தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரும் அரசு!
நேர்காணல்! “அரசின் தவறை அடிப்படைவாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்” லெட்டா டெய்லர், ஆராய்ச்சியாளர் தமிழில்: ச.அன்பரசு கிர்கிஸ்தானில் தீவிரவாதம் எப்படிப்பட்ட பிரச்னையாக உள்ளது? பிரச்னை தொடங்கியது 2003 ஆம் ஆண்டுதான். 2,600-5,000 மத்திய ஆசியர்கள்(764 கிர்கிஸ்தானியர்கள்) இராக், சிரியா, ஆஃப்கானிஸ்தானிலுள்ள தீவிரவாதக்குழுவில் இணைய சென்றன். பெண்கள், குழந்தைகள், சமையல்காரர்கள், மெக்கானிக்குகள் இதில் அடக்கம். கிர்கிஸ்தானின் தலைநகரான பிஸ்கெக்கில் நடைபெற்ற தாக்குதல் உட்பட ஏழு தாக்குதல்களில் இவர்களின் பங்குள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தாக்குதல்களிலிருந்து மக்களை காக்க அரசு என்ன செய்துள்ளது? அரசு, இணையத்தில் வீடியோ பார்ப்பவர்களையும் நூல்களை படிப்பவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளிலுள்ள தீவிரவாத சட்டங்களைப் போல கிர்கிஸ்தானில் வலுவான சட்டங்கள் இல்லை. சமூகவலைதளத்தில் நண்பர்களுடன் தீவிரவாதம் பற்றி பேசும் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பதால் என்ன பிரயோஜனம்? மனித உரிமை கண்காணிப்பகம் இதுகுறித்து அரசிடம் மனு அனுப்பியுள்ள