வங்கிகளையும் கூட அரசு தனியாருக்கு விற்றுவிட வாய்ப்பிருக்கிறது - ஒரு துளி மணலில் ஓர் உலகு!
pixabay ஆருயிர் தோழர் ராமமூர்த்திக்கு வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? ஒருமணிநேரமாக பின்னி பெடலெடுத்த மழை இப்போதுதான் நின்றிருக்கிறது . மழை விட்டும் தூவானம் விடவில்லை . பணிச்சுமை காரணமாக கடிதம் எழுதவில்லை . மன்னியுங்கள் . ஆ ., வியில் மையம் கொண்ட சைக்ளோன் தொடர் வாசித்தீர்களா ? அதில் குளோபல் ஆக்டர் பேசுகிறார் . அவரின் பேச்சு முழுவதும் ஊழல் ஒழிப்போம் என்று ஞாயிற்றுக்கிழமை வேலையின்றி தேநீர் சட்டை அணிந்து காமராஜர் சாலையில் பேரணி செல்பவர்களுக்கானது . அன்றைய பொழுது இனிதாக கழிய வேண்டுமல்லவா ? இடியாப்பத்தில் இட்லியை நுழைத்து பேசும் அவரது பேச்சு அறிவுநுட்பமானவர்களுக்குப் புரியலாம் . அனைவருக்கும் புரியும்படி யாரேனும் செய்தியாளர்கள் அவர் சொன்னதை திரும்ப எழுதினால்தான் உண்டு . இவருக்கு ஏதாவது வாயப்பு உண்டா ? இருக்கிறது . ஒட்டுமொத்த இந்தியாவில் 30 சதவீதம் மட்டுமே வாக்குகள் பெற்று மத்தியில் காவிக்கட்சி ஆட்சிக்கு வருகிறது என்றால் இந்த தேசத்தில் எதுதான் நடக்காது ? மக்கள் ஜனநாயகப்பூர்வமாக வாக்குகளை போடுகிறார்கள் . ஆனால் ஜெயித்தவர்கள் அதற்குப்பிறகு , தங்களுக்கு பிடித்த கட்சியுடன் சேர்ந்து ஆட