இடுகைகள்

காந்தியை எளிமையாக அறிந்துகொள்ள உதவும் ஆங்கில நூல் - காந்தி எ ஷார்ட் இன்ட்ரொடக்‌ஷன் - ஆக்ஸ்ஃபோர்ட் பிரஸ்

படம்
  காந்தி ஒரு சுருக்கமான அறிமுகம் ஆக்ஸ்ஃபோர்ட் பிரஸ்  நூல் மொத்தம் 152 பக்கங்களைக் கொண்டது. இதில் காந்தியைப் பற்றி நாம் என்னென்ன தேவையோ  அவற்றை சுருக்கமாக அறிந்துகொள்ள முடியும். காந்தி நிறைய எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி வெறும் 150 பக்கங்களிலேயே அறிய முடியுமா என்ற அவநம்பிக்கையோடு படித்தாலும் இறுதியில் நாம் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம் என்பதே உண்மை.  நூலில் காந்தியன் அகிம்சை, சத்தியாகிரகம், அவரின் ஆன்மிக அனுபவம், நிர்வாண சோதனை, அரசுக்கு எதிரான போராட்டம், நேர்மை என நிறைய விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அனைத்தும் சுருக்கமாக என்றாலும் சில இடங்களைப் படித்துப் புரிந்துகொள்வது சற்று கடினம்தான். அந்தளவு அவரின் கொள்கைகளை ஆங்கிலத்தில் சுருக்கியிருக்கிறார்கள்.  காந்தி ஒரு சுருக்கமாக அறிமுகம் என்பது தலைப்பிற்கு ஏற்றபடி காந்தியின் அடிப்படைகளை எளிமையாக தெரிந்துகொள்ள உதவுகிறது. ஆனால் இதில் அவரின் ஆன்மிக அனுபவங்கள் பற்றிய பகுதி சற்று புரிந்துகொள்ள கடினமானவை. அதுதவிர மற்ற விஷயங்கள் சிறப்பாக எழுதப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.  கோமாளிமேடை டீம்  image pinterest good reads

மனிதர்களின் மனதில் உள்ள அக ஒளியை வெளிக்காட்டும் கதையுலகம் - சித்தன்போக்கு - பிரபஞ்சன்- காலச்சுவடு

படம்
  எழுத்தாளர் பிரபஞ்சன் சித்தன் போக்கு - பிரபஞ்சன்  தொகுப்பு - பெருமாள் முருகன்  காலச்சுவடு பதிப்பகம்  மின்னூல்  எழுத்தாளர் பிரபஞ்சன் மொத்தம் இருபது கதைகள். அத்தனையும் மனிதர்களின் மனிதநேய பக்கங்களைக் காட்டுபவைதான். இதில் பாதுகை, பாண்டிச்சேரி போர்ச்சுகீசியர்களின் நிறவெறியைக் காட்டும் கதை. பெரும்பாலும் இந்த கதையை மாணவர்கள் துணைப்பாட நூலில் படித்திருக்கவே வாய்ப்பு அதிகம்.  பெருமாள் முருகன் தொகுத்துள்ள கதைகள் அனைத்துமே திரும்ப திரும்ப படிக்கலாம் என்ற ஆர்வத்தைத் தூண்டுபவைதான். அனைத்து கதைகளுமே அப்படியான பல்வேறு மனிதநேய அம்சங்களைக் கொண்டுள்ளன. மனிதர்களின் கோபம், கீழ்மையான எண்ணங்களைத் தாண்டிய பிறர் மீதான அக்கறை வெளிப்படும் கதைகள்தான் பிரபஞ்சனின் இத்தொகுப்பின் முக்கியமான தன்மை என்று கூறலாம்.  ஒரு மனுஷி,  குமாரசாமியின் பகல்பொழுது, குருதட்சிணை, தியாகி, ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், ருசி, தபால்காரர் பொண்டாட்டி ஆகிய கதைகள் பிடித்தமானவையாக இருந்தன. இவற்றை திரும்ப திரும்ப படிக்கலாம். அந்தளவு நிறைவான வாசக அனுபவத்தைக் கொடுத்தன. இத்தொகுப்பை வாசிப்பவர்களுக்கு வேறு கதைகள் இப்படியொரு உணர்வைக் கொடுக்கலாம். அத

டைம் 100 - எய்லீன் கு, வாலெரி மாசன், டெல்மோடே அண்ட் பான்மாவோ ஜாய், எமிலி ஆஸ்டர், துலியோ டி ஆலிவெய்ரா, சிக்குலில்லே மோயோ

படம்
  Eileen gu டைம் 100 வளர்ந்து வரும் ரோல்மாடல்  எய்லீன் கு ஒலிம்பிக்கில் எய்லின் கு மூன்று மெடல்களை வென்றுள்ளார். இன்று விளையாடும் விளையாட்டு வீரர்களில் அவரைப் போல ஒழுங்கு கொண்ட விளையாட்டு வீரரைப் பார்ப்பது மிகவும் கடினம். அந்தளவு தனது விளையாட்டு மீது ஆர்வமாக இருக்கிறார். ஒருமித்த கவனம், கடின உழைப்பு, அதற்கான அர்ப்பணி என அத்தனை திறமையான அம்சங்களையும் அவர் கொண்டிருக்கிறார்.  பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக அவர் என்னிடம் விளையாட்டு தொடர்பாக ஆலோசனை கேட்டு வந்தார். அவர் அப்போது தனது விளையாட்டில் புகழ்பெற்று வந்தார். அதுவே விளையாட்டில் அவருக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தது.அவர் தான் பிறந்து வளர்ந்தபோது இருந்த பெண்களோடு தான் நட்புணர்வு கொண்டிருந்தார். பிறகு தான் அவர் புகழ்பெற்று ஏராளமான மாத, வார இதழ்களின் அட்டைப்படங்களில் இடம்பிடித்தார். பிறகு ஃபெண்டி, குசி ஆகிய நிறுவனங்களில் சில உலகளாவிய பிரசார திட்டங்களில் இடம்பெற்றார். அவர் தனக்குப் பிடித்த விளையாட்டில் சாதிக்க ஆசைப்பட்டார். அதேசமயம், தனது கல்லூரியையும், அதிலுள்ள நண்பர்களையும் விரும்பினார்.  நான் அவரிடம் பேசிய சில மாதங்களுக்குப் பிறகு

தேதியிடா குறிப்புகள் எக்ஸ்டென்சன் மின்னூல் வெளியீடு - கூகுள் பிளே புக்ஸ் வலைத்தளம்

படம்
  2018ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்ட நூல். இதில், நாளிதழில் வேலை செய்யும் ஒருவனின் பல்வேறு அனுபவங்கள், அவனைச் சுற்றியுள்ளவர்கள், எழுத்து, வாசிப்பு அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருவகையில் அந்த காலகட்ட பல்வேறு செய்திகள் கூறப்படுகின்றன. இதில் கூறப்படும் சில கடைகள்,மனிதர்கள் இன்று இருப்பது கடினம். காலசுழற்சியை நிலைப்படுத்தி வைக்கும் முயற்சிதான் இது.  தேதியிடா குறிப்புகள் மின்னூலை வாசிக்க..... https://play.google.com/store/books/details?id=WFiKEAAAQBAJ

பல் ஆளுமை பிறழ்வு வரலாறு

படம்
  இருப்பதிலேயே வரம் என்றும் சாபம் என்றும் மனிதர்கள் பெற்ற ஒரு அம்சத்தைச் சொல்லலாம். அதுதான் நினைவுகள். இவைதான் நமக்கு நல்ல விஷயங்களையும், தவறான விஷயங்களையும் கற்றுத் தருகிறது. அதுதான் நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் நீதியை உணர்த்தவும் அறிவுச் சேகரமாகவும் உள்ளது. அவை சில காயங்களை கு்ணப்படுத்துகிறது. வரலாற்றில் கருப்பின அடிமைத்தனங்களைப் பற்றிய அறியவும் உதவுகிறது. பல தலைமுறைகளுக்கு நினைவுகளைக் கடத்தி கவனமாகவும் நாம் இருக்க உதவுகிறது.  சிறுவயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் அனுபவங்கள், ஆளுமை பிறழ்வு அனுபவங்களை மனங்களில் உருவாக்குகிறது என்ற கருத்து பொதுவாக உள்ளது.  இந்த ஆளுமை பிறழ்வு சிக்கலும் கூட வலியான நினைவுகளை திரும்ப திரும்ப நினைவுபடுத்திக்கொள்வதால்தான் நேருகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என்ற பாதிப்பு அதிகம் வெளித்தெரியாத ஒன்று. இன்று இந்த பாதிப்பை நோயாளிகள் வெளிப்படையாக சொல்லுகிறார்கள். அதற்கான சிகிச்சையும் பெறுகிறார்கள். வலியும், வேதனையும் நினைவுகளாக மூளையில் பதிந்துவிடுகிறது. இதில்தான் அத்தனை நல்லவைகளும் அல்லவைகளும் உருவா

அற்புதமான விமானங்களை வடிவமைத்த ஜப்பானிய பொறியாளரின் கனவு - விண்ட் ரைசஸ் - anime

படம்
  விண்ட் ரைசஸ் அனிமேஷன்  ஜப்பான்  அடிப்படையில் தேசியவாதப் படம்தான். ஆனால் அதைத்தாண்டிய விமானங்களை கட்டமைக்கும் கனவு கொண்ட ஒருவனின் வாழ்க்கை தான் அனிமேஷன் படத்தை உயிரோட்டமாக்கியிருக்கிறது.  இந்த அனிமேஷன் படம், ஜெர்மனியில் உள்ளது போன்ற நவீனத்துவத்துடன் அதிவேகம் செல்லும் விமானங்களை கட்டமைக்கும் பொறியாளர் ஒருவரின் கதையைப் பேசுகிறது. சிறுவயதில் இருந்தே விமான பைலட்டாக மாறும் ஆசையுடன் ஜீரோ உள்ளான்,ஆனால் கண்பார்வை சற்று குறைவானதால், பொறியாளர் ஆகிறான். அப்போது உலகப்போர் காலகட்டம். எனவே, வேகமாக செல்லும் ஆயுதங்களை கொண்டு செல்லும் விமானங்களை தயாரிக்க வேண்டிய தேவை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஜீரோ தனது விமானத்தை எப்படி உருவாக்குகிறான் என்பதே படம்.  படம் நெடுக விண்ணில் பறக்கும்போது அல்லது வாகனத்தில் பைக்கில் போகும்போது நமது முகத்தில் காற்று அடிக்குமே, வேகமாக, மெதுவாக என பல்வேறு விதமாக.. .அப்படி காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. விமானத்தை உருவாக்குபவனான ஜீரோ, காற்றில் தனது கனவுகள் அலைபாய திட்டங்களை தீட்டுகிறான். பெரும்பாலானவை, எஞ்சின் கோளாறுகள், மோசமான எரிபொருள், ஜப்பானில் வீசும் காற்றுக்கு சமாளிக்க முடிய

அப்பாவின் முன்கோபத்தால் திருடனாக மாறும் மகன் - கூண்டா - சிரஞ்சீவி, ராவ் கோபால் ராவ், ராதா

படம்
  கூண்டா  சிரஞ்சீவி, ராதா, சைகலா நாராயணா  இயக்கம் - கோதண்டராமி ரெட்டி இசை கே சக்ரவர்த்தி கொல்கத்தாவில் தொடங்கும் கதை, ஆந்திரத்தின் ஹைதராபாத்தில் முடிவடைகிறது. கொல்கத்தாவில் காளிதாஸ் என புகழ்பெற்ற நகை கொள்ளையன் தனது வளர்ப்பு தந்தையோடு வாழ்கிறான். வளர்ப்புத்தந்தைக்கு திருட்டுதான் தொழில். அதில் சாதிக்கும்படி காளிதாசுக்கு பயிற்சி கொடுக்கிறார்.அ வனும் வளர்ந்து, வளர்ப்புத்தந்தையின் வணிகத்தை பெருமளவு வளர்த்துக்கொடுக்கிறான். இந்த நிலையில் வளர்ப்புத் தந்தையின் தொழிலை யார் தொடருவது என காளிதாசுக்கும், வளர்ப்புத்தந்தையின் மருமகன் காசிராமுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் தோற்றுப்போகும் காசிராம் காளிதாசை கொலைசெய்ய நேரம் பார்த்து காத்திருக்கிறான். இந்தநேரத்தில் வளர்ப்புத்தந்தை விபத்து ஒன்றில் இறக்க, அங்கிருந்து கிளம்பும் காளிதாஸ் ஹைதராபாத்திற்கு வேலை தேடி வருகிறான். அ்ங்கு எஸ் பி ஒருவரை ரயில் சந்திக்கிறான். அவரை கொல்ல முயல்பவர்களை விரட்டுகிறான். பிறகு அவர் வீட்டில் தங்கி வேலை தேடுகிறான். உண்மையில் அந்த எஸ்பி யார், காளிதாசின் சிறுவயது, அவனது பெற்றோர் யார் என்பதை படம் விவரிக்கிறது.  மேற்சொன்னபடியும் கதை