இடுகைகள்

ரஷ்யா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுதந்திரமான பேச்சுரிமையை வலியுறுத்திய பத்திரிகையாளர்களுக்கு நோபல் விருது!

படம்
  பத்திரிகையாளர்கள் மரியா ரெஸா, டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான நோபல் அமைதிப்பரிசு கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யாவில் நடைபெற்ற ஆட்சி முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.  சுதந்திரமான பேச்சுரிமைக்காக பாடுபட்டதற்காக மேற்சொன்ன பத்திரிகையாளர்களுக்கு அமைதிப் பரிசு வழங்கப்படுகிறது என நோபல் கமிட்டி கூறியுள்ளது. இந்த பத்திரிகையாளர்கள் பிற பத்திரிகையாளர்களுக்கு முன்னோடியானவர்கள். இவர்கள் ஜனநாயகத்தையும் அதன் மதிப்பையும் காக்க உழைத்துள்ளனர் என இந்த அமைப்பு இதுபற்றிய அறிவிப்பில் கூறியுள்ளது.   மரியா ரெஸா, 2012ஆம் ஆண்டு ராப்ளர் எனும் இணையதளத்தைத் தொடங்கினார். இதில் பிலிப்பைன்ஸ் அதிபர் டூடெர்டேவின் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு செய்திகளை இணையத்தளத்தில் வெளியிட்டார். 2018ஆம் ஆண்டிற்கான மனிதராக இவரை அமெரிக்காவின் டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்தது.  முரடோவ், 1993ஆம் ஆண்டு ரஷ்யாவில் நோவாயா கெசட்டா எனும் சுதந்திரமான பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார். இந்த பத்திரிக்கை அதிகாரத்தை கேள்வி கேட்கும் வகையில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வர

செக்ஸ் ஊழலை வெளிக்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றும் உளவு அமைப்பு ஏஜெண்ட்! தி நவம்பர் மேன்

படம்
              தி நவம்பர் மேன் ரஷ்யாவுக்கு உளவு அமைப்பிலுள்ளவர்களின் சதியால் அனுப்பப்பட்டு சிக்கிக்கொண்டு விடும் பெண்ணை மீட்க இன்னொரு ஏஜெண்ட் செல்கிறார் . ஆனால் அந்த திட்டம் சொதப்ப அவரின் உயிரும் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறது . அதிலிருந்து மீள அவரிடம் பயிற்சி பெற்ற இன்னொரு ஏஜெண்ட் உதவுகிறார் . இதோடு ரஷ்ய அதிபராக வாய்ப்புள்ளவரின் செக்ஸ் ஊழல்களை வெளியே கொண்டு வரும் திட்டமும் அமெரிக்காவின் உளவுப்படைக்கு உள்ளது . அதனை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதை பரபரவென வேகமாக சொல்லியிருக்கிறார்கள் . பியர்ஸ் பிராசனனின் உணர்ச்சிகளை உள்ளடக்கிய நடிப்புதான் படத்தின் பெரும் பலம் . யாருக்கும் தெரியாமல் திருமண வாழ்க்கையை மறைத்து வைத்திருப்பவரை ரஷ்யாவுக்கு உளவு அமைப்பு அனுப்பி வைக்கிறது . யாருக்காக நடாலியா என்ற அவரது மனைவியும் ஏஜெண்டுமானவரை மீட்கத்தான் . ஆனால் இதை மோப்பம் பிடித்த ரஷ்ய ஆட்கள பின்தொடர அமெரிக்க உளவு ஆட்களால் நடாலியா கொல்லப்படுகிறார் .    கொதித்து எழும் பீட்டர் டெபேரோ ( பியர்ஸ் பிராசனன் ) தனது அமைப்பைச் சேர்ந்தவர்களின் உள்ளடி வேலைதான் இதற்கு காரணம் என நொடியில் தெரிந்துகொண

வடகொரியா - தென்கொரியா போர்! - போர்விவரங்கள் காலக்கோடு வழியாக அறியலாம்!

படம்
          ny times       கொரியப் போர் ! 25 ஜூன் 1950 வடகொரியப் படைகள் தென்கொரியாவிற்குள் நுழைந்தன . 27 ஆம் தேதி ஐ . நா அமைப்பு தென்கொரியாவை காப்பாற்றுவதற்கான உதவியை பிற நாடுகளிடம் கேட்டது .22 இங்கிலாந்து நாட்டு கப்பல்கள் அங்கு விரைந்தன . 7 ஜூலை 1950 டக்ளஸ் மெக் ஆர்தர் என்பவரின் தலைமையில் அமெரிக்க அரசு படைகள் திரண்டன . கொரியாவின் தென்கிழக்கு பகுதியை நோக்கி படைகள் சென்றன . 7-9 அக்டோபர் 1950 அமெரிக்க படைகள் வடகொரியாவின் பகுதிகளை நோக்கி முன்னேறியது . அக்டோபர் - நவம்பர் 1950 சீனா , வடகொரியாவுக்கு ஆதரவாக கொரியப்போரில் குதித்தது . 14 மார்ச் 1951 ஐ . நா படைகள் தென்கொரியாவின் சியோல் நகரை முற்றுகையிட்டன . இதனால் அங்கிருந்த மக்கள் வெளியேறினர் . 11 ஏப்ரல் 1951 அமெரிக்க படைத்தலைவர் டக்ளஸ் மெக்ஆர்தர் படைப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார் . 23-25 ஏப்ரல் 1951 ஜேம்ஸ் கார்ன் தலைமையிலான படை வடகொரியாவின் பகுதிளளை நோக்கி முன்னேறியது . 10 ஜூலை 1951 இருநாடுகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்தன . 28

இணைய உலகை ஆளும் கருப்பு உலக ராஜாக்கள்! எதிர்கொள்வது எப்படி?

படம்
        பிக்சாபே   கருப்பு உலக ராஜாக்கள் ! இன்று நம்முடைய தினசரி நடவடிக்கைகள் பலவும் இணையம் சார்ந்ததாக , ஸ்மார்ட்போனிலேயே செய்துகொள்ள முடிவதாக மாறிவிட்டன . அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே இணையம் மூலம் செய்யமுடிகிறது . பல்வேறு கட்டணங்களை ஸ்மார்ட்போனிலிலுள்ள செயலிகள் மூலம் கட்ட முடிகிறது . அதேசமயம் , இதில்தான் பல்வேறு தில்லுமுல்லும் , மோசடிகளும் நடந்தேறுகின்றன . மார்ச் 11 அன்று , உலக சுகாதார நிறுவனம் கோவிட் -19 நோயை பெருந்தொற்றாக அறிவித்தது . இக்காலத்தில் மக்களுக்கு ஏராளமான ஸ்பாம் எனும் குப்பை மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன . இவற்றை அவசர உதவி தேவை என்று திறந்தவர்களின் தகவல்கள் திருடப்பட்டன . கணினியில் இருந்த தகவல்கள் அழிந்துபோயின . இதுபோன்ற சூழலைத் தடுக்கவே சீனா 1 லட்சம் , பாகிஸ்தான் 10 ஆயிரம் , இந்தியா 1000 பேர் என தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிக்கு எடுத்து தகவல்களை பாதுகாத்து வருகின்றனர் . இவர்களின் செயல்பாட்டை (Hackers as a service) என்று அழைக்கின்றனர் . பொருளாதார மந்தநிலை உள்ளபோதும் , ஹேக்கர்ஸ்களால் பல்வேறு இணையம் சார்ந்த குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன அண்மையில் சீன ஹேக்கர்கள் ,

சி்ம்பயோட்டிக் மிருகத்தை வைத்துக்கொண்டு வாழ நினைக்கும் விண்வெளி வீரனின் பரிதாப கதை! - ஸ்புட்னிக்

படம்
        ஸ்புட்னிக்   ஸ்புட்னிக்  Director: Egor Abramenko Writer(s): Oleg Malovichko, Andrei Zolotarev ரஷ்யாக்காரர்கள் எடுத்த ஏலியன் பற்றிய படம் வெனோம் படம் பார்த்திருப்பீர்கள். அதே கான்செப்ட்தான். விண்வெளிக்குச் சென்று பூமிக்கு திரும்புகிற வழியில் சிம்பயாட்டிக் உயிரி விண்கலனில் புட்போர்ட் அடித்து ஏறிவிடுகிறது. அது நாயகன் உடலில் புகுந்துகொள்கிறது. அவனது நண்பனைக் கொன்று தின்றுவிடுகிறது.  பூமியில் தரையிறங்குபவர்களில் நாயகனுக்கும் கூட படுகாயம் ஏற்படுகிறது. ஆனால் மருத்துவமனையில் அவரை சிகிச்சையளிக்கும்போது, இரண்டே நாட்களில் உடலின் காயங்கள் ஆறுகின்றன. எப்படி என அவரை சோதிக்கின்றனர். அவருக்குள் உள்ள வேற்று உயிரியை கண்டுபிடித்துவிடுகின்றனர. அதனை எப்படி சோதிக்கின்றனர், நாயகன் இப்பிரச்னையிலிருந்து மீண்டாரா என்பதுதான் கதை. இதில் முக்கியமான பாத்திரம் உளவியலாளராக நடித்துள்ள நாயகிக்குத்தான்( Oksana Akinshina ) அதிக முக்கியத்துவம் உள்ளது. ராணுவ ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் விஷயங்களை மெல்ல புரிந்துகொண்டு அதிர்ச்சியாவது, நாயகனை காப்பாற்ற பிரம்ம பிரயத்தன முயற்சிகளை செய்வது, இறுதியில் நாயகன் எடுக்கும் முட

இந்தியப் படங்களுக்கு ரஷ்யாவில் மவுசு ஜாஸ்தி! - ஆலெக் அவ்தீவ்

படம்
நேர்காணல் ஆலெக் என் அவ்தீவ், ரஷ்ய ஃபெடரேஷன் தலைவர் சென்னையிலுள்ள ரஷ்யத் தூதரகம் தன் செயற்பாடுகளாக என்னென்ன விஷயங்களைச் செய்துவருகிறது? இந்தியாவும் ரஷ்யாவும் பல்லாண்டுகளாக நெருக்கமான தொடர்புகளிலுள்ள நாடுகள். அரசியல், பொருளாதாரம், கலாசாரம் ஆகிய விஷயங்களிலும் நாங்கள் இந்தியாவுடன் ஒத்திசைவாக உள்ளோம். கலாசாரத்தின் பக்கம் வருவோம். நாங்கள் 1980களில் படித்த பல்வேறு நூல்கள் ரஷ்ய அரசால் மாஸ்கோவில் அச்சிடப்பட்டது. எப்படி இதனைச் செய்தீர்கள்? முன்னேற்றப் பதிப்பகம் மற்றும் ராதுகா பதிப்பக நூல்களைக் குறிப்பிடுகிறீர்கள். உண்மைதான் அப்பதிப்பகங்கள் இன்று இல்லை என்றாலும் அன்று நிறைய நூல்களை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து கொண்டு வந்தனர். இன்றும் மொழிபெயர்ப்பதற்கான ஏராளமான இலக்கியச் செல்வம் ரஷ்யாவில் உள்ளது. உள்நாட்டிலும் அவை விலை குறைவாக கிடைக்க காரணம், இன்றும் அரசு அவற்றுக்கு நிதியுதவி அளித்து வருவதுதான். நாங்கள் உயர்கல்வியில் படித்த லியோ டால்ஸ்டாய், ஆன்டன் செகாவ், மிகாய்ல் சொலோவ்கோவ் ஆகியோரின் நாவல்களில் காட்டிய கலாசாரம் இன்று ரஷ்யாவில் இல்லை அப்படித்தானே? கருத்தியல் என்பது காலம

வலதுசாரி தீவிரவாதம் அதிகரித்து வருகிறது! - பல்கேரிய ஆய்வாளர் அறிக்கை!

படம்
ஆய்வாளர் ரஸ்லன் ட்ரான் பல்கேரியாவில் வலதுசாரி தீவிரவாதக்குழு தோன்றி செயல்பட்டு வருகிறது. இதுபற்றிய ஆய்வை குளோபல் வாய்ஸ் கட்டுரையாளர் ரஸ்லன் ட்ரான் மற்றும் கிரில் ஆரமோவ் ஆகியோர் இணைந்து செய்து அதனை வெளியிட்டனர். அதுபற்றி அவர்களிடம் பேசினோம். நீங்கள் ஆய்வு செய்த இயக்கம் எப்படிப்பட்டது? பல்கேரிய துருக்கி எல்லையில் செயல்படும் குழு இது. பல்கேரிய தேசிய இயக்கம் (BNO) பற்றியது எங்களது ஆய்வு. 2016 ஆம்ஆண்டு இதுபற்றி குளோபல் வாய்ஸ் வலைத்தளத்தில் கட்டுரை எழுதினேன். அந்த ஆண்டுதான் இக்குழு, அகதிகளை வேட்டையாடுபவர்களாக மாறியது. இவர்களுக்கு ஐரோப்பாவிலுள்ள அனைத்து வலதுசாரி இயக்கங்களுடனும் நல்ல தகவல் தொடர்பு உண்டு. மேலும் இளம் உறுப்பினர்களை ஈர்ப்பதிலும் இவர்கள் நல்ல வேகம் காட்டுகிறார்கள். டென்மார்க், ரோமானியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் கேம்புகளை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ரஷ்ய ராணுவம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இவர்களின் செயல்பாடு எத்தகையது? நாங்கள் அகதிகள் அழிப்பு, இஸ்லாம் மயப்படுத்தல் போன்ற விஷயங்களை இதில் மையப்படுத்தவில்லை. இன்று பல்கேரியாவில் 600 அகதிகள் மட்டுமே உள

நகரும் செர்னோபில் - ரஷ்யாவின் சூப்பர் திட்டம்!

படம்
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா ஆகியோர் நிலங்களில் செய்யவேண்டியதைச் செய்துவிட்டார்கள். அடுத்து அவர்களின் பார்வை ஆர்க்டிக் பக்கம் திரும்பியுள்ளது. தற்போது அங்கு கனடா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் துண்டு போட்டு இடம்பிடிக்க முயற்சித்து வருகின்றன. உச்சபட்சமாக கடுங்குளிர் நிலவும் அங்கு, அணு உலை ஒன்றை நகரும் விதமாக அமைக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது. இதன் பெயர் அகாடெமிக் லோமோன்சோவ். அணு உலை என்றால் அதற்கு உடனே மின்நிலையம் என்று சொல்லித்தானே எழுதுவார்கள். இதனையும் அப்படித்தான் கூறுகிறார்கள். இந்த அணுஉலை மூலம் 70 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இந்த மின்சாரத்தை வைத்து ஒரு லட்சம் வீடுகளுக்கு தோராயமாக மின்வசதியை வழங்க முடியும். சாதாரணமாக நிலத்தில் அமைக்கும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பை கண்காணித்து முறைப்படுத்துவதே கடினம். இதில் ஆர்க்டிக் பகுதியில் நகரும் விதமாக அணுமின் நிலையம் அமைப்பது சூழலுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார் க்ரீன்பீஸ் அமைப்பைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜன் ஹேவர்கேம்ப். ரஷ்யா உக்ரைனில் செர்னோபில் விஷயத்தில் பல தகிடுத த்தங்களைச் செய்தது. பாதுகாப்பு வ

பேஸ் ஆப்பின் நிறுவனர் பேட்டி!

படம்
உலகமெங்கும் சக்கைப்போடு போடும் பேஸ் ஆப்பின் நிறுவனர் யாரோஸ்லேவ் கொன்சரோவ், மைக்ரோசாப்டில் பணியாற்றியவர். இன்று நாற்பது வயதில் உலகம் முழுக்க தன் பேஸ் ஆப் மூலம் பிரபலமாகி இருக்கிறார். இத்தனைக்கு இந்த ஆப் செய்வது உங்கள் தற்போதைய புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு மூலம் வயதாக்கி காட்டுவது மட்டுமே. இக்கம்பெனியில் பணியாற்றுவது பனிரெண்டு பேர்கள்தான். ரஷ்ய தயாரிப்பு என்றால் அமெரிக்கா சும்மாயிருக்குமா உடனே பேஸ் ஆப் பயனர்களின் தகவல்களை திருடுகிறது என கட்டுரைகள் எழுதுவதோடு அங்குள்ள அரசு சட்டமன்ற உறுப்பினர்களும் இதுபற்றி வாய்க்கு வந்ததை பேசத் தொடங்கிவிட்டனர். இற்கு யாரோஸ்லோவ் என்ன பதில் சொல்லுகிறார்? இரண்டு மணிநேரத்தில் எனக்கு 300 போன் அழைப்புகள் வந்துவிட்டன. என்னால் தினசரி வேலைகளைக் கூட செய்யமுடியவில்லை. பேஸ் ஆப்பின் பிரைவசியை மேம்படுத்தும் பணியில்தான் இருக்கிறோம். எங்களுடைய ஆப் இன்று ஆண்ட்ராய்டு, ஐஸ்டோர் என அனைத்திலும் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவரும் இதில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என பகிர்ந்து மகிழ்கின்றனர். காரணம், யாருக்குமே பத்து வரு

ரான்சம்வேரின் எதிர்காலம்! - கிரிம் ஸ்பைடரின் கையில் உலகம்!

படம்
கணினிகளைத் தாக்கும் ரான்சம் வேர் தற்போது பல்வேறு நாடுகளிலுள்ள கணினிகளைத் தாக்கி தகவல்களை சிறைப்பிடித்து காசு கேட்டு மிரட்டி தகவல்களை மீளத் தருவது நடைமுறையாகி வருகிறது. ரையுக் எனும் ரான்சம்வேர் வகை புரோகிராம் இங்கிலாந்திலுள்ள தடயவியல் நிறுவனமான யூரோஃபின்ஸ் மீது நடத்தப்பட்டுள்ளது. இதன்விளைவாக, அங்குள்ள பிற நிறுவனங்களும் மிரண்டு போயுள்ளன. அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள நிறுவனம் 5,30,000 அமெரிக்க டாலர்களைத் தருமாறு மிரட்டப்பட்டுள்ளது. பணத்தையும் பிட்காயின்களாக அக்கவுண்டில் போடுமாறு சட்டவிரோத கும்பல் மிரட்டியுள்ளது. ரஷ்யாவில் செயல்பட்டு வரும் கிரிம் ஸ்பைடர் என்ற நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ரையுக் என்ற ரான்சம்வேரை உருவாக்கியது. இதன் மூலம் இந்நிறுவனம் 3.7 மில்லியன் டாலர்களை இதுவரை சம்பாதித்துள்ளது. இமெயில அட்டாச்மென்ட் மூலம் கணினிகளை தாக்கும் ரான்சம்வேர் கணினியில் உள்ள அனைத்து கோப்புகளையும் என்கிரிப்ட் செய்துவிடும். பின் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே கணினியிலுள்ள கோப்புகளை மீட்க முடியும் என செய்தி மட்டுமே வரும். இப்போது பணம் என்றாலும் இதன் எதிர்காலம் வேறுமாதிரியான அச்சுறுத்தலாகவே இருக்க

ரஷ்யாவை முடக்கும் ஊடக சர்வாதிகாரி!

படம்
ரஷ்யாவைக் கட்டுப்படுத்தும் சர்வாதிகாரி! 2017 ஆம் ஆண்டு வசந்தகாலத்தில் ரஷ்யாவில் நடந்த ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா? நூறுபேர்களுக்கு மேல் ஊழலுக்கு எதிராக மாஸ்கோ வீதிகளில் போராடத் தொடங்க, அதற்கு மக்கள் ஆதரவு கிடைத்தது. உடனே அரசுப்படைகள் மக்களை அடித்து விரட்டத் தொடங்கினர். 2 ஆயிரம் மக்களுக்கு மேல் போராடிய இந்த போராட்டங்களை வாய்ப்பு கிடைத்த தென மேற்கத்திய ஊடகங்கள் ஒளிபரப்பு செய்ய அலைபாய்ந்தனர். ரஷ்ய ஊடகங்களும் இதனை செய்தியாக்கினர். ஆனால் மக்களுக்கு இந்த செய்தி மி க குறைவாகவே கிடைத்தது. மார்ச் 26 தொடங்கிய போராட்டம் அப்படியே வலிமை குன்றிப் போனது. ஊடகங்களை அடித்து மிரட்டி கட்டுப்படுத்தியதில் முக்கியமானவர், அலெக்ஸி கிரமோவ். புதினின் அரசைக் கட்டுப்படுத்திக் காப்பாற்றுவதில் இருபது ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளவர் அலெக்ஸி.  வேறுமாதிரி சொல்வது என்றால் புதின் சொல்லும் சரி, தவறு விஷயங்களை ஊடகங்களுக்கு வழங்குவது இவர்தான். முக்கியமான சமாச்சாரம், ரஷ்யா டுடே டிவியின் இணை நிறுவனர் வேறு யாருமில்லை, அலெக்ஸிதான். 70 களில் மாஸ்கோ மாநில பல்கலையில் வரலாறு படித்தவர். கால்பந்

வெல்வாரா நகைச்சுவை நடிகர்- உக்ரைன் தேர்தல் அப்டேட்

படம்
தேர்தலில் வெல்வாரா நகைச்சுவை நடிகர்! நகைச்சுவை நடிகர்களுக்கும் அரசியலுக்கும் அவ்வளவு பொருத்தப்பாடு கிடையாது. கட்சி சார்ந்தவர்கள் நடிகர்களாக இருந்தால் வாய்ப்பு கிடைப்பது கடினம். உலகில் வேறு நிலைமை. உக்ரைனில் நடைபெற்றுவரும் தேர்தலில் காமெடி நடிகர் வெல்லும் உறுதியில் உள்ளார். நடப்பு தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏறத்தாழ 60% வாக்குப்பதிவுகளை இவர் பெற்றுள்ளார். இவருக்கு எதிராக நின்ற பெட்ரோ போரசென்கோ பெற்றது வெறும் 24 சதவீதம்தான். பொதுவாக நடிகர்கள் சினிமா தாண்டி அரசியலில் வெல்வதற்கு ரசிகர்களின் பின்னணி பலம் அவசியம். இதனை ரொனால்ட் ரீகன், அர்னால்ட், குத்துச்சண்டை வீரர் ஜெஸ்ஸி வென்சுரா ஆகியோர் நிரூபித்துள்ளனர். தற்போது போட்டியில் உள்ள ஸெலன்ஸ்கி 2015 ஆம் ஆண்டு டிவி நிகழ்ச்சி(தி சர்வன்ட் ஆப் பீப்பிள்) ஒன்றைத் தயாரித்தார். அதில் ஆசிரியராக ஊழல்களை எதிர்த்து போராடுபவராக நடித்தார். அதில்தான் மக்கள் அபிமானத்தை சம்பாதித்தார். 2018 ஆம் ஆண்டு புது ஆண்டு பிறப்பின்போது, திடீரென ஸெலன்ஸ்கி தன் ரசிகர்களிடம் பேசினார். என் அன்பு ரசிகர்களே, உங்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். வரும்