ஊரடங்கு விதிகளால் மாணவர்களை அழைத்து வர முடியவில்லை! - பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
commonwise மொழிபெயர்ப்பு நேர்காணல் நிதிஷ்குமார், மாநில முதல்வர், பீகார் பல்வேறு மாநிலங்களில் பீகாரைச் சேர்ந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு வரமுடியாமல் தடுமாறி வருகின்றனர். முகாம்களில் அவர்களை தங்க வைத்து இந்திய அரசு உணவுகளை வழங்கி வருகிறது. இதுபற்றி பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரிடம் பேசினோம். பீகாரிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கேரளம் என பல்வேறு மாநிலங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் பீகாரில் நோய்பரவல் சதவீதம் குறைவாக இருக்கிறது. என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள்? ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5 மணிப்படி பீகாரில் 329 நோயாளிகள் அடையாளம் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். அதில் 57பேர் முழுக்க குணமாகியுள்ளனர். இதில் 270 பேர் இன்னும் கண்காணிப்பில் உள்ளனர். நாங்கள் எங்கள் மாநிலத்தில் உள்ள ஆறு மையங்கள் மூலம் நோயாளிகளின் மாதிரிகளை சோதித்து வருகிறோம். 75 லட்சம் வீடுகளில் 4 கோடி மக்களுக்கு சோதனைகளை நடத்தி நோய்ப்பரவலைக் குறைத்துள்ளோம். மருத்துவமனைகள், சிகிச்சை வசதிகள், தனிமைப்படுத்தல் வசதிகளை செய்துள்ளோம். மத