இடுகைகள்

அன்பின் ஈரம் குறையாத சிறுகதைகள்! - நாபிக்கமலம் - வண்ணதாசன்

படம்
            நாபிக்கமலம் வண்ணதாசன் இந்த தொகுப்பில் மொத்தம் பதிமூன்று கதைகள் உள்ளன . இதில் வண்ணதாசன் கதைகளில் இல்லாத சிறப்பு என்னவென்றால் , இதில் இடம்பெறும் பாத்திரங்கள் முன்னர் தங்களுக்கு ஏற்பட்ட நிலைகளுக்கு யாரையும் குறை சொல்லமாட்டார்கள் . ஆனால் இத்தொகுப்பில் உள்ள கதைகளில் மனிதர்கள் தங்களுக்கு பிடித்ததைப் போலவே பிடிக்காத விஷயங்களையும் பகிர்கிறார்கள் . அடுத்தவர்களுக்கு அது புரிகிறதோ இல்லையோ தங்கள் மனதிலுள்ளதை வெளிப்படுத்த நினைக்கிறார்கள் . ஒருவரின் உலகில் ஒருவர் மட்டுமே இருந்தால் போதுமா என நாபிக்கமலத்தில் சங்கரபாதம் கேட்கும் கேள்வி முக்கியமானது . அவரது மனைவி அவரின் தோழிகளின் மீதும் , அவர் மீதும சந்தேகப்படுவதால் அவரது வாழ்க்கை நரகமாகிறது அதனை அவர் எங்கும் வெளிப்படுத்த முடியவில்லை என்றாலும் அவரது வாழ்க்கை சுதந்திரமானதாக இல்லை . வருத்தம் தொய்ந்ததாக மாறுகிறது . காசிராஜன் , தாயம்மளா , அகஸ்திய அத்தை , தனுஷ்கோடி அண்ணன் , பிரேமா , சரவணன் என பல்வேறு கதாபாத்திரங்கள் உறவுகளுக்கு ஏங்குபவர்களாகவும் , ஒருவரின் கரம் பற்றி பேசுவதில் தங்கள் ஆன்மாவை மறக்கிறவர்களாகவும் உள்ள

கொலைகாரக்கருவிகளும் கண்டறியப்பட்டவைதான்!

படம்
                புதிய சாதனங்கள் வாழ்க்கையை நடத்த உதவுகின்றன . அதற்கான கண்டுபிடிப்புகள் நடந்த அதேசமயம் . மதத்திற்கு எதிராக நடைபெறும் அறிவியல் புரட்சிகளை ஒடுக்க பல்வேறு கொடூரமான கருவிகளை மதவாதிகள் கண்டுபிடித்தனர் . இதனால் பல்வேறு கொடூரமான கருவிகள் உருவாயின . அரசுக்கு எதிரானவர்கள் , மதத்திற்கு ஊறு விளைவிப்பவர்கள் , கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் என அனைவரையும் பயத்தின் பிடியில் வைக்க ஏராளமான கொலைக்கருவிகள் , சித்திரவதை சாதனங்கள் உருவாக்கப்பட்டன . அவற்றில் சிலவற்றை பார்ப்போம் . காளைக்குள் கொதிகலன் குற்றவாளியை உலோகத்தில் உருவான காளையின் வயிற்றுக்குள் இறக்கிவிடுவார்கள் . அதன் வயிற்றின் கீழே நெருப்பை மூட்டினால் என்னாகும் ? உள்ளே இருப்பவர் உயிரோடு ரோஸ்ட் ஆவார் . மரணம் உறுதி . ஆனால் அதனை ரசிக்கும் விதமாக செய்யவேண்டுமே ? மரண பயத்தில் அலறுபவரின் குரல் வெளியே டிடிஎஸ் ஒலியில் கேட்கும்படி செய்வதற்கான ஒலி அமைப்பு காளையில் கழுத்து பக்கம் அமைக்கப்பட்டிருந்தது . இந்த ஒலி விலங்கின் உறுமலாக கேட்கும் . இதனை பெரிலஸ் என்று க்ரீஸ் நாட்டு கண்டுபிடிப்பாளர் உருவாக்கினார் . இதில் வதைபடுபவர்கள

பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள்!

                  பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் ! சைக்கிள் 1817-1880 பதினைந்தாம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே சைக்கிள் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன . அப்படித்தான் இரண்டு , நான்கு சக்கர வண்டிகள் உருவாக்கப்பட்டன . ஆனால் பாதுகாப்பான இரு சக்கர வாகனங்கள் கண்டுபிடிக்க மனிதர்களுக்கு நானூறு ஆண்டுகள் தேவைப்பட்டன . 1817 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த அறிவியலாளர் கார்ல் வான் டிரெய்ஸ் , மரத்தினால் ஆன சக்கரங்களை இணைத்த சைக்கிளை உருவாக்கினார் . இதில் சீட்டும் கூட இருந்தது . 1860 ஆம் ஆண்டு பெடல்களைக் கொண்ட சைக்கிள் உருவானது . இதனை வெலோசிபெட் என்று அழைத்தனர் . இதனை பிரான்சில் உருவாக்கினர் . வடிவமைப்பு ஓகே என்றாலும் சைக்கிள் டயர் கடினமாக இருந்ததால் இதில் பெடல் போடுவது எலும்புகளை உலுக்கும் அனுபவத்தை கொடுத்தது . எனவே இதனை போன்சேக்கர் என்று அழைத்தனர் . பிறகு 1880 இல் உருவாக்கப்பட்ட சைக்கிள் தான் பெடல் அமைப்பும் , செயின் அமைப்பும் இணைந்து சைக்கிளை செலுத்துவதற்கு சமநிலையைக் கொடுத்தது . 1865 பதப்படுத்துதல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உணவு , ப

300 நாட்கள் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்த தன்னார்வ உளவியல் மருத்துவர்! - கேரளத்தில் அர்ப்பணிப்பான மருத்துவர்

படம்
                  மனநலன் காத்த மருத்துவர் ! கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச்சேர்ந்த உளவியல் மருத்துவர் ஏ . எஃப் . நிதின் . இவர் அரசு பொதுமருத்துவமனையில் முந்நூறு நாட்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி மருத்துவர் ஆவார் . நெய்யாண்டிக்கரையிலுள்ள பெரியான்டிவிலாவைச் சேர்ந்தவர் , கோவிட் -19 நோய்த்தொற்றின்போது மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றத் தொடங்கினார் . கொரோனா பரவத்தொடங்கிய போது , இந்திய மாநிலங்கள் பலவற்றில் பிசிஆர் சோதனை முறை நடைமுறையில் இருந்தது . இதில் சோதனைக்கு மாதிரிகள் கொடுத்தபிறகு மூன்று நாட்கள் கழித்துதான் ஒருவருக்கு நோய்த்த்தொற்று உள்ளதா இல்லையா என்று தெரியவரும் . இதனால் தனக்கு கொரோனா உள்ளதா என்று தெரியாதவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளானார்கள் . இவர்களுக்கு நிதின் காலை 7.30 மணி தொடங்கி மாலை 5.30 வரை ஆலோசனைகளை வழங்கி வந்தார் . பெரும்பாலும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கூட பல்வேறு ஆலோசனைகள் தேவைப்பட்டுள்ளன . காரணம் , நோய் பற்றி தேவையற்ற வதந்திகள் வேகமாக பரவிவந்தன . நோயுற்றோரின் எண்ணிக்கையும் அதிவேகமாக அதிகரித்தன . இதனால் ந

ஆந்திரப் பிரதேசத்தில் பிச்சைக்கார ர்களுக்கும், வீடற்றோருக்கும் உணவு வழங்கும் மூன்று ராணுவ வீரர்கள்! - பெருகும் இளைஞர்களின் ஆதரவு

படம்
                  ஆதரவற்றோருக்கு உணவு ! ஆந்திரப்பிரதேசத்தில் மூன்று ராணுவ வீரர்கள் , ஆதரவற்றோருக்காக உணவு வழங்கி வருகின்றனர் . இப்பணியை கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வருகின்றனர் . பலசா ரயில் நிலையத்தில் உள்ள பிச்சைக்காரர்கள் , வீடற்ற மக்களுக்கு விவேகானந்தா சேவா சமிதி என்ற பெயரில் அமைப்பை நிறுவி உதவிகளை வழங்கி வருகிறார்கள் . ரபகா கிரண் , பன்னி , தர்மா ஆகிய மூவரும்தான் இந்த பணியில் இறங்கி பல்வேறு உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள் . கிரண் இந்தோ திபெத் ராணுவ வீரர் என்றால் மற்ற இருவரும் அசாம் ரைபிள்ஸ் , எல்லைப்பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் . தொடக்கத்தில் பலசா பகுதியிலுள்ள உணவகங்களில் மீதியாகும் உணவைப் பெற்று பிச்சைக்காரர்களுக்கும் , உணவு தேவைப்படுவோருக்கும் வழங்கத் தொடங்கியுள்ளனர் . இந்த மூன்று ராணுவ வீரர்களின் பணியைப் பார்த்துவிட்டு மாவட்டத்திலுள்ள 600 இளைஞர்கள் இவர்களின் விவேகானந்தா சமிதி பணியில் இணைந்துள்ளனர் . மண்டசா , சோம்பேட்டா , ஹரிபுரம் என மூன்று பகுதிகளுக்கு உணவு அளிக்கும் பணி விரிவடைந்துள்ளது . இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தன்னார்வலர்க

அனாதைப் பிணங்களை சேகரித்து நல்லடக்கம் செய்த பெண்மணி!

படம்
                    பிணங்களை எரியூட்டிய பெண்மணி ! பொதுமுடக்கத்தின்போது நெருங்கிய உறவினர்கள் கூட நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற பயத்தில் காலமானவர்களை பார்க்க வரவில்லை . துக்கம் கொண்டாட முடியாதபடி பீதி மனத்தில் நிறைந்திருந்தது . அதற்காக இறந்துபோனவர்களை அப்படியே கைவிட்டுவிட முடியுமா ? இறந்துபோனவர்களின் உடல்களை தகனமூட்டும் வேலைகளை சில நல்லிதயங்கள் செய்தனர் . அவர்களில் ஒருவர் வர்ஷா வர்மா . இத்தனைக்கும் இவருக்கும் குடும்பம் உண்டு . மகள்கள் உண்டு . நாம் அனைவரும் பொதுமுடக்க காலத்தில் பாதுகாப்பாக இருந்த சூழ்நிலையில் வர்ஷா பிணங்களை நல்லடக்கம் செய்வதற்கான முயற்சிகளை செய்துகொண்டிருந்தார் . லக்னோவைச் சேர்ந்தவரான வர்ஷா , திவ்ய பிராயா எனும் அமைப்பின் உதவியுடன் யாரும் உரிமை கோராத பிணங்களைப் பெற்று நல்லடக்கம் செய்துள்ளார் . இதற்கு தீபக் மகாஜன் எனும் பெண்மணி உதவியுள்ளார் . வர்ஷா கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உதவி வந்துள்ளார் . பெருந்தொற்று காலத்தில் பிணங்களை எரிப்பது கடினமாக இருந்துள்ளது . அறுபது வயதான ஒருவர் விபத்துக்குள்ளாகி கிங் ஜார்ஜ் மருத்

வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடிக்க முயலும் புதிய ஆராய்ச்சி!

படம்
                வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி ! விண்வெளியிலுள்ள வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி நவீனமடைந்து வருகிறது . 1960 ஆம் ஆண்டு ரேடியோ வானியலாளர் ஃபிராங்க் டிரேக் , விண்வெளியிலிருந்து வரும் சிக்னல்களில் மாறுதல்களை கண்டார் . அவர் பணியாற்றும் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள தொலைநோக்கி ஆய்வகத்தில் , 26 மீட்டர் அளவிலான தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது . இது , எபிசிலான் எரிசிலானி என்ற விண்மீனை கண்காணித்து வந்தது . அப்போது திடீரென அதன் கருவிகளில் சிக்னல்களை பெறும் வேகம் அதிகரித்தது . வேற்றுகிரகத்திலிருந்து உயிரினங்கள் பூமியைத் தொடர்புகொள்கின்றன என டிரேக் நினைத்தார் . சில நாட்கள் கழித்து தொலைநோக்கியில் முன்னர் கிடைத்தது போன்ற சிக்னல்கள் கிடைத்தன . பிறகுதான் அது ஆகாய விமானம் ஒன்றிலிருந்து பெறப்பட்டவை என தெரிய வந்தது . வானியலாளர் டிரேக் எபிசிலான் எரிசிலானி மற்றும் தாவ் செடி என்ற இரு விண்மீன்களை கண்காணிப்பதில் சுணங்கவேயில்லை . செவ்வாய் கோளை ஆராய்தற்கு பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் போலவே , வேற்றுகிரகவாசிகளின் புத்திசாலித்தனத்தை அறியும்