இடுகைகள்

விண்வெளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தி எகனாமிஸ்ட் இதழின் புத்தக தேர்வுகள் 2020!

படம்
                      புத்தகம் புதுசு எ டாமினென்ட் கேரக்டர் சமந்த் சுப்ரமணியன் , டபிள்யு . டபிள்யு நார்டன் அட்லாண்டிக் புக்ஸ் இந்த புத்தகத்தில் இங்கிலாந்தில் அறிவியல் வளர்ந்த விதம் பற்றி ஆசிரியர் விளக்குகிறார் . அரசியலும் அறிவியலும் எப்படி ஒன்றாக கலந்து மாற்றங்களை ஏற்படுத்தின ஆசிரியர் சுவாரசியமாக விளக்கியுள்ளார் . பிரைவசி இஸ் பவர் காரிசா வெல்ஸ் தனிநபர்களின் தகவல்களை பெரு நிறுவனங்கள் திரட்டுவது ஏற்படுத்தும் ஆபத்துகள் பற்றி பேசுகிற நூல் இது . நூலை படிக்கும்போது பதற்றம் ஏற்படுவதற்கு பதிலாக இப்பிரச்னையை சூதானமாக எப்படி எதிர்கொள்வது என யோசிக்க வைக்கிறது . அப்போலோ ஏரோ நிக்கோலஸ் கிரிஸ்டாகிஸ் லிட்டில் ப்ரௌன் பெருந்தொற்று எப்படி நம் வாழ்க்கையில் சமூக , பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது என ஆய்வுப்பூர்வமாக ஆசிரியர் எழுதியுள்ளார் . புதின் பீப்புள்ஸ் கேத்தரின் பெல்டன் பாரர் ஸ்ட ்ராஸ் அண்ட் கிரோக்ஸ் ரஷ்ய அதிபரான புதின் பற்றி ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுளன . அவற்றுள் இந்த நூல் அவருக்கு நெருக்கமான ஆட்களைப் பற்றிப் பே

புத்தகம் புதுசு! மனிதர்கள் சுயநலமானவர்கள், கெட்டவர்கள் அல்ல என்பதை வரலாறுரீதியாக சொல்லும் படம் !

படம்
              புத்தகம் புதுசு எக்ஸ்பிளெய்னிங் ஹியூமன்ஸ் வாட் சயின்ஸ் கேன் டீச் அஸ் அபவுட் லைஃப் , லவ் , ரிலேசன்ஷிப் டாக்டர் கமில்லா பாங் டாக்டர் கமில்லா தன்னுடைய இளம் வயது ஆட்டிச வாழ்க்கை , ஏடிஹெச்டி பிரச்னை ஆகியவற்றை விவரித்துள்ளார் . நோய் பற்றிய பயம் எப்படி வாழ்க்கையை குலைக்கிறது என்பதை விளக்கி நம்பிக்கை தருகிறார் .    தி எண்ட் ஆப் எவ்ரிதிங் டாக்டர் கேட்டி மாக் விண்வெளி பற்றி நமக்கு தெரிந்த விஷயங்கள் , தெரியாத விஷயங்கள் என பலவற்றையும் கேட்டி மாக் விளக்கியுள்ளார் . ஸ்டிரிங் தியரி முதல் குவாண்டம் மெக்கானிசம் வரையில் பல்வேறு விஷயங்களை அழகாக எழுதியுள்ளார் . வாயேஜ் த்ரூ ஸ்பேஸ் கேட்டி பிளின்ட் அண்ட் கொர்னெலியாலி விண்வெளியில் உள்ள பல்வேற விஷயங்களைப்பற்றி அழகான வண்ண படங்களுடன் விளக்கியுள்ள நூல் இது . விண்வெளியின் தொடக்கம் பற்றி பேசியுள்ள நூல் இது . சூரிய குடும்பம் கண்டறியப்பட்டது முதல் இருளில் குளிர்ச்சியில் உறைந்துள்ள கோள்கள் பற்றியும் கூறப்படுகிறது . கே அனாடமி - எ கம்ப்ளீட் கைட் டு தி ஹியூமன் பாடி டாக்டர் ஆடம் கே திஸ் இஸ் கோய

விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகள்

படம்
              விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகள் எட்வின் ஹப்பிள் இவர் 1927ஆம் ஆண்டு பிரபஞ்சத்தில் தொலைதூரத்தில் உள்ள விண்மீன்களை கண்டுபிடித்து அதுபற்றிய ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டார். ஆனால் அப்போது அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. ரால்ப் ஆல்பர், ராபர்ட் ஹெர்மன் ஆகிய இருவரும் 1948ஆம் ஆண்டு பிரபஞ்சத்தில் வெளியாகும் கதிர்வீச்சு, அதன் வெப்பநிலை பற்றி கண்டுபிடித்தனர். -268 டிகிரி செல்சியஸ் என உறுதி செய்தனர். 1964 ஆம் ஆண்டு அர்னோ பென்ஸியாஸ், ராபர்ட் ஆகியோர் பலவீனமான ரேடியோ ஒலி ஒன்றை பதிவு செய்தனர். பின்னர் அது பெருவெடிப்பில் உருவான கதிர்வீச்சில் உருவானது என விளக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு கோப் காஸ்மிக் பேக்கிரவுண்ட் எக்ஸ்ப்ளோரர் சாட்டிலைட் , பிரபஞ்சத்தில் உள்ள கதிர்வீச்சை கண்டுபிடித்தது. பெருவெடிப்பு சார்ந்த கதிர்வீச்சு இதற்கு காரணம் எனவும், அதன் துல்லியத்தன்மையும் பின்னர் கண்டறியப்பட்டது. 2001ஆம் ஆண்டு வில்கின்சன் மைக்ரோவேவ் புரோப் விண்வெளியில் ஏவப்பட்டது. இதன்மூலம் பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் என கணிக்கப்பட்டது. பிபிசி  

எதிர்காலத்தில் போர்க்களத்தில் அதிகம் பயன்படும் டிரோன் விமானங்கள்!

படம்
      இன்று மனிதர்கள் செல்லமுடியாத இடங்களுக்கு டிரோன்கள் செல்கின்றன. பணிகளை முடிக்கின்றன. தீவிரவாதிகளை கண்டறிந்து களையெடுப்பது, முக்கியமான இடங்களை கண்டறிவது, பாதுகாப்பு பணிகளை செய்வது, இயற்கை பேரிடர் ஏற்பட்ட இடங்களை பார்வையிடுவது ஆகியவற்றுக்கும் டிரோன்களை பயன்படுத்தி வருகிறார்கள். உளவாளி இங்கிலாந்தில் தரானிஸ் என்ற பெயரில் டிரோன் ஒன்றை தயாரித்து இருக்கிறார்கள். இதன் வேகம் 1,127 கி.மீ. இதனை ரேடார் மூலம் கூட பார்க்க முடியாது. விரைவில் போர்க்களத்தில் டிரோன்கள் நிறைய பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகள் 2015ஆம் ஆண்டு தொடங்கிவிட்டன. க்வாட்காப்டர் எனும் ஆயுதம் தாங்கிய டிரோன்கள் மூலம் குறிப்பிட்ட ஆட்களை கூட திட்டமிட்டு கண்காணித்து கொலை செய்யமுடியும். இதுபற்றி எலன் மஸ்க், ஸ்டீவ் வோஸ்னியாக்கி ஆகியோர் இப்போதே எச்சரித்து விட்டார்கள். அமெரிக்கா இத்தகைய தாக்குதல்களை தீவிரவாதிகளிடம் சோதித்து பார்க்க தொடங்கிவிட்டார்கள். டிரோனை ஒருவர் அமெரிக்காவில் இருந்தே இயக்கினால் போதும். சேதம் குறைவு பாருங்கள். உடைந்தாலும் டிரோன் மட்டும்தான் போகும். இலக்கை சரியானபடி தாக்குவதும் எளிது.. விண்வெளி ஆய்வு நாசா ப

சி்ம்பயோட்டிக் மிருகத்தை வைத்துக்கொண்டு வாழ நினைக்கும் விண்வெளி வீரனின் பரிதாப கதை! - ஸ்புட்னிக்

படம்
        ஸ்புட்னிக்   ஸ்புட்னிக்  Director: Egor Abramenko Writer(s): Oleg Malovichko, Andrei Zolotarev ரஷ்யாக்காரர்கள் எடுத்த ஏலியன் பற்றிய படம் வெனோம் படம் பார்த்திருப்பீர்கள். அதே கான்செப்ட்தான். விண்வெளிக்குச் சென்று பூமிக்கு திரும்புகிற வழியில் சிம்பயாட்டிக் உயிரி விண்கலனில் புட்போர்ட் அடித்து ஏறிவிடுகிறது. அது நாயகன் உடலில் புகுந்துகொள்கிறது. அவனது நண்பனைக் கொன்று தின்றுவிடுகிறது.  பூமியில் தரையிறங்குபவர்களில் நாயகனுக்கும் கூட படுகாயம் ஏற்படுகிறது. ஆனால் மருத்துவமனையில் அவரை சிகிச்சையளிக்கும்போது, இரண்டே நாட்களில் உடலின் காயங்கள் ஆறுகின்றன. எப்படி என அவரை சோதிக்கின்றனர். அவருக்குள் உள்ள வேற்று உயிரியை கண்டுபிடித்துவிடுகின்றனர. அதனை எப்படி சோதிக்கின்றனர், நாயகன் இப்பிரச்னையிலிருந்து மீண்டாரா என்பதுதான் கதை. இதில் முக்கியமான பாத்திரம் உளவியலாளராக நடித்துள்ள நாயகிக்குத்தான்( Oksana Akinshina ) அதிக முக்கியத்துவம் உள்ளது. ராணுவ ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் விஷயங்களை மெல்ல புரிந்துகொண்டு அதிர்ச்சியாவது, நாயகனை காப்பாற்ற பிரம்ம பிரயத்தன முயற்சிகளை செய்வது, இறுதியில் நாயகன் எடுக்கும் முட

உலக வல்லரசுகளின் செயற்கைக்கோள் போர்!

படம்
விண்வெளியில் செயற்கைக்கோள் போர்!   விண்வெளியிலுள்ள புவி வட்டப்பாதையில் பல்வேறு நாடுகளும் தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களை நிறுத்துவதற்காக போட்டியிட்டு வருகின்றன.  இன்று உலக நாடுகள், தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் போன்றவற்றையும் செயற்கைக்கோள் மூலம் கட்டுப்படுத்தி வருகின்றனர். நாட்டின் பல்வேறு துறைசார்ந்த வளர்ச்சியிலும் செயற்கைக்கோள்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதன் விளைவாக பல்வேறு நாடுகளும் விண்வெளியிலுள்ள புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த போட்டியிட்டு வருகின்றன. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஐரோப்பா நாடுகள் முன்னிலையில் உள்ளன.  1978ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி மையம் நேவ்ஸ்டார் 1 என்ற ஜிபிஎஸ் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இதற்குப்பிறகு பல்வேறு நாடுகளும் ராணுவம், தகவல்தொடர்பு, விவசாயம் என பல்வேறு காரணங்களுக்காக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகின்றன.  அண்மையில், அமெரிக்க விமானப்படை தனது பிளாக் 3 செயற்கைக்கோள்களை மேம்படுத்த 4 பில்லியன் டாலர்களை செலவிட முடிவு செய்துள்ளது. ”விண்வெளியில் சரியான இடத்தில் செயற்கைக்கோள்களை நிறுத்துவதன் மூலம் நாட்டிலுள

விண்வெளியிலுள்ள வேலைகள்! - பட்டதாரிகள் இதற்கும் விண்ணப்பிக்கலாம்

படம்
pixabay எக்ஸ்ட்ராடெரஸ்டரியல் சர்வேயர் விண்வெளியில் உள்ள கோள்களை ஆராயும் பணி. விண்வெளியில் சுற்றும் கற்களை, கோள்களைக் கண்டுபிடித்து அதிலுள்ள கனிமங்களை ஆராய முடியுமா என ஆராய்வார்கள். இப்பணியை இந்த பணியிடத்திற்கு வருபவர் செய்ய வேண்டும். ஆஸ்டிராய்டு மைனர் கோள்களை துளையிட்டு கனிமங்களை அகழ்ந்து எடுக்கும் பணியை செய்ய வேண்டும். ஆபத்தான பணிதான். ஆனாலும் நம் எதிர்காலத்தை உறுதி செய்வது இவரின் அர்ப்பணிப்பான பணிதான். அட்மாஸ்பியர் ஓவர்சீயர் பூமியை ஒத்த வேறு கோள்கள் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து, அதில் உள்ள வாயுக்களின் தன்மையை ஆராய வேண்டும். இவரின் ஆய்வுதான் கோளின் தன்மையை பிறருக்குச் சொல்லும். கம்யூனிகேஷன் மற்றும் நேவிகேஷன் ஸ்பெஷலிஸ்ட்!  இந்தியோ, தமிழோ, தெலுங்கோ எந்த மொழியாக இருந்தாலும் சரி. விண்வெளியில் பேசியே ஆகவேண்டும். அப்போதுதான், அவர் சரியான பாதையில் நகர்ந்து செல்கிறாரா இல்லையா என்பதை உறுதி செய்ய  முடியும். இல்லையென்றால் அவர் விண்கலத்துக்கு சரியாக வரமுடியாமல் போகும் வாய்ப்பும் உண்டு. புரோபல்சன் இஞ்சினியர்! இஞ்சின் சூடாகி விட்டதா, கதிரியக்க பாதிப்பு உண்டா,

மரபணு மாற்ற உயிர்களை பிறகோள்களில் உருவாக்க முடியுமா?

படம்
பிபிசி மிஸ்டர் ரோனி பூமியில் உருவாக்கிய மரபணு மாற்ற உயிர்களை நாம் பிறகோள்களில் காப்பாற்ற முடியுமா? இம்முறையில் யோசிப்பது நல்ல விஷயம்தான். ஆனால் டிஎன்ஏ முறையில் நாம் புதிய உயிரிகளை உருவாக்கினால் அவை வாழ்வதற்கு நீர் தேவை. வெள்ளியில்  நீரும் கிடையாது பனிக்கட்டியும் கிடையாது. வியாழனில் உள்ள யூரோபா நிலவில் நீர் உள்ளது. இதில் நாம் உயிர்களை உருவாக்க வாய்ப்புள்ளது. செவ்வாய் கோளில் பாக்டீரியா தாக்குப்பிடித்துவிட்டது. சாக்கடல், அன்டார்க் பகுதியிலும் கூட நுண்ணுயிரிகள் உள்ளன. நீர் இருந்தால் அக்கோளுக்கு ஏற்றபடி உயிர்களை நம்மால் உருவாக்க முடியும். நன்றி - பிபிசி

விண்வெளியில் குழந்தைகள் பிறக்குமா?

படம்
நேர்காணல் டாக்டர் எக்பர்ட் எடில்புரோக் விண்வெளியில் குழந்தை பிறக்கும் என்கிறீர்களே எப்படி சாத்தியம்? பதினைந்து ஆண்டுகளில் சாத்தியம். ஐவிஎஃப் முறையில் குழந்தைகளை விண்வெளியில் பிறக்கும் சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறோம். இச்சோதனைகளை ஐந்து ஆண்டுகளில் முடித்தால், விரைவில் குழந்தைகளை நாங்கள் விண்வெளியில் பெற முடியும் என நிரூபிப்போம். நாங்கள் சொல்வதை நீங்கள் பேராசை என்று கூட நினைக்கலாம். ஆனால் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. குழந்தை அங்கு பிறக்கவில்லையென்றால், உங்களால் அங்கு வாழவும் முடியாது. எனவே இதற்கான தீர்வுகள் விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன். நிச்சயம் நீங்கள் கேலி செய்வீர்கள். ஆனால், மருத்துவம் ரீதியாக பல்வேறு தடைகள் இருக்கின்றன. இவற்றையும் தாண்டி நாங்கள் சாதிப்போம். பெண்களை அதுவும் கர்ப்பிணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்வது ஆபத்தானது இல்லையா? நிச்சயம் ஆபத்து உள்ளது. ஆனால் நாம் இந்த சோதனையை செய்யாமல், குழந்தைகளை பிறக்க வைக்க முடியாது. இதுவும் இப்போதே நடைபெறப்போவது இல்லை. பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகுதான் இவை நடந்தேறும். படிப்படியாக நாங்கள் இதைச் செய்கிறோம

வெள்ளியில் வாழ முடியுமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி நாம் வெள்ளி கோளுக்கு சென்று, அதன் வான்பரப்பில்  விண்கலத்தில் வசிக்க முடியுமாழ சயின்ஸ் பிக்சன் படமாக வேண்டுமானால் இதனை முயற்சிக்கலாம். காரணம், அப்படி விண்கலத்தில் மனிதர்கள் வாழ்வது ஆபத்தானது. மேலும் மிதக்கும் நகரங்கள் பெரும் செலவு பிடிப்பவை. வெள்ளி ஏறத்தாழ பூமியைப் போன்ற தன்மையைக் கொண்டவை. அறுபது கி.மீ தொலைவுக்கு பூமியைப் போன்ற ஈர்ப்புவிசை இருக்கும். இதனால் ஆராய்ச்சியாளர்கள் அப்படி நினைத்தார்கள். ஆனால் அது நிறைய நடைமுறைப் பிரச்னைகளைக் கொண்டிருந்ததால் தற்போது, செவ்வாய் பக்கம் திரும்பிவிட்டனர். எனவேதான் எலன் மஸ்க், அமேசான் பெசோஸ் உட்பட செவ்வாயை காலனியாக்கி மனிதர்களை குடிவைக்க திட்டமிட்டு வருகின்றனர்.இப்போதைக்கு வீனஸ் வாழ்க்கை என்ற பெயரில் சயின்ஸ் ஃபிக்ஸன் படம் மட்டுமே எடுக்க முடியும். ஆராய்ச்சிகள் அந்த வேகத்தில்தான் போய்க்கொண்டிருக்கிறது. நன்றி - பிபிசி

ரேடியோ அலைகளைப் பற்றி அறிய புதிய நூல்!

படம்
விண்வெளியில் உள்ள விஷயங்களை கண்டறிய நம் வாழ்நாள் போதாது. காரணம் அத்தனை மர்மங்களை நம் தலைக்கு மேலுள்ள உலகம் கொண்டுள்ளது. இந்த நூல் ரேடியோ அலைகளின் மூலம் நாம் அறிந்துள்ள விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. ரேடியோ அலைகளை எப்படி நாம் பெறுகிறோம், அதற்கான ஆன்டெனாக்கள், அதன் சிக்னல்கள் என நூல் விரிவாக ஏராளமான தகவல்களோடு எழுதப்பட்டுள்ளது. வானியல் பற்றி ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் வாங்கிப் படிக்கலாம்.

விண்வெளிச்சட்டங்களை மதிக்க வேண்டுமா? - விண்வெளி கேள்வி பதில்கள்!

மிஸ்டர் ரோனி நியூட்ரான் நட்சத்திரமும் கருந்துளையும் ஒன்றா? ஒன்றுபோல இதன் உருவாக்க செயல்முறை உள்ளது. நியூட்ரான் எரிபொருள் தீர்ந்ததும் நட்சத்திரம் அதன் ஈர்ப்புவிசையால் உள்ளுக்குள் நொறுங்கி அழிகிறது. அதிலிருந்துதான் நியூட்ரான் நட்சத்திரமும், கருந்துளையும் தோன்றுகின்றன. முழுக்க அழியாத நட்சத்திரத்திலிருந்து நியூட்ரான் நட்சத்திரங்கள் உருவாகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கருந்துளையின் தோற்றத்தையும் இப்படி வரையறுக்கின்றனர். இதுபற்றி ஆராய்ச்சிகளின்படிதான் இவற்றைப் பார்க்கவேண்டும். அதுவரை கருந்துளையும் நியூட்ரான் நட்சத்திரமும் மர்மமாகவே இருக்கும். நட்சத்திர தூசுகள் என்பதை எப்படி அறிவது? அவை நட்சத்திரங்களின் அழிவு, மோதல் உள்ளிட்ட காரணங்களால் உருவாகி பால்வெளி முழுக்க சுற்றிக்கொண்டிருக்கின்றன. பூமியில் அதனை கடலின் அடுக்குகளில் காணலாம். இரும்பு -60 என்பது பூமியில் கிடைக்காத கனிமம். தற்போது இதனைக் கண்டெடுத்து ஜெர்மனியில் ஆராய்ந்து வருகிறார்கள். பெருவெடிப்புக்கு முன்னதாக பூமிக்கு வந்ததா என ஆராய்ந்து வருகிறார்கள். விண்வெளிக்காக நாம் உருவாக்கிய ஒப்பந்தங்கள் சட்டங்கள் எல்லாம் 19

விண்வெளி சாதனை செய்த ஓரினச்சேர்கையாளர்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் சாலி ரைட் அமெரிக்காவின் முதல் பெண் விண்வெளி வீரர். விண்கலன் இயக்குநர் என்ற பெருமை கொண்ட இவரால், பல நூறு பெண்கள் அறிவியல்துறையைத் தேர்ந்தெடுத்தனர். இவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதையும் எங்கும் மறைக்கவில்லை. தன் பணியோடு தனிப்பட்ட வாழ்க்கையை தூரமாக வைத்திருந்தார். டாம் ஓ சானெசி என்ற பெண் துணையை  எழுத்துப்பணி, ஆராய்ச்சிப்பணி, குடும்பம் எங்கும் மறைக்காமல் இருந்தார். இருவரும் சேர்ந்து எழுதினர், ஆராய்ச்சி செய்தனர். சாலி ரைட் சயின்ஸ் நிறுவனத்தில் இணை நிறுவனர் டாம்தான். சாலி, தன் வாழ்க்கையை பெரியளவு யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. அதேசமயம் தன்னை மறைத்துக்கொண்டு சாதனைகளை விளம்பரப்படுத்திக்கொள்ளவும் இல்லை. நாசாவில் அவர் முதல் பெண் ஆய்வாளராக பணிபுரிந்தார். அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது அங்கு தெரிந்த செய்தியாகவே இருந்தது என செய்தியைப் பகிர்கிறார் சாலி ரைட்டின் சுயசரிதையை எழுதிய எழுத்தாளரான லின் ஷெர். சாலி, கணையப் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். நன்றி: அவுட்.காம் தமிழில்: வின்சென் காபோ

சந்திரயான் ஸ்பெஷல்!- நோக்கம் என்ன?

படம்
சந்திரயான் 2 ஏவப்பட்டதன் நோக்கம்! இஸ்ரோ நிறுவனம், சந்திரயான் 1யை விண்ணுக்கு அனுப்பி நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது உலக நாடுகள் நிலவை ஆராய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன. காரணம், வெப்பமயமாதலால் பூமி பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. பூமியில் நீராதாரம் குறைந்து வருவதும், மக்கள் வாழ்வதற்கான இயற்கை வளங்கள் அரிதாகி வருவதும் முதன்மைக் காரணங்கள். இந்தியா, நிலவை ஆராய சந்திரயான் 2 வை அனுப்பி வைக்க 2018 ஆம் ஆண்டிலிருந்து  முயற்சித்து வருகிறது. ஆனால், தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக சந்திரயான் விண்ணுக்கு ஏவப்படுவது தள்ளி வைக்கப்பட்டு வந்தது. விண்ணில் ஏவப்பட்டு 52 நாட்களுக்குப் பிறகு நிலவின் தரைப்பரப்பில் சந்திரயான் 2 விண்கலம் இறங்கும். நாசா ஆய்வுக்கு அனுப்பிய விண்கலங்கள் ஈக்குவடார் பகுதியில் இறங்கின. சீனாவின் சாங் 4 விண்கலம் தெற்குத் துருவப் பகுதியில் இறங்கி நிலவின் மறுபுறத்தை சோதித்தது. இந்தியாவும் சீனாவின் வழியைப் பின்பற்றவிருக்கிறது. விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2, பதினாறு நாட்கள் பூமியின் வட்டப்பாதையை வலம் வரும்.

நிலவில் ராக்கெட்டுகளை தாக்கும் தூசு மண்டலம்!

படம்
நிலவுக்குச் செல்ல அனைவரும் இன்று தயாராக இருக்கின்றனர். மனிதர்களை அனுப்ப இந்தியா தயாராக இருக்கிறது. நிலவுக்கு மனிதரகள் என்ற கனவு இந்தியாவுக்கு 2022 இல் அது பாகுபலி ராக்கெட்டின் மூலம் நிறைவேறலாம். ஆனால் அதைவிட முக்கியமாக நிலவில் சுற்றிவரும் தூசு மண்டலம் ராக்கெட்டுகளில் கடுமையான கீறல்களை ஏற்படுத்தி வருகிறது. நிலவில் பல்வேறு குப்பைகள், தூசுகள் ஒன்று சேர்ந்த தோட்டாக்களின் வேகத்தில் சுற்றி வந்து கொண்டு இருக்கின்றன. இவை மேகம் போல உள்ளன. இதனை எப்படி சமாளிப்பது என்பதை நாம் கண்டுபிடிக்கும் அவசியம் உள்ளது என்கிறார் இயற்பியலாளர் பில் மெட்ஜர். அப்போலோ 11 விண்வெளி வீர ர்கள் நிலவில் இறங்கும்போது சிக்கல்களை சந்திப்பார்களா என்று ஆராய்ச்சியாளர்களுக்கு பயம் உள்ளுக்குள் இருக்கிறது. இதற்கு வேறெந்த வழியும் இல்லை. தூசுகள் குறைந்த இடத்தில் வலிமையான விண்கலங்களை தயாரித்து அனுப்பி இறங்குவதே ஒரே வழி. நன்றி: ஃப்யூச்சரிசம்

விண்வெளி பற்றி அறிய விரும்புகிறீர்களா?

படம்
விண்வெளி பற்றிய புத்தகங்கள் சுயமுன்னேற்றம் , தொழில் என பல்வேறு நூல்கள் இருந்தாலும் விண்வெளியில் என்ன உள்ளது என்று அறியும் ஆவல் மனிதர்களுக்கு குறைவதில்லை. எனவேதான் பல்வேறு நூல்கள் இன்றும் வெளிவந்தபடி உள்ளன. SuperSpace: The furthest, largest, most incredible features of our Universe சூப்பர்ஸ்பேஸ் என்ற இந்த நூல், விண்வெளி உலகிலுள்ள ஏராளமான தகவல்களை நமக்குச்சொல்லுகிறது. குறிப்பாக கோள்கள், நிலவுகள், நிலப்பரப்பு, அங்கு சென்ற விண்கலங்கள், லேண்டர்கள் என தகவல்களும் ஓவியங்களும் பிரமிப்பு ஊட்டுகின்றன.  விண்கலங்களில் உள்ள சின்னச்சின்ன தகவல்களைக் கூட விட்டு வைக்காமல் எழுதியுள்ளனர். நாசாவின் க்யூரியாசிட்டி ரோவரில் 17 கேமராக்கள் உள்ளன என்பதோடு பல்வேறு கோள்களைப் பற்றிய தகவல்களும் அருமையாக உள்ளன. சிறுவர்களுக்கான சிறந்த அறிவியல் நூல் இது.  The Planets பேராசிரியர் பிரையன் காக்ஸ் எழுதியுள்ள கோள்களைப் பற்றிய செய்திகள் கொண்ட நூல் இது. இப்பெயரில் பிபிசியிலும் தொடர் உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. இதில் முழுக்க சூரியக்குடும்பம் உருவான வரலாறு அறிவியல் பூர்வமான முறையில் விளக்

மூளையில் ஏற்படும் மாற்றம் என்ன?

ஈர்ப்புவிசை இல்லாத விண்வெளி என்பது அதிசயங்களைப் போலவே ஆச்சரியங்களையும் கொண்டது. இதனால்தான் விண்வெளிக்குச் சென்று திரும்புவர்களை நாசா உட்கார வைத்து ஆய்வு செய்து பார்க்கிறது. கதிர்வீச்சு, எலும்பு தேய்மானம் ஆகிய விஷயங்கள் அதில் மாறியிருக்கிறது இதுவரை கண்டறியப்பட்டது. தற்போது மண்டையோட்டில் மூளை மிதக்கும் திரவத்தின் அளவு அதிகரித்துள்ளதாக தகவல் தெரியவந்திருகிறது. மூளையின் வென்ட்ரிகல்  பகுதி அதிகரித்துள்ளதும், திரவத்தின் அளவும் அதிகரித்துள்ளது. பிஎன்ஏஎஸ் என்ற இதழில் இதுகுறித்த ஆராய்ச்சி வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஆய்வாளர்கள் பூமிக்குத் திரும்பிய பதினொரு ரஷ்ய வானியலாளர்களை சோதித்தனர். சில மாதங்கள் விண்வெளியில் தங்கி வந்தவர்களுக்கு ஆறு சதவீதம் மூளையின் பகுதிகள் மாற்றம் கொண்டுள்ள உண்மை தெரிய வந்துள்ளது. இத்தன்மையால் பார்வைத்திறன் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளையும் வீர ர்கள் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்த தீவிரமான ஆராய்ச்சிகள் தேவை என்கிறார் ஆன்ட்வெர்ப்  நரம்பியலாளர் ஆஞ்செலிக் வான் ஆம்பெர்ஜென். நன்றி: ஃப்யூச்சரிசம்

விண்வெளியில் ஒலியை அறிய முடியுமா?

படம்
thought.co விண்வெளியில் ஒலியை அறிய முடியுமா? சுருக்கமாக சொன்னால் முடியாது. டிவி, சினிமாக்களில் ஒலி அமைப்போடு பார்த்து பழகியதால் விண்வெளியில் இளையராஜாவின் பாடல்களைக் கேட்கலாம், சிவந்து போச்சு நெஞ்சு பிஜிஎம் கேட்கலாம் என நிறையப் பேர் நினைக்கலாம். ஆனால் இயற்பியல் இதனை சாத்தியம் இல்லை என்றே கூறுகிறது. விண்வெளியின் கதிர்வீச்சுகளை இயற்பியல் உபகரணங்கள் மூலம் உள்வாங்கி அதனை ஒலியாக்கும் முயற்சிகள் வானியலில் நடைபெற்று வருகின்றன. இவை சரியானவையா? பலனளிக்குமா? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஒலி பரவ காற்று எனும் ஊடகம் அவசியம். காற்று மூலக்கூறுகளால் நாம் பேசுவது பிறருக்கு கேட்கிறது. அதனை மனிதரின் மூளை புரிந்துகொள்கிறது.  காற்று மூலக்கூறுகள் அழுத்தப்படும் அளவு அதிகரித்தால் நம் காதில் விசில் சத்தம் அல்லது பொறி கலங்கி பூமி அதிரும் ஒலி கேட்கக்கூடும். நன்றி: Thought.co