நோயாளிக்கு மிக நெருக்கத்தில் உள்ள கொலையாளிகள்
இப்போது இறப்பின் தேவதை என மருத்துவமனையே அழைத்த புகழ்பெற்ற செவிலியரான கிரிஸ்டனைப் பார்ப்போம். கிரிஸ்டனைப் பொறுத்தவரை அனைத்துமே சோதனைகள்தான். எதற்காக உயிர்வாழ்வதற்காக இந்த பரபரப்பு என இதய பிரச்னை இல்லாதவர்களை கூட மருந்து கொடுத்து மாரடைப்பு ஏற்படுத்தி கொன்றார். எபின்பிரைன் மருந்தைக் கொடுத்து நோயாளிக்கு மாரடைப்பு ஏற்படுத்தி விட்டு கோட் ப்ளூ பட்டனை அழுத்திவிட்டு பக்கத்தில் பாவமாக நின்றுகொள்வார். மருத்துவர்களும் வேகமாக வந்து நோயாளியை காப்பாற்ற அவரின் விலா எலும்புகள் உடையும் வரை சிபிஆர் செய்துவிட்டு இறந்த நேரத்தை குறித்துக்கொண்டு அங்கிருந்து செல்வார்கள். குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் முப்பது நோயாளிகளில் 23 நோயாளிகளுக்கு கோட் ப்ளூ என்று தகவல் சொல்லியவர் கிரிஸ்டின் அம்மணிதான். ஒருகட்டத்தில் மருந்தகத்தில் எபின்பிரைன் மருந்துகளை பெயர் சொல்லாமல் வாங்கியது யார் என விசாரணை தொடங்கியது, மேலும் நோயாளிகள் இறந்துகொண்டே இருந்தால் பலருக்கும் பயம் ஏற்படும்தானே அப்படி ஏற்பட்டபோது பார்த்தால் செவிலியர் கிரிஸ்டின் லீவ் போட்டுவிட்டார். மருத்துவமனையின் விசாரணையைத் தடுக்க மருத்துவமனைக்கு குண்டு வைத்திருக்க