ஜாரவா பழங்குடிகளை அழிக்கும் ரயில்பாதை!
ஜாரவா பழங்குடிகளை அழிக்கும் ரயில்பாதை - இந்தியாவின் சீக்ரெட் பிளான் - ச . அன்பரசு ஓர் அரசின் மேலாதிக்கம் , மற்றுமொரு நிலப்பரப்பில் வாழும் மக்களின் வளத்தை உறிஞ்சியே வளர்கிறது என்பதற்கு நிகழ்கால சாட்சி அந்தமான் நிக்கோபார் தீவுகள் . இந்திய அரசு அங்கு விரைவில் அமைக்கவுள்ள 240 கி . மீ ரயில்பாதை அங்கு ஏற்கனவே வாழிடங்களை இழந்து எஞ்சியுள்ள ஜாரவா ஆதிவாசியினத்தை முற்றிலுமாக துடைத்தழிக்ககூடும் என அச்சம் எழுந்துள்ளது . வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமானின் தலைநகரான போர்ட்பிளேரிலிருந்து 90 கி . மீ உள்ளே சென்றால் காதம்தலாவிலுள்ள ஹாம்லெட் என்ற ஜாரவா வனப்பகுதி . சூரியன் மறையத் தொடங்கினாலே அங்கு அமைந்துள்ள அரசு பழங்குடி நலவாழ்வு அமைப்பான அந்தமான் ஜன்ஜதி விகாஸ் சமிதி (AAJVS) யின் அலுவலகம் பரபரப்பாகிவிடும் . அந்தமானின் ஜாரவா பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் அலுவலகத்தில் பாதுகாப்பாக தங்கவைத்து திருப்பி அனுப்புவதே அங்குள்ள அரசு அதிகாரிகளின் தினசரிபணி . ஜாரவா ஆதிவாசி மக்களின் ஆக்ரோஷம் அப்படியே நம் விராட் கோலி போல . தங்கள் பகுதியின் மீது விமானம் பறந்தாலே அதன் மீது அம்பு