இடுகைகள்

வாழ்க்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பச்சை குத்துதல், டாட்டூ வரைதலை நவீனமாக செய்யும் பழங்குடி மக்கள்!

படம்
  கோண்ட் பழங்குடிகள் கலைஞர் மங்களா பாய் ஒரு தொன்மை மொழி உள்ளது. அதை பேசும் மக்களில் ஒருவர் மிஞ்சினாலும் கூட அம்மொழி உயிரோடு இருக்கிறது என்றுதான் அர்த்தம். அப்படித்தான் பச்சை குத்துதலை நரிக்குறவர்கள் பல்லாண்டுகளாக செய்து வருகிறார்கள். முதலில் சைக்கிள் கம்பிகளை பச்சு குத்துவதற்கு ஏற்ப மாற்றியமைத்தவர்கள், இப்போது அதற்கென தனி கருவிகளை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள. இதற்கான மை தனித்துவமானது, பல்வேறு மூலிகைகளை கலந்து இதைச் செய்கிறார்கள். பழங்குடி மக்கள் இயற்கையான மையை பயன்படுத்துகிறார்கள். நகரங்களில் உள்ள டாட்டூ கலைஞர்கள் பெங்களூரு, கோவா ஆகிய பகுதிகளில் பச்சை குத்துவதற்கான செயற்கை மையை வாங்குகிறார்கள். இந்த மையை ஒருவர் பயன்படுத்தும்போது வரையப்படும் உருவங்கள் பச்சை நிறமாக மாறாது. தொன்மைக் காலத்தில் பச்சை குத்தியவர்களுக்கு, அந்த இடம் பச்சையாக மாறியது, மூலிகைகள் காரணமாகத்தான். பச்சை குத்துவதில் சுகாதாரம் முக்கியம். இதில் எளிதாக நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது.   நாகலாந்து பழங்குடிகள் பச்சை குத்துவதற்கு புகழ்பெற்றவர்கள். இவர்கள், இயற்கை சார்ந்த விஷயங்களை கவிதை போல சொல்வதற்கு புகழ்பெற்றவர்கள்

முழுமையானவராக வாழ்ந்தால் புறவயமான பாதுகாப்பைத் தேடவேண்டியதில்லை - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  கே.நீங்கள் ஒருபோதும் ஏழையின் வாழ்க்கையை வாழ்ந்தவரில்லை. மறைமுகமாக பணக்கார நண்பர்களின் ஆதரவு, இருந்து வந்துள்ளது. ஆனால் மக்கள் தம் வாழ்க்கையில் அனைத்து வித பாதுகாப்புகளையும் விட்டு விட வேண்டுமென்று பேசி வருகிறீர்கள். ஏற்கெனவே இங்கு பலகோடி மக்கள் அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாமல்தான் வாழ்ந்து வருகிறார்கள். நீங்கள் வறுமையான சூழலை அனுபவிக்காதவர், அதேநேரம் , புறவயமான பாதுகாப்பின்மையை அனுபவிக்காதவர். எப்படி இதுபோல பாதுகாப்பை கைவிடவேண்டுமென கூறுகிறீர்கள்? பதில். இந்த கேள்வி தொடர்ச்சியாக என்னிடம் கேட்கப்பட்டு வருவதுதான். நான் இதற்கு முன்னமே பதில் அளித்திருந்தாலும், மீண்டும் பதில் கூறுகிறேன். நான் இங்கு பாதுகாப்பு என்று கூறுவது, மனம் உருவாக்கும்   இசைவான சொகுசான சூழல்களைத்தான். புறவயமான பாதுகாப்பு என்பது, மனிதர்கள் உயிரோடு வாழ ஓரளவுக்கு உதவுகிறது. அதை நான் மறுக்கவில்லை. இந்த இடத்தில் இரண்டையும் ஒன்றாக்கி குழப்பிக்கொள்ளவில்லை. நீங்கள், இப்போது உடல் மட்டுமல்லாமல் மனம் பற்றிய பாதுகாப்பையும் பேசுகிறீர்கள். இதன் வழியாக உறுதியான தன்மை உருவாகிறது. பாதுகாப்பு பற்றி தவறாக புரிந்துகொண்டால், அதைப்

நெசவாளர்களை வாழ வைக்கும் உடை வடிவமைப்பாளர்களின் முயற்சி!

  கேரளத்தில் பிரபலமாகும் பாலின பாகுபாடற்ற ஆடைகள் கேரளா மாநிலத்தின் செண்டமங்கலம் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், இப்போது பேசு பொருளாகியுள்ளது. இதற்கு காரணம் புதிய தலைமுறை வடிவமைப்பாளர்களின் ஆடைகள். இவர்கள், தொழிலாளர்களுடன் சேர்ந்து நெய்து விற்பதுதான். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நெசவாளர் சங்கம் முதலில் நஷ்டத்தில் இயங்கியது. இதன் ஆடைகள் மக்கள் பெரிதாக அடையாளம் கண்டு வாங்கவில்லை.   ஆனால் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது. இதற்கு காரணம், இளைய தலைமுறையினர்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர், ஶ்ரீஜித் ஜீவன், ஷாலினி ஜேம்ஸ், ஆகிய வடிவமைப்பாளர்கள் மேலும் பலருடன் சேர்ந்து கைவிடப்பட்டு வந்த கைத்தறி நெசவை மீட்டெடுக்க முயன்றனர். 2022ஆம் ஆண்டு இருபத்து நான்கு வயதான பருல் குப்தா, யுகா எனும் பிராண்டை உருவாக்கினார். இதற்கு உதவிய ஹெச் 47 சங்கம் இதனால் மக்களிடையே புகழ்பெற்றது. கடந்த செப்டம்பரில் இந்த பிராண்டில்   33 புதிய ரகங்கள் வெளியாயின. இப்போது பருல் குப்தா, கிரு கேஷிகி எனும் புதிய ஆடை ரகங்களை வெளியிட்டுள்ளார். இந்த ரகங்களின் சிறப்பு, இவற்றை ஆணும், பெண்ணும் என இரு பாலினத்தவருமே அணியலாம் என்பதுதான். அதாவத

மனப்பூர்வமாகத் தேடினால் சுதந்திரத்தைப் பெறலாம்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி எப்படி தேர்ந்தெடுப்பது -2 உங்கள் வாழ்க்கை என்பது தேர்வுகளாக அமைந்துள்ளது. உங்களின் தேர்வு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தருவதால் அதை நீங்கள் விரும்புகிறீர்கள்.  இந்த தேர்வு, உங்களுக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த நாள் இந்த தேர்வு உங்களுக்கு பிடிக்காமல் போய்விடலாம். எனவே, நீங்கள் தேர்ந்தெடுத்த விஷயங்களை உடனே கைவிட்டுவிட்டு வேறு விஷயங்களுக்கு நகர்ந்துவிடலாம். ஆகவே,  உங்களது தேர்வு என்பது உணர்வுநிலையைச் சேர்ந்தது. நீங்கள் அதை சுயநினைவு சார்ந்தும் இருநிலைப்பாடுகள் சார்ந்தே எடுக்கிறீர்கள். ஆனால் எடுக்கும் தேர்வு நிலைப்பாடு, எதிர்மறையாக அமைகிறது. எதிர்மறையாகச் செல்லும் தேர்வுகள் பற்றி நீங்கள் கவனமுடன் இருந்தால்,  உண்மை எதுவென அடையாளம் கண்டுகொள்ளலாம். உண்மையை அடையாளம் காண்பதற்கான ஆர்வம், வேட்கை இல்லை என்பதால் உணர்வு நிலை சார்ந்து எதிர்மறையான தேர்வுகளே கிடைக்கின்றன. இந்த நிலையில் மனம் முழுக்க எதிர்மறை தேர்வுகளிலிருந்து எளிதாக விடுதலையாவதில்லை. இச்சூழலில், விழிப்புணர்வாக, செழிப்பான நிலையில் மனம் இருக்காது. ஒருவரின் எதிர்மறைத் தேர்வுகளில் சுதந்திரம் இருப்பது, சாதனை என்று க

முன்முடிவுகளை களைந்தால்தான் புத்தாண்டு புதியதாக இருக்கும் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி புதிதாக தொடங்கலாமா? புதிய ஆண்டிற்கான தொடக்கம் இது. புதிய ஆண்டு என்றால் அதற்கான அர்த்தம் என்னவென்றபுரிந்துகொள்கிறோம்? புதியது, முழுக்கவே புதியது, இதுவரை நடைபெறாத ஆண்டா? புதியது என பேசிக்கொள்கிறோம் என்றால் சூரியனுக்கு கீழ் உருவாகும் புதிய   ஒன்றா?   புத்தாண்டு, மகிழ்ச்சியான புத்தாண்டு என ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைக் கூறுகிறோம். உண்மையிலேயே புதிய ஆண்டு என்பது மகிழ்ச்சியானதாக நமக்கு அமையுமா?   புத்தாண்டு, புதியதாக அமையுமா அல்லது பழைய மாதிரியே வடிவத்தில் பழகியதாக ஆண்டுதோறும் நடக்கிறதா, இருக்குமா? அதே பழைய சடங்குகள், பழைய கலாசாரம், பழைய பழக்க வழக்கங்கள், இதுவரை என்ன செய்துகொண்டிருந்தோமோ அதை அப்படியே செய்துகொண்டிருப்போமா?   அதே பழைய விஷயங்களை புதிய ஆண்டிலும் செய்துகொண்டிருப்போமா? புதிதாக ஏதேனும் இருக்குமா? புதிதாக நாம் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்குமா? நீங்கள் இதுபோன்ற கேள்வியைத்தான் பின்தொடர்ந்து செல்லவேண்டும். வாழ்க்கையின் அனைத்து நாட்களிலும் இதுவரை செய்யாத விஷயங்களை செய்யவேண்டும்.   புதிய செயல்களை செய்யும்போது மூளை அதன் முன்முடிவுகள், தீர்ப்புகள், கருத்துகள்,

மனதில் வெறுமை நிலை உருவாவது எப்படி? - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி எப்படி முடிவெடுப்பது? நீங்கள் தேர்வுகளின் அடிப்படையில் வாழ்கிறீர்கள். நீங்கள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் எதற்காக ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? என்ன தேவை, எந்த விசை உங்களை தேர்ந்தெடுக்க உந்துகிறது? நான் ஒருவரை இப்படி உந்தும் விசையை, ஒருவரின் உள்ளே உள்ள வெறுமை நிலை அல்லது தனிமை   என்று கூறுவேன். இந்த முழுமை இல்லாத நிலை ஒருவரை தேர்ந்தெடுக்க தூண்டுகிறது. இப்போது கேள்வி, வெறுமை நிலையை எப்படி நிரப்புவது என்பதல்ல. அதற்கு பதிலாக வெறுமை நிலையை எது உருவாக்குகிறது என்பதுதான். தேர்வுகளின் செயல்பாட்டால் வெறுமை நிலை உருவாகிறது , செயலின் முடிவில் என்ன கிடைக்கிறது என்பதை நோக்கி செல்வதால் வெறுமை உருவாகிறது என்கிறேன். வெறுமை நிலை உண்டாகும்போது, ஒரு கேள்வி உருவாகிறது, எப்படி இந்த வெறுமை நிலையை நிரப்புவது, தனிமை நிலையை, நிறைவுறாத நிலையை அழிப்பது எப்படி?   என்னைப் பொறுத்தவரை வெறுமை நிலையை நிரப்புவது என்பது ஒரு பதில் கிடைக்கும் கேள்வியாகவே தெரியவில்லை. ஏனெனில் வெறுமையை எதனாலும் நிரப்பவே முடியாது.   ஆனால் பெரும்பாலான மக்களை அதை நிரப்பவே முயன்று வருகிறார்கள். இ

வாழ்ந்து அனுபவித்தலே உண்மையை புரிந்துகொள்வதற்கான வழி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  வரையறுக்கப்படாதபடி வாழ்க்கையை நிஜத்தில் வாழ்தல் நம்மில் பெரும்பாலானோர் உண்மையான வாழ்க்கை இருப்பதாக நம்புகிறார்கள். அதை அழியாத ஒன்றாக நினைக்கிறார்கள். ஒருவர் , வாழ்க்கையில் அழியாத தன்மை கொண்ட விஷயங்களை உணர்வது அரிதிலும் அரிதாகவே வாழ்க்கையில் நடைபெறுகிறது. என்னைப் பொறுத்தவரை நிஜம் என்பது, கடவுளாக இருக்கலாம். அதை அமரத்துவம், அழியாத தன்மை   அல்லது வேறு எந்த பெயர்களைக் கொண்டும் குறிப்பிடலாம். உயிர்வாழக் கூடிய புதுமைத்திறன் கொண்ட விஷயங்களை வரையறை செய்து குறிப்பிட முடியாது. நிஜ வாழ்க்கை என்பது இந்த வரையறைகளைக் கடந்தது. உண்மையை நீங்கள் வரையறை செய்து கூறினால்,அது நிலையானதாக இருக்காது. வார்த்தைகளைப் பயன்படுத்தி உருவாக்கும் மாயமாகவே இருக்கும். பிறர் கூறும் வார்த்தைகளின் அடிப்படையில் காதலை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. காதலை நீங்கள் அனுபவித்தால்தான் அதை உணர முடியும். உப்பின் சுவையை அறிய, நீங்கள் அதை சுவைத்துப் பார்க்கவேண்டும். நாம் பெரும்பாலான நேரம், உண்மையைத்   தேடி உணர்வதை விட அதைப் பற்றி குறிப்புகளை வரையறைகளையே விரும்புகிறோம்.   நான் அதை வரையறை செய்யப்போவதில்லை. வார்த்தைகளுக்குள்

நாம் வாழும் வாழ்க்கையில் பாதுகாப்பு கிடையாது - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி நாம் உண்மையைத் தேடவில்லை; ஆறுதலைத் தேடுகிறோம் மனம், இதயம் ஆகியவை பற்றி ஆராயத் தொடங்கினால் புதிய சிந்தனை, வாழ்க்கைத் தெளிவு, உணர்வு நிலை ஆகியவற்றைக் கண்டறியலாம். வாழ்க்கையை இந்த வகையில் மாறுபட்டதாக்கி அமைத்துக்கொள்ளலாம்.   நீங்கள் உண்மையில் உங்களுக்கு   மனதில் திருப்தி ஏற்படுத்தும் விளக்கங்களை தேடுகிறீர்கள். உங்களில் பெரும்பாலானோர் உண்மையைப் பற்றிய வரையறையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வரையறையைக் கண்டுபிடித்தவர்கள் தங்கள் வாழ்வை அழியாத பெருஞ்ஜோதியில் ஐக்கியமாக்கிக் கொள்ள முடியும். உங்கள் தேடுதலின் லட்சியம் உண்மைதான் என்றால்,   நீங்கள் தேடிக்கொண்டிருப்பது உண்மையல்ல. ஆறுதல் அல்லது சொகுசான வேறு ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் தினசரி வாழ்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள், முரண்பாடுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள நினைக்கிறீர்கள். உண்மையைத் தேடுவதில் உள்ள கஷ்டங்களைக் கடந்து பார்த்தால், நாம் பிறந்ததே உண்மையைத் தேடி அறிவதற்குத்தான் என புரிந்துகொள்ள முடியும்.   உண்மையைத் தேடுவதில் உள்ள சிரமங்கள், மனநிலையைக் குலைத்து தேடலை

இளம் விதவையைக் காதலித்து அதன் வழியாக தனது அம்மாவை உணரும் பால்ராஜூ! - சாவு கப்புரு சல்லாக

படம்
  சாவு கப்புரு சல்லாக தெலுங்கு இயக்குநர் – கவுசிக் பெகல்படி இசை – ஜேக்ஸ் பிஜோய் இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்லும் பஸ்தி பால்ராஜ், சாவு வீட்டில் கணவரை இழந்த பெண்ணைக் காதலிக்கிறார். இந்த காதல் இருவர் வாழ்விலும், குடும்ப உறுப்பினர்களிடையேயும் ஏற்படுத்தும் விளைவுகள்தான் கதை. குடிசைப்பகுதி மக்களாக வாழ்பவர்களின் வாழ்க்கை, மத்திய வர்க்க கிறிஸ்தவர்களின் வாழ்க்கை என இரண்டையும் இயக்குநர் விவரித்துள்ளார். பஸ்தி பால்ராஜூக்கு, அவரது தாயான கங்கம்மாதான் எல்லாமே. கங்கம்மா, விசாகபட்டினம் கடற்கரையில் சோளத்தை சுட்டு வருகிறார். பால்ராஜின் அப்பா, வாதம் வந்து விழுந்து படுக்கையில் கிடக்கிறார். வீட்டுக்கான சம்பாத்தியம் என்பது கங்கம்மாவின் பொறுப்பு. பஸ்தி பால்ராஜ் , இறந்தவர்களை தூக்கிச் சென்று மயானத்தில் அடக்கம் செய்யும் வேலையை செய்கிறார். இதில் கிடைப்பதுதான் அவரது சம்பாத்தியம். சாவு வீட்டுக்குப் போகும்போது அங்கு, இறந்த பிணத்தின் அருகே மல்லிகா என்ற இளம்பெண்ணைப் பார்க்கிறார் பால்ராஜ். உடனே, காதல் வயப்பட்டு பிணத்தை தூக்கி வண்டியில் வைக்கும் முன்னரே காதல் வயப்படுகிறார். உடலை அடக்கம் செய்துவிட

பிடிஎஸ்எம் வாழ்க்கை முறையும், கலாசாரமும்!

படம்
  பிடிஎஸ்எம் முறையைப் பொறுத்தவரை அது ஒரு வாழ்க்கை முறை. அதைப் பிடித்தால் அவர்கள் கம்யூன் போல வாழும் குழுக்களோடு சேர்ந்து அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். இணையத்தில் இப்படி இயங்குபவர்கள் ஏராளமான ஆட்கள் உண்டு. எந்த உறவிலும் நம்பிக்கை முக்கியமானது. அந்த நம்பிக்கையை யார் மீது வைக்கிறீர்கள் என்பது தனிநபர்களைப் பொறுத்தது. தவறான தகுதியில்லாத நபர்கள் மீது அன்பை செலுத்தி திரும்ப அன்பு கிடைக்காதபோது யாருக்குமே விரக்தியாகும். பிடிஎஸ்எம் முறையிலும் இந்த ஆபத்து உண்டு. எனவே நீங்கள் ஒருவரை நம்பினால் பிடிஎஸ்எம் முறையை பின்பற்றுங்கள். இல்லாதபோது அது சுரண்டல் என்பதாகவே மனதில் கருத்து உருவாகும். ஒருவர் நம்பும் கலாசாரப்படி பிடிஎஸ்எம் முறை இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் ஒரே பதிலாக இருக்க முடியும். இந்த முறையை நீங்கள் கையாள்கிறீர்கள், கடைபிடிக்கிறீர்கள் என்றால் முழுமையாக அதன் சாதக பாதகங்களை அறிந்துகொள்வது அவசியம். அப்படியல்லாதபோது பிரச்னை ஏற்படவே வாய்ப்பபு அதிகம். இன்றைக்கு தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது, ஓரினச்சேர்க்கையாளர்கள் மணம் செய்வது, தன்னை குறிப்பிட்ட பாலினமாக வெளிப்படுத்துவது என்பது

நான், எனது என்ற சொற்களே வாழ்பனுவத்தை அழிப்பன - ஜே கிருஷ்ணமூர்த்தி

  சரியான கல்வி ஜே கிருஷ்ணமூர்த்தி நான், எனது என்ற சொற்களை ஒருவர் பயன்படுத்தும்போது அவர் சுயத்துடன் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்கிறார். இந்த நிலையில் ஒருவரின் மனம் சுதந்திரமாக இயங்குதில்லை. அவர் பெறும் அனுபவங்களும் கூட வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ள உதவுவதில்லை. தான், எனது எனும் தீவிர தன்முனைப்பு   முரண்பாடுகள், வேதனை, குழப்பங்களை ஏற்படுத்துகிறது.   இவர்களுக்கு அனுபவங்களும் மேற்சொன்ன பாதிப்புகளிலிருந்து தப்பியவையாக இருக்காது. குழந்தைகள் தங்கள் சுயத்திடமிருந்து தன்முனைப்பிடமிருந்து தப்பி விலகி இருக்க கற்றுக்கொடுப்பது சற்று வேதனை நிரம்பியதாகவே இருக்கும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழந்தைகளின் உறவுமுறைகள், நடவடிக்கை என பலவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். பெற்றோர், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களது தெளிவான கருத்துகளின் வழியே குழந்தைகளுக்கு உதவினால் அவர்களுக்குள் அன்பும் நல்ல விஷயங்களும் உருவாகும். கல்வி என்பது எப்போதும் நிகழ்காலத்திற்கானது. கற்றல் என்பது சூழல் தாக்கங்கள், வேறுவிதமான தன்மைகளைக் கொண்டிருக்காது. ஒருவரின் முரண்பாடுகள், துன்பங்களை நீக்கி அவரை கல்வியே முழுமையா

வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவாத கல்வி ஏற்படுத்தும் பாதிப்பு - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  பல்வேறு இடங்களில் ஏற்படும் பேரழிவுக்கு காரணம், கல்வியாகவே இருக்கிறது. நாம் கல்வி என்பதை எப்படி புரிந்துகொள்கிறோம். பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவது எதற்கு? அவர்களை கற்றவர்களாக மாற்றுவதற்காகவா? பள்ளியில் குறிப்பிட்ட தொழில் திறன்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.  அது அவர்களுக்கு லாபம் தரும் வேலையைப் பெற்றுத் தருகிறது. இப்படி கல்வி கற்று கிளர்க்காக திறன் பெற்றவர்கள் நிர்வாக ஏணிப்படிகளில் ஏறி திறன் பெற்றுவிட முடியுமா? ஏழாவது பாகம், தி கலெக்டட் வொர்க்ஸ் தொகுப்பு. தொழில்நுட்ப வளர்ச்சி மக்களின் சில பகுதியினருக்கு பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது. ஆனால் அதேசமயம் ஆழமான பிரச்னைகளையும் உருவாக்குகிறது. வளர்ந்துவரும் பல்வேறு சவால்களை சந்திக்கும் வகையில் ஒருவரின் வாழ்க்கை இருக்கவேண்டும். தனிப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல் இதுதான்.  தொழில்நுட்ப ரீதியாக நாம் பெறும் அறிவு, நமது மனதிற்குள் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளை, தர்க்க ரீதியான அழுத்தங்களை தீர்க்க உதவாது. வாழ்க்கையின் செயல்பாட்டை புரிந்துகொள்ளாமல் நாம் பெறும் தொழில்நுட்ப அறிவு மெல்ல நம்மையே அழிக்கத்தொடங்குகிறது. அணுவை எளிதாக பிளக்

புதிர்ப்பாதையிலிருந்து நம்பிக்கை பெற்று தப்பி வாழ்க்கையை அடைய கற்றுத்தரும் நூல்! - ஸ்பென்சர் ஜான்சன் (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)

படம்
  புதிர்ப்பாதையிலிருந்து தப்பித்து வெளியேறுதல்  ஸ்பென்சர் ஜான்சன் தமிழில் நாகலட்சுமி சண்முகம்  மின்னூல்  என் சீஸை நகர்த்தியது யார் என்ற நூலின் இரண்டாம் பகுதி. நூல் சிறியதுதான். வேகமாக படித்துவிடலாம்.  நாம் நம்புகின்ற நம்பிக்கை தவறாக இருக்கும்போது, அது நம்மை தொழில் வாழ்க்கையில் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து துன்பத்திற்குள்ளாக்குவதை எழுத்தாளர் வலுவாக சொல்ல நினைத்துள்ளார். அதற்குத்தான் புதிர்ப்பாதையில் சீஸ் தேடும் கதை கூறப்படுகிறது. இதில் ஜெம், ஜா, ஹோம் மற்றும் இரு சுண்டெலிகள் உள்ளன.  சுண்டெலிகளும், ஜாவும் புதிர்ப்பாதையில் இருந்த சீஸ்களைத் தேடி கண்டுபிடிக்க கிளம்புகின்றனர். ஆனால் ஜெம், இன்று இல்லாவிட்டால் என்ன நாளை இதே இடத்தில் சீஸ் கிடைக்கும் என காத்திருக்கிறான். பாறையின் புதிர்ப்பாதையில் யார் சீஸை வைப்பது, அதற்கான ஆதாரம் பற்றி அவன் ஏதும் கவலைப்படுவதில்லை. இதனால் நாளுக்குநாள் அவனுக்கு உணவு கிடைக்கவில்லை. ஆளும் மெலிய நம்பிக்கையும் மெலிகிறது. அப்போது ஹோம் என்ற சிறு குள்ளப் பெண் அவனுக்கு ஆப்பிள் தந்து உதவுகிறாள். ஜெம்முக்கு அது ஆப்பிள் என்பது கூட தெரிவதில்லை. சீஸ் தவிர ஏதும் சாப்பிடமாட்டேன்

காந்தியின் அடிப்படை சிந்தனைகளை உருவாக்கிய நகரம்!

படம்
  காந்தி படிக்கச்சென்ற இங்கிலாந்தின் லண்டன் நகரம் . அந்த நகரம்தான் ஆங்கில தேசத்தின் சட்டங்களோடு அவரின் மனவலிமையையும் திடமாக உருவாக்கிய இடம் . இங்கு அவர் படித்த மத ரீதியான நன்னெறி நூல்களும் , சந்தித்த நூல்களும் காந்தி என்ற அடையாளத்தை வலிமையாக்கின . அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம் . வைஷ்ணவ குலத்தில் பிறந்த காந்தி இந்து , சமணம் ஆகிய மதத்தினரின் பல்வேறு சடங்குகளை அறிந்துகொள்ள அவரது அம்மாவே காரணம் . லண்டன் நகரில் வழக்குரைஞர் படிப்பிற்காக தங்கியிருந்த காலகட்டம் அவரை சிந்தனையாளராக மாற்றியது . வாழ்க்கை முழுமைக்குமான லட்சியவாத கருத்துகளை அவர் லண்டனில்தான் பெற்றார் . 1888-1891 ஆண்டில் லண்டனில் சட்டம் படிக்க வழக்குரைஞராக காந்தி சென்றார் . பிறகு , 1906-1931 காலகட்டத்தில் , அரசியல் காரணங்களுக்காகவும் பணிக்காகவும் நான்கு முறை காந்தி பயணித்தார் . இந்தியா காலனி தேசமாக இருந்தது . இ்ங்கிலாந்து அதனை ஆண்டு வந்த பேரரசு . இதனால் லண்டன் நகரம் பல்வேறு முக்கியமான தலைவர்கள் வந்து செல்லும் இடமாக புகழ் பெற்றிருந்தது . காந்தி முதல்முறையாக லண்டனுக்கு வந்தபோது தன்னோடு டைரி ஒன்றை வைத்திருந்தார் . அதில் பல்வேறு குறிப்