எனக்கு தெரிந்த நபர் நல்லவர் கிடையாதா? - இருளான பக்கம் கொண்ட மனிதர்கள்
கொலையாளிகளை ஒருவர் புரிந்துகொண்டு அவரைப் பிடிக்க அவருக்கு நெருக்கமானவர்கள் உதவி னால் எளிதாக காரியம் முடியும். இதற்கு நாம் அணுக வேண்டியது, கொலையாளிகளின் கூட்டாளிகள் அதாவது நண்பர்கள், உறவினர்கள், அவருடன் வேலை செய்தவர்கள், காதலர்கள், மனைவி என வரையறுக்கலாம். கூடவே கொலையாளியால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்தவர் கூட இந்த வகையில் சேர்க்கலாம். இவர்களை சரியான படி விசாரித்தாலே குற்றவாளி பற்றிய கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடும். சிறப்பாக யாரும் அறியாமல் கொலை செய்பவர்கள் தங்களை அறியாமல் செய்யும் தவறுகள் நிறையவே உண்டு. அதை உடன் இருப்பவர்கள்தான் அடையாளம் கண்டு கொலையாளிகளுக்கு கூறுவார்கள். திருத்திக்கொள்வதற்கல்ல. பொதுவாக மனித மனம் குறிப்பிட்ட பாணியில் இயங்கும். நாம் வாங்கும் பொருட்கள், பழக்கம், செய்யும் செயல்கள் அனைத்தும் குறிப்பிட்ட பாணியில் அமைந்துவிடும். எண்ணங்களை அடிப்படையாக கொண்டதே நமது செயல்பாடுகள். அதன் பிரதிபலிப்பாக நமது உடைகள், தேர்ந்தெடுக்கும்பை, பயன்படுத்தும் பொருட்கள் அமையும். தொடர் கொலைகாரர்கள் தங்களின் செயல்பாட்டை பிறருக்கு அதாவது குடும்பத்தினருக்கு தெரியாமல்தான் செய்து வருகிறார்