கூகுளின் பிடியில் உலகம் 2030!
கூகுளின் பிடியில் உலகம் 2030! காலையில் கம்ப்யூட்டரை திறந்ததும் அன்றைக்கு உலகில் முக்கியச்செய்தியை டூடுலாகக் கொண்ட கூகுள் சர்ச் எஞ்சின் உங்களுக்கு ஹாய் சொல்லுகிறது . கூகுள் இன்று வெறும் சர்ச் எஞ்சின் சொல்பவர்கள் உண்மையில் அம்மாஞ்சிதான் . தானியங்கி கார் , பர்சனல் அசிஸ்டண்ட் , செயற்கை அறிவு கொண்ட எந்திரங்கள் என கூகுள் ரொம்பவே பிஸியாக பிசினஸை அப்டேட் செய்வதில் மற்ற நிறுவனங்களை விட கூகுள் செம கில்லி . இப்படியே போனால் 2030 இல் என்னவாகும் ? 2030 ஆண்டின் ஜனவரி முதல்நாள் . அறையின் கதகதப்பு அவ்வளவு சுகம் . ஆனால் வெளியே ரத்தம் உறையும் பனி . கூகுளின் நெஸ்ட் எனும் செயற்கை அறிவு கொண்ட ஏசியினால் இது சாத்தியம்தான் . எழுந்து காஃபி குடித்துவிட்டு , குளித்து பிள்ளையாரை வேண்டி தலையில் குட்டிக்கொண்டு ஆபீஸ் கிளம்புகிறீர்கள் . வாகனம் ? கூகுளின் தானியங்கி கார்தான் . வழிகாட்ட கூகுளின் Waze ஆப் இருக்கையில் கவலை என்ன ? ஆபீஸ் வேலையில் லஞ்ச் பிரேக்கில் ஜாலியாக ஆபீஸ் பில்டிங்களை சுற்றி வருகிறீர்கள் . அப்போது உங்களின் கண்களில் கம்பீரமாக பொருந்தியிருக்கும் கூகுள் கிளாஸ் 2.0, அன்றைய நாளின் வானிலை