இடுகைகள்

மாசுபாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பருவநிலை வேறுபாடுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலை! - டேட்டா ஜங்ஷன்

படம்
  டேட்டா ஜங்ஷன் கரிம எரிபொருட்களால் உலகில் 90 சதவீத குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெப்ப நிலை உயர்வால் 820 மில்லியன் குழந்தைகள் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். அதாவது மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் எனலாம்.  920 மில்லியன் குழந்தைகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவநிலை மாறுபாட்டால் பஞ்சம், வறட்சி, நீரைப் பெறுவதற்கான போட்டி ஆகியவை எதிர்காலத்தில் ஏற்படும்.  மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதில் 600 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கில் ஒரு குழந்தை என தோராயமாக மதிப்பிடலாம்.  நானூறு மில்லியன் குழந்தைகள் புயல்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கடல்சார்ந்த வெள்ளத்தாலும் ,புயல்களாலும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.  2020இல் 33 மில்லியன் குழந்தைகள் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட பருவநிலை மாற்றம் காரணமாக உள்ளது.  டைம்ஸ் எவோக் 2 பிற இடங்களை விட ஆர்க்டிக் இருமடங்கு வேகத்தில் வெப்பமாகி வருகிறது. இதனால் கடந்த பத்தாண்டுகளில் 14 சதவீத பனிக்கட்டிகள் கரைந்துள்ளன. உணவுக்கும், நீருக்கும் பனிக்கட்டிகளை துருவக்கரடிகள் சார்ந்துள்ளன. அவை அழிந

உணவு பாதுகாப்புக்கு ஆபத்தாகும் எத்தனால் உற்பத்தி!

படம்
  உணவுப்பயிர்கள் எரிபொருளாகிறது... இந்திய அரசு எரிபொருளில், எத்தனால் கலக்கும் திட்டத்தை வைத்துள்ளது. தற்போது 8 சதவீதம் கலக்கப்படும் எத்தனாலின் அளவை விரைவில் இருபது சதவீதமாக்க அரசு யோசித்து வருகிறது. அரிசி, சோளம், கரும்பு ஆகியவற்றிலிருந்து எத்தனால் தயாரிக்கப்பட்டு வருகிறது. எத்தனாலை இப்பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.  எத்தனால் கடந்த ஜூன் மாதம், ஒன்றிய அரசு எத்தனால் உற்பத்தியை ஐந்தே ஆண்டுகளில் இருமடங்காக்க திட்டங்களை வகுத்துள்ளது. 2025ஆம் ஆண்டில் எரிபொருளில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்டிருக்கும். இதற்காக எத்தனாலை உற்பத்தி செய்ய ஏதுவான பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு நிதியுதவிகளை வழங்கவும், சூழல் தொடர்பான அனுமதியை கொடுக்கவும் தயாராக  இருக்கிறது அரசு. இதன் காரணமாக அரசிடம் உள்ள தானியங்கள் நிறுவனங்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. இதனால் இத்தானியங்கள் தேவைப்படும் மக்கள் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.  அரசுக்கு புதிய எத்தனால் திட்டம் மூலம் ஆண்டுக்கு 4 பில்

நச்சுப்பொருட்களைக் கொண்ட பட்டாசுகளை கைவிடலாமா?

படம்
தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிப்பது என்பது கூடினாலும் குறைவதில்லை. வெடிப்பது மகிழ்ச்சிக்கான விஷயமாக இருந்தாலும் இதிலுள்ள வேதிப்பொருட்கள் காற்றை தொடர்ச்சியாக மாசுபடுத்தி வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு உச்சநீதிமன்றம், காற்றை  மாசுபடுத்தும் பேரியம் உப்புகளைக் கொண்டு பல நிறுவனங்கள் பட்டாசுகளை தயாரிக்கின்றன. மேலும் இதனை தயாரிப்பவர்களின் பெயர்களும் பட்டாசுகளில் இடம்பெயர வேண்டும் என்று கூறியது. ஆனால் எந்த முன்னேற்றமும் இதில் ஏற்படவில்லை. சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. மேலும் காற்று மாசுபடுதல் காரணமாக குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதும் அதிகரித்து வருகிறது.  மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே உச்சநீதிமன்றம், பட்டாசுகளை வெடிக்க தடை விதித்தது. குறைந்த மாசுபாடுகளைக் கொண்ட பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம் என பரிந்துரைத்தது. இதுதொடர்பான வழக்கை அர்ஜூன் கோபால்தாஸ் மற்றும் சிலர், அரசியலமைப்புச்சட்டம் 21 யைச் சுட்டிக்காட்டி தொடுத்தனர். பட்டாசுகள் வெடிப்பதால் பல்வேறு வேதித்துகள்களும் வாயுக்களும் வெளியாகின்றன. இதில் கடும் வெடிச்சத்தமும், பல்வேறு வண்ண ஒளியும

சந்தையில் அசத்தும் இசைக்கிள்கள்!

படம்
              இ சைக்கிள் சக்தி சாதாரண சைக்கிள் ஓட்டுவதற்கான இடங்கள் கூட கார் பார்க்கிங்குகளாக மாற்றப்பட்டுவிட்டன . இருந்தாலும் கூட எரிபொருள் விலையுயர்வு ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் சைக்கிள் என்பது முக்கியமானதுதான் . பராமரிப்பு செலவு குறைவு என்பதோடு இதனை பயன்படுத்துவது உற்சாகமான அனுபவத்தை தரும் என்பது நிச்சயம் . இ சைக்கிள்கள் எடை குறைவாக , கவர்ச்சிகரமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன . பேட்டரியுடன் ஆற்றலுடன் உள்ளதோடு காரை விட குறைந்த மாசுபாட்டைய ஏற்படுத்துகிறது . இப்போது இதில் சிறப்பான இ சைக்கிள்களைப் பார்ப்போம் . ஆல்ரவுண்டர் பெஸ்ட் டர்போ வாடோ எஸ்எல்   சைக்கிளின் பிரேம்களில் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள ஸ்டைலான இபைக் இது . பார்க்க சாதாரண சைக்கிள் போல இருந்தாலும் மணிக்கு 28 கி . மீ வேகத்தில் காட்டுப்பகுதிகளுக்குள் செல்லலாம் . எடை 33 பவுண்டுகள்தான் என்பதால் சைக்கிளின் ஹேண்டிலை பிடிக்கும்போது கை வலிக்காது . வேறுபட்ட நிலப்பரப்புகளிலும் அதிக கஷ்டமின்றி பயணிக்க முடியும் . விலை 4,750 டாலர்கள் சிறந்த பயணம் பேட்ச் இபைக்   2,100 டாலர்களுக்கு வாங்கும

எளிதாக கிடைக்கும் பிளாஸ்டிக்!

படம்
                பிளாஸ்டிக் . இன்று சூழலியலாளர்கள் கனவிலும் கூட எதிர்த்து வரும் பொருள் . ஆனால் பிளாஸ்டிக் , புழக்கத்திற்கு வந்தபிறகுதான் மக்களுக்குத் தேவையான தினசரி பொருட்களின் விலை குறைந்தது . இன்று எந்த பொருளையும் எளிதாக எடை குறைந்த மலிவான விலையில் பிளாஸ்டிக்கால் உருவாக்க முடியும் . கச்சா எண்ணெய் , எரிவாயு ஆகியவற்றிலிருந்து பிளாஸ்டிக் பெறப்படுகிறது . கார்பன் கொண்டுள்ள மூலக்கூறுகளை பாலிமர் என்று கூறலாம் . பெரும்பாலான தொழிற்சாலை தயாரிப்பு பிளாஸ்டிக்குகளில் மோனோமர்கள் பயன்படுகின்றன . பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வது என்பது அதனை அதிக வெப்பநிலையில் உருக்கி வேறு ஒரு பொருளாக மாற்றுவதுதான் . தெர்மோபிளாஸ்டிக்குக்குகளை எளிதில் உருக்கினாலும் தெர்மோசெட் வகை பிளாஸ்டிக்குகளை இப்படி மாற்றி வேறு பொருட்களாக மாற்றுவது கடினம் . கச்சா எண்ணெய வளம் என்பது தீர்ந்துபோக கூடியது என்பதால் , கரும்பு , சோளத்திலிருந்து பயோபிளாஸ்டிக் தயாரிக்கும ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன . இதன் விளைவாக பிளாஸ்டிக்கை 3 டி பிரிண்டில் முறையில் உறுப்புகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்த முடியும் . இதிலுள்ள வக

நுண்ணுயிரிகள் கண்காணிப்பு!

படம்
  நுண்ணுயிரிகள் கண்காணிப்பு ஆஸ்திரேலியாவில் நிலம், நீர் உள்ளிட்டவற்றிலுள்ள நுண்ணுயிரிகளான பாக்டீரியா, பூஞ்சைகளைக் கண்டறிந்து ஆவணப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிம் லேமா முயற்சித்து வருகிறார். இவர், பாசிகள் எப்படி நுண்ணுயிரிகளை ஈர்க்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். பாசிகள் வெளியிடும் குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் நுண்ணுயிரிகளை ஈர்க்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளார் கிம்.  நுண்ணுயிரிகளின் டிஎன்ஏக்களைத் தொகுத்து அதனை வரிசைப்படுத்த தொடங்கியுள்ளார். இம்முறையில் 1.7 மில்லியன் பாக்டீரியா, 1.2 மில்லியன் பூஞ்சைகள் ஆகியவற்றோடு பிறவகை நுண்ணுயிரிகள் 1.8 மில்லியன் அளவில் இணைக்கப்பட்டு மக்கள் அணுகும் தகவல்தளமாக இதனை உருவாக்கி வருகிறார். நுண்ணுயிரிகளை ஆவணப்படுத்தும் பணியில் 40 அறிவியல் அமைப்புகள் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இதன் மூலம் வெப்பமயமாதலின் தாக்கத்தை அறிவதோடு, நுண்ணுயிரிகளை எப்படி வாழ்க்கைமுறையை மாற்றுவதற்கு பயன்படுத்தலாம் என்ற புத்திசாலித்தனமும் இதில் உள்ளது.  மாசுபடுதலை நுண்ணுயிரிகள் மூலம் எப்படி தடுக்கலாம் என்பதற்கும் இவற்றின் டிஎன்ஏக்களை ஆவணப்படுத்த

ஏழை நாடுகளில் மேற்கு நாடுகள் செய்யும் மாசுபாட்டு யுத்தம்! - பயன்படுத்தப்பட்ட கார்கள் ஏற்படுத்தும் அபாயம்

படம்
      பயன்படுத்தப்பட்ட கார்கள் ஏற்படுத்தும் விளைவுகள் ! அமெரிக்கா , ஜப்பான் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட நாடுகள் ஏழை நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன . வல்லரசு நாடுகளான அமெரிக்கா , ஜப்பான் , ஐரோப்பிய யூனியன் நாடுகள் பயன்படுத்தப்பட்ட அதிக மாசுபடுதல் கொண்ட கார்களை வளர்ந்து வரும் நாடுகளுக்கு விற்பது அதிகரித்து வருகிறது . இதுதொடர்பான ஐ . நா அமைப்பின் சூழல் திட்ட அறிக்கை வெளியாகியுள்ளது . இதன்மூலம் வளர்ந்துவரும் நாடுகள் அதிக மாசுபாட்டையும் , பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டி வரும் . ஐ . நா அறிக்கைப்படி , 2015-2018 காலகட்டத்தில் 1.4 கோடி பயன்படுத்தப்பட்ட கார்கள் வல்லரசு நாடுகளிலிருந்து வளர்ந்து வரும் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன . வளர்ந்து வரும் நாடுகளுக்கும் , ஆப்பிரிக்க நாடுகளுக்கும் கணிசமான அளவு ஏற்றுமதியாகியுள்ளன . இந்த நாடுகளில் பாதுகாப்பு , மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் வலிமையாக இல்லாததால் , பழைய கார்களை எளிதாக விற்க முடிகிறது . அண்மையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் , ஏழை , மத்த

எதிர்காலத்தில் புகழ்பெறவிருக்கும் ட்ரைவ் இன் விழாக்கள்!

படம்
            ட்ரைவ் இன் விழாக்கள் இங்கிலாந்தில் பெருந்தொற்று காரணமாக ட்ரைவ் இன் விழாக்கள் கொண்டாடப்பட தொடங்கியுள்ளன. ட்ரைவ் இன் விழாக்கள் என்றால், கார்களை விழா நடக்கும் இடத்திற்கு கொண்டு சென்று அதிலிருந்தபடியே விழாவை ரசிப்பது, பரிமாறப்படும் உணவை சாப்பிட்டுவிட்டு அப்படியே காருக்குள் இருந்துவிட்டு பாதுகாப்பாக திரும்பி விடுவது. இதன்மூலம் நோய்த்தொற்று பரவாது. பாதுகாப்பாகவும் இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் விழா என்றால் மக்கள் ஒன்றுகூடி பேசுவது என்பது இதில் நடைபெற வாய்ப்பு இல்லை. கார்கள் இயங்கிக்கொண்டே இருந்தால் மாசுபாடு அதிகரிக்கும். விழாவில் நடனம் ஆடுவது கடினம். கார் இல்லாதவர்கள் விழாவுக்கு வரமுடியாது ஆகிய சிக்கல்கள் உள்ளன. பிளஸ் என்றால், உங்கள் இஷ்டம் போல இருக்கலாம். டிஜே பாடல் பிடிக்கவில்லை என்றால், உங்கள் காரில் உள்ள பாடலை இயக்கி ரசிக்கலாம். இவை எல்லாம் பெருந்தொற்று கால வரவு என்பதை புரிந்துகொண்டால் சரி. தி வீக் ஜூனியர்  

கார்பன் இல்லாத உலகை அணு உலைகள் மூலம் உருவாக்கலாம்!

படம்
cc  எதிர்காலம் இப்படித்தான்!   கார்பன் இல்லாத உலகை அணு உலைகள் மூலம் உருவாக்கலாம். பலருக்கும் இப்படி ஒரு தலைப்பைக் கேட்டதும் எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழும். ஆனால் உண்மையில் கார்பனைக் குறைக்கும் திட்டத்தில் அணுஉலைகள் நிறைய உதவ முடியும். பொதுவாக ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பார்த்தால் பிரிட்டன், அ்மெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா அணு உலை திட்டங்களை செய்துகொண்டிருக்கும். அணுஉலைகள் என்பதன் மறைவில் புளுட்டோனியம், யுரேனியம் ஆகியவற்றை செறிவூட்டி அணுகுண்டுகளை தயாரிக்கிறார்கள் என்று கூறுவார்கள். ஆனால் இந்த கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆணால் மேற்சொன்னவற்றுக்கு மாற்றாக தோரியத்தை ரியாக்டர்களாக பயன்படுத்தும் போக்கு மெல்ல தொடங்கி வருகிறது. ஏன், இந்தியாவில் கூட இந்த செயல்பாடு 2018ஆம் ஆண்டு தொடங்கியது. சூரியனில் எப்படி வெப்பம் உருவாகிறது? அணுக்கள் பிளவுபடுவதனால்தான். அந்த கான்செப்ட்தான் தோரியம் ரியாக்டர்களிடம் நடைபெற வைக்க முயல்கிறார்கள். இதற்கான முயற்சி அமெரிக்காவின் கலிபோர்னியாவிலும், பிரான்சிலும் நடைபெற்று வருகிறது. இந்த முயற்சி வெற்றிபெற்றால் மாசு இல்லாத ஆற்றல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மிதக்கும் சோலார்

சூழல் போராளிகள் அறிமுகம்! பசுமை முதல் கழிவுகள் வரை

படம்
கல்பனா மணிவண்ணன் சூழலின் மீது நமக்கு நம்பிக்கை குறையும் போதெல்லாம் இந்த நாயகர்கள்தான் நம் வாழ்க்கை மீது  நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள். அதற்காக இவர்கள் ஏமாற்றங்களையும் ஏளனங்களையும் எதிர்கொள்ளாதவர்களல்ல. அதிலிருந்து மீண்டு தன் லட்சியத்தை இமயமாக்கி அதையும் சாதித்து இருப்பவர்கள். இப்போது சூழல் போராளிகளில் சிலரைச் சந்திக்கலாம் வாங்க. கல்பனா மணிவண்ணன் 44 கல்பனா சென்னையைச் சேர்ந்தவர். பரபரப்பான சாலையில் வசிப்பவர். இவர் உயிரியல் வகுப்பு எடுக்கும் ஆசிரியையும் கூடத்தான். வேதிப்பொருட்கள் கலந்த பொருட்களை சாப்பிட்டு வெறுத்துப்போனவர், அவற்றைத் தவிர்க்க இன்று கல்பவிரிக்ஷா என்ற பண்ணையில் தன் குடும்பத்திற்குத் தேவையான காய்கறிகளை விளைவித்து வருகிறார். நாம் பயன்படுத்தும் தரை துடைப்பான்கள், கழிப்பறை துடைப்பான்கள் ஆகியவற்றில் கடுமையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவை நம் குடலிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்கின்றன. இதனால் நம் உடல் நலம் கெடுகிறது என்று பேசுகிறார் கல்பனா. இவர் காய்கறிகளோடு ஆர்கானிக் முறையில் வீட்டின் தரை துடைப்பான்களையும் தயாரித்து வருகிறார். சமீரா சதீஜா 46 சமீர

தெரிஞ்சுக்கோ! கப்பல் உடைப்பு - டேட்டா

படம்
தெரிஞ்சுக்கோ! உலகில் தொண்ணூறு சதவீத வர்த்தகம் கப்பல் வழியாக நீர்நிலைகளில் நடைபெறுகிறது. பயன்படுத்திய கப்பல்கள்தெற்காசியப் பகுதிகளில் உடைத்து நொறுக்கப்படுகின்றன. இத்தொழிற்சாலைகள் இங்கு அதிகமாக உள்ளன. ஒரு கப்பலை முழுமையாக உடைத்து எடுக்க மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகின்றன. கப்பலிலிருந்து பெறும் இரும்பில் 90 சதவீதம் கட்டுமானத்துறையில் பயன்படுகிறது. 2016 ஆம் ஆண்டு கப்பலை உடைக்கும் தொழிலாளர் ஒருவருக்கு தரப்பட்ட கூலி ஆறு டாலர். உலகிலுள்ள கப்பல்களில் 33 சதவீத கப்பல்கள் இந்தியாவிலுள்ள ஆலங் பகுதியில் உடைக்கப்படுகின்றன. இப்பகுதியில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரம். வங்கதேசத்தில் கப்பல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறுவர்களின் அளவு 25 %. ஒரு கப்பலை உடைத்தால் அதிலிருந்து கழிவாக பெறும் ஆஸ்பெஸ்டாசின் அளவு 6,800 கி.கி. வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் இறந்த கப்பல் உடைக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1200. 1504 அடி நீளம் கொண்ட கப்பல், இந்தியாவில் 2010 ஆம் ஆண்டு உடைக்கப்பட்டது. நன்றி - க்வார்ட்ஸ் 

டாஸ்மாக் விற்பனை சரிவு, மாசுபாட்டில் சௌகார்பேட்டை டாப் 1!

படம்
நடந்து முடிந்த ஒளி உற்சவத் திருவிழாவில் மார்வாடி, சேட்டுகள் கொண்ட சௌகார் பேட்டை மாசுபாட்டை அதிகம் நிகழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டை விட மாசுபாட்டின் அளவு குறைவு என்பது மகிழ்ச்சி. காற்றில் உள்ள அனுமதிக்கப்பட்ட மாசுக்களின் அளவு 100 எனும்போது, சௌகார்பேட்டையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கப்பட்டதில் 128  மைக்ரோகிராம் எனும் அளவில் மாசுத்துகள்கள் அதிகரித்துள்ளன. பட்டாசுகளின் ஒலி அளவு 55 டெசிபல் பாதுகாப்பான அளவு என அரசு கூறியது. 73 டெசிபலில் பட்டாசு வெடித்து தீபாவளியை டரியல் ஆக்கி உள்ளனர் சென்னை குடிமகன்கள். அரசுக்கு அவசர உதவியை நாடி 27 போன் அழைப்புகள் வந்துள்ளன. தீபாவளி ராக்கெட்டை மூடிய வீட்டுக்குள் விட்டு தீப்பற்றியது, பைக்கில் தீப்பற்றியது, ராக்கெட் எல்பிஜி கேஸில் தாக்கி தீப்பற்றியது என புகார்களின் பட்டியல் செல்கிறது. அரசு மருத்துவமனையில் தீபாவளி பட்டாசு தொடர்பான பிரச்சனைகளுக்காக 75 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். டாஸ்மாக்கில் தீபாவளி வருமானம் 355 கோடியாக உள்ளது. சாதாரண நாட்களில் வருமானம் 330 கோடி என்றால் விற்பனை வளர்ச்சியை புரிந்துகொள்ளலாம். மதுரை, சிவகங்கையில் குருபூஜை காரண

பசுமைப் பட்டாசுகள் என்றால் என்ன?

படம்
பசுமைப் பட்டாசுகள் சாதாரண பட்டாசுகளுக்குப் பதிலாக அரசு பசுமைப்பட்டாசுகளை அறிமுகம் செய்திருக்கிறது. உண்மையில் பசுமைப் பட்டாசுகளின் சிறப்பு என்ன? இதில் சாதாரண பட்டாசுகளை விட மாசுபடுதல் அளவு பிஎம் 2.5 எனும் அளவுக்கு இருக்கும். பட்டாசு தயாரிப்பில் பயன்படும் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளுக்கு மாற்றாக, பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் ஜியோலைட் எனும் வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது அரசு நிறுவனங்களாக சிஎஸ்ஐஆர் என்இஇஆர்ஐ ஆகியவை பசுமைப் பட்டாசுகளுக்கான ஒன்பது மூலக்கூறு கலவையை உருவாக்கியுள்ளன. இவை 30 சதவீதம் மாசுபடுதலைக் குறைக்கும். இதில் ஒலி, ஒளி சந்தோஷம் குறைவுபடாது. இந்தியாவில் பட்டாசுகளுக்கான சந்தை மதிப்பு 1800 கோடி. இவற்றின் தேவையை சிவகாசி பட்டாசுகள்தான் தீர்த்து வைக்கின்றன. இந்திய சந்தையில் சிவகாசியின் பங்கு 95 சதவீதம். இந்தியாவிலுள்ள எட்டு ஆய்வகங்கள் பசுமைப்பட்டாசுகளுக்கான மூலக்கூறு கலவையை ஆய்வு செய்து தயாரித்துள்ளன. எந்த பட்டாசில் என்ன மாதிரியான ஆய்வுக்கலவை உள்ளது என்பதை க்யூஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து பார்த

கார்பன் குழந்தைகளை பெற்றுக்கொள்ள தயக்கமா?

படம்
டாக்டர். எக்ஸ் குழந்தைகளின் பிறப்பு குறைந்து மக்கள் தொகை குறைந்தால் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா? வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகை குறிப்பிட்ட கட்டுப்பாட்டில் உள்ளது. காரணம், இங்கு அரசு இடையறாது செய்யும் விளம்பரங்கள், பிரசாரங்கள்தான். மூன்றாம் உலக நாடுகளில் இதுதொடர்பான பிரசாரங்கள் 1970களில் தொடங்கின. என்ன விளைவு ஏற்பட்டது? பெருமளவு குடும்பங்களில் இரண்டு குழந்தைகள், ஒரு குழந்தை போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். ஆனால் அரசு இதனைத் தொடர்ச்சியானதாக கடைபிடிக்கவில்லை. பிரின்ஸ் ஹாரி, மேகன் இரு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்வது என முடிவெடுத்துள்ளனர். பாப்புலேசன் மேட்டர்ஸ் எனும் இங்கிலாந்தைச் சேர்ந்த அமைப்பு சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விஷயங்களைப் பற்றி மக்களுக்கு பிரசாரம் செய்து வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்த சூழலியலாளர் எம்மா ஆலிஃப், உயிரியல்ரீதியாக குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என்ற முடிவில் இருக்கிறார். இது சாத்தியமாகுமா என்பது வேறுகதை. ஆனால், அப்படி ஒரு எண்ணம் மக்களின் மனதில் வந்துவிட்டதற்கான காரணம்தான் முக்கியம். இந்தியர்கள் சராசரியாக இரண்டு டன்கள், அமெரிக்கர்கள் இருபது டன

மரம் நடுவது கார்பனைக் குறைக்காது - புதிய ஆய்வு என்ன சொல்கிறது?

படம்
மரம் நடுவது மட்டுமே தீர்வல்ல! செய்தி: வெப்பமயமாதல் விளைவால் 2050 ஆம் ஆண்டு 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மரக்கன்றுகள் நடுவதைக் கடந்து கார்பன் அளவைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் சோதிக்கத் தொடங்கியுள்ளனர்.  நீராதாரம் பெருகவும், வெப்பநிலை பாதிப்பைக் குறைக்கவும் சூழலியலாளர்கள் சொல்லும் ஒரே தீர்வு, மரக்கன்றுகளை நடுவதுதான். ஆனால் உலகில் வெளியாகும் டன் கணக்கிலான கார்பன் வெளியீட்டுக்கு மரக்கன்றுகள் நடுவது தீர்வாகுமா என ஆராய்ச்சியாளர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். காரணம், வெப்பமயமாதலின் விளைவாக ஐரோப்பாவில் வெப்ப அலை பாதிப்புகள் தொடங்கிவிட்டன. விவசாயம், விமானத்துறை, இரும்பு மற்றும் சிமெண்ட் உற்பத்தி ஆகியவை மூலமாக வெளியேறும் கார்பன் வெளியீடு அதிகம். இதனைக் குறைந்த விலையில் சமாளிக்க மரங்கள் உதவலாம். இதற்கு மாற்றாக சூழலியலாளர்கள் சொல்லும் யோசனை, மரங்களை வளர்த்து, வெட்டி மின்சாரத்திற்கு பயன்படுத்தலாம். பின்னர், அதிலிருந்து வரும் கார்பனை சேகரித்துவைக்கும் இம்முறைக்கு பயோஎனர்ஜி கார்பன் கேப்சர் அண்ட் ஸ்டோரேஜ் (BECCS) என்று

பார்சலுக்கு அலுமினிய பாயில் ஆபத்தானது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி வேலைக்கு செல்லும் அவசரம். சாண்ட்விச்சை ரெடி செய்து எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். எதில் கட்டி எடுத்துக்கொண்டு செல்வீர்கள். நிச்சயமாக பிளாஸ்டிக்கை கூறமாட்டேன். காரணம், அதனை மறுசுழற்சி செய்வது மிக கஷ்டம். எனவே காகிதம் சார்ந்த பொருட்களை இதற்கு பயன்படுத்தலாம். இப்போது நான் டிபன் வாங்கி வந்த செல்வியக்கா கடையில், பார்சலுக்கு அலுமினிய பாயில் கவரைப் பயன்படுத்துகிறார்கள். இது தண்ணீர் மாசுபாடு, மறுசுழற்சி செய்வதற்கு கடினமானது. இதனை மீண்டும் ஆறு முறை பயன்படுத்தினால்தான் இதன் தயாரிப்புக்கு நியாயம் சேர்க்க முடியும். எனவே மெழுகு தடவிய காகிதங்களை நீங்கள் பயன்படுத்தலாம். நன்றி: பிபிசி