இடுகைகள்

இந்தி சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்வி உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கும் - பூமி பட்னேகர்

படம்
நேர்காணல் பூமி பட்னேகர், சினிமா நடிகை வணிகம்சார்ந்த படங்களிலும் கலை சார்ந்த படங்களிலும் சிறப்பாக நடித்துவருபவர் இவர். படத்தின் உண்மைத் தன்மைக்கு சிறப்பாக மெனக்கெடும் அரிய நடிகை. நடிகையாகவேண்டும் என்று தோன்றியது எப்போது? நடிப்பதிலும், அழகான ஆடைகளை அணிவதிலும் சிறிய வயதிலிருந்து எனக்கு ஆர்வம் இருந்தது. என் அம்மா இதற்காகவே என்னை வைத்து நிறைய புகைப்படங்களை எடுக்கச் செய்தார். என் தந்தைக்கு நான் வெளியுறவுத்துறை சார்ந்த பதவியில் இருக்கவேண்டும் என்று ஆசை. உங்களுக்கு ஆண் நடிகர்களுக்கு தரப்படும் சம்பளத்தில் 5 சதவீதம்தான் தரப்படுவதாக கூறினீர்கள்? ஆம் அது உண்மைதான். அப்படித்தான் நான் படங்களில் நடித்து வருகிறேன். நீங்கள் தற்போது நடித்த கார்த்திக் ஆர்யன் கூட உங்களின் அளவே திரையுலக அனுபவம் கொண்டவர். நீங்கள் அவரைவிட குறைவாக சம்பளம் பெறுவது உங்களுக்கு கோபம் தரவில்லையா? கார்த்திக் ஆர்யன், ஏழு ஆண்டுகளாக இங்கு உழைத்து இந்த இடத்தை அடைந்துள்ளார். ரசிகர்களை சம்பாதித்துள்ளார். அவருக்கான ஊதியத்தை அவர் கேட்டு பெறுகிறார். இதில் நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது.? மேலும் இது பணம் போட்டு

வழுக்கையால் அவமானமா? பாலா சொல்லும் பாடம் அதிரடி!

படம்
பாலா இயக்கம் - அமர் கௌசிக் கதை - நீரன் பட், பாவெல் பட்டாச்சார்ஜி இசை சச்சின் ஜிகார், பிராக், ஜானி ஒளிப்பதிவு அனுஜ் ராகேஷ் தவான் இளம் வயதிலிருந்து ஷாருக்கான் ரசிகராக உள்ளவனுக்கு இருபத்தைந்து வயதில் முடியெல்லாம் கொட்டி வழுக்கையாக மாறினால் என்னாகும்? அதேதான். அவமானம், வேலையில் பதவியுயர்வு சிக்கல், குடும்ப உறவுகளிலும் விரிசல். அத்தனையையும் கடந்து அவன் எழுந்து நிற்பதுதான் கதை. அதாவது தன் குறையை தானே உணர்ந்து ஏற்கிறான். பிளஸ் இதுபோன்ற ஸ்கிரிப்டை செலக்ட் செய்து நடித்த ஆயுஷ்மான் குரானா. பிரமாதமாக நடித்திருக்கிறார் என்பதை விட கதையை புரிந்துகொண்டு நடித்திருக்கிறார். படம் பார்த்த நண்பர், இறுதியில் தன் விக்கை கழற்றி கண்களைத் துடைக்கும்போது அவரின் கண்களும் கலங்கிவிட்டது. அந்தளவு பார்வையாளர்களை தன் நடிப்போடு இணைய வைத்துவிடுகிறார். பூமி பட்னாகரும் கருப்பு கலரில் சில காட்சிகளில் அய்யே சொல்ல வைத்தாலும் நடிப்பில் திடமாக காலூன்றி நிற்கிறார். மைனஸ் டிக் டொக் பெண்ணாக வரும் யாமி கௌதம். அவரின் குணம், எதிர்பார்ப்பு என்பதை ஆயுஷ்மான் புரிந்துகொண்டாலும் அவர் ஆயுஷ்மானை பிரியும் முட