தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மையும் ஒருநாளும் 4- தியோ ஏஞ்சலோ பவுலோஸ்
வாழ்க்கையில் நாம் பெரும்பகுதி அந்நியர்களாக அகதிகளாகவே வாழ்கிறோம் என்கிறீர்களா? நாமாகவே அந்நியராக வாழ்கிறம் என்று கூறமுடியாவிட்டாலும், ஒருவகையில் இதற்கு ஆம் என்றே பதில் கூறவேண்டும். எ.கா: என்னை நான் கிரீசில் ஒரு அந்நியராகவே உணர்கிறேன். இது என் நாடில்லை என்ற நிலையும், எனக்கென வீடு இல்லாத நிலையும் இருக்க நான் இங்கே வாழ்ந்து வருகிறேன். தடை செய்யப்பட்ட நாரையின் பாதை படத்தில்(டு மீட்டீயோரோஷமா டோ பெலர்கோவ், 91) மாஸ்ட்ரோயன்னி இதனை வார்த்தையில் கூறும்விதமாக, ‘‘எல்லைகளை கடந்தும் நாம் இன்னும் இங்கேயே இருக்கிறோம். எத்தனை எல்லைக்கோடுகளைக் கடந்தால் நம் வீடு சென்றடைவோம்? ’’ கூறியிருப்பார். உங்களது படங்களில் மக்கள் ஆறு ஒன்றினால் பிரிக்கப்படும்போது ஒவ்வொருவரும் எப்போதும் நாயகன் புறமே நிற்கிறார்களே? எனது கடைசி மூன்று படங்களில் முக்கியமாக இடம் பெற்ற காட்சி என இதனைக் கூறலாம். குறிப்பிட்ட சூழ்நிலை ஒன்றில் உங்களை மேலும் மேலும் ஆழமாக உள்ள செலுத்திக்கொள்வதுதான் இதற்கு காரணமா? உணர்ச்சிகளை தடை செய்யப்பட்ட நாரையின் பாதை படத்தில் வெளிப்படுத்தும் மாஸ்ட்