இடுகைகள்

மலையாளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தான் வளர்த்த நாய் மூலம் பால்ய கால காதலியை பழிவாங்கும் நாயகன் - ரிங் மாஸ்டர் - ரஃபி

படம்
  ரிங் மாஸ்டர் - திலீப், கீர்த்திசுரேஷ், ஹனிரோஸ் ரிங் மாஸ்டர்   ரிங் மாஸ்டர் இயக்கம் – ரஃபி திலீப், ஹனிரோஸ், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் வெஞ்சரமூடு சர்க்கஸ் கூடாரத்தில் வளர்க்கப்பட்ட அப்பாவுக்கு பிடிக்காத பிள்ளையான பிரின்ஸ், நாய் மருத்துவமனையில் தனது நண்பர் முத்துவுடன் வேலை செய்கிறார். வெளிநாடு சென்று வேலை தேடிக்கொள்ள நினைப்பவருக்கு   கிடைப்பதோ, பணக்கார வீடுகளில் நாய் பராமரிப்பு வேலைதான். அந்த வேலையின் மூலமே அவருக்கு நினைத்துப் பார்க்க முடியாத வாய்ப்புகள் கிடைக்கின்றன அப்போது, கடந்தகாலத்தில் பிரின்ஸைப் பயன்படுத்திக்கொண்டு காதலிப்பதாக நடித்து சினிமாவில் உயர்ந்த பால்ய கால தோழியையும் சந்திக்கிறார். இருவருக்குள்ளும் உறவு உருவானதா, பிரின்ஸ் வன்மம் கூடி பழிவாங்கினாரா என்பதே கதை.   படம் முழுக்க   காமெடிதான். எனவே அதிகம் லாஜிக் பார்த்தால் ஜனப் பிரியனின் நகைச்சுவையை ரசிக்க முடியாமல் போய்விடும். எனவே, ஜாலியாக ரசியுங்கள். லிசா என்ற நாயைப் பார்த்துக்கொள்ளும் வேலை பிரின்சுக்கு கிடைக்கிறது. அதை சரியாக செய்தால், அந்த நாயின் உரிமையாளர் மூலம் வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அந்த நாய்

ஸ்பெயின் நாட்டு ராணியின் நெக்லஸ், இளம்பெண்ணிடம் சிக்கிக்கொள்ள, அதை எடுக்க முயலும் திருடன் - வேட்டம்

படம்
  வேட்டம் -மலையாளம் இயக்கம் பிரியதர்ஷன் வேட்டம் - திலீப், பாவ்னா பானி வேட்டம் மலையாளம் திலீப், பாவ்னா பானி, ஜெகதி, இன்னொசன்ட், ஹனீபா, கலாபவன் மணி கோபாலகிருஷ்ணன் விமானத்தில் பயணிக்கிறார். கூடவே ஒரு பொம்மை ஒன்றை கையில் வைத்திருக்கிறார். அதில் ஸ்பெயின் நாட்டு ராணியின் நெக்லஸ் உள்ளது. அழகான கற்கள் பதித்த மாலை. அது அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டு இந்தியாவிற்குள் வந்துவிட்டது. அதை இந்தியாவில் உள்ள காவல்துறையினரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். கோபு, நெக்லஸை வீணா என்ற பெண்ணின் பேக்கில் வைத்துவிடுகிறார். தேவையான நேரத்தில் அதை எடுக்க முடியாமல் அந்த பெண்ணுடன் சேர்ந்து ரயிலில் பயணிக்கிறார். அந்த அனுபவங்களில் அவர்களுக்குள் காதல் வர, என்னவானது அந்த காதல், வீணா சென்றுகொண்டிருக்கும் வேலை சரியாக முடிந்ததா என்பதே மீதிக்கதை படத்தில் பாவ்னா ரவி அழகாக இருக்கிறார். இந்திப் பெண்ணை மலையாளப் பெண்ணாக காட்ட முயன்றிருகிறார்கள். எனவே, பாவாடை தாவணி அணிந்தே நிறைய காட்சிகளில் வருகிறார். ஒரு பாடலில் மட்டும் தனக்கு சிறப்பாக நடனமாடத் தெரியும் என நிரூபித்துக் காட்டுகிறார். வீணா, மலையாள பிராமணக் குடும்பத்து

தங்கத்தை கொள்ளையடித்து சென்ற நண்பனைக் கண்டுபிடித்து குடும்பத்தின் திருட்டு பழி நீக்கும் வளர்ப்புமகன் - கல்யாண

படம்
  கல்யாண சௌகாந்திகம் மலையாளம்  திலீப், திவ்யா உண்ணி, ஹரிஶ்ரீ அசோகன், ஜெகதி ஶ்ரீகுமார் முதல் காட்சியில் ஜெயதேவ் சர்மா(திலீப்), சகோதரர்கள் இருவரிடமிருந்து தப்பி ஓடுகிறார். வைத்தியர் ஒருவரிடம் வேலை செய்யும் நண்பரிடம் அடைக்கலம் தேடுகிறார். ஆனால் அவரிடம் சகோதரர்கள் வந்து ஜெயதேவைப் பற்றி விசாரிக்கிறார்கள். அவர் அவனைப் பார்க்கவில்லை என்று சொன்னாலும் கூட அவர்கள் நம்புவதில்லை. இதனால் அவர், ஜெயதேவை தப்பிக்க வைக்க வேறு மார்க்கம் தேடுகிறார். அப்போதுதான் வைத்தியர், அடிக்கடி வணங்கும் வைத்திய குரு ஒருவரின் சீடராக நடிக்க வைக்கலாம் என முடிவெடுக்கிறார். இதன்மூலம், வைத்தியரிடம் கணக்கு வழக்கில் மோசடி செய்த பிரேமதாஸ் என்பவரும் ஜெயதேவிற்கு நட்பாகிறார். அவர், வைத்தியச் சாலையில் உள்ள வசுமதி என்ற பெண்ணை விரும்புகிறார். ஜெயதேவ், வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரின் பேத்தியான ஆதிரையின் பல்வேறு பிரச்னைகளை சொல்லி தன்னை நம்ப வைக்கிறார். ஆதிரைக்கும், ஜெயதேவ் தனது பிரச்னை தொடர்பாக தேடி வரும் ஆளுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதுதான் மீதிக்கதை. படத்தில் எந்த லாஜிக்கும் பார்க்கவேண்டாம். அப்படி பார்த்தால் திலீப்பின

அண்ணன் கள்ளக்கடத்தல் செய்ய, காவல்துறை அதிகாரியான தம்பி அதைத் தடுக்க... ரன்வே - திலீப், காவ்யா, இந்திரஜித்

படம்
  ரன் வே திலீப், இந்திரஜித் சுகுமாரன், காவ்யா மாதவன் தம்பி காவல்துறை அதிகாரி, அண்ணன் மதுபான பாட்டில்களைக் கடத்தும் குற்றவாளி   என இருந்தால் அவர்களது சொந்த வாழ்க்கை, தொழில்வாழ்க்கை என்னவாகும்? இருவருக்கும் எதிராக இருக்கும் தொழில் எதிரிகள் ஒன்று சேர்ந்தால் இறுதியாக வெல்வது உறவா? கடமையா என்பதே திரைப்படத்தின் கதை. முதல் காட்சியில் காவ்யா மாதவன் அவரது தந்தையுடன் வாடகைக்காக வீடு வருகிறார். அந்த வீட்டின் மூத்த பிள்ளை உண்ணி, துபாயில் வேலை பார்க்கிறார். அவர்தான் வீட்டு செலவுகளைப் பார்த்துக்கொள்கிறார். இளைய பிள்ளை பாலு காவல்துறைக்கான தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார். தங்கை பள்ளியில் படிக்கிறாள். இவர்கள் குடும்பத்திற்கு தொழில் செய்த காரணத்தால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பெரும் கடன் உள்ளது. அதைக்கட்டுவதற்குத்தான் உண்ணி துபாய் சென்றிருக்கிறான் என அவன் அம்மா கூறுகிறாள். இதை வாடகைக்கு வந்தவர்களுக்கும் கதையாக கூறுகிறார்கள். படத்தில் காவ்யா மாதவன் பாத்திரம் பாடல்களுக்கு மட்டும் பயன்படுகிறது. மற்றபடி கதையில் பெரிய உதவி ஏதும் கிடையாது. உண்ணி என்ற பெயரை நினைத்துப் பார்த்து அவர் பாட்டுக்கு மனதில் கற்பனை

பெற்றோர்களின் தவறான வளர்ப்பால் சிலுவை சுமக்கும் இரட்டையர்கள்! இரட்டா - ஜோஜூ ஜார்ஜ்

படம்
  இரட்டா -ஜோஜூ ஜார்ஜ், அஞ்சலி இரட்டா ஜோஜூ ஜார்ஜ் இடுக்கி மாவட்டத்திலுள்ள வாகாமன் காவல்நிலையம். அங்கு, பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்து அதை ஒப்படைக்க விழா ஒன்றை நடத்துகிறார்கள். வனத்துறை அமைச்சர் வருவதாக இருக்கிறது. அந்த நேரத்தில் காவல்நிலையத்தின் உள்ளே ஒரு கொலை நடக்கிறது. அதை செய்தவர்கள் என அங்கு நிற்கும் மூன்று போலீஸ்கார்களைப் பிடிக்கிறார்கள். சந்தேகப்படுகிறார்கள். உண்மையில் யார் குற்றவாளி என கண்டறிவதே படம். இறந்துபோனவரான வினோத், வாகாமனில் உதவி ஆய்வாளர். அவருக்கு சகோதரரான பிரமோத், அதே காவல்துறையில் டிஎஸ்பியாக இருக்கிறார். இறந்தவரான வினோத், கொலையை விசாரிக்கும் பிரமோத் இருவருமே இரட்டையர்கள். ஆனால், 17 ஆண்டுகளுக்கு மேலாக துவேஷமாக வன்மத்தோடு வாழ்கிறார்கள். வினோத் கொல்லப்பட என்ன காரணம் என்பதை எஸ்பி விசாரிக்க, மூன்று போலீஸ்காரர்களின் வாக்குமூலம் வழியாக கதை நகர்கிறது. இறந்துபோன வினோத் பற்றிய காட்சிகள் படத்தில் அதிகம். அவர், மனதில் சகோதரர் பிரமோத் பற்றிய ஒரு தீராத கோபம் இருந்துகொண்டே இருக்கிறது. அதை காவல்நிலையத்தில் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில், விசாரணையில் பிரமோத்தைக் கூட

நண்பகலில் ஜேம்ஸின் உடலுக்குள் புகும் ஆவி - நண்பகல் நேரத்து மயக்கம் - லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி

படம்
  நண்பகல் நேரத்து மயக்கம் - மலையாளம் நண்பகல் நேரத்து மயக்கம் மலையாளம் இயக்கம் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி வேளாங்கண்ணி கோவிலுக்கு போய்விட்டு கேரளத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கும் ஒரு நபர், திடீரென வேனில் இருந்து இறங்கி ஊருக்குள் சென்றுவிடுகிறார். அங்குள்ள வீட்டில் வாழ்ந்து இறந்துபோன ஒருவராக (சுந்தரம்) மாறி வேலை செய்கிறார். உண்மையில் அவருக்குள் என்ன நடந்தது, ஏன் கிராமத்திலுள்ள வீடு ஒன்றுக்கு சென்று தங்குகிறார் என்பதே கதை. ஆன்மா, இன்னொருவரின் உடலுக்குள் இறங்கி தனது குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதுதான் கதை. இயக்குநர் லிஜோ, சிஜி ஏதும் இல்லாமல் மனிதர்களின் உணர்வுகளை படம்பிடித்திருக்கிறார். இதனால் நண்பகல் நேரத்து மயக்கம் சிறந்த படமாக மாறுகிறது. படத்தின் கதை புதுமையானது என்று எல்லாம் கூறிவிட முடியாது. இந்து மதத்தில் உள்ள இறந்துபோனவர் மீண்டும் இன்னொரு உடலில் புகுந்து ஆசையை நிறைவேற்றிக்கொள்வதுதான் படத்தின் மையக்கதை. ஆனால் அதை லிஜோ கையாண்ட விதம் முழுக்க மனிதர்களின் உளவியல் சார்ந்த தன்மையில் என்பதுதான் படத்தை நேர்த்தியான படமாக மாற்றியிருக்கிறது. சந்தைக்கு சென்ற கணவர் காணாமல் போய்விடுகிறார்

ஆணாக மாறினால் சுதந்திரம் கிடைத்துவிடும் என நினைத்து பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய முயலும் இளம்பெண் - மைக் - மலையாளம்

படம்
  மைக் மலையாளம் இயக்கம்: விஷ்ணு சிவபிரசாத். இசை – ஹெசம் அப்துல் வகாப் தயாரிப்பு – நடிகர் ஜான் ஆபிரகாம் இருவிதமான கடந்த காலங்களைக் கொண்ட ஆண், பெண் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதே கதை. மைக் என்ற படம், எல்ஜிபிடியினருக்கான படம்போலவே உருவாகியிருக்கிறது. ஆனால் கதை, திரைக்கதை எழுதிய ஆசிப் அலி அக்பர் இடையில் தடுமாறியதில் சாதாரண காதல் கதையாக மாறிவிட்டது. சாரா தாமஸ் என்ற பாத்திரத்தின் கதைதான் படம். இந்த டீனேஜ் பெண்ணுக்கு தான் ஆணாக இருந்தால் நிறைய நெருக்கடிகளை சமாளிக்கலாம் என்று எண்ணம். அவள் வீட்டில் அம்மாவும், தனக்கு ஆண் பிள்ளை பிறக்காமல் பெண் பிள்ளையாக பிறந்து இருக்கிறாளே என வருத்தம். அம்மா வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறாள். அப்பா, சுயதொழில் செய்து வந்து நஷ்டமாகிறது. இதனால் குடும்பத்தில் அவரை அம்மா ஊதாசீனப்படுத்துகிறார்.   பணம் இல்லாதவரை மனைவி வேண்டாவெறுப்பாக நடத்த அவர் குடும்பத்தை விட்டு விலகிப் போகிறார். சாரா தாமஸின் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்திற்கு தேக்வாண்டோ சொல்லித் தரும் பயிற்சியாளர் ஒருவர் வருகிறார். அவர், மெல்ல சாரா தாமஸின் வளர்ப்

இதயப்பூர்வமாக கேட்கும் மன்னிப்பு, விரோதத்தை கரைக்கும் -சௌதி வெல்லாக்கா - தருண் மூர்த்தி

படம்
  சௌதி வெல்லாக்கா சௌதி வெல்லாக்கா 2022 மலையாளம் இயக்கம் தருண் மூர்த்தி இசை – பாலி ஃபிரான்சிஸ் ஒளிப்பதிவு – சரண் வேலாயுதன் நாயர் தென்னம் மட்டையின் நடுவிலுள்ள தண்டுப்பகுதி. அதுதான் படத்தில் விவரிக்கப்படும் மரண ஆயுதம். நண்பர்களோடு கிரிக் கெட் விளையாடும்போது பந்து எதிர்பாராதவிதமாக வயதான பெண்மணி மீது விழுந்து விடுகிறது. அதைப் பொறுக்காமல் கோபம் கொண்டு சிறுவனை தென்னை மட்டையின் தண்டை எடுத்து அடிக்கிறாள். இதில் சிறுவனுக்கு விழாமல் இருந்த பல் கூட பதற்றத்தில் விழுந்துவிடுகிறது. இந்த விவகாரத்தை அந்த முதிய பெண்மணி மீது துவேஷம் பாராட்டும் வீட்டுக்காரர், வழக்கு போடும் நிலைக்கு கொண்டு போகிறார். அந்த வழக்கும், வழக்கில் தொடர்புடையோர் வாழ்க்கையில் நெருக்கடியில் மாட்டுகிறது.   இறுதியில் வழக்கு என்னவானது என்பதே படம். நீதிமன்றத்தில் பல்லாண்டுகளாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளைப் பற்றிய கவனம் ஏற்படுத்தும் படம் என இறுதியில்   சொல்லுகிறார்கள். ஆனால் படம் நெடுக, ஆணவத்தால் அகங்காரத்தால் வன்மத்தால் காவல்நிலையம், நீதிமன்றம் போன்ற இடங்களில் மனிதர்களின் வாழ்க்கை எப்படி நலிந்து போகிறது என்பதை அதே தன்மையில்

விலங்குகளை கால்நடை பராமரிப்பாளர் நேசிக்கத்தொடங்கும் புள்ளி! - பால்து ஜன்வர் - பசில் ஜோசப், ஸ்ருதி

படம்
  பால்து ஜன்வர் பால்து ஜன்வர் பால்து ஜன்வர் ஷம்மி திலகன் - பால்து ஜன்வர் பால்து ஜான்வர் மலையாளம் இயக்குநர் - சங்கீத் பி ராஜன் பசில் ஜோசப், திலீஷ் போத்தன், ஷம்மி திலகன்   அனிமேஷன் நிறுவனம் தொடங்கி அதில் தோல்வி கண்ட இளைஞன், பிரசூன் கிருஷ்ணகுமார். அவருக்கு அரசு வேலையாக கிராமம் ஒன்றில் கால்நடைகளை சோதித்து நோய் தீர்க்கும் வேலை கிடைக்கிறது. வேறுவழியின்றி வேண்டா வெறுப்பாக அந்த வேலைக்கு செல்பவனின் வாழ்க்கையே படத்தின் கதை. பிரசூன், நகரத்து நாகரிக ஆள். அவருக்கு கிராமம், அங்குள்ள மனிதர்கள், விலங்குகளை நேசிக்கும் பாங்கு என அனைத்துமே புதிது. கூடுதலாக அவரின் தலைவராக இருப்பவர், எம்எல்எம் நிறுவனங்களின் மீது ஆர்வம் கொண்டவர். இவருக்கும் பிரசூனுக்கும் விரைவில் முட்டிக்கொள்கிறது. அதேநேரம் பணி சார்ந்து அவருக்கு பெரிய அறிவு கிடையாது. அவரின் பெண்தோழிதான் பிரசூனுக்கு நிறைய உதவிகளை செய்கிறாள். பிரசூன் கால்நடை கண்காணிப்பு ஆய்வாளராக வேலையை தீவிரமாக செய்ய நினைக்கிறார். ஆனாலும் மருத்துவ நிலைய தலைவர், உள்ளூர் வார்டு உறுப்பினர் ஆகியோரின் அரசியல், சுயநலம் சார்ந்த காரணங்களால் நிறைய  பேரிடம் பிரசூன் அவமானமும் பட்டுக்கொ