இடுகைகள்

ரத்தினங்கள் - அறிவோம்

படம்
  ரத்தினங்கள் ரத்தினங்களை, சுரங்கங்களிலிருந்து அகழ்ந்து எடுக்கிறார்கள். துளையிடுவது, வெடிவைப்பது ஆகிய முறையில் பாறைகளை உடைத்து ரத்தினக்கற்களை வெளியே எடுக்கிறார்கள். அரியவகை, குறைந்த தேய்மானம், அழகு ஆகியவற்றைப் பொறுத்து கற்களை பட்டைதீட்டி விலை வைத்து விற்கிறார்கள். சுரங்கத்திலிருந்து எடுத்து சுத்தம் செய்து அதன் வடிவமைப்பை மாற்றுகிறார்கள். பிறகு அதனை பாலீஸ் செய்து தனியாக அல்லது நகையில் பொருத்தி விற்கிறார்கள். வைர சந்தையில் வைரங்களை அகழ்ந்தெடுத்து விற்பதில் ரஷ்யா முன்னிலையில் உள்ளது.  கி.மு.25 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான காலகட்டம் தொடங்கி ரத்தினங்களை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எகிப்தில் மார்பில் அணியும் தொன்மை ஆபரணம் ஒன்று கண்டறியப்பட்டது. இதில் லாசுலி, கமேலியன், லாபிஸ் போன்ற அரிய கற்கள் பதிக்கப்பட்டிருந்தன என்பதை புவியியல் வல்லுநர்கள் கண்டுபிடித்தனர். இதேபோல மாசடோமியாவில் (தற்போதைய ஈராக்) நெக்லஸ் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதிலும் மேற்சொன்ன அரியவகை ரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன. இதன் காலம் கி.மு.2500 ஆகும்.  தகவல் nature guide rocks and minerals book

வேற்றுகிரகத்திற்கு செல்ல விண்வெளி வீரர்கள் பயிற்சி செய்வது இங்குதான்! - ஐஸ்லாந்து

படம்
  நிலவைப் போன்ற நிலப்பரப்பு கொண்ட நாடு! முழுமையாகவே அப்படி ஒரு நிலப்பரப்பு உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் நிலவு, செவ்வாய் ஆகிய கோள்களில் உள்ள சிக்கலான நிலப்பரப்புகளை ஒத்த நிலப்பரப்பு பூமியில் உண்டு. ஆம், ஐஸ்லாந்து நாட்டில் தான் இப்படிப்பட்ட வினோத நிலப்பரப்பு உள்ளது.  1960ஆம் ஆண்டு அமெரிக்காவில் விண்வெளி அமைப்பான நாசா, அப்போலோ திட்டத்தில் முனைப்பாக இருந்தது. அப்போது விண்வெளி வீரர்களுக்கு, நிலவைப்போன்ற நிலப்பரப்புள்ள தீவு நாடுகளை தேடிக்கொண்டிருந்தது. அப்படித்தான் ஐஸ்லாந்து நாட்டை நாசா விஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்தனர்.  ஐஸ்லாந்தில் வடக்கு கடற்புரத்தில் ஹூசாவிக் (Husavik) எனும் இடம் உள்ளது. இங்கு மீன்பிடிக்கும் மக்கள் 2,300 பேர் வாழ்கின்றனர். நாசா அமைப்பு, 1969ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீர ர்களை அனுப்புவதற்கு முன்னர், வீரர்களுக்கு  சிறப்பாக பயிற்சியளிக்க முடிவெடுத்தது. இதற்காக 32 விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்தனர். இப்படி தேர்வானவர்களில் நிலவில் கால்வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும் உண்டு.  2019ஆம் ஆண்டுதான், மனிதர்கள் நிலவில் கால்வைத்து ஐம்பது ஆண்டுகள் ஆனதை விண்வெளி அறிவி

டவுன்சிண்ட்ரோம் குறைபாட்டை நெசவு மூலம் சமாளிக்கும் இளைஞர்!

படம்
  ஷிரவண் குமார், டவுன் சிண்ட்ரோம் குறைபாடு கொண்டவர். இவர், மயிலாப்பூரிலுள்ள டவுன்சிண்ட்ரோம் ஃபவுண்டேஷனில் பயிற்சிகளை செய்துவந்தார். ஆனால் பெருந்தொற்று அனைவரையும் பாதித்தது. இதனால், அந்த மையம் மூடப்பட்டுவிட்டது. இதனால் ஷரவண் என்ன செய்வது என தெரியாமல் தவித்தார்.  இதற்காகவே இவரது பெற்றோர் நெசவு நெய்வதற்கான கருவியை (தறி) வீட்டிற்கு கொண்டு வந்தனர். இப்போது காலையில் நாற்பத்தைந்து நிமிடம், மாலை ஒரு மணிநேரம் நெசவு செய்வதில் ஷிரவண் ஈடுபடுகிறார். மீதி நேரங்களில், பெற்றோர் வாங்கிக்கொடுத்த மடிக்கணினி மூலம் டேட்டா என்ட்ரி செய்ய கற்று வருகிறார்.  தறியை வாங்குவதற்கு முன்னதாகவே அதனை எப்படி இயக்குவது என வீடியோ அழைப்பு மூலம் ஷிரவண் கற்றுக்கொண்டார். இவருக்கு டவுன் சிண்ட்ரோம் குறைபாடு கொண்ட ஸ்ரீனிவாஸ் உதவியிருக்கிறார். நெசவு செய்வதை இப்படிக் கற்றுக்கொண்ட ஷிரவண், 250க்கும் மேற்பட்ட துணிகளை நெய்து விற்றிருக்கிறார். இதை ஷிரவணின் பெற்றோர் வணிகமாக செய்யவில்லை. ஷிரவண், முடிந்தவரை கவனமாக நெசவு செய்வதை செய்யவேண்டும். உற்பத்தித் திறன் தன்மையில் அவன இருக்கவேண்டும் என விரும்புகிறார்கள். இப்படித்தான் தனது குடும்ப வாட

அம்மாவின் வாழ்க்கையைக் காக்க தன்னை கறைப்படுத்திக்கொள்ளும் மகன்! - தி பவர் ஆப் டாக் - ஜேன் கேம்பியன்

படம்
  தி பவர் ஆஃப் டாக் தி பவர் ஆப் டாக் ஜேன் கேம்பியன்  1925இல் நடைபெறும் கதை. நியூசிலாந்தின் மான்டனா நகரில் கதை நிகழ்வுகள் நடக்கின்றன. பில், ஜார்ஜ் என்ற இரு சகோதரர்களின் கதை. இருவருக்கும் தொழிலே மாடுகளை மேய்ப்பதுதான். இதற்கென குதிரைக்காரர்கள் இருக்கிறார்கள். இப்படி செல்லும் வாழ்க்கையில் ஜார்ஜ், உணவகம் நடத்தும் பெண் ஒருவரைக் காதலித்து மணம் செய்கிறார். இது பில்லுக்கு பிடிப்பதில்லை. முன்னமே உணவகப்பெண், அவரின் மகன் ஆகியோரை கடுமையாக கேலி செய்தவன் பில்.  இப்படியிருக்கும் நிலையில் பில்லின் வீட்டுக்கே உணவகப் பெண் வர, இருவருக்கும் இடையிலான உறவுச்சிக்கல்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம்.  பெனடிக் கும்பர்பச், படம் நெடுக வெறுப்பை உமிழும் மனிதராகவே வருகிறார்.இவர்தான் பில். தனது சகோதரர், உணவகப்பெண்ணை மணம் செய்துகொள்ளப்போவதை அறிந்து குதிரையை ஆக்ரோஷமாக அடிப்பார். படம் நெடுக்க வெறுப்பும், கோபமுமாக காட்சிகளில் வரும் வெயில் பார்வையாளர்களின் மனதில் வரும்படி நடித்திருக்கிறார்.  கிர்ஸ்டன் டன்ஸ்ட் தான் உணவகப் பெண். இவர் குடிபோதைக்கு அடிமையாகி தவித்துக்கொண்டிருப்பார். இந்த நேரத்தில் பில் செய்யும் கேலிகளால்

குடும்ப வாழ்க்கையைக் காப்பாற்ற கணவன் செய்யும் திடுக் கொலைகள்! - டீப் வாட்டர்

படம்
  டீப் வாட்டர் 2022 டீப் வாட்டர் பென் அஃப்ளிக், அனா டி அர்மாஸ்  மனைவியின் செக்ஸ் விருப்பங்களை கணவன் பொதுவெளியில் அங்கீகரிப்பது போல நடித்து, அந்தரங்கத்தில் பொறாமை கொண்டால் என்னாகும் என்பதுதான் கதை.  நவீன கால குடும்பத்தைக் காக்கும் கதை போல தோன்றலாம். திருமணமான பல்வேறு தம்பதிகள் சந்திக்கும் பிரச்னை இது. காதல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் புறக்கணித்துவிட்டு பிற விஷயங்களை அடையாளம் கண்டு செய்யப்படுவதுதான் திருமணம் என எழுத்தாளர் பிரபஞ்சன் கூறியுள்ளார்.  திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி என இருவருக்குமான காதல் குறைந்துபோகிறது. இதை சரிசெய்யாமல், மனைவியை குடும்ப வாழ்க்கையில் தக்க வைத்துக்கொள்ள கணவன் செய்யும் முயற்சி நினைத்துப் பார்க்க முடியாத பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இறுதிக்காட்சியில் இதை உணரும் மனைவி, அந்த திருமண வாழ்க்கையை அப்படியே தொடருவதுதான் கதை.  gone girl 2014  படத்தில் நடித்த பென் அஃபிக்தான் நாயகன். விக் ஆலன் என்ற பாத்திரத்தில் தனது உணர்வுகளை உள்ளடக்கி நடித்திருக்கிறார்.  திருமண வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறார். மனைவி மெலிண்டா, திருமண வாழ்வில் கிடைக்காத மகி

குழந்தைகளின் தத்தெடுப்பு குறைந்துவருகிறது!

படம்
  இந்தியா போன்ற பல்வேறு மக்கள், இனக்குழுக்கள், சமயங்கள், கலாச்சாரங்கள் உள்ள நாட்டில் த த்தெடுப்பது என்பது எளிதாக நடக்க கூடியது அல்ல. சொந்த ரத்த த்தில் குழந்தை உருவாக வேண்டும் என்பதை இங்குள்ளவர்கள் தீவிரமாக நம்புகிறார்கள். இதனால், வெளிநாடுகளில் உள்ளவர்கள் த த்தெடுப்பதை எளிதாக செய்துவிட இந்தியர்கள் இதனை ஏற்பதில் இன்னமும் தயக்கம் காட்டுகின்றனர். தத்தெடுப்பதை முறைப்படி செய்ய அரசு அமைப்பு காரா உள்ளது. இந்த அமைப்பில் பதிவு செய்தால் உடனே குழந்தை கிடைத்துவிடாது. அதற்கென நீங்கள் தவமே செய்யவேண்டும்.  ஏன் என்று கேட்டால், அரசு அமைப்பில் உள்ள நடைமுறை சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் பத்து முதல்  ஐந்து மணிக்குள் தான் செய்வார்கள். எனவேதான் இந்த தாமதம் நேருகிறது. இன்னொரு சிக்கல், அரசு அமைப்பு செய்வதால் எந்த தவறும் நேர்ந்துவிடக்கூடாது என்ற பயமும் அதிகாரிகளை உலுக்குகிறது. 2010ஆம் ஆண்டு தொடங்கி, இன்றுவரையில் இந்தியாவில்  குழந்தைகளை த த்தெடுப்பது சற்றே வளர்ந்து மிகவும் தேய்ந்த தொனியில் சென்றுகொண்டிருக்கிறது. இந்திய மாநிலங்களில் குழந்தைகளின் த த்தெடுப்பில் மகாராஷ்டிரம் முன்னிலையில் உள்ளது.

பூஞ்சை உள்ள பகுதியை வெட்டியெடுத்துவிட்டு பிரெட் சாப்பிடலாமா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  Fungus bread image -TOI உணவில் பூஞ்சை உள்ள பகுதியை வெட்டி எடுத்துவிட்டு சாப்பிடலாமா? உணவில் பூஞ்சை உள்ள பகுதியை மட்டும் பிய்த்துவிட்டு சாப்பிடலாம் என சாமர்த்தியமாக நினைக்கிறீர்கள். ஆனால் தாக்கப்படாத பகுதியில் கூட பூஞ்சை நச்சு இருக்க வாய்ப்புண்டு. உணவைத் தாக்கும் பல்வேறு வித பூஞ்சைகள் உள்ளன.  சீஸைத் தாக்கும் பென்சிலியம் (Penicillium), ஸ்ட்ராபெரியைத் தாக்கும் பாட்ரைடிஸ் (Botrytis) ஆகியவை வரை உள்ளன. பூஞ்சைகள் ஏற்படுத்தும் நச்சுக்கு மைக்கோடாக்சின் (Mycotoxins)  என்று பெயர். இவை தாக்கினால் உடல் நடுக்கம், வாந்தி, காய்ச்சல் ஆகியவை ஏற்படும். அஃப்லாடாக்சின் (Aflatoxins)என்ற பூஞ்சை நச்சு பாதிப்பு ஏற்பட்டால், ஒருவரின் டிஎன்ஏவே தாக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படும். முடிந்தவரை பூஞ்சை பாதிப்பு ஏற்பட்ட உணவுப்பொருளை தூக்கி எறிந்துவிடுவதே நல்லது.  உலகிலேயே அதிக விஷம் கொண்ட மரம் உள்ளதா? வடக்கு, மத்திய தெற்கு அமெரிக்கா, கரீபியன் பகுதிகளில் ஹிப்போமனே மன்சினெல்லா  (Hippomane mancinella) இனத்தைச் சேர்ந்த கடும் விஷம் கொண்ட மரம் உள்ளது. கடற்புரங்களில் உள்ள மாங்குரோவ் காடுகளில் 15 மீட்டர் உயரத்திற்கு இம்மரம் வளர

உண்மையின் விலை என்ன? - ஜல்சா - வித்யா பாலன்

படம்
  ஜல்சா வித்யாபாலன், ஷெபாலி ஷா அமேஸான் பிரைம் அடுத்தவர்கள் நேர்மையாக மனசாட்சிப்படி நடந்துகொள்ளவேண்டும் என நினைப்பவர்கள், தங்கள் வாழ்க்கையில் அப்படி இருக்கிறார்களா என்பதை பேசும் படம்.  மாயாமேனன், வேர்ட் எனும் வலைத்தள செய்தி நிறுவனத்தின் எடிட்டர். பிறரிடம் கேள்வி கேட்டு உண்மையை வாங்குவதில் திறமையானவர். இது, நிறைய அதிகாரிகளை நீதிபதிகளை சங்கடப்படுத்துகிறது. ஆனால் மாயாவுக்கு அதுபற்றி பெரிய வருத்தமில்லை. எனது வேலை கேள்வி கேட்பது என உறுதியாக நம்புகிறார். இவரின் ஸ்ட்ரெய்ட் டாக் என்ற நிகழ்ச்சி புகழ்பெற்ற ஒன்று. இதற்காக உருவாக்கப்படும் பேனர்கள் நகரமெங்கும் வைக்கப்படுகின்றன. பின் வரும் காட்சிகளில் இந்த போர்ட்டுகளே ஒரு கதாபாத்திரமாக மாறுகிறது. மாயாமேனன், செய்தி வலைத்தளத்தின் எடிட்டர். நெடுநேரம் அலுவலகத்தில் வேலை செய்பவர். வீட்டில் உள்ள அம்மா, மகன் ஆகியோரை தன் கையிலுள்ள போன் மூலமே பார்த்து எப்படியிருக்கிறார்கள் என தெரிந்துகொள்கிறார். அனைத்துமே அவரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக நினைக்கிறார். ஆனால், ஒருநாள் இரவு வேலைப்பளுவால் நள்ளிரவு தாண்டி வேலை செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்புகிறார். ஏறத்தாழ அதிகாலை நே

கடத்தப்பட்ட குழந்தையை பணம் கொடுக்காமல் மீட்கும் பணக்கார தந்தை! - ரான்சம்- மெல்கிப்சன்

படம்
  ரான்சம் ஏர்லைன்ஸ் சர்வீஸ் வைத்து நடத்துபவர் டாம் முல்லன் -மெல்கிப்சன். இவரது மகனை அறிவியல் நிகழ்ச்சி ஒன்றில் கடத்தி சென்றுவிடுகிறார்கள். அவனை மெல்கிப்சன் போலீசாரோடு சேர்ந்து மீட்டாரா இல்லையா என்பதுதான் கதை.  படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகம் இல்லை. முழுக்க உணர்ச்சிமயமான காட்சிகள்தான் அதிகம். மெல்கிப்சன் தான் நேசிக்கும் மகனை இழந்துவிடுவோமோ என பயப்படும் காட்சியிலும் மாடியில் உடைந்து அழும் காட்சியிலும் அவர் நடிக்கிறார் என்பதே மறந்துபோகிறது.  படம் முழுக்க மூளை விளையாட்டுதான். பையனை மீட்க பணம் கேட்போம். அது கிடைத்தவுடன் அவனைக் கொன்றுபோட்டுவிடுவோம் என நினைக்கிறது கடத்தல் கூட்டம். ஆனால் அங்கும் கூட சிறுவன் மீது நேசம் வைக்கும் ஒருவன் இருக்கிறான். அவனைப்பொறுத்தவரை பணம் அவசியம்தான். ஆனால் அது கிடைத்துவிட்டபிறகு எதற்கு கொலை என கேட்கிறான். இந்த கேள்வியே அதற்குப் பிறகான காட்சிகளில் சிக்கலாக மாறுகிறது.  அந்தக்கூட்டத்தில் உணர்ச்சிவசப்படும் இருவர், குழந்தை மீது நேசம் வைக்கும் தம்பியும், தம்பியை நேசிக்கும் அண்ணன் ஒருவரும்தான். இவர்கள் குழந்தையை கடத்தி வைத்து பணம் சம்பாதிக்கும் முயற்சியில், தலைவனின் து

சிவப்புநிற ஏரிப்படுகை - இறந்துபோன மரங்களின் கூடு

படம்
  சிவப்பு நிற மணல் மேடுகளைக் கொண்ட ஏரிப்படுகைகள்! டெட்வ்லீ சோசஸ்வ்லீ  நமீபியாவில் உள்ள நிலப்பகுதிகளைப் பற்றித்தான் வாசிக்கப் போகிறோம்.  இங்குள்ள டெட்வ்லீ  (deadvlei) மற்றும் சோசஸ்வ்லீ (sossusvlei)என்ற இரு ஆற்றுப்படுகைப் பகுதிகளும் முக்கியமான நிலப்பரப்புகள் ஆகும். இதனைச் சுற்றிலும் சிவப்பு நிற மணல் மேடுகள் அமைந்துள்ளன. நமீப் பாலைவனம், தெற்கு ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையோரமாக நீண்டுள்ளது. இதன் பெரும்பாலான பகுதி, நமீபியாவில் உள்ளது.  இங்குள்ள மணல் சிவப்பு நிறத்திற்கு, அதிலுள்ள கனிமமான இரும்பு காரணமாகும்.  நீர்வளம் இல்லாத காரணத்தால், வண்டல்மண் ஏரிப்படுகை காய்ந்து வெடித்துப்போய் காணப்படுகிறது. இதில் வளர்ந்த மரங்களும் கூட சூரியனின் வெப்பத்தால் பட்டுப்போய் நின்றுகொண்டிருக்கின்றன. இந்த இறந்து போன மரங்களை அகாசியா மரங்கள் (Camel thorn) என்று அழைக்கின்றனர். இவை 1000 ஆண்டுகளைக் கடந்தும் வாழ்பவை என இயற்கை செயல்பாட்டாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். உலர்ந்து வெடித்துப்போயுள்ள நிலப்பரப்பில் வண்டல் மண்ணும் உப்பும் வெவ்வேறு விதமாக வடிவங்களில் காணப்படுகின்றன.  சோசஸ்வ்லீ (sossusvlei) கனமழை பெய்து சாவ்சாப் ஆற

கடலுக்குள் உள்ளே உருவான எரிமலை

படம்
  கடல் ஆய்வில் வெளியான ஒற்றை எரிமலை! பசிபிக் கடலில் வடமேற்காக  952 கி.மீ. தொலைவில் பயணித்தால் ஹோனோலுலு என்ற இடத்தைப் பார்க்கலாம். இங்கு கடல்மட்டத்திலிருந்து 52 மீட்டர் உயரத்தில் அமைந்த மலைச்சிகரங்கள் உண்டு. கடல் பறவைகள் பாறைகளின் மீது அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இதில்தான் புகாஹோனு (Puhahonu) எனும் எரிமலை உள்ளது என  கண்டறியப்பட்டுள்ளது.  புகாஹோனு என்ற பெயருக்கு, மூச்சை உள்ளிழுக்கும் ஆமை என்று பொருள்.   அண்மையில், இங்கு கடல் படுகை ஆய்வைச் செய்தனர். அப்போதுதான், ஆய்வாளர்கள் ஒற்றையாக இருக்கும் பெரிய எரிமலை ஒன்றை கண்டுபிடித்திருக்கின்றனர்.  ”நாம் பார்க்கும் பகுதி வெளித்தெரியும் 30 சதவீத மலை. அதற்கு கீழே இன்னும் உள்ளது ”என ஹவாய் பல்கலைக்கழக எரிமலை ஆய்வாளர் மைக்கேல் கார்சியா கூறினார். இதுபற்றிய ஆய்வு 2020ஆம் ஆண்டு எர்த் அண்ட் பிளானட்டரி சயின்ஸ் லெட்டர்ஸ் என்ற இதழில் வெளியாகியுள்ளது. கடலுக்கு கீழே உள்ள மலைகள், எரிமலைகள் என தொடர்ச்சி ஹவாயிலிருந்து ரஷ்யாவின் கிழக்குப்பகுதி வரையில் நீண்டுள்ளது.  ஹவாயிலுள்ள மௌனா லோவா (Mauna Loa,) என்ற எரிமலை, 9,170 மீட்டர் உயரம் கொண்டது. உலகில் பெரிய எரிமலை என