இடுகைகள்

நோய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசுக்களைத் தாக்கி பால் சுரப்பைக் குறைத்து கொல்லும் எல்எஸ்டி நோய் - பாதுகாப்பது எப்படி?

படம்
            பசுக்களைக் காப்பாற்றுங்கள் - தலித்துகளுக்கு எதிரான கட்டுரை அல்ல கால்நடைகளை தாக்கும் வைரஸ் நோய்  வேகமாக வட இந்தியாவில் பரவி வருகிறது. அதன் பெயர் எல்எஸ்டி. போதை வஸ்தாது பெயர் என்பதால் அதே அளவுக்கு கிளுகிளுப்பாக இருக்கும் என நினைக்கவேண்டாம். இது பசுக்களை கொன்று வருகிற வைரஸ் ஏற்படுத்தும் நோயின் பெயர். லம்பி ஸ்கின் டிசீஸ் என்பதுதான் எல்எஸ்டிக்கான விளக்கம். கார்பிபாக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்த வைரஸ் இந்நோயை ஏற்படுத்துகிறது. உணவு, நீர் ஆகியவற்றில் ஏற்படும் கலப்படம் மற்றும் பூச்சிகள், கொசு, உண்ணி ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய் கால்நடைகளுக்கு குறிப்பாக பசுக்களுக்கு பரவுகிறது. நோய் பரவி முதிர்ச்சி அடையும் காலம் 4 முதல் 14 நாட்கள். பசுக்களின் நிணநீர் கணுக்கள் வழியாக கிருமிகள் பரவி பசுக்களைப் பாதிக்கின்றன. அறிகுறிகள் என்னென்ன? உடல் வெப்பம் அதிகரிப்பு, சரியாக சாப்பிட முடியாது, பால் சுரப்பு குறைந்துவிடும், மூக்கில் நீர் வடிவது, எடை குறைவு ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தர்காண்ட், மகாராஷ்டிரா, உ.பி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தி அத

கிரிஸ்பிஆர் முறையை வணிகப்படுத்த முடியும் - ஜெனிஃபர் டவுட்னா

படம்
  அமெரிக்காவைச் சேர்ந்த உயிரி வேதியியலாளர், ஜெனிஃபர் டவுட்னா. 2020ஆம் ஆண்டு மரபணு செம்மைப்படுத்தல் மேம்பாட்டிற்காக (Genome Editing) இம்மானுவேல் சார்பென்டியருடன்  சேர்ந்து நோபல் பரிசு பெற்றார்.    வால்ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த சிக்ஸ்த் ஸ்ட்ரீட் என்ற நிறுவனத்தில் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். இப்பணியை நீங்கள் ஏற்றது ஏன்? சிக்ஸ்த் ஸ்ட்ரீட் நிறுவனத்தில், சரியான குழுவை அடையாளம் கண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். இந்த நிறுவனத்தின் எந்திரக் கற்றல் நுட்பம் மூலம் கிரிஸ்பிஆர் தகவல்களை ஆராய முடியும். எந்திரக்கற்றலும், கிரிஸ்பிஆர் முறையும் ஒன்றாக சேரும்போது ஆற்றல் கொண்டதாக மாறும். இதன் மூலம் மரபணு நோய்களை அறிந்து சிகிச்சை செய்யலாம்.  பெண்களின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 2.3 சதவீத அளவுக்கு முதலீடு (Harvard Business Review)  கிடைப்பது பற்றி தங்களது கருத்து?  இந்த ஆய்வுத்தகவல் எனக்கு ஏமாற்றம் தந்தது. நான் ஆய்வுத்துறையில் பல்லாண்டு காலமாக  இருப்பதால் அதிர்ச்சி ஏற்படவில்லை.   கிரிஸ்பிஆர் முறையை வணிக ரீதியாக பயன்படுத்த முடியுமா? 10 ஆண்டுகளுக்கு மேலாக கிரிஸ்பிஆர் முறையை வணிக ரீதியாக பயன்படுத்

புகைப்பிடிப்பதை கைவிடுவது எப்படி?

படம்
  புகைப் பிடிக்காதீர்! மேலே சொன்னது போல அரசு அல்லது தனிநபர் என யார் சொன்னாலும் சங்கடம்தான். ஆனால் புகைப்பிடிப்பது பிரச்னை என அதை பின்பற்றுபவர் நினைத்து கைவிட்டால் தான் உண்டு. இப்போது இதுதொடர்பான விஷயங்களைப் பார்ப்போம்.  இந்தியாவில் புகைப்பிடிப்பதை கைவிட நினைப்போரின் அளவு 55 சதவீதம். அதில், சரியான ஆதரவு கிடைக்காமல் புகைப்பிடிப்பதை பலரும் கைவிட முடியாமல் தவிக்கின்றனர். 4 சதவீதம் பேர் தான் மனவலிமையால் புகைப்பிடிப்பதை கைவிட்டு அதன் பக்கவிளைவுகளை எதிர்கொண்டு வெல்கின்றனர்.  புகையிலை தொடர்பாக ஏற்படும் நோய்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு 27.5 பில்லியன் டாலர்கள்  புகையிலை பயன்படுத்தி உயிரிழப்போரின் எண்ணிக்கை 1.2 மில்லியனாகும். ஏழு சதவீதம் என்று கூறலாம்.  பெருந்தொற்று காலத்தில் மூன்றில் இருவர் அதாவது புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிப்பதை கைவிட முயன்றிருக்கின்றனர். இத்தகவலை ஸ்மோக் ஃப்ரீ வேர்ல்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.  அறிவியல் என்ன சொல்கிறது? நிக்கோடின் ரீப்ளேஸ்மென்ட் தெரபி, கௌன்சிலிங், வெரெனிகிலின், பூபுரோப்லான்  என இரு மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்தி புகைப்பிடிப்பவர்களை காப்பாற்ற முயல்கிற

நுண்ணுயிரிகளிடமிருந்து மனிதர்களைக் காப்பாற்றும் ஆன்டிபயாடிக்!

படம்
  நோய்களின் அரண் - முறிமருந்து(Antibiotic) நமது இயற்கைச்சூழலில் ஏராளமான நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. நமது உடலிலும் கூட வாழ்கின்றன. ஒருவருக்கு நிம்மோனியா எனும் காய்ச்சல் ஏற்பட பாக்டீரியா எனும் நுண்ணுயிரிகளே முக்கியக் காரணம். நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளை தடுக்க முதலில் மருத்துவர்கள் தடுமாறினர். பிறகுதான், நோய்க்கு காரணமான நுண்ணுயிரிகளை தடுக்கும்  வேறுவகை நுண்ணுயிரிகள் உண்டு என்பதை கண்டறிந்தனர். இப்படி சிலவகை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளிடமிருந்து பெறும் வேதிப்பொருட்களை ஆன்டிபயாடிக்காக (முறி மருந்து) பயன்படுத்தினர்.  இந்த கண்டுபிடிப்பு மூலம் தீர்க்கவே முடியாது என கருதப்பட்ட பாக்டீரியா தொடர்பான நோய்களை எளிதாக  குணமாக்க முடிந்தது. தற்போது தயாரிக்கப்படும் முறிமருந்துகளுக்கு, ஆதாரமாக ஸ்ட்ரெப்டோமைசிஸ் (Streptomyces) எனும் பாக்டீரியாக்களை பயன்படுத்துகின்றனர். இந்த பாக்டீரியா, பெரும் காலனியாக வளர்ந்து பெருகுகிறது.  பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்த முறிமருந்துகளை நெடுங்காலமாக மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, நோய் உண்டாக்கும் பாக்டீரியங்கள் மெல்ல வலுப்பெற்று வருகின்றன. ஸ்டேபிலோகாக்

வெப்பத்தைக் கட்டுப்படுத்த தனி அதிகாரிகளை நியமிக்கும் நாடுகள்!

படம்
  வெப்ப கட்டுப்பாட்டு அதிகாரிகள்! அமெரிக்காவின் ஃப்ளோரிடாவின் மியாமி டேட் கவுன்டியில் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய பணியை மக்களுக்கு கஷ்டம் தராமல் வெப்பத்தை குறைக்கும் திட்டங்களை தீட்டுவதுதான். உலகின் முதல் வெப்பக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பதவியேற்றிருக்கிறார் ஜேன் கில்பெர்ட். ” அனைத்து நகரங்களிலும் அதிகரித்து வரும் கடுமையான வெப்பம்தான் சூழல் தொடர்பான மரணங்களுக்கு காரணமாக உள்ளன. இதை யாருமே முதலில் கண்டுகொள்ளவில்லை. இப்போதுதான் நகரங்கள் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்” என்றார் ஜேன் கில்பர்ட். 2021ஆம் ஆண்டு ஜேனுக்குப் பிறகு நான்கு நகரங்களில் (ஏதேன்ஸ் (கிரீஸ்), பீனிக்ஸ் சிட்டி (அரிசோனா), சியராலியோன் (ஆப்பிரிக்கா ) )இதேபோல வெப்பக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  1998 - 2017 காலகட்டத்தில் வெப்பஅலைகளின் பாதிப்பால் 1,66,000 மக்கள் பலியாகியுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஐ.நா. வின் காலநிலை மாற்ற நிறுவனம், உலக மக்கள்தொகையில் 33 சதவீதம் பேர் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தனது அறிக்கையில் கூறியுள்ளது.  தகவல்

துலிப் மலர் ஏ டூ இசட்- தகவல்களை அறிந்துகொள்ளலாம் வாங்க!

படம்
  உணர்வுகளை சொல்லும் மலர்!  தூலிப் மலர், வெள்ளை, சிவப்பு, ரோஸ், மஞ்சள் என பல்வேறு நிறங்களில் பூக்கிறது. அல்லி மலர் குடும்பத்தைச் சேர்ந்தது. தூலிப் மலரில் மட்டும் 75 இனங்கள் அறியப்பட்டுள்ளன. தெற்கு ஐரோப்பா தொடங்கி மத்திய ஆசியப் பகுதிகள் வரை பயிரிடப்படுகிறது. 1055ஆம் ஆண்டு தொடங்கி உலகில் பயிரிடப்படும் தூலிப், ஒட்டமான் பேரரசைக் குறிக்கும் அடையாளமாக கருதப்படுகிறது.  அறிவியல் பெயர் தூலிபா (Tulipa) குடும்பம் லிலியாசியே (Liliaceae) வரிசை  லிலியாலேஸ் (Liliales) ஆயுள்  5 ஆண்டுகள் பூக்கும் காலம் டிசம்பர் முதல் மே மாதம் வரை செடியின் உயரம் 10 செ.மீ முதல் 71 செ.மீ. வரை தாயகம்  மத்திய ஆசியா, துருக்கி மலரின் பொருள் அன்பு (சிவப்பு), விசுவாசத்தை (வெள்ளை), உற்சாகம் (மஞ்சள்)வெளிக்காட்டும் மலர்கள் தூலிப் மலரின் பாகங்கள் இதழ் (Petal) அடர்த்தியான நிறங்களைக் கொண்ட தூலிப் மலரின் இதழ்கள். இவையே பூச்சிகளை ஈர்ப்பதற்கான காரணம்.  மகரந்தப்பை (Anther) மகரந்த துகள்களை உற்பத்தி செய்து வெளியிடுகிறது.  மகரந்த கம்பி (Filament) மகரந்தப்பையைத்  தாங்குகிறது புல்லிவட்டம் புற இதழ் (Sepal) பூவை பாதுகாக்கும் இலைப்பகுதி சூல் முட

சவால்களை சந்தித்தால்தான் தொழிலில் ஜெயிக்க முடியும்! - இம்பாக்ட் குரு - குஷ்பு ஜெயின்

படம்
  குஷ்பு ஜெயின், (இம்பேக்ட் குரு) துணை நிறுவனர், செயல்பாட்டு அதிகாரி  இதனை எங்கு பார்த்திருக்கிறீர்கள் என நினைவு இருக்கிறதா? யூட்யூப் வீடியோ பார்க்கும்போது நோய், விபத்து சார்ந்த மருத்துவ சிகிச்சைகளுக்கு பணம் கேட்கும் ஆட்களைப் பார்த்திருப்பீர்கள். இதுபோன்ற நோய், விபத்து சார்ந்த பிரச்னைகளுக்கு க்ரௌட் ஃபண்டிங் முறையில் பணம் வாங்கிக் கொடுப்பதுதான் இம்பேக்ட் குருவின் வேலை. இதனை நடத்தி வருபவர் குஷ்பு ஜெயின்.  உடை, ஆரோக்கியம், உணவு ஆகிய மூன்று விஷயங்களே தனக்கு முக்கியம் என வாழ்ந்து வருகிறார் குஷ்பு. பல ஆண்டுகளாக மார்க்கெட்டிங், வடிவமைப்பு சார்ந்து பல்வேறு பணிகளை குஷ்பு செய்து வருகிறார். மேலும் 2019ஆம் ஆண்டு ஐ.நா பெண் சாதனையாளர்கள் இந்தியா விருதைப் பெற்றிருக்கிறார். நிதி ஆயோக் அமைப்பின் டாப் 15 பெண் தொழில்முனைவோர் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார். பார்ச்சூன் இதழின் 40 அண்டர் 40 பட்டியலிலும் இவர் பெயர் உள்ளது. அவரிடம் பேசினோம்.  தொழிலில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன ? நீங்கள் வெற்றிகரமான தொழிலதிபராக உருவாக பொறுமை, அர்ப்பணிப்பு முக்கியம். பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டும். தொழிலில் வாடிக்கை

மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை சிறியது! - ராபர்டோ கோல்டர், பேராசிரியர்

படம்
  ராபர்ட்டோ கோல்ட்டர் நுண்ணுயிரியல் துறை, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உங்களது ஆராய்ச்சியின் அடிப்படை எது? நான் பாக்டீரியா பற்றி 35 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதாவது நான் ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை. மூலக்கூறுகளை ஆராய்ந்து எப்படி பல்வேறு அழுத்தங்களுக்கு எதிர்வினைகளை அளிக்கிறது என ஆய்வு செய்தோம். பாக்டீரியா பாசிகளோடு புரியும் வினைகள் பற்றிய எனது ஆர்வம் அதிகரித்து வந்தது. பூமியின் சல்பர் சுழற்சி மற்றும் காலநிலை மாற்றம், மேகம் உருவாகும் விதம் ஆகியவற்றில் பாக்டீரியாவின் பங்களிப்பு அதிகம்.  பூமியின் செயல்பாட்டிற்கு நுண்ணுயிரிகள் முக்கியமெனில் அதனை எப்படி காப்பாற்றுவது? நுண்ணுயிரிகளை தனியாக காப்பாற்றுவது என்பது எளிதல்ல. அதனை தனியாக சூழலில் விட்டாலே போதும். அதுவே சுயமாக வளர்ந்துகொள்ளும். நுண்ணுயிரிகளின் மீதான மனிதர்களின் செயல்பாடு, தாக்கம் குறைந்தாலே அவை பூமியில் சிறப்பாக இயங்கும்.  காலநிலை மாற்றம் நுண்ணுயிரிகளை பாதிக்கிறதா? ஆமாம். காலநிலை மாற்றத்தால் நுண்ணுயிரிகள் பாதிக்கப்படுவதை அறிவியல் ஆய்வுகள் ஆதாரத்தோடு விளக்கியுள்ளன. கடல் மற்றும் நிலப்பரப்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாம

பூஞ்சை உள்ள பகுதியை வெட்டியெடுத்துவிட்டு பிரெட் சாப்பிடலாமா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  Fungus bread image -TOI உணவில் பூஞ்சை உள்ள பகுதியை வெட்டி எடுத்துவிட்டு சாப்பிடலாமா? உணவில் பூஞ்சை உள்ள பகுதியை மட்டும் பிய்த்துவிட்டு சாப்பிடலாம் என சாமர்த்தியமாக நினைக்கிறீர்கள். ஆனால் தாக்கப்படாத பகுதியில் கூட பூஞ்சை நச்சு இருக்க வாய்ப்புண்டு. உணவைத் தாக்கும் பல்வேறு வித பூஞ்சைகள் உள்ளன.  சீஸைத் தாக்கும் பென்சிலியம் (Penicillium), ஸ்ட்ராபெரியைத் தாக்கும் பாட்ரைடிஸ் (Botrytis) ஆகியவை வரை உள்ளன. பூஞ்சைகள் ஏற்படுத்தும் நச்சுக்கு மைக்கோடாக்சின் (Mycotoxins)  என்று பெயர். இவை தாக்கினால் உடல் நடுக்கம், வாந்தி, காய்ச்சல் ஆகியவை ஏற்படும். அஃப்லாடாக்சின் (Aflatoxins)என்ற பூஞ்சை நச்சு பாதிப்பு ஏற்பட்டால், ஒருவரின் டிஎன்ஏவே தாக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படும். முடிந்தவரை பூஞ்சை பாதிப்பு ஏற்பட்ட உணவுப்பொருளை தூக்கி எறிந்துவிடுவதே நல்லது.  உலகிலேயே அதிக விஷம் கொண்ட மரம் உள்ளதா? வடக்கு, மத்திய தெற்கு அமெரிக்கா, கரீபியன் பகுதிகளில் ஹிப்போமனே மன்சினெல்லா  (Hippomane mancinella) இனத்தைச் சேர்ந்த கடும் விஷம் கொண்ட மரம் உள்ளது. கடற்புரங்களில் உள்ள மாங்குரோவ் காடுகளில் 15 மீட்டர் உயரத்திற்கு இம்மரம் வளர

தேனீக்களை குணமாக்கும் தேன்!

படம்
  தேனீக்களை  காப்பாற்றும் வேதிப்பொருள்!  தேனீக்களை பூச்சிக்கொல்லி, பருவநிலை மாறுபாடு என பல்வேறு விஷயங்கள் பாதிக்கின்றன. கூடுதலாக வாரோவா எனும் ஒட்டுண்ணி(Varroa destructor) தேனீக்களை கடுமையாக தாக்குகிறது. இது, தேனீக்கூட்டிலுள்ள புழுக்களை உணவாக உண்பதோடு, உடலிலுள்ள  வைரஸ்களை தேனீக்களின் காலனிக்கும் தொற்ற வைக்கிறது. இதில் ஏற்படும் தாக்குதலால் தேனீக்களின் இறகு கடுமையாக பாதிக்கப்படுகிறது. வளரும் நிலையில் உள்ள பூச்சிகளுக்கு இறகு வளர்ச்சியில்லாமல் போய்விடுகிறது.  வைரஸ் தேனீக்களின் நினைவுகளையும் பாதிக்கிறது. இதனால் கூட்டை விட்டு தேனை தேட கிளம்பிய வேலைக்கார தேனீ, வீட்டுக்கு திரும்ப முடியாது. எப்படி வருவது என்பதை மறந்துவிடுவதுதான் காரணம். உணவு கிடைக்காததால், தேனீக்களின் கூட்டமே நிலைகுலைந்து அழியும் நிலை உருவாகும்.  தேனீக்களை தாக்கும் வைரஸ்களை அழிக்கும் வேதிப்பொருளை தேசிய தைவான் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. சோடியம் பூடைரேட் (Sodium butyrate) எனும் வேதிப்பொருளை தினசரி தேனீக்களுக்கு கொடுக்கும்போது அவை வலிமையாகின்றன. மனிதர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் போலவே இந்த வேதிப்பொருள் செயல்படுகிறது. இதன்

நெஞ்சின் ஓரமாய் வலி! - குடும்ப நோய் வரலாறு காரணமா?

படம்
  இதயநோய் ஏற்படுபவர்களின் குடும்ப வரலாற்றை முன்னதாக அறிந்தால் அவர்களைக் காப்பாற்ற முடியும் என லான்செட்  அக்.2021 இதழின் ஆய்வு கூறியுள்ளது.  கேரளத்தில் 750 குடும்பங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வில் இதயநோய் தொடர்பான பாதிப்பு கொண்டவர்களை அடையாளம் கண்டறிந்தனர். இவர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்க ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் தேவை என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  ஐம்பத்தைந்து வயதுக்கு முன்னதாகவே ஒருவருக்கு இதயநோய் தொடர்பான பிரச்னைகள் இருக்கிறது என கண்டுபிடிப்பது அவசியம். அப்படி கண்டுபிடித்தால், அவருக்குள்ள 1.5 முதல் 7 சதவீத ஆபத்தை தவிர்க்க முடியும் என லான்செட் இதழில் வெளியாகியுள்ள ஆய்வு கூறுகிறது.  இந்த ஆய்வு கேரளத்தில் 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில்  நடத்தப்பட்டது.  சுகாதார பணியாளர்கள் 368 குடும்பங்களைச் சந்தித்தனர். அவர்களின் உடல்நிலை பற்றி கேட்டறிந்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உடல்நிலையை பரிசோதித்தனர். மேலும் அவர்களின் உணவுமுறையை மாற்றியமைக்கவும் அறிவுறுத்தினர். உடற்பயிற்சி செய்யவும், மது, புகையிலையை பயன்படுத்துவதை கைவிடவும் கூறினர்

பூச்சிகளின் ரத்த வேறுபாடு? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  pixabay-  பதில் சொல்லுங்க ப்ரோ? பூச்சிகளின் ரத்தம் மனிதர்களின் ரத்தம் மாதிரி இருப்பதில்லையே ஏன்? வேறுபாட்டிற்கு காரணம், நமது உடலில் உள்ள  சிவப்பணுக்கள்தான். பூச்சிகளின் உடலில் ஹீமோலிம்ப் எனும் திரவம் உள்ளது. இந்த திரவம்தான் அந்த உயிரிகளின் உடலிலுள்ள செல்களை பாதுகாக்கிறது. பூச்சிகளின் ரத்தத்தில் பெரும்பாலும் நீர்தான். கூடவே அயனிகள், கார்போஹைட்ரேட், கிளிசரால், அமினோ அமிலங்கள், நிறமிகள், செல்கள் ஆகியவை இருக்கும்.  பூச்சிகளின் உடலிலிருந்து சிவப்பு நிற திரவம் வந்தால் அது அதன் கண்களில் உள்ள சிவப்புநிறத்திலிருந்து வந்ததாக இருக்கும்.  பூச்சிகளின் ரத்தம் பொதுவாகவே வெள்ளை அல்லது பச்சையாக இருக்கும். பாலூட்டிகளின் உடலில் சிவப்பணுக்கள் மூலமாக செல்கள் உயிரோடு இருக்கின்றன. இவைதான் செல்கள் அனைத்திற்கும் ஆக்சிஜன் கிடைக்கிறது. பூச்சிகளுக்கு இப்பணியை ட்ரிச்சல் ட்யூப் என்ற உறுப்பு இப்பணியை செய்கிறது.  பூச்சிகளுக்கு என்னவிதமான நோய்கள் ஏற்படும்? அனைத்து உயிரினங்களுக்குமே பாக்டீரியம் மற்றும் வைரஸ், பூஞ்சைகள் எப்போதும் நோய்களை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளுக்கு கூடுதலாக ஒட்டுண்ணிகள் மூலம் பாதிப்பு ஏற்படுகிறது.

மானத்தைக் காப்பாற்ற பகத் பாசில் செய்யும் முயற்சிகள்! - கடிதங்கள்

படம்
         மகேஷிண்டே பிரதிகாரம் - பகத் பாசில்   இனிய நண்பர் முருகு அவர்களுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? நோய் எதிர்ப்பு சக்திக்காக நெல்லிக்காய் லேகியம் சாப்பிட நினைத்தேன் . ஆனால் சியவனப்பிரகாசம்தான் கிடைத்தது . காதியில் கிடைத்த லேகியம் விலை குறைவு . ஆனால் திருப்தியாக இல்லை . கோட்டக்கல் வைத்தியசாலையில் சியவனப்பிரகாசம் வாங்கி சாப்பிடுகிறேன் . ஓரளவு நன்றாகவே இருக்கிறது . அலுவலகத்திலிருந்து முன்னணி பத்திரிக்கைக்கு சென்ற மருத்துவ இதழ் பெண் ஆசிரியர் , நிறுவன இயக்குநரால் மிரட்டப்பட்டது அலுவலகம் முழுக்க தெரிந்துவிட்டது . எதற்கு இந்தளவு ஆங்கார கோபம் ? முன்னணி நிறுவனம் குறித்த கோபம் எதற்கு ? அந்த நிறுவனம்தான் இதழ்களுக்கான பத்திரிக்கையாளர்களை பயிற்சி கொடுத்து தயாரிக்கிறது . ஏன் ? எங்கள் நிறுவன வார இதழின் ஆசிரியர் கூட அந்த நிறுவனத்தின் தயாரிப்புதான் . இதேபோல முன்னணி நிறுவனம் மட்டும் தனது பத்திரிகையாளர்களை மிரட்ட வேண்டுமென்றால் , அதற்கென தனி குழுவை உருவாக்கி முழுநேரமாக மிரட்டல் வேலைகளை செய்யவேண்டும் . அதிகாரம் குவியும் இடத்தில் அரசியல் இருக்கத்தானே செய்யும் . இந்த கேட

கொசுக்கள் ஏற்படுத்தும் பேரழிவு!

படம்
கொசுக்கள் ஏற்படுத்தும் பேரழிவு உலகில் பத்தில் ஒருவருக்கு கொசுக்கள் பல்வேறு நோய்களை பரப்புவதாக வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இப்போது அதனை முற்றாக அழிக்கும் ஆய்வுகளும் கூட உலக நாடுகளில் நடந்து வருகின்றன. ஆனாலும் கூட இதற்கான முழுமையான தீர்வுகள் நமக்கு கிடைக்கவில்லை.  பாலூட்டிகள், முதலைகள் என  பல்வேறு விலங்குகளிடமிருந்து ரத்தத்தை கொசுக்கள் உறிஞ்சி எடுக்கின்றன. மனிதர்களை மட்டுமே இப்போது குறிவைத்து தாக்கினாலும் இதற்கு காரணம், பிற விலங்கினங்களின் எண்ணிக்கை குறைந்துபோனதுதான்.  இருவாழ்விகள், பாலூட்டிகள், மீன்கள், புழுக்கள் ஆகியவற்றிடமிருந்தும் கொசுக்கள் ரத்தத்தை உறிஞ்சி உணவைப் பெறுகின்றன. கூடுதல் போனஸாக விலங்குகளுக்கு பல்வேறு நோய்களையும் பரப்புகின்றன.  கொசுக்கள் இரவு நேரத்தில் பூக்களின் மீது சென்று அமர்ந்து மகரந்தசேர்க்கைக்கு  உதவுகின்றன என்று பொதுவாக பலரும் கூறுகின்றனர். இதற்கு அறிவியல் ஆதாரங்கள் அதிகம் கிடையாது என லாரி ரீவ்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.  இதுபற்றிய முழுமையான தகவல் ஸ்மித்சோனியல் இதழில் வெளியா

நுரையீரலும் எலும்பும் உடலுக்கு செய்யும் பணிகள் என்ன?

படம்
            மூச்சு அமைப்புகள் காற்றிலுள்ள வாயுக்களை சுத்திகரித்து ரத்தத்தில் தூய ஆக்சிஜனை சேர்க்க உதவுகிறது . இந்த அமைப்பு இல்லாதபோது , ஒருவர் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கு் போராடும் நிலை ஏற்படும் . பிறந்த குழந்தை பத்தாவது நொடியில் பூமியில் முதல் மூச்சை இழுக்கத் தொடங்குகிறது . கருப்பையில் இருந்த திரவங்கள் மெல்ல வெளியேற்றப்பட காற்று நுரையீரலில் நிரம்புகிறது . இனிமேல் அந்த குழந்தை வளர்ந்து முதியவராக இறக்கும் வரை நுரையீரல் ஆக்சிஜனை ரத்தத்தில் சேர்த்தும் , கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றியும் வேலை செய்யும் . இந்த வேலை எப்போதும் நிற்காது . ஒரு நிமிடத்திற்கு இருபது முறை என எண்ணற்ற முறை நுரையீரல் துடிக்கிறது . ஆறு நிமிடங்கள் உடலுக்கு ஆக்சிஜன் போகவில்லையென்றால் உடனே செல்களில் உள்ள நச்சு உடலில் பரவுகிறது . மூளை மற்றும் இதயம் மெல்ல செயலிழக்கத் தொடங்குகிறது . உடலில் நடைபெறும் மூச்சு தொடர்பான பணிகள் அனைத்துமே மூளையால் தன்னிச்சையாக செயல்படுத்தப்படுகிறது . அதேசமயம் , மூச்சை செய்யும் வேலைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்திக்கொள்ள முடியும் . நீச்சலடிக்கும்போது இதனை ஒருவர்

மருத்துவத்துறையில் இனவெறி அரசியல் உண்டு! - மலோன் முக்வெண்டே - மருத்துவ மாணவர்

படம்
                    மலோன் முக்வெண்டே இருபத்தொரு வயதான மலோன் முக்வெண்டே , லண்டனில் மருத்துவம் படிக்க சேர்ந்தார் . அங்கு அவருக்கு மருத்துவ ஆராய்ச்சிக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே வெள்ளையர்களைப் பற்றியதே . இதில் மிகவும் குறைவாகவே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் , பழுப்பு நிறத்தவர்கள் இருந்தனர் . இவர்களை கருத்தில் கொள்ளாமல் எப்படி நோய்களைப் பற்றிய முழுமையான முடிவுக்கு வருவது என்று நினைத்த மலோன் , இதற்காக நூல் ஒன்றை உருவாக்கியுள்ளார் . இணையத்தில் வலைத்தளம் ஒன்றையும் ஏற்படுத்தியிருக்கிறார் . அவரிடம் பேசினோம் . மைண்ட் தி கேப் என்ற முயற்சியைப் பற்றி கூறுங்கள் . எங்கள் கல்லூரியில் நாங்கள் தோலில் ஏற்படும் நோய்களைப் பற்றி படித்தபோது கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே வெள்ளை இனத்தவர்களுடையது . எனக்கு அப்போது தோன்றிய கேள்வி , பிற இனத்தவர்களுக்கு இந்த நோய் மாறுபடுமே , அவர்களுக்கும் இதேபோல இருக்குமா என்பதுதான் . இக்கேள்வியை ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்களுக்கு்ம் பதில் தெரியவில்லை . எனவே ஆசிரியர்கள் சிலரின் உதவியுடன் இணைந்து கிடைத்த புகைப்படங்களை இணைத்து கருப்பு நிறத்தவர்களின் தோலின் நி

உடலின் அற்புத பாதுகாப்பு கவசம் - தோல்

படம்
          pixabay           உடலைச் சுற்றிய கவசம் - தோல் நமது உடலிலுள்ள தோல் அளவுக்கு நோயிலிருந்து நம்மைக் காக்கும் கவசம் வேறு இல்லை . நீர் உள்ளே போகாது , புற ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து காக்கிறது . உடலின் வெப்பம் அதிகரிக்கும்போது , வியர்வை மூலம் குளிர்ச்சி செய்வதும் கூட தோல்தான் . பல்வேறு அடுக்குகளாக உள்ள தோல் காயங்களிலிருந்தும் உடலைக் காக்கிறது . வியர்வை , வெளிப்படையாக தெரியும் கவசம் , உறுதித்தன்மை ஆகியவற்றை தோலின் முக்கியமான அம்சங்களாக கூறலாம் . வெளியே ஏப்ரல் மாத வெயில் காய்ந்தாலும் அல்லது எரிமலையே கூட வெடித்து லாவா உருகி ஓடினாலும் உடலின் வெப்பநிலை 36 முதல் 38 டிகிரி செல்சியஸிற்குள்தா்ன் இருக்கவேண்டும் . மூளை புத்திசாலித்திற்கான ஆதாரம்தான் என்றாலும் அதனால் வெப்பத்தை பொறுக்க முடியாது . 42 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை அதிகரித்தால் அது உயிருக்கே ஆபத்து . தோல் முழுக்க பல லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன . இவை எல்லாம் சேர்ந்து வேலைபார்த்துத்தான் தினசரி லிட்டர் கணக்கான வியர்வையை வெளியேற்றுகிறது . சில மனிதர்களுக்கு ஒரு மணிநேரத்தில் மூன்று லிட்டர் வியர்வை