இடுகைகள்

ஜப்பான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புத்தகங்களை பாதுகாக்கும் பேசும் பூனை! - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
  பீஸ்ட்ஸ் ஆப் லிட்டில் லேண்ட் ஜூகியா கிம் ஒன்வேர்ல்ட் ரூ.499 1917 ஆம் ஆண்டு ஜேட் என்ற கொரியப் பெண், மிஸ் சில்வர் என்ற பெண்ணின் பள்ளிக்கு வேலைக்காக விற்கப்படுகிறாள். அதன்பிறகு கொரியாவில் ஜப்பானியப்படை போர்த் தாக்குதல் நடைபெறுகிறது. இந்த நேரத்தில்  ஜேட் என்ற பெண், ஜங் ஜோ என்ற இன்னுமொரு ஆதரவற்ற சிறுவனைப் பார்க்கிறாள். இருவருக்குள்ளும் நட்பு உருவாகிறது. ஆனால் வாழ்க்கை ஒருகட்டத்தில் இருவரையும் எதிரெதிரான நிலையில் நிறுத்துகிறது.  தி கேட் ஹூ சேவ்டு புக்ஸ் சூசுகே நட்சுகாவா, ட்ரஸ் லூயிஸ் ஹீல் கவாய் பிகாடர் ரூ. 334 தாத்தா விட்டுப்போன புத்தக கடையை பேரன் நட்சுகி பார்த்துக்கொள்கிறார். கையில் கிடைக்கும் அனைத்து நூல்களையும் அவன் படித்துக்கொண்டிருக்கிறான். அப்போது நூல்களை பாதுகாக்கும் பேசும் பூனை ஒன்றை சந்திக்கிறான். அந்த நிகழ்ச்சி அவன் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பல்வேறு சம்பவங்களைப் பற்றித்தான் நூல் பேசுகிறது.  அட்லஸ் சிக்ஸ் ஆலிவியா பிளாக் டோர் ரூ.699 ஒரு ரகசியமான இயக்கத்தில் சேர மாயமந்திரக்காரர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. பாரம்பரியான இயக்கத்தில் சேருவது யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு. அதேசமயம்

வித்தியாசமாக கட்டப்பட்ட டோக்கியோ கேப்சூல் டவர்!

படம்
  வினோதமான டோக்கியோ டவர் கட்டடம்! இந்த கட்டடத்தை முதலில் பார்ப்பவர்கள், தேவையில்லாமல் இருக்கும் கான்க்ரீட் கற்களை வரிசையாக அடுக்கி வைத்திருப்பார்கள் என்றே நினைப்பார்கள். கின்சா மாவட்டத்திலுள்ள டோக்கியோவில்  கேப்சூல் டவர் அமைக்கப்பட்டுள்ளது.  இதனை  1972ஆம் ஆண்டு கிஷோ குரோகாவா என்ற புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் உருவாக்கினார். நகரில் வேலை பார்ப்பவர்கள் வார இறுதிக்கு புறநகருக்கு அவசரமாக கிளம்புவதைத் தடுக்கும் வகையில் இந்த கட்டட அமைப்பை உருவாக்கினார். பார்க்க பெட்டி மாதிரி இருந்தாலும் இதில் பலர் தங்கலாம். ஒரு பெட்டியில் ஒருவர் என தங்கலாம். உலகப்போருக்கு கட்டப்பட்ட கட்டுமானது இது. ஒவ்வொரு கேப்சூலிலும் குளியலறை, டிவி, ரேடி, போன் ஆகியவை வைப்பதற்கான இடம் இருக்கும். கூடவே நகரை உள்ளிருந்து வெளியே பார்ப்பதற்கான ஜன்னலும் உண்டு. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் கேப்சூல் கட்டுமானம் மெல்ல சிதைவடைந்து வருகிறது.  இப்போது இங்கே தங்கி கேப்சூலை அலுவலகமாக வீடாக பயன்படுத்தி வருபவர்களுக்கும் நிலைமை புரிந்துவிட்டது. அடுத்த ஆண்டு இந்த கேப்சூல்கள் அழிக்கப்படும் என தெரிகிறது. ”நாங்கள் இந்த கட்டட ஐடியா

கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் தங்க விழா! - ஜப்பானில் நடைபெற்ற விளையாட்டுத் திருவிழா!

படம்
  பிப்ரவரி 3 1972ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்கா, ஐரோப்பா தாண்டி வெளியே நடைபெறத் தொடங்கின. முதல்முறையாக என்பதை கூடவே சேர்த்துக்கொள்ளுங்கள்.  இந்த விளையாட்டுகளில் பிப்.3 தொடங்கி பிப். 13 வரையில் நடைபெற்றன.  ஜப்பானின் ஹொக்கடைவில் உள்ள இன்சாப்ரோவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த ஆண்டு, அதாவது 2022இல் விளையாட்டு போட்டிகள் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆங்கிலத்தில் கோல்டன் ஜூப்ளி என்கிறார்கள்.  ஜப்பான் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றது. 1940ஆம் ஆண்டுக்கான போட்டி நடத்தும் வாய்ப்பு. ஆனால் அதற்குள் சீனாவுக்குள் உள்ளே படையெடுத்து சென்றதால் 1937ஆம் ஆண்டு தன் வாய்ப்பை இழந்தது. எனவே விளையாட்டுப் போட்டிகளை நடத்த லண்டன், ஹெல்சின்கி என்ற நகரங்களைத் தேர்ந்தெடுக்கலாமா என்று நினைத்தது விழா கமிட்டி. போர் நடைபெற்றதால் இரு நகரங்களும் தேர்விலிருந்து விலகின.  சப்போரோ நகரம் பான்ஃப் லக்டி என்ற நகரங்களோடு போட்டி நடத்துவதற்கான தேர்ந்தெடுப்பு பட்டியலில் இடம்பிடித்தது. 1972ஆம ஆண்டுக்கான போட்டியை ரோமில் நடைபெற்ற கமிட்டி கூட்டம் முடிவு செய்தது. இவர் கூடிப் பேசி முடிவு செய்த

சுபாஷ் சந்திரபோஸை எதற்காக நினைவுகூர வேண்டும்?- 125ஆவது பிறந்த தின ஆண்டு

படம்
  2022ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் பிறந்து 125  ஆண்டுகள் ஆகிறது. தேசியத் தலைவராக இவரது பெயர்களை தமிழ்நாட்டில் நிறைய குழந்தைகளுக்கு வைத்துள்ளனர். ஆனால் இதேபோல தமிழ்நாட்டு தலைவர்கள் பெயரை வட இந்தியர்கள் வைத்துள்ளார்களா என்றால் மிகவும் குறைவு. இதைப்பற்றி இன்று (20.1.2022) கூட தமிழ் இந்துவில் ஆசை சிறப்பான கட்டுரை எழுதியுள்ளார்.  நாம் வட இந்தியர்கள் அளவுக்கு மத, ஜாதி வெறியர்கள் கிடையாது என்பதால் கொல்கத்தாக்காரரான போஸ் பற்றி எழுதலாம். எழுதியதை படிக்கலாம். நமது மனப்பாங்கு அத்தகையது.  1897ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி சுபாஷ் சந்திரபோஸ், ஒடிஷாவின் கட்டாக்கில் பிறந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் போராடிய தலைவர்களில் முக்கியமானவர். இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பிலும் அங்கம் வகித்தார். சோசலிச கொள்கைகளுக்கு ஏற்ப காங்கிரஸ் அமைப்பில் இருந்து பிரிந்து தனி அமைப்பை உருவாக்கினார்.  1918ஆம் ஆண்டு கொல்கத்தாவில் த த்துவப் படிப்பில் பட்டம் பெற்றார். ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்தான் இதற்காக படித்தார். 1916ஆம் ஆண்டு இந்திய கலாசாரம் பற்றி ஆங்கில பேராசிரியர் தவறாக ஏதோ பேசியிருக்கிறார். பிறர் ஒதுங்கிப் போனாலும் போஸ் அ

ஜனவரி 3 ஆம் தேதி ஏன் முக்கியமானதாகிறது?

படம்
நேரத்தைப் பொறுத்தவரை ஜனவரி 3 முக்கியமாகிறது. காரணம், இதே நாளில் 1957ஆம் ஆண்டுதான் முதன்முதலில் எலக்ட்ரானிக் வாட்ச் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆண்டோடு எலக்ட்ரானிக் கைக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டு 65 ஆண்டுகள் ஆகிறது. ஹாமில்டன் என்ற வாட்ச் கம்பெனிதான் இதனை உருவாக்கியது. அதற்கு முன்பு வரை வாட்ச் என்பது சாவி கொடுத்தால் ஓடும். இல்லையென்றால் உடலின் வெப்பம் காரணமாக ஓடும். அதுவரை வாட்ச் நின்றிருக்கும். இதனையெல்லாம் ஹாமில்டனின் எலக்ட்ரானிக் வாட்ச் மாற்றியது. நவீன குவார்ட்ஸ் புரட்சியின் தொடக்கமாக ஹாமில்டன் நிறுவனம் உருவாக்கிய கைக்கடிகாரத்தை கூறலாம். 1946ஆம் ஆண்டு ஹாமில்டன் டைம்பீஸ் ஒன்றை உருவாக்கியது. இதனை சாதாரணமாக உருவாக்கிவிடவில்லை. இதனை தயாரிக்க இந்த நிறுவனத்திற்கு 11 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஹாமில்டன் எலக்ட்ரிக் 500 என்ற வாட்ச் அனைவரையும் ஈர்த்தது. பாடகர் எல்விஸ் ப்ரெஸ்ட்லி இதனை அணிந்து ப்ளூ ஹவாய் என்ற படத்தில் தோன்றினார். அப்போது உருவாகிய வாட்சுகளில் வென்சுரா முக்கியமானது. இதனை ரிச்சர்ட் அர்பிப் என்பவர் வடிவமைத்தார். எப்போதும் பார்க்கும் வடிவமைப்பில் இல்லாத வாட்ச் இது. டிரையாங்குலர் வடி

2021 ஜப்பான் ஒலிம்பிக் டார்ச்சில் என்ன புதுசு?

படம்
  ஒலிம்பிக் டார்ச்சில் என்ன இருக்கிறது? ஜப்பானிய வடிவமைப்பாளர் ஒலிம்பிக் ஜோதியை செர்ரி பிளாசம் வடிவில் உருவாக்கியுள்ளார். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 30 சதவீத அலுமினியம் மறுசுழற்சி செய்யப்பட்டது. இந்த உலோகம், 2011ஆம் ஆண்டு சுனாமி, நிலநடுக்கம் காரணமாக இறந்துபோனவர்களின் குடியிருப்பு பகுதியிலிருந்து பெறப்பட்டது.  பூவின் இதழ்களிலிருந்து நெருப்பு வரும்படி அமைக்கப்பட்டுள்ளது.  இதில் இரண்டு கம்பியூஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று அதிக வெப்பம் வரும்படியான நீல நிற ஜூவாலை, அடுத்து ஜூவாலை தெரியாத சிவப்பு நிற கம்பியூஷன் நுட்பமும் உள்ளது.  ஆன் ஆப் சுவிட்சுடன் டார்ச் உள்ளது. இதில் எரிபொருளாக ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. திரவ எரிபொருள் அழுத்தப்பட்டு வாயுவாக மாறி நெருப்பு ஜூவாலை எரிய வைக்கப்படுகிறது.  ஒலிம்பிக் ஜோதியை மொத்தம் 10 ஆயிரம் வீர ர்கள் ஏந்திக்கொண்டு வருவார்கள். ஒரு வீர ர் 200 மீட்டர் தூரம் அதனை ஏந்துவார்கள். 1.2 கி.கி எடை கொண்ட டார்ச், 71  செ.மீ நீளமானது.  how it works

முரடன், சாமுராய், துறுதுறு பெண் என மூன்று பேரும் இணைந்து சாமுராயைத் தேடிச்செல்லும் பயணம்! - சாமுராய் சம்புலு - அனிமேஷன்

படம்
                  சாமுராய் சம்புலு அனிமேஷன் தொடர் இருபத்தி ஆறு எபிசோடுகள் குருவைக் கொன்றுவிட்டு சுற்றும் சாமுராய் வீரனும் , ரைகு தீவில் வளர்ந்த குற்றவாளி ஒருவனும் நண்பர்களாகி , இளம்பெண் ஒருவளுக்கு அவளது தந்தையைக் கண்டுபிடிக்க உதவுகிறார்கள் . தொடரின் டைட்டிலிலேயே ஜின் என்ற சாமுராய் வீரன் எப்படி , முகன் என்பவன் எப்படி , இவர்களை தனது பாதுகாவலர்களாக கொண்டு தந்தையைத் தேடும் ஃபு என்ற பெண்ணின் குணம் எப்படி என சொல்லிவிடுகிறார்கள் . இருபத்தி ஆறு அத்தியாயங்களில் சிறுகதை போல ஒரு கதையைச் சொல்லுகிறார்கள் . இவற்றில் ஜின் , முகன் என இருவருமே தங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொண்டு சண்டைபோடுகிறார்கள் , நகைச்சுவை செய்கிறார்கள் , காதலிக்கிறார்கள் , தங்களை நிழல் போலத் தொடரும் இறந்தகாலத்தை நினைத்து வருந்துகிறார்கள் , புதிய விஷயங்களைக் கற்கிறார்கள் . இரண்டு ஆண்கள் , ஒரு பெண் என்றால் முக்கோண காதல் இருக்குமே என்றால் அதில்தான் வேறுபாடு காட்டுகிறார்கள் . முகன் , காசு கொடுத்தால் எதையும் செய்யும் முரடன் . அதிகம் யோசித்து செயல்படுவது இவனுக்கு சரிவராது . கோபம் வந்தால் உடனே

டில்லிக்கு தனது காமிக்ஸை விற்க வந்து டரியலான ஜப்பானியரின் கதை! - ஸ்டுப்பிட் கய் கோஸ் டு இந்தியா 2011

படம்
  தனது காமிக்ஸ் புத்தகத்துடன் யுகிச்சி யமமாட்சு ஸ்டுப்பிட் கய் கோஸ் டு இந்தியா 2011 ஆங்கில மொழிபெயர்ப்பு  குமார் சிவசுப்பிரமணியன் முதிர்ச்சியானவர்களுக்கு மட்டும் -18 + மாங்கா காமிக்ஸ் என்பதற்கான மார்க்கெட் என்பது உலகளவில் தற்போது உருவாகி வருகிறது. இப்படி ஒரு மார்க்கெட்டை பயன்படுத்திக்கொள்ள ஜப்பான் கலைஞர் யுகிச்சி முயல்கிறார். அதற்காக இந்தியாவுக்கு வந்து படாதபாடு பட்டு தடுமாறுவதுதான் கிராபிக் நாவலின் மையம்.  ஜப்பானிய மொழி மட்டுமே தெரிந்த யுகிச்சி எப்படி அவருக்கு தொடர்பேயில்லாத இந்தியாவுக்கு வந்து காமிக்ஸை தயாரித்து விற்றார் என்பதுதான் கதை. இந்த கதைக்குள் ஏராளமான அவல நகைச்சுவை காட்சிகள் உள்ளன. குறிப்பாக வெளிநாட்டுக்காரன் என்றாலே பணம் நிறைய வைத்திருப்பான் என்று டீத்தூள், துணி, ஆட்டோவுக்கு அதிக பணம் என ஏமாற்றுவது நாவல் முழுக்க நடைபெறுகிறது. இதில் பாரபட்சமே கிடையாது.  இத்தனையும் சமாளித்து அவர் ஹோட்டலில் தங்கியிருக்கிறார். பின் செலவு கட்டுப்படியாகாமல் தனி அறை பார்க்கிறார். அதற்கு அவர் ஏஜெண்டுகளை தேடி செல்வதும் நடக்கும் காட்சிகளும் சிரிக்க வைப்பதோடு, இப்படியுமா நடக்கும் என அதேநேரம் எண்ண வைக்க

வாரி வழங்கும் ஆசிய பணக்காரர்கள்! கல்வி, சமூகம், வறுமை ஆகியவற்றுக்கே முதலிடம்

படம்
      asia rich mans- pixabay       மானுவேல் வில்லர் விஸ்டா மால் அண்ட் விஸ்டா லேண்ட் அண்ட் லேண்ட்ஸ்கேப்ஸ் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தக்காரர் . இரண்டு ஹெக்டேர் நிலத்தை கத்தோலிக்க பள்ளி கட்டுவதற்கு தானமாக அளித்துள்ளார் . பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்திற்கு ஐந்து ஹெக்டேர் நிலத்தை தானமாக அளித்துள்ளார் . மேற்சொன்ன தான நடவடிக்கையின் மதிப்பு 165 மில்லியன் டாலர்கள் . நான்கு பிலிப்பைன்ஸ் பள்ளிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்துகொடுத்துள்ளார் . தேவாலயங்களுக்கான நிதியுதவி , கொரோனாவுக்கு எதிரான பல்வேறு பொருட்கள் என வழங்கி வருகிறார் . எலினார் க்வோக் லா க்வாய் சுன் சா சா இன்டர்நேஷனல் ஹாங்காங் ஆசியாவின் அழகு சாதனப் பொருட்கள் நிறுவனமான சா சா நிறுவனத்தின் துணை நிறுவனர் சுன்தான் . இவர் தற்போது துணைத்தலைவராக நிறுவனத்தில் உள்ளார் . 9 மில்லியன் டாலர்களை பல்வேறு அறப்பணிகளுக்கு வழங்கியுள்ளார் . 19 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த போ லியுங் குக் என்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிறுவனத்திற்கு நிதியுதவியை அளித்துள்ளார் . கடந்த ஆண்டு இயற்கை பாதுகா

நகரை தனது இதயம் போல பாதுகாக்கும் சிட்டி ஹன்டர் குழு! சிட்டி ஹன்டர் அனிமேஷன் தொடர்

படம்
      சிட்டி ஹன்டர்     சிட்டி ஹன்டர் written and illustrated by Tsukasa Hojo.   Directed by Kenji Kodama Studio Sunrise Licensed by NA Discotek Media Original network Yomiuri TV   ஜப்பானில் அதிநவீன நாகரிக நகரம். அங்கு எக்ஸ்ஒய்இசட் என்று ஒரு அமைப்பு. இந்த அமைப்புக்கு காவல்துறை சார்ந்த பெண் மூலமாகவும் பல்வேறு வழக்குகள் வருவது உண்டு. இவை எல்லாம் வழக்குகளாக பதிவு செய்யமுடியாத சிக்கல்களைக் கொண்டவை. அவற்றையெல்லாம் பட்டி டிங்கரிங் பார்த்து ஆட்களின் தாடையைப் பெயர்த்து முதுகுத்தோலை உரித்து பிரைவேட்டாக நீதியை நிலைநாட்டுபவன் ரியோ. அவன்தான் அந்த அமைப்பின் தூண். அவனுக்கு உதவியாக அவனை உயிருக்குயிராக காதலிக்கும் சுத்தியல் காதலி கோமாரா இருக்கிறாள். இவர்களின் அசைன்மென்டுகளை கவனித்து கொடுப்பது கேட்ஸ் ஐயிலுள்ள இருவர். இந்த நால்வரும் நகரில் ஆபத்தான தீவிரவாத தாக்குதல்கள் ஏற்படாதவண்ணம் காத்து வருகின்றனர். அப்போது அங்கு பல்வேறு தொழில்களை செய்யும் கெஞ்சி என்பவன் வருகிறான். அவன் கோமாராவின் பள்ளித்தோழன். அவன் தகுதிக்கு கீழே உள்ள கோமாராவை காதலிக்கிறான். அது எதற்கு என்பதுதான் கதை. ஜப்பானிய அனிமேவைப் பொறுத்தவ

திருடவே முடியாத டிசைன் இது!

படம்
        cc          திருடவே முடியாத டிசைன் இது ! உலகளவில் பென்சில் , பிஸ்கெட் டிசைன் , பைக் , கார் என பல்வேறு பொருட்களின் டிசைன்களை எளிதாக பலரும் திருடிவிடுவது எப்போதும் பிரச்னையாகவே இருக்கிறது . இதனால் பன்னாட்டு நிறுவனங்களின் தங்களின் நிறுவனப் பொருட்களைப் போல யாராவது டிசைன் செய்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொருட்களின் மீதே அச்சிட்டிருப்பார்கள் . போலியான பொருட்கள் அந்தளவு வேகமாக சந்தையில் பரவி வருகின்றன . இதனால்தான் தற்போது யாரும் திருடவே முடியாத காப்பி செய்ய முடியாத வடிவமைப்பை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் . ஜப்பானைச் சேர்ந்த ட்ஸூபா பல்கலைக்கழகத்தைச் சேர்நத ஆராய்ச்சியாளர்கள் இந்த புதுமையான பேட்டர்னை உருவாக்கியுள்ளனர் . ஓவியங்களில் மிக நுட்பமான முறையில் பதிக்கப்படும் மைக்ரோபேட்டர்ன்களைக் கண்டுபிடிபபது கடினம் . இதன்மூலம் அசல் , நகல் எதுவென எளிதாக கண்டுபிடித்துவிட முடியும் . மிக சிக்கலான நிறங்களைக் கொண்டுள்ள பேடடர்ன் என்பதால் இதனை எளிதில் யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று உறுதியாக பேசுகிறார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் யோஹெய் யமமோட்டோ .

ஜப்பானை உருக்குலைக்கும் ஹிக்கிகோமேரி!

படம்
பிபிசி  ஜப்பானில் தொண்ணூறுகளில் புழங்கி வந்த பழக்கம் ஹிக்கிகோமேரி. இந்தப்பழக்கம் தற்போது அனைத்து நகரங்களிலும் பரவி வருகிறது. ஹிக்கிகோமேரிக்கு அர்த்தம் - உள்ளுக்குள் இழுத்துக்கொள்வது. அதாவது, இந்த பழக்கத்திற்கு உள்ளான இளைஞர்கள் தங்கள் வீடுகளை விட்டு எங்கும் செல்லமாட்டார்கள். காரணம் சமூகத்திற்கு தன் தேவை என்ன என்பது போன்ற எண்ணங்கள் இவர்களுக்கு ஏற்படுவதுதான். இவர்களுக்கு பெற்றோர்கள் ஆதரவு இருப்பதால், இக்காலங்களில் வேலைக்கு போகாவிட்டாலும் சமாளித்து விடுகிறார்கள். இந்நிலை சிலருக்கு ஆறுமாதங்களுக்கு நீடிக்கும். அல்லது ஆண்டுகளுக்கு நீளும் வாய்ப்பும் உள்ளது. இது ஜப்பானில் இருந்து உருவானது என்று கூறப்பட்டாலும், வீடுகளை விட்டு வெளியேறாமல் சமூகத்திலிருந்து விலகி இருக்கும் பழக்கம் பிரான்ஸ்,துருக்கி போன்ற நாடுகளிலும் உருவாகி வருகிறது. இதுபற்றி ஆலன் டியோ என்ற ஆராய்ச்சியாளர் பத்தாண்டுகளாக ஆராய்ந்து வருகிறார். இதில் ஆராய்ச்சி செய்யத் தடையாக இருப்பது இளைஞர்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பதுதான். அவர்கள்தான் சமூகத்திலிருந்து முழுக்க விலகி இருக்கிறார்களே? இப்பாதிப்பிற்கு காரணம் என்ன?

கர்ப்பிணியை தாக்கி குழந்தையை வெளியே எடுத்த ஜப்பான் சைக்கோ!

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் யோஷிரா கொடைரோ சுருக்கம் ஜப்பானைச் சேர்ந்த ராணுவ வீரர். சீனா - ஜப்பான் போர் நடைபெற்றபோது அதில் பங்கேற்று பல்வேறு கொடூர கொலைகளைச் செய்தார். பத்துக்கும் மேற்பட்ட பெண்களை கொடூரமாக கொன்றார். 1928ஆம் ஆண்டு சீனாவின் ஜினன் எனுமிடத்தை ஜப்பான் ராணுவம் கைப்பற்றியது. இப்போரில் பல்வேறு கொலைகள், வல்லுறவுகள் நடைபெற்றன. சீனாவில் நடைபெற்ற கொடுமைகளை உலகிற்கு சொன்ன வீர ர்களில் யோஷிராவும் ஒருவர். மே, 1945 முதல் ஆகஸ்ட் 1946 வரையில் பத்து பெண்களை கொடூரமாக கொன்றார். இறந்த பெண்ணுடன் பாலுறவு வைக்கு முயன்றபோது காவல்துறையில் பிடிபட்டார். 1946ஆம் ஆண்டில் ஆக. 20 அன்று கைதானவர், அடுத்த ஆண்டு ஜூனில் தன் கொலைகளை ஒப்புக்கொண்டார். 1949 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இறக்கும்போதும் பெரிதாக யோஷிரோ கவலைப்படவில்லை. அமைதியாக சிகரெட் ஒன்றைப் பிடித்துவிட்டு இறந்தார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து டோக்கியோ இயர் ஜீரோ என்ற படம் 2007ஆம் ஆண்டு தயாரானது. 1905இல் ஜப்பானில் பிறந்த யோஷிரோ, பள்ளியில் சாகச வீரன். தினசரி வகுப்பில் கிடைக்கும் சோனிப்பயல்களை அடித்

சூரியன் உதயமாகும் நாட்டின் கதை! - ஜப்பான்!

படம்
ஜப்பான் எல்எல்வி மூர்த்தி கிழக்கு ஜப்பான் இன்று எலக்ட்ரானிக் சந்தையில் காணாமல் போய்விட்ட நிறுவனம். காரணம், தொலைநோக்கான தலைவர்கள், சிந்தனைகள் எல்லாம் குறைந்துவிட்டதுதான். ஆனால் எரிமலைகள் வெடிப்பு, அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, அணுகுண்டு வெடிப்பு, புகுஷிமா அணுஉலை கசிவு என அத்தனையும் தாங்கி வளரும் வல்லரசு நாடு. சிறிய தீவு நாடு எப்படி, தொழில், கல்வி, இலக்கியம், அறிவியல் என அனைத்திலும் முன்னேறியது என்று அறிபவர்களுக்கான நூல் இது. மூர்த்தி பிரமாதமாக ஏராளமான நூல்களைப் படித்து ஜப்பான் என்ற சிறிய நூலை எழுதியுள்ளார். 139 பக்கங்கள்தான். ஜப்பான் எப்படி போர்களால் சிரமப்பட்டு முன்னேறியது, மெய்ஜி மன்னரின் காலத்தில் பல்வேறு கொள்கைகளைத் தீட்டி முன்னேறியது. வர்ணாசிரம முறைகளால் சமூக முன்னேற்றம் எப்படி தடைபட்டது என்பதை ஆசிரியர் சிறப்பாக விளக்கியுள்ளார். ஜப்பான் இன்று சந்திக்கும் பொருளாதாரப் பிரச்னைகளை, முதியோர்கள் சதவீதம் அதிகமாவது, கண்டுபிடிப்புகளில் தேக்கம் ஆகியவற்றை விளக்கமாக ஆசிரியர் எழுதியுள்ளார். அதேசமயம் மோசமான ஆட்சியாளர் அரசு சேவைகளைப் பெற லஞ்சத்தை ஆயுதமாக்கும்போது ஏற்படும சீர

மூன்று நாட்கள் வீக் எண்ட் - ஜப்பான் மைக்ரோசாப்ட் சோதனை!

படம்
giphy.com பத்திரிகைகளுக்கு எப்போதுமே லீவு கிடையாது. லீவு விட்டால் செய்தி எப்படி கிடைக்கும் என்பார்கள். ஆனால் புரடக்டிவிட்டி என்று பார்த்து, ஐடியாக்களை தேடினால் மணிக்கணக்கில் நீளும் மீட்டிங்கில் எல்லாரும் தேவாங்கு போல உட்கார்ந்திருப்பார்கள். அடுத்தடுத்த ஐடியா என கேட்கும்போது, முதலில் பேசியவர் போனில் சமூகவலைதளத்தில் உறைந்துவிடுவார். இப்படியே ஆபீஸ் மீட்டிங் அத்தனை கஷ்டங்களையும் சொல்லிவிடும். இதற்கு ஒரே பதில்தான். லீவு வேண்டும். மைக்ரோசாப்ட் - ஜப்பான் இதற்காகவே 2,300 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் வேலை சொல்லி, பிற பஞ்சாயத்துகளை ஆப் மூலம் செய்தி பரிமாறி செய்தனர். என்ன ஆச்சரியம் ஊழியர்களின் பணித்திறன் முன்பை விட 40 சதவீதம் மேம்பட்டிருந்தது. காரணம் மூன்று நாட்கள் வீக் எண்டாக கம்பெனி கொடுத்ததுதான். வொர்க் லைஃப் சாய்ஸ் சேலஞ்ச் என்பதுதான் மைக்ரோசாஃப்ட் இதற்கு சூட்டிய பெயர். தனிநபர்களாக செய்த விற்பனை அளவில் இதனை கண்டறிந்துள்ளனர். 92 சதவீத பணியாளர்கள் நான்குநாட்கள்தான் வேலை என்பதற்கு மகிழ்ந்தனர். பிரிண்ட் எடுக்கும் செலவு 59 சதவீதம் குறைந்தது. மின் செலவு 23 சதவீதம்

உலகிலேயே அதிக விலைமதிப்பு கொண்ட நாணயம்!

படம்
டாப் 5 கேள்விகள்  மிஸ்டர் ரோனி @ ஏன்?எதற்கு? எப்படி? காய்கறிகளை பழங்களை அப்படியே பச்சையாக சாப்பிடுவது நல்லதா? பண்ணைக் காய்கறிகள் என்பதன் அர்த்தம், அதில் மண் ஒட்டியிருக்க சாப்பிடுவது அல்ல. அம்முறையில் சில சத்துகள் உண்டுதான். ஆனால் சத்துகள் உடலால் செரிக்கப்பட அவை சமைக்கப்படுவது அவசியம். மேலும் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் நேரடியாக சாப்பிட்டால் உடலைத் தாக்கும் அபாயம் உள்ளது. மெட்ரிக் அளவீட்டை ஏற்காத நாடுகளும் உண்டா? ஏன் இல்லாமல்? அமெரிக்கா, மியான்மர், லைபீரியா ஆகிய நாடுகள் உலக மெட்ரிக் அளவீட்டை ஏற்கவில்லை. அமல்படுத்தவில்லை. ஜப்பான் மன்னருக்கு பெரும் அதிகாரம் உண்டா? இரண்டாம் உலகப்போர் தோல்வி வரை இருந்தது. அதற்குப் பிறகு மன்னர் என்பது மரியாதைக்குரிய அடையாளமாக மாறி விட்டது. பெரிய அதிகாரங்கள் ஏதுமில்லை. செவ்விந்தியர்கள் கத்துவது போல படங்களில் நாம் கேட்கும் ஒலி உண்மையானதா? சுத்த டுபாக்கூர். செரோக்கி மற்றும் அபாசே ஆகிய பழங்குடிகள் தமக்குள் போர் நேரும்போது சிலவகை ஒலிகளை தகவல் தொடர்புக்காக எழுப்புவார்கள். ஆனால் அது படத்தில் காட்டியுள்ளது போல் அல்ல. படத்தில் ஒரே மாதிரிய

நூடுல்ஸின் கதை! - உலகம் முழுக்க சாப்பிடப்படும் மலிவு விலை உணவு

படம்
தெரிஞ்சுக்கோ! நூடுல்ஸ் கதை! ஜப்பானில் போருக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டு இன்ஸ்டன் நூடுல்ஸ் அறிமுகமானது. முதலில் அதனை காஸ்ட்லி ஐட்டமாகவே மக்கள் பார்த்தனர். இன்று மிக மலிவான உணவாக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அளவுக்கு நூடுல்ஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது.  உலகம் முழுவதும் ராமன் நூடுல்ஸ், பெருமளவு விற்கப்படுகிறது. பிளாட்பார்ம் உணவு என கிண்டலாக கூறப்படுகிறது. ஆனால், இருபதே நிமிடத்தில் தயாரித்து பசியாற்றும்  உணவாக உலகெங்கும் சாதனை படைத்துள்ள உணவு இது. சாதாரண ராமன் நூடுல்ஸ் பாக்கெட்டில் உள்ள சோடியத்தின் அளவு 1820 மில்லி கிராம். அமெரிக்காவின் எஃப்டிஏ பரிந்துரைத்துள்ள சோடியத்தின் அளவு 2300 மில்லி கிராம். அமெரிக்காவின் நூடுல்ஸ் மார்க்கெட் மதிப்பு 1.7 பில்லியன் ஆகும். தொண்ணூறுகளில் பரிமாறப்பட்ட இன்ஸ்டன்ட் நூடுல்ஸின் அளவு - 100 பில்லியன். நூடுல்ஸ் மியூசியத்திலுள்ள நூடுல்ஸ் வேறுபட்ட வகைகள் - 5,460 தோராயமான நூடுல்ஸ் பாக்கெட் ஒன்றின் விலை 30 சென்ட். டோக்கியோவிலுள்ள நூடுல்ஸ் உணவகங்களின் எண்ணிக்கை 5 ஆயிரம். ஒரு பாக்கெட்டிலுள்ள நூடுல்ஸின் தோராய நீளம் 51 மீட்டர். ஜார்ஜியாவ

பெண் குழந்தைகளின் உருவாக்கத்தைத் தவிர்க்கும் ஜப்பான் ஆராய்ச்சி!

படம்
பிறக்கும் குழந்தைகளை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்! செய்தி: மரபணுக்களை மருத்துவர்கள் கணித்து, ஆண், பெண் குழந்தைகளைத் தீர்மானிக்கும் திறனைப் பெற்றுள்ளனர்.இது சமூகத்தில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஜப்பானில் உள்ள ஹிரோசிமா பல்கலைக்கழகத்தில் மசயுகி சிமடா  தலைமையிலான ஆராய்ச்சிக்குழுவினரின் ஆராய்ச்சி இதுவே. ஆணின் விந்தணுக்களில் எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம்கள் உண்டு. இவற்றில் எக்ஸ் குரோமோசோம்கள் கருப்பைக்குள் செல்வதைத் தாமதப்படுத்தினால் பெண் குழந்தைகளின் பிறப்பைத் தடுக்கலாம். இதன் விளைவாக, ஆண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த ஆராய்ச்சிதான் மருத்துவ வட்டாரங்களில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. விந்தணுக்களில் சராசரியாக ஐநூறுக்கும் மேற்பட்ட மரபணுக்கள் உள்ளன. விந்தணு செல்களை கருப்பைக்குள் நடத்திச்செல்வது இதன் அடித்தளத்திலுள்ள பதினெட்டு புரதங்கள் ஆகும். இவற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, குழந்தைகளின் பிறப்பை மாற்றலாம் என்பது புதிய கண்டுபிடிப்பு. “இந்த கண்டுபிடிப்பு  சமூகத்தின் தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதனை ஒருவர் தன

பிட்ஸ் - குத்துச்சண்டையில் சாதித்த ஆபிரகாம் லிங்கன்!

படம்
பவேரியா நாட்டைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்கர்கள் 1740 ஆம் ஆண்டு ரகசியக் குழு ஒன்றைத் தொடங்கினர். இவர்கள் குறிப்பிட்ட அறைக்குள் வருவதற்கு கதவைச் சுரண்டி சிக்னல் கொடுப்பது வழக்கம்.  ஆபிரகாம் லிங்கன் அரசியல்வாதியாக புகழ்பெறுவதற்கு முன்னர் குத்துச்சண்டை வீரராக புகழ்பெற்றிருந்தார். 300 போட்டிகளில் பங்கேற்று ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியைச் சந்தித்திருந்தார்.  இருபதாம் நூற்றாண்டில் மங்கோலியாவில் விநோத தண்டனை வழக்கிலிருந்தது. குற்றவாளிகளை மரப்பெட்டியில் வைத்து பூட்டிவிடுவார்கள். இதனால் பலர், பெட்டியிலிருந்து வெளியே வர முடியாமல் பட்டினி கிடந்து இறப்பது சாதாரண நிகழ்ச்சி.   1923 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள பெல்மாண்ட் பார்க்கில் குதிரைப்பந்தயம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற வீரர் ஃபிராங்க் ஹாயெஸ், போட்டியின் பாதியில் மாரடைப்பால் இறந்தார். ஆனால் அவரது குதிரை உயிரற்ற உடலைச சுமந்து சென்று வெற்றிக்கோட்டை தொட்டதுதான் பிரமிக்க வைக்கும்  செய்தி.  1945 ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் ராணுவ டாங்கிகளில் தேநீர் தயாரிக்கும் வசதி உருவாக்கப்பட்டது.  அடால்ஃப் ஹிட்லர், முசோலி

அகிரா நிஷிகுச்சி - ஜப்பான் காவல்துறையை மாற்றிய கொலைகாரர்

படம்
அசுரகுலம் அகிரா நிஷிகுச்சி 1925 ஆம் ஆண்டு பிறந்த அகிரா, ஜப்பான் நாட்டின் காவல்துறை சீர்த்திருத்தங்களை செய்ய உதவிய சீரியல் கொலைகாரர். இத்தனைக்கும எத்தனை ஆண்டுகள் க்ரைம் வரலாறு இவருக்குண்டு? இரண்டே ஆண்டுகள்தான். 1963 - 1964 வரையிலான இரண்டு ஆண்டுகளில் ஜப்பான் மக்களுக்கு பயம் என்றால் என்பதை மனதில் உணரவைத்த ஆளுமை சார்தான். குற்றத்தடம் லண்டனைச் சேர்ந்த ஜான் ஜார்ஜ் ஹைக் எனும் குற்றவாளியைப் பின்பற்றிய பாணி அகிராவுடையது. பெரிய குற்றவாளி என சொல்ல முடியாது. சின்ன வழிப்பறி, கொள்ளைகள் என்று தொடங்கி கொலைவரை சென்றுவிட்டார் அகிரா. சில நூறு டாலர்களுக்காக ஐந்து நபர்களை கொன்று விட்டார் என அறிந்தபோது தேசமே திகிலில் உறைந்துபோனது. ஜப்பான் நாட்டின் சிறுபான்மை இனத்தில் பிறந்தவர்தான் அகிரா. 1963 ஆம் ஆண்டு கொலை செய்வதற்கு முன்பு இவரின் குற்றங்கள் பெரியளவு கண்டுகொள்ளப்படவில்லை. அகிரா கத்தியால் குத்தி செய்த இரு கொலைகளிலும் கூட சந்தேகப்படுவதற்கு வாய்ப்பு இருந்ததே ஒழிய அவரை போலீஸ் கூட சந்தேகப்படவில்லை. சாரின் பவ்யம், பாவனையான முகம் அப்படி தோற்றத்தைக் கொடுத்தது. இரண்டு ட்ரக் டிரைவர்களை 750 டாலர்க