இடுகைகள்

பசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெயிலை சமாளித்து வாழும் கிரிஸ்பிஆர் எடிட்டிங் செய்யப்பட்ட பசுக்கள்!

படம்
          சுற்றுச்சூழலை தாங்கும் மரபணு மாற்றப்பட்ட பசுக்கள்! கிரிஸ்பிஆர் தொழில்நுட்பம் மூலம் மரபணு மாற்றப்பட்டு பசு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மரபணு குறைவான வெயிலை ஈர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. வெப்பமயமாதல் பாதிப்பு அதிகரித்து வருவதால், மரபணுக்களை கிரிஸ்பிஆர் மூலம் மாற்றுவது, அவற்றின் பாதிப்பை குறைக்க உதவும். இம்முறையில் கால்நடைகள் வெப்பத்தை எதிர்க்கமுடியும். அதன் நிறத்தை நீர்த்துப்போன முறையில் அமைப்பதன் மூலம் சுற்றுச்சூழலை தாக்குப்பிடிக்க முடியும் என்கிறார் நியூசிலாந்தைச் சேர்ந்த கோய்ட்ஸ் லைபிள். இவர் ஏஜி ரிசர்ச் என்ற ஆய்வுமையத்தைச் சேர்ந்தவர். இப்போது நியூசிலாந்தைச் சேர்ந்த பசுக்கள் 20 சதவீதம் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு கருவுறுதல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு கன்று ஈனுவதோடு அவற்றின் பால் உற்பத்தியும் பண்ணைக்கு தேவைப்படுகிறது. வெயில் நேரத்தில் கன்று ஈனுவது கடினமாகி வருகிறது. கருப்பு நிறத்திலுள்ள கால்நடைகள் வெப்பத்தினால் அதிகம் பாதிப்பு அடைகின்றன. எனவே நிறத்தின் அடர்த்தி குறைந்த கால்நடைகள் இருப்பது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். எனவே இதற்கு  காரணமான பிஎம்இஎல

பசுவைக் காக்க படாதபாடு படும் இந்தியா அரசு! - அமலுக்கு வரும் அவசியமான விதிகள்!

படம்
      cc     கால்நடைகள் விரைவில் முறைப்படுத்தப்படவிருக்கின்றன. வாயில்லாத ஆனால் பாலை பாக்கெட் நிறைய கொடுக்கும் ஜீவன்களை காப்பதுதானே இந்திய ஜனநாயகத்தின் மகத்துவம். கால்நடைகளைப் பற்றிய சிறிய டேட்டா இதோ! 13.6 கோடி கால்நடைகள் இந்தியாவில் உள்ளன. இதில் 2.4 லட்சம் கால்நடைகள் தலைநகர் டில்லியில் வாழ்கின்றன. பசுக்கள் தினசரி தலா 15-30 கிலோ அளவில் சாணியையும் சிறுநீரையும் வெளித்தள்ளுகின்றன. இவை பெரும்பாலும் குப்பையில் வீசப்படுகின்றன. இல்லையெனில் பாவம் தீர்க்கும் கங்கையின் பாகமாக இவையும் மாறுகின்றன. இக்கழிவிலிருந்து அம்மோனியா, சல்பைடு, ஹைட்ரஜன், மீத்தேன் ஆகிய வாயுக்கள் வெளியாகின்றன. புதிய விதிகள் பசுவின் சாணி, சிறுநீரை சாக்கடையில் அள்ளி வீசக்கூடாது. நகராட்சி மாநகராட்சி இதற்கென தனி இடங்களை உருவாக்கி அதில் அவற்றை கொட்டுவார்கள். இதிலிருந்து வறட்டி, எரிவாயு தயாரிக்கும் புதிய ஐடியாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு கால்நடைக்கு 150 லிட்டர் நீர் மட்டுமே என ரேஷனில் அரிசி நிறுப்பது போல அளவிட்டு வழங்கப்படும். கழிவுகள் நிலத்தடி நீரில் கலப்பதை தடுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். கோசாலைகள் குடியிருப்புகளிலிருந்து 200

சுதேசி பசுக்களை இப்படியும் காப்பாற்றலாம்- இந்திய அரசின் யூடர்ன்!

படம்
சுதேசி பசுக்களை பாதுகாக்கும் புது வழி! பிரேசில் நாட்டில் கிர் எருதுகளுக்கான  விந்தணுக்களை இறக்குமதி செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு பிரேசில் அரசிடம் ஒப்பந்தம் செய்து, விந்தணுக்களை உறைதல் செய்து வாங்க முடிவெடுத்தனர். ஆனால் உள்நாட்டில் இந்த விஷயம் தெரிந்து போராட்டம் வெடிக்க அரசு பின்வாங்கியது. தற்போது பிரேசில் அரசு மூலம் ஒரு லட்சம் விந்தணு ஊசிகளைப் பெற அரசு முடிவு செய்துள்ளது. கிர் காளைகள் விரைவில் இந்தியாவில் உற்பத்தியாகும் என கால்நடைத்துறை அமைச்சர் சஞ்சீவ் பல்யான் கூறியுள்ளார். கிர் எருதுகளுக்கான விந்தணுக்களை பாவ்நகர் ராஜா முன்னர் பிரேசில் நாட்டுக்கு பரிசாக வழங்கினார். அவர்கள் அதனைப் பாதுகாத்து வைத்தனர். தென் அமெரிக்க நாடுகளில் கிர் இன பசுக்கள் பல்வேறு தட்பவெப்ப சூழல்களுக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக்கொண்டு உள்ளன. மேலும் பாலும் அதிகம் கிடைக்கிறது. அதேசமயம் இந்தியாவில் மேற்கத்திய பசு இனங்கள் பிரபலப்படுத்தப்பட்டன. அதிக பால் என்ற ஒற்றை மந்திரத்தில் கட்டுப்பட்ட மக்கள், நாட்டு மாடுகளை மறந்தனர். காலப்போக்கில் நாட்டு மாடுகள் காணாமல் போயின. தற்போது 15.17 மில்ல