இடுகைகள்

பாஜக லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி நிறைவு - ஆஹா, அடச்சே விஷயங்கள் இதுதான்!

படம்
  மு.க. ஸ்டாலின் - ஓராண்டு ஆட்சி - எப்படி ஆஹா 68, 375 கோடி ரூபாய் முதலீட்டைப் பெறுவதற்காக 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட துறை சார்ந்து படிப்பதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு உறுதியாகியுள்ளது.  2500 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகளை அரசு மீட்டுள்ளது.  பெண்களுக்கு இலவச பயணப் பேருந்து  திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம், செயல்பாடு பால் விலையைக் குறைத்தது அடச்சே!  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.  மாநில அரசின் பல்வேறு தீர்மானங்கள் அனுமதியளிக்கப்படாமல் ராஜ் பவனில் நிலுவையில் உள்ளது.  சொத்து வரி உயர்வு அரசு செயல்பாட்டில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் அதிகம் ஈடுபடுவது... மின்வெட்டு அதிகரித்து வருவது.. திமுக அரசு பத்தாண்டுகள் தமிழகத்தை ஆள வேண்டும் என பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து உழைத்து வருகிறது. முக ஸ்டாலின், முதல்முறையாக முதல்வர் அரியணை ஏறியிருக்கிறார். இதற்காக அவர் தொடக்கத்தில் இருந்து கடுமையாக உழைத்தாலும் அவரின் தந்தை கருணாநிதியின் ஒளிக்கு கீழே இருந்ததால் நிழலில் ஸ்டாலினின்

பார்லே ஜியும் இந்தியாவின் உணவு பாதுகாப்பு தடுமாற்றமும்!

படம்
  1929 ஆம் ஆண்டு பார்லே பிஸ்கெட் நிறுவனத்தை மோகன்லால் தயாள் சௌகான் தொடங்கினார். அவர் வைல் பார்லே எனுமிடத்தில் வாழ்ந்தார். அந்த இடத்தின் பெயரையே நிறுவனத்திற்கு சூட்டினார். அன்று பிரிட்டிஷ் நிறுவனங்கள்தான் பிஸ்கெட் துறையில் ஆதிக்கம் செலுத்தின. அதற்கு போட்டியாக தொடங்கிய சுதேசி நிறுவனம்தான் பார்லே. முதல் பிஸ்கெட் பிராண்ட் பார்லே ஜி.   இன்று பார்லே  நிறுவனம் பல்வேறு உணவு சார்ந்த பொருட்களை தயாரித்து வருகிறது. இதிலும் அவர்களது முத்திரை பதித்த ஒரு பொருள் என்றால் அது குளுக்கோஸ் பிஸ்கெட்டான பார்லே ஜி தான். விலை குறைவு. இன்றுவரையுமே கையில் காசு இல்லாத பலரும் பார்லே ஜியை வாங்கி டீயில் தொட்டு சாப்பிட்டு பசியாற்றிக் கொள்வது பார்க்க கூடிய ஒன்று. பார்லே ஜி மகத்தான ருசி கொண்ட பிஸ்கெட் கிடையாது. ஆனால் குறைந்த விலைக்கு கிடைக்கும் ஒரு பிஸ்கெட் அதுதான்.  இன்றைய காலத்தில் பார்லே கூட ப்ரீமியம் வகையில் தனது பிஸ்கெட் வரிசைகளை உருவாக்கிவிட்டது. ஆனாலும் பார்லே ஜி பிஸ்கெட் உற்பத்தியை நிறுத்தவில்லை. இன்றும் அதனை தொடர்ச்சியாக விற்றுவருகிறது. பெருந்தொற்று காலத்தில் பார்லே நிறுவனம், பார்லே ஜி பிஸ்கெட்டுகளை இலவசமாக கொ

இந்தியாவில் பரவும் வெறுப்பெனும் நச்சு! - நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்

படம்
  வெறுப்பு மதவாத பேச்சு வாக்குவங்கி அரசியலுக்காக வெறுப்பு அரசியல் மக்களின் மனதில் செலுத்தப்பட்டு வருகிறது. மதவாத வெறுப்பு இந்தியாவை இதுவரை யாரும் பார்த்திராத முறையில் மாற்றி வருகிறது.  என்னை இந்தியா டுடே ஆசிரியர், பிரிவினை அந்தளவு ஆழமாக இருக்கிறதா என்று கேட்டார். மதவாத வன்முறை, படுகொலைகள், பசு பாதுகாப்பு தாக்குதல்கள் ஆகியவற்றை நான் உடனே நினைவுபடுத்தவில்லை. இப்போது கர்நாடகத்தில் நடைபெறும் ஹிஜாப், ஒலிப்பெருக்கி பிரார்த்தனைகள், ஹலால் முறை இறைச்சி ஆகியவற்றையும் கூட நான் நினைக்கவில்லை. பிரிவினை பாதிப்பை நேரடியாக எனது அனுபவத்தில் உணர்ந்த மூன்று சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.  சசிதரூர் 1 ஜெய்ப்பூரில் நான் தங்கநிற முடிக்கற்றை கொண்ட லெபனான் நாட்டுப் பெண்ணை சந்தித்தேன். அவர் இந்தியாவுக்கு கைவினைப் பொருட்கள் வணிகத்திற்காக 15  ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கிறார். வெளிநாட்டினராக இருந்தாலும் அவரை மக்கள் வரவேற்று பேசுவது வழக்கம். அவரது பெயர் நூர், இதற்கு வெளிச்சம் என்று பொருள். என்ன அழகான பெயர் என்று கூறி பேசியிருக்கின்றனர். ஆனால் இப்போது நூர் என்றால், நீங்கள் முஸ்லீமா என்று முதல் உரையாடலிலேயே வார்த்தையிலே

அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மையை பேசிய துணிச்சலான எடிட்டர்! -லக்னோபாய் - வினோத் மேத்தா

படம்
  லக்னோ பாய்  வினோத் மேத்தா பெங்குவின்  அவுட்லுக் வார இதழை தொடங்கியவர். அதன் ஆசிரியராக 1995 முதல் 2012 வரை செயல்பட்டவர். வினோத் மேத்தா வின் வாழ்க்கையை சொல்லும் நூல்தான் லக்னோ பாய்.  பாகிஸ்தானில் பிறந்து பிறகு பிழைப்பு தேடி, லக்னோ நகருக்கு வந்த குடும்பம் வினோத்துடையது. அங்கு அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். இதுவே அவரது பிற்கால வாழ்க்கையை வடிவமைக்கிறது. கலைப்படிப்பை படித்து முடித்தவர் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இந்த நிலையில் அவரது நண்பர் ஆசாத்,  லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் அங்கு வேலை இருக்கிறது என வினோத்திடம் சொல்லுகிறார். வேலைபார்த்துக்கொண்டே படிப்பதுதான் பிளான். ஆனால் வினோத் அங்கே போய் பார்க்கும்போது நிலை வேறுமாதிரி இருக்கிறது. எட்டு ஆண்டுகள் சிற்சில வேலைகளை செய்து சமாளித்துக்கொண்டு அங்குள்ள அரசியல் நிலைகளை புரிந்துகொள்கிறார். கூடவே, ஏராளமான ஆங்கில நூல்களையும் படிக்கிறார். இதுவே பின்னாளில் அவர் பல்வேறு பத்திரிகைகளை நடத்தவும், புதிய பத்திரிகைகளை தொடங்கவும் மூல காரணமாக அமைந்தது.  ஜார்ஜ் ஆர்வெல்லின் நூல்களை விரும்பி படிப்பவர் என்பதால், இந்த சுயசரி

இந்திய அரசின் புதிய தனித்துவமான ஸ்மார்ட்போன் ஓஎஸ்!

படம்
  ஸ்மார்ட்போன்களுக்கான புதிய ஓஎஸ் - எப்படி இருக்கும்? மத்திய அரசு இந்தியாவிற்கென தனித்துவ  ஸ்மார்ட்போன் இயக்க முறைமையைத் (OS) தயாரிக்க உள்ளது. இந்த இயக்க முறைமை, கூகுளின் ஆண்ட்ராய்ட், ஆப்பிளின் ஐஓஎஸ் ஆகிய இயக்கமுறைமைகளுக்கு மாற்றாக இருக்கும். இதுபற்றிய செய்தியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.  இந்தியாவின் பிராண்ட்! தற்போது இந்தியச் சந்தையில் பன்னாட்டு நிறுவனமான கூகுளும், ஆப்பிளும்  ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மென்பொருள் மட்டுமன்றி, வன்பொருள் சந்தையையும் கட்டுப்படுத்தி வருகின்றன. இதற்கு நிகரான திறன் கொண்ட ஓஎஸ்ஸை தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தகவல்தொடர்பு அமைச்சகம் வல்லுநர்களிடம் கருத்து கேட்டுள்ளது.   புதிய இயக்கமுறைமையை இந்தியா உருவாக்கினால், அது இந்தியாவின் வணிக பிராண்டாக மாறும் என அரசு எதிர்பார்க்கிறது. மக்களுக்கு இரண்டு இயக்கமுறைமைகளைக் கடந்து மூன்றாவது வாய்ப்பாகவும் இது அமையும்.  ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களின் ஆதரவு மற்றும் உதவியால் ஸ்மார்ட்போன் இயக்கமுறைமையை உருவாக்க மத்திய அரசு தி

கொல்லப்பட்ட முஸ்லீம்கள், சீக்கியர்கள், வல்லுறவு செய்யப்பட்ட காஷ்மீர் பெண்கள் பற்றியும் பேசலாமே? - பரூக் அப்துல்லா, காஷ்மீர் முன்னாள் முதல்வர்

படம்
  பரூக் அப்துல்லா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா முன்னாள் முதல் அமைச்சர், காஷ்மீர் விவேக் அக்னிஹோத்ரி என்ற இயக்குநர் காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற இந்தி படத்தை எடுத்துள்ளார். படம் சின்ன பட்ஜெட் படம்தான். ஆனால் எடுத்துக்கொண்ட கதை தீவிரமானது. காஷ்மீரில் இருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் எப்படி  விரட்டப்பட்டனர் என்பதை படத்தில் காட்டியிருந்தனர். குறிப்பாக, முதல்வராக இருந்த பரூக் அப்துல்லாவையும் மோசமாக சித்திரித்திருந்தனர். இதைப்பற்றி அவரிடம் பேசினோம்.  தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பற்றி என நினைக்கிறீர்கள்? அது குறிப்பிட்ட அரசியல் கருத்தை முன்வைக்கும் படம்.  1990இல் நடந்த பிரச்னையைப் படம் பேசுகிறது. அதில் மாநிலத்தில் இருந்த அனைத்து மக்களுமே பாதிக்கப்பட்டனர். மத தூய்மை  சார்ந்த செயல்பட்டவர்களை இது தொடர்பாக தண்டிக்க வேண்டும் என்பது உண்மை. அது மோசமான நிலைமை தான். இதற்காக, முஸ்லீம் மக்களை ஒட்டுமொத்தமாக மோசம் என்று கூற முடியுமா? இந்தியாவில் வாழும் அனைத்து மக்களையும் நாம் இதற்காக தண்டிப்பது தவறானது. இந்த படம் ஏற்படுத்தும் வெறுப்புவாதம், பிரசாரம் இருபது சதவீத மக்களை 80 சதவீத மக்கள் எதிர்ப்பது போன

காங்கிரஸின் ஆதார் திட்டத்தை பாஜக அரசு சிறப்பாக செயல்படுத்திவருகிறது! - நந்தன் நீல்கேனி, இன்போசிஸ்

படம்
  நந்தன் நீல்கேனி படம் - மின்ட் நந்தன் நீல்கேனி இன்போஸிஸ் துணை நிறுவனர் மில்லினியத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட பழக்கம்? டிவி பார்ப்பதை புதிதாக தொடங்கியிருக்கிறேன். இது மில்லினிய பழக்க வழக்கமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.  டிவியில் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி என்ன? இன்வெஸ்டிகேட்டிங் அன்னா என்ற நிகழ்ச்சியை இப்போது பார்த்து வருகிறேன்.  நீங்கள் மதிப்பு அளிக்கும் வணிக நிறுவன தலைவர் யார்? உலகளவில் மைக்ரோசாஃப்டின் பில்கேட்ஸ். இந்தியாவில் நாராயண மூர்த்தி, ரத்தன் டாடா, அசிம் பிரேம்ஜி ஆகியோரைக் குறிப்பிடலாம். இப்படி நட்பு பட்டியலில் நிறையப் பேர் உள்ளனர். அண்மையில் காலமான ராகுல் பஜாஜ் கூட என்னுடைய நண்பர்தான்.  உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சாதித்ததாக நினைப்பது? ஆதார் கார்ட் திட்டத்தை உருவாக்கியதுதான். இன்றும் கூட அந்த அடையாள அட்டை திட்டம் சிறப்பாக வேலை செய்கிறது. நான் இப்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு வந்துவிட்டாலும் கூட ஆதாருக்கான நான் உழைத்த உழைப்பை மறக்கவே முடியாது.  கூகுள், பேஸ்புக் என இரண்டில் எது குறைந்த தீமை கொண்டது? இரண்டுமே சிறந்த நிறுவனங்கள்தான். கூகுளின் பல்வேறு சேவைகள் உபயோகமானவை

முகத்தை, தலையை மறைப்பதில் இத்தனை வகைகளா?

படம்
  கர்நாடக மாநிலத்தில் முஸ்லீம் பெண்களை சமூக ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளை மதவாத கும்பல்கள் ஒன்றிய அரசின் ஆசியுடன் செய்து வருகின்றன. இதுநாள் வரை கல்விநிலையங்களில் சிறுபான்மையினர் எப்படி உடை அணிந்து வரவேண்டும் என்று கூறவில்லை. ஆனால் இப்போது, உடை ஒழுக்கம் என்பதை பள்ளி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். பெண்களின் கல்வி கெட்டாலும் பரவாயில்லை ஆட்சி அதிகாரம்தான் முக்கியம் என லோட்டஸ் குழுவினர் உறுதியாக நம்பி வன்முறை, கலவரம் ஆகியவற்றை ஏற்படுத்தி வருகின்றனர்.  இப்போது நாம் பெண்கள் அணியும் பல்வேறு உடல், முகத்தை மறைக்கும் வகைகளைப் பார்ப்போம்.  ஹிஜாப் நீளமான துணியை எடுத்து கழுத்து, தலையைச் சுற்றியிருப்பார்கள். இது இந்து மதத்தில் பெண்கள் சேலை தலைப்பை எடுத்து தலைமீது போட்டுக்கொள்வார்களே அதுபோன்றதுதான். இதனை இந்து மதத்தில் கூன்காட் என்று அழைக்கிறார்கள்.  நிகாப் இதில் முகத்தில் கண்கள் மட்டும்தான் அடையாளம் தெரியும். பிற பகுதிகளை கருப்பு உடையால் மறைத்து இருப்பார்கள்.  பர்கா இது முகம், உடல் என முழுக்க உடையால் மூடியிருப்பார்கள். கண்கள் உள்ள பகுதியில் மட்டும் வெளியே பார்க்கும்படி உடையில் இழைகளில் நெகிழ்வுத்தன

2021 இல் இப்படி சொன்னார்கள்! - அரசியல், கிரிக்கெட், தொழில், சமூக வலைத்தளம், மருத்துவம்

படம்
  பிப்ரவரி 1  இப்போது விராட் அணியின் தலைவராக இருக்கிறார். நான் துணைக்கேப்டன். நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் பின்புற இருக்கையில் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறேன். ரகானே இந்திய கிரிக்கெட் வீரர் மார்ச் 8 இருபது இந்திய நிறுவனங்கள் மட்டுமே நூறுகோடிக்கும் மேல் மதிப்பு கொண்டவையாக உள்ளன. இவர்கள் எப்படி பன்னாட்டு நிறுவனங்களை எதிர்கொண்டு போராட முடியும்? அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்? விஜய் சேகர் சர்மா நிறுவனர், இயக்குநர் பேடிஎம் மார்ச் 29 அடையாள அரசியல் இங்கே எப்போதும் உள்ளது. இதில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியம். மேற்கு வங்கத்தில் தலித்துகள் பங்களிப்பு முக்கியமானது. அவர்களே இம்முறை முக்கியமானவர்கள்.  பிரசாந்த் கிஷோர் அரசியல் நிலைப்பாட்டாளர் ஏப்ரல் 5 மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மிக மிக கடினம். இதற்கான கொள்கைகளை வகுத்து கொரோனா விதிகளை மக்கள் பின்பற்றாதபோது என்ன செய்வது என திட்டம் வகுப்பது முக்கியம் ரந்தீப் குலேரிலா எய்ம்ஸ் இயக்குநர் ஏப்ரல் 26 அனைத்து கட்சிகளும் தவறு செய்பவர்கள்தான். நாங்கள் நம்பிக்கையாக உள்ளோம். தீதியின் மீதுள்ள நம

முஸ்லீம்களை முழுமையாக அரசு அமைப்பு மூலம் களையெடுத்தல்! - அசாமில் பரவும் மதவாதமும் வெறுப்பு அரசியலும்!

படம்
  அசாம் நெல்லி இனப்படுகொலை அசாமில் முஸ்லீம்களின் குடியிருப்பை செப்.23 அன்று அசாம் மாநில அரசு அகற்றியது. பலவந்தமாக செய்த இந்த நடவடிக்கையால் முஸ்லீம்களோடு வங்காள இந்துகளும் ஆயிரக்கணக்கில் வீடுகளை இழந்தனர். இங்கு கவனிக்கவேண்டியது அரசு, மேம்பாட்டுப் பணிகளுக்காக வீடுகளை இடித்து முஸ்லீம்களை நடுத்தெருவில் நிறுத்தவில்லை.  பூர்விக அசாம் மக்கள் முஸ்லீம்கள் ஆற்று ஓரத்தில் குடியிருக்கும் இடங்களில் விவசாயம் செய்வார்களாம். அதற்காக நிலங்களை அரசு அவர்களுக்கு அளிக்குமாம். இப்படி சொன்னாலும் அரசு நிலங்களை பூர்விக மக்களுக்கு அதாவது தகுதியுள்ளவர்களுக்கு அளிக்கும் வரையில் தனது கையில்தான் வைத்திருக்கும்.  அரசு 28 வயதான மைனல் ஹாக்கிக் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது காவல்துறை. இறந்து கிடக்கும் உடல் மீது புகைப்படக்கார ர் பிஜய் பனியா என்பவர் வெறியோடு குதிக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் பலரும் பார்த்திருப்பார்கள். இப்படி அரசின் ஆதரவோடு மதவாத, இனவெறியை அங்கு பரப்பி வருகின்றனர். எதற்கு? மக்களை பிரித்தால்தானே தேர்தலில் ஜெயிக்கவேண்டும். அனைத்து மக்களுக்கும் பொதுவான எதிரியை உருவாக்கவேண்டும் என்கிற நாஜி கருத்த

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு காரணம் என்ன?

படம்
  இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு அமெரிக்க வர்த்தக மையம் தாக்குதல் மட்டுமே காரணம் அல்ல. அதற்கு முன்னரே இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு இடையே முன்விரோதம் , பகை, வன்மம் என எல்லாமே உண்டு. அதனை ஊக்கப்படுத்தியது தாக்குதல் நடத்திய பத்தொன்பது தீவிரவாதிகள் என்று கூறலாம்.  கிறித்துவம், இஸ்லாம் என்ற இரு மதங்களுமே நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள். இதில் இஸ்லாமைப் பொறுத்தவரை அவர்கள் பிறரிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இதனை இலக்கியவாதிகள் கூட பயன்படுத்தி காபிர்களின் கதைகள் என எழுதுகிறார்கள். இதன் வழியாக அவர்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை.  புர்கா அணிவது, குல்லா அணிவது என தங்களை தனித்தே காட்டிக்கொள்ளும் இஸ்லாமியர்கள் அனைத்து நாடுகளிலும் இணக்கமான தன்மை கொண்டவர்களாக இல்லை. அமெரிக்காவில் இந்த வேறுபாடுகளை துல்லியமாக அடையாளம் காண்கிறார்கள். முஸ்லீம்களின் புனித நூலில் போர் என்பதை இயல்பானதாக ஏற்றுக்கொள்வதால், வன்முறையான குணம் கொண்டவர்கள் என முஸ்லீம்களை அடையாளப்படுத்த தொடங்கினர். 2010ஆம்ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அமெரிக்கர்களில் பாதிப்பேர் முஸ்

பழங்குடி மக்களிடம் உள்ள கனிம வளங்களை பற்றி மட்டுமே இந்திய அரசு கவலைப்படுகிறது! பிரகாஷ் லூயிஸ்

படம்
  பிரகாஷ் லூயிஸ்  எழுத்தாளர் நீங்கள் ஸ்டேன் சுவாமியிடம் அவரைப் பற்றி நூல் எழுதுவதாக கூறினீர்களா? இல்லை. சில சம்பவங்களால் நான் அவரைப் பற்றி நூல் எழுதுவதை கூறமுடியவில்லை. அவரின் அலைபேசி அவரிடம் இருந்து நீக்கப்பட்டுவிட்டதும் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. அவரைச்சுற்றி இருந்தவர்களிடம் பேச முயன்றாலும் அதுவும் சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆனால் முன்னாடியே சிலரிடம் இதுபற்றி பேசியிருக்கிறேன்.  நான் எழுதியுள்ள நூலில் ஸ்டேன் சுவாமி, அவரது காலகட்டம், அவரின் செயல்பாடுகள் ஆகியற்றை விளக்கியுள்ளேன்.  ஸ்டேன் சுவாமி இறந்து சில மாதங்களிலேயே அவரைப் பற்றிய நூலை வெளியிட்டு விட்டீர்கள். ஜூலை 5 இல் அவர் மறைந்தார். அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே அவரது செயல்பாடுகளைப் பற்றி தகவல் சேகரித்து எழுத முடிந்ததா? 2018ஆம் ஆண்டு பீமாகரேகான் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போதிலிருந்தே நான் நூலுக்கான தகவல்களை சேகரித்து வந்தேன். தேசிய புலனாய்வு முகமை உள்ளே வந்தபோது நான் தகவல்களை சேகரித்து ஆராய்ந்துகொண்டிருந்தேன். பிறகுதான் ஸ்டேன்சுவாமி கைதுசெய்யப்பட்டார். சட்டவிரோத செயல்களுக்காக அக்டோபர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சட்டவிரோ

வாழவே வழியில்லாதபோது இலக்கிய விருதை வைத்து என்ன செய்வது? - மனோரஞ்சன் பியாபாரி

படம்
  எழுத்தாளர் மனோரஞ்சன் பியாபாரி மனோரஞ்சன் பியாபாரி மேற்கு வங்க எழுத்தாளர் உங்கள் எழுத்து பல லட்சம் வாசகர்களை ஈர்க்கும் என நினைத்தீர்களா? உங்கள் நூல்களுக்கு விருதுகளும் கூட கிடைத்துள்ளனவே? இல்லை. நான் என்னுடைய முதல் நூலை எழுதியபோது, குறைந்தபட்சம் ரிக்சா ஓட்டுபவனும் மனிதன்தான் என்பதை மக்கள் உணர்ந்தாலே போதும் என்று நினைத்தேன். நான் எழுதிய நூல்கள் வெளியாகத் தொடங்கியபிறகு மக்கள் என்னைப் பார்த்த கோணம் மாறியதை உணர்ந்தேன். ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் என்னை சந்தித்து உரையாடினர். சிலர் தங்களுடைய பத்திரிகையில் எழுதுவதற்காக அழைத்தனர். இதுபோன்ற மரியாதை எனக்கு இப்போதுதான் கிடைக்கிறது. நான் எழுதிய புத்தகங்கள், படித்தவர்களோடு பழகுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தது.  ரிக்சா ஓட்டுபவர்களை யாரும் மனிதர்களாகவே பார்ப்பதில்லை என்று சொன்னீர்கள். நாட்டிலுள்ள ஏழை மக்கள் இப்படித்தான் நடத்தப்படுகிறார்களா? நான் என்னுடைய வாழ்க்கையில் சமையல்காரனாக, பாத்திரங்களை கழுவும் வீட்டு வேலைக்காரனாக, ரிக்சா ஓட்டுபவனாக இருந்திருக்கிறேன். இந்த வேலைகளில் நிறைய கஷ்டங்களையும் வசைகளையும் அனுபவித்திருக்கிறேன். மெல்லத்தான் இப்படி வசைகளை

மதம் சார்ந்து மக்களை புறக்கணித்தால் பொருளாதார வளர்ச்சி கிடைக்காது! ப.சிதம்பரம்

படம்
  ப.சிதம்பரம் எம்.பி. ராஜ்ய சபா காங்கிரஸ் அரசு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதார சீர்திருத்தங்களை அமல் செய்தது. இப்போது அதன் நிலை பற்றி தங்கள் கருத்து என்ன? கடந்த முப்பது ஆண்டுகளாக பொருளாதார சீர்த்திருத்தங்களால் நிறைய ஏற்ற இறக்கங்கள் நடைபெற்றுள்ளன. முக்கியமான சீர்திருத்தங்கள் வந்துள்ளன. சில மோசமான முடிவுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2004-2010 காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக ஏற்பட்டுள்ளது. 2018-2021 வரையிலான காலகட்டத்தில் வளர்ச்சி தடைபட்டுள்ளது. நான் சீர்த்திருத்தங்கள் பற்றிய கலவையான எண்ணங்களைக் கொண்டுள்ளேன். அரசு இப்போது பொருளாதார வளர்ச்சி மீது கவனம் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.  இப்போதுள்ள மத்திய அரசு தேர்தலுக்காக மக்களை பிரிப்பது, பிரிவினைவாத த்தை ஆதரிப்பது என செயல்பட்டு வருகிறது. மக்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் அரசு பொருளாதார சீர்திருத்தங்களை செய்யவேண்டாம் என நினைக்கிறார்கள். முழு நாட்டில் உள்ள மக்களுமே வறுமை சூழலில் பயத்துடன் புறக்கணிப்பட்டவர்களாக  வாழ்ந்து வருகிறார்கள்.  கடந்த முப்பது ஆண்டுகளில் வருமானம் அதிகரித்துள்ளது. அதேசமயம் குவிகிற செல்வத்தினால் பாகுப

விவசாயிகள் போராட்டமும், உள்குத்து அரசியலும்!

படம்
  விவசாயிகள் போராட்டமும், உள்குத்து அரசியலும் கடந்த சில மாதங்களாக பாஜக அரசு ஆளும் ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் வேகம் பெற்றுள்ளது. இதனை முடக்க அந்த மாநில அரசு இணையத்தை துண்டித்தது. தங்களது உரிமைகளுக்காக போராடிய மக்கள் மீது, தேச துரோக வழக்கு போடப்பட்டது. தடியடி நடத்தி விவசாயிகளை காவல்துறையினர் தாக்கினர். ஆனாலும் கூட விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ஹரியானா முதல்வர் எம்எல் கட்டார், உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோர் இதெல்லாம் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசின் சதி என ஊடகங்களில் பேட்டி தட்டி விட்டுக்கொண்டிருக்கின்றனர்.  என்னதான் பிரச்னை? ஹரியானா அரசு, ஜாட் அல்லாதவர்களின் வாக்குகளை கணக்கு செய்து போராட்டத்தை முக்க நினைக்கிறது. ஒருவகையில் இப்படி போராட்டத்தை முடக்குவதும் கூட பிரித்து ஆளும் தந்திரம்தான். பின்னாளில் இவர்கள் ஜாட் இனத்தவர், ஜாட் அல்லாதவர் என வாக்குவங்கி பிரியும் என்கிறார் அரசியல் செயல்பாட்டாளர் பிரமோத் குமார். மத்திய அரசும் தன் பங்குக்கு விவசாயிகள் போராட்டத்தை தீவிரவாத த்துடன் இணைத்து பார்த்து பேசி வருகிறது. ராம் ராம் என்று கூறுபவர்களை எப்படி நீங்கள் காலி

பாரதமாதாவின் ராஜபுத்திரனுக்கு இந்திய வரலாற்றில் இடம் கிடையாது!

படம்
  இப்படி சொன்னது காங்கிரசைச் சேர்ந்த தலைவர்கள் அல்ல. நேருவின் காலத்தில் அவரது கொள்கைகளை எதிர்த்த, ஆனால் அவரின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை கொண்ட முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜபாய். உடனே இன்றைய பிரதமர் மோடி போலத்தானே வாஜ்பாயும் கூறியிருக்கிறார் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். அவர் கூறியது பாரதமாதாவின் ராஜபுத்திரன் என்று மட்டுமே. இந்திய வரலாற்றில் இடம் கிடையாது என்று தனது செயல்கள் வழியாக கூறியிருப்பது தற்போதைய ஒன்றிய அரசு.  இந்தியா தனது 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. இதற்கான போஸ்டர்களில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமருக்கு  இடமில்லை என்பது அனைத்து இடங்களிலும் சர்ச்சையாகி வருகிறது. நேருவுக்கு பதில் ஆங்கிலேயரை ஆதரித்த, சிறையில் இருந்தபோது மன்னிப்பு கடிதம் எழுதி தன்னைக் காப்பாற்றிக்கொண்ட சங் பரிவார் தலைவர்களை போஸ்டர்களில் இடம்பெறச் செய்து வருகிறது ஒன்றிய அரசு.  யாருக்கு யார் முக்கியமோ அவர்களை பதவியில் அமர்த்தலாம். ஆனால் வரலாற்றில் அப்படியான வசதிகள் கிடையாது. சுதந்திர இந்தியாவில் முதல் பிரதமராக அமர்ந்த நேருவை பற்றி பேசும்போது அவரின் தனிப்பட்ட விஷயங்களைப் பேசி களங்கப்பட

விவாதம் நடத்தி மசோதாக்களை நடைமுறைப்படுத்தவே விரும்புகிறேன்! -ஓம் பிர்லா

படம்
ஓம் பிர்லா மக்களை சபாநாயகர் முன்னர் உங்களது பங்களிப்பால் மக்களைவில் உற்பத்தித்திறன் 100 சதவீதம் இருந்தது. ஆனால் குளிர்கால கூட்டத்தொடர் உற்பத்தித்திறன் 22 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. இதுபற்றி தங்கள் கருத்தென்ன? கடந்த ஐந்து முறையாக கூட்டத்தொடர் சிறப்பாக நடைபெற்றது. எம்பிக்கள் தங்களு டைய கடமையை சரியாக நிறைவேற்றினர். மக்களவை அதிக பிரச்னையின்றி நடைபெற்றது. சில சமயங்களில் அவை நள்ளிரவு வரை கூட நடைபெற்றது. அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றபோதுதான் பெகாசஸ் பிரச்னை வெடித்தது. இதனால் எதிர்க்கட்சிகள் இதுபற்றி விவாதிக்க முயன்றனர். இதனால் ஏற்பட்ட அமளியை சரிசெய்யவே முடியவில்லை. நான் என்னளவில் இப்பிரச்னையை சரிசெய்ய முயன்றேன்.  நாடாளுமன்றம், ஜனநாயக முறையில் நாட்டின் பிரச்னையை விவாதிக்கும் இடமாக மக்கள் கருதிவருகின்றனர். இது நேர்மறையான பிம்பத்தைக் கொண்டுள்ளது. பிற ஜனநாயக அமைப்புகளுக்கு முன்னோடியாக உள்ளது.  இப்படி மக்களவை முடக்கப்பட யார் காரணம் என நினைக்கிறீர்கள்? நான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்கு யாரை காரணம் சொல்லுவது? ஆளும் அரசு, எதிர்கட்சிகள் சில விஷயங்களில் ஒற்றுமை கொண்டால் மட்டுமே சபை நடக்கும். இதி

பேகாசஸ் எப்படி போனை உளவு பார்க்கிறது?

படம்
  ஆம்னெஸ்டி மற்றும் பிரெஞ்சு ஊடக நிறுவனமான ஃபார்பிடன் ஸ்டோரிஸ் எனும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து பேகாசஸ் என்ற உளவு பார்க்கும் மென்பொருளைப் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு முதல் இந்த மென்பொருள் மூலம் 50 ஆயிரம் போன் நம்பர்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் 300 எண்கள் இந்தியர்களுடையது. இதில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், எதிர்கட்சிக்காரர்கள் ஆகியோரும் உண்டு.  50 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் பேகாசஸ் மென்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 189 பத்திரிக்கையாளர்களின் ஸ்மார்ட்போனில் மென்பொருள் பதியப்பட்டு உளவு பார்க்கப்பட்டுள்ளது.  உலகம் முழுக்க 600 அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மென்பொருளின் வலையில்  உள்ளனர்.  பேகாசஸ் மென்பொருளில் மாட்டிய ஆயிரம் போன் நம்பர்கள் வெளியே அறியப்பட்டுள்ளன.  சவுதி அரேபியாவில் 2018ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷ்டோகி, அவரது காதலி, மனைவி ஆகியோரின் போன்களும் கூட கண்காணிப்பில் இருந்த தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.  85 மனித உரிமை போராட்டக்காரர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.  இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குழுமம், உலகம் முழுக்க உள

முஸ்லீம் மக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது! - ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் முதல்வர்

படம்
              ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாம் முதல்வர் அசாமிற்கான அடுத்த பத்தாண்டுகள் திட்டம் என்ன ? அசாமில் தீர்க்கவேண்டிய நிறைய பிரச்னைகள் உள்ளன . சமூக திட்டங்களில் அசாம் முக்கியமான இடத்தில் இல்லை . அடிப்படைக் கட்டமைப்பு , பெண்கள் , குழந்தைகள் மேம்பாடு , குழந்தைகளின் இறப்பு சதவீதம் குறைப்பு ஆகியவற்றில் நிறைய பணிகள் செய்யப்பட வேண்டியதுள்ளது . வடகிழக்கு மாநிலங்களுக்கான நுழைவாயில் அசாம்தான் . எனவே இங்கு செய்யும் மாற்றங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு நிறையவே உதவும் . எல்லை தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் சுற்றுலா மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுக்கு உதவும் . மாநிலத்தை புள்ளிவிவரப்படி ஆராய்ந்தால் முஸ்லீம்களின் மக்கள்தொகை 29 சதவீதமாக அதிகரித்துள்ளது . இந்துக்களின் வளர்ச்சி 10 தான் அதிகரித்துள்ளது . இதற்கு முஸ்லீம்களிடையே உள்ள கல்வி அறிவின்மை , வறுமை ஆகியவையே காரணம் . எனவே , நாங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தினால்தான் கல்வி , சுகாதாரம் தொடர்பான பல்வேறு திட்டங்களை உருவாக்க முடியும் . மாநில அரசு முஸ்லீம்களின் மக்கள்தொகையை குறைக்க திட்டங்கள் தீட்டி வருகிறதா ? அரசு , ம

காங்கிரஸ் மக்களிடமிருந்து விலகி வந்துவிட்டது! - ஜிதின் பிரசாதா, பாஜக தலைவர்

படம்
                    ஜிதின் பிரசாதா பாஜக தலைவர் 2019 இல் நீங்கள் பாஜகவில் இணைவீர்கள் என்று கருதப்பட்டது . தற்போது அக்கட்சியில் இணைந்துள்ளது ஆச்சரியமாக இல்லை . இது ஆச்சரியம் பற்றியது அல்ல . நான் கடந்த சில ஆண்டுகளாக மாநிலத்தில் குறுக்கும் நெடுக்குமாக பயணம் செய்து வந்துள்ளேன் . நான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை . நான் சார்ந்துள்ள கட்சியும் அதற்கான திறனுடன் இல்லை என்பதை உணர்ந்துள்ளதால் பாஜகவிற்கு மாறிவிட்டேன் . எத்தனை ஆண்டுகளாக இந்த முடிவு பற்றி சிந்தித்து வந்தீர்கள் ? இது காலம் பற்றியதல்ல . தோல்வி பற்றியது . தொடர்ச்சியாக நாங்கள் தோல்வியுற்றோம் . நாங்கள் மக்களிடம் நிறைய பேசிய அளவில் அவர்களின் தேவைகள் , எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியவில்லை . எனவே அதற்காகத்தான் முடிவு எடுக்கவேண்டியிருந்தது . பாஜக உங்களை அணுகியதா அல்லது நீங்கள் அவர்களை அணுகினீர்களா ? இது யார் யாரை அணுகினோம் என்பதல்ல . நான் இந்த முடிவை மகிழ்ச்சியாக எடுக்கவில்லை என்பதை உங்களுக்கு கூறிக்கொள்கிறேன் . நான் தேசியக்கட்சி என்பதால் கட்சியில் இணைந்து பணியாற்ற ந