இடுகைகள்

மீதியுள்ளவை அனைத்தும் டான் ஃபைனாரு]

16 மீதியுள்ளவை அனைத்தும் டான் ஃபைனாரு] உங்களது பெற்றோர்கள் தென் பகுதியைச் சேர்ந்த பெலோனிசஸ் மறும் க்ரேட்டே பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆனால் இன்றும் நீங்கள் கரும் மேகங்கள், கடும் மழை, கடும் குளிர்காலம் கொண்ட வட பகுதியில்தான் பெரும்பாலும் கவனத்தைக் குவித்திருக்கிறீர்கள்.      இக்கேள்வி எப்போதும் என்னை நோக்கி கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு எவ்வித விளக்கமும் நான் அளிக்கப்போவதில்லை. இதற்கான விடையை கடந்த காலத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அது உண்மையாக இருக்காது. உளவியால் ஆய்வாளர்கள் வேண்டுமானால் இதற்கான ஆதாரங்களை கண்டறிய முடியலாம். மறுகட்டமைப்பு எனும் எனது முழுநீளப்படத்தினை எடுப்பதற்கான சென்றிருந்த நிகழ்வை இங்கு கூற விரும்புகிறேன். அந்த நிலப்பரப்பு முழுக்க சாம்பல் நிறமாக இருந்தது. கருமையான மேகங்கள், கவர்ச்சியற்ற எளிய வீடுகள், பெரும் மலைகள் அவற்றின் பின்னணியில் இருக்க, மெல்லிய தூறலாய் மழை பெய்துகொண்டிருக்க பனி ஒரு திரைபோல மலையினை மூடிய சூழலில் கிராமமே வெறிச்சோடிக் கிடந்தது. 1950 இல் பெரும்பாலான கிரீக் மக்களைப் போல அவர்களில் பெரும்பாலானோர் ஜெர்மனிக்கு வேலை தேடி செ

தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மையும் ஒருநாளும் - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
குழந்தைகளுக்கு கூட தாமாக எங்கும் வெளியே செல்வதற்கு நாம் அவர்களை அனுமதிப்பது இல்லையே?       அதேதான். குறிப்பிட்ட வடிவிலமைந்த கல்வித்திட்டம் நாம் வாழ்க்கையுடன் பொருந்திப்போகும் தன்மையை அழித்துவிடுகிறது. மாறுதல்களை ஏற்காதவர்களாக மாறிவிட்டோம். வளைந்து கொடுக்காத அத்தன்மையிலேதான் முழு வாழ்க்கையும் நடைபெறுகிறது. நாம் இந்த தவறான முறைகள் மற்றும் தவறான சுய பாதுகாப்பு முறைகளை எதிர்த்து போரிட வேண்டியுள்ளது.       என்னுடைய குழந்தைப்பருவம், என்னுடைய இளமைப்பருவம் என பல்வேறு உடைகளை நம்மேல் போட்டுக்கொள்கிறோம். ஆன்மாவின் மேல் உள்ள இந்த உடைகளை கழற்றி எறிய நமக்கு அதிகளவு நேரம் தேவைப்படுகிறது. நம்மிடம் வரும் விஷயங்களை அறியக்கூட நமக்கு நேரமிருப்பதில்லை. உண்மையிலே மதிப்பு மிகுந்த முக்கியமான விஷயங்கள் இந்த வகையில் உங்களை விட்டு வெளியேறுகின்றன. நீங்கள் கூறிய மூன்று வார்த்தைகளில் முதலாவது, கனிவோடு கூடிய தாயின் அன்பு பற்றியது; இரண்டாவது, வாழ்வில் அகதியாக தன்னைக் கருதும் ஒருவரைக் குறித்தது. மூன்றாவதாக கூறும் அர்ஹதனி யின் பொருளான மிக தாமதமான இரவு என்பது எதனைக் குறிக்கிறது?       ம

தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மையும் ஒருநாளும் 4- தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
வாழ்க்கையில் நாம் பெரும்பகுதி அந்நியர்களாக அகதிகளாகவே வாழ்கிறோம் என்கிறீர்களா?       நாமாகவே அந்நியராக வாழ்கிறம் என்று கூறமுடியாவிட்டாலும், ஒருவகையில் இதற்கு ஆம் என்றே பதில் கூறவேண்டும். எ.கா: என்னை நான் கிரீசில் ஒரு அந்நியராகவே உணர்கிறேன். இது என் நாடில்லை என்ற நிலையும், எனக்கென வீடு இல்லாத நிலையும் இருக்க நான் இங்கே வாழ்ந்து வருகிறேன். தடை செய்யப்பட்ட நாரையின் பாதை படத்தில்(டு மீட்டீயோரோஷமா டோ பெலர்கோவ், 91) மாஸ்ட்ரோயன்னி இதனை வார்த்தையில் கூறும்விதமாக, ‘‘எல்லைகளை கடந்தும் நாம் இன்னும் இங்கேயே இருக்கிறோம். எத்தனை எல்லைக்கோடுகளைக் கடந்தால் நம் வீடு சென்றடைவோம்? ’’ கூறியிருப்பார். உங்களது படங்களில் மக்கள் ஆறு ஒன்றினால் பிரிக்கப்படும்போது ஒவ்வொருவரும் எப்போதும் நாயகன் புறமே நிற்கிறார்களே?       எனது கடைசி மூன்று படங்களில் முக்கியமாக இடம் பெற்ற காட்சி என இதனைக் கூறலாம். குறிப்பிட்ட சூழ்நிலை ஒன்றில் உங்களை மேலும் மேலும் ஆழமாக உள்ள செலுத்திக்கொள்வதுதான் இதற்கு காரணமா? உணர்ச்சிகளை தடை செய்யப்பட்ட நாரையின் பாதை படத்தில் வெளிப்படுத்தும் மாஸ்ட்

தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மையும் ஒருநாளும் 3 - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
இத்திரைப்படம் கிரேக்கப்புனைவுகளை அடிப்படையாக அல்லது அதனைக் மென்மையாக கூறிச்செல்கிறதா?       எழுத்தாளர் மற்றும் கவிஞர் என வார்த்தைகளை உருவாக்கும் அதனோடு உறவு கொண்டிருக்கும் இவர்களையே படம் அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. படத்தில் அலெக்ஸாண்டர் சிறுவனுக்கு கவிஞர் ஒருவரைப்பற்றிக் கூறுகிறார். அவர் கிரீசில் புகழ்பெற்ற ஒரு மனிதராவார். டையோனிஸியோஸ் சாலமோஸ் ஸ்கின்டோஸ் இல் பிறந்தவர். இத்தாலியில் வளர்ந்தவர். சில காலத்திற்கு பிறகு தன் கீரிக் அடையாளத்தை தேடுகிறார். இத்தாலியிலிருந்து திரும்பும்போது தனக்கு தெரியாத கிரீக் வார்த்தைகளை  மக்களிடம் வாங்குகிறார். 22 வயது ஆகும்போது தனது தாய்நாட்டிற்கு கிரீக்கில் கவிதைகள் எழுத முயல்கிறார். 1818 எனும் அக்காலகட்டத்தில் துருக்கியர்களுக்கு எதிரான புரட்சிப்போராட்டத்தில் தனது கவிதைகளின் வழியாக பங்கேற்க முடிவு செய்து, செயல்படும் அவரது ஆளுமையான நாட்டுப்பற்று கொண்ட காலப்பகுதி தொடங்குகிறது. சிறிய குறிப்பேட்டில் அவர் கேட்கும் வார்த்தைகளின் உலகத்தில் நுழைகிறார். இது தாந்தே – எஸ்க்யூ என்பவர்களின் சிந்தனையான கிரீஸ் மொழியை மறு இணைப்பு செய்த