"விவசாயிகளின் தற்கொலை இருமடங்கு ஆகியுள்ளது"
முத்தாரம் mini ராஷ்ட்ரிய கிசான் மகாசங்கம் எப்போது தோன்றியது ? சண்டிகரில் அரசின் நிலச்சீர்திருத்த மசோதாவுக்கு எதிராக திரண்ட அறுபது விவசாயங்கள் இணைந்து கிசான் ஏக்தா என ஒரு அமைப்பானது . ஹரிஷ் சௌகான் தலைமையில் பெங்களூரு , சிம்லா என மாநாடு நடந்தது . கமிஷன்களால் ஏமாற்றப்பட்டபோதும் நாங்கள் அமைதியாக இருந்தோம் .2019 தேர்தல் எங்களைப் பற்றி உலகுக்கு சொல்லும் . உங்களது கோரிக்கைகள் என்ன ? கடன் தள்ளுபடி , குறைந்தபட்ச உத்தரவாத விலை அதிகரிப்பு ஆகியவையே . கடந்தாண்டு செய்த போராட்டங்களைப் பற்றிக் கூறுங்கள் . 2017 ஆம் ஆண்டு ஜனவரி 10-12 ஆகிய நாட்களில் போபாலில் போராட்டம் நடத்தினோம் . 22 மாநிலங்களில் 290 தேசிய ஹைவேகளில் போராடுவதாக பிளான் . மக்களுக்காக அதனை விலக்கிக்கொண்டு , 9-15 தேதிகளில் ஜெயில் பாரோ அந்தோலன் திட்டப்படி 45 ஆயிரம் விவசாயிகள் சுதந்திர தினங்களில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம் . இனி டெல்லியில் பெரியளவு போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம் . விவசாயிகளின் தற்கொலை அதிகரித்திருக்கிறதா ? மோடியில் ஆட்சியில் மட்டும் விவசாயிகளின் தற்கொலை 43% அதிக