இடுகைகள்

வெப்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழல் பதற்றத்திற்குள்ளாகும் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்?

படம்
  உலகம் அழியப்போகிறது என்ற செய்தியை பெரும்பாலான நாளிதழ்கள், ஊடகங்கள் பல்லாண்டுகளாக கூறி வருகின்றன. குறிப்பாக, இயற்கை பேரிடர்கள் நினைத்துப் பார்க்க முடியாத இழப்பை ஏற்படுத்தும்போதும், நோய்த்தொற்று காரணமாக மக்கள் லட்சக்கணக்கில் இறக்கும்போதும் சமூக விஞ்ஞானிகள் இத்தகைய கருத்துகளை முன்வைத்து பேசுவார்கள். இன்று டிஜிட்டல் ஊடகம் அனைத்து மக்களின் கையிலும் உள்ளது. தான் சொல்ல விரும்பும் கருத்தை ஒருவர் சமூக வலைத்தளங்கள், யூட்யூப், விமியோ என்ற தளங்களில் வழியாக எளிதாக உலகிற்கு சொல்லலாம். மக்கள் தங்கள் சூழல் பயத்தை, விரக்தியை பிறருக்கு எளிதாக கடத்தி வருகிறார்கள்.   2012ஆம் ஆண்டு இப்படித்தான் மாயன் காலண்டரில் உலகம் அழியப்போகிறது என சிலர் கூறி பயமுறுத்தினார்கள். இதனால் பீதிக்குள்ளான மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் பிரியத்திற்கு உள்ளானவர்களை கட்டிப்பிடித்து அழுத்து பிரியாவிடை கொடுத்த காட்சிகள் அரங்கேறின. 5,126 ஆண்டுகளைக் கொண்ட மாயன் காலண்டர் சொன்ன குறியீடுகள், மர்மங்களை வைத்து நிறைய கதைகள் உள்ளன.   உலகம் அழிகிறது, அழியவில்லை என்பதை விடுங்கள். ஒருவேளை, உலகம் அப்படி அழிகிற சூழ்நிலை ஏற்பட்டால் நாம் என்ன செய

வெப்பத்தால் உருகும் உடல், மனம்!

படம்
  அரசு சொத்தை விற்பது சுலபம் ! அன்புள்ள கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? சென்னையில் பள்ளி , கல்லூரிகள் தொடங்கிவிட்டதால் வேலை பரபரப்பாக நகர்கிறது . புத்தக பதிப்பு என்பது அனைவருக்கும் ஏற்ற வேலை அல்ல . எனவே வேலைநேரம் மெதுவாக நகர்வது போலவே தெரிகிறது . அரசின் பொதுச்சொத்துகளை நிறுவனங்களை அடகு வைத்து பணம் பெறுவதைப் பற்றிய கட்டுரையை இந்து ஆங்கில நாளிதழில் படித்தேன் . எனக்கு இது சரியான கொள்கையாக படவில்லை . குறிப்பிட்ட நாட்களுக்கு சொத்துகளை தனியாருக்கு கொடுத்து அடிப்படை கட்டமைப்புக்கான நிதியைப் பெறுவது என்பது புத்திசாலித்தனமாக முடிவல்ல . இதன் காரணமாக தனியார் நிறுவனங்கள் மக்களிடம் அதிகளவு கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது . குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளும் என கட்டுரையில் கூறப்பட்டுள்ளது . நாளிதழ் பணியில் இருந்து உதவி ஆசிரியர் , எழுத்தாளர் பாலபாரதி விலகிக்கொண்டுவிட்டார் . வேறு ஏதோ அரசு இதழுக்கு ஆசிரியராகி வெளியேறுகிறார் . இவர் பொறுப்பேற்று பார்த்து வந்த பக்கங்கள் எனக்கு வரும் என நினைக்கிறேன் . நாங்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய சமூக பொறுப்புணர்வு பற்றிய நூல் ஒன்

உடலைத் தாண்டி மூளைக்குள்ளும் செல்லும் வெப்பம்! - கடிதங்கள்- கதிரவன்

படம்
  14.4.2022 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? திருமண வேலைகளை நிறைவு செய்திருப்பீர்கள். நான் இன்று எனது அறைத்தோழர் மெய்யருள் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொன்னேன். தினகரனில் வேலை செய்தபோது கே.கே.நகரில் அறையில் தங்க வைத்து உதவினார். ஏப்ரல் 14 அம்பேத்கரின் பிறந்தநாள் வேறு. இப்போது நாடெங்கும் சமத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.  தமிழ் புத்தாண்டுக்கு விடுமுறை. அறையில் உட்கார்ந்து 2 அறிவியல் நேர்காணல்களை எழுதினேன். வெயில் உடல்சோர்வை எளிதாக உருவாக்கிவிடுகிறது. மதியம் கடும் வெக்கை. படுத்து தூங்கிவிட்டேன். வெளியில் எங்கும் செல்லவில்லை. பக்கத்து அறைவாசி, பட்டைசாதம் ஒரு பாக்கெட் கொடுத்தார். அதுவே மதியச்சோறு. பால் பொருட்கள் சேர்க்க கூடாது என சித்த மருத்துவர் ரெஜூநாத் முன்னரே எச்சரித்தார். அதிகரிக்கும் வெப்பம் காரணமாக நான் தயிரை உணவில் சேர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளேன். வேறுவழி தெரியவில்லை.  அம்மா இன்று குலதெய்வ கோவிலுக்குச் சென்று வந்ததாக சொன்னாள். அவளது நம்பிக்கை அவளுக்கு உள்ளது. பயணம் மனதுக்கு ஆறுதல் தரும். சென்றவாரம் விகடனில் வந்த நீரதிகாரம் முன்கதை சுருக்கம் போல வந்து

முகத்தில் தோன்றும் ஃபிரெக்கில்ஸ்!

படம்
  ஃபிரெக்கில்ஸ்  சில பெண்களுக்கு அல்லது ஆண்களுக்கு முகத்தில் பழுப்பு நிற புள்ளிகள் இருக்கும். பெரும்பாலும் வளரும்போது உருவாகும் ஒன்றுதான். குழந்தைகள் பிறக்கும்போது இதுபோன்ற புள்ளிகளோடு இருப்பதில்லை.   இதை ஆங்கிலத்தில் எப்ஹெலிடெஸ் என்று சொல்லுவார்கள். இப்படி புள்ளிகள் தோலில் கடினமான தன்மையில் இருக்காது. ஆனால் சொல்லும்போது, அப்படித்தான் நினைக்கத் தோன்றும். ஃபிரக்கில்ஸ் முகம், கழுத்து, தோள், மார்பு ஆகிய இடங்களில் உருவாகிறது.  சூரிய வெளிச்சம் படுபவர்களுக்குத்தான் ஃபிரெக்கில்ஸ் உருவாகிறது. இதில் புற ஊதா கதிர்களுக்கும் பங்கிருக்கிறது. மரபணு என்பது ஒருவரின் உடல்நிறம், முடியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. அப்படியெனில் ஃபிரெக்கில்ஸ் என்பதும் இந்த வகையில் உருவாகுமா என்றால் உருவாக வாய்ப்புள்ளது என்றே கூறலாம். மற்றபடி இதை உறுதியாக கூறுவது கடினம்.  ஆசியா மற்றும் காகசிய நாடுகளில் எம்சி1ஆர் என்ற மரபணுவின் வேற்று உருவங்கள் காணப்படுகிறது. சூரியவெளிச்சம் பட்டு ஐந்து நாட்கள் கழித்து ஃபிரெக்கில்ஸ் உருவாகிறது. வெப்பத்தாக்குதல் காரணமாகவும் மெலனின் நிறமி சார்ந்தும் ஃபிரெக்கில்ஸ் உருவாகிறது.  ht

பெருநகர வெப்பநிலையை கார்களில் சென்சார் வைத்து கணிக்கலாம்!

படம்
  வெப்ப அலையை கார்களில் பயணம் செய்து கணித்தவர்!  நாட்டின் பெருநகரங்களில் ஏற்படும் பல்வேறு அளவுகளிலான வெப்ப அலை வேறுபாட்டை கணக்கிட சூழல் ஆராய்ச்சியாளர்கள் முயன்றுவருகின்றனர். 1927ஆம் ஆண்டு, ஆராய்ச்சியாளர் வில்ஹெம் ஸ்மித் (Wilhelm schmidt), வெப்பம் பற்றிய சோதனையொன்றை செய்தார். இதன்படி தன் காரில் பாதர தெர்மாமீட்டரைப் பொறுத்திக்கொண்டு வியன்னா நாட்டிற்குள் மூன்று மணி நேரம் சுற்றினார். இதில், அவர் நகரங்களின் வெப்பநிலை பற்றிய தகவல்களைப் பெற்றார். இதன்மூலம், அதிக வெப்பம் கொண்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டன.  பல்லாண்டுகளாக சூழல் ஆராய்ச்சியாளர்கள் வெப்ப அலை பற்றி செய்த ஆய்வு, புல்லட்டின் அமெரிக்கன் மெட்டரோலாஜிகல் சொசைட்டி இதழில் வெளியாகியுள்ளது. வில்ஹெமின் ஆய்வுமுறையை மேம்படுத்தி கார்களில் சென்சார் பொறுத்தி இணையத்தில் இணைத்தனர். இதன்மூலம், வெப்பம் பற்றிய தகவல்களை உடனுக்குடன் பதிவு செய்தனர்.  நகர மக்களே , இந்த ஆய்வில் பங்கேற்று தகவல்களை தரமுடியும் என்பது இதன் சிறப்பம்சம். நகரங்களில்  குறிப்பிட்ட இடங்கள் மட்டும் வெப்பத்தீவு போல காணப்படுவதை ஆராய்ந்தாலே, மக்களின் வாழ்வை அதற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.  ப

அறையில் கூடும் வெப்பமும், வடகிழக்கில் அதிகரிக்கும் அரச பயங்கரவாதமும்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  6 3.10.2021 அன்புள்ள நண்பர் கதிரவன் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இந்த வாரம்தான் சற்று நிதானமாக இருக்க நேரம் கிடைத்தது. எல்லாமே காந்தியின் அருள்தான். வேலைகள் எப்போதும் போல தொடர்ந்து கொண்டிருக்கிறது. பதிப்பக வேலைகள் இந்தளவு சலிப்பாக நகரும் என நினைக்கவில்லை. நான் வேலைசெய்யும் நாளிதழ் நிறுவன ஆட்களால் தான் வேலை மோசமாக மாறியுள்ளது. சிற்பி கற்களை உளி கொண்டு செதுக்குவது போல செதுக்கி வருகிறார்கள். இப்படி நகாசு பார்த்தால் எப்போது நூலை அச்சுக்கு அனுப்பி வேலையை முடிப்பது? நூல்களுக்கான சந்தை என்பதே இனி டல்லாகத்தான் இருக்கும். வேலை இழப்பு, பொருளாதாரம் என நிறைய சிக்கல்கள் நமக்கு முன்னே உள்ளன.  அறையில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மழைக்காலமாக இருந்தாலும் மாறி வரும் காலநிலை மாற்றத்தை உடலால் தாங்குவது கடினமாக உள்ளது. ஒவ்வாமை பற்றிய நூலை எழுதி தொகுத்து வருகிறேன். சொந்த உடல்நலம் சார்ந்த சுயநலம் காரணமாகவே நூலை எழுதுகிறேன். உலகம் முழுவதும் அலர்ஜி பிற நோய்களை விட அதிகரித்து வருகிறது.  ஃபிரன்ட்லைன் மாத இதழின் கட்டுரைகளை படித்து வருகிறேன். ஓடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலத்தில் செ

பூமியின் அடித்தட்டு மர்மம்! - பூமியின் அடித்தட்டில் இருப்பது உலோகமா, வேறு பொருட்களா?

படம்
  பூமியின் அடித்தட்டு மர்மம்! பூமியின் கீழ்ப்புறபகுதியில் நிறைய மர்மங்கள் உள்ளன. இதுபற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும் நாம் அறிந்தது, குறைவான தகவல்களைத்தான். புவியோடு பகுதி, மூடகப் பகுதியைக் (Mantle) கடந்து கண்டத்தட்டுகள், வெளிப்புற, உட்புற கருவப் பகுதிகளில் (Outer, inner core ) அழுத்தமும் வெப்பமும் அதிகம். பூமியின் கீழே 5 ஆயிரம் கி.மீ. ஆழத்திற்கு செல்லும்போது, அங்குள்ள உட்கருவத்தில்  இரும்பு, நிக்கல் உருண்டையான வடிவத்தில் உள்ளது என்பதே ஆய்வாளர்களின் எண்ணமாக இருந்தது.  நேச்சர் இதழில் வெளியாகியுள்ள அறிவியல் அறிக்கையில், உட்கருவத்தில் திட, திரவம் என இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையில் (Super ionic state) பொருட்கள் உள்ளன என்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆய்வுக்காக, நிலநடுக்க அலைகளைப் (Seismic waves) பயன்படுத்தியுள்ளனர்.  புவி அடுக்குகளுக்கு இடையில் நிலநடுக்க அலைகள் வெவ்வேறு அலைநீளத்தில் செலுத்தப்பட்டு, அதில் உள்ள வேதியியல் பொருட்களை அறிய முயன்றனர். இதற்கு முன்னர் செய்த ஆய்வில், ஷியர் அலைகளை (Shear waves)  பயன்படுத்தினர். இதில் கிடைத்த  தகவல்களை வைத்து, புவியின் உள் கருவத்த

பூமிக்கு கார்பன் டை ஆக்சைடு முக்கியமா? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  கேள்வியும் பதிலும்! சூழலில் கார்பன் முக்கியமா? கார்பன் டையாக்சைடு பசுமை இல்ல வாயுக்களில் ஒன்று. இதில், கார்பன் முக்கிய பகுதிப்பொருள். பூமியின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டையாக்சைட் வாயு, சூரிய வெப்பத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. பூமியிலிருந்து, சூரிய வெப்பம்  முழுவதும் வெளியேறிவிடாமல் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.  வளிமண்டலத்தில்  கார்பன் டையாக்சைட் வாயு இல்லையெனில், பூமியில் உள்ள கடல் விரைவில் உறைந்துபோய்விடும். அதேசமயம், மனிதர்களின் செயல்பாட்டால் காற்றில் கார்பன்டையாக்சைட் வாயு அதிகரிக்கும்போது, வெப்பமயமாதல் பாதிப்பு அதிகரிக்கும். உலகில் வாழும் அனைத்து பொருட்களிலும் கார்பன் உண்டு. மனிதர்களின் உடலிலும் கூட உண்டு. ஒருவர் தோராயமாக 45 கிலோ என கணக்கிட்டால் அவரது உடலில் 8 கிலோ கார்பன் இருக்கும். தாவரங்களிலும் பகுதியளவு கார்பன் உண்டு.  படிம எரிபொருட்கள் எவை? பூமியில் மட்கிப்போன தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றுக்கு,  படிம எரிபொருட்கள்  என்று பெயர்.  https://climatekids.nasa.gov/carbon/

பூமியின் அடித்தட்டு மர்மம்!

படம்
  பூமியின் அடித்தட்டு மர்மம்! பூமியின் கீழ்ப்புறபகுதியில் நிறைய மர்மங்கள் உள்ளன. இதுபற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும் நாம் அறிந்தது, குறைவான தகவல்களைத்தான். புவியோடு பகுதி, மூடகப் பகுதியைக் (Mantle) கடந்து கண்டத்தட்டுகள், வெளிப்புற, உட்புற கருவப் பகுதிகளில் (Outer, inner core ) அழுத்தமும் வெப்பமும் அதிகம். பூமியின் கீழே 5 ஆயிரம் கி.மீ. ஆழத்திற்கு செல்லும்போது, அங்குள்ள உட்கருவத்தில்  இரும்பு, நிக்கல் உருண்டையான வடிவத்தில் உள்ளது என்பதே ஆய்வாளர்களின் எண்ணமாக இருந்தது.  நேச்சர் இதழில் வெளியாகியுள்ள அறிவியல் அறிக்கையில், உட்கருவத்தில் திட, திரவம் என இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையில் (Super ionic state) பொருட்கள் உள்ளன என்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆய்வுக்காக, நிலநடுக்க அலைகளைப் (Seismic waves) பயன்படுத்தியுள்ளனர்.  புவி அடுக்குகளுக்கு இடையில் நிலநடுக்க அலைகள் வெவ்வேறு அலைநீளத்தில் செலுத்தப்பட்டு, அதில் உள்ள வேதியியல் பொருட்களை அறிய முயன்றனர். இதற்கு முன்னர் செய்த ஆய்வில், ஷியர் அலைகளை (Shear waves)  பயன்படுத்தினர். இதில் கிடைத்த  தகவல்களை வைத்து, புவியின் உள் கருவத்த

வெப்பம் குறைந்து வரும் எரிமலைப் பகுதிகள்!

படம்
  வெப்பம் குறைந்துள்ள எரிமலைப்பகுதிகள்! பூமியில் அடியில் உள்ள வெப்பம் காரணமாக, பாறைகளை எரித்தபடி எரிமலைக்குழம்பு வெளியே வருகிறது. இப்படி எரிமலைக்குழம்பு வெளியேறும் இடங்களை எரிமலை என்கிறோம். எரிமலைக் குழம்பு வெளியேறும் நிலப்பரப்பிற்கு ஹாட்ஸ்பாட்(hot spot) என்று பெயர். பொதுவாக இப்படி எரிமலைகள் உருவாகின்றன என்றால் அந்த இடம், பூமியின் அடிப்பரப்பிற்கு நெருக்கமாக உள்ளது என்று பொருள்.  சில எரிமலைப்பகுதிகளில் வெளியேறும் எரிமலைக்குழம்பில் பல்வேறு வேதிப்பொருட்கள் உண்டு. குளிர்ந்த எரிமலையில் சிலசமயங்களில் எரிமலைக்குழம்பு வெளிவந்தாலும் அவை ஒப்பீட்டளவில் வெப்பநிலை குறைந்தவை என ஆய்வுகள் கூறுகின்றன.  நிலத்திட்டு, கடல்நீர்த்தட்டு ஆகியவை ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்போது மலைகள், எரிமலைகள் தோன்றுகின்றன. நிலத்திட்டின் நடுப்பகுதியில் எரிமலை இயக்கங்கள் ஏற்படுவதாக புவியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  ஹவாய் தீவுகள், தெற்கு அட்லாண்டிக் அஸ்சென்சன் தீவு, தெற்கு பசிபிக் பிட்கெய்ர்ன் தீவுகள் ஆகியவற்றை உதாரணமாக கூறலாம்.  பல்வேறு தனிப்பட்ட பகுதிகளில் எரிமலை வெடிப்பு இருப்பதை ஆய்வாளர் ஸியுவான் பாவோ என்று ஆய்வா

வெப்ப வாயு பலூன்களில் பயணம்!

படம்
  வெப்ப வாயு பலூன்கள்! இந்த பலூன்கள் ஆகாய விமானங்கள் போன்றவை அல்ல. வானத்தில் மெல்ல காற்றில் அசைந்தாடித்தான் பயணிக்கும். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜோசப் மிச்செல் ஜாக்குயிஸ் மான்ட்கோல்ஃப்பையர் என்ற இரு சகோதரர்கள் வெப்ப வாயு பலூனை உருவாக்கினர். 1793ஆம்ஆண்டு இதனை உருவாக்கி பறக்க வைத்தனர்.  பட்டு மற்றும் காகிதத்தைப் பயன்படுத்தி பலூனை உருவாக்கினர். இன்று உருவாக்கப்படும் பலூன்களுக்கு நைலான், பாலியஸ்டர் இழைகள் அடிப்படையானவை. இதில் நெருப்பு பிடிக்காமலிருக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வெப்பவாயு விடுவிக்கப்பட, அந்த இடத்திலுள்ள காற்றின் அடர்த்தி குறைகிறது.  இதனால், வெளியிலுள்ள குளிர்ந்த காற்று தரும் அழுத்தத்தில் பலூன் நகர்கிறது. இதனால் பலூன் மேல்நோக்கி (upthrust) உந்தப்படுகிறது.  ஜெர்மனியில் பறக்கும் கப்பல் (Air ship) உருவாக்கப்பட்டுள்ளது. இது, ஹீலியம் வாயுவால் இயக்கப்படுகிறது. வெப்பமான காற்றைப் போல, ஹீலியம் வாயுவும் அடர்த்தி குறைவானது. இதன் காரணமாகவே பறக்கும் கப்பலும் வானில் பயணிக்கிறது. இதில் திசையைத் தீர்மானிக்க புரப்பல்லர் இயந்திரங்கள் உள்ளன. காற்று வேகமாக அடிக்கும் சூழலில் இந்த இயந்திரங்க

வெப்பத்தைக் கட்டுப்படுத்த தனி அதிகாரிகளை நியமிக்கும் நாடுகள்!

படம்
  வெப்ப கட்டுப்பாட்டு அதிகாரிகள்! அமெரிக்காவின் ஃப்ளோரிடாவின் மியாமி டேட் கவுன்டியில் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய பணியை மக்களுக்கு கஷ்டம் தராமல் வெப்பத்தை குறைக்கும் திட்டங்களை தீட்டுவதுதான். உலகின் முதல் வெப்பக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பதவியேற்றிருக்கிறார் ஜேன் கில்பெர்ட். ” அனைத்து நகரங்களிலும் அதிகரித்து வரும் கடுமையான வெப்பம்தான் சூழல் தொடர்பான மரணங்களுக்கு காரணமாக உள்ளன. இதை யாருமே முதலில் கண்டுகொள்ளவில்லை. இப்போதுதான் நகரங்கள் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்” என்றார் ஜேன் கில்பர்ட். 2021ஆம் ஆண்டு ஜேனுக்குப் பிறகு நான்கு நகரங்களில் (ஏதேன்ஸ் (கிரீஸ்), பீனிக்ஸ் சிட்டி (அரிசோனா), சியராலியோன் (ஆப்பிரிக்கா ) )இதேபோல வெப்பக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  1998 - 2017 காலகட்டத்தில் வெப்பஅலைகளின் பாதிப்பால் 1,66,000 மக்கள் பலியாகியுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஐ.நா. வின் காலநிலை மாற்ற நிறுவனம், உலக மக்கள்தொகையில் 33 சதவீதம் பேர் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தனது அறிக்கையில் கூறியுள்ளது.  தகவல்

கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் பனிக்காடு

படம்
  பனிக்காடு! உலகில் பனி கொட்டும் சூழலைக் கொண்ட காடுகள் (Snow forest), பூமியின் நிலப்பரப்பில் 17 சதவீதம் உள்ளன. பனிக்காடுகள் சூழுலுக்கு முக்கியமானவை. இங்கு, ஆண்டில் பாதி நாட்களின் வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியஸ்தான்.  பூமியின் வடக்குப்பகுதியில் பனிக்காடுகளைப் பார்க்கலாம். இங்கு, பனிப்பொழிவு இருப்பதால், குளிரும் அதிகமாக இருக்கும். அமெரிக்கா, ஸ்வீடன், ரஷ்யா, நார்வே, ஜப்பான், ஃபின்லாந்து, சீனா ஆகிய நாடுகளில் பனிக்காடுகள் உள்ளன. நரி, எலி, ஓநாய், கலைமான் ஆகிய விலங்கினங்கள் இங்கு வாழ்கின்றன. இனப்பெருக்க காலத்தில் 300க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் வந்து செல்கின்றன.  கார்பனை உறிஞ்சி வெப்பமயமாதலைக் குறைப்பதில் பனிக்காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இக்காடுகளிலுள்ள மரங்களை கட்டடம் கட்ட பயன்படுத்துகின்றனர். சாலை மற்றும் சுரங்கங்கள் அமைக்கவும்  தேவையான இடத்திற்காக காடுகளை அழிக்கின்றனர். பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக மரங்களை வெட்டினால், வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மரக்கன்றுகளை நடுவது அவசியம். இதன்மூலம் பனிக்காடுகள் முற்றாக அழிவதைக் கட்டுப்படுத்த முடியும். ஃபின்லாந்தின் வடக்குப்

மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை சிறியது! - ராபர்டோ கோல்டர், பேராசிரியர்

படம்
  ராபர்ட்டோ கோல்ட்டர் நுண்ணுயிரியல் துறை, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உங்களது ஆராய்ச்சியின் அடிப்படை எது? நான் பாக்டீரியா பற்றி 35 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதாவது நான் ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை. மூலக்கூறுகளை ஆராய்ந்து எப்படி பல்வேறு அழுத்தங்களுக்கு எதிர்வினைகளை அளிக்கிறது என ஆய்வு செய்தோம். பாக்டீரியா பாசிகளோடு புரியும் வினைகள் பற்றிய எனது ஆர்வம் அதிகரித்து வந்தது. பூமியின் சல்பர் சுழற்சி மற்றும் காலநிலை மாற்றம், மேகம் உருவாகும் விதம் ஆகியவற்றில் பாக்டீரியாவின் பங்களிப்பு அதிகம்.  பூமியின் செயல்பாட்டிற்கு நுண்ணுயிரிகள் முக்கியமெனில் அதனை எப்படி காப்பாற்றுவது? நுண்ணுயிரிகளை தனியாக காப்பாற்றுவது என்பது எளிதல்ல. அதனை தனியாக சூழலில் விட்டாலே போதும். அதுவே சுயமாக வளர்ந்துகொள்ளும். நுண்ணுயிரிகளின் மீதான மனிதர்களின் செயல்பாடு, தாக்கம் குறைந்தாலே அவை பூமியில் சிறப்பாக இயங்கும்.  காலநிலை மாற்றம் நுண்ணுயிரிகளை பாதிக்கிறதா? ஆமாம். காலநிலை மாற்றத்தால் நுண்ணுயிரிகள் பாதிக்கப்படுவதை அறிவியல் ஆய்வுகள் ஆதாரத்தோடு விளக்கியுள்ளன. கடல் மற்றும் நிலப்பரப்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாம

வெப்ப அலைகளைக் கட்டுப்படுத்த பசுமை தொழில்நுட்பங்கள் தேவை!

படம்
  பெஞ்சமின் ஜெய்ட்சிக் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்.  அதிகரித்து வரும் வெப்பம் மனிதர்களின் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது? 2015ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட வெப்ப அலை பாதிப்பு நிறைய மரணங்களை ஏற்படுத்தியது. மக்களின் மரணம் உண்மையில் வேதனையானது. ஆனால் வெப்ப அலை பற்றி குறைத்து மதிப்பிட்டதுதான் இப்பட்டிப்பட்ட சிக்கலுக்கு காரணம். இதயம் தொடர்பான பாதிப்பு கொண்டவர்கள், ஆஸ்துமா, நுரையீல் சார்ந்த நோய்கள், குறைபாடு கொண்டவர்களுக்கு வெப்ப அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதுபற்றி பாதிப்பை நாம் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. அப்படி செய்யும்போதுதான் பாதிப்புகளை எளிதாக அடையாளம் காண முடியும்.  வெப்ப அலைகளால் ஏதும் பின்விளைவுகள் ஏற்படுகிறதா? கண்டிப்பாக. வெப்பநிலை அதிகரிக்கும்போது, ஆவியாதலின் அளவும் கூடும். இதனால் நகரங்களில் வாழும் மக்கள் புழுக்கத்தால் தவிப்பார்கள். வெப்ப அலையால் வியர்வை பெருகும். தாவரங்கள், மண் ஆகியவையும் ஈரப்பதத்தை இழக்கும். வறண்ட நிலப்பரப்பு அதிக வெப்பத்தை வெளியேற்றும். வெப்ப பாதிப்பை வெப்ப அலை மேலும் அதிகரிக்கும்.  இப்போதுள்ள வெப்ப அலைக பாதிப்பை உலகளவில் எப்படி வ

பனி உருகும் சத்தம்!

படம்
  pixabay பனி உருகும் சத்தம்!  2017ஆம் ஆண்டு ஸ்விஸ் ஆல்ப்ஸில் எய்கர் மலைச்சிகரத்தில் பனிக்கட்டி உருகி நீராக மாறியது. இப்படி பனிக்கடி உடைந்து நொறுங்கி நீராவது யாரும் பார்க்காமல் நடைபெற்றது. பனிக்கட்டி உடையும் ஒலி என்பது மனிதர்களால் காதில் கேட்க முடியாத குறைந்த ஒலி அளவைக் கொண்டது. இதனால் என்ன நடந்தது என்பதை மக்கள் பின்னர்தான் அறிந்தனர். பனி உடையும், வீழும் அதிர்வு, ஒலி ஆகியவற்றை வைத்து உருகிய பனியை எளிதாக கணக்கிட முடியும்.  குறைந்த அலைநீளம் கொண்ட ஒலிகளை இன்ஃப்ரா சவுண்ட் (கேளா ஒலி அலை)என்று அழைக்கின்றனர். அதிக தொலைவிலிருந்து பயணப்படும் ஒலி அலைகள் இவை. செயல்பாட்டிலுள்ள எரிமலைகளை  கண்காணிக்க கேளா ஒலி அலைகளைஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த அலைகளைப் பனிச்சரிவை அளவிட பயன்படுத்தினாலும் ஐஸ்கட்டிகளின் உருகுதல், உடைந்து நொறுங்குவதை அளவிட முதன்முறையாக பயன்படுத்தி வருகிறார்கள்.  காற்று அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல்களை வைத்து கேளா ஒலியை இயக்கி பதிவு செய்தால் மட்டுமே பனிப்பாறை மெதுவாக உடைந்து வீழ்வதை பதிவு செய்ய முடியும். மிக மெல்ல நடக்கும் நிகழ்ச்சி இது. இதனால் அங்கு சுற்றுப்புறங்களில் வா

புவியியல் தகவல்கள்!

படம்
  தெரியுமா? ”பூமியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையை ஒத்தது” என்றார்  புவி வேதியியலாளரான பால் அசிமோவ். இதன் தோராய வெப்பநிலை 5,537 டிகிரி செல்சியஸ் என மதிப்பிடப்பட்டுள்ளது.  பூமியில் மொத்தமாக 40 டெராவாட்ஸ் (terrawatts) வெப்பம் உருவாகிறது. இதன் மையப்பகுதியில் இருந்து கதிரியக்கத் தன்மை காரணமாக வெப்பம் உருவாகிறது என 2011இல் வெளியான ஆய்வு கூறுகிறது. மையப்பகுதியில் ஆன்டிநியூட்ரினோ (antineutrinos)என்ற துகள் காணப்படுகிறது. இதிலிருந்து வெளியாகும் கதிரியக்கமே வெப்பத்திற்கு காரணம் என புவியியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.  "பூமியின் உட்புறத்திலிருந்து வரும் வெப்ப ஆற்றலே அதனை உயிரோட்டமாக வைத்துள்ளது என்றார் அமெரிக்க புவியியல் ஆய்வு ஒருங்கிணைப்பாளர் டாம் கிராஃபோர்டு.  தோரியம், யுரேனியம், பொட்டாசியம் " ஆகிய தனிமங்களின் கதிரியக்க தன்மையால் பூமியில் வெப்பம் உருவாகிறது.  உலகமெங்கும் உள்ள பாலைவன தரைகளில் பாசிகள் (mosses) வாழ்கின்றன. இவை தன்னுடைய தனித்துவமாக மூலக்கூறு அமைப்பு காரணமாக காற்றிலிருந்து நீரைப் பெற்று உயிர்வாழ்கின்றன. தனித்துவமான இலைகள் போன்ற அமைப்புக்க

துருவப்பகுதியை உருக்கும் காட்டுத்தீ

படம்
  அலாஸ்காவின் காட்டுத்தீயால் ஆர்க்டிக்கில் உருகும் பனி! உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. இதன் மற்றொரு விளைவாக,  ஆர்க்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அதிக வெப்பநிலை, ஈரப்பதம் குறைந்த உலர்ந்த மண், அதிக மின்னல், இடி ஆகியவை ஏற்படுவது பெருமளவு காட்டுத்தீயை ஊக்குவிக்கின்றன. உலகின் ஒருபுறம் நடைபெறும் காட்டுத்தீ, துருவப் பகுதியில் பனிப்பாறைகளை உருக வைத்துக்கொண்டிருக்கிறது.   இதுபற்றிய சூழல் ஆய்வு ஒன்று ஒன் எர்த் (One earth) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கொலம்பியா பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோய்சின் காமன், "எதிர்காலத்தில் நாடுகளின் வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் பாதிப்புகள் உள்ளேயும் எதிரொலிக்கும்" என்றார்.  ஆய்விதழ் கட்டுரையில், அலாஸ்கா பகுதியில், வெப்பமயமாதலின் பாதிப்பால் மீத்தேன், கார்பன் அளவு சற்றே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது ஆண்டு வானிலை ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் ஆகும். அதிகளவு பசுமை இல்ல வாயுக்கள் உயராத காரணத்தால் சூழலியலாளர்கள் நிம்மதி பெரு

உருகும் பனி அதிகரிக்கும் வெப்பம்!

படம்
  ஆண்டிஸ் மலைத்தொடரில் உருகும் பனி! தென் அமெரிக்காவிலுள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் நீர்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.  மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகள் 27 சதவீதம் உருகியுள்ளது. இதனால், மக்கள் நீருக்கு தவிக்கும் நிலை ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அன்டார்டிகா, க்ரீன்லாந்து, இமாலயம் ஆகிய பகுதிகளிலும் செய்த ஆய்வில் பனிப்பாறைகள் 37 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.  மேற்சொன்ன இடங்களில் பனிப்பாறைகள் அடர்த்தியாக இருந்தால், அது நீர்ப்பற்றாக்குறைக்கு தீர்வாக அமையும். ஆனால் அவை மெலிந்தால், குடிநீருக்கு மக்கள் அல்லாடும் நிலை உருவாகும். “ இப்போது பனிப்பாறைகள் பற்றி வெளியாகியுள்ள தகவல்தொகுப்பு, நீராதாரங்கள் விவகாரத்தில் தாக்கம் ஏற்படுத்தும்” என்றார் பிரான்சிலுள்ள கிர்னோபில் ஆல்ப்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரோமைன் மில்லான். இமாலயப் பகுதியில் பனிப்பாறைகள் உருகுவது குறைந்தது, அங்கு வாழும் மக்களுக்கு சாதகமான செய்தி. மற்றொருபுறம், ஆண்டிஸ் மலைத்தொடரில் பனிப்பாறைகள் உருகத் தொடங்குவது ஆபத்தான விஷயமாக உள்ளது.   எட்டு லட்சத்து 10 ஆயிரம் செயற்கைக்கோள் புகை

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பசுமைத் திட்டங்கள்!

படம்
  பசுமை கொஞ்சும்  தமிழ்நாடு ! தமிழ்நாடு அரசு, அடுத்த பத்து ஆண்டுகளில்  265 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது. இதற்கு, பசுமை தமிழ்நாடு திட்டம் என பெயரிட்டுள்ளனர். இந்த வகையில் காடுகளின் பரப்பை  23 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரிக்கவுள்ளனர். கடந்த ஆண்டு 47 லட்சம் மரக்கன்றுகளை மாநிலமெங்கும் நட ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகளைத் தொடங்கினர்.  மண்ணுக்கான மரங்களை அறிந்து, அதன் மரக்கன்றுகளை நடுவதுதான் இதன் சிறப்பம்சம். இதற்கு முந்தைய காலங்களில் வேகமாக வளரும் மரங்களை அரசு தேர்ந்தெடுத்து வந்தது.  அரசு திட்டங்களை வேகமாக அறிவித்தாலும் இதனை செயல்படுத்துவதில் ஏராளமான சவால்கள் உள்ளன. 13,500 ச.கி.மீ. அளவில் 265 கோடி மரக்கன்றுகளை நட்டு அதனை மரங்களாக்க முடியும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதில், 4,500 ச.கி.மீ. பரப்பில் அரசு மரக்கன்றுகளை எளிதாக நடமுடியும். மீதியுள்ள பகுதிகள் தனியாருக்கு சொந்தம் என்பதால் திட்டத்தை நிறைவேற்ற அவர்களின் ஒப்புதலும் பங்கேற்பும் தேவை. கூடவே அரசின் பல்வேறு அமைச்சகங்களின் ஆதரவும் தேவைப்படும்.  “மரக்கன்றுகளை நடுவதும், அதனை பராமரித்து வளர்ப்பதும் வேறு வேறான பணிகள். அரசு