நம் புத்தியை என்ன செய்வது?
நம் புத்தியை என்ன செய்வது? உத்தரப்பிரதேசம் ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜாகேந்திர சிங். அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா குறித்து அதாவது சட்டவிரோத சுரங்கம், நிலம் அபகரிப்பு ஆகியவற்றில் அவருக்கு தொடர்பு இருப்பதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். இதன் பின்னர் எப்போதும் போல காவல்துறையை ஏவிவிட்டு அந்த பத்திரிகையாளரின் வீட்டில் சோதனை என்னும் முறையில் பயமுறுத்தல் தொடங்கியிருக்கிறது. அதிலும அவர் மசியாமல் இருக்க, அவரை உயிருடன் கொளுத்தவும் முயன்றிருக்கிறார்கள் அமைச்சரின் ரத்தத்தின் ரத்தங்கள். கடுமையாக தாக்குதலுக்குள்ளான ஜாகேந்திர சிங் கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து தொடரப்பட்ட வழக்கையும் அமைச்சரின் ஆட்கள் திரும்பப் பெறுமாறு பத்திரிகையாளரின் மகனை மிரட்டியிருக்கின்றனர். இது குறித்து தோட்டக்கலை அமைச்சர் பரஸ்நாத் யாதவ் ' விதியை யாரால் தடுக்க முடியும்?'' என்று எப்போதும் போல தன் அதிகார ஆணவத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோல மதச்சார்பற்ற மனிதர்களாக தங்களை வெளிப்படுத்தி சுதந்தி