இடுகைகள்

நூல்வெளி ஆக்கம் ஜோஸபின் விஸ்பர் சார்லி ட்ராம்ப்

நூல்வெளி ஆக்கம் ஜோஸபின் விஸ்பர்  சார்லி ட்ராம்ப் தொகுப்பாளர்கள் ஷான் ஜே கிறிஸ்டின் வர்னிகா விஷ்வதி மின்னூல் பதிப்புரிமை ஆரா பிரஸ் வெளியீட்டு உரிமை Komalimedai.blogspot.in கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 2015 ன் கீழ் வெளியிடப்படும் இந்நூலினை யாரும் படிக்கலாம், பகிரலாம், வேறுவகையில் பயன்படுத்தும்போது, பதிப்புரிமை நிறுவனங்களை குறிப்பிடவேண்டும்.   1 இது யாருடைய வகுப்பறை இரா.நடராசன் பாரதி புத்தகாலயம் இந்த நூல் ஆசிரியர்களுக்கானது என்பதை முதலிலேயே கூறிவிடவேண்டிய அவசியம் உள்ளது. படித்துவிட்டு தூக்க மருந்தாக பயன்படுகிறது என்று கூறக்கூடாது. இந்த நூலில் கல்வி எப்படி இருக்கவேண்டும், பள்ளி என்பது என்ன, இதற்கான சிந்தனைகளை தோற்றுவித்தவர்கள் யார், அதன் பின்னிருந்த நோக்கம் என்ன என்று தீவிரமாக வரலாற்றுத்தகவல்களோடு பேசுகிற கல்வி குறித்த முக்கியமான நூல் இது. குழந்தைகளுக்கு கருணை போல ஒவ்வொரு ஆட்சியிலும் இடும் திட்டங்களுக்கெல்லாம் யுனிசெப், யுனெஸ்கோ உதவி செய்கிறது என்பது முக்கியமான தகவலாக உள்ளது.  பின்லாந்து கல

சேட்டன் பகத் 'இளைஞர்களின் இந்தியா' தமிழில் - வின்சென்ட் காபோ

     சேட்டன் பகத் 'இளைஞர்களின் இந்தியா' தமிழில் - வின்சென்ட் காபோ                         கவலை வேண்டாம் மகிழ்ச்சியாக இருப்போம் இது அவ்வளவு சிறப்பான செய்தியல்ல. நீல்சன் ஆய்வு ஒன்றின் மூலம் அதிக அளவு மன அழுத்தத்திற்கு உட்படுபவர்களில் இந்தியப் பெண்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள். 87% விழுக்காடு பெண்கள் இதுபோல கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். வேலை செய்யும் சூழல் கொண்ட அமெரிக்காவில் கூட 53% விழுக்காடு பெண்கள்தான் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நம் பெண்களுக்களாக நாம் என்ன செய்யப்போகிறோம்? இந்தியப்பெண்கள் உலகிலேயே மிகவும் அழகானவர்கள். அம்மாவாக, அக்காவாக, மகளாக, தோழியாக, மனைவியாக நாம் அவர்களை விரும்புகிறோம். இவர்கள் இல்லாத வாழ்வை கற்பனை செய்து பார்க்க முடியுமா? உலகம் முழுவதும் ஏமாற்றம் கொண்ட, சீற்றமான, ஆணவம் கொண்ட ஆண்கள் உலகத்தினை நடத்திச்செல்ல காரணம் என்ன இருக்கிறது? அறை முழுக்க வியர்வை வாடையோடு, சாக்ஸ்கள் நிரம்பிக்கிடக்க, ஃப்ரிட்ஜினுள் சாப்பிட ஏதும் இருக்காது. பொழுதுபோக்கு

'புலிகளின் மீதானது மட்டுமல்ல எனது அக்கறை'' - வால்மிக் தாபர்

''புலிகளின் மீதானது மட்டுமல்ல எனது அக்கறை'' - வால்மிக் தாபர்                                                                     சஷி சன்னி தமிழில்: ரோஸலின் கார்த்திக் 1961 ஆம் ஆண்டு வால்மிக் தாபர் கார்பெட் தேசியப்பூங்காவில் முதன்முதலாக புலிகளைப்பார்க்கிறார். 40 ஆண்டுகளுக்குப்பிறகான இன்றைய தினத்தில் அந்தப்பயணம் ரசவாதத்தை தன்வாழ்வில் நிகழ்த்தியிருக்கிறது என்கிறார் அவர். ''வனவாழ்வு குறித்து ரசவாதம் போல என் மிச்ச வாழ்வை தொடர்வேன் என்று அப்போது எனக்குத்தெரியாது'' என்று கூறும் வால்மிக் தாபர் இந்தியாவின் முக்கியமான இயற்கையியலாளர் மற்றும் சூழல் பாதுகாப்பாளர் ஆவார். விலங்குகளையும், தாவரங்களையும் பாதுகாக்க முயற்சிக்கிறவன் என்று தன்னைப்பற்றி கூறிக்கொள்கிறார். வால்மிக் தாபர் எழுதியதும், தொகுத்ததுமாக தோராயமாக 25 புத்தகங்களையும் தாண்டுகிறது. பிபிசி நிறுவனத்திற்காக பல ஆவணப்படங்களை எடுத்துத் தந்திருக்கிறார். இதற்கான தொடக்கமாக, இந்தியாவில் அழியும் இயற்கை பாரம்பரியத்தை மாறி வரும் சூழலில் பாதிக்கப்படாமல் காப்பது குறித்த முயற்சிகள் இவை என்கிறார். இவரத

மின்னூல்,

படம்

நினைவுக்கேணி மின்னூல்

படம்

நினைவுக்கேணி-பாவண்ணன் இரா.முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

      நினைவுக்கேணி              பாவண்ணன் இரா.முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பாசிரியர் அன்பரசு ஷண்முகம்   கார்த்திக் வால்மீகி           தொகுப்பாசிரியர் அன்பரசு ஷண்முகம் கார்த்திக் வால்மீகி தட்டச்சுப்பணி இளம்பிறை மின்னூல் வடிவமைப்பு தி ஆரா பிரஸ், இந்தி்யா. மின்னஞ்சல் sjarasukarthick@rediffmail.com வெளியீட்டு அனுசரணை www.Komalimedai.blogspot.in கிரியேட்டிவ் காமன்ஸ் 2015 உரிமத்தின் கீழ் வெளியிடப்படும் இந்த மின்னூலினை யாரும் படிக்கலாம், பகிரலாம், வணிகமுறையில் பயன்படுத்தும்போது  மேற்குறிப்பிட்ட வலைப்பூ முகவரியினையும், மின்னஞ்சல் முகவரியினையும் குறிப்பிட வேண்டும். தொகுப்பாசிரியர் உரை மதிப்பிற்குரிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த நூல் 21 கடிதங்களைக்கொண்டுள்ள சிறுநூல் ஆகும். தாராபுரம் இரா.முருகானந்தம் அவர்களுக்கு பாவண்ணன் 2005, 2006, 2007 காலகட்டத்தில் எழுதிய பல்வேறு நூல்களைப்பற்றிய, கட்டுரைகளைப்பற்றிய, சமூக விமர்சனங்கள் கொண்ட எழுத்துக்களை இக்கடிதங்களில் கண்டதே இவற்றை தொகுப்பதற்கான ஒரே காரணம் எனக்க

pisasu

படம்
sorry i'm struggle on Windows os 7 and the relation of viruses. it take long minutes.

நேர்காணல்: கே.டி.எஸ் துள்சி

நேர்காணல்: கே.டி.எஸ் துள்சி ஆங்கிலத்தில்: பவன் பலி தமிழில்: பியர்சன் கயே ‘’ கருப்பு பண விவகாரத்தில் பி.ஜே.பி காலங்கடந்த புத்திசாலித்தனத்தைக் கொண்டிருக்கிறது ’’ மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் கருப்பு பண விவகாரத்தில் நாட்டின் ரகசிய ஒப்பந்தங்களோடு தொடர்புள்ளதாக கூறி இருக்கிறது இது பற்றி தங்களின் பார்வை என்ன?       பி.ஜே.பி இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் குறித்து முதல்முறையாக இப்போதுதான் அறிகிறார்களா? அக்கட்சி தலைவர்கள் இதனை முன்னரே அறியாதபோது எப்படி முன்னர் இருந்த காங்கிரஸ் அரசினை குற்றம் சாட்டி, நாடாளுமன்றத்தை ஒரு ஆண்டிற்கு முடக்க முடிந்தது? எப்படி கணக்கு வைத்திருப்பவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டார்கள்? உடன்படிக்கை பற்றி அறியாத போது, ஏன் இருட்டைப்பார்த்து காலை உதைக்கவேண்டும்?      உடன்படிக்கை 26 ன்படி ஸ்விட்சர்லாந்து, தேவையான தகவல்களை நீதிமன்றத்திற்கு தர முடியும் என்பதை அறியாதவர்களா இவர்கள்? துணிச்சலாக உடன்படிக்கையை மீறினால், ஸ்விஸ் அரசு அந்த கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்களைத்தராது இல்லையா? எதிர்கட்சியாக இருந்தபோது, பி.ஜே.பி  கணக்குகளை வெளியிடா