இடுகைகள்

போராட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தியின் ராமன் - புதிய மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி ஆங்கில நாளிதழ்களில் சிறப்புக்கட்டுரைகள் வெளிவந்தன.அதனைத் தொகுத்து தமிழாக்கம் செய்துதான், காந்தியின் ராமன் நூல் வெளியாகியிருக்கிறது.  இந்த நூலின் தொடக்க வடிவம் பிரதிலிபி தமிழில் வெளியானது. ஆனால், அந்த கட்டுரைகள் எழுதப்பட்ட வேகத்தில் பதிவிடப்பட்டதால் அதில் ஒரு சீரற்ற தன்மை இருந்தது. காந்தியின் ராமன் நூல் வடிவத்தில் பிழைகள் நீக்கப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளன.  நூலின் அட்டைப்படம் மட்டும் இப்போது.... பின்னாளில் நூலை தரவிறக்கி வாசிக்கும்படியான இணைய முகவரி வெளியிடப்படும். நன்றி! நன்றி அட்டைப்படம் - dough belshaw, creative commons பிரதிலிபி தமிழ் வலைத்தளம்   டைம்ஸ் ஆப் இந்தியா  நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆட்சியைப் பிடிக்கும் இடதுசாரிகள்!

  லத்தீன் அமெரிக்க நாடுகள் பறக்கும் சிவப்புக்கொடி லத்தீன் அமெரிக்க நாடுகளில் மில்லினிய ஆண்டு தொடங்கி இடதுசாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வென்று வருகின்றன. இங்குள்ள நாடுகள் மெக்சிகோ, ஹோண்டுராஸ், கொலம்பியா, பிரேசில், பெரு, சிலி, பொலிவியா, அர்ஜென்டினா. மெக்சிகோ ஆண்ட்ரெஸ் மானுவேல் லோபெஸ் ஆப்ரோடர் 2018 போதைப்பொருட்களை ஒழிப்பதாக சொல்லி நாட்டின் அதிபரான இடது சாரித் தலைவர். இந்த வகையில் முதல்முறையாக அதிபரான முதல் இடதுசாரி இவரே. இருபது ஆண்டுகளாக இவரே மெக்சிகோவை ஆள்கிறார். அர்ஜென்டினா ஆல்பெர்டோ ஃபெர்னான்டெஸ்   2019 சற்று மையமான இடதுசாரி தலைவர். பொருளாதார சீரற்ற நிலையில் நாட்டின் தேர்தலில் போட்டியிட்டு கடுமையான போட்டியில்தான் வென்று அதிபரானார். பொலிவியா லூயிஸ் அர்சே 2020 மார்க்சியர். தற்போது அதிபராக உள்ளவர் முந்தைய காலத்தில் ஈவோ மொராலெஸ் ஆட்சிக்காலத்தில் பொருளாதாரத்தை உயர்த்திய பெருமைக்கு சொந்தக்காரர். சிலி கேப்ரியல் போரிக் 2021 36 வயதில் நாட்டின் அதிபரான சாதனைக்கு சொந்தக்காரர். நாட்டில் பணவீக்கம் அதிகரித்து ஒருவர் வாழவே அதிகம் செலவு செய்யும் நிலையை மாற்றுவதாக சொல்லி

காந்தியை மாணவர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் - சோபன் ஜோஷி

படம்
                 மாணவர்களிடத்தில் காந்தியை கொண்டு போய் சேர்ப்பது எப்படி?   சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கி இன்றுவரை காந்தி இந்தியாவில் பேசுபொருளாகவே இருக்கிறார் . அவரை நேரடியாக வாழும் மனிதராக பார்க்க முடியாவிட்டாலும் தினசரி வாழ்க்கையி ல் எளிதாக சந்தித்து விடலாம் . அவரை ரூபாய் நோட்டுகளில் , சாலைகளின் பெயராக , குப்பைகளை அள்ளும் திட்டத்தில் காந்தி இருப்பார் . அவரின் வட்டமான கண்ணாடி இருக்கும் ., நேர்மை , உண்மை என்று பேசப்படும்போதும் காந்தியை தவிர்த்து வேறு யாரை நாம் கூறிவிடமுடியும் . இன்று வாட்ஸ் அப் மூலம்தான் பலரும் செய்திகளை அறிகிறார்கள் . அதை வைத்தே அனைத்தையும் தெரிந்துகொண்டதாக நினைக்கிறார்கள் . இந்தியாவைக் கட்டமைத்தவர்களை நாக்கு வளைந்த வரை அவதூறு பேசுகிறார்கள் . குற்ற உணர்வேயின்றி , சுய லாபத்தை முன்னிறுத்தி செயல்படுகிறார்கள் . மனிதர்கள் பலவகை . அப்படித்தான் இருப்பார்கள் . இன்று வலது சாரிகள் தங்களது ஆட்சியில் காந்தியை பல்வேறுவிதமாக விவாதப் பொருளாக்கி அவரை ஓரங்கட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள் . அது எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை . அவர் எழுதிய பேசிய எழுத்துகளே நூற

குஜராத்தில் சிறுபான்மையினரின் குரல்! - ஜிக்னேஷ் மேவானி

படம்
  மத்திய அரசின் தேசதுரோக குற்றச்சாட்டுக்காக குஜராத்தின் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி அசாம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு அலைகழிக்கப்பட்டவதை அறிவீர்கள். ஜிக்னேஷ் பற்றி சில விஷயங்களைப் பார்ப்போம்.  அவனுக்கு புரட்சியில் ஆர்வமிருக்கிறது. எப்போதும் அதை துடிப்பாக பேசிக்கொண்டிருப்பான். நான் புரட்சி என்பது நடந்தால் 1947க்கு முன் நடந்திருக்கவேண்டும் என்று கூறுவேன். ஆனால் அவன் புரட்சி காரணமாக சிறைக்கு போவதற்கும் தயார் என்றுதான் கூறுவான் என்றார் ஜிக்னேஷ் மேவானியின் தந்தை நட்வார்பாய் பார்மர்.  பிரதமர் மோடி பற்றி ஒரே ஒரு ட்வீட் பதிவை எழுதியதற்காக எம்எல்ஏவான ஜிக்னேஷை காவல்துறை அலைக்கழித்தது. அதுவும் மாநிலம் விட்டு மாநிலம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி மாநிலம் விட்டு மாநிலம் வந்து கைது செய்வது கொலை, கொள்ளை குற்றங்கள் என்றே இதுவரை இருந்தது. பாஜக அரசின் கைங்கர்யத்தில் இது  அரசியல்வாதிகளுக்கும் மாறியுள்ளது. ட்வீட் குற்றம் மட்டும் சிறையில் அடைக்க பத்தாதோ என நினைத்த காவல்துறை பெண் காவலரைத் தாக்கினார் என மற்றொரு குற்றச்சாட்டையும் பதிவு செய்தது. ஆனால் நீதிமன்றத்தில், வழக்குப்பதிவு பல் இளித்துவ

கனவு காண்பதில் எந்த சமரசமும் தேவையில்லை! - சித்தானந்த் சதுர்வேதி

படம்
சித்தானந்த் சதுர்வேதி  நடிகர்.  உங்கள் வாழ்க்கை இப்போது எப்படி மாறியிருக்கிறது? கல்லி பாய் படத்தில் நடிக்கும்போது நான் ராப் பாடல்கள் மற்றும் கவிதைகளை எழுதிக் கொண்டு இருந்தேன். நான் கிடைக்கும் இடைவெளியில் பாடல்களை எழுதிக்கொண்டிருப்பேன். இதைப்பார்க்கும், விஷயத்தை கேள்விப்படும் பலரும் நான் உண்மையில் ராப்பாடகர் என நினைப்பார்கள். நான் எழுதுவது மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.  பண்டி ஆர் பப்ளி படத்தின் கதையைக்கேட்ட பிறகு, அந்த பாதிப்பில் நான் நீண்ட பாடல் ஒன்றை எழுதினேன். எனது பாத்திரங்களை மையப்படுத்தி நான் டைரி ஒன்றை எழுதி வருகிறேன். நான் அதை எழுதுவதோடு அதனை பதிவு செய்தும் வருகிறேன். நடிப்பிற்கு நான் இப்படித்தான் தயாராகிறேன். படப்பிடிப்பு தொடங்கும்போது, நான் இப்படி பதிவு செய்த எனது குரலை கேட்பேன். இது கதாபாத்திரத்திற்கு ஏற்ப தயாரித்துக்கொள்ள உதவுகிறது. நான் இப்படி பாத்திரத்திற்குள் உள்ளே சென்றபோது, அந்த பாத்திரம் எப்படி யோசிக்கும் என்றுதான் நினைப்பேன். சிந்திப்பேன். நான் இப்படித்தான் எனக்கு கொடுக்கப்படும் பாத்திரங்களை நடிக்கிறேன். எழுதுவதில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி? ச

இஸ்லாமிய நாடுகளில் முகத்திரை அணியும் சட்டங்கள்!

படம்
  சௌதி அரேபியா  பொதுவாக இங்கு ஹிஜாப், நிகாப், பர்கா என்ற உடைகள் சாதாரணமானவை. இங்கு பெண்கள் இந்த  உடைகளில் எது தங்களுக்கு பிடித்ததோ அதை அணிகிறார்கள். 2018ஆம் ஆண்டு, சௌதி இளவரசர் முகமது பின் சல்மான், நாகரிகமாக பொறுப்புடன் உடை அணிந்தால் போதுமானது என கூறிவிட்டார்.  ஈரான் 1979ஆம் ஆண்டு நாட்டில் ஈரான் புரட்சி நடைபெற்றபிறகு, ஹிஜாப்பை பெண்கள் அணியவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. 1995ஆம் ஆண்டு ஒரு சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி பொதுஇடத்தில் முகத்திற்கு மறைப்பின்றி ஒரு பெண் வந்தால், அவர்களை அறுபது நாட்கள் சிறையில் அடைக்க முடியும்.  பாகிஸ்தான்  2019ஆம் ஆண்டு  பெஷாவர், ஹமீர்புர் ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு சுற்றறிக்கை  வந்தது. அதில், அனைத்து பெண் மாணவிகளும் அபயா எனும் உடையை அணிய வேண்டும் என கூறியிருந்தது. ஆனால் இதற்கு எதிராக போராட்டம் நடைபெற்றதால் சட்டம் திரும்ப பெறப்பட்டது.  இந்தோனேஷியா 2021ஆம் ஆண்டு பள்ளிகளில் மத ரீதியான உடைக்கட்டுப்பாடு இருக்காது என கூறப்பட்டு, முந்தைய சட்டங்கள் மாற்றப்பட்டன.  இந்தியா டுடே  பின்டிரெஸ்ட் 

இந்தியாவில் அதிகம் அறியப்பட்ட முகங்கள்! - 2021 முகங்கள் புதிது

படம்
  கங்கனா  ரணாவத் மணிகர்ணிகா படத்தில் பொம்மைக் குதிரையில் அபிநயம் பிடித்து தேசப்பற்றில் பொங்கினார். ஆனால் ஷூட்டிங் முடிந்தும் கூட அம்மணியிடம் வைப்ரேஷன் குறையவில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகுதான் கிடைத்தது, அமைதி வழியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளை தீவிரவாதிகள் என்று சொன்னது, விவசாயிகளை ஆதரித்த அமெரிக்க பாப் பாடகியை முட்டாள் என்று சொன்னது என ஏதாவது உளறி வைத்துக்கொண்டே இருந்தார். இதனால் அவர் பத்ம விருது வாங்கிய செய்தி கூட காணாமல் போனது. தமிழில் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக அரிதாரம் பூசி நடித்தார். ஆனால் படத்தில் அவருக்கு எதுவுமே சிங்க் ஆகவில்லை என்பதால்,  படம் அப்பளமாய் நொறுங்கியது. நடிப்பை விட வாய்ப்பேச்சால் சமூக வலைத்தளங்களில் வலிமையாக இருந்தார் கங்கனா.  நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றார். அப்புறம் அவர் வேறு ஏதும் செய்யவேண்டியிருக்கவில்லை. ஏராளமான பரிசுகள் அவருக்கு வழங்கப்பட்டன. நூறு ஆண்டுகளாக தங்கப்பதக்கம் வாங்க காத்திருந்தோம் என ஊடகங்கள் உணர்ச்சி கொந்தளிப்பில் பொங்கின. இந்த நேரத்தில் பாஜக ஐடி ஆட்

எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையை பாதுகாக்க நினைக்கிறேன் - ரிதிமா பாண்டே , இயற்கை செயல்பாட்டாளர்

படம்
  ரிதிமா பாண்டே ரிதிமா பாண்டே இயற்கை செயல்பாட்டாளர் இவரை இந்தியாவின் கிரேட்டா துன்பெர்க் என்று சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் அப்படி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இவருக்கென ரிதிமா பாண்டே என்ற பெயர் இருப்பதால், அதனையே சொல்லி அழைப்போம். 2007ஆம் ஆண்டு பிறந்தவர் ரிதிமா பாண்டே. உத்தரகாண்டில் பிறந்தவரின் தந்தையும் கூட சூழல் சார்ந்த செயல்பாட்டாளர்தான். வெள்ளம், நிலச்சரிவு சார்ந்த பிரச்னைகள் பத்தாண்டுகளாக நடப்பதை கவனித்து வந்து பிறகே சூழல் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.  2016ஆம் ஆண்டு தனது ஒன்பது வயதில் அரசுக்கு எதிராக மாசுபாடு தொடர்பாக புகார் ஒன்றை எழுதி அனுப்பினார். அதற்கு முன்னரே தேசிய பசுமை தீர்ப்பாணையத்திற்கு இதுபோல புகார் ஒன்றை தெரிவித்திருந்தார். ஆனால் அந்த மனுவை தீர்ப்பாணையம் தள்ளுபடி செய்துவிட்டது. பிறகு 2016ஆம் ஆண்டு ரிதிமா, தன்னோடு பதினாறு குழந்தைகளை சேர்த்துக்கொண்டு ஐ.நாவில் மாசுபாட்டு பற்றி புகார் மனுவை வழங்கினார். இதில் துருக்கி, அர்ஜென்டினா, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகள் மாசுபாடு பற்றி எடுக்க வேண்டிய நடவடிக்கையை குறிப்பிட்டிருந்தார்.  2020ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடிய

அணைகளை எதிர்த்துப் போராடும் இயற்கை போராளி மேதா பட்கர்!

படம்
    இயற்கை செயல்பாட்டாளர் மேதா பட்கர் மேதா பட்கரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இயற்கை சார்ந்த இதழ்களில் இவரைப் பற்றி அதிகம் வந்திருக்கும். நர்மதா நதியில் கட்டப்படும் அணைகளை தடுத்து போராட்டங்களை நடத்திய வகையில் உலகம் முழுக்க பிரபலமானார். நர்மதா பச்சா அந்தோலன் எனும் அமைப்பை கட்டமைத்து அணையால் ஏற்படும் பாதிப்பால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என போராட்டம் நடத்தினார்.  இயற்கைப் போராளி மேதா பட்கர் சர்தார் சரோவர் எனும் அணையைக் கட்டக்கூடாது என 22 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய உறுதியான மனம் கொண்டவர் மேதா பட்கர். இந்த போராட்டங்கள் கூட 32 ஆண்டுகள் கள ஆய்வுகள், விவாதங்களுக்கு பிறகே நடைபெற்ற ஒன்று. டாடாவின் சமூக அறிவியல் கழகத்தில் சமூகப் பணி படிப்பில் எம்.ஏ படித்தவர் மேதா. மும்பையில் வாழும் குடிசைவாசிகளுக்கான வீடு கோருதல், ஆந்திராவில் கோவ்வாடா அணு உலை திட்டத்திற்கு எதிர்ப்பு, ஆக்கிரப்பு வீடுகளுக்கு எதிர்ப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்கங்களில் அரசியல்வாதிகள் இருப்பதற்கு எதிர்ப்பு என மேதா பட்கர் ஏராளமான பிரச்னைகளுக்கு போராடியுள்ளார்.    சாதி, மதவாதம் மக்களுக்கு எதிரான புறக்கணிப்புகள

சர்ச்சைகளின் நாயகி அருந்ததி ராய்!

படம்
  எழுத்தாளர் அருந்ததி ராய் சூசன்னா அருந்ததி ராய் நவம்பர் 24ஆம் தேதி, 1961ஆம் ஆண்டு பிறந்தவர். பெண்ணியவாதியான மேரி ராய், கொல்கத்தாவின் தேயிலை தோட்ட மேலாளர் ரஜிப் ராய் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு சகோதரர் ஒருவர் உண்டு. அவரது பெயர் லலித்குமார் கிறிஸ்டோபர் ராய்.  ஷில்லாங்கில் பிறந்தவர், கேரளா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் வளர்ந்தார். இவரது இரண்டாவது வயதிலேயே பெற்றோர் விவாகரத்து பெற்றுவிட்டனர். கட்டுமானம் வடிவமைப்பு படிப்பில் பட்டம் பெற்றுள்ளார் அருந்ததி ராய். 1988ஆம் ஆண்டு அன்னி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ் என்ற படத்திற்கு திரைக்கதை எழுதி தேசிய விருதை வென்றார். 1992ஆம் ஆண்டு எலக்ட்ரிக் மூன் என்ற படத்திற்கு திரைக்கதை எழுதினார். இதே ஆண்டில்தான் சிறிய விஷயங்களின் கடவுள் என்ற நூலை எழுத தொடங்கினார். 1996ஆம் ஆண்டில் நூல் பணியை முடித்தார். இந்த நாவலுக்கான பரிசாக மேன்புக்கரை 1997இல் வென்றார். இந்த நாவல்தான் உலகம் முழுக்க இவரை அறிய வைத்தது.  சிறிய விஷயங்களின் கடவுள் சுயசரிதைத் தன்மை கொண்ட நாவல் ஆகும். ரகேல், எஸ்தா என இரட்டையர்களின் வாழ்க்கையை அரசியல், ஜாதி பின்புலத்தில் வைத்து பேசுகிற கதை இத

விவசாயிகள் போராட்டமும், உள்குத்து அரசியலும்!

படம்
  விவசாயிகள் போராட்டமும், உள்குத்து அரசியலும் கடந்த சில மாதங்களாக பாஜக அரசு ஆளும் ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் வேகம் பெற்றுள்ளது. இதனை முடக்க அந்த மாநில அரசு இணையத்தை துண்டித்தது. தங்களது உரிமைகளுக்காக போராடிய மக்கள் மீது, தேச துரோக வழக்கு போடப்பட்டது. தடியடி நடத்தி விவசாயிகளை காவல்துறையினர் தாக்கினர். ஆனாலும் கூட விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ஹரியானா முதல்வர் எம்எல் கட்டார், உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோர் இதெல்லாம் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசின் சதி என ஊடகங்களில் பேட்டி தட்டி விட்டுக்கொண்டிருக்கின்றனர்.  என்னதான் பிரச்னை? ஹரியானா அரசு, ஜாட் அல்லாதவர்களின் வாக்குகளை கணக்கு செய்து போராட்டத்தை முக்க நினைக்கிறது. ஒருவகையில் இப்படி போராட்டத்தை முடக்குவதும் கூட பிரித்து ஆளும் தந்திரம்தான். பின்னாளில் இவர்கள் ஜாட் இனத்தவர், ஜாட் அல்லாதவர் என வாக்குவங்கி பிரியும் என்கிறார் அரசியல் செயல்பாட்டாளர் பிரமோத் குமார். மத்திய அரசும் தன் பங்குக்கு விவசாயிகள் போராட்டத்தை தீவிரவாத த்துடன் இணைத்து பார்த்து பேசி வருகிறது. ராம் ராம் என்று கூறுபவர்களை எப்படி நீங்கள் காலி

மகனின் கொள்கைக்காக தன்னையே அர்ப்பணிக்கிற தாய்! - தாய் - மார்க்சிம் கார்க்கி

படம்
மாதிரிப்படம் தாய்  மார்க்சிம் கார்க்கி தொ.சி. ரகுநாதன் ரஷ்யாவில் மன்னருக்கு எதிராக கலகம் செய்யும் தொழிலாளர்களின் கதை. இதில் முக்கியமான பாத்திரங்களாக பாவெல், அவனது அம்மா பெலகேயா நீலவ்னா ஆகியோர் உள்ளனர்.  நீலவ்னாவுக்கு நடக்கும் திருமணமே எதிர்பாராத விபத்தாக அவளது சொல்லில் வெளிப்படுகிறது. அதற்குப் பிறகும் அடி, உதை என வாழ்கிறாள். குழந்தை பிறந்தாலும் அவளது வாழ்க்கை பெரிய மாற்றங்களின்றி வலியோடுதான் இருக்கிறது. பாவெல் அவனது அப்பா குடிநோயால் இறந்தபிறகு ஆலை வேலைக்கு செல்கிறான். பிறரைப் போல குடிக்காமல் வேலை முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து நண்பர்களிடம் வாங்கிய நூல்களை படித்துக்கொண்டிருக்கிறான். இது அவனது அம்மாவுக்கு முதலில் பெருமையாக இருந்தாலும் பின்னர் ஏதோ பிரச்னையாக தோன்றுகிறது.  பாவெல் அடிக்கடி வெளியே கிளம்பிவிட்டு தாமதமாக வீடு வருகிறான். சில நாட்களில் வீட்டுக்கு வருவதில்லை. அவன் எங்கு செல்கிறான் என்பதை நீலவ்னா அறியும்போது அதிர்கிறாள். நாட்டை ஆளும் ஜார் மன்னருக்கு எதிரான சோஷலிச அணியில் மகன் சேர்ந்துவிட்டான். கட்சியில் சேர்ந்து படிப்பது, எழுதுவது, பேரணிகளை நடத்துவது என சென்றுகொண்டிருக்கிறான்.  நீல

செடி, கொடிகளுக்கு காவி வண்ணம் பூசும் புதிய சட்டங்கள்! - லட்சத்தீவு மக்களுக்கான அடடே சட்டங்கள்!

படம்
                    லட்சத்தீவுக்கு ஆரஞ்சு வண்ணம் பூசும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன . இதன்படி அதன் நிர்வாகி பிரபுல் கே படேல் பல்வேறு சட்டங்களை உடனே அமல்படுத்தியுள்ளார் . இதெல்லாம் எதற்கு என பார்த்தவுடனே படிக்கும் யாருக்கும் தெரிந்துவிடும் குடுமிகளை கொண்ட திட்டங்கள் அவை . .. தீவில் முறையான சான்றிதழ் இல்லாமல் யாரும் பசுக்களை கொன்று சமைத்து சாப்பிடக்கூடாது . மாட்டுக்கறியை விற்பதும் குற்றம் என அறிவிக்கப்படுகிறது . மீறினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு , ஓராண்டிற்கு மேல் சிறைத்தண்டனையும் ஏற்பாடாகியிருக்கிறது . சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக மாற்ற இந்த சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறதாம் . இதற்கு எதிராக உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் . அவர்களின் அனுமதி பெறாமல் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது என கருத்து கூறியுள்ளனர் . இரண்டே குழந்தைதான் 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து திட்டப்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் யாரு்ம் பஞ்சாயத்து உறுப்பினராக முடியாது . இப்போது பதவியில் இருப்பவர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்க

உற்பத்தி துறையை மேம்படுத்த மேக் இன் இந்தியா, ஆத்மாநிர்பார் போதாது! சேட்டன் பகத்

படம்
                இந்தியாவின் உற்பத்திதுறையை மேம்படுத்த மசோதா தேவை ! சேட்டன் பகத் சில சமயங்களில் நமக்கு மக்கள் எதிர்க்கும் விஷயங்களில் கூட நல்ல விஷயங்கள் கிடைக்கும் . வகுப்பறையில் மாணவர்களுக்கு பாஸ்தா , பீட்ஸா கொடுப்பதை விட காய்ச்சலைக் குணப்படுத்த கசப்பு மாத்திரை கொடுக்கும் மருத்துவர் முக்கியமானவர் . அதேபோலத்தான் அரசு மக்களுக்கு ஏராளமான இலவச சலுகைகளை வழங்கி பின்னர் வரி ஏற்றி மக்களை வருத்துவதை விட கடினமான முடிவுகளை முன்னமே எடுத்து மக்களை காப்பது சிறப்பானது . பொதுவாக மக்கள் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி என்பதை விரும்புவதில்லை . ஆனால் , அதனை அவர்கள் செய்யும்போது கிடைக்கும் பலன்கள் அபாரமானவைதானே ! நாம் பல்லாண்டுகளாக காத்திருந்துவிட்டோம் . உற்பத்தித்துறை சார்ந்த துறையில் இந்தியா முன்னேறுவதற்கான திட்டங்கள் உருவாகவில்லை . ஆனால் இப்போது இந்திய அரசு அந்த திசையில் தனது காலடிகளை மெல்ல எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளது . மேக் இன் இந்தியா , ஆத்மாநிர்பார் ஆகிய திட்டங்களை இந்த வகையில் நாம் கூறலாம் . அரசு இத்திட்டங்களுக்காக லட்சம் கோடிகளில் நிதியை ஒதுக்கி வருகிறது . இப்படி