இடுகைகள்

ரத்த சாட்சி 1.0 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எனக்கு தெரிந்த நபர் நல்லவர் கிடையாதா? - இருளான பக்கம் கொண்ட மனிதர்கள்

படம்
  கொலையாளிகளை   ஒருவர் புரிந்துகொண்டு அவரைப் பிடிக்க அவருக்கு நெருக்கமானவர்கள் உதவி னால் எளிதாக காரியம் முடியும். இதற்கு நாம் அணுக வேண்டியது, கொலையாளிகளின் கூட்டாளிகள் அதாவது நண்பர்கள், உறவினர்கள், அவருடன் வேலை செய்தவர்கள், காதலர்கள், மனைவி என வரையறுக்கலாம். கூடவே கொலையாளியால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்தவர் கூட இந்த வகையில் சேர்க்கலாம். இவர்களை சரியான படி விசாரித்தாலே குற்றவாளி பற்றிய கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடும். சிறப்பாக யாரும் அறியாமல் கொலை செய்பவர்கள் தங்களை அறியாமல் செய்யும் தவறுகள் நிறையவே உண்டு. அதை உடன் இருப்பவர்கள்தான் அடையாளம் கண்டு கொலையாளிகளுக்கு கூறுவார்கள். திருத்திக்கொள்வதற்கல்ல. பொதுவாக மனித மனம் குறிப்பிட்ட பாணியில் இயங்கும். நாம் வாங்கும் பொருட்கள், பழக்கம், செய்யும் செயல்கள் அனைத்தும் குறிப்பிட்ட பாணியில் அமைந்துவிடும். எண்ணங்களை அடிப்படையாக கொண்டதே நமது செயல்பாடுகள். அதன் பிரதிபலிப்பாக நமது உடைகள், தேர்ந்தெடுக்கும்பை, பயன்படுத்தும் பொருட்கள் அமையும்.   தொடர் கொலைகாரர்கள் தங்களின் செயல்பாட்டை பிறருக்கு அதாவது குடும்பத்தினருக்கு தெரியாமல்தான் செய்து வருகிறார்

குற்றவாளியுடன் சில நாட்கள்- குற்றத்தை உணர முடியாத நண்பர்கள், காதலிகள்

படம்
  1974ஆம் ஆண்டு கார்ஸ்வெல் கார், அவரது பதினைந்து வயது மகன் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களை பால் என்பவர் வீடு புகுந்து கொன்றார். பிறகு, அவர்களின் கார், துணி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அட்லாண்டாவில் உள்ள ஹாலிடே இன் என்னும் இடத்திற்கு வந்தார். இங்குதான் அவருக்கு பத்திரிகையாளர் சாண்டி ஃபாகெஸின் அறிமுகம் கிடைத்தது. சாண்டி, விடுதியில் உள்ள பாருக்கு மதுபானம் அருந்த வந்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி பால், அவருடன் பேசினார். பிறகு சாண்டியும் பாலும் இரவு உணவு அருந்தினார்கள். அடுத்து என்ன செக்ஸ்தான். அதில்தான் சாண்டி ஒரு உண்மையை கண்டுபிடித்தார். பால், பிறரின் தூண்டுதல் இன்றி சுயமாக உடலுறவு கொண்டு திருப்தி கொள்ள முடியாதவர் என   சாண்டி அறிந்தார். தனது குறைபாட்டைக்கூட கிண்டலாக பால் பேசியது சாண்டியை ஆச்சரியப்படுத்தியது. சாண்டிக்கு பாலுடன் சிறிதுகாலம் வாழ்ந்து பார்க்கலாம் என தோன்றியது. ஒருமாத காலம் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். பிறகுதான் சாண்டி, பாலை விட்டு பிரிந்து சென்றார். அவரை தொடர்புகொள்ள பால் நிறைய முறை முயன்றார். ஆனால் காவல்துறை சாண்டியைத் தேடி வந்து பால் பற்றிய தகவல்களை கேட்டபோதுதான் அவர் தொடர்

நம்பினால் உறுதியாக கொல்வோம்!

படம்
  இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் சிப்மன். இவர் மருத்துவராக பணியாற்றி 250க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றார். அதையும் நுணுக்கமாக செய்ததால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பிறர் நம்பிக்கை வைக்கும்படி மருத்துவர்கள், செவிலியர்களின் உருவம் இருந்தாலும் அவர்களின் மனம்  இருட்பாதையாக இருந்தால் என்ன செய்வது? கொலைகளின் எண்ணிக்கை என்பது சைக்கோ கொலைகாரர்களின் மனநிலையைப் பொறுத்ததுதான்.  இப்படி கொலைகளை செய்வதில் மருத்துவர் இருப்பது அரிதுதான். மருத்துவர் சிப்மன் மட்டும் இப்படி சாதனையாக நிறையப் பேர்களை கொலைசெய்திருக்கிறார். 1974ஆம் ஆண்டு முதலாக சிப்மன் கொலைகளை செய்யத் தொடங்கிவிட்டார். செவிலியர் என்றால் கூட நோயாளி இறந்துபோனால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் மருத்துவர் சிகிச்சை அளித்தும் கூட நோயாளி மேசையில் இறந்தால், படுக்கையில் இருந்து இறந்தால் அது பெரிய அவமானம். மேலும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு பெரிய சங்கடம். இதனால் சிப்மன் சிகிச்சை அளித்தவர்களில் பெரும்பாலானோர் இறந்துபோனது சர்ச்சையானது. மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளின் இறப்பில் சிப்மனின் பங்கு இருந்தது. இதற்கான கமிட்டி விசாரணையில் 137 நோயாளிகளின் இ

நோயாளிக்கு மிக நெருக்கத்தில் உள்ள கொலையாளிகள்

படம்
  இப்போது இறப்பின் தேவதை என மருத்துவமனையே அழைத்த புகழ்பெற்ற செவிலியரான கிரிஸ்டனைப் பார்ப்போம். கிரிஸ்டனைப் பொறுத்தவரை அனைத்துமே சோதனைகள்தான். எதற்காக உயிர்வாழ்வதற்காக இந்த பரபரப்பு என இதய பிரச்னை இல்லாதவர்களை கூட மருந்து கொடுத்து மாரடைப்பு ஏற்படுத்தி கொன்றார். எபின்பிரைன் மருந்தைக் கொடுத்து நோயாளிக்கு மாரடைப்பு ஏற்படுத்தி விட்டு கோட் ப்ளூ பட்டனை அழுத்திவிட்டு பக்கத்தில் பாவமாக நின்றுகொள்வார். மருத்துவர்களும் வேகமாக வந்து நோயாளியை காப்பாற்ற அவரின் விலா எலும்புகள் உடையும் வரை சிபிஆர் செய்துவிட்டு இறந்த நேரத்தை குறித்துக்கொண்டு அங்கிருந்து செல்வார்கள். குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் முப்பது நோயாளிகளில் 23 நோயாளிகளுக்கு கோட் ப்ளூ என்று தகவல் சொல்லியவர் கிரிஸ்டின் அம்மணிதான். ஒருகட்டத்தில் மருந்தகத்தில் எபின்பிரைன் மருந்துகளை பெயர் சொல்லாமல் வாங்கியது யார் என விசாரணை தொடங்கியது, மேலும் நோயாளிகள் இறந்துகொண்டே இருந்தால் பலருக்கும் பயம் ஏற்படும்தானே அப்படி ஏற்பட்டபோது பார்த்தால் செவிலியர் கிரிஸ்டின் லீவ் போட்டுவிட்டார். மருத்துவமனையின் விசாரணையைத் தடுக்க மருத்துவமனைக்கு குண்டு வைத்திருக்க

கொலை, சித்திரவதைக்கு எளிதில் இணங்கும் கொலைக்கூட்டாளிகள்

படம்
  கொலை செய்யும் இலக்கில் அனைவரும் ஒத்துப்போவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் இரண்டு பேர் சந்திக்கிறார்கள். அவர்கள் இருவருமே பிறரை கொலை செய்வதில் சித்திரவதை செய்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றால் எப்படியிருக்கும்? அப்படித்தான் ராய் நோரிஸ், லாரன்ஸ் ஆகியோர் இணைந்து பெண்களை வேனில் கடத்தி சித்திரவதை செய்து கொன்றனர். இவர்கள் இருவரும் சிறையில் சந்தித்து மாட்லாடி நட்ப்பை வளர்த்தினர். அப்போதுதான் இருவருக்குமே பிறரை துயரப்படுத்தி கொல்வதில் ஒத்த எண்ணம் இருப்பது தெரிய வந்தது. அப்புறம் எதற்கு தாமதம் என களத்தில் இறங்கினர். இருவருக்குமே பெண்களை துயரப்படுத்தி வல்லுறவு செய்து சித்திரவதை செய்வதில் அப்படியொரு சந்தோஷம் இருந்தது. எனவே தெளிவாக சிறையல் திட்டம் தீட்டியவர்கள், தண்டனை முடிந்தவுடன் வெளியே வந்தனர். வந்தவுடன் லாஸ் ஏஞ்சல்சில் வேன் ஒன்றை காசு போட்டு வாங்கினர். அதன் செல்லப் பெயர் மர்டர் மேக். 1979ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சிண்டி என்ற பெண்ணை வேனில் கடத்தினர். வேனில் வைத்தே அந்த பெண்ணை பிசைந்து பதம் பார்த்து சாறு குடித்தனர். பிறகு கோட் மாட்டும் ஹேங்கரை வைத்து கழுத்தை நெரித்து கொன்றனர். ராய் நோரி

கொலைகார கூட்டாளிகள்- கொலைக்கு ஒத்தாசை செய்யும் நபர்கள் 1

படம்
  சார்லஸ் மேன்சன், வெள்ளையர்களுக்கு எதிராக கறுப்பினத்தவர்கள் வளருகிறார்கள் என்ற வெறுப்பு வாதத்தைத் தூண்டிவிட்ட மத தலைவர். இவர் தனது வெறுப்பு பேச்சு மூலம் 37 கொலைகளை   செய்தார். ஆனால் எந்த கொலையையும் மேன்சன் நேரடியாக செய்யவில்லை. அனைத்து விஷயங்களையும் தனது குழுவினர் மூலம் சிறப்பாக செய்வதே அவரது வழக்கம். தனது கருத்துகளை பிறர் மூளையில் செலுத்தி அவர்களை தனது குடும்பம் என நம்ப வைத்து கொலைகளை   செய்ய வைப்பது மேன்சனின் பாணி. இந்த வகையில்தான் அவர் ரஷ்ய இயக்குநர் ரோமன் போலான்ஸ்கியின் கர்ப்பிணி மனைவி உட்பட ஐந்து நபர்களை கொன்றனர். இந்த கொலை வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது மேன்சனை ஜூரிகள் குற்றம்சாட்டினாலும் கூட நேரடியான ஆதாரம் கிடையாது. அவரது சீடர்கள் கொலை குற்றத்தை ஏற்றுக்கொண்டனர். இப்படி கொலைகாரர்களுக்கு உதவும் நண்பர்கள் குற்ற இலக்கியத்தில் எப்போதும் உண்டு. சாத்தானுக்கும் நண்பர்கள் உண்டு என்பார்களே அந்த வகைதான்.   ஆண்களுக்கு பெண்கள் உதவுகிறார்கள் என்றால் அங்கு பிடிஎஸ்எம் வாழ்க்கை முறையில் வருவது போல எஜமான் அடிமை உறவு   இருக்கலாம். அவர்கள் கொலை செய்வதை, உடலை புதைப்பது, தடயங்களை மறைப்பதை   செ

கொலைகார ஆண் துணைக்கு பெண்கள் உதவி செய்வதற்கான காரணங்கள்!

படம்
  உணர்வு ரீதியான உறவுகள் என்று சில உண்டு. ஒருவரின் காதலுக்காக, அவர் தன்னை விட்டுப்போக கூடாது என்பதற்காக.. நிறைய குற்றச்செயல்களை அறியாமலேயே செய்வார்கள். ஆஸ்திரேலியாவில் அப்படி நடந்த சம்பவம் ஒன்றைப் பார்ப்போம். இதில், வோரல் என்பவர்தான் குற்றவாளி. இவர், தன்னைக் காதலிக்கும் மில்லர் கொண்டு வரும் இளம்பெண்களை வல்லுறவு செய்து கொல்வார். சவங்களை புதைக்கும் பாக்கியம் வேறு யாருக்கு, மில்லருக்குத்தான். இப்படி ஏழு பெண்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். இதை சரி, தவறு என எப்படியும் மில்லருக்கு கூறத் தெரியவில்லை. அவருக்கு வோரலின் காதல் தேவைப்பட்டது. ஆனால் வோரல் ஒருநாள் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவரை த் தொடர்ந்து வந்த காவல்துறையினர் மில்லரைப் பிடித்தனர். வோரல் மீது கொண்ட காதலுக்காகத்தான் குற்றங்களை செய்தேன். கொலை செய்யவில்லை. உடல்களைப் புதைத்தேன் என்று சொல்லி புதைத்த இடங்களை அடையாளம் காட்டினார். இதுபோன்ற கொலைஜோடிகளில் ஆதிக்கம் செலுத்துபவர், எளிதாக குற்றங்களை தான் செய்துவிட்டு அதற்கான பல்வேறு செயல்களை பிறரை செய்யவைப்பவராக இருப்பார்..இப்படி ஆணைகளைக் கேட்டு நடப்பவர், மனதளவில் சமநிலை இல்லாதவராக எளிதில் கோப

கணவன் வல்லுறவு செய்து பெண்களைக் கொல்ல ஆதரவு தந்த அன்பு மனைவி

படம்
  இங்கிலாந்தில் நடைபெற்ற உண்மைக்கதை இது. அங்கே வாழ்ந்த ஃபிரெட் அவரது மனைவி ரோஸ் ஆகியோர் இணைந்து இருபது ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்ட பெண்களை வல்லுறவு செய்து கொன்று புதைத்து வந்தனர். வீட்டின் கீழ்த்தளத்தில் பிணங்களைப் புதைத்தவர்கள் அதற்கு மேல் கற்களைப் பதித்து மேல்தளத்தில் பிள்ளைகளை படுத்து தூங்க வைத்திருந்தனர். ஃபிரெட் மீது அவரது மகளே வல்லுறவு புகாரைக் கொடுத்தபோதுதான், சமூகநலத்துறைக்கு அவர்கள் மீது சந்தேகம் வந்தது. ஆளைப்பார்த்தால் அழகு வேலையப் பார்த்தால் எழவு என்று சொல்லுவார்கள். அதேபோலத்தான் ரோஸ் குடும்பம் இருந்த்து. ஃபிரெட் மூலம் ரோஸிற்கு எட்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் பெண் குழந்தைகளை வல்லுறவு செய்ய ரோஸ் மேரி அனுமதித்த கோரம் யாரும் நினைத்தே பார்க்காதது. சமூக செயல்பாட்டாளர்கள் ரோஸின் வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான் ரோஸ் விபச்சாரம் செய்து சம்பாதித்து வந்தது தெரிந்தது. வீட்டில் பாலியல் விளையாட்டுகளை விளையாடும் பொருட்கள் நிறைய இருந்தன. குழந்தைகளை விசாரித்தபோது ஹெதர் என்ற சிறுமி சில ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போய்விட்டாள் என புகார் கூறினர். இதைப்பற்றி கேட்டபோது ஹெதர் போல புதைத்த

அப்பாவின் குடிப்பழக்கத்தால் குற்ற உலகில் நுழைந்த சகோதரர்கள்

படம்
  ஒருவர் கொலை செய்கிறார் என்றால் அதற்கு அவர் மனதில் தோன்றும் எண்ணம் மட்டும் காரணமல்ல. அவருக்கு ரோல்மாடலாக யாரேனும் குடும்பத்தில் இருந்திருக்கலாம். கொலை செய்துவிட்டு சிறை சென்றிருக்கலாம். அவரே கொலை செய்வதற்கான ஆர்வத்தை பயிற்சியை புகைப்படங்கள், வீடியோக்கள், வேட்டை வழியாக தூண்டியிருக்கலாம். இந்த வகையில் கென்னத் பியான்சி, ஆஞ்சலோ பியூனோ, ஹில்சைட் ஸ்ட்ரேங்லர்ஸ் ஆகியோர் உறவினர்களாக இருந்தனர் இவர்களால் ஒரு டஜனுக்கும் மேல் பெண்கள் கொல்லப்பட்டனர். 1964ஆம் ஆண்டு லாரி ரேனஸ் என்பவர் அமெரிக்காவில் சுற்றித் திரிந்து பல்வேறு கொலைகளை செய்தார். வீட்டில் அமைதியாக இல்லாத காரணத்தால் எப்போதும் கோபமாகவும் வீட்டுக்கு வெளியேதான் எப்போதும் இருந்தார். ராணுவப் பயிற்சி முடிந்தபிறகு இந்தியானா, ஓஹியோ, கென்டக்கி என சென்று கொண்டிருந்தார். போகும் வழியெல்லாம் கொலைகளைச் செய்தார். வண்டிகளை கைகாட்டி நிறுத்தி ஓட்டுநரைக் கொன்று அவரின் பணம், பொருட்களைக் கைப்பற்றுவதுதான் லாரியின் பாணி. காவல்துறை லாரியை பிடித்தபோது தான் கொன்ற பள்ளி ஆசிரியரின் ஷூக்களையும், வாட்சையும் திருடி கட்டியிருந்தார். லாரி. விசாரணையில் ஐந்து நபர்களைக்

குடும்பத்துடன் கொலை செய்பவர்களின் மனநிலை

படம்
  1870ஆம் ஆண்டில் ஹெல் பெண்டர்ஸ் என்ற புகழ்பெற்ற கொலைகார குடும்பம் இருந்தது. இப்படி நான் கூறுவது 1873க்குப் பிறகுதான். அதற்கு முன்வரை ஆன்மிக அனுபவம் என்று சொல்லி பெண்டர் குடும்பம் வழிப்போக்கர்களை வீட்டுக்கு அழைத்து சோறிடுவார்கள். பிறகு சுத்தியலை வைத்து மண்டையை சிதறடித்து ஆட்களைக் கொன்று அவர்களின் பணத்தை சுருட்டுவதுதான் பெண்டர்களின் பாணி. உடல்களை பூத்தோட்டத்தில் புதைத்து விடுவார்கள்.   மருத்துவர் வில்லியம் என்பவரின் தம்பி, பெண்டரின் வீட்டிற்கு கேட்டியின் ஆன்மிக அனுபவத்தை பெற வந்தார். வந்தவர் அப்படியே சுத்தி மூலம் அடிக்கப்பட்டு முக்தி அடைந்துவிட்டார். இதை தெரியாத மூடரான வில்லியம் தம்பியைக் காணவில்லை என புகார் கொடுத்துவிட்டார். அந்த நேரம் மழை சீசன் வேறு. மழைபெய்து பூத்தோட்டம் முழுக்க இளகிப்போக புதைத்த பிணங்கள் வெளியே வந்துவிட்டன. காவல்துறை பெண்டரின் குடும்பத்தை பிடிக்கும்   முன்னேர அனைவரும் தப்பி விட்டார்கள். பத்தாயிரம் டாலர்களுக்கு மேல் ஆட்களைக் கொன்று சுருட்டியது பெண்டர் குடும்பம் என காவல்துறை அறிக்கை வெளியிட்டது.   கொலைக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அவசியம் கிடையாது. கொலை தொடர்

இளமையில் தொடர் கொலைகாரர்களைத் தடுக்கும் வழிமுறை - டொனால்ட் செய்த உளவியல் ஆய்வு

படம்
  ஜாசன் தான் கொன்ற பிணங்களை வைத்து காட்டில் மரங்களுக்கு இடையில் தனி கல்லறையை உருவாக்கி வைத்திருந்தார். நிலவொளியில் விலங்குகளைக் கொல்வதன் மூலம் அவர் விரும்பிய பெண்களைக் கொல்ல முடியும் அதற்கான சக்தி கிடைக்கும் என கற்பனை செய்தார். பெண்ணைக் கொன்று உடலை சிதைத்து கழுத்தில் ஆண்குறியை நுழைத்து பாலுறவு செய்யவேண்டுமென கனவு கண்டு அதைக்கூட தனது நோட்டில் எழுதி வைத்திருந்தார். வன்முறை, குற்றங்கள், கொலைகள் மூலம் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள திட்டம் போட்டு இறங்கி சாதித்த மனிதர்தான் ஜாசன். அவரின் ரோல் மாடல்கள் டெட்   பண்டி, லூகாஸ், மேன்சன் ஆகியோர்தான். இவர்களின் வரிசையில் இடம்பெறுவதுதான் ஜாசனின் கனவு, ஆசை, பேராசை, லட்சியம் என எல்லாமே…. அசுரகுலம் தொடர்வரிசை நூல்களில் முந்தைய நூல்களிலேயே சிலர் பிறக்கும்போது கெட்ட இயல்பில் பிறக்கிறார்கள். பிறருக்கு சூழ்நிலை அப்படி அமைந்துவிடுகிறது என கூறியிருந்தோம். ஆனால் சிலருக்கு சிறுவயதில் தோன்றும் அறிகுறிகளைக் கவனித்தாலே அவர்களை சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தி சிகிச்சைகள் கொடுக்க முயற்சிக்கலாம். ஆனால் பலரும் அதைப் புறக்கணித்துவிடுகிறார்கள். இதனால் ஏற்படும்

குற்றங்களை செய்வதற்கான முன்தயாரிப்பு கற்பனைகள் - முப்பொழுதும் கொலைக் கற்பனைகள்

படம்
  ஒருவர் மனதில் வன்முறை எண்ணம் வருகிறது என்றால் அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். உடல், மனம் ஒத்திசைவு குறைந்தவர்கள், தனது உடலின் மனதின் எல்லைகளைப் புரிந்தவர்கள் கற்பனை செய்யத் தொடங்குகிறார்கள். ஆனால் இது ஆக்கப்பூர்வமாக அமைந்தால் ஆராய்ச்சி, கதைகள் என செல்லும். ஆனால் இன்னொரு இருள் பக்கம் நகர்ந்தால் அது ஒருவழிப்பாதை. இருட்டில் அப்படியே நகர்ந்து செல்லவேண்டியதுதான். நரகத்தின் பாதை அது. சமூகத்தை விட்டு தனியாக ஒருவர் இருக்க நினைத்தால், அதை குணப்படுத்தும் மருந்துகள் மனநல மருத்துவத்தில் சிகிச்சையில் கிடையாது. அவரைக் கட்டுப்படுத்தி வைப்பதுதான் ஒரே சிகிச்சை. இந்த ஏரியாவில் கொலைகள் நடந்தால், தொடர் கொலைகாரர் என ஒருவர் அறியப்பட்டால் அது நான்தான் என தனது நண்பனிடம் துணிச்சலாக கூறி கொலை செய்வதில் இறங்கினார் ஜாசன் மாசே. இருபது வயதில் இளைஞர், இளம்பெண் என இருவரை படுகொலை செய்தவர். கொலைகளை ஒரே நாளில் செய்தார். கற்பனையும் அதில்   எல்லை இல்லாத வன்முறையும் கொண்ட காட்சிகளைக் கண்டு கொலைகளை செய்யத் தொடங்கியவர்தான் ஜாசன்.  முன்னரே ஜாசன், விலங்குகளை சித்திரவதை செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தார். இதைப் பார்த்து ப

மனதில் பெருகும் எல்லையில்லாத வன்முறைக்கான காரணம்!

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஒருவர் மனதில் தோன்றும் அளவிடமுடியாத வன்முறைக்கு என்ன காரணம்? குறிப்பிட்ட சாதியினரின் ரத்தத்தில் வன்முறை உள்ளது என சிலர் கூறலாம்.ம ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அட்ரியன் ரைன் என்பவரின் தலைமையில் அமைந்த குழுவினர், மூளையில் ஏற்படும் வேதியல் மாற்றங்களை வன்முறைக்கு காரணம் என்று கண்டறிந்தனர்.   இவரின் ஆராய்ச்சியில் வன்முறையாளர்களின் மூளையில் உணர்ச்சிகளை இயக்கும் மூளையின் பகுதியில் நிறைய பகுதி செயல்படாமல் இருப்பது தெரிய வந்தது. இதனால் இந்த மனிதர்கள் செய்யும் செயல்களின் பயமே இருக்காது. ஆக்ரோஷமாக, குறைந்த எதிர்வினையாற்றும் விதமாக செயல்படுவார்கள். இவர்களை எளிதாக தூண்டிவிட முடியும். எடுக்கும் முடிவுகளிலும் பொறுமை, நிதானம் இருக்காது. அனைத்துமே அதிரடியாகத்தான் வன்முறையை இலக்காக கொண்டுதான் இயங்குவார்கள்.   கற்பனையின் துணையால் சூழலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்று நம்புபவர்கள் இவர்கள். பிறரை விட சிறப்பான தகுதிகள் கொண்டவர்கள் என நினைத்துக்கொண்டு வன்முறையைக் கையாள்வார்கள். கொலை செய்யாமல் இவர்களால் வாழவே முடியாது என கொலையை வல்லுறவுவை பிராண வாயு போல நின