இடுகைகள்

தகவல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மறைந்துள்ள பாலைவன நகரின் பொக்கிஷத்தை எடுக்க நடக்கும் போராட்டம்! - சாண்ட் சீ - சீன தொடர்

படம்
  சாண்ட் சீ - பிரதர் ஹாவோ   சாண்ட் சீ (2018) சீன டிவி தொடர் 53 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் இயக்குநர்கள் – லீ ஸே லூ, மாவோ குன் யூ, சூ ஷி திரைக்கதை எழுத்தாளர்கள் – ஸாங் யுவான் ஆங்க், டாங்க் ஷி சென் அம்மா இல்லாமல் அப்பாவின் அடி, உதைகளை வாங்கி வளர்கிறான் லீ சூ, பல்கலைக்கழக தேர்வை எழுதவெல்லாம் விருப்பமில்லாத மனநிலை. இவனுக்கு இருக்கும் ஒரே தோழன், சூ வான். பணக்காரன். இவன் நன்றாக படிப்பவன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் தனது பள்ளியில் மாணவிகளை படமெடுத்து வைத்து, யாரோடு டேட்டிங் போகலாம் என யோசிப்பவன்.   அடுத்து, ஹாவோ. இவன் பள்ளியில் படிப்பவனல்ல. இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும் நிறுவனத்தை ஹாவோவின் பாட்டி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஹாவோ ஆதரவாக இருக்கிறான். இவனது வேலை சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பது.   பிறகு பணக்காரன் பள்ளி மாணவனான சூ வானை ஏதோ ஒருவகையில் மிரட்டி காசைப் பிடுங்குவது… இந்த மூன்றுபேர்களின் நட்புதான் தொடரின் முக்கியமான அம்சம். இது கடந்த காலத்தில் நட்பாக இருந்த அயர்ன் ட்ரையாங்கில் என்ற மூவரை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது.   பள்ளி மாணவன் லீ சூ, ஒர

செய்தியில் தகவல்களை சரிபார்ப்பது முக்கியம்

படம்
  பொதுவாக   நிறைய பிரபலங்கள் / அரசியல்வாதிகள் பேட்டி எடுக்கும் வரை அமைதியாக இருப்பார்கள்.   பிறகு, பத்திரிகையாளரை அழைத்து செய்தியை எழுதிய உடனே அல்லது அதை வெளியிடும் முன்னர் இறுதி வடிவத்தை ஒருமுறை அவர்களுக்கு அனுப்பித் தரும்படி கேட்பார்கள். பேசிய வார்த்தை, அர்த்தம் மாறியிருக்கிறதா என்று சரி பார்க்கத்தான் இந்த சோதனை. இந்த முறை இப்போது ஊடகங்களில் பழக்கமாகிவிட்டது. பத்திரிக்கைகள் செய்தி ஆதார மனிதர்களிடம் அச்சேறாத செய்தியை அனுப்பி, அவர்களின் திருத்தங்களைக் கேட்டு பிறகு அதைச் செய்து அச்சுக்கு அனுப்புகிறார்கள். அனைத்து கட்டுரைகளுக்கும், இதுபோல திருத்தங்கள் செய்து கட்டுரைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவது சரியானதல்ல. முடிந்தவரை பத்திரிகையாளர்கள் இம்முறையைத் தவிர்க்கவேண்டும். தவறுகள் ஏற்படாமல் இருக்க, பேசும்போது முறையாக அதை ரெக்கார்டரில் பதிவு செய்துகொண்டு அதை ஒருமுறைக்கு இருமுறை கேட்டுவிட்டு கட்டுரையை எழுதலாம்.இப்படி எழுதப் பழகினால் கட்டுரைகளில் திருத்தங்கள் குறையும். நாளடைவில்   தகவல் பிழைகள் இருக்காது.   செய்திகளை, பேட்டி எடுப்பவர்களிடம் காட்டிவிட்டு பிரசுரிப்பது என்றால் அதை செம்மை

செய்தி ஆதாரங்களை பாதுகாப்பது முக்கியம்

படம்
  பத்திரிகையாளர்களுக்கு செய்திகளைக் கொடுக்கும் ஆதார ஆட்கள் பல்வேறு துறைகளிலும் இருப்பார்கள். இவர்கள், பத்திரிகையாளர்கள் எழுதிக் கொடுக்கும் செய்தியில் ஆதிக்கம் செலுத்துவார்கள். செய்தி ஆதார மனிதர்கள் இல்லையென்றால் துறைசார்ந்த பல்வேறு முக்கிய தகவல்களை நாளிதழ்களில் எழுதுவது சாத்தியப்படாது. செய்திகளைத் தரும் ஆதாரங்களிடம் தொழில்முறையாக நேர்மையாக, மரியாதையாக நடந்துகொண்டு வருவது முக்கியம். செய்தி ஆதாரங்களிடம் மிகவும் நெருங்கிப் பழகுவது, செய்தியைப் பார்க்கும் கோணத்தை மாற்றிவிடும். எனவே, சற்று தள்ளி இருந்து செய்திகளைப் பெறுவது நல்லது. இந்த முறையில் செய்திகளை பல்வேறு கோணத்தில் பார்வையில் பார்த்து எழுத முடியும். பத்திரிகையாளர், ஆதார மனிதர்கள் என இருதரப்பிலும் நம்பிக்கை உருவாவது முக்கியம். அப்போதுதான் செய்திகளை எளிதாக பெறமுடியும். செய்தி ஆதார மனிதர்களின் பெயர்களை, பத்திரிகையாளர் எந்த சூழ்நிலையிலும் வெளியிடக்கூடாது. வெளியிடும் செய்தி காரணமாக பத்திரிகையாளர் அரசு அதிகாரத்தால் மிரட்டப்படும்போது கூட செய்தி ஆதார மனிதர்களை பாதுகாக்க வேண்டும். செய்தி ஆதார மனிதர்கள் கொடுத்த ஆதாரங்கள், ஆவணங்கள் தவறானவை எ

அறிவியல் தகவல்களை வெளிப்படுத்தும் வழிகள் - பை சார்ட், அட்டவணை, டயகிராம்

படம்
  தகவல்களை எப்படி வெளியே கூறி விளக்குவது? அறிவியல் சம்பந்தமான தகவல்களை எழுத்துக்களாக பத்தி பத்தியாக எழுதி ரிசர்ச்கேட் வலைத்தள கட்டுரை போல விளக்கினால் படிக்கும்போதே பலருக்கும் தூக்கம் வந்துவிடும். இதை தடுக்கவே பல்வேறு படங்கள், அட்டவணைகள் உதவுகின்றன. பொதுவாக அறிவியல் சோதனைகளில் சேகரிக்கப்படும் தகவல்கள், அளவுகள் ஆகியவற்றை டேட்டா என்கிறார்கள். தமிழில் தகவல்.  பொதுவாக பங்குச்சந்தை, பணவீக்கம் ஆகியவற்றின்  ஏற்ற இறக்கங்களை கிராப் வடிவில் சொல்லுவார்கள். இந்த வடிவில் ஏற்ற இறக்கங்களை எளிதாக புரிந்துகொள்ள முடியும். அனைத்து தகவல்களையும் இதே வடிவில் சொல்ல முடியாது.  பை சார்ட் நிதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது ஒரு ரூபாயில் வரவு செலவுகளை இந்த வகையில் சொல்லுவார்கள். இதனை பார்த்தாலே எளிதாக ஆண்டின் நிதி அறிக்கை எந்த லட்சணத்தில் இருக்கிறது என அடையாளம் கண்டுகொள்ளலாம். பொதுவாக எந்த அளவு, சந்தையில் உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு, வருமான அளவு ஆகியவற்றை பை சார்ட் மூலம் புரிந்துகொள்ளலாம். நோய்த்தாக்குதல் அளவு, வறுமையில் உள்ள மக்களின் அளவு ஆகியவற்றை சதவீத அடிப்படையில் எளிதாக புரிந்துகொள்ளலாம்.  நூறுகிராம்

இயற்கை வேளாண்மை பற்றிய தகவல்கள்!- அங்கீகாரம் பெற்ற மாநிலங்கள்

படம்
  இயற்கை வேளாண்மை 2021-2022 காலகட்டத்தில் இயற்கை வேளாண்மைக்கான அங்கீகாரம் பெற்ற நிலப்பரப்பு 59 லட்சம் ஹெக்டேர்களாகும்.  இந்திய மாநிலங்களில் இயற்கை வேளாண்மையில் முன்னிலை வகிக்கும் மாநிலம், மத்தியப் பிரதேசமாகும். இதற்கடுத்து மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஒடிஷா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன.  2016ஆம் ஆண்டு சிக்கிம் மாநிலம் தனது வேளாண் நிலப்பரப்பு முழுவதும் இயற்கை வேளாண்மைக்கென அங்கீகாரம் பெற்றுள்ளது.  இந்தியாவில் இயற்கை வேளாண்மை மூலம் உற்பத்தியான பொருட்களின் அளவு 3 கோடியே 50 லட்சம் மெட்ரிக் டன்களாக உள்ளது. இதைப்பற்றிய தகவலை வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேலாண்மை ஆணையம் (Apeda) தெரிவித்துள்ளது.  மழைப்பொழிவு கொண்ட நாடுகள், இயற்கை வேளாண்மையை செய்யும்போது அவர்களுக்கு விளைச்சல் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் தொழில்மயமான நாடுகளில் உரப் பயன்பாடு அதிகம். எனவே, அந்நாடுகள் இயற்கை வேளாண்மைக்கு மாறும்போது பயிர் உற்பத்தி குறையும் என ஐ.நாவின்  உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (UN Food and Agriculture Organization) தகவல் தெரிவித்துள்ளது.  TOI image - wallpape

சரக்குளை சென்சார் வைத்து கண்காணிக்க முடியும்! - ஒளி மூலம் மின்சாரம் சேமிக்கும் சென்சார்கள்

படம்
  ஒளியைப் பயன்படுத்தும் சென்சார்கள்! அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர், மைக் ஃபிட்ஸ்ஜெரால்ட். இவரது நிறுவனத்தின் பெயர், நெட் ஃபீசா ). மைக்கிற்கு ஒரு கனவு உண்டு. கண்டெய்னர்களில் சென்சார்களைப் பொருத்தி, அதுபற்றிய தகவல்களை அனுப்புவர்களுக்கு உடனுக்குடன் அனுப்புவதை லட்சியமாக நினைக்கிறார். எதிர்காலத்தில் சென்சார்களை வைத்து இன்னும் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும் என நினைக்கிறார். சமகாலத்திலேயே நிறைய நிறுவனங்கள் அதற்காக முயன்று வருகின்றன. அவற்றில் சில நிறுவனங்களைப் பற்றி பார்ப்போம்.  அமேஸான், கூகுள் ஆகிய நிறுவனங்களின் சாதனங்கள் மூலம் வீட்டிலுள்ள அனைத்து டிஜிட்டல் கருவிகளையும் கட்டுப்படுத்த முடியும். மேலும், ஸ்மார்ட்வாட்ச் மூலம் நமது உடல்நிலை பற்றியும் கவனத்துடன் இருக்க முடிகிறது.  2035ஆம் ஆண்டுக்குள் சென்சார்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நெட் ஃபீசா தயாரிக்கும் சென்சார்கள், அசைவு, ஒளி, வெப்பம் மூலம் ஆற்றலை சேமித்து வைத்து இயங்கக் கூடியவை. இத்தொழில்நுட்பத்தை உருவாக்குவதில், கார்க்கில் உள்ள டின்டால் தேசிய கழகம் உருவாக்கியுள்ளது. தற்போது சென்சாரை சோதிக்கும் ச

கோவிட் இறப்புகள் இந்தியாவில் அதிகமா?

படம்
  இந்தியாவில் 47 லட்சம் மக்கள் கொரானாவால் பலியானார்கள் என்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறது. இது எந்த நாடுகளையும் விட அதிகம் என்பதால், பதறிப்போன இந்தியா, இதனை அப்படியெல்லாம் கிடையாது என ஒரே பேச்சாக முடிவாக மறுத்துள்ளது. உண்மை என்ன என்று டைம்ஆஃப் இந்தியா செய்தியை வெளியிட்டுள்ளது.  2020 -2021 காலகட்டத்தில் இந்தியா 47.4 லட்ச மக்களை இழந்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தனது ஆவணங்களின்படி கூறியுள்ளது. இதற்கு அடுத்த நிலையில் ரஷ்யா உள்ளது. இந்த நாடு, 10.7 லட்ச மக்களை நோய்க்கு பலி கொடுத்துள்ளது. இதற்கு அடுத்த நிலையில் இந்தோனேஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் வருகின்றன.  லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா குறிப்பாக உக்ரைன், போலந்து, ரோமானியா ஆகிய நாடுகளில் மக்களி இறப்பு சதவீதம் இந்தியாவை விட அதிகம். இந்தியாவின் மக்கள்தொகையோடு ஒப்பிட்டால், உலக சுகாதார நிறுவனம் கூறும் இறப்பு எண்ணிக்கை குறைவு.  இதனை எப்படி கணக்கிடுகிறார்கள்? நூறு லட்சத்திற்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்ட நாடுகளை பட்டியலிட்டுக்கொள்ளவேண்டும்.  அடுத்து அதில் லட்சத்திற்கு எத்தனை பேர் கொரானாவால் இறந்தார்கள் என்பதை கணக்கி

புவியியல் தகவல்கள்!

படம்
  தெரியுமா? ”பூமியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையை ஒத்தது” என்றார்  புவி வேதியியலாளரான பால் அசிமோவ். இதன் தோராய வெப்பநிலை 5,537 டிகிரி செல்சியஸ் என மதிப்பிடப்பட்டுள்ளது.  பூமியில் மொத்தமாக 40 டெராவாட்ஸ் (terrawatts) வெப்பம் உருவாகிறது. இதன் மையப்பகுதியில் இருந்து கதிரியக்கத் தன்மை காரணமாக வெப்பம் உருவாகிறது என 2011இல் வெளியான ஆய்வு கூறுகிறது. மையப்பகுதியில் ஆன்டிநியூட்ரினோ (antineutrinos)என்ற துகள் காணப்படுகிறது. இதிலிருந்து வெளியாகும் கதிரியக்கமே வெப்பத்திற்கு காரணம் என புவியியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.  "பூமியின் உட்புறத்திலிருந்து வரும் வெப்ப ஆற்றலே அதனை உயிரோட்டமாக வைத்துள்ளது என்றார் அமெரிக்க புவியியல் ஆய்வு ஒருங்கிணைப்பாளர் டாம் கிராஃபோர்டு.  தோரியம், யுரேனியம், பொட்டாசியம் " ஆகிய தனிமங்களின் கதிரியக்க தன்மையால் பூமியில் வெப்பம் உருவாகிறது.  உலகமெங்கும் உள்ள பாலைவன தரைகளில் பாசிகள் (mosses) வாழ்கின்றன. இவை தன்னுடைய தனித்துவமாக மூலக்கூறு அமைப்பு காரணமாக காற்றிலிருந்து நீரைப் பெற்று உயிர்வாழ்கின்றன. தனித்துவமான இலைகள் போன்ற அமைப்புக்க

கடல்பேச்சு- மீன்கள் தகவல் பரிமாறிக்கொள்ளும் ரகசியம்!

படம்
  pinterest நீருக்கடியில் மீன்களின் பேச்சு!  கடலின் நீருக்கடியில் நீந்தும்போது, ஆய்வாளர்கள் பல்வேறு வித ஒலிகளைக் கேட்டுள்ளனர். ஆனால் அவற்றை பல்வேறு உயிரினங்கள் ஏற்படுத்துகின்றன என நினைத்தனர்.  இந்த உயிரினங்களில் மீன்கள் இருப்பது பலருக்கும் ஆச்சரியம் தரலாம்.   ”பல்லாண்டுகளாக  சிலவகை மீன்கள் ஒலியை எழுப்பி வந்துள்ளன. ஆனால் இப்படி மீன்கள் ஒலியெழுப்பது அரிதான ஒன்று” என்றார்  அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஆரோன் ரைஸ். மீன்களின் தகவல் தொடர்பு எனும்போது பலரும் நினைப்பது அதன் உடல்மொழியும், தோல் நிறத்தின் வழியாக பிறருக்கு உணர்த்தும் குறிப்புகளும்தான். ஆனால் இவையல்லாமல் மீன்கள் பல்வேறு ஒலிகளை எழுப்பி தங்களுக்குள் கருத்துகளை பகிர்ந்துள்ளன.  விலங்குகளும், பறவைகளும் இந்த முறையில் தகவல் தொடர்புகொள்வது பலரும் அறிந்த செய்தி தான்.  மீன்களைப் பற்றிய ஆராய்ச்சி என்றால் திமிங்கிலமும், டால்பினும்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். உண்மையில் அதிகளவு ஆராய்ச்சி செய்யப்பட்ட உயிரினம் என்றால், அது இவை இரண்டும்தான்.  பிற மீன் இனங்களின் தகவல்தொடர்பு பற்றி பெரியளவு ஆராய்ச்சி செய்யப்படவில்லை

டெக் நிறுவனங்கள் எப்படி தனி மனிதர்களை உளவு பார்க்கின்றன தெரியுமா?

படம்
  உளவு பார்க்கும் ஆயிரம் கண்கள்! உலகம் முழுக்க செயல்படும் பன்னாட்டு டெக் நிறுவனங்கள், தகவல் சுதந்திரத்திற்கு ஆதரவாக நின்றாலும் பல்வேறு வழிகளில் அவர்களை கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.  ஆ ப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே குறிப்பிட்ட நாடுகளிலுள்ள தகவல் பாதுகாப்பு சட்டப்படி தங்களை வடிவமைத்து வருகின்றன. இதில் வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு கொஞ்சம் உத்தரவாதமான நிறுவனம் என  மக்கள் நினைப்பது ஆப்பிளைத்தான். ஆப்பிள் இயக்குநர் டிம் குக், பாட்காஸ்ட் ஒன்றில் பேசியபோது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தள மாடலில் விளம்பரங்கள் மூலமாக வருமானம் அதிகம் கிடைக்கிறது. எனவே அவர்களால் மக்களின் தகவல்களைப் பாதுகாக்க முடியாது என்று கூறினார். இப்படி நேரடியாகவே விமர்சிப்பதை ஜனநாயகம் என ஏற்கலாம். ஆனால், ஆப்பிள் தகவல் பாதுகாப்பு கொள்கைகளை உலகம் முழுக்க மாற்றியமைத்துள்ளது. மக்களை கண்காணிப்பதை ஆப்பிள் இன்னும் மறைமுகமாகவே செய்யத் தொடங்கியுள்ளது. ஆப்பிள் ஐஓஎஸ் 15இல் புகைப்படத்தில் உள்ள எழுத்துகளை நகல் எடுத்து இன்னொரு இடத்தில் பதியமுடியும். படத்திலுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ள முட

கண்ணாடி மூலமே வீடியோக்களை எடுக்க வழி செய்யும் பேஸ்புக் கண்ணாடி! - ஸ்டோரிஸ் கண்ணாடி

படம்
  கடந்த செப்டம்பர் 2021 அன்று பேஸ்புக்கும், ரேபான் நிறுவனமும் இணைந்து ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் ஒன்றை அறிவித்தனர். இந்த கண்ணாடியை அணிந்து படம் எடுக்க, பாடல்களை பதிவு செய்ய, வீடியோக்களை எடுக்க பாடல்களை கேட்க முடியும்.  ஸ்டோரிஸ் என்ற கண்ணாடி வெளியானபோது, அதன் தகவல் பாதுகாப்பு பற்றி பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார்கள். பயனர்களின் விருப்பப்படி வீடியோக்களை படங்களை எடுக்கலாமா, இதனை கட்டுப்படுத்துவது யார், இதனை பிற சமூக வலைத்தளங்களிலும் பயன்படுத்துவார்களா என நிறைய கேள்விகள் உருவாயின.  இந்த கண்ணாடியில் இரண்டு கேமராக்கள் இருக்கும். ஸ்பீக்கர்கள் இருக்கும். மூன்று மைக்குகளும் கூட. இதனை குரல் மூலம் கட்டுப்படுத்தலாம். ஹலோ பேஸ்புக் சடாரென வீடியோ எடு என்றால் கண்ணாடி இயங்கத் தொடங்கும். நன்றாக சார்ஜ் செய்த கண்ணாடி மூலம் 30 நொடி நீளமுள்ள 50 வீடியோக்களை எடுக்கலாம் என்று பேஸ்புக் கூறியுள்ளது.  இதில் எடுக்கும் படங்கள் ஸ்மார்ட்போனில் எடுக்கும் புகைப்படங்களை விட குறைந்த தரமே கொண்டவை. வீடியோக்களை எடுத்தபிறகு அதனை எடிட் செய்து பேஸ்புக்கில் போடலாம். மெட்டாவின் பிற கம்பெனி தளங்களிலும் பதிவு செய்யலாம். கண்ணாடியை ஸ்ட

கண்ட்ரோல் + டெலிட் அழித்து கடந்த காலத்தை கூகுளில் அழிக்க முடியுமா? - ஒரு அலசல்

படம்
              கூகுளில் கடந்த காலத்தை மறைப்பது எப்படி ? காவல்துறையில் ஒருவர் பிடிபட்டு குற்றம் சாட்டப்பட்டால் அது தினகரன் , தினத்தந்தி என அனைத்திலும் செய்தியாகும் . ஆனால் அவர் அக்குற்றச்சாட்டு தவறானது என்றால் அப்படி அவர் விடுவிக்கப்பட்டார் என்று எந்த செய்தியும் பிரசுரமாகாது . இன்று டிஜிட்டல் உலகிலும் அதே நிலைதான் உள்ளது . இதில் ஒரு மாற்றம் உள்ளது . ஒருவர் தவறுசெய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்துவிட்டு பழைய வாழ்க்கையை வாழ நினைத்தாலும் அது முடியாது . காரணம் , வேலை தேடி நிறுவனத்திற்கு சென்றால் அவரைப் பற்றிய பின்னணியைத் தேடும்போது எதிர்மறையான செய்திகளை கூகுள் எளிதாக காட்டிக்கொடுக்கிறது . இப்படி கூகுள் அத்தனை விஷயங்களையும் தனது சர்வரில் தேக்கி வைத்திருப்பதால் , குற்றங்களை மறந்த அமைதியாக வாழ நினைப்பவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பே கிடைப்பதில்லை . கடந்தகாலம் என்பது காலைப்பிடித்த உடும்பாக தடுக்க புதிய வாழ்க்கையை தொடங்க முடியாமல் பலரும் தடுமாறி வருகிறார்கள் . இதில் இன்னொரு ஆபத்தும் உள்ளது .    குழந்தைகளை பாலியல் சீண்டல் , வல்லுறவு , கொலை செய்தவர்களைப் பற்றியும் கூட தகவல்க

டீப் லேர்னிங் தொழில்நுட்பத்தை நம்பலாமா?

படம்
            செயற்கை நுண்ணறிவை நம்பலாமா ?   டீப் லேர்னிங் என்பதில் இல்லாத அம்சங்களே கிடையாது . இதில் முகமறியும் தொழில்நுட்பம் , மொழிபெயர்ப்பு வசதி , விளையாட்டுகளை விளையாடுவது ஆகியவையும் உள்ளது . இதன் அடிப்படையில்தான் செயற்கை நுண்ணறிவு என்பது கடந்த பத்தாண்டுகாக தொழில்நுட்பத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது . டீப் லேர்னிங்கில் நிறைய சாதகமான அம்சங்கள் இருந்தாலும் இந்த அமைப்பு எப்படி இயங்குகிறது , அப்ளிகேஷன்கள் முதல் தானியங்கி கார்கள் வரை இந்த அமைப்பில் இயங்குவது பாதுகாப்பானதுதானா ? கணினியில் இயங்கும் அல்காரிதம்கள் வெளிப்படையாக இருக்கவேண்டும் என பலரும் நினைக்கிறோம் . ஆனால் டீப் லேர்னிங்கில் இது சாத்தியமில்லை . கணினி குறிப்பிட்ட விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் முறையை இப்போது மாற்றியுள்ளனர் . இதனை ஆர்ட்டிபிஷியல் நியூரல் நெட்வொர்க்ஸ் என்று அழைக்கின்றனர் . நமது மூளையில் நியூரான்கள் செய்யும் வேலைகளையே இந்த அமைப்பும் செய்கிறது . நியூரான்கள் எப்படி மூளையில் செய்கிறதோ அந்த முறை இன்னும் எளிமையாக்கி செயல்படுகிறது என கூறலாம் . 1950 களில் நியூரல் நெட்வொர்க்ஸ் பற்றிய ஆராய்ச்

வாட்ஸ்அப் தனது புதிய பாதுகாப்பு கொள்கையை விலக்கிக்கொள்ளுமா?

படம்
          பாதுகாப்பு விதிகளுக்கு கெடு ! பேஸ்புக் நிறுவனத்தின் சகோதர நிறுவனமான வாட்ஸ் அப் புதிய தகவல் கொள்கையை உருவாக்கியுள்ளது . இதனை பயனர்கள் ஏற்றுக்கொள்வதற்கு மே 15 ஆம் தேதியை கெடுவாக விதித்தது . இதற்கு பயந்து பலரும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த இதனை ஏற்காதவர்களின் கணக்குகளை அழிக்கமாட்டோம் என நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது . வாட்ஸ்அப் புதிய கொள்கையின்படி தனது தகவல்களை பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்வதாக கூறியிருந்தது . வாட்ஸ்அப் நிறுவனம் தனது சக போட்டியாளர்களான டெலிகிராம் , சிக்னல் ஆகியவற்றை விட மக்களை கவர்ந்திருந்தது . இதற்கு காரணம் , எளிமைதான் . இதன் எளிமைத்தன்மையை டெலிகிராம் போன்ற எளிய ஆப்புடன் கூட ஒப்பிட முடியாது . டெலிகிராமை பலரும் படங்களை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தினால் வாட்ஸ்அப்பை குறுஞ்செய்தி அனுப்ப , அலுவலக வட்டாரச்செய்தி , அதில் பிறருக்கு அழைத்து பேச என பல்வேறு விஷயங்களை செய்யமுடியும் . இலவசமாக ஒரு ஆப்பை தருகிறார்கள் என்றாலே அதில் பயனர்களின் தகவல்களை எடுத்து தங்களது லாபத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றுதான் பொருள் . ஆனால் அதனை உள்ளது உள்ளபட

இன்ஸ்டன்டாக இயர்பட்ஸ் மூலமே மொழிபெயர்க்க முடியும்! மார்ஸ் இயர்பட்ஸ்

படம்
              மொழிபெயர்ப்பு இப்போது ஈஸி மொழிபெயர்ப்பு செய்வது எப்போதும் பிரச்னைக்குரிய ஒன்றுதான் . இன்றுவரையிலும் சரியான மொழிபெயர்ப்பாளர் கிடைத்து நூல்கள் தரமாக வெளிவருவது என்பது கடினமாகவே உள்ளது . முன்னணி பதிப்பகங்களில் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் கூட வேலைப்பளு காரணமாக அப்படியே கூகுள் டிரான்ஸ்லேட் வசதியைப் பயன்படுத்தி வேகமாக புத்தகங்களை எழுதி வருகின்றனர் . இதனால் என்ன பிரச்னை என்பீர்கள் . நூலை தமிழில் படிப்பதற்கு அதனை அர்த்தம கூட குறைய புரிந்தாலும் சரி ஆங்கிலத்திலேயே புரிந்துகொள்ளலாம் என பல வாசகர்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர் . இதற்கு விடிவு இல்லையா என்று சிலர் கேட்கலாம் . 2018 ஆம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சி விழாவில் மார்ஸ் இயர்பட்ஸ் விற்பனைக்கு வந்தது . நாவர் , லைன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன . குளோவா ஏஐ முலம் இயர்பட்ஸ் செயல்படுகிறது . இதனை குரல் மூலம் கட்டுப்படுத்தி இயக்ககலாம் ஏறத்தாழ அலெக்ஸா , சிரி போலத்தான் . சிறப்பு என்னவென்றால் , இதனை காதில் பொருத்திக்கொண்டே மொழி தெரியாத இருவர் பேசலாம் . சில நொடிகளில் மொழிபெயர்ப்பு நடந்துவிடுவதால்