இடுகைகள்

தேனீக்காவலர்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
மிகவும் சிக்கலான தொடர்ச்சியான காட்சிகளை எடுத்துக்கொண்டால், உதாரணத்திற்கு மதுபானக் கூடத்தில் இளம்பெண் நடனமாடும் காட்சியைக் கூறலாம். இதனை ஒரு பட அரங்கில் மிக எளிதாக எடுத்துவிடலாமே? அது சரியாகவும் இருக்கலாம். ஆனால் அக்காட்சியில் வெளிப்புறம் உட்புறம் என்று மாறிச் சென்று வரும் காட்சிகளை எடுப்பது என்பது அதில் சிரமமானதாக மாறிவிடும். அவற்றினை தொகுப்பதும் சிரமம். ஒரே காட்சியில் உள்ளே மற்றும் வெளியே காட்சிகளை அமைக்க தேவையிருந்தது. மேலும் கிரீக் சினிமாதுறையில் அரங்குகளில் படமாக்குதல் இன்னும் பிரபலம் ஆகவில்லை என்பதுதான் யதார்த்தமாக உள்ளது. அது சிறிது ஆபத்தானதும் கூட. யதார்த்தமான இயல்பில் இருக்கும் எனது அரங்கை நான் தேவைக்கேற்ப மாற்றிக் கூட பயன்படுத்திக்கொள்வேன். நீங்கள் ஒளிப்பதிவாளர் ஜிபோர்ஸ்கோஸ் அர்வானிட், அரங்க வடிவமைப்பாளர் மைக்ஸ் கரபைபெரிஸ் ஆகியோருடன் நெருக்கமான நட்புறவுடன் உங்கள் முதல் படத்திலிருந்து பணியாற்றி வருகிறீர்கள்? படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேடி கண்டறிய நாங்கள் மூவருமே இணைந்துதான் செல்வோம். எங்களுடைய திட்டப்படி அந்த இடத்தில் என்னென்ன விஷயங்களைச் செய

நூல்வெளி2: கங்கையாக மாறும் கங்கவ்வாவின் கதை

படம்
கங்கவ்வா கங்கா மாதா கன்னட மூலம்: சங்கர் மோகாசி புணேகர் இந்தி வழி தமிழ்: எம்.வி. வெங்கட்ராம் வெளியீடு : நேஷ்னல் புக் ட்ரஸ்ட் சங்கர் மோகாசி புணேகர்               இந்த நாவலின் தொடக்கத்தில் கங்கவ்வா காசி விஸ்வநாதரை சென்று பார்த்துவிட்டு திரும்புகையில் ஏறத்தாழ அவளது வாழ்க்கையில் அவளது கடமைகளை பெருமளவு திருப்தியாக முடித்து விட்டிருக்கிறாள். அப்போதே அவளுக்கு கங்கையில் குதித்து உயிரை விடத் தோன்றுகிறது. ஆனால் வாழ்க்கையிலிருந்து அவ்வளவு எளிதில் யார் வெளியேறிவிட முடியும்?  தன் மகனது திருமணம், வளமான வாழ்க்கையை கண்டுவிட்டு பின்தான் இறப்பு  என்று நினைத்து வீட்டிற்கு கொண்டுவ ரும் கங்கை நீரைக் கூட வாழவேண்டும் வாழ்வேன் என்று தைரியமாக நடு இரவில் ரயிலிலிருந்து கீழே கவிழ்த்துவிடுகிறாள். இதை வாசிக்கும் போது  கதை முடிந்து விட்டது போல் தோன்றும். ஆனால் கதை தொடங்குவது இதிலிருந்துதான்.             கங்கவ்வா, பகதூர் தேசாய், கங்கவ்வாவின் தம்பி ராகப்பா ஆகிய மூன்று குடும்பங்களைச் சுற்றித்தான் கதை நிகழ்கிறது. கங்கவ்வாவின் கணவர் ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் உணர்ச்சிவசப்பட்டு ஒரு செய

நூல்வெளி2: வாழ்க்கைக்கான மருந்து இது

படம்
மருந்தென வேண்டாவாம் மருத்துவர் கு. சிவராமன் வெளியீடு: பூவுலகின் நண்பர்கள்        மருத்துவர் கு. சிவராமன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதிய  இந்நூல் ஈரோடு புத்தகச்சந்தையில் கூட 'டாக்டரு புதுசா சீசனுக்கு எழுதியிருக்காரு போல' என்று மக்களால் பரபரப்பாக வாங்கப்படும் உணவு குறித்த முக்கியமான நூல்தான். ஐந்தாம் பதிப்பு விரைவில் காணும் என்று நினைக்கிறேன். குமுதம் சிநேகிதியில் தொடராக வெளிவந்து பின் லோகத்தின்ட தோஸ்த் நிறுவனத்தினால் புத்தகமாக போடப்பட்டுள்ளது.          இந்நூலில் மரு. சிவராமன் தமிழ்நாட்டு பருவநிலைக்கு ஏற்றபடியான உணவுவகைகளை ஆராய்ச்சிக் கட்டுரை போல எழுதாமல் நமது நண்பர் ஒருவர் மருத்துவமும் தெரிந்திருந்தால் எப்படி நமக்கு அந்த மருந்துகள் குறித்து கூறுவாரோ அதுபோல மிக எளிமையான எழுத்துக்களால் பகிர்கிறார். இந்நூலை வெறும் உணவு குறித்த நூல் என்று எண்ணிப் படிக்கத்தொடங்கும் ஒருவரை கட்டிப்போட்டு வசீகரிப்பதும் அதுதான்.          கொள்ளு, வாழை, வெங்காயம், மிளகு குறித்து கூறும் தகவல்களோடு அதை எப்படி பயன்படுத்துவது என்றும் சில உணவு முறைகளை எழுதியுள்ளார். அவை நிச்சயம் ந

தேனீக்காவலர்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்(ஆ- டான் ஃபைனாரு)

படம்
வடக்கு கிரீசில் தொடர்ந்து படமெடுப்பதை குறித்து என்ன கூறவிரும்புகிறீர்கள்? எனக்கு தெரியவில்லை. ஏன் இந்த நிலப்பரப்பு மழையும் மூடுபனியும் கொண்டு ஒரு சோகத்தை மனதில் இது பரப்புகிறது என்று நினைப்பேன். எனவேதான் இது தனித்துவமானதாக எனக்குப் படுகிறது. பாரீஸில்  வெயில் இருக்கும் காலங்களைவிட மழைபெய்யும் போதுதான் எனக்கு அந்த இடம் மிகப்பிடித்தமானதாக இருக்கிறது. தங்களின் சூழ்நிலைத் தேர்வு அன்டோனியோனி உருவாக்கிய ‘போ வேலி ’ படத்தின் தன்மையை ஒத்தது போல இருக்கிறதே? அப்படியும் இருக்கலாம். படங்களை உருவாக்கத் தொடங்கிய காலம் முதல் இயற்கையான இந்த நிலக்காட்சி விஷயங்கள் என்னுள் தங்கிவிட்டது என்று கூறுவேன். தேனீக்காவலர் படத்தில் நீங்கள் பயன்படுத்திய இடங்கள் உங்களது முந்தைய படங்களிலும் வந்துள்ளது. உதாரணமாக – லேனினா. ஆம், அது உண்மைதான். மறுகட்டமைப்பு படத்தில் இரு காதலர்கள் லேனினாவில்வில் உள்ள விடுதி ஒன்றில் சந்திப்பார்கள். பயணிக்கும் வீரர்கள் படத்திற்காக அங்கு மீண்டும் சென்றேன். வேட்டைக்காரர்கள் படத்திற்காக லேனினாவை அடுத்துள்ள ஏரிக்குச் சென்றேன். உண்மையில் இதில் ஆச்சர்யகர

தேனீக்காவலர் படம் குறித்து...- தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
  தேனீக்காவலர் படம் குறித்து... மிசெல் சைமெண்ட் – 1987 ஆங்கில மூலம் - டான் ஃபைனாரு தமிழில்- லாய்ட்டர் லூன் தங்களது முந்தைய படமான சிதெராவிற்கு பயணம் என்பது உலகளவிலான அரசியல் குறித்த விமர்சனத்தைக் கொண்டிருந்தது. இறப்பு குறித்த கருத்துகளை வார்த்தைகளில் கூறாவிட்டாலும், அந்த விஷயங்கள் குறித்து குறிப்பிடத்தக்க சிந்தனையை, கோணத்தை படம் முன்வைக்கிறது. இது தங்களுடைய முந்தைய படங்களைக் காட்டிலும் வேறுபட்டதாக இருக்கிறது. தேனீக்காவலர்  படமானது மாஸ்ட்ரோய்னிஃ மற்றும் ரெஜியனி பழைய காம்ரேடுகள் வரலாற்றில் கிடைத்த சந்திப்பை தவறவிடுவது குறித்த உரையாடல் அரசியலைக் கொண்டுள்ளது. மீதி படம் தனிப்பட்ட மனிதர்களின் விதி பிரச்சனைகள் பற்றியும் பேசுகிறது. நாம் பேசிக்கொண்டிருக்கும் மனிதன் 55 வயதானவனும், அரை நூற்றாண்டை வரலாறை தன் முதுகின் மேல் சுமந்துகொண்டிருப்பன் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவன் தன் முந்தைய உலகை மாற்றும் நம்பிக்கைகள் குறித்தும், நிறுவன நண்பர்களோடான கடந்துபோன நிகழ்வுகள் குறித்தும் முன்பு தெளிவாக குறிப்பிடுகிறது.  பல்வேறு மாற்றங்கள் கிரீஸ் மற்றும் உலகத்தில் நிகழ்ந்த நாற்ப

மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் நிறைவுப்பகுதி: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
தியோ ஏஞ்சலோ பவுலோஸ் தொடர்ச்சியான காட்சிகள் என்பவை படத்தினை வேறு ஒரு தன்மையில் மாற்றுகின்றதா?        அதனை செயற்கையாக உருவாக்கும் தன்மையில் அது போன்று நிகழ்வதில்லை. மான்டேஜ் முறையிலான காட்சிகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு அதன்வழியே சினிமாவின் மதிப்பு ஓர் ஆணை போல வெளிப்படுத்தப்படுவது என்னை எரிச்சல்படுத்துகிறது. உதாரணத்திற்கு – ஒருவன் அறைக்குள் நுழைந்து காத்திருக்கிருக்கிறான். இதனை சினிமாவில் மான்டேஜ் காட்சியாக காட்டப்படலாம். என்னுடைய படத்தில் இது மான்டேஜாக இல்லாமல் சினிமா குறித்தபடி அதன் மதிப்பினை வீணாக்காமல் குறிப்பிட்ட நேர அளவுகோல்படி அதனை வேறு ஒரு தன்மையாக்க முயலுவேன். இங்கு கருவியாக வலுவான தன்மையில் பயன்படுவது நேரமே ஆகும். உண்மையான காலம் வெளிப்படுத்தப்படும் காலம் அல்ல. என்னுடைய படங்களில் ‘இறந்துபோன காலம் ’ உருவாக்கப்பட்டு உள்ளார்ந்த தன்மையோடு படத்தின் சூழலோடு இணைந்திருக்கும்.  இசை என்பது ஒலி மற்றும் மௌனத்திற்கும் இடையில் இணைப்பாக இருப்பது போல, ‘இறந்துபோன காலம் ’ என்னுடைய படங்களில் ஒரு லயம் கொண்டதாக, இசை சார்ந்த அமெரிக்க படங்களின் சினிமா தன்மையிலான ந

மெக்அலெக்ஸாண்ட்ரோஸ்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
அண்மையில் ஒரு நேர்காணலில் மற்ற இயக்குநர்களோடு அதிக தொடர்பு இல்லாமல் கிரேக்க சினிமா துறையில் நான் தனியாக இருப்பதாக உணர்கிறேன் என்று கூறியிருக்கிறீர்களே?        மற்ற கிரேக்க இயக்குநர்களுக்கு இதே போன்று எனக்குத் தோன்றுபவை அவர்களுக்கும் பொதுவானது என்று கூறவில்லை. நான் கிரேக்க சினிமாவின் உள்ளூர் சார்ந்த மாகாண தன்மையை படத்தில் காட்டவில்லை. என்னுடைய பாணி என்பதைத் தாண்டி அந்த தன்மையை படம் சந்திக்கும் இடங்கள் மிகவும் குறைவு. 1979 இல் தெஸ்ஸ்லோனிக்கி திரைப்பட விழாவில் ‘ஏஞ்சலோ பவுலோஸ் மரணம் வரை ’ என்றொரு வார்த்தை பயன்படுத்தப்பட்டது. சலுகை பெற்ற நன்கு அறியப்பெற்ற தன்மை மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்றாலும் எதிரெதிரான தன்மையில் அல்ல. கிரேக்க சினிமா துறையோடு அன்பு – வெறுப்பு போன்றவற்றோடும் தந்தை – மகன் போன்ற உறவை அகவயமான முறையில் கொண்டிருக்கிறேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இல்லை. கிரேக்க இடதுசாரி கட்சிகள் இறந்துபோன மொழியில் உரையாடிக்கொண்டிருப்பதைக் கண்டதால்தான் அதுபோன்ற எவ்வித முயற்சிகளையும் நான் மேற்கொள்ளவில்லை. கிரீஸ் படை

மெக்அலெக்ஸாண்ட்ரோஸ்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
இதன் அர்த்தம் பயணிக்கும் வீரர்கள் படத்தினைக் காட்டிலும் இது யதார்த்தமான படம் என்று கொள்ளலாமா?        இப்படம் பயணிக்கும் வீரர்களுக்கு மிகவும் எதிரிடையான தன்மை கொண்ட சர்ரியலிசம் கொண்டது. இப்படம் உண்மைச் சம்பவங்களை குறிப்பிடுவதில்லை என்றாலும் அரசியல், பாலியல் சார்ந்த விஷயங்களின் அடர்த்தியான தன்மை கொண்டுள்ளது. பயணிக்கும் வீரர்கள் படத்தின் வலுவான தன்மையோடு இப்படத்தை ஒப்பிட்டால் இது பெரிதும் கவித்துவமான படம் என்று கூறலாம். ஈவா கோடமனிடோ இன் கதாபாத்திரம் மிகவும் சிக்கலானதாக உருவாக்கப்பட்டுள்ளது. அவள் அலெக்ஸாண்டரின் சகோதரி, மகள், மற்றும் மனைவி....        மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் நூலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது அவளின் கதாபாத்திரமாகும். இதில் இடையூறாக பல புராண கற்பனைகள்ஃ உள்ளன. உ.தா: ஒடிபஸ் போல ஆனால் இவை தவிர்த்தும் வேறு பெயர்களும் உள்ளன. படம் பின் தொடரும் புகழ்பெற்ற மனிதனான அலெக்ஸாண்டரின் பிறப்பு ஒரு மர்மமாக உள்ளது. அவன் அதிர்ஷ்டத்தின் குழந்தை என்று அழைக்கப்படுகிறான். எனவே அவன் நகரத்தில் உள்ள ஒரு பெண்ணை தன் தாயாக தத்தெடுக்கிறான். எனவே அவளின் மகள் அவனுக்கு

நூல்வெளி2: பன்றித்தீனி

படம்
புதிய கலாச்சாரத்தின் சிறுவெளியீடான பன்றித்தீனி நூல் நாம் நடைமுறை வாழ்வில் உண்டுகொண்டு இருக்கும் நெஸ்லே பொருட்கள், கோககோலா, பெப்ஸி உள்ளிட்ட பொருட்களின் பின்னேயுள்ள அரசியல் முதற்கொண்டு அதனால் நமது உடல் என்னமாதிரியான பாதிப்புகளுக்கு ஆட்படுகிறது என்பது வரையிலும் தெளிவாக எடுத்துரைக்கிற நூலாக உள்ளது.                நெஸ்லே நிறுவனத்தின் நூடுல்ஸ் வகைக்கு அரசு தடை விதித்துள்ளதைக் குறித்து தொடங்கும் கட்டுரை, அந்நிறுவனம் தனது பால் விற்பனைக்காக தென்னாப்பிரிக்காவில் புட்டிப்பால் சிறந்தது என்று கூறி பல லட்சம் மக்களை கொன்றழித்தது பற்றியும், அந்நிறுவனத்தில் நீர் வணிகம் எப்படி அப்பட்டமான நுகர்வுச்சூழலை உருவாக்கி ஏழை அடித்தட்டு மக்களை மெல்லக் கொல்லுகிறது என்பதையும் விரிவாகப் பேசுகிறது.             கோலா பானங்கள் குறித்த கட்டுரை அவற்றின் அரசியல் லாபிகள் குறித்தும் தாராளமயமாக்கல் சூழலில் உள்ளே நுழைந்து இந்திய நிறுவனமான பார்லே நிறுவனத்தில் வியாபாரத்தை முற்றிலும் ஒடுக்கியதோடு அந்நிறுவனத்தின் குளிர்பானப் பிரிவையும் அடிமாட்டு விலைக்கு தன் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வளைத்தது குறித்தும் விரிவாக ஆழம

மெக் அலெக்ஸாண்ட்ரோஸ்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
மரணத்தின் இடம் மற்றும் இறந்த காலத்தின் இயக்கம்: மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் டோனி மிட்செல் – 1980 ஆங்கிலத்தில் - டான் ஃபைனாரு தமிழில் - லாய்ட்டர் லூன் கிரேகத்தின் செவ்வியல்தன்மை கொண்ட காலத்தை மக்கள் நினைவில் வைத்திருக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் என்கிறீர்கள். ஓ மெக் அலெக்ஸாண்ட்ரோஸ் இல் பயன்படுத்தப்படும் விஷயங்கள் அதன் புனைவு என்ற தன்மையில்தானா?        கிரேக்கர்கள் நடுகற்களை வழிபட்டு அதன் பெருமை பேசி வளர்ந்த பாரம்பரியம் கொண்டவர்கள். புனைவுகளை மேலிரிருந்து கீழாக மக்களிடம் கொண்டு வந்து பேச, பயணிக்கும் வீரர்கள் படத்தின் மூலம் முயற்சித்தேன்.  படத்தில் தலைப்பு மிகச்சிறந்த அலெக்ஸாண்டர் என்று வைக்கப்படவில்லை. ஆனால் மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் அறியாத பல வீரர்கள் போல கற்பனையான கதைகளில் வாழும் புகழ்பெற்ற ஒரு வீரர் ஒருவராவார். வரலாற்று அலெக்ஸாண்டரோடு ஒப்பிடுகையில் பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை என்றாலும் இவர் வேறுபட்ட முறையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட முக்கியமான பிரபலமான ஒருவர் என்று கூறமுடியும்.        1453 ஆம் ஆண்டில் துருக்கியரின் ஆதிக்கத்தில் நாடு இருந்தபோது உருவான ஒரு ப