இடுகைகள்

பொருளாதாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்கு ஆடுகள் தரும் பொருளாதார சுதந்திரம்! - ஆகாகான் பௌண்டேஷனின் உதவி!

படம்
 ஆடுகள் தரும் பொருளாதார சுதந்திரம்! இந்தியா, டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் உச்சம் தொட்டுள்ளது.  இக்காலத்திலும் கிராமப்புற இந்தியாவை வேளாண்மையும், கால்நடைகளும்தான் தாங்கிப்பிடிக்கின்றன. கிராமங்களில் வீட்டில் வாழும் பெண்கள், கால்நடைகளை வளர்த்தே குடும்பச் செலவுகளைச் சமாளிக்கின்றனர்.   பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கென, தன்னார்வ அமைப்பான  ஆகாகான் பௌண்டேஷன் திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த அமைப்பு, ஆடுகளுக்கான மருத்துவ உதவிகளை வழங்கும் வகையில்,  கிராம பெண்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கிறது. இதன்மூலம் பெண்கள், ஆடுகளுக்குத் தேவையான மருந்துகள், சிகிச்சையை வழங்கி அதற்கென குறிப்பிட்ட தொகையை சேவைக்கட்டணமாகப் பெறுகின்றனர். இது பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்குகிறது.  கிராமத்தில் ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்களுக்கு, பாசு ஷகி (pashu sakhi) என்று பெயர். இதற்கு இந்தி மொழியில், ’விலங்குகளின் நண்பன் ’என்று பொருள். இந்தியாவில் வாழும் கால்நடைகளின் எண்ணிக்கை, 13 கோடியே 50 லட்சம் ஆகும். நோய்க்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை 40 சதவீதமாக உள்

சுகாதாரமான குடிநீர் வசதி அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை! - பீட்டர் கிளீக்

படம்
நேர்காணல் பீட்டர் கிளீக் சூழல் அறிவியலாளர்  அமெரிக்காவின் ஓக்லாந்து நகரைச் சேர்ந்த அறிவியலாளர், பீட்டர் கிளீக். பசிஃபிக் இன்ஸ்டிடியூட் (Pacific Institute) என்ற அமைப்பைத் தொடங்கி, சூழல் பிரச்னைகளைப் பற்றி பேசி எழுதி வருகிறார்.  நீருக்கும் மனிதர்களின் முன்னேற்றத்திற்கும் தொடர்பிருக்கிறது என எப்படி கூறுகிறீர்கள்? இன்றுவரை,  தூய குடிநீர், சுகாதார வசதி என்பது  அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை. இது நமது மிகப்பெரும் தோல்வி. தூய குடிநீர், சுகாதார வசதிகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க அரசு அதிக நிதி செலவிட வேண்டும். குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினாலே மனிதர்களுக்கு ஏற்படும் பிற பிரச்னைகள் தீர்ந்துவிடும்.   சிறந்த நீர்மேலாண்மைக்கான எடுத்துக்காட்டுகள் உள்ளனவா? சிங்கப்பூர் நாட்டில் தூய குடிநீர், கழிவுநீர் மறுசுழற்சி, புத்திசாலித்தனமான நீர்ப்பாசன முறைகளைக் கையாள்கிறார்கள். அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் விவசாயிகள் நீரை எப்படி சிறப்பாக பயிர்களுக்குப் பயன்படுத்துவது என அடையாளம் கண்டுள்ளனர்.  காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இந்தியாவின் பருவகாலத்தைப் பாதிக்குமா? நிச்சயமாக. காலநிலை மாற்

மக்கள் தொகைக்கும், காலநிலை மாற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை! - டெட் நார்தஸ்

படம்
  மொழிபெயர்ப்பு நேர்காணல் டெட் நார்தஸ் ( Ted Nordhaus ) நிறுவனர் பிரேக்த்ரோ இன்ஸ்டிடியூட்  சூழலியலாளர்கள், காலநிலை மாற்ற அபாயத்தைத் தவிர்க்க மக்கள்தொகை கட்டுப்பாடு அவசியம் என்று கூறுகிறார்களே? மக்கள்தொகை அதிகரிப்பு என்பது மறைமுகமாக பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது. அதனைக் குறைப்பது என்பது தவறானது. கிராமத்தில் வறுமையில் வாழ்ந்த மக்கள் இன்று நகருக்கு புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இந்த மாற்றம் காலப்போக்கில் இயல்பாக நடந்தது. ஏழை மக்களின் பிள்ளைகளுக்கும் கல்வி கிடைக்கிறது. அவர்கள் வேலையைத் தேடிக்கொண்டு நலமாக வாழ்கிறார்கள். தேவையான உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். இது சமூக மேல்தட்டினருக்கு பிடிக்காமல், மக்கள்தொகை கட்டுப்பாடு, வெப்பம் அதிகரிப்பு என பேசிக்கொண்டிருக்கிறார்கள். சூழலியலாளர்களில் பெரும்பாலானோர் வசதியானர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.  சூழல் மாதிரிகள் பற்றிய உங்கள் கருத்து? சூழல் அறிவியலாளர்கள், சூழல் மாதிரிகளை தொடர்ச்சியாக உருவாக்கி வருகிறார்கள். ஆனால் அவை எவையும் துல்லியமாக வெப்பநிலை அதிகரிப்பதை நமக்கு காட்டவில்லை. அப்படி அவை காட்டினாலும், கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் பொருளாதார செ

மனிதர்களும் இயற்கையில் ஒரு பகுதி என்பதை மறந்துவிடக்கூடாது

படம்
              மார்க் கார்னே Mark carney former central banker மார்க் கார்னே என்றால் என்ன ? இந்தப் பெயரைக் கேட்டதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? ஏதோ பெரிய வங்கியை நடத்துகிற அல்லது தலைவராக இருக்க வாயப்புள்ள ஒருவரைத்தானே ? உண்மைதான் . 2008 ஆம் ஆண்டில் கனடாவின் பேங்க் ஆப் கனடா வங்கிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார் . 2011-2018 காலகட்டத்தில் குளோபல் ஃபினான்சியல் ஸ்டேபிளிட்டி போர்டின் தலைவராக செயல்பட்டார் . 2013 ஆம் ஆண்டு பேங்க் ஆப் இங்கிலாந்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் . 1694 ஆம் ஆண்டு தொடங்கி பிரிட்டிஷ்கார ர்களை மட்டுமே ஆளுநராக நியமித்த மரபை உடைத்தவர் மார்க் கார்னி தான் . 2020 ஆம் ஆண்டு தனது பதவியை விட்டு விலகியவர் கனடாவில் உள்ள ப்ரூக்ஃபீல்டு அசெஸ்மென்ட் என்ற தனியார் நிறுவனத்தில் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார் . வால்யூஸ் - பில்டிங் எ பெட்டர் வேர்ல்ட் ஃபார் ஆல் என்ற நூலை எழுதியுள்ளார் .    நீங்கள் எழுதியுள்ள நூலுக்கான அர்த்தம் என்ன? நான் பேங்க் ஆஃப் கனடாவில் வேலை செய்தபோது பொருளாதார சீர்குலைவு சூழ்நிலையைப் பார்த்திருக்கிறேன். பேங்க் ஆஃப் இங்கிலாந்திலு

தோல்வியைக் கண்டு பயப்படாத மனோபாவம்!

படம்
  தோல்வியை நோக்கி திட்டமிடுவோம்!   தலைப்பிலுள்ளதைப் போல ஒருவர் கலந்துரையாடலில் பேச முடியுமா? ரென் அப்படித்தான் பேசினார். எதிர்காலத்தில் ஒருநாள் நாம் தோல்வியை சந்திக்கப் போகிறோம். எனவே, முன்கூட்டியே நாம் அதற்கு தயாராக இருப்போம் என்று பணியாளர்களிடம் பேசினார்.   நடிகர்களைப் பற்றி உலகத்தமிழர்  தேசிய நாளிதழ்களில் என்ன எழுதுவார்கள்? அவரே தன் கையால் தானே சொகுசு கார் கதவைத் திறந்தார். அவரே சோடாவை தன் கையில் வாங்கிக் குடித்தார். பிரியாணி லெக்பீசை தன் வாயால் தானே மென்றார் என எழுதுவார்கள். ரென்னைப் பொறுத்தவரை இப்படி யாராவது நிறுவனரை அல்லது அதிகாரிகளை புகழ்ந்தால் வீட்டுக்குச் சென்று வேறு வேலையைத் தேடுங்கள் என அனுப்பிவிடுவார்.   ரென்னைப் பொறுத்தவரை தனது வேலைகளை தானே செய்வதுதான் அவருக்குப் பிடித்தமானது. மூன்றுமணிநேர விமானப் பயணம் என்றால் கூட அவருக்கு புத்தகம் ஏதாவது இருந்தால் போதும். அதைப்படிப்பார். இடையில் ஒரு முக்கல் முனகல் கூட இருக்காது. ஏதாவது சந்திப்பு இருந்தால், நகரிலுள்ள ஹூவெய் அலுவலகத்திற்கு கூட சொல்ல மாட்டார். நேரடியாக யாரை சந்திக்கவேண்டுமோ அங்கேயே வாடகை டாக்சியைப் பிடித்துப் போய்விடுவார்

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் திட்டங்கள், அதன் பயன்கள்!

படம்
  மத்திய அரசு டிஜிட்டல் முறையில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி அதன் வழியாக செயல்படத்தொடங்கியிருக்கிறது. அரசு சேவைகள் பலவும் இன்று இணையம் வழியாக கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. அவை தொடர்பான புள்ளிவிவர டேட்டா ஒன்றைப் பார்ப்போம்.  மொத்தமுள்ள 130 கோடி மக்களில் ஆதார் கார்டு பெற்ற மக்களின் எண்ணிக்கை  123 கோடி இணையம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை  56 கோடி  ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை  44.6 கோடி  புதிய தொழில்நுட்ப திறன்களைப் பெற்றுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை  2,80,000 2021ஆம் ஆண்டு பல்வேறு டிஜிட்டல் சேவைகளை வழங்கிய வகையில் கிடைத்த வருமானம் 5 மடங்கு அதிகம். வளர்ச்சி வேகம் 28-30 சதவீதம்.  இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் ஐ.டி, பிபிஓ பகுதி ஊழியர்களின் பங்கு 8 சதவீதம் 2019 - 2021 ஆம் ஆண்டு டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ள அளவு 37 சதவீதம் தற்போதைய நிதித்துறை மதிப்பு 31 பில்லியன். 2025ஆம் ஆண்டு நிதித்துறை வளரும் என மதிப்பிடப்பட்டுள்ள அளவு 150 பில்லியன். அடுத்த ஆண்டு உயரவிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள மதிப்பு 138 பில்லியன்.  யுபிஐ வசதியை அறிமுக்ப்படுத்தியு

மேற்குலக நாடுகள் தம் நுகர்வைக் குறைத்துக்கொள்ளவேண்டும்! - அமிதவ் கோஷ், எழுத்தாளர்

படம்
  அமிதவ் கோஷ் எழுத்தாளர் தி லிவ்விங் மவுன்டைன் என்ற புதிய நாவலை எழுதியுள்ளார். இதில், மேற்குலத்தனமாக ஆக்ரோஷ வணிக திட்டங்களால் எப்படி பழங்குடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விவரித்துள்ளார். அவரிடம் பேசினோம்.  மனிதர்களால் ஏற்படும் இயற்கை மீதான பாதிப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்? ஆந்த்ரோபோசீன் என்ற வார்த்தைக்கு அர்த்தம், இன்று பெரிதுபடுத்தப்பட்டுள்ளது. மனிதர்களால் இயற்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்பது நேரடியான அர்த்தம். ஆனால் இதனை பெருமளவில் உருவாக்குபவர்கள், மேற்குலக நாடுகள்தான். ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பு அனைவரையும் பாதிக்கிறது.  மேற்குலகில் தொழில்துறையினர் உருவாக்கிய மாடல் அங்கு வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அதேமாடல் இந்தியாவில் செயல்பட வாய்ப்புள்ளதா? சிறுபான்மையான சமூகத்தில் வேண்டுமானால் மேற்குலக மாடல் வெற்றிகரமாக செயல்படலாம். ஆனால் காந்தி தொழில்மயமாதலின் ஆபத்தை உணர்ந்திருந்தார். 1928ஆம் ஆண்டில் இதைப்பற்றி தனது கருத்தை எழுதியிருந்தார். மேற்குலக நாடுகளைப் பற்றி நாமும் தொழில்மயமானால் உலகம் முழுக்க வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்தியது போலவே சூழல் மாறும் என்றார். மக்களி

இந்தியாவின் சாதனைகளைப் பேசும் மின்னூல் இந்தியா 75! - சாதனைகளும் தற்போதைய நிலையும்- அமேஸான் வலைத்தளம்

படம்
  இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்த காலகட்டங்களில் இந்தியாவின் வரலாறு அனைவரும் அறியவேண்டியது முக்கியம். தேசிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இந்தியா 75 என்பதை பல்வேறு சாதனைகளாக அழகுற வடிவமைத்து சிறுசிறு கட்டுரைகளாக வெளியிட்டது. அதுதான் இப்படி நூலை எழுதி தொகுக்க உந்துதல் வழங்கியது. இந்த நூலை வாசிக்கும் ஒருவர் சுருக்கமாக இந்தியா இத்தனை ஆண்டுகளில் சாதித்தது என்ன, தற்போதுள்ள நிலை என்ன ஆகியவற்றை ஓரளவுக்கு உணர்ந்துகொள்ள முடியும். இந்தியாவில் சில நாட்கள் ஒருவர் தங்கினால் நூலு்ம், சில வாரங்கள் தங்கினால் கட்டுரையும், அங்கேயே ஆண்டுக்கணக்கில் தங்கினால் எதையும் எழுத முடியாது என ஓஷோ இந்தியா பற்றிய நூலில் கூறியிருப்பார். அது இங்கு நிலவும் பல்வேறு பன்மைத்துவம், முரண்பாடுகளின் கலவையாக முன்வைத்த கருத்து. நூலில் நாம் அறிந்துகொள்வது இந்தியாவைப் பற்றிய சில கோணங்களே. இது முழுமையானதல்ல. இந்தியா என்பது வெறும் வரைபடம் அல்ல. அது ஒரு மனநிலை. யாரையும் ஆளாத, ஆளும் அதிகாரம் கூட மனதில் எழாத ஆன்மாக்கள் வாழும் இ

இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பங்களித்த ஐந்து விஞ்ஞானிகள் - இந்தியா 75

படம்
  இந்தியா 75 நவீன இந்தியாவை உருவாக்கிய சாதனையாளர்கள் பட்டியலில் ஒடிஷாவை சேர்ந்த ஐந்து விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை பிரிவில் இவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. விஞ்ஞானிகளின் பட்டியலை ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் தயாரித்துள்ளது.  பெடங்காதாஸ் மொகன்டி, புவனேஸ்வர் நகரில் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் டீன் மற்றும் பேராசிரியராக உள்ளார். இவர், இயற்பியலாளராக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறார். அதில் குறிப்பிடத்தக்கது, கரும்பொருள் பற்றிய ஆராய்ச்சியாகும்.  ஜோதிர்ரஞ்சன் எஸ் ரே, நாகர்கன்டா என்று பகுதியில் பிறந்தவர். புவி அறிவியல் படிப்புகள் தொடர்பான தேசிய மையத்தில் இயக்குநராக உள்ளார். தற்போது திருவனந்தபுரத்தில் பணியாற்றுகிறார். இவர், பாறைகளின் வயதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை செய்து வருகிறார்.  விந்திய மலைத்தொடரின் வயதைக் கண்டுபிடிக்கும் புவியியல் ஆராய்ச்சியை செய்தவர் இவரே.  ஜோதிர்மயி தாஸ், ஐஏசிஎஸ் என்ற நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர், ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். புற்றுநோய்க்கு எதிரான மருந்துகள் பற்ற

துருவப்பகுதியை உருக்கும் காட்டுத்தீ

படம்
  அலாஸ்காவின் காட்டுத்தீயால் ஆர்க்டிக்கில் உருகும் பனி! உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. இதன் மற்றொரு விளைவாக,  ஆர்க்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அதிக வெப்பநிலை, ஈரப்பதம் குறைந்த உலர்ந்த மண், அதிக மின்னல், இடி ஆகியவை ஏற்படுவது பெருமளவு காட்டுத்தீயை ஊக்குவிக்கின்றன. உலகின் ஒருபுறம் நடைபெறும் காட்டுத்தீ, துருவப் பகுதியில் பனிப்பாறைகளை உருக வைத்துக்கொண்டிருக்கிறது.   இதுபற்றிய சூழல் ஆய்வு ஒன்று ஒன் எர்த் (One earth) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கொலம்பியா பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோய்சின் காமன், "எதிர்காலத்தில் நாடுகளின் வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் பாதிப்புகள் உள்ளேயும் எதிரொலிக்கும்" என்றார்.  ஆய்விதழ் கட்டுரையில், அலாஸ்கா பகுதியில், வெப்பமயமாதலின் பாதிப்பால் மீத்தேன், கார்பன் அளவு சற்றே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது ஆண்டு வானிலை ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் ஆகும். அதிகளவு பசுமை இல்ல வாயுக்கள் உயராத காரணத்தால் சூழலியலாளர்கள் நிம்மதி பெரு

இந்திய மாணவர்களுக்கு உதவும் இ கல்வித்திட்டங்கள்!

படம்
  அரசின் இணையவழி கல்வித் திட்டங்கள் பிஎம் இ வித்யா 2020ஆம் ஆண்டு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வித் திட்டம். இதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். தீக்ஷா அறிவை டிஜிட்டல் வழியில் பகிர்ந்துகொள்வதற்கான வலைத்தளம் என திட்டத்தை மொழிபெயர்க்கலாம். 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வசதி. பாடநூல்களில் உள்ள க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்தால் போதும். உடனே என்சிஇஆர்டி பாடநூல்களை படிக்க முடியும். இதனை 18 மொழிகளில் அணுக முடியும் என்பது முக்கியமான சிறப்பு அம்சம்.  நிஷ்த்தா இது ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம். தேசிய அளவில் நடத்தப்படுகிறது. 11 மொழிகளில் இதனை ஆசிரியர்கள் கற்றுக்கொண்டு மாணவர்களுக்கு சிறப்பாக பாடங்களை நடத்தலாம்.  ஸ்வயம் 9ஆம் வகுப்பு முதல் முதுகலைப் படிப்பு வரையிலான பல்வேறு பாடங்களை ஆன்லைன் வழியாக கற்கலாம். இதனை யாரும் எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகி பாடங்களை கற்க முடியும் என்பது முக்கியமான அம்சம். பாடங்கள் அனைத்தும் இன்டராக்டிவானவை என்பதோடு இலவசம் என்பதையும் மனதில் குறித்துக்கொள்ளுங்கள்.   கடந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் பத்து மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் இதில் இணைந்தன

உண்மையைப் பேசத் தயங்கும் ஊடகங்கள்! - இந்தியாவில் சிறப்பாக நடக்கும் சம்பவங்கள் - ஆகார் படேல்

படம்
அண்மையில் என்டிடிவி தொகுப்பாளர் ரவிஷ்குமார் ஒரு செய்தியை சொன்னார். இன்றைய ஊடகங்கள் எதில் கவனம் செலுத்தவேண்டுமோ அதனை செய்வதில்லை என்றார். அது உண்மைதான். இன்னும் சில மாதங்கள் நாம் பாஜகவின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியை பார்க்கப்போகிறோம். இது ஒரு ஆட்சிக்கு நீண்ட காலம். அவர்கள் செய்ய நினைத்த திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றியிருக்கமுடியும். இப்படி ஏதாவது செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.  பொருளாதார ரீதியாக நிறைய சீர்திருத்தங்கள் செய்திருக்கிறார்கள் என்று கூறி வந்தார்கள். பல்வேறு விலைபோன ஊடகங்களும் அதனை அப்படியே ஊதுகுழலாக ஒப்பித்தன. ஆனால் பொருளாதாரம் முன்னெப்போதையும் விட பாதிக்கப்பட்டுள்ளது. இதோடு ஒப்பிடுகையில் சீனா, தைவான், சிங்கப்பூர், தென்கொரியா ஆகிய நாடுகள் சிறப்பாக உள்ளன. அவ்வளவு தூரம் கூட போக வேண்டாம். 2014இல் இந்தியாவை விட உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 50 சதவீதம் பின்தங்கிய வங்கதேசம் இன்று நம்மை விட முன்னேறியுள்ளது. இதேபோல வியட்நாம் நாட்டையும் சொல்லலாம்.  உற்பத்தித்துறை சார்ந்த வேலைகள் மிகவும் குறைந்துவிட்டன. இப்போது மிச்சமிருப்பது விவசாயம் மட்டுமே. தற்போது அதில்தான்

2020 நம்பிக்கை இளைஞர்கள் விருது! - த.சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  வலி உணர்த்தும் நிஜம்! 1.5.2021 அன்புள்ள நண்பர் சீனிவாசனுக்கு, வணக்கம். பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன். விகடனில் வரும் அண்டன் பிரகாஷின் தொடரைப் படித்து வருகிறேன். நிறைய விஷயங்களை அவர் இதில் எளிமையாக விளக்குகிறார். இந்தியாவைப் பற்றிய செய்திகள் பலவும் மோசமான எதிர்மறை செய்திகளாகவே இருக்கிறது. இதற்கு நாட்டை ஆள்பவர்களைத்தான் கோபித்துக்கொள்ள வேண்டும். வார இதழ்கள், நாளிதழ்கள் என்ன செய்ய முடியும்?   வலி நிவாரணி பற்றிய நூல் ஒன்றை இணையத்தில் தரவிறக்கினேன். கொரிய தொடர் ஒன்றில் வலி நிவாரண மருத்துவம் பற்றி அறிந்தேன். அதற்கென தனி துறையே இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மனதை நெகிழ்ச்சியாக்கிக் கொண்டு தளர்வாக்கிக் கொள்ள அதிகளவு மருந்துகளைப் பயன்படுத்துபவர்களைப் பற்றி நூல் பேசுகிறது. இதனைத் தடுப்பது எப்படி? இப்படி மருந்துகளை சாப்பிடுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை விவரிக்கிறார்கள். மருத்துவத்துறை சார்ந்த அடிப்படை அறிவையேனும் நூல்களின் வழியே எட்ட முடியும் என நினைக்கிறேன்.  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி அவரது செயலர் சஞ்சயா பாரு எழுதிய நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன். எழுபது பக்க

ஜெர்மனியின் அம்மா! - ஏஞ்சலா மேர்கல்

படம்
  ஏஞ்சலா மேர்கல் ஏஞ்சலா மேர்கல் முன்னாள் ஜெர்மனி அதிபர் தமிழ்நாட்டில் அம்மா எப்படியோ ஜெர்மனிக்கு ஏஞ்சலாதான் அம்மா. அந்தளவு செலவாக்கு பெற்றவர். ஐரோப்பிய யூனியன் என்ற அடையாளத்திற்கு ஜெர்மனியின் ஏஞ்சலாவும், பிரான்சின் மேக்ரானும்தான் தூதுவர்களாக இருந்தார்கள்.  1954ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று ஏஞ்சலா மேற்கு ஜெர்மனியின் ஹாம்பர்க் என்ற இடத்தில் பிறந்தார். 2005ஆம் ஆண்டு ஜெர்மனியின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர்.  இவரது பெற்றோர் பெயர் ஹார்ஸ்ட், ஹெர்லிண்ட் காஸ்னர். கணிதம், ரஷ்யமொழி ஆகியவற்றில் தேர்ந்தவர். கார்ல்மார்க்ஸ் பல்கலையில் இயற்பியல் படிப்பில் பட்டம் பெற்றார். 1986ஆம் ஆண்டு பிசிக்கல் கெமிஸ்ட்ரி பாடத்தில் முனைவர் பட்டம் வென்றார். 1989ஆம் ஆண்டு பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. அந்த சமயத்தில் டெமோக்ரடிக் அவேக்கனிங் என்ற கட்சியில் சேர்ந்தார். 1990ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று, பண்டேஸ்டாக் எனும் நாடாளுமன்றத்தில் உறுப்பினரானார்.  பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான துறையின் அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு ஏஞ்சலாவுக்கு சூழல் அணு பாதுகாப்பு துறையில் பதவ

5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா எட்டிப்பிடிக்க வழிகள்! - சேட்டன் பகத்

படம்
  ரேஷன்கார்டில் வழங்கும் இருபது பொங்கல் பொருட்களை வாங்க அடிதடி நடக்கும் நேரம். தடுப்பூசி சான்றிதழை காட்டினால்தான் பொருட்கள் கிடைக்கும் என அரசு மக்களை மிரட்டிக்கொண்டிருக்கிறது.  இதே நேரத்தில்தான் போரம் மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ என நாடு முழுக்க உள்ள பல்வேறு மால்களில் தடுப்பூசி சான்றிதழ்களை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். கூட்டமும் இரண்டு வருஷம் அடைச்சு வெச்சீங்களேடா என மால் முழுக்க சுற்றி வருகிறது. புத்தகங்களை படிக்க இல்லாமல் அடுக்கி வைக்க கூட வாங்குவார்கள் அல்லவா அதுபோல, குலாப் ஜாமூன், பஜ்ஜிமாவு மிக்ஸ் என மயிலை மாமா அள்ளிக்கொண்டு இருக்கிறார். உலகம் அழியப் போகிறதா இல்லை அடுத்த வைரஸ் வந்துவிட்டது. அதற்குள் எல்லாவற்றையும் செய்துவிடலாம் என மக்கள் நினைக்கிறார்கள். இதை அரசு லாபமாக பார்க்கிறது. அதாவது பொருளாதாரம் வளர்ந்துகொண்டிருக்கிறது ப்ரோ? வேலைக்கு போகிறார்களா அல்லது இந்தியாவை விட்டு தப்பி யோடுகிறார்களா என்று தெரியாதபடி கூட்டம் விமானங்களில் அள்ளுகிறது. அங்கேயும் ஃபுட்போர்டு அடிக்கும், ஸ்டேண்டிங்கில் நிற்கும் சீட்டுகள் விற்றால் கல்லா கட்டலாம் போல. ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்ததும் நடந

சாதிரீதியான கணக்கெடுப்பு பயன்களை கொடுக்குமா?

படம்
  மத்திய அரசு சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை எடுக்க வேண்டுமென பீகாரின் நிதிஷ்குமார் குரல் எழுப்பினார். ஆனால் ஒன்றிய அரசு அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. செப்டம்பர் 23 அன்று மகாராஷ்டிர அரசு இதுபற்றி வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. அதாவது,ஒன்றிய அரசு சாதிரீதியான கணக்கெடுப்பை எடுக்க வேண்டுமென மகாராஷ்டிர மாநில அரசு கோரியுள்ளது 2011ஆம் ஆண்டு சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இதுபற்றிய தகவல்கள் வெளிப்படையாக மக்களுக்கு அளிக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த ஜனதாதளம் கட்சி ஒன்றிய அரசு தனது முடிவை பரிசீலனை செய்யவேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கு ஒடிஷாவின் நவீன் பட்நாயக்கும், ஜார்க்கண்டின் ஹேமந்த் சோரன் ஆகியோர் இதனை ஆதரிக்கின்றனர். பாஜக சாதி ரீதியான கணக்கெடுப்பிற்கு முழுக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாநில கட்சிகளின் குரல்களை ஆதரிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.  2011ஆம் ஆண்டு சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் அதுதொடர்பான விவரங்களை ஏன் தர முடியாது, நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடக்கூடாது, சாதிரீதியான கணக்கெடுப்புகளை நடத்துவதற்கான கட்டமைப்பு அரசிடம் இல்

காந்தியின் பொருளாதார அறிவு உலகைக் காப்பாற்றுமா? - நூல் அறிமுகம்

படம்
  ஸ்கேரி ஸ்மார்ட் மோ காவாதத் பான் மெக்மில்லன் 699 மனிதர்கள் எழுதும் அல்காரிதப்படிதான் எந்திரங்கள் இயங்குகின்றன. இதன் செயல்பாடு பற்றி இன்னும் நாம் புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. இதனைப் பற்றி ஆசிரியர் விளக்கி எழுதியுள்ளார்.  ஷட் டவுன் ஆடம் டூஸ் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் 899 பொதுமுடக்கம் வந்தபிறகு நாடுகளின் பொருளாதாரம் 1929ஆம் ஆண்டுக்கு முன்னர் சென்றுவிட்டது. பணம், தங்கம் என பலவற்றையும் செலவு செய்யும் நிலைக்கு நாடுகள் வந்துவிட்டன. பெருந்தொற்று காரணமாக மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டு நாடுகளின் செயல்பாடுகள் தடைபட்டுள்ளன. இப்படி உலகம் முழுக்க நடந்த விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார் ஆசிரியர்.  பெரில் பாப் வுட்வர்ட் ராபர்ட் காஸ்டா சைமன் ஸ்ஹஸ்டர் அமெரிக்காவில் டிரம்ப் தேர்தலில் தோற்றபிறகு பைடன் ஆட்சிக்கு வருகிறார். அவருடைய காலம் வரலாற்றில் மிக மோசமானதாக அமைந்துவிட்டது. இருநூறு பேர்களுக்கு மேல் நேர்காணல் கண்டு அரசியல் சிக்கல்களை பேசியுள்ளனர். எகனாமிஸ்ட் காந்தி ஜெய்திர்த் ராவ் பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  499 இன்றும் பொருளாதார நூல்களில் காந்தியப் பொருளாதாரத்தை பற்றி மாணவர்கள் படிக்கிறார்கள். காந்தி வறுமைய

இந்தியப் பொருளாதாரத்தை வாழ வைக்கும் ஐஐடி! - இந்தியா 75

படம்
இந்தியாவின் ஜனநாயக சிற்பிகளில் ஒருவரான நேரு, அடிக்கல் நாட்டி  எழுப்பிய ஐஐடிகள், முக்கியமான கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளன. இதில் படித்து நிறைய மதிப்பெண்களை எடுப்பவர்கள் வெளிநாடுகளில் மதிப்புமிக்க பணிகளில் உள்ளனர். இந்த கல்வி நிறுவனங்களின் பொருளாதார மதிப்பு பத்து ட்ரில்லியன்கள் என மதிப்பிட்டுள்ளனர். ஐஐடிகான பணிகள் 1950களில் தொடங்கியது.  1951இல் காரக்பூர் ஐஐடி தொடங்கப்பட்டது. இன்று அந்த நிறுவனம் தொடங்கி எழுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. முதலில் இங்கு பொறியியல் கல்லூரியை தொடங்கவேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷாரின் காலத்தில், எதிர்கால இந்தியாவின் வளர்ச்சி என்பது தொழில்நுட்பமாகவே இருக்கும் என கணித்திருக்கின்றனர். அப்போதைய வைசிராயின் கௌன்சிலில் இடம்பெற்ற உறுப்பினர் ஆர்டெசிர் தலால் இதனை எழுதியிருக்கிறார்.  உலகப்போர் 2 முடிந்தபிறகு, நளினி ரஞ்சன் சர்க்கார் கமிட்டி தொழில்நுட்ப கழகங்களை அமைக்கவேண்டும் என்று அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தனர்.  சுதந்திரம் பெற்றபிறகு, நேரு தொழில்நுட்ப கழகங்களை உருவாக்க வேகம் காட்டினார். அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம்தான் இந்தியா

மதம் சார்ந்து மக்களை புறக்கணித்தால் பொருளாதார வளர்ச்சி கிடைக்காது! ப.சிதம்பரம்

படம்
  ப.சிதம்பரம் எம்.பி. ராஜ்ய சபா காங்கிரஸ் அரசு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதார சீர்திருத்தங்களை அமல் செய்தது. இப்போது அதன் நிலை பற்றி தங்கள் கருத்து என்ன? கடந்த முப்பது ஆண்டுகளாக பொருளாதார சீர்த்திருத்தங்களால் நிறைய ஏற்ற இறக்கங்கள் நடைபெற்றுள்ளன. முக்கியமான சீர்திருத்தங்கள் வந்துள்ளன. சில மோசமான முடிவுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2004-2010 காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக ஏற்பட்டுள்ளது. 2018-2021 வரையிலான காலகட்டத்தில் வளர்ச்சி தடைபட்டுள்ளது. நான் சீர்த்திருத்தங்கள் பற்றிய கலவையான எண்ணங்களைக் கொண்டுள்ளேன். அரசு இப்போது பொருளாதார வளர்ச்சி மீது கவனம் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.  இப்போதுள்ள மத்திய அரசு தேர்தலுக்காக மக்களை பிரிப்பது, பிரிவினைவாத த்தை ஆதரிப்பது என செயல்பட்டு வருகிறது. மக்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் அரசு பொருளாதார சீர்திருத்தங்களை செய்யவேண்டாம் என நினைக்கிறார்கள். முழு நாட்டில் உள்ள மக்களுமே வறுமை சூழலில் பயத்துடன் புறக்கணிப்பட்டவர்களாக  வாழ்ந்து வருகிறார்கள்.  கடந்த முப்பது ஆண்டுகளில் வருமானம் அதிகரித்துள்ளது. அதேசமயம் குவிகிற செல்வத்தினால் பாகுப

கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களின் கையிலிருந்து அரசியல்வாதிகளின் கைகளுக்கு போய்விட்டது! அமர்த்தியாசென்

படம்
  அமர்த்தியா சென் பொருளாதார வல்லுநர் பெருந்தொற்றுகாலம் உங்களது கல்வி கற்பித்தலை எப்படி பாதித்துள்ளது? நான் நேரடியாக மாணவர்களுடன் உரையாடி பாடம் கற்றுத்தருவதை மட்டுமே விரும்புகிறேன். ஆனால் பெருந்தொற்று காரணமாக அனைத்தும் ஜூமில்தான் நடைபெறுகிறது. இதனால் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது  என்று தெரியவில்லை. இப்போது நான மாசாசூசெட்ஸ் வீட்டிலேயே தங்கும்படி ஆகிவிட்டது. சாந்தி நிகேதனிலுள்ள எனது சிறிய வீட்டிற்கு நான் செல்ல விரும்புகிறேன்.  உங்களது நூலில் இளமைக்காலத்தில் நீங்கள் செய்த பயணம், பார்த்த ஆறுகள் என பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். அறிவுப்பூர்வமான பயணமாக இக்காலகட்டம் அமைந்ததா? சாந்தி நிகேதன் எப்போதும் அமைதியாக இருக்கும். எனது ஆளுமைக்கு அது உதவியது. அங்கு மாணவர்கள் சுயமாக கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்கினார்கள். தேர்வில் முன்னணியில் வரவேண்டும் என்பது முக்கியமல்ல. டாகாவில் உள்ள செயின்ட் கிரிகோரி பள்ளியில் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற ஊக்குவித்தனர். எனக்கு நான் படித்த இரண்டு பள்ளிகளுமே பிடிக்கும்தான் என்றாலும் சாந்தி நிகேதன் கொடுத்த சுதந்திரம் உலகை அறிய உதவியது.  அங்குள்ள