதில் பயமின்றி, மகிழ்ச்சியான வளர்ச்சிக்கு உகந்த விஷயங்கள் உருவாகி வளர வேண்டும். சுதந்திரமும் முழுமையான இயல்பையும் சிறுவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது அவசியம்.   எளிமையாக ஒருவர் வாழும்போதுதான் முழுமையான நிலையை கற்றுக்

பயம் ஏற்படுத்தும் மோசமான விளைவுகள் - ஜே.கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி தி ரைட் கைண்ட் ஆஃப் எஜூகேஷன் நூலில் இருந்து… தமிழாக்கம் வெற்றியும் பயமும் பள்ளி, கல்லூரியை நிறைவு செய்பவர்கள் அதுவரை படித்துக்கொண்டிருந்த நூல்களை தூக்கிப் போட்டுவிடுவார்கள். இனிமேல் எதையும் படிக்கவேண்டாம் அல்லது கற்க வேண்டாம் என மனதில் நினைக்கிறார்கள். மீதியுள்ளவர்கள் பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய புத்தகங்களைப் படித்து அறிவுக்கே அடிமையாகிறார்கள். எவ்வளவு நாட்கள் ஒருவர் அறிவைத் தேடுகிறாரோ அந்தளவு அவர் வெற்றியை நோக்கி செல்கிறார். போட்டியிடும் மனப்பான்மை உருவாக, வேகமாக   முன்னே செல்கிறார். இதனால் மக்களுக்கு இடையில் உணவைப் பெறுவதற்கான கடும் போராட்டம் தொடங்குகிறது. வெற்றி பெறுவதுதான் நமது இலக்கு என நினைக்கும் வரை நம் மனதிலுள்ள பயத்தை நம்மால் அழிக்க முடியாது. வெற்றி பெறுவதற்கான வேட்கை ஏற்படுவதே தோல்வி பயத்தால்தான். எனவே, இளைஞர்கள் வெற்றி பெறுவதைக் குறிக்கோளாக கொள்ளக் கூடாது. வெற்றி பெறும் நோக்கம் என்பது பல்வேறு வடிவங்களைக் கொண்டது. அது டென்னிஸ் விளையாடும் மைதானம் தொடங்கி தொழில்துறை, அரசியல் என மாறிக்கொண்டே இருக்கும். நாம் அனைவரும் வரிசையில் முதலிடத்தை பி

மாணவர்களை விஞ்ஞானிகளாக்க புதுமையான முறைகளைக் கையாளும் அறிவியல் ஆசிரியர் - மைதிலி

படம்
  மாணவர்களை விஞ்ஞானிகளாக்க முயலும் ஆசிரியர் – மைதிலி புதுக்கோட்டையில் உள்ள கம்மங்காட்டில் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, அறிவியல் ஈடுபாட்டில் தலைசிறந்த பள்ளி என பெயர் பெற்றுவருகிறது. மாநில அளவில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான பரிசுகளை,  இந்த அரசு பள்ளி மாணவர்கள் பெற்று வருகிறார்கள். இதெல்லாம் கடந்து மத்திய அரசின் உதவித்தொகைக்கான தேர்வுகளை எழுதியதில் 14 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இத்தனைக்கும் என்ன காரணம் என்று கேட்டால், மைதிலி டீச்சர் என கோரசாக சொல்லுகிறார்கள் மாணவர்கள். ‘’எனக்கு மாணவர்களின் ஒழுக்கம் என்பது முக்கியம். பாடங்களை சாதாரணமாக சொல்லித் தந்தபிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுத்தான் மாணவர்கள் நான் கற்றுத்தரும் வழிகளை ஏற்கத் தொடங்கினார்கள்’’ என்று பேசும் மைதிலி, வேதியியல் பட்டதாரி. இவர் அறிவியல் பாடங்களின் முக்கியமான அம்சங்களை சினிமா பாடலாக மாற்றிப்பாடுகிறார். பிறகு, பாடங்களை எப்போதும் போல நடத்துகிறார். இதனால் மாணவர்களுக்கு கடினமான பாடங்கள் கூட எளிதாக புரிகிறது. அறிவியல் கண்காட்சிகளில் கம்மங்காடு அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு கோள் மண்டலம், பிளாஸ்டிக்கில் இருந்து ப்ளூடூ

இருளர் குழந்தைகளை படிக்க வைக்க அரும்பாடுபடும் ஆசிரியர்!

படம்
  கிருஷ்ணகிரியிலிருந்து அறுபது கிலோமீட்டர்களைக் கடந்தால் கேளமங்களம் கிராமத்தை அடையலாம்.இங்கு, மலை மீது அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்பது பிள்ளைகள் படிக்கிறார்கள். இங்கு ஆசிரியராக இருந்தவர், அதிக தூரம் பயணித்து வந்து மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதை சித்திரவதையாக நினைத்து பணிமாறுதல் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். இதனால், ஓராசிரியர் பள்ளியாக செயல்பட்ட தொடக்கப்பள்ளியை அப்படியே விட்டுவிட முடியாது அல்லவா? அப்படித்தான் ஓசூரிலிருந்து டி ஜான்சன் என்ற ஆசிரியர் இங்கு மாறுதல் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஆசிரியராக பொறுப்பேற்றவர், இன்றுவரை அங்கிருந்து கிளம்புவதற்கான வழியைத் தேடாதது ஆச்சரியம். பள்ளியில் படிக்கும் இருளர் குழந்தைகளுக்கு கல்வியை சிறப்பாக சொல்லித் தரவே முயன்றார். ஜான்சன், ஓசூரைச் சேர்ந்தவர். அங்கிருந்து இரு நாட்களுக்கு சோறு கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகிறார். ஒருமுறை வந்துவிட்டால், பிறகு அந்த வாரம் முழுக்க ஊருக்கு செல்லமாட்டார். அங்கேயே தங்கி பாடம் கற்றுக்கொடுத்துவிட்டு வகுப்பறையில் தங்கிக் கொள்கிறார். பிறகு, வார விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று வருகிறார்.

அரசு, அதிகாரம் கட்டுப்படுத்த முடியாத மனத்தை அடைவது சாத்தியம்தான்! ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  சரியான கல்வி ஜே கே கிருஷ்ணமூர்த்தி பெரும்பாலான மாணவர்கள் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்கிறார்கள். ஒரு விஷயத்தை ஆராய்ந்து விசாரணை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கேள்வி  கேட்பதை பெற்றோர் ஆசிரியர் ஆகியோர் ஊக்குவிப்பதில்லை. பிள்ளைகள் கேள்வி கேட்கும் இயல்பு கொண்டவர்களாக அதிருப்தி கொண்டவர்களாக இருப்பது பெற்றோர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பிள்ளைகள் இனி எப்போதும் கேள்வி கேட்காத முறையில் யோசிக்க தெரியாத அளவில் அவர்களை மாற்ற முயல்கிறார்கள். கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் புறக்கணித்து அவர்களை மந்தமான மனிதர்களாக மாற்றுகிறார்கள். தங்களது வாதங்களை பெற்றோர், ஆசிரியர் ஆகியோர் முன்வைக்க கலாசாரம். தொன்மையான பாரம்பரியம், சமூக மதிப்பு ஆகியவற்றை ஆதாரமாக காட்டுகிறார்கள். இதில் வயதானவர்கள் சிறப்பாக செயல்பட்டு பிள்ளைகளை மந்தமானவர்களாக மாற்றுகிறார்கள். பெற்றோர், ஆசிரியர் மேற்சொன்ன முறைகளை கைவிட்டு பிள்ளைகளை, மாணவர்களை விழிப்புணர்வு கொண்டவர்களாக மாற்ற வேண்டும். சிறுபிள்ளைகள் உயிருடன் வாழ்கிறார்கள் என்றால் அதிருப்தி கொண்டவர்களாக அதேநேரம் நம்பிக்கையுடன்தான் இருக்கமுட

இரு கைகள் இல்லாமல் காலில் தேர்வு எழுதி ஆங்கில முதுநிலைப்பட்டம் வென்ற பெண்!

படம்
  நெருங்கிய உறவில் திருமணம் செய்வது மருத்துவ அறிவியல் அடிப்படையில் குழந்தைகள் ஊனமாக முக்கிய காரணம் என அறிந்திருப்பீர்கள். ஆனால் கிராமங்களில் இன்றும் சொத்து, உறவு என ஏதோ காரணம் காட்டி பெண்ணை அவளது தாய்மாமனுக்கு திருமணம் செய்வது நடந்து வருகிறது. ஆர்காடு கிராமம் முகையூர் கிராமத்தில் வாழ்ந்த வீரம்மாளின் மகள் மாயாவுக்கும் இப்படித்தான் அவளது மாமாவுடன் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை பிறந்தபோதுதான் திருமணத்தில் கோரமான விளைவு தெரிய வந்தது. பிறந்த குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லை. குழந்தையைப் பார்க்க வந்த உறவினர்கள், குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என கூறியிருக்கிறார்கள். ஆனால் பேத்தியை வீரம்மாள் அப்படியெல்லாம் கைவிடவில்லை. நான் உயிரோடு இருக்கும்வரை பேத்தி என்னோடு இருக்கட்டும் என நினைத்து குழந்தையை துணியில் பொதிந்து தூக்கி வந்துவிட்டார். இப்படி குழந்தை ஊனமாக பிறப்பதற்கு காரணம், உறவுமுறை திருமணம் என உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் கூறியிருக்கிறார். இப்படித்தான் வளர்ந்த பெண் குழந்தை வித்யா ஶ்ரீ இன்று ஆங்கிலப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவராக, அரசு ஆசிரியையாக மு

பழங்குடி மாணவர்களுக்காக பள்ளிக்கட்டிடம் கட்டியவர் - கிரிதரன்

படம்
    மரத்தின் கீழே மாணவர்கள் படிப்பதைப் பார்த்தால் என்ன நினைப்பீர்கள். ரவீந்திரநாத்தின் சாந்தி நிகேதனைப் போன்ற கல்விமுறையை இங்கேயும் பின்பற்றுகிறார்கள் என்றா? படித்தவர்கள், மாற்றுக்கல்வி முறையை கற்றுத் தரும் ஆட்கள் அப்படி நினைக்கலாம். ஆனால் சாதாரணமான மக்கள் நினைப்பது, பள்ளிக்கட்டிடம் எங்கே என்றுதான். அப்படித்தான் யதார்த்தமாக ஒரு கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்டார் வேலூரின் காட்பாடியைச் சேர்ந்த கிரிதரன். அந்த கேள்விக்கு பதில் தே அவருக்கு மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆம், கிரிதரன் பள்ளி மாணவர்களுக்காக 400 பேர்களிடம் நிதியுதவி பெற்று பள்ளிக்கட்டிடத்தைக் கட்டியிருக்கிறார். இன்னும் அதில் டிவி பொருத்தும் விரிவாக்கத் திட்டம் இருக்கிறதாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது 39ஆம் வயதில் மருதவலியம்படி வந்து பார்த்தபிறகுதான் அவருக்கு பள்ளிக்கட்டிட யோசனை தோன்றியிருக்கிறது. மரத்தடியில் பாடம் கற்ற மாணவர்கள் பல்வேறு இயற்கைச்சூழல் பிரச்னைகளால் கல்வி கற்க முடியாத இடையூறுகள் இருந்தன. காற்று வேகமாக அடித்தால் ஆசிரியர் சொல்லும் வார்த்தைகள் காதில் கேட்காது.   முக்கியமாக இப்படி பாடம் கற்றுக்கொண்டிருந்த மா

ஒழுக்கம் போதித்தால் குழந்தைகளின் மனம் என்னவாக மாறுகிறது? - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஒழுக்கம் ஏற்படுத்தும் பாதிப்பு   அரசியல் மற்றும் தொழில்துறை சார்ந்து ஒழுக்கம் என்பது முக்கியமானது. தற்போதையை சமூக அடிப்படையிலும் உளவியல் ரீதியாகவும் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. ஒழுக்கம் என்பதை ஒருவர் கடைபிடித்தால் செயலின் இறுதியில் முடிவு எளிதாக கிடைத்துவிடும். இப்படிக் கிடைக்கும் முடிவு எளிதாக இருந்தாலும் இதற்கான அர்த்தம் என்பதை கவனிக்க வேண்டும். அதில்தான் பிரச்னை உள்ளது. ஒழுக்கம் மூலம் முடிவு கிடைத்தாலும் அர்த்தம் என்பதே செயலின் முடிவைத் தீர்மானிக்கிறது. ஒழுக்கத்தைப் பின்பற்றுவதில் உள்ள ஆபத்துகளில் ஒன்று, மனிதர்களை விட அமைப்பு முறை முக்கியத்துவம் பெற்றுவிடுவதுதான். ஒழுக்கத்தை பின்பற்றுபவர்களின் இதயம், அன்பை இழந்து வெறுமையாகிவிடும். சுதந்திரம் என்பது ஒழுக்கத்தின் காரணமாக வருவ தில்லை. சுதந்திரம் என்பது ஒருவர் தன் வாழ்வில் இறுதியாக அடையும் லட்சியம் அல்லது குறிக்கோள் அல்ல. வாழ்வில் சாதிக்க நினைக்க தொலைவில் உள்ள லட்சியம் என சுதந்திரத்தை நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. சுதந்திரம் என்பது ஒருவர் தனக்குத்தானே அளித்துக்கொள்ளும் பாராட்டு சான்றிதழ் அல்லது பிறர் புகழ்ந்து பேசும் வார்த்த

சுதந்திரமான மனதை பெறுவது எப்படி? ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்   கலாசாரங்களைப் பின்பற்றும் சமூகத்தில் இருந்துகொண்டு நாம் எப்படி சுதந்திரமான மனதைக் கொண்டிருப்பது? முதலில் சுதந்திரமாக சிந்திப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும். வானில் பறவை பறப்பது போல, ஆற்றில் நீர் நுரையுடன் பெருகி பாய்வது போல உங்களுக்கு ஆர்வம் இருக்கவேண்டும். சுதந்திரமடைவதற்கு உங்களிடம் இப்படி ஒரு வேட்கை உண்டா? அப்படி இருந்தால் எது உங்களை தடுத்துவிடும்? சமூகம், பெற்றோர்   உங்களை மாற்றுவதற்கு முயல்வார்கள். அவர்களை எதிர்க்க முடியுமா? அதை செய்ய உங்கள் மனதில் உள்ள பயம் உங்களைத் தடுக்கிறது. எனவே, உங்கள் வெளியிலிருந்து வரும் அழுத்தங்களை எதிர்க்க முடியவில்லை. உங்களைச்சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர்கள் என்ன சொல்லுவார்கள் என்று பயம் உங்களுக்கு ஏற்படுகிறது. இதுதான் உங்களை சுதந்திரமடைவதிலிருந்து தடுக்கிறது. இதனால்தான் பெற்றோர், சமூகத்தின் அழுத்தங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்வது நடக்கிறது. நான் பட்டினியாக கிடந்தாலும் அழுகி கிடக்கும் சமூகத்திற்கு எதிராக போராடுவேன் என்று உங்களால் கூறமுடியுமா, எது நடந்தாலும் எத்தனை சவால்கள் வந்தாலும் நான் தட