இடுகைகள்

வேலைவாய்ப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசியல்வாதிகள் தம் பொறுப்பை உணர வேண்டும்!

படம்
          ”சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது   அரசியல்வாதிகள்தான்” உலக வங்கியின் சமூக பாதுகாப்பு மற்றும் வேலைகள் ஆகிய பிரிவின் இயக்குநர் மைக்கேல் ருட்கோவ்ஸ்கி. அவரிடம் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றி பேசினோம். ஆங்கிலத்தில் - சுரோஜித் குப்தா வேலைவாய்ப்பு சந்தையில்   அரசியல்வாதிகளின் பங்கு என்ன? மக்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு, செல்வம் ஆகியவற்றுக்கு அரசியல்வாதிகள் முக்கியத்துவம் பெறவேண்டும். அவர்களே இதற்கு பொறுப்பு. உங்களது தாத்தா காலத்து வேலை வாய்ப்புச் சந்தை தற்போது கிடையாது. எதிர்காலத்தில் இந்த சந்தைக்கு மதிப்பும், பாதுகாப்பும் ஏற்படுத்துவது முக்கியம். இவற்றை பிரபலப்படுத்தி தொழில்முனைவோர்களை ஈர்ப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு. எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மக்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றி நான் நம்பிக்கையுடனே இருக்கிறேன். காரணம் தொழில்நுட்ப பாய்ச்சல் உலகில் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளே நுழையும் போது வேலையிழப்பு பற்றிய அச்சம் இருக்கும். ஆனால் பின்னாளில் அதே தொழில்நுட்பத்தால் அதிகவேலைவாய்ப்புகள் ஏற

மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைக்கும் இந்திய அரசு!

படம்
pixabay இந்திய அரசு, உயர்கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கையை 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்க முயற்சித்து வருகிறது. இந்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சகம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உயர் கல்வித்துறைக்கு ரூ.30,383 கோடிகளைச் செலவிட இருக்கிறது. இத்தொகை மூலம், நாட்டின் பின்தங்கிய பகுதிகளிலுள்ள மாணவர்கள் உயர்கல்வி பெற வாய்ப்பு உள்ளது. இந்திய மாநிலங்களில் சில மாவட்டங்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியே உள்ளன. உயர்கல்வியை எட்டும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 26 சதவீதமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு ,மாணவர்களின் எண்ணிக்கையை 40 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது அரசு. தற்போது உயர்கல்வி படிப்புகளில் சேரும் மாணவர்களின் மொத்த அளவு 25.8 சதவீதம். அதில் ஆதி திராவிடர்கள் எண்ணிக்கை தோராயமாக 21.8%, பட்டியல் இனத்தவர் 15.9% க்கும் குறைவு. உயர்கல்வியில் இந்தியாவை பிரிக்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில், தென் ஆப்பிரிக்காவைவிட(20.5%) மேலே உள்ளது. ஆனால் ரஷ்யா(81.8%), பிரேசில்(50.5%), சீனா(25.8%) ஆகிய நாடுகளை விட கீழே உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பின்தங்கிய பகுதிகளில் மாதிரி

2020 இல் விரும்பப்படும் புதிய வேலை வாய்ப்புகள்!

படம்
giphy 2019இல் உற்பத்தி துறை சரிவைச் சந்தித்தது. சேவைத்துறை வளர்ச்சி பெற்றது. இதன் விளைவாக, வேலைவாய்ப்புகள் இல்லாத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. பின்னர், உள்நாட்டு உற்பத்தி குறைந்து பங்குச்சந்தை வீழ்ந்து நாடு 1960 காலகட்ட இந்தியாவாக மாறியது. அதற்கு பல்வேறு சமாதானங்கள் மனதின் குரல் தொடங்கி பேசினாலும் இந்து ராஷ்டிர பணிகள் காரணமாக தொழில் முதலீடுகள் இந்தியாவுக்கு வரவில்லை. அரசும் பொருளாத வளர்ச்சி தவிர்த்த பிற காரியங்களில் அதிக ஈடுபாடு காட்டியது. தற்போதைய பாஜக அரசு, ஒரு தேர்தலை வென்றவுடன் அடுத்த தேர்தலில் ஜெயிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கிறதே தவிர உருப்படியான எந்த திட்டங்களையும் கொண்டு வர நினைக்கவில்லை. உலகளவில் உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய பட்டியல் இது. இவை இந்தியாவில் உருவாகுமா என்று கேட்டால் யாமறியேன் பராபரமே... டேட்டா சயின்டிஸ்ட் - இயந்திர வழிக் கற்றல் அது தொடர்பான அப்ளிகேஷன்களை உருவாக்கும் பணி. ஏஐஆப்ஸ் - AIOps தகவல் தொடர்புக்கான செயற்கை நுண்ணறிவு மேம்படுத்தல் தொடர்பான பணிகளை செய்வது. பல்வேறு அமைப்புகளிலுள்ள பிக் டேட்டா விஷயங்களை ஆராய்ந்து பெறுவது. டேவ்ஆ

கூகுள் 2019 - சிறந்த ஆப்ஸ்கள் இதோ!

படம்
மீஸோ ஆப் 2019ஆம் ஆண்டு இறுதியில் உள்ளோம். இந்த நேரத்தில் அறுபது ஆப்ஸ்களுக்கு மேல் நம் போனில் வைத்திருப்போம். அதில் உருப்படியான ஆப்ஸ் உண்டா என ஆராய வேண்டிய நேரம் இது. கூகுள் தன்னுடைய கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் தரவிறக்கப்பட்ட ஆப்ஸ்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவற்றில் சில.... அப்லோ - ablo இந்த ஆப் எதிர் பதிப்பக மொழிபெயர்ப்பாளர் போல கொடுத்ததை அப்படியே மொழிபெயர்க்கிறது. இதன் விளைவு என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ளவர்களோடு கூட நீங்கள் சம்சாரிக்க, எழுத, அவர்கள் சொன்ன கல்வெட்டு வாக்கியங்களை படிக்க முடியும். அத்தனைக்குமான விஷயங்களை இந்த ஆப்பே செய்கிறது. Boosted இந்த ஆப் ஆபீஸ் நேரத்தில் ஒழுங்காக வேலை பார்க்கிறீர்களா என்று உங்களுக்கு சொல்லும். இதனால் கவனம் சிதறி இமெயில் செக் செய்து, சினிமா விகடன் தளத்திலேயே குடியிருக்கும் ஆட்கள் தம் தவறை எளிதாக உணர்ந்து திருந்த முடியும். வருஷக்கடைசி இல்லையா, இதையே புத்தாண்டு சபதமாக எழுதிக்கூட வைத்துக்கொள்ளலாம். Ok credit இது பெட்டிக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சிகளுக்கானது. வரவு செலவு ஆகியவற்றை இதில் சேம

வேலை வாய்ப்புச் சந்தை மாறி வருகிறது - நீங்களும் மாறுங்கள்!

படம்
வேலைவாய்ப்புச்சந்தைகள் இப்போது மாறிவருகின்றன. முதலில் லிங்க்டு இன்னில் புரபைல் பதிந்து வேலை தேடியவர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள்.இன்று நொடியில் வேலைக்கு தகுதியானவர்களா இல்லையா என அறிய டிண்டர் ஆப்பை போலவே புதிய ஆப்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்படி பல ஆப்கள் உள்ளன. இனிமேலும் நீங்கள் நாக்ரி.காமில் பதிந்து வைத்தேனே அதெல்லாம் வீணா என்றால் வாழ்க்கை மொத்தமும் வீணாகிவிடும். ஆட்டோமேஷன் உலகில் கிடைக்கும் வேலை எவ்வளவு முக்கியம் தெரியுமா?   ஜாப்பர், பிளாங்க். ஸ்விட்ச், வேவ், ஷேப்பர் எனும் ஆப்களை இன்று மனிதவளத்துறையினர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதனால் இனி சிபாரிசுகளை விட உங்களுக்கு தகுதிதான் முக்கியமாகப் போகிறது. டிண்டர் என்பது ஜாலியான டேட்டிங் ஆப். அதற்கும் வேலைக்கும் வித்தியாசம் இல்லையா என சிலர் கேட்கலாம். உண்மைதான் டெக் ஆட்கள் புரிந்துகொண்டது அதன் இடைமுக எளிமைத்தன்மையை மட்டுமே. எளிமையாக சில கம்பெனிகளைப் பார்க்கலாம். உங்களுக்கு பிடித்திருந்தால் அதனை ஸ்வைப் செய்து அந்த நிறுவன ஹெச் ஆர் ஆட்களிடம் ஆப் லைனில் பேசலாம். அவர்கள் தேடிய ஆட்களில் நீங்களும் ஒருவர் என நம்பிக்கை தோன்ற

சிறைவாதிகளுக்கு பயிற்சி தரும் பின்லாந்து அரசு!

படம்
giphy.com சிறைவாசிகளுக்கு ஏ.ஐ. பயிற்சி! பின்லாந்து நாட்டிலுள்ள சிறைக்கைதிகளுக்கு அரசு, செயற்கை நுண்ணறிவு பற்றிய பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகளுக்கு தயார் செய்கிறது. பின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் ஏ.ஐ. பற்றிய முன்மாதிரி பாடத்திட்டத்தை தயாரித்தது. இதன் நோக்கம், செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை மக்களுக்கு ஏற்படுத்துவதே ஆகும். அம்முயற்சிக்காகத்தான் சிறைவாசிகளுக்கு டேப்லட், கணினிகளை கொடுத்து பயிற்சி அளித்து வருகின்றனர். தகவல் யுகத்தில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான கணினி திறன் திட்டமாக அமையவேண்டும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. இந்த நோக்கத்தின்படி மாணவர்களுக்கான திட்டமாகவே ஏ.ஐ.பயிற்சி முறை உருவானது. குற்றத்துறை மேலாளரான பியா புலாலகாவின் முயற்சியால் அரசு, ஏ.ஐ. பயிற்சிகளை சிறைக்கைதிகளுக்கு வழங்க இசைந்துள்ளது. “இப்பாடத்திட்டத்தை ரியாக்டர் என்ற நிறுவனம் செயல்படுத்தியது. கைதிகளின் முகவரிகளை கருப்பு பட்டியலில் வைத்திருப்பதால், இணைய இணைப்பு பெறுவதில் சிக்கல் இருந்தது. சிறை முகவரியில் அவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி வசதி உட்பட செய்துகொடுத்திருக்கிறோம். சிறையிலிருந்து வெளி

வேலைவாய்ப்பை குறிப்பிடாத நிதியமைச்சர் - எதிர்காலம் என்ன?

படம்
வேலைவாய்ப்பில் தடுமாற்றம்! இந்திய அரசு பட்ஜெட்டில் பல்வேறு வரிகளை விதித்துள்ளது. கூடவே பல்வேறு திட்டங்களையும் கூறியுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை வெளியாகும்போதே, தணிக்கைத்துறையின் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிதியும், தற்போது நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ள நிதித்தொகையும்(வரவு, செலவு) பொருந்தவில்லை என சர்ச்சையானது. தற்போது இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவாக வேலைவாய்ப்பு சதவீதம் சரிந்துள்ளது. 6.1 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த வேலையின்மை அளவைவிட பதினொரு மாநிலங்களின் வேலையின்மை அளவு அதிகமாக உள்ளது. இதைப்பற்றி நிதிநிலை அறிக்கையில் பேசவேண்டிய நிர்மலா, மாற்றுப்பாதையில் வண்டியைத் திருப்பிவிட்டார். கேலோ இந்தியா, விளையாட்டிக்கல்வி போர்டு, ஆராய்ச்சி மையம் என அறிவித்த அறிவிப்புகள் சாத்தியமா என்று அவருக்கே கூட தெரியாது. நிதியமைச்சர் நேரடியாக வேலைவாய்ப்பு பற்றி கூறவில்லைதான். ஆனால் இந்தியாவில் படியுங்கள் எனும் திட்டம் மூலமாக வெளிநாட்டு மாணவர்கள் இங்கு படிக்க வருவதற்கு வாய்ப்புள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள் மேலும் தரமாக உருவானால் வேலைவாய்ப்

இந்தியர்களுக்கு டிஜிட்டல் யுகத்திலும் வேலைவாய்ப்புகள் இருக்கிறது!

படம்
ஆனந்த் கோபால் மகிந்திரா...இன்று ட்விட்டரில் யார் இருக்கிறார்களோ இல்லையோ. இந்தியா மற்றும் உலகில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் ஆனந்த் கவனிக்கிறார். நிறுவன முதலாளிக்கு இதற்கெல்லாம் நேரமிருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஆனால் அதற்கும் அவர் பதில் வைத்திருக்கிறார். உங்களுடைய நிறுவனத்தில் எந்த பதவி எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும்? சீஃப் பீப்பிள் ஆபீசர் என்ற பதவிதான். அல்லது சீஃப் கவர்னன்ஸ் ஆபீசர் என்ற பதவி. காரணம், இன்று நிறுவனம் உலகளவில் உயர அந்நிறுவனத்தின் மதிப்பு, பிராண் ட் முக்கியம். என் வாழ்க்கையில் நான் ஃபெராரி கார் வாங்குவேன். அதுதான் என லட்சியம் என்று ஒருவர் சொன்னால், அவர் எப்படி நேர் வழியில் பயணிப்பார். அப்படி ஒருவர் நிறுவன அதிகாரி என்ற முறையில் தேர்ந்தெடுத்தால் நிறுவனத்தின் மதிப்பு என்னாகும்? நோக்கம் என்னாகும்? சொல்லுங்கள் 20.7 பில்லியன் டாலர்களைக் கொண்ட நிறுவனத்தின் இயக்குநர் நீங்கள். ஆனால் உங்களை வேறெங்கும் பார்ப்பதைவிட ட்விட்டரில் பார்க்க முடிகிறதே? நான் சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோசாப்ட் மற்றும் சில மென்பொருள் நிறுவனங்களிடம், அனைத்து நிறுவனங்களையும்

தரம் வேண்டுமா? எண்ணிக்கை வேண்டுமா?

படம்
இந்தியா பொருளாதாரம் மெல்ல சரிவை சமாளித்து மீண்டு வருகிறது. அதேசமயம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தடுமாற்றத்தை சமாளித்து வருகிறது. இதில் பாலினம், சம்பள இடைவெளி ஆகிய பிரச்னைகளும் உள்ளது. இதுகுறித்து அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை செய்துள்ளது. இருபத்தொரு மாநிலங்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் ஆந்திரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த இடத்தில் மகாராஷ்டிரம் உள்ளது. பெண்களுக்கான ஊதியத்தில் இந்தியா இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதில் இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் பாஸ் மார்க் வாங்குகின்றன. இதில் வேலைவாய்ப்பு , சம்பளம் என இரண்டு விஷயங்களும் கணக்கில் கொள்ளப்பட்டன. பீகார், உபி எப்போதும்போல இந்த விஷயத்திலும் பின்தங்கி உள்ளன.  சம்பள இடைவெளி விஷயத்தில் கேரளா முன்னணியில் உள்ளது. சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் இந்த விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. சத்தீஸ் வேலைவாய்ப்புகளைத் தருவதில் முன்னிலை வகிக்கிறது. காரணம், இங்கு கட்டுமான வேலைகள் அதிகம் உள்ளன. கோவா, கேரளம் ஆகிய மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ள

தொழில்துறை வளர்ச்சியா? வீழ்ச்சியா?

படம்
வேலைவாய்ப்புகள் சரிவு என்று கூறும்போது வளர்ச்சி என்று ஆளும் கட்சியும், சரிவு என்று எதிர்கட்சிகளும் கூறி வாதிடுகின்றனர். திடீரென தேசிய புள்ளியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பதவி விலகுகின்றனர். இதெல்லாம் நாட்டின் பொருளாதாரம் சரியில்லை என்பதை சொல்லாமல் சொல்லுகின்றன. சிறு நிறுவனங்களாக இருந்தவை வளராமல் அப்படியே சிறுநிறுவனங்களாகவே இருக்கின்றன. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு முதலீடு, நிலம், தொழிலாளர்கள், அடிப்படைக் கட்டுமானம் ஆகியவை தேவை. பேராசிரியர் அமித் கண்டேல்வால், ஜெரோம் ஏ சாசன் ஆகியோர் இதுபற்றி, இந்தியாவில் ஒருமுறை வேலைக்கு தேர்வானவர்களை அவ்வளவு எளிதில் நீக்க முடியாது. காரணம், இந்திய அரசின் கடுமையான விதிமுறைகள்தான் என்று சுட்டிக்காட்டுகின்றனர். இவை பல்லாண்டுகளாக மாறுதல் பெறாமலே இருக்கின்றன என்றும் தலையில் குட்டுகின்றனர். அரசு நிர்வகிக்கும் வங்கிகளிடமிருந்து சிறுநிறுவனங்கள் கடன் பெற்றுவிடுவது மிக கடினம். பெரும்பான்மை வங்கிகள், சிறிய கம்பெனிகள் கடனைத்திரும்பி செலுத்தாது என்பதை ஊர்ஜிதம் செய்யாமலேயே நடவடிக்கையில் இறங்கி விடுகின்றன என்கிறார் அமித் கண்டேல்வால். ந

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: ஒரு அலசல்

படம்
தி எகனாமிஸ்ட் தேர்தல் 2019 பாஜக, நமோ டிவி, டிவி 9 பாரத் வர்ஷ் என பல்வேறு ஊடகங்களின் பலம் கொண்டு தேர்தலை சந்திக்கவிருக்கிறது. ராகுல், வேலைவாய்ப்புகள், பெண்களுக்கு அங்கீகாரம் உள்ளிட்ட விஷயங்களைப் பேசி களமிறங்குகிறார். இதில் மோடியின் 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை உடைக்கும் விதமாக, குறைந்தபட்ச ஊதிய திட்டத்தை ராகுல் அறிவித்தார். NYAY எனப்படும் இத்திட்டத்தை மோடி குழுவினர், மறைக்க என்னென்னவோ முயற்சித்தும் முடியவில்லை. தற்போது காங்கிரஸ் தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டு விட்டது. பாஜக, அரசுக்கு நிகராக பல்வேறு அன்பளிப்பு ரக அறிவிப்புகள் இதிலும் உண்டு. புதியவை என்ன? தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை உருவாக்கம். அரசு தேர்வுகளுக்கான கட்டணம் நீக்கப்படும். தொழில்துறையினருக்கு அனுசரணையான வகையில் அரசு செயல்படும். மூன்று ஆண்டுகளுக்கு அரசு, தொழில் நிறுவனங்களின் நடவடிக்கையில் தலையிடாது என்ற ராகுலின் அறிவிப்பை பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள். குறுந்தொழில்துறைக்கு வருமான வரிவிலக்கு உண்டு. அனைவருக்கும் வீடு என்பதில் நகர்ப்புற ஏழைகளும் இணைக்கப்படுவர்.

மேஜிக் பஸ் சாதித்தது எப்படி?

படம்
மேஜிக் பஸ் சாதித்தது எப்படி? 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மேஜிக் பஸ் என்ஜிஓ அமைப்பு, குழந்தைகளுக்கு ஆளுமை தொடர்பான வகுப்புகளை எடுப்போடு அவர்களுக்கு கல்வி மூலம் வறுமையிலிருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஏறத்தாழ இருபது ஆண்டுகால பணியில் 3,75,000 குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி சாதித்துள்ளது இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம். இந்தியா, மியான்மர், நேபாளம், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிற அமைப்பு இது. அதன் இயக்குநர் ஜெயந்த் ரஸ்தோகியிடம் பேசினோம். கல்வியை அளித்து மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணம் எப்போது வந்தது? முதலில் எங்கள் பணியை மும்பையின் குடிசைப்பகுதிகளில்தான் தொடங்கினோம். குறிப்பாக, இந்தியாவில் எங்களுடைய செயல்பாடு சிறப்பாக பயனளித்துள்ளது. அதனால்தான் எங்கள் கல்வித்திட்டத்தை விளையாட்டுடன் இணைந்ததாக உருவாக்கினோம். நீங்கள் இந்தியாவிலுள்ள எந்த கிராமத்துக்கும் கால்பந்தை எடுத்துக்கொண்டு செல்லலாம். பாடநூலை விட கால்பந்து நிறைய மக்களை, குழந்தைகளை நம்முடன் ஒன்றாக இணைக்கிறது. சிறுவர்கள் குறைந்த பட்சம் பனிரெண்டாவது வரை படி

கேட்கக் கூடாத கேள்விகள்!

படம்
2 பிளஸ் பாய்ண்ட்   ஜெ . திருமால்முத்து கேட்க கூடாத கேள்விகள் ! இன்டர்வியூவில் நீங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்கிற டிப்ஸ் தேவைதான் . ஆனால் இன்டர்வியூவில் சில தவறுகள் செய்துவிடுகிறீர்கள் . வேலை அங்கு கிடைக்காது எனினும் , அத்தவறுகளை செய்யக்கூடாது என்ற விஷயம் புத்திக்கு சுருக்கென புரிவது லாபம்தானே ! இந்த வாரம் அத்தகைய கேள்விகளின் லிஸ்ட் இதோ ! உங்களைப் பற்றி அந்த நிறுவனத்தில் விசாரித்தோம் . ஆனால் அவர்கள் உங்களை தெரியாது என்று கூறுகிறார்களே ? இதன் அர்த்தம் ஒன்றுதான் . ரெஸ்யூமில் நீங்கள் பொய் சொல்லிவிட்டீர்கள் என்பதே மெய் . இதற்கு நீங்கள் சாரி கேட்டாலும் வேலை கிடைக்காது . வேலையில் சேரும் முன்பே நீங்கள் டுபாக்கூர் வேலைகள் பார்த்தால் எப்படி ? உங்களுடைய ஃபேஸ்புக் , ட்விட்டர் அக்கவுண்டுகளை பார்த்தோம் அதில் ..? சமூக வலைதளத்தில் நீங்கள் தற்போது வேலைக்கு வந்துள்ள நிறுவனம் குறித்த சர்சை கருத்துகள் , உங்கள் தோழர்களோடு மதுபானம் உள்ளிட்டவற்றைப் பற்றி இக்கேள்வி எழுப்பப்படலாம் . இன்று உங்களைப்பற்றி ஆன்லைனில் டைப் செய்தாலே தெரிந்துவிடும் . எனவே சோஷிய