ஆல் இன் ஆல் அறிவியல்!
சிறுவனை காப்பாற்றிய தோல் ! மரபணு நோய்க்காக , லேபில் தோலை வளர்த்து ஏழுவயது சிறுவனை ஜெர்மனைச் சேர்ந்த மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர் . தோலை செயற்கையாக வளர்ப்பது முதல் முறையல்ல என்றபோதும் 80% அளவு தோலை உருவாக்குவது என்பது சாதனைதானே ! ஏழுவயது சிறுவனை junctional epidermolysis bullosa (JEB) எனும் மரபணு நோய் தாக்கியது . தோல்களில் கொப்புளங்கள் உருவாகி புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ள இந்நோயினால் உலகெங்கும் 5 லட்சம் பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . பாக்டீரியா தொற்றால் மூன்றில் இருபங்கு தோலை இழந்த சிறுவனைக் காக்க , ஸ்டெம் செல் மற்றும் தோல் செல்களை பயன்படுத்தி லேபில் தோலை செயற்கையாக உருவாக்கினர் . " எட்டு மாதங்களாக இச்சிறுவனின் உயிரைக்காப்பாற்ற போராடினோம் " என்கிறார் மருத்துவர் டோபியாஸ் ரோதோஃப்ட் . அறுவை சிகிச்சை செய்யப்பட்ட , சிறுவன் தற்போது நலமாக உள்ளான் . 2 பிட்ஸ் ! காலை தூக்கத்தை கலைத்து உற்சாகம் ஏற்படுத்துவதில் காஃபியை விட ஆப்பிள் பழங்கள் சிறந்தவை . ரத்தவோட்ட வேகத்தை அதிகரிக்க ஆப்பிளிலுள்ள 13 கி . ஃப்ரக்டோஸ் உதவுகிறது . காரின் ஸ்டீரியரிங் வீலை க