நேர்காணல்:"நில நடுக்கங்களை முன்கூட்டியே தடுக்க முடியும்"
" நில நடுக்கங்களை முன்கூட்டியே தடுக்க முடியும் " நேர்காணல் : ஜெயன் பெருமாள் , நிலநடுக்க ஆய்வாளர் தமிழில் : ச . அன்பரசு ஜெயன் பெருமாள் டேராடூனின் வாடியா புவியியல் ஆய்வை மையத்தில் பணிபுரியும் நிலநடுக்க ஆய்வாளர் . இமாலயத்தில் ஏற்படும் புவியியல் மாறுதல்களை செயற்கைக்கோள் , ஜிபிஎஸ் மூலம் கண்காணித்து வருகிறார் . சென்னை பிரசிடென்சி கல்லூரியில் புவியியல் முதுகலைப்பட்டம் பெற்ற பெருமாள் , முனைவர் பட்டம் பெற்றபின் 4 ஆண்டுகள் சுரங்க புவியியலாளராக பணியாற்றியவர் , 2002 ஆம் ஆண்டிலிருந்து வாடியா ஆய்வுமையத்தில் பணி . தற்போது அமெரிக்க குழுக்களோடு இணைந்து ஆய்வுப்பணி செய்யும் பெருமாளோடு உரையாடினோம் . நிலநடுக்க ஆய்வு என்பது எந்தவகையில் முக்கியமானது ? இமாலயத்தின் நிலத்தட்டு இந்தியாவில் மிக வேகமாக மாறும் தட்டுகள் என்பதால் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது . மக்களின் அடர்த்தியும் , விவசாயமும் இங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதும் , திட்டமிடப்படாத கட்டிட அமைப்பும் நிலநடுக்க அபாயத்தை அதிகரிக்கின்றன . ந