இடுகைகள்

காற்று லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கரையான்புற்று எப்படி உருவாகிறது?

படம்
  கரையான்கள் மரம், செடிகளில் வெளிப்புற ஓட்டிலுள்ள செல்லுலோஸை (cellulose) உண்ணும் பூச்சி இனத்தைச் சேர்ந்தவை. எறும்பு, குளவிகள் ஏன் கரப்பான்பூச்சிகளுக்கும் நெருங்கிய உறவுகொண்டவை. உலகம் முழுவதும் 2,750 கரையான் பூச்சி இனங்கள் உள்ளன.  காடுகளில் இறந்துபோன மரங்களை அரித்து தின்று மண்ணுக்கு வளம் சேர்க்கின்றன. அதேவேளையில் கட்டுமானங்களிலுள்ள  மரப்பொருட்களையும் விட்டுவைப்பதில்லை. இதன் காரணமாக கட்டிடங்கள் பலவீனமடைகின்றன.  கரையான்கள் ஆப்பிரிக்காவின் சாவன்னா, பசிபிக் கடல் பகுதிகள், பருவமழைக்காடுகளில் புற்றைக் கட்டி வாழ்கின்றன. மரங்களை அரித்து நார்ச்சத்து பொருளான செல்லுலோஸை அதிகளவு உண்டாலும் அதனை எளிதில் செரிக்க ஒருவித பாக்டீரியாவை உடலில் கொண்டுள்ளன. கரையான் புற்றுகள் (termitarium) உருவாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதில் 2 லட்சம் கரையான்கள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.    கட்டுமானப் பொருட்கள் கரையான்கள், தூய்மையான மண் மற்றும் தம் கழிவுகளைக் கொண்டு புற்றுகளை எழுப்புகின்றன. இவை விரைவில் காய்ந்துவிடுவதால் உறுதியாக இருக்கும்.  இடம்  உயர்ந்த மலைப்பகுதி, மரங்களின் அடிப்பகுதி, நிலத்த

ஏழை நாடுகளில் மேற்கு நாடுகள் செய்யும் மாசுபாட்டு யுத்தம்! - பயன்படுத்தப்பட்ட கார்கள் ஏற்படுத்தும் அபாயம்

படம்
      பயன்படுத்தப்பட்ட கார்கள் ஏற்படுத்தும் விளைவுகள் ! அமெரிக்கா , ஜப்பான் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட நாடுகள் ஏழை நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன . வல்லரசு நாடுகளான அமெரிக்கா , ஜப்பான் , ஐரோப்பிய யூனியன் நாடுகள் பயன்படுத்தப்பட்ட அதிக மாசுபடுதல் கொண்ட கார்களை வளர்ந்து வரும் நாடுகளுக்கு விற்பது அதிகரித்து வருகிறது . இதுதொடர்பான ஐ . நா அமைப்பின் சூழல் திட்ட அறிக்கை வெளியாகியுள்ளது . இதன்மூலம் வளர்ந்துவரும் நாடுகள் அதிக மாசுபாட்டையும் , பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டி வரும் . ஐ . நா அறிக்கைப்படி , 2015-2018 காலகட்டத்தில் 1.4 கோடி பயன்படுத்தப்பட்ட கார்கள் வல்லரசு நாடுகளிலிருந்து வளர்ந்து வரும் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன . வளர்ந்து வரும் நாடுகளுக்கும் , ஆப்பிரிக்க நாடுகளுக்கும் கணிசமான அளவு ஏற்றுமதியாகியுள்ளன . இந்த நாடுகளில் பாதுகாப்பு , மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் வலிமையாக இல்லாததால் , பழைய கார்களை எளிதாக விற்க முடிகிறது . அண்மையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் , ஏழை , மத்த

விவசாய கழிவுகளை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தலாம்? பஞ்சாப் அரசு முன்னெடுக்கும் புதிய செயல்முறை

படம்
            வி்வசாயக்கழிவுகள் மூலம் மின் உற்பத்தி ! உலகம் முழுவதும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் மெல்ல மூடப்பட்டு வருகின்றன . நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பது அதிகளவு கார்பன் வாயுக்களை வெளியிடுகிறது . எனவே , உலக நாடுகள் நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளை மெல்ல மூடி புதுப்பிக்கும் ஆற்றல் ஆதாரங்களை ஊக்குவித்து வருகின்றன . இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் பதிந்தா நகரில் செயல்பட்டு வந்த குருநானக் தேவ் மின்னாலை மூடப்பட்டது . அந்த இடமும் கூட விற்கப்பட்டுவிட்ட செய்தி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது . இந்திய மின்சார ஆணையம் , ஜப்பானிய நிலக்கரி ஆற்றல் மையம் ஆகிய இரு நிறுவனங்களு்ம் இணைந்து இனி விவசாயக் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கவிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன . இதன்மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதோடு , கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் மாசுபாடும் தடுக்கப்படும் . 2018 ஆம் ஆண்டு மேற்சொன்ன இரு நிறுவனங்களும் செய்த ஆய்வு அடிப்படையில் , 440 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டதாக

பட்டாசுக் குப்பைகளை என்ன செய்வது?

பங்குனித்தேர் விழாவின் போது மயிலாப்பூரில் சோறு எப்படி மூலைக்கு மூலை சிதறிக் கிடக்குமோ, அதைவிட அதிகமாக பட்டாசு குப்பைகள் இன்று தமிழகம் முழுக்க கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் தூய்மை பணியாளர்களின் பணி முக்கியமானது. பாராட்டப்பட வேண்டியது. சென்னை நகரம் இந்த தீபாவளிக்கு 82 டன் குப்பைகளை உற்பத்தி செய்திருக்கிறது. இதிலும் அடையாறு, ராயபுரம் பகுதி பட்டாசு குப்பைகளை உற்பத்தி செய்த தில் முன்னிலை வகிக்கும் பகுதிகள். இதனை தூய்மை செய்யும் பணியில் 19 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இடையே மழை வேறு பெய்வதால், பணியாளர்களுக்கு பதிலாக குப்பைகளை அதுவே ஓரங்கட்டி விடுகிறது. பட்டாசுக் குப்பைகளில் வேதிப்பொருட்கள் இருக்கின்றன என்பதால், அதனை திருவள்ளூரில் உள்ள கும்மிடிப்பூண்டியிலுள்ள திடக்கழிவு நிலையத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர். இங்கு ஆபத்தான திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்கின்றனர். கடந்த ஆண்டு உருவான பட்டாசு குப்பைகளின் அளவு 90 டன்கள். தூய்மை பணியாளர்கள் வேலைக்கு முன்னதாகவே வந்து பணிகளை செய்துள்ளனர். சாதாரண நாளில் சென்னையில் 5250 டன்கள் குப்பை உருவாகிறது. மாநகராட்சி வீட்டுக்கழிவுகள் மற்றும் ப

காற்றில் பார்க்க முடியாதது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி காற்றில் நம்மால் பார்க்க முடியாதது ஏன்? காற்று என்பது வெறும் காற்று மட்டுமல்ல. அதனுடன் குறிப்பிட்ட அழுத்தமும் உண்டு. இதனால், கண்ணின் ரெட்டினா அதனை எதிர்கொள்ள முடியாமல்  கண்களை மூடிக்கொள்கிறோம். குறைந்த அழுத்தம் கொண்ட காற்று, அதிக அழுத்தம் கொண்ட காற்றை விட குறைவான அடர்த்தி கொண்டது. இதனால் ஒளிக்கற்றைகளை காற்று பாதிக்கிறது. வானில் நட்சத்திரங்களை பார்க்கிறீர்கள். அவை தூரத்தில் இருந்தாலும் அவற்றைப் பார்க்க உங்களுக்கு அதிக தடைகள் இல்லை. அவை நிலையானவையாக மூளை உணர்ந்து படமாக கண்களில் காட்டுகிறது. ஆனால் காற்று வீசும்போது உங்களால் பொருட்களில் பட்டும் எதிரொலிக்கும் ஒளியை உள்வாங்க முடியாது. இதனால் உங்களால் அந்த சமயங்களில் கண்ணில் தென்படும் பொருட்களை பார்க்க முடியாது. நன்றி: பிபிசி

காற்றில் ஈரப்பதம் அதிகரித்தால் என்னாகும்?

படம்
ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி காற்றில் ஈரப்பதம் அதிகரித்தால் கிரிக்கெட் பந்தின் சுழற்சி மாறுபடுமா? உள்நாடோ, வெளிநாடோ ஆட்ட மைதானம் கிரிக்கெட் பணியின் பலத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படும். அப்போதுதான் உள்நாட்டு அணி வெல்ல முடியும். எனவே இதில் தட்பவெப்பநிலையும் கூட்டுசேர்கிறது. இதைக் காரணமாக கூறினாலும் பந்து ஸ்விங் ஆவது ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஒருவேளை மழைபெய்து களம் ஈரமானால் பந்து எல்லைக்கோட்டை தொடுவது தாமதமாகும். அவ்வளவே. மற்றபடி இந்த நேரத்தில் அறிவிக்கப்படும் டக்வொர்த லீவிஸ் முறை யாருக்கும் புரியாத சீக்ரெட் விதி. நன்றி: பிபிசி படம்: பின்டிரெஸ்ட்

ரோபோக்களின் தயாரிப்பில் சிலந்தி!

படம்
பிபிசி சிலந்தியின் வலை உண்மையில் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. காரணம், அதன் பிரமாண்ட வடிவம். இதோடு ஆஸ்திரேலியாவில் பல கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படும் வலை கூட சிலந்தியின் கைவண்ணம்தான்.  தற்போது சிலந்தி வலைகளை ரோபோக்களின் உடலில் தசைகளாக பயன்படுத்த முடியுமா என யோசித்து வருகின்றனர். இது எதிர்காலத்தில் சிறந்த பயனை அளிக்கலாம். பேராசிரியர் மார்க்கஸ் ப்யூலெர் இதுகுறித்த ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளார். இவர் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி. சிலந்தி தன் எச்சிலை காற்றின் மூலம் நூலாக்கி பிரமாண்ட வலையை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சியில் இவர் ஈடுபட்டிருந்தார்.  காற்றில் 70 சதவீத ஈரப்பதம் இருக்கும்போது சிலந்தி மிக எளிதாக வலை பின்னுகிறது என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இச்சூழலில் 300 டிகிரி கோணத்தில் வலையை சிலந்தி எச்சிலை இழைத்து முறுக்கி பின்னுகிறது. இதற்கு காரணம், வலையை மிகவும் வலிமையாக்குவதுதான்.  இதனால் வலை மிக மெல்லிய அதிர்வையும் மையத்திலுள்ள சிலந்திக்கு எளிதாக கடத்துகிறது. இதனால் வலையில் சிக்கும் எறும்புகள் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. வலைய