இடுகைகள்

அசுர குலம் 3 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோயாளிக்கு மிக நெருக்கத்தில் உள்ள கொலையாளிகள்

படம்
  இப்போது இறப்பின் தேவதை என மருத்துவமனையே அழைத்த புகழ்பெற்ற செவிலியரான கிரிஸ்டனைப் பார்ப்போம். கிரிஸ்டனைப் பொறுத்தவரை அனைத்துமே சோதனைகள்தான். எதற்காக உயிர்வாழ்வதற்காக இந்த பரபரப்பு என இதய பிரச்னை இல்லாதவர்களை கூட மருந்து கொடுத்து மாரடைப்பு ஏற்படுத்தி கொன்றார். எபின்பிரைன் மருந்தைக் கொடுத்து நோயாளிக்கு மாரடைப்பு ஏற்படுத்தி விட்டு கோட் ப்ளூ பட்டனை அழுத்திவிட்டு பக்கத்தில் பாவமாக நின்றுகொள்வார். மருத்துவர்களும் வேகமாக வந்து நோயாளியை காப்பாற்ற அவரின் விலா எலும்புகள் உடையும் வரை சிபிஆர் செய்துவிட்டு இறந்த நேரத்தை குறித்துக்கொண்டு அங்கிருந்து செல்வார்கள். குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் முப்பது நோயாளிகளில் 23 நோயாளிகளுக்கு கோட் ப்ளூ என்று தகவல் சொல்லியவர் கிரிஸ்டின் அம்மணிதான். ஒருகட்டத்தில் மருந்தகத்தில் எபின்பிரைன் மருந்துகளை பெயர் சொல்லாமல் வாங்கியது யார் என விசாரணை தொடங்கியது, மேலும் நோயாளிகள் இறந்துகொண்டே இருந்தால் பலருக்கும் பயம் ஏற்படும்தானே அப்படி ஏற்பட்டபோது பார்த்தால் செவிலியர் கிரிஸ்டின் லீவ் போட்டுவிட்டார். மருத்துவமனையின் விசாரணையைத் தடுக்க மருத்துவமனைக்கு குண்டு வைத்திருக்க

கொலை, சித்திரவதைக்கு எளிதில் இணங்கும் கொலைக்கூட்டாளிகள்

படம்
  கொலை செய்யும் இலக்கில் அனைவரும் ஒத்துப்போவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் இரண்டு பேர் சந்திக்கிறார்கள். அவர்கள் இருவருமே பிறரை கொலை செய்வதில் சித்திரவதை செய்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றால் எப்படியிருக்கும்? அப்படித்தான் ராய் நோரிஸ், லாரன்ஸ் ஆகியோர் இணைந்து பெண்களை வேனில் கடத்தி சித்திரவதை செய்து கொன்றனர். இவர்கள் இருவரும் சிறையில் சந்தித்து மாட்லாடி நட்ப்பை வளர்த்தினர். அப்போதுதான் இருவருக்குமே பிறரை துயரப்படுத்தி கொல்வதில் ஒத்த எண்ணம் இருப்பது தெரிய வந்தது. அப்புறம் எதற்கு தாமதம் என களத்தில் இறங்கினர். இருவருக்குமே பெண்களை துயரப்படுத்தி வல்லுறவு செய்து சித்திரவதை செய்வதில் அப்படியொரு சந்தோஷம் இருந்தது. எனவே தெளிவாக சிறையல் திட்டம் தீட்டியவர்கள், தண்டனை முடிந்தவுடன் வெளியே வந்தனர். வந்தவுடன் லாஸ் ஏஞ்சல்சில் வேன் ஒன்றை காசு போட்டு வாங்கினர். அதன் செல்லப் பெயர் மர்டர் மேக். 1979ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சிண்டி என்ற பெண்ணை வேனில் கடத்தினர். வேனில் வைத்தே அந்த பெண்ணை பிசைந்து பதம் பார்த்து சாறு குடித்தனர். பிறகு கோட் மாட்டும் ஹேங்கரை வைத்து கழுத்தை நெரித்து கொன்றனர். ராய் நோரி

கொலைகார கூட்டாளிகள்- கொலைக்கு ஒத்தாசை செய்யும் நபர்கள் 1

படம்
  சார்லஸ் மேன்சன், வெள்ளையர்களுக்கு எதிராக கறுப்பினத்தவர்கள் வளருகிறார்கள் என்ற வெறுப்பு வாதத்தைத் தூண்டிவிட்ட மத தலைவர். இவர் தனது வெறுப்பு பேச்சு மூலம் 37 கொலைகளை   செய்தார். ஆனால் எந்த கொலையையும் மேன்சன் நேரடியாக செய்யவில்லை. அனைத்து விஷயங்களையும் தனது குழுவினர் மூலம் சிறப்பாக செய்வதே அவரது வழக்கம். தனது கருத்துகளை பிறர் மூளையில் செலுத்தி அவர்களை தனது குடும்பம் என நம்ப வைத்து கொலைகளை   செய்ய வைப்பது மேன்சனின் பாணி. இந்த வகையில்தான் அவர் ரஷ்ய இயக்குநர் ரோமன் போலான்ஸ்கியின் கர்ப்பிணி மனைவி உட்பட ஐந்து நபர்களை கொன்றனர். இந்த கொலை வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது மேன்சனை ஜூரிகள் குற்றம்சாட்டினாலும் கூட நேரடியான ஆதாரம் கிடையாது. அவரது சீடர்கள் கொலை குற்றத்தை ஏற்றுக்கொண்டனர். இப்படி கொலைகாரர்களுக்கு உதவும் நண்பர்கள் குற்ற இலக்கியத்தில் எப்போதும் உண்டு. சாத்தானுக்கும் நண்பர்கள் உண்டு என்பார்களே அந்த வகைதான்.   ஆண்களுக்கு பெண்கள் உதவுகிறார்கள் என்றால் அங்கு பிடிஎஸ்எம் வாழ்க்கை முறையில் வருவது போல எஜமான் அடிமை உறவு   இருக்கலாம். அவர்கள் கொலை செய்வதை, உடலை புதைப்பது, தடயங்களை மறைப்பதை   செ

இளமையில் தொடர் கொலைகாரர்களைத் தடுக்கும் வழிமுறை - டொனால்ட் செய்த உளவியல் ஆய்வு

படம்
  ஜாசன் தான் கொன்ற பிணங்களை வைத்து காட்டில் மரங்களுக்கு இடையில் தனி கல்லறையை உருவாக்கி வைத்திருந்தார். நிலவொளியில் விலங்குகளைக் கொல்வதன் மூலம் அவர் விரும்பிய பெண்களைக் கொல்ல முடியும் அதற்கான சக்தி கிடைக்கும் என கற்பனை செய்தார். பெண்ணைக் கொன்று உடலை சிதைத்து கழுத்தில் ஆண்குறியை நுழைத்து பாலுறவு செய்யவேண்டுமென கனவு கண்டு அதைக்கூட தனது நோட்டில் எழுதி வைத்திருந்தார். வன்முறை, குற்றங்கள், கொலைகள் மூலம் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள திட்டம் போட்டு இறங்கி சாதித்த மனிதர்தான் ஜாசன். அவரின் ரோல் மாடல்கள் டெட்   பண்டி, லூகாஸ், மேன்சன் ஆகியோர்தான். இவர்களின் வரிசையில் இடம்பெறுவதுதான் ஜாசனின் கனவு, ஆசை, பேராசை, லட்சியம் என எல்லாமே…. அசுரகுலம் தொடர்வரிசை நூல்களில் முந்தைய நூல்களிலேயே சிலர் பிறக்கும்போது கெட்ட இயல்பில் பிறக்கிறார்கள். பிறருக்கு சூழ்நிலை அப்படி அமைந்துவிடுகிறது என கூறியிருந்தோம். ஆனால் சிலருக்கு சிறுவயதில் தோன்றும் அறிகுறிகளைக் கவனித்தாலே அவர்களை சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தி சிகிச்சைகள் கொடுக்க முயற்சிக்கலாம். ஆனால் பலரும் அதைப் புறக்கணித்துவிடுகிறார்கள். இதனால் ஏற்படும்

குற்றங்களை செய்வதற்கான முன்தயாரிப்பு கற்பனைகள் - முப்பொழுதும் கொலைக் கற்பனைகள்

படம்
  ஒருவர் மனதில் வன்முறை எண்ணம் வருகிறது என்றால் அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். உடல், மனம் ஒத்திசைவு குறைந்தவர்கள், தனது உடலின் மனதின் எல்லைகளைப் புரிந்தவர்கள் கற்பனை செய்யத் தொடங்குகிறார்கள். ஆனால் இது ஆக்கப்பூர்வமாக அமைந்தால் ஆராய்ச்சி, கதைகள் என செல்லும். ஆனால் இன்னொரு இருள் பக்கம் நகர்ந்தால் அது ஒருவழிப்பாதை. இருட்டில் அப்படியே நகர்ந்து செல்லவேண்டியதுதான். நரகத்தின் பாதை அது. சமூகத்தை விட்டு தனியாக ஒருவர் இருக்க நினைத்தால், அதை குணப்படுத்தும் மருந்துகள் மனநல மருத்துவத்தில் சிகிச்சையில் கிடையாது. அவரைக் கட்டுப்படுத்தி வைப்பதுதான் ஒரே சிகிச்சை. இந்த ஏரியாவில் கொலைகள் நடந்தால், தொடர் கொலைகாரர் என ஒருவர் அறியப்பட்டால் அது நான்தான் என தனது நண்பனிடம் துணிச்சலாக கூறி கொலை செய்வதில் இறங்கினார் ஜாசன் மாசே. இருபது வயதில் இளைஞர், இளம்பெண் என இருவரை படுகொலை செய்தவர். கொலைகளை ஒரே நாளில் செய்தார். கற்பனையும் அதில்   எல்லை இல்லாத வன்முறையும் கொண்ட காட்சிகளைக் கண்டு கொலைகளை செய்யத் தொடங்கியவர்தான் ஜாசன்.  முன்னரே ஜாசன், விலங்குகளை சித்திரவதை செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தார். இதைப் பார்த்து ப

சாத்தானின் விசுவாசியால் கொல்லப்பட்ட மக்கள்!

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0   சில கொலைகாரர்கள் உண்டு. இவர்கள் கொலை செய்வது என்பது தங்களின் மகிழ்ச்சிக்காகவே. போரில் ராணுவ வீரர்களைப் பாருங்கள். அவர்கள் அவர்களின் அடையாளம் அறியாத இன்னொரு நாட்டு ஆட்களை கொல்லுகிறார்கள். எதற்காக, அவர்களைப் பற்றி வீர ர்களுக்கு தெரிந்திருக்காது. அவர்களுக்கு குடும்பம் இருக்கலாம். குழந்தைகள் இருக்கலாம். ஆனால் ராணுவ வீர ர்களைப் பொறுத்தவரை கட்டளைகளை மீறாமல் சட்டத்திற்கு உட்பட்டு கொலைகளை செய்கிறார்கள். கேட்டால் தேசியவாதம், நாட்டுப்பற்று என ஏதேனும் உளற வேண்டும்தான். இதற்கான உருட்டுகளைத்தான் காசுக்கு விலைபோன இன்றைய இந்தியா, குடியரசு, மற்றும் தொழிலதிபர்கள் நடத்தும் செய்தி சேனல்கள் போன்ற ஊடகங்கள் செய்வார்கள். மக்களைக் கொல்ல நாட்டுப்பற்று மட்டுமல்ல மதமும் கூட ஒரு கருவிதான். இன்று இந்தியாவில் சிறுபான்மையினர் மீது அதிகளவில் மத ரீதியானபடுகொலைகள்தான் அதிகம். அந்த வகையில் ரிச்சர்ட் ராமிரெஸ் பற்றி அறிந்திருப்பீர்கள். இவர் சாத்தனை வழிபடுவதாக தன்னைக் கூறிக்கொண்டவர். குத்துபட்டு, ரத்தம் பீறிட ஒருவர் இறப்பதைப் பார்ப்பதே தனக்கு மகிழ்ச்சி என சிறைக்காவலர்களிடம் பேசியவர் ரா

நெக்ரோபிலி - பிணங்களோடு மனிதர்கள் கொள்ளும் உடலுறவு ஆசை

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 இறந்தவர்களோடு வாழ்தல். இறந்த காதலியை தோளில் போட்டுக்கொண்டே திரிதல், அந்த உடலுடன் வாழ்தல், கொலை செய்து அல்லது இறந்த பிணங்களை தோண்டியெடுத்து அறையில் அருங்காட்சியகம் போல அமைப்பது, அழும் தசை துர்நாற்றத்தை சகித்துக்கொள்வது என வாழும் மனிதர்கள் உலகில் உண்டு. இதில் உடல்ரீதியான இன்பம் அனுபவிக்கும் பழக்கங்களையும் மனிதர்கள் செய்கிறார்கள். இதை உளவியல் மருத்துவர்கள் நெக்ரோபிலியா என்கிறார்கள். இறந்த உடல்களைப் பார்த்து ரசிப்பது, மனநல குறைபாடு கொண்ட மனிதர்களுக்கு பிடித்தமானது. உடலே விதையாக.. இங்கிலாந்தில் நடந்த கதை இது. அங்குள்ள லண்டன் நகரில் ப்ரௌன் என்பவர் ஒரு இடத்தை வாங்கினார். அறையில் இருந்து வரும் துர்நாற்றம் அவரை என்னடா இது என வெறுப்பு கொள்ள வைத்தது. சுவரில் ஒட்டியிருந்த வால்பேப்பரை உருவி எலி செத்திருக்கிறதோ என பார்த்தவர் நொடியில் முதுகுத்தண்டில் மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்தார். சுவரில் கான்க்ரீட் கலவையில் மூடியபடி நிர்வாணமாக ஒரு உருவம். பெண். தொட்டுப் பார்த்து உறுதி செய்தவர், உடனே காவல்துறைக்கு தகவல் சொன்னார். அவர்கள் வந்து சுவரை இடித்துப் பார்க்க இன்ன