இடுகைகள்

கழுத்தை நெரித்தபடியே உடலுறவு கொள்வது பாலியல் வன்முறை - சில பெண்களின் அனுபவங்கள்...

படம்
  தற்போது, இணையம் பெரும் சக்தியுடன் இயங்கி வருகிறது. இதன் வழியாக மக்கள் ஆபாச படங்கள் பார்ப்பது சகஜமாகிவிட்டது. உண்மையாக ஒரு பெண்ணுடன் நேரடியாக உடலுறவு என்ற நிலையை சாதிக்கும் முன்னரே, ஆண் கற்பனையில் பலநூறுமணி நேரம்,   உடலுறவு கொண்டுவிடுகிறார். இந்த அதீத நிலையை ஆபாச படங்கள் ஆதரிக்கின்றன. ஊக்கம் கொடுக்கின்றன.   ஆபாச படங்கள் பெரும்பாலும் ஆண்களுக்கான கண்ணோட்டத்தில் உருவாக்கப்படுகின்றன. இதனால், அதில் ஆண்களின் முகம் காட்டப்படாவிட்டாலும் யாரும் பெரிதாக கவலைப்படுவது கிடையாது. ஆனால் பெண்ணின் முகம் நிச்சயம் தேவை. இப்படங்களில் பெண் ஏறத்தாழ ஒரு பொருள் போலவே கையாளப்படுகிறாள். பலமணிநேரங்கள், இப்படி ஆபாச படங்களைப் பார்க்கும் ஆண்கள் நிஜவாழ்க்கையில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும்போது அவர்கள் செயல்கள் பாலியல் வன்முறை கொண்டதாக மாறிவிடுகிறது. அதாவது, கழுத்தை நெரித்தல், முகத்தில் எச்சில் துப்புதல், கைகளை துணி கயிறால் கட்டுவது என சில செயல்களை வேட்கையுடன் செய்கிறார்கள். உண்மையில் இதை பெண்கள் விரும்புகிறார்களா என்பதைப் பார்ப்போம். சாரா, 42 விளம்பரப்படத்துறை அண்மையில், சில ஆண்டுகளாக அறிமுகமாகி பேசி வந

நகைகளை வடிவமைக்க கற்கும் ஆர்வம் இருந்தால் போதுமானது! - நிஃப்ட் வழங்கும் படிப்புகள்

படம்
  படிப்பு வேண்டாம் - ஆர்வம் இருந்தால் போதும் நகைகளை எளிதாக வடிவமைக்கலாம்! சென்னையிலுள்ள கண்ணகி நகர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பலரும் நகை வடிவமைப்பு சார்ந்த பாடங்களை கற்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு சென்னையில் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனமே காரணம். இந்த நிறுவனம், தற்போது நகை வடிவமைப்பு பற்றிய படிப்புகளை இணையம் வழியாக படிப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளது. இதனால், பள்ளிப்படிப்பை படிக்காதவர்கள், எட்டாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்கள், டீக்கடை, பெட்ரோல் பங்க் என பிழைப்புக்கான வேலைகளை செய்து வருபவர்கள் கூட நகை வடிவமைப்பு பற்றிய படிப்பில் இணைகிறார்கள். படித்து முடித்து நகைகளை தாங்களே வடிவமைத்து வேலையையும் பெற்று வருகின்றனர். கற்களை பதிப்பது, வெல்டிங், மெழுகு மாதிரியில் நகைகளை தயாரிப்பது ஆகிய விஷயங்களில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அரசு, திறன் சார்ந்த வேலைவாய்ப்புகளை ஊக்குவித்து பத்து லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.எனவே, குறைந்த கல்வித்தகுதி இருந்தாலும் கூட கற்றலின் தீப்பொறி உள்ளவர்களுக்கு நகை வடிவமைப்பு த

நாங்கள் மக்களிடம் முதலீடு செய்கிறோம்! - ஶ்ரீதர் வேம்பு, இயக்குநர், ஜோஹோ

படம்
  ஶ்ரீதர்வேம்பு, ஜோஹோ நிறுவன இயக்குநர் ஶ்ரீதர் வேம்பு படம் - மனிகண்ட்ரோல் ஶ்ரீதர் வேம்பு நேர்காணல்   உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டங்களைப் பெற்றவர்கள் அல்ல. தொழில்நுட்பத் துறையில் வேலை இல்லாமல் தவிக்கும் பட்டதாரிகளைப் பார்க்க முடிகிறது. ஒருவர், இரண்டு வேலைகள் செய்து வாழவேண்டியிருக்கிறது. திறமையானவர்களுக்கு தட்டுப்பாடு ஏறபட்டிருக்கிறதா? இந்த பிரச்னையை எப்படி பார்க்கிறீர்கள்? சந்தையில் நிறைய நிறுவனங்கள் திறமைசாலிகளை தேடுகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை திறமைசாலிகள் இருந்தாலும் அவர்களை வழிகாட்டி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல யாரும் முயல்வது இல்லை. நாங்கள் அந்த பணியை செய்கிறோம். இதன் மூலம் ஊழியர்களின் திறன் உயர்கிறது. அவர்கள் எங்களோடு விசுவாசமாக பணியாற்றுகிறார்கள். இவர்கள் மூலமே எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியும் உயர்கிறது. நாங்கள் தொழிலில் முதலீடு செய்வதை விட மக்களின் மீது முதலீடு   செய்கிறோம். மூன்லைட்டிங் (இரு நிறுவனங்களில் பணிகளை செய்வது) பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பொறியாளர் ஒருவர் ஒரு நிறுவனத்தில் இருந்துகொண்டு

கடலைப் பாதுகாப்பதை வெறும் பேச்சாக அன்றி, செயலாக மாற்ற வேண்டும்! - பேட்ரிசியா ஸ்காட்லாந்து

படம்
  பேட்ரிசியா ஸ்காட்லாந்து, காமன்வெல்த் பொது செயலர் பேட்ரிசியா ஸ்காட்லாந்து, காமன்வெல்த் பொது செயலர் காமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிசியா ஸ்காட்லாந்து. கடலை பாதுகாக்கும் செயல்பாட்டினை ஜி20 மாநாட்டை நடத்தும் இந்தியா முன்னெடுக்கும் என நம்புகிறார். நீலப்பொருளாதாரம் என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்? உலக நாடுகள் வரையறுத்துள்ள நீலப்பொருளாதாரம் என்பதையே நானும் கூறுகிறேன். கடலை சூழலுக்கு உகந்த வழியில் பயன்படுத்தும்போது, அதைச் சார்ந்த   மக்களின் வாழ்க்கையும் ஆரோக்கியமான பாதைக்கு திரும்பும். நாம் ஏற்கெனவே நிலத்தை பெருமளவு பயன்படுத்திவிட்டோம். எனவே, இப்போது கடலில் இருக்கும் இயற்கை வளங்களை கவனத்துடன் பயன்படுத்தவேண்டும். நாம் நிலத்தை மோசமாக பயன்படுத்தியது போல கடலை, அதன் வளத்தை பயன்படுத்தக்கூடாது என்பதை மனதில் கொள்ளவேண்டும். நீலப்பொருளாதாரத்தில் உள்ள ஆபத்துகள் என்ன? இப்படி ஏற்படும் ஆபத்துகள் நாட்டுக்கு நாடு மாறுபடக்கூடியவையா? கடலை தங்களது வாழ்வாதாரமாக, பொருளாதார அடிப்படையாக கொண்டுள்ள நாடுகளைப் பொறுத்து இதன் பாதிப்புகள் மாறுபடும். காலநிலை மாற்றம், கடல்நீரில் அமிலத்தன்மை அதிகரித்தல், பி

பொருளாதார முன்னேற்றத்தில் சாதித்த கர்நாடகா - முதலீடு கொழிக்கும் பெங்களூரு

படம்
  கர்நாடகம் கர்நாடகா மாநிலத்தின் வரைபடம் பொருளாதார வளர்ச்சியில் சாதித்த கர்நாடகா தேர்தல் பணிக்காக இருபத்தைந்து ஆண்டுகளில் முப்பது முறை கர்நாடகாவிற்கு சென்றிருக்கிறேன். பல்வேறு எழுத்தாளர்களோடு சென்ற பயணத்தில் நிறைய ஆச்சரியங்கள் கிடைத்துள்ளன. கடந்த மாதம் கர்நாடகத்திற்கு அரசியல் பயணமாக சென்றேன். அங்கு நிறைய ஆச்சரியங்கள் எனக்காக காத்திருந்தன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகத்திற்கு சென்றபோது நிறைய வளர்ச்சி பணிகள் நிலுவையில் இருந்தன. அதாவது நடந்துகொண்டு இருந்தன. இம்முறை அவை முழுமை பெற்றிருந்தன. மாறாத காட்சியாக உள்ள இடங்கள் அப்படியேதான் இருந்தன என்றாலும் வளர்ச்சி என்ற பார்வையில் பார்த்தால் பரவாயில்லை என்ற மனதை தேற்றிக்கொள்ளலாம். பிற இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டால் கர்நாடகம் ஏழையான மாநிலம் கிடையாது. பெங்களூரு நகரத்தில் குவிந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் காரணமாக விவசாய முறைகள் நவீன தொழில்நுட்பத்துடன் கைகோத்தது. இதனால் அங்கு பொருளாதார முன்னேற்றம் உருவானது. ஆண்டிற்கு 8 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பெற்றது. தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு முன்னேற்றம் கிடைத்தது. நாம் கருத்தில் கொள்ளவேண்டி

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் மனநிலை குறைபாட்டு சிகிச்சை கட்டணம்- சமாளிக்க முடியாத கட்டண உயர்வு!

படம்
  மனநிலை குறைபாடுகளுக்கான சிகிச்சைக் கட்டணம் உயர்வு – அதிகரிக்கும் பொருளாதார சுமை உடல்ரீதியான நோய்களுக்கு ஏற்படும் செலவுகள், குடும்பத்திற்கு பொருளாதாரச் சுமை களை ஏறபடுத்திய காலம் என்று செய்திகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது, மனநிலை குறைபாடுள் காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுபற்றி, ஆய்வுகள் இப்போதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளன.   அண்மையில் கோவையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர், மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இறுதியாக அதை சிகிச்சை மூலம் தீர்த்துக்கொள்ள நினைத்தார்.   ஆனால் வாரம் ரூ.3 ஆயிரம் செலவு என கட்டணம் உறுதியானது. நல்ல செழிப்பான ஆள் என்றாலும் குடும்பஸ்தரான அவரால் செலவுகளை சமாளித்து செய்ய முடியவில்லை.   சிகிச்சைக்கான செலவுகள் கூடுவதோடு, குடும்பத்திற்கும் பொருளாதார சுமைகளை ஏற்படுத்துவதாக மென்பொருள் பொறியியலாளர் நினைக்கத் தொடங்கிவிட்டார். மேலே கூறியுள்ளது   ஆயிரக்கணக்கான மனநிலை குறைபாடுகளை கொண்டவர்களில் ஒருவரின் கதைதான். ஏராளமானவர்கள் வேலை காரணமாக ஏற்படும் மன அழுத்த பாதிப்பை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறார்கள். அதற்கு செலவு செய்யவும் பணம

உடலில் குறுகல் இன்றி தோளில் நிமிர்வுடன் அரசியல்வாதிகளை எதிர்கொண்ட பத்திரிகையாளரின் சுயசரிதை! டெவில்ஸ் அட்வகேட் - கரண் தாப்பர்

  டெவில்ஸ் அட்வகேட் கரண் தாப்பர் ரூ.375 ஹார்ப்பர் கோலின்ஸ் அமேசான்   இந்தியாவில் இன்போடெய்ன்மென்ட் டெலிவிஷன் நெட்வொர்க் என்ற நிறுவனம் தொடங்கி அதன் மூலம் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்துகொடுத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் எழுதியுள்ள சுயசரிதை நூல், டெவில்ஸ் அட்வகேட். இதேபெயரில் அவர் சிஎன்என் ஐபிஎன் டிவி சேனலில் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். தற்போது, கரண் தாப்பர் தி வயர் என்ற இணைய பத்திரிகைக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்து கொடுத்து வருகிறார். டெவில்ஸ் அட்வகேட் நூல், மொத்தம் 187 பக்கங்களைக் கொண்டது. இந்த பக்கங்களில் அவர் தான் காஷ்மீரில் பிறந்தது, அவரது பெற்றோரின் அதீத பாசம், மூன்று சகோதரிகளின் அன்பு, பள்ளிப்படிப்பு, தனக்கு கரண் என பெயர் வந்ததற்கான காரணம் ஆகியவற்றை தொடக்கத்தில் விவரிக்கிறார். இந்தப்பகுதி சற்று நெகிழ்ச்சியாக இருக்கிறது.  மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறக்கும் ஆண் பிள்ளை கரண் தாப்பர். இவர் பிறக்கும்போது அவரின் அப்பாவிற்கு வயது, 50.  எனவே, ராணுவ அதிகாரியான அப்பாவிற்கு, கரண் மீது தனி பிரியம் இருக்கிறது. அதேசமயம் அம்மாவிற்கு மகனை கண

பஞ்சாப் இசைக்கலைஞர்களுக்கு உலக மேடையை திறந்து வைத்துள்ள நட்சத்திரம் - தில்ஜித் தோசன்ஜி

படம்
  பஞ்சாபி பாடகர், நடிகர் தில்ஜித் தோசன்ஜி பஞ்சாபி இசை, திரைப்படங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நட்சத்திரம் -தில்ஜித் தோசன்ஜி காலிஸ்தான் பிரச்னை, பஞ்சாப் விவசாயிகள் தற்கொலை என பல்வேறு பரபரப்பான விவகாரங்களை தாண்டி, தில்ஜித் நமது கவனத்தை ஈர்த்திருக்கிறார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் கோச்செல்லாவேலி இசை மற்றும் கலை விழாவில் தில்ஜித், சீக்கியர்களின் மரபான உடைகளை அணிந்து பாடி, நடனம் ஆடினார். இந்த விழா, அவரை உலகளவிலான மேடையில் அறிமுகப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. தனது அமெரிக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு இந்தியா திரும்பியவருக்கு ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன. அமெரிக்காவில் நடைபெற்ற இசைவிழாவில் முதல் இந்தியராக பங்கேற்றவர் தில்ஜித் தோசன்ஜிதான்.   இவர், தனது ஏழு வயதில் இருந்து பஞ்சாபி பாடல்களை பாடி ஆடிவருகிறார். இவருக்கான ஊக்கத்தை அக்காவுக்கு டியூசன் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் பஞ்சாபி பாடல்களை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். தான் எழுதிய பாடல்களை தில்ஜித் மனப்பாடம் செய்து பாடச்செய்திருக்கிறார். அப்படித்தான் தில்ஜித் ப

வன உரிமைச் சட்டத்தை நான் ஆதரிக்கவில்லை - எம் கே ரஞ்சித் சிங், இயற்கைச்சூழல் செயல்பாட்டாளர்

படம்
  எம் கே ரஞ்சித் சிங் வனப்பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட அடிப்படையான விஷயங்களை செய்தவர், திரு. எம் கே ரஞ்சித் சிங். இவர் புலிகளைக் காப்பதற்கான பல்வேறு செயல்பாடுகளை செய்வதோடு, காப்பகங்களை உருவாக்கவும் உதவியுள்ளார். குஜராத்தின் வங்கானர் எனும் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர், ரஞ்சித் சிங். தனது செயல்பாடுகளின் விளைவாக இந்தியாவின் முக்கியமான வனப்பாதுகாப்பு செயல்பாட்டாளராக அறியப்பட்டு வருகிறார். பதினொரு வனப்பாதுகாப்பு சரணாலயங்கள், எட்டு தேசியப் பூங்காங்களை உருவாக்குவதில் பங்களித்துள்ளார். அவரிடம் புலிகளின் பாதுகாப்பு பற்றி பேசினோம். புலிகளின் பாதுகாப்பு திட்டம் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? 1972ஆம் ஆண்டு, புராஜெக்ட் டைகர் குழுவில் செயலாளராக இருந்தேன். அடுத்த ஆண்டு கைலாஷ் சங்கலா இந்த பதவிக்கு வந்தார். புலிகளை பாதுகாத்து அதன் எண்ணிக்கையை பெருக்குவதே எங்கள் குழுவின் நோக்கமாக இருந்த து. எங்கள் குழுவின் லட்சியத்தை எட்டியதாகவே நினைக்கிறேன். இந்த திட்டம் மட்டும் உருவாக்கப்படாமல் இருந்திருந்தால்   நிறைய துணை விலங்கினங்களைக் காப்பாற்ற முடியாமலேயே போயிருக்க

லவ் அலாரத்தை ஆன் செய்து லவ் மேப்பை அப்டேட் செய்யலாம் - நீங்க ரெடியா?

படம்
  தம்பதிகளுக்கு இடையே மௌனமான பிரிவு உருவாகிறதா? – தீர்வு என்ன? காதலிக்கும்போது ஒருவரைப் பற்றிய பிடித்தது, பிடிக்காதது, என தெரிந்துகொள்பவர்கள் மணமானபிறகு பல்வேறு விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து காதலை பின்தள்ளிவிடுகிறார்கள். இதற்கு, பெற்றோரைக் கவனிப்பது, குழந்தைகளை வளர்ப்பது என ஏராளமான காரணங்களைக் கூறுகிறார்கள். உண்மையில், கணவன், மனைவி என இருவரும் சற்று முயற்சி எடுத்தால் அவர்களின் மனதிலுள்ள லவ் அலாரத்தை ஒலிக்க வைக்க முடியும். இதற்கு இருவரும் ஒரே சமயத்தில் தங்களை சற்றே மாற்றிக்கொண்டு முன்னே அடியெடுத்து வைக்கவேண்டும். அவ்வளவுதான் விஷயம்…. காதலர்களாக இருந்து கணவன் மனைவியாக மாறியவர்கள் கூட காதல் என்பதை முழுக்க ஒழித்துவிட்டு ஏதோ பிள்ளைகளுக்காக ஒரே வீட்டில் ஒரே படுக்கை அறையில் வாழ்வதாக சூழல் மாறிவருகிறது. இதற்கு பரபரப்பான வாழ்க்கை முறை காரணம் என்று மட்டும் காரணம் சொல்லி தப்பிவிட முடியாது. இந்த பரபரப்பிலும் அவரவருக்கு பிடித்த விஷயங்களை விடாமல் செய்துகொண்டுதானே இருக்கிறோம். பிறகு, காதலில் மட்டும் ஏன் பஞ்சம், பற்றாக்குறை ஏற்படுகிறது? மணமாகி தேனிலவு காலம் முடிந்தபிறகு கணவன், மனைவி இருவரும்