இடுகைகள்

திருடர்களுடன் கைகோத்து நாட்டை வல்லரசாக்குவோம் மக்களே! - பன் பட்டர் ஜாம்

படம்
                  அன்புள்ள மெகந்தியா மக்களே! அனைவருக்கும் வணக்கம். அனைவரும் நோய்த்தொற்று பரவிய சூழலிலும் வரி கட்டி வந்தீர்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்போதுதானே, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும். அரசு ஊதியம் ஆண்டுதோறும் உயர்ந்து வந்தது கடந்த காலம். இனிமேல் ஆண்டுதோறும் அவர்களின் சம்பளம் குறைக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம். இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு மக்கள் சேவகர்கள் என்ற இயல்பு பழக்கமாகும். அரசு இயந்திரங்கள் ஊழல் செய்வதில் முன்னிலை வகிப்பதாக உலக அமைப்புகள் தனியாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன. எனவே இப்படி சம்பாதிக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகம் கூட்டிக் கொடுப்பது எந்த நலனையும் ஏற்படுத்தாது. எனவே, அவர்கள் தங்கள் சாமர்த்தியத்தை மக்களிடம் காட்டி பணத்தைப் பெறட்டும். இதனை அரசு மனப்பூர்வமாக ஏற்கிறது. ஆனால் அவர்கள் ஒரு லட்சம் சம்பாதித்தால் இரண்டாயிரம் ரூபாயை உறுதியாக வரியாக கட்டவேண்டும். அப்போதுதான் அரசு அவர்களைப் பாதுகாக்கும். அரசு சேவைகள் அனைத்தும் மக்களுக்கானவை. ஆனால் அனைத்தும் கட்டண சேவை என்பதை இனி உணர்ந்துகொள்வது அவசியம். அப்போதுதான், இந்த ரோதனைக்கு நாமே

புரதச்சத்தை உடலுக்கு பெறும் ஒரே வழி - கறி சாப்பிடுவதுதான்!

படம்
                        finger licking good -Meat இப்படி நிறையப் பேர் சொல்லுவார்கள். புரத தேவைக்கு ஒரே எளிதான வழி இறைச்சி என பலரும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.  ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை. காய்கறிகள், பிற தானியங்கள் என பல்வேறு உணவுப்பொருட்களிலும் புரதம் உள்ளது. இறைச்சியை பட்டினி கிடந்தவர்கள் சாப்பிடுவது போல சாப்பிட்டால், உடல் கெட்டுவிடும். இதயம்., நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் உறுதியாக ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆதிக்காலத்தில் நாம் இறைச்சியைத்தான் சாப்பிட்டோம் என ஐந்துவீட்டு சாமி துணை பக்தர்கள் கொந்தளிக்கலாம். ஆனால் அன்று உணவுக்கு வேட்டையாடி சாப்பிடும் தேவை இருந்தது. பயிர் விளைவித்து சாப்பிடும் புத்தி உருவாகவில்லை. அப்படி ஒரு ஒப்பீட்டை எடுத்தாலும் கூட இன்று ஆண்டுக்கு ஒருவர் சாப்பிடும் இறைச்சி அளவு அதிகம். புரதம். விலை குறைவு என நிறைய காரணங்களை லாஜிக்காக சொல்லலாம். இதனை நாம் மறுக்கவில்லை. இறைச்சியில் எளிதாக நுண்ணுயிரிகள் தொற்றிக்கொள்வதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு எளிதாக வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். இறைச்சிக்கு மாற்றாக என்ன சாப்பிடுவது? அவகாடோ, தேங்காய், பருப்பு வகை

வயிற்றில் என்சைம்கள் சரியாக இயங்கவில்லையெனில்?......

படம்
                    என்சைம்கள் இயங்கவில்லையே ப்ரோ? என்சைம்கள் இயங்கினால் என்ன இயங்காவிட்டால் என்ன என்று சிலர் தில்லாக பதில் சொல்லுவார்கள். ஆனால் என்சைம்கள் இயங்காதபோது தீர்க்கமுடியாத நோய்கள் பலவும் ஏற்படும். ஒவ்வாமை, முழங்கால் வலி, இளம் வயதில் வயதானதுபோல தோற்றம், புற்றுநோய், உடல் பருமன், இதய நோய்கள் ஆகியவை ஏற்படும். என்சைம்கள்தான் ஒருவருக்கு ஏற்படும் உடல் பாதிப்புகளை தீர்க்க உதவுகிறது. திசுக்களை புதிதாக உருவாக்க உதவுவதும் என்சைம்கள்தான். நமது உடலில் உள்ள சிலவகை என்சைம்களைப் பார்ப்போம். மெட்டபாலிக் என்சைம், டைஜெஸ்டிவ் என்சைம், உணவு என்சைம். மெட்டபாலிக் என்சைம் - இவற்றை உடல் உருவாக்குகிறது. வள்ர்சிதை மாற்ற என்சைம்களான இவைதான் உடல் தனது அடிப்படை விஷயங்களை செய்ய உதவுகிறது. இந்த என்சைம்கள் பற்றாக்குறையாக இருந்தால், பல்வேறு பிரச்னைகளை உடல் சந்திப்பதோடு நோய்களும் ஏற்படும். டைஜெஸ்டிவ் என்சைம் - இதைப் படித்தவுடனே உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த என்சைம்கள் பார்ட்டைம் மட்டுமல்ல முழு நேரமுமே உணவுகளை உடைத்து அதனை செரிக்க ஏற்றவையாக மாற்றுவதுதான் வேலை. இதனை பான்கிரியாட்டிக் என்சைம் என்று கூட சொல்லல

வயிறு கெட்டுப்போனால் என்ன ஆகும் தெரியுமா?

படம்
    வயிற்றுக்குள் பாக்டீரியா! நமது வயிற்றுக்குள் பாக்டீரியா இருக்கிறது என்றால் பலரும் சிரிப்பார்கள். ஆனால் அவைதான் உணவு செரிமானத்திற்கு பெரிய உதவிகளைச் செய்கிறது. மோசமான உணவுகளால் ஏற்படும் தொற்றுகளை தடுப்பதும் அதுதான். வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை கட் பாக்டீரியா என்று அழைக்கின்றனர். இதுவே, உணவில் உள்ள மூலக்கூறுகளை சிறியதாக உடைத்து அதனை செரிமானத்திற்கு ஏற்றபடி மாற்றுகிறது. குடல் சுவர்களை பாதிக்கும் நுண்ணுயிரிகளை, புரதங்களை கழிவாக மாற்றுகிறது. இவற்றின் பணியால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகிறது. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு புரோபயோடிக் பாக்டீரியா நிறைய நன்மைகளை செய்கிறது. ஒவ்வாமை பாதிப்பு ஏற்படும் பொருட்களை முடிந்தளவு செரித்து பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறது. கேண்டிடா ஈஸ்ட், பூ்ஞ்சை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக எதிர்கொள்ள முடிகிறது. கேண்டிடா, கேண்டிடா அல்பிகன்ஸ் என்ற நுண்ணுயிரிகளின் பாதிப்பை ஈஸ்ட் தொற்று என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியல் போட்டால் அடுத்த அத்தியாயமே வந்துவிடும். சுருக்கமாக முக்கியமான அறிகுறிகளை மட்டும் கூறுகிறேன். ஒவ்வாமை, பத

ஒவ்வாமையோடு வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள்- பொருட்களை வாங்கும்போது கவனிங்க!

படம்
              கவனம் கொள்ளாத வேறு சில ஆபத்துகள்! தாலேட்டுகளைப் பற்றி என்னென்ன ஆபத்துகள் என்று பார்த்தோம். அது மட்டும்தானா என்றால் கிடையாது. இது மலையாளப் படம் போல, ஒரே படத்தில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் குணச்சித்திர பாத்திரத்தில் நடிப்பார்கள். அதேபோல நிறைய வேதிப்பொருட்கள் உடலை பாதிக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். அசிடோன் மூச்சுக்குழல், ரத்தம், இதயம், கல்லீரல், சிறுநீரகம், தோல், மூளை, நரம்பியல் அமைப்பு என பாகுபாடில்லாம் நிறைய உறுப்புகளை பாதிக்கிறது. இங்கு குறிப்பிட்ட உறுப்புகள் குறைவுதான். அசிடோன் உள்ளே போகும்போது, உடலிலுள்ள நிறைய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பியூடேன், ஐசோபியூடேன் எடை குறைவான திரவம்தான். ஆனால் மூளையையும், நரம்பு அமைப்புகளையும் கடுமையாக பாதிக்கிறது. உடலில் நடக்கும் வேதிவினைகளை மூளைதான் தீர்மானிக்கிறது. அதுவே சீர்குலையும்போது, உடல் தடுமாறி தளரும். திர்வ பெட்ரோலியம். ஏர் ஃப்ரெஷ்னர் வகைகளில், திரவ பெட்ரோலியத்தை அடிப்படையாக கொண்ட பொருட்களை பயன்படுத்துகிறார்கள். வண்டிக்கு போடுவதை உடலுக்குள் அனுப்பினால் உறுப்புகள் மைலேஜ் காட்டுமோ என நினைக்காதீர்கள். எல்லாம

ஒவ்வாமையை கட்டுப்படுத்துவது எப்படி? சில வழிமுறைகளை அறிவோம் - ஒவ்வாமை நூலிலிருந்து...

படம்
                ஒவ்வாமைக்கு காப்பு! என்னதான் அதிநவீன பூட்டு என்றாலும் அதனை உடைக்கும் நுட்பமான புத்தி கொண்ட திருடனும் இருப்பான்தானே? நோய்க்கும் இது பொருந்தும். என்னதான் ஒவ்வாமை நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தினாலும் மருந்தை விட உணவு மூலமே நிறைய மாற்றங்களை செய்யலாம்., சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்தாலே உடல் நலமாகி தேறும். இப்போது உடல்நலம் காக்கும் சில சத்துகள், மருந்துகளைப் பார்ப்போம். கால்சியம் மெக்னீசியம் ஆகிய சத்துகள் உடலுக்கு முக்கியம். இவை தசைகளில் சேருவது அவசியம். தசைகளின் இறுக்கம், நெகிழ்வு ஆகிய இரண்டுக்கும் இந்த சத்துக்கள் தேவை. ஆஸ்துமா பாதிப்பு கொண்டவர்கள் இந்த சத்துகள் கொண்ட பொருட்களை சாப்பிடலாம். அப்படியல்லாதபோது 250 கிராம் கால்சியம், மெக்னீசியம் ஆகிய இரண்டையும் நான்கு முறை தினசரி எடுத்துக்கொண்டால் உடல் நலமாகும். இதில் ஆண்கள், பெண்களுக்கு சாப்பிடும் அளவு மாறும். எனவே மருத்துவரின் பரிந்துரை அவசியம் தேவை. ஆப்பிள், வெங்காயத்தில் உள்ள குயிர்செடின் என்ற வேதிப்பொருள்  உடலுக்கு முக்கியமானது. இது ஆன்டி ஆக்சிடன்டாக உடலில் ஒவ்வாமை பாதிப்பை கட்டுப்படுத்துகிறது. இதனை பைடோநியூட்ரியன்ட் என்று அ

இயற்கைச்சூழலைக் கெடுத்த செர்னோபில் அணுஉலை பேரிடர்!

படம்
  செர்னோபில் பேரிடர்  செர்னோபில் பேரிடரைப் பலரும் எப்போதேனும் நினைத்துக்கொள்வார்கள். ஆனால் அணுஉலை பற்றி பேசும்போது முக்கியமாக இதனை சூழலியலாளர்கள் கூறுவார்கள். அந்தளவு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவம் இது.  1986ஆம்ஆண்டு ஏப்ரல் 26 அன்று செர்னோபில் அணுஉலை பாதிப்பு ஏற்பட்டது. சோவியத் யூனியனின் பிரிப்யாட் என்ற நகரில் அமைந்திருந்த அணுஉலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது.  அணு உலையில் அமைந்திருந்த ரியாக்டரை சோதித்து வந்தனர். அதில், நீர் மூலம் இயங்கும் டர்பனை இயக்கி ரியாக்டரின் வெப்பத்தைக் படிப்படியாக குறைக்க முயன்றனர். ஆனால் அப்போது திடீரென மின்சாரம் நின்றுபோனது. இந்த இடத்தை மூடிய ஆபரேட்டர்கள் அணு உலையின் தொடர் சங்கிலியாக நடக்கும் செயல்பாடுகளை கவனிக்க வில்லை. இதன் காரணமாக அங்கு தீபிடித்தது. இதன் விளைவாக கதிரியக்க தனிமங்கள் சூழலில் கசியத் தொடங்கின. இதன் விளைவாக காற்றை சுவாசித்த நூறு பேர் உடனடியாக இறந்தனர். மீதியுள்ளவர்கள் பலருக்கும் வாழ்நாள் முழுக்க தொடரும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.  அரசுக்கு தகவல் கிடைத்ததும், அங்கு சுற்றுப்புறத்தில் வாழ்ந்த மக்கள் ஆயிரக்கணக்கில் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்ப

சத்யஜித்ரே - மறக்கமுடியாத சினிமாக்கலைஞன்

படம்
  சத்யஜித்ரேவுக்கு நிறைய அடைமொழிகள் உண்டு. சினிமா இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், இதழ் ஆசிரியர், ஓவியர், சித்திர எழுத்துக்கலைஞர், இசை அமைப்பாளர் என பல்வேறு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்.  1921ஆம் ஆண்டு மே 2 அன்று பிறந்தவர், சத்யஜித்ரே. வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பிறந்தார். இவரது குடும்பமே அன்று வங்காளத்தில் புகழ்பெற்றதுதான். பத்து தலைமுறையாக புகழ்பெற்ற மனிதர்கள் அந்த குடும்பத்தில் இருந்து வந்தனர். சத்யஜித்ரேவின் தாத்தா, உபேந்திர கிஷோர் ரே எழுத்தாளராக இருந்தார். கூடுதலாக, அன்றைய பிரம்ம சமாஜத்தின் தலைவராகவும் இருந்தார். சத்யஜித்ரேவின் தந்தை ஓவியராக இருந்தார். இவர் குழந்தைகளின் புத்தகங்களுக்கு நூல்களுக்கு படம் வரைந்துகொண்டிருந்தார்.  ரே, பாலிகுங்கே அரசுப்பள்ளி மேல்நிலைப்பள்ளியில் படித்தார். கொல்கத்தாவில் இருந்த பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரப் பாடத்தில் பட்டம் பெற்றார்.  ரேவுக்கு கலைகளின் மீது பெரும் ஆர்வம் இருந்தது. தொடக்கத்தில் இருந்தே வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாக, விளம்பர ஏஜென்சி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.  இதன் மூலமாக வங்காள மொழி நூல்கள

ஒவ்வாமை புதிய மின்னூல் வெளியீடு - அமேஸானில் வாசிக்கலாம்

படம்
  புதிய மின்னூல் வெளியீடு ஒவ்வாமை ஒவ்வாமை என்பதை ஆங்கிலத்தில் அலர்ஜி என அழைக்கிறார்கள். இன்று, தொற்றுநோய்கள் பாதிப்பை பற்றி பலரும் பேசினாலும் கூட, அதற்கு நிகராக வளர்ந்து வரும் பிரச்னையாக நோயாக ஒவ்வாமை உள்ளது. இதனை குணப்படுத்த முடியாது. ஒவ்வாமை தரும் பொருட்களை சாப்பிடாமல், உடலுக்குள் செல்லாமல் தடுத்தால் உடல்நலம் சீர்பெறும். உண்மையில் ஒவ்வாமை என்றால் என்ன, அதை ஏற்படுத்துவது என்னென்ன பொருட்கள், நாம் வாழும் இடம், பயன்படுத்தும் பொருட்கள், உண்ணும் உணவு என்னென்ன பங்களிப்பை செய்கிறது என்பதைப் பற்றி நூல் விவரித்துள்ளது. இது சிறிய அளவிலான அறிமுக நூல்தான். ஆங்கிலத்தில் ஒவ்வாமையைப் புரிந்துகொள்ள சிகிச்சை செய்ய ஏராளமான நூல்கள் உண்டு. ஆனால் இந்த வகையில் தமிழில் இது புதிது. தமிழில் ஒவ்வாமையைப் பற்றிய எளிதாக தெரிந்துகொள்ள பாதுகாப்பாக இருக்க இந்த நூல் உதவும். நூலை அமேஸானில் வாசிக்க ஸ்கேன் செய்யுங்க.... வெப்சைட் லிங்கை கிளிக் செய்தும் வாசிக்கலாம்.... https://www.amazon.in/dp/B09TJMVW5W

புதிய நூல்கள் அறிமுகம் - ஆப்கன் பெண்களின் கதை, தற்கொலைகள் அதிகரிப்பது ஏன்?, ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள்

படம்
  லைஃப் இன்ட்ரப்டட் அம்ரிதா திரிபாதி அபிஜித் நட்கர்னி, சௌமித்ர பாதரே சைமன் ஸ்ஹஸ்டர் 599 இந்தியாவில் தற்கொலைகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதைத் தடுக்க என்ன வழி இருக்கிறது? இப்படி தற்கொலை செய்வதில் இளைஞர்கள், பெண்கள், வயதானவர்கள் உள்ளனர். இதில் பல்வேறு ஆய்வுகள், செய்திகள், நேர்காணல்கள் உள்ளன. மை பென் ஈஸ் தி விங் ஆப் எ பேர்ட் ஹாசெட்  599 இந்த நூலில் ஆப்கன் பெண்களைப் பற்றிய கதைகள் உள்ளன. பதினெட்டு எழுத்தாளர்கள் கதைகளை எழுதியுள்ளனர். குடும்பம், வேலை, நட்பு, பாலினம் என பல்வேறு கருத்துகளை அடிப்படையாக கொண்டு கதைகளை எழுதியுள்ளனர். இக்கதைகளில் ஒலிக்கும் குரல்கள் அசலானவை என்பதே முக்கியமாக உள்ளது.  ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ் ரூமிலா சென் ஆக்ஸ்போர்ட் பிரஸ் இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டுகள், தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அவர்களின் லட்சியத்தை எப்படி மீட்டெடுக்க முடியும் என்பதை எழுத்தாளர் விளக்கியுள்ளார்.  தி ஸ்டோரிஸ் வீ டெல் தேவ்தத் பட்நாயக் ஆலெப் 499 இந்நூல் தொகுப்பில் 72 கதைகள் உள்ளன. இந்திய புனைவு மரபிலிருந்து அனைத்து கதைகளையும் உணர்ந்து படிக்க வேண்டும். அப்படித்தான் பட்நாயக் எழுதியுள்ளார். எழுத்தாளரின்

உலகை ஆனந்தமாக முத்தமிடுவதற்கான வழி - கோ கிஸ் தி வேர்ல்ட் - சுபத்ரோ பக்ஷி

படம்
  சுபத்ரோ பக்ஷி கோ கிஸ் தி வேர்ல்ட் சுபத்ர பக்ஷி சுபத்ரோ பக்ஷி இப்போது ஒடிஷாவில் உள்ள திறன் மேம்பாட்டு மையத்தின் தலைவராக இருக்கிறார்.இவர் தொடக்கத்தில் எப்படி பிறந்தார் வளர்ந்தார், அவரது ஆசை, லட்சியம் என்ன, அவற்றை நிறைவேற்ற எப்படி பாடுபட்டார் என்பதுதான் இந்த புத்தகத்தின் உள்ளடக்கம்.  சுபத்ரோ பக்ஷி தொழில்முனைவோர்களுக்கான நிறைய நூல்களை எழுதி வருகிறார். அந்த வகையில் இது இரண்டாவது நூல். முதல் நூல் தொழில்முனைவோர்களுக்கானது.  சுபத்ரோ பக்ஷி நூல் முடியும்போது தெளிவாக சொல்லிவிடுகிறார். தொடக்கத்தில் எனது வாழ்க்கை ஏழ்மையில் இருந்தது போல பலருக்கும் தோன்றும். ஆனால் நான் ஏழ்மையில் வாழவில்லை. எளிமையாக இருந்தது எங்கள் வீடு என்கிறார். எனவே, நாளிதழ் போல ஏழ்மையில் மாணிக்கமாக மிளிர்ந்தார் என்று நாம் தலைப்பு டைப் செய்யவே முடியாது.  ஏனென்றால், சுபத்ரோவின் அப்பா, அரசு மாஜிஸ்டிரேட்டாக இருந்தவர். பின்னாளில், சில அரசியல் பழிவாங்குதலால் மேலதிகாரியால் பணிக்குறைப்பு செய்யப்பட்டார். அப்பாவைப் பற்றி கூறும்போது, அந்த விவரிப்புகள் பக்தி பூர்வாக அமைந்திருக்கின்றன. சுபத்ரோவின் பிற்கால வாழ்க்கையை தீர்மானித்ததில் அவரது அப்