இடுகைகள்

சேட்டன் பகத்தின் What young india wants

சேட்டன் பகத்தின் What young india wants நூலில் உள்ள Youth பகுதியின்  தமிழ் மொழிபெயர்ப்பு ‘இளைஞர்களின்  இந்தியா’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது.                                                                    ஆக்கம்: வின்சென்ட் காபோ                                                                           3                                             கல்வி இல்லாமை தேவையில்லை குடிமக்கள் அனைவரும் கண்டிப்பான ஆசிரியர்களாக மாறி, தலைவர்களுக்கு பல்வேறு வீட்டுப்பாடங்களை செய்யுமாறு வற்புறுத்தவேண்டும்.       மனிதவளத்துறை புள்ளிவிவரங்கள் தேசிய அளவிலான தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சியடைந்துள்ளதை விரிவாக காட்டுகிறது. மக்கள்தொகையில் குழந்தைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதைப்பார்த்தால் முடிவுகள் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு இந்தியருக்கும் கல்வி என்ற விஷயத்தில் இன்னும் இரைச்சல்கள் நம்மிடையே குறையவில்லை. நம் நாட்டின் மேம்பட்ட வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் இந்த புள்ளிவிவரம் காட்டும் உண்மையை அறிந்து அதனைப்பற்றி எந்த கவலையும் படாமல் இயல்

புதிய நூல்,

படம்

நூல் வெளி

இயந்திரம் மலயாற்றூர் ராமகிருஷ்ணன் என்பிடி                                                     கபியாஸ்           அதிகாரப்படிக்கட்டுகளை இடையறாது தேடிப்பயணிக்கும் ஒரு மனிதனின் கதை. அவனின் பயணவழியே பிற மனிதர்களின் வாழ்வும் நம் கண்களுக்கு வசப்பட கதை நகர்கிறது.      பாலகிருஷ்ணன் எனும் வசதியில்லாத அந்தஸ்து குறைந்த ஒரு மாணவன் ஐ.ஏ. எஸ் தேர்ச்சி பெறுகிறான். ஆனால் அந்த மகிழ்ச்சியைக்காட்டிலும் அவனுக்கு அவன் குடும்பம் இருக்கும் கீழ்நிலையில் மற்ற மாணவர்களான வசதி நிறைந்த குரியன் உள்ளிட்டோரை நினைத்து ஏங்குகிறான். தொடர்ந்து தன் வாழ்வை குரியனுக்கு நிகராக ஆக்கிக்கொள்ள நினைத்து திட்டமிட்டு திருமணம், நட்பு ஆகியவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.      ஆனால் அந்த உறவுகள் எதிலும் இவனால் உண்மையாக இருக்கமுடியவில்லை. அவை உண்மையாகவும் இல்லை. இயந்திரம் கவனம் பெறுவது அதனுள் இருக்கும் குறையாத அதிகார விளையாட்டுக்களின் நம்பகத்தன்மைதான். அதிகாரத்தோடு ஒருவன் இன்னொருவரோடு எப்படி உண்மையாக நேர்மையான நட்பை ஏற்படுத்திக்கொள்ளமுடியும்? அதேதான் நிகழ்கிறது இங்கேயும். இவனது வாழ்வில் இவனுக்கு கடும் குற்றவுணர்வை

நூல் வெளி

29 வெற்றிபெற காந்திய வழிகள் ஆலன் ஆக்ஸல்ராட் தமிழில்: மரு.வெ. ஜீவானந்தம் தமிழினி                                                                ரோசா       காந்திய பல்வேறு கட்டங்களில் நாடு குறித்து பேசிய பல விஷயங்கள் எப்படி ஒரு நிறுவனத்தை நிர்வாகம் செய்ய பயன்படுகின்றன என்பதை நூறு காந்தியின் வார்த்தைகள் மூலம் கூறுகிற நூல் இது.      ஏன் இந்த புத்தகம் முக்கியம் பெறுகிறது என்றால், காந்தியின் கொள்கைகள் மற்றும் பேச்சுக்களவு தவறாக புரிந்துகொள்ளப்பட்டவையும், கைகழுவப்பட்டவையும் வேறெந்த தலைவருக்கும் நிகழ்ந்திருக்குமா என்று தெரியவில்லை.      காந்தி இந்நூலில் கூறும் கருத்துக்களை சூழல் பொறுத்து மாறுதலை செயல்படுத்துவது பற்றிக்கூறும் நெகிழ்வுத்தன்மையை கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் காந்தி தன் வாழ்வு முழுமைக்குமான ஆதாரமான ஒன்றாக கூறுவது தான் கடைசி மூச்சு வரைக்கும் நம்பிய கடைபிடித்த உண்மை ஒன்றையே. இந்நூல் முக்கியத்துவம் பெறுவதும் இந்த தன்மையினால்தான்.      நமக்கு நம்பிக்கை ஏற்பட பெரிய வார்த்தைகளினாலான விஷயங்கள் இல்லாமல் எளிமையாக காந்தியின் வார்த்தைகளிலிருந்து எடுத்து பயன்பட

நூல் வெளி

27 புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம் தமிழினி                                                      ஊருணி      புயலிலே ஒரு தோணி சாதாரணமாகவே வாசிக்க சற்று சவால் தரும் நாவல்தான். இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தாவித் தாவிச்செல்லும் உத்தி படிக்க முதலில் திகைப்பானதாகவே உள்ளது. மெல்ல மலேசியா ட இந்தோனேஷியா போர்ச்சூழல் மனதிற்கு பழக்கமாகிறது.      சங்கப்பாடல்களோடான அத்தியாயங்கள் திரும்பத்திரும்ப வாசிக்கவேண்டும் என்று ஆவல் ஏற்படுத்துகின்ற ஒன்று. அதன் உட்பொருளை அறியும் பரபரப்பு மனதில் ஏற்படுகிறது. எள்ளல், அங்கதம் கடலுக்கு அப்பால் பகுதியில் குறைவு. முழுக்க புயலிலே ஒரு தோணி பகுதியில் நிறைந்திருப்பது பகடிகள்தாம்.      நாவல் வெளிவந்தபோது சிறிது புரியாமல் போயிருக்க வாய்ப்புண்டு. அதிக கவனமாக, கூர்மையாக வாசிக்காவிட்டால் பலவற்றையும் தவறவிடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.      பாண்டியன், மாணிக்கம், ஆவன்னா, நாவன்னா என பலரும் தமிழிலேயே சொல்விளையாட்டு விளையாடுவது சுவாரசியமான பகுதிகள். தமிழனின் இன்றைய பெருமைகளாக பேசும் பலவற்றையும் உடைத்து போடும் பாண்டியன் பேச்சில் கலகத்தின் அடர்த்தி ரசிக